search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Higher Education"

    • நமது மாவட்டத்தில் உள்ள குழந்தைகளுக்கு கல்வி முக்கியமான ஒன்றாகும்.
    • கல்வி கற்று சிறந்த வேலை பெற்று வாழ்வில் முன்னேற வேண்டும்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம், நீலமங்கலம் ஏ.கே.டி பள்ளியில், மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட முன்னோடி வங்கி சார்பில் மாபெரும் கல்வி கடன் முகாம் நடைபெற்றது. முகாமில் மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் தலைமை தாங்கி பேசியதாவது:-

    கள்ளக்குறிச்சி மாவட்டம் விவசாயம் சார்ந்த மாவட்ட மாகும். நமது மாவட்டத்தில் உள்ள குழந்தைகளுக்கு கல்வி முக்கியமான ஒன்றா கும். அடுத்த தலைமுறை களுக்கு கல்வி என்பது இன்றியமையாததாகும். தமிழ்நாடு முதலமைச்சர் இளம் தலைமுறையி னர்கள்அதிக அளவில் கல்வி கற்க வேண்டும் என்பதற்காக பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு பல்வேறுநலத்திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார். அரசு பள்ளியில் படித்த மாணவிகள் உயர்கல்வி தொடர வேண்டும் என்ப தற்காக புதுமைப்பெண் திட்டம் அறிவித்து மாணவி களின் வங்கிகணக்கில் மாதம் ரூ.1,000 செலுத்தி வருகிறார். இளைஞர்கள் படித்த பின் வேலை கிடைக்க வேண்டும் என்ப தால் நான் முதல்வன் திட்டத்தின்கீழ் பல்வேறு திறன் பயிற்சிகளை அளித்து வருகிறார். பல்வேறு காரணங்களால் உயர்கல்வி தொடர முடி யாத நிலையில் உள்ள மாண வர்களுக்காக இந்த கல்விகடன் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 38 கல்லூரி கள் தேர்வு செய்யப்பட்டு அங்கு பயிலும் மாணவ, மாணவி களுக்கு கல்வி கடன் பெறுவது தொடர்பாக போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு, கல்வி கடன் வழங்குவதற்கான மாபெரும் முகாம் நடத்தப் பட்டது. கல்வி மிகவும் இன்றியமையாத தாகும் எனவே மாணவர்கள் அதிக அளவில் கல்வி கற்று சிறந்த வேலை பெற்று வாழ்வில் முன்னேற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த கல்வி கடன் முகாமில், சுமார் 472 மாணவ, மாணவி களுக்கு ரூ.17.35 கோடி மதிப்பீட்டி லான கல்வி கடன் வழங்கப் பட்டது. இம்முகாமில் துர்காதேவி என்ற மாணவி யின்கல்வி கடன் விண்ணப் பம் ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியின் சில காரணங்களால் மறுக்கப் பட்டதாக அறிந்த மாவட்ட கலெக்டர் இந்தி யன் வங்கியின் வாயி லாக ரூ.4.35 லட்சம் மதிப்பீட்டில் கல்வி கடன்கிடைப்பதற்கு ஏற்பாடு செய்தார். இந்த நிகழ்ச்சியில், கள்ளக்குறிச்சி வருவாய் கோட்டாட்சியர் (பொறுப்பு) கிருஷ்ணன், கடலூர்மண்டல இந்தியன் வங்கி மேலாளர் கவுரிசங்கர் ராவ், சேலம் மண்டல இந்தியன் ஓவர்சீஸ் வங்கிமேலாளர் ராம கிருஷ்ணன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் தியாகராஜன், கள்ளக்குறிச்சி வருவாய் தாசில்தார் பிரபா கரன், வருவாய் துறை அல வலர்கள், வங்கிமேலா ளர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • சிந்தனையாளர் பேரவை வலியுறுத்தல்
    • கவிஞர் கலியபெருமாள் தலைமையில் கவியரங்கம் நடைபெற்றது. பின்னர் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    புதுச்சேரி:

    புதுவை சிந்தனையாளர் பேரவை சார்பில் பாரதியார் நினைவு நாள் மற்றும் புதுவையில் தமிழ் வளர்ச்சி துறையின் தேவை குறித்த உரையரங்கம் மற்றும் கவியரங்கம் சாரம் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் நடந்தது.

    பேரவையின் துணைத்தலைவர் சுசிலா தலைமையில் பாரதியாரின் உருவபடத்திற்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

    இதனை தொடர்ந்து நடந்த நிகழ்ச்சிக்கு அமைப்பின் செயலாக்கக்குழு தலைவர் வீரசேகரன் தலைமை தாங்கினார். பேரவையின் தலைவர் கவிஞர் கோ.செல்வம்,கலாச்சார புரட்சி இயக்கதலைவர் பிரான்சுவா பிரான்கிலின், பன்னீர் செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கவிஞர் கவுசல்யா வரவேற்றார். இதனை தொடர்ந்து கவிஞர் கலியபெருமாள் தலைமையில் கவியரங்கம் நடைபெற்றது. பின்னர் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    புதுவை மாநிலத்தில் தமிழ் வளர்ச்சி துறையை தனி இயக்குனர் தலைமையில் அமைக்க அரசு ஆணையிட வேண்டும். புதுவையை போதை இல்லாத மாநிலமாக அரசு உடனே அறிவிக்க வேண்டும்.

    இந்திய நாட்டின் பெயரை பாரத் என மாற்று வதை கைவிட வேண்டும். புதுவை மாநிலத்தில் தொடக்கக் கல்வி முதல் உயர்கல்வி வரை தமிழில் நடத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    • இளையான்குடியில் உயர்கல்வியில் தொழில்முனைவோர் திறன் பயிற்சி கருத்தரங்கம் நடந்தது.
    • பேராசிரியர் சந்திரமோகன் சிறப்புரையாற்றினார்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் உள்ள டாக்டர் சாகிர் உசேன் கல்லூரியில் முதுகலை மற்றும் ஆராய்ச்சி வணிகவியல்துறை மற்றும் கல்லூரி உள் தர மேம்பாட்டு செல் இணைந்து "உயர்கல்வி யில் தொழில்முனைவு மேம்பாட்டு திறன்" என்னும் தலைப்பில் பயிற்சி கருத்தரங்கம் நடைபெற்றது. வணிகவியல் துறைத்தலைவர் நைனா முகம்மது வரவேற்றார். கல்லூரி முதல்வர் ஜபருல்லாஹ் கான் தலைமை உரையாற்றினார். உதவிப்பேராசிரியர் சமுசுதீன் இப்ராஹிம் சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்தார்.

    சிறப்பு விருந்தினராக திருவாரூர் மத்திய பல்கலைக்கழகம், வணிகவியல் மற்றும் வணிக மேலாண்மை துறை தலைவர் பேராசிரியர் சந்திரமோகன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். கல்லூரி உள் தர மேம்பாட்டு செல் ஒருங்கிணைப்பாளர் நசீர்கான், கருத்தரங்க ஒருங்கிணைப்பாளர் அப்துல் முத்தலீப் உள்ளிட்ட துறைசார் பேராசிரியர்கள் ஏற்பாடுகளை செய்திருந்தனர். முடிவில் உதவிப்பேராசிரியர் ஜாஹிர் உசேன் நன்றி கூறினார்.

    • அனைத்து மாணவர்களை உயர் கல்வியில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் .
    • மாவட்டத்தில் உயர்கல்விக்கு செல்லாத மாணவர்களே இல்லை என்ற நிலையை உருவாக்க வேண்டும்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி கலையரங்கத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் கூட்டம் மற்றும் மெல்ல கற்போர் கையேடு வெளியிடுதல் நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் தலைமை வகித்தார்.

    அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 10 மற்றும் 12-ம் வகுப்பு பயிலும் மெல்ல கற்போர் மாணவர்களுக்கான கையேட்டினை அவர் வெளியிட்டார்.

    பின்னர் கலெக்டர் பேசியதாவது:-

    மாறி வரும் சூழலுக்கு ஏற்ற வகையில், உடனடி வேலைவாய்ப்புகளை பெற்றுத்தரும் புதிய பாடப்பிரிவுகள் பற்றி மாணவர்களுக்கு எடுத்து சொல்லி அவர்களை அந்த பிரிவுகளில் சேர்வதற்கு தேவையான வழிகாட்டுதல்களையும், உதவிகளையும் செய்திடல் வேண்டும்.

    தமிழக அரசின் புதுமைப் பெண் திட்டம், வாயிலாக உயர்கல்வியில் 7.5 சதவிகித இடஒதுக்கீடு குறித்தும், உதவித்தொகைகள் குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

    மேலும், பொருளா தாரத்தில் பின்தங்கிய மாண வர்களை கண்டறிந்து, தொண்டு நிறுவனங்கள் மூலம் உயர்கல்வியில் சேர்க்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.மாவட்டத்தில் உயர்கல்விக்கு செல்லாத மாணவர்களே இல்லை என்ற நிலையை உருவாக்க வேண்டும்.

    இதில், மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் ராமன், மாவட்ட உதவி திட்ட ஒருங்கிணைப்பாளர் சிவசக்தி கணேஷ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • உயர்கல்விக்கு செல்லும் மாணவர்களில் இந்திய அளவில் தமிழகம் முதலிடம் பிடித்துள்ளது.
    • விருதுநகர் கலெக்டர் பெருமிதம் கொள்கிறேன் என்றார்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி எஸ்.எப்.ஆர் கல்லூரியில் "நான் முதல்வன்" திட்டத்தின் கீழ் கடந்த கல்வியாண்டில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று கல்லூரியில் சேர விண்ணப்பிக்காத மாணவ, மாணவி களுக்கு "உயர்வுக்கு படி" என்ற உயர்கல்விக்கான வழிகாட்டுதல் முகாமினை, சிவகாசி சட்டமன்ற உறுப்பினர் அசோகன் முன்னிலை யில் மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் தொடங்கி வைத்தார்.

    பின்னர், இம்முகாமின் மூலம் 13 மாணவர்கள் அரசு தொழில்பயிற்சி மையத்திலும், 2 மாணவர்கள் அரசன் கணேசன் தொழில் நுட்ப கல்லூரியிலும், 10 மாணவர்கள் ஸ்ரீவில்லி புத்தூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியிலும், 4 மாணவர்கள் சிவகாசி அரசு கலை மற்றும் அறிவி யல் கல்லூரியிலும், 13 மாணவர்கள் ஏ.ஏ.ஏ. பொறி யியல் கல்லூரியிலும், 22 மாணவர்கள் ஜெய் சாய்ராம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியிலும் என மொத்தம் 64 மாணவர்க ளுக்கு பல்வேறு கல்லூரிகளில் உயர்கல்வி பயில்வ தற்கான சேர்க்கை ஆணை களை மாவட்ட கலெக்டர் வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-

    நான் முதல்வன் என்ற திட்டத்தின் கீழ் கல்லூரி மாணவர்களுக்கு உலகின் சிறந்த வேலை வாய்ப்புகளை பெறுவதற்காக திறன்களை வளர்ப்பதற்கும், பள்ளி மாணவர்களுக்கு இந்திய அளவில் உள்ள சிறந்த கல்வி நிறுவனங்களில் பயில்வதற்கான உயர் கல்வி வாய்ப்புகள் குறித்தும், புதுமைப் பெண் என்ற திட்டத்தின் மூலம் அரசு பள்ளிகளில் பயின்ற மாணவிகளுக்கு உயர்கல்வி முடிக்கும் வரை மாதந் தோறும் ரூ.1000 ஊக்கத் தொகையும், உயர்வுக்கு படி என்ற திட்டத்தின் மூலம் பள்ளிப்படிப்பை முடித்த மாணவர்கள் கல்லூரிகளில் சேர வழிகாட்டுதலும் வழங்கப்பட்டு வருகின்றன.

    அந்த வகையில் கல்வியில் சிறந்து விளங்கும் தமிழ்நாட்டில் நமது விருதுநகர் மாவட்டம் 12-ம் வகுப்பில் அதிக தேர்ச்சி விகிதங்கள் பெற்று கல்வியில் முதன்மை மாவட்டமாக திகழ்கிறது. மாவட்டத்திலுள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றுள்ள 7226 மாணவர்களும் 100 சதவீதம் உயர்கல்விக்கு சேர வேண்டும் என்ற நோக்கத் தில் அருப்புக்கோட்டை, சிவகாசி மற்றும் சாத்தூர் ஆகிய இடங்களில் முகாம் கள் நடத்த திட்டமிடப்பட்டு நடத்தப்பட்டு வருகிறது.

    அதன்படி, ராஜ பாளை யம், ஸ்ரீவில்லிபுத்தூர், வத்திராயிருப்பு மற்றும் சிவகாசி பகுதிகளில் இது வரை கல்லூரியில் சேர விண்ணப்பிக்காத 193 மாணவ, மாணவிகளில் 136 மாணவர்களை கண்டறிந்து, அவர்களுக்கு வழிகாட்டுதல் அளிக்கும் வகையில், நான் முதல்வன் திட்டத்தின் கீழ் "உயர்வுக்கு படி" என்ற உயர்கல்விக்கான வழி காட்டுதல் முகாம் நடைபெற்றது.

    இந்திய அளவில் உயர் கல்விக்கு செல்லும் மாணவர்களின் எண்ணிக்கையில் தமிழகம் முதன்மையிடத்தில் உள்ளது. அதிகமான மாணவர்கள் உயர்கல்வியில் சேர்க்கை பெற்று, தமிழகத்திற்கும் நமது மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்து தர வேண்டும்.

    இதற்கு மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு தனியார் கல்வி நிறுவனங்கள் மாணவர்களின் தகுதிக்கேற்ப அவர்களின் திறன் அடிப்படையில் உயர்கல்விக்கான வாய்ப்புகளை வழங்க வேண்டும் என்றார்.

    இந்நிகழ்ச்சியில், சிவகாசி கோட்டாட்சியர் விஸ்வநாதன், சிவகாசி மாநகராட்சி துணை மேயர் விக்னேஷ் பிரியா, சிவகாசி ஊராட்சி ஒன்றியக்குழு துணை தலைவர் விவேகன்ராஜ், வட்டாட்சியர், அரசு அலுவ லர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • உயர் கல்வி வழிகாட்டு நிகழ்ச்சி நாளை நடக்கிறது.
    • மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்களு டன் வந்து கலந்து கொண்டு பயன டையுமாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    மதுரை

    மதுரை மாவட்ட கலெக் டர் சங்கீதா வெளியிட் டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று உயர் கல்விக்கு விண்ணப்பிக்காத மாணவர் களுக்கு உரிய வழிகாட்டுதல் வழங்குவது தொடர்பாக தமிழக அரசால் நான் முதல்வன் உயர்வுக்கு படி என்ற சிறப்பு விழிப்புணர்வு மற்றும் வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடைபெற வுள்ளது.

    மேற்படி சிறப்பு விழிப் புணர்வு மற்றும் வழிகாட்டு தல் நிகழ்ச்சிகள் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மதுரை சமூக அறிவியல் கல்லூரியில் மாவட்ட கலெக்டர் தலை மையில் நடைபெறவுள்ளது.

    மேற்படி நிகழ்ச்சியில், மாணவர்களின் உயர்கல்வி தொடர்பான ஆலோசனை கள் மற்றும் வழிகாட்டுதல் களை பல்வேறு துறை சார்ந்த அலுவவர்கள் வழங்க வுள்ளார்கள். மேலும், பொறி யியல் கல்லூரி, தொழில்நுட்ப கல்லூரிகள், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் விண்ணப்பிப்பது தொடர் பாகவும் கல்விக்கடன், கல்வி உதவித் தொகை பெறுவது தொடர்பாக ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டுதல்கள் மாணவர்களுக்கு வழங்கப்படும். உயர்கல்வி பயிலுவதற்கு தேவையான சாதிச்சான்று, வருமானச் சான்று உட்பட இணைய வழிச்சான்றுகள் அங்கேயே அமைக்கப் பட்டுள்ள இரு சேவை மையம் மூலமாக வழங்க ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளன. இந்த நிகழ்ச்சிக்கு மாண வர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்களு டன் வந்து கலந்து கொண்டு பயன டையுமாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தமிழக அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு உயர் கல்வி, வேலைவாய்ப்பு குறித்த ஆலோசனை, வழிகாட்டுதல் அமைக்க ஆலோசனை மையம் ஏற்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது.
    • பிளஸ்-1, பிளஸ்-2 மாணவர்களுக்கு நான் முதல்வன் திட்டத்தில் பயிற்சி புத்தகம் தயாரிக்கப்பட்டு முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டு, பள்ளிக்கு ஒருவர் வழிகாட்டி ஆசிரியராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    சேலம்:

    தமிழக அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு உயர் கல்வி, வேலைவாய்ப்பு குறித்த ஆலோசனை, வழிகாட்டுதல் அமைக்க ஆலோசனை மையம் ஏற்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. அதில், பிளஸ்-1, பிளஸ்-2 மாணவர்களுக்கு நான் முதல்வன் திட்டத்தில் பயிற்சி புத்தகம் தயாரிக்கப்பட்டு முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டு, பள்ளிக்கு ஒருவர் வழிகாட்டி ஆசிரியராக நியமிக்கப்பட்டுள்ளார்.

    9, 10 -ம் வகுப்புகளுக்கு...

    தற்போது, 9, 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு வழிகாட்டி ஆசிரியராக செயல்பட, பள்ளிக்கு ஒரு பட்டதாரி ஆசிரியரை தேர்வு செய்து அறிக்கை அனுப்ப தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக 9-ம் வகுப்பு மொழிப்பாட ஆசிரியர் அல்லது கணினி ஆசிரியருக்கு முன்னுரிமை கொடுத்து தேர்வு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    அவர்களுக்கு ஆசிரியர் பயிற்சி, ஆய்வு நிறுவன பேராசிரியர்கள் மூலம் பயிற்சி வழங்கப்பட்டு, பள்ளிகளில் படிக்கும்போதே, மாணவர்களிடம் உயர்கல்வி குறித்த வழிகாட்டுதல்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    288 ஆசிரியர்கள்

    சேலம் மாவட்டத்தில் 9, 10-ம் வகுப்பு இடம்பெற்ற 288 அரசு பள்ளிகள் உள்ளன. எனவே பள்ளிக்கு ஒரு ஆசிரியர் வீதம் 288 வழிகாட்டி ஆசிரியர்கள் மாவட்டத்தில் நியமிக்கப்பட உள்ளனர்.

    • கனடாவில் உள்ள எம்.பி.க்களும் கட்சி வித்தியாசமின்றி, இந்திய மாணவர்களுக்கு ஆதரவாக நின்றனர்.
    • மாணவர்களுக்கு நியாயம் கிடைப்பதில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஆதரவு தெரிவித்தார்.

    புதுடெல்லி :

    இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த 700 மாணவர்கள் கனடாவில் உயர் கல்வி கற்பதற்காக சென்றனர். ஆனால் அவர்கள் அங்கு படிப்பதற்கு செல்வதற்கு ஏற்பாடு செய்த ஜலந்தரைச் சேர்ந்த ஏஜெண்டு, போலி சேர்க்கை கடிதங்களையும், ஆவணங்களையும் கொடுத்து ஏமாற்றி உள்ளார்.

    முதலில் இது அவர்களுக்கு தெரியவில்லை. பின்னால்தான் தெரிய வந்தது.

    இந்த போலி சேர்க்கை கடிதங்களால் அவர்களது எதிர்காலம் கேள்விக்குறியானது.

    அவர்களை இந்தியாவுக்கு நாடு கடத்துவதற்கு டொராண்டோவில் உள்ள சி.பி.எஸ்.ஏ. என்று அழைக்கப்படுகிற கனடா எல்லை பாதுகாப்பு முகமை நடவடிக்கை எடுத்தது. அவர்கள் நாடு கடத்தப்படுவதற்கான நோட்டீசுகளும் வழங்கப்பட்டன.

    தாங்கள் ஏமாற்றப்பட்டு விட்டதை அறிந்த மாணவர்கள் அங்கே வீதியில் இறங்கி போராடினார்கள்.

    இந்த விவகாரத்தில் மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது. குறிப்பாக, மத்திய வெளியுறவு மந்திரி ஜெய்சங்கர், கனடா வெளியுறவு மந்திரியிடம் பிரச்சினையை எடுத்துச்சென்றார். மேலும் வெளியுறவுத்துறை செயலாளர் (கிழக்கு), கடந்த ஏப்ரல் மாதம் கனடா சென்றிருந்தபோது இந்த விவகாரத்தை அந்த நாட்டின் அரசிடம் எழுப்பினார். இது தொடர்பாக டொராண்டாவில் உள்ள இந்திய தூதரகமும், பிரச்சினைக்குள்ளான இந்திய மாணவர்களைச் சந்தித்தது.

    இந்த பிரச்சினையில் தவறு மாணவர்கள் பக்கம் இல்லை என்பதால் மனிதநேய அடிப்படையில் நடந்து கொள்ள வேண்டும் என்று கனடா அரசிடம் மத்திய அரசு மீண்டும் மீண்டும் முறையிட்டது. கனடாவில் உள்ள எம்.பி.க்களும் கட்சி வித்தியாசமின்றி, இந்திய மாணவர்களுக்கு ஆதரவாக நின்றனர்.

    அதைத் தொடர்ந்து கனடா குடியேற்றத்துறை மந்திரி சியான் பிரேசியர், கனடாவில் நிச்சயமற்ற தன்மையை சந்தித்து வருகிற சர்வதேச மாணவர்களின் பிரச்சினையில் தீர்வு காண்பதற்கு கனடா அரசு தீவிரமாக பரிசீலிக்கிறது என தெரிவித்தார். மாணவர்களுக்கு நியாயம் கிடைப்பதில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஆதரவு தெரிவித்தார்.

    அதைத் தொடர்ந்து கனடாவில் இருந்து இந்திய மாணவர்களை நாடு கடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கையில், "கனடாவில் உள்ள இந்திய மாணவர்களுக்கு ஏற்பட்ட பிரச்சினையில், கனடா அரசு மனிதநேய அணுகுமுறையை பின்பற்றியதற்கு காரணம், இந்திய அரசு தொடர்ந்து எடுத்து வந்த முயற்ஙசிகள்தான். இதை வரவேற்கிறோம்" என தெரிவித்தன.

    • மத்திய அரசின் ரூசா நிதியுதவி திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டது.
    • புதுவை மாநில உயர்கல்வி கவுன்சலின் முதலாவது கவுன்சில் பதவிக்காலம் கவர்னர் ஒப்புதலின்பேரில் நீட்டிக்கப்பட்டுள்ளது.

    புதுச்சேரி:

    மத்திய அரசின் ரூசா நிதியுதவி திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட புதுவை மாநில உயர்கல்வி கவுன்சலின் முதலாவது கவுன்சில் பதவிக்காலம் கவர்னர் ஒப்புதலின்பேரில் நீட்டிக்கப்பட்டுள்ளது.

    கடந்த ஆண்டு டிசம்பர் 15-ந் தேதி முதல் ஓராண்டு அல்லது மாநில உயர்கல்வி கவுன்சில் கூட்டம் இயற்றப்பட்ட பின் சட்டப்பூர்வ கவுன்சில் அமைக்கும் வரை இந்த குழு பதவியில் இருக்கும்.

    இதற்கான உத்தரவை உயர் மற்றும் தொழில்நுட்ப கல்வி சார்பு செயலர் சவுமியா பிறப்பித்துள்ளார்

    • தேசிய தரவரிசை பட்டியலில் புதுவையில் 4 கல்வி நிறுவனத்தை தவிர்த்து சொல்லிக்கொள்ளும்படி ஒன்றுமில்லை.
    • ஒட்டுமொத்தமாக புதுவை அரசின் கீழ் உள்ள உயர்கல்வித்துறை சீரழிந்து வருகிறது.

    புதுச்சேரி:

    புதுவை முன்னாள் எம்.பி. ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

     தேசிய தரவரிசை பட்டியலில் புதுவையில் 4 கல்வி நிறுவனத்தை தவிர்த்து சொல்லிக்கொள்ளும்படி ஒன்றுமில்லை. புதுவையில் உள்ள பல் மருத்துவம், மேலாண்மை, ஆராய்ச்சி சம்பந்தப்பட்ட எந்த கல்லூரியில் தரவரிசை பட்டியலில் இல்லை. ஒட்டுமொத்தமாக புதுவை அரசின் கீழ் உள்ள உயர்கல்வித்துறை சீரழிந்து வருகிறது.

    பல ஆயிரம் கோடி மக்கள் வரிப்பணத்தை செலவு செய்து சமுதாயத்துக்கு உரிய எந்த பலனும் இத்துறையில் ஏற்படவில்லை. இதை உணராமல் தன் இயலாமையை புகழ்பாடி கொண்டிராமல் சரியான நடவடிக்கைகளில் அரசு இறங்க வேண்டும்.

    தற்போதுள்ள நிலையில் புதிய நிறுவனங்களை தொடங்குவதை காட்டிலும், இருக்கும் நிறுவனங்களை சீர்செய்வதில் அரசு கவனம் செலுத்த வேண்டும். அனைத்து கல்லூரிகளையும் தேசிய தரக்கட்டுப்பாடு வாரியத்தால் மதிப்பீடு செய்யப்பட்டு குறைகள் களையப்பட வேண்டும்.

    புதுவையில் தொழில்நுட்ப பல்கலைக் கழகத்துக்கு கவர்னர் உடனடியாக ஆட்சிமன்ற குழுவை உருவாக்க வேண்டும். அரசாங்கம் நன்கு திறன் வாய்ந்த ஆசிரியர்களை நியமிக்க வும், கல்லூரிகளின் அக கட்டு மானத்தை வலுப்படுத்தவும், ஆசிரியர்களின் நீண்டகால கோரிக்கைகளை தீர்த்து வைக்க வேண்டும்.

    ஒவ்வொரு கல்லூரிகளிலும் ஒரு தர கட்டுப்பாட்டு மையம் வைப்பதும், ஆசிரியர்களை மாணவர்கள் மதப்பீடு செய்யும் முறையை கொண்டுவர வேண்டும். அவர்களின் கருத்துக்களை கேட்பதும், கற்பித்தலில் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துவது, தொழிற்சாலை கல்லூரி இணைந்த செயல்பாடு போன்ற நடவடிக்கைகளால் வரும் காலத்தில் மத்திய அரசின் மதிப்பீட்டின் தரவரிசையில் முன்னேற முடியும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • அரசு பள்ளி மாணவர்களுக்கு உயர்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி நடந்தது.
    • பாத்திமா கனி ஆகியோர் ஏற்பாடுகளை செய்தனர்.

    மானாமதுரை

    சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் உள்ள சாகீர்உசேன் கல்லூரியில் ''நம் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்டம்'' சார்பில் தமிழக அரசின் ''நான் முதல்வன்'' திட்டத்தின் கீழ் "கல்லூரிக்கனவு-2023" என்னும் தலைப்பில் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கான உயர்கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி தொடங்கி நடைபெற்று வருகிறது. நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் திருப்புவனம், அல்லிநகரம், சாலைகிராமம், முனைவென்றி, அனுமந்தகுடி உள்ளிட்ட கிராமங்களில் உள்ள அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு உயர்கல்வி பயிலுவதின் முக்கியத்துவம் மற்றும் உயர்கல்வி பாடப்பிரிவுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துகின்றனர். நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர்கள் பீர் முகம்மது, அப்ரோஸ்சேக் அப்துல்லா, பாத்திமா கனி ஆகியோர் ஏற்பாடுகளை செய்தனர்

    • மாணவர்கள் வேலைவாய்ப்பிற்கு தேவையான வழிகாட்டுதல்கள் வல்லுநர்கள் மூலம் எடுத்துரைக்கப்படுகிறது.
    • பல்வேறு போட்டி தேர்வுகளுக்கும் கல்லூரி படிப்பே அடிப்படையானது.

    திருவாரூர்:

    திருவாரூர் நகராட்சிக்குட்பட்ட வேலுடையார் மேல்நிலைப்பள்ளியில் 12ஆம் வகுப்பு பயின்ற மாணவ, மாணவிகளுக்கான உயர்கல்விக்கு வழிகாட்டும் "கல்லூரிக் கனவு-2023" மாவட்டக் கருத்தாளர்களுக்கு நடைபெற்ற பயிற்சி முகாமில் மாவட்ட கலெக்டர் தி.சாருஸ்ரீ கலந்து கொண்டார்.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் பேசியதாவது:-

    மாணவ, மாணவியர்கள் தங்கள் உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பிற்கு தேவையான வழிகாட்டு தல்கள் துறைசார்ந்த வல்லுநர்கள் மூலம் எடுத்துரைக்கப்படுகிறது.

    இம்முயற்சியின் நோக்கம் 12ஆம் வகுப்பிற்கு பிறகு அவர்களது கல்லூரி படிப்பிற்கு உறுதுணையாக அமையும். அரசு தேர்வாணை யத்தால் நடத்தப்படும் சில தேர்வுகளுக்கும், பல்வேறு போட்டி தேர்வுகளுக்கும் கல்லூரி படிப்பே அடிப்படையானது.

    கல்வி ஒன்றே மாணவர்களது வாழ்க்கைக்கு உறுதுணையாக இருக்கும் என்பதனை அவர்களுக்கு உணர்ந்த வேண்டும்.

    கல்வியின் முக்கியத்துவத்தை அறிந்து, அவர்களது பெற்றோர்களின் உழைப்பை மனதிற்கொண்டு சிறப்பாக பயின்று அவர்களின் கல்வி திறனை மேன்மேலும் உயர்த்தி கொள்ள நம் முயற்சிக்க வேண்டும்.

    இந்நிகழ்ச்சியில் பொறியியல், மருத்துவம், மருத்துவம் சார்ந்த துணை அறிவியல் படிப்புகள், கலை மற்றும் அறிவியல், வணிகவியல் மற்றும் கணக்குப்பதிவியல், சட்டம், கால்நடை, வேளாண்மை, மீன்வளம் ஆகிய துறைகளில் உள்ள உயர்கல்விப் படிப்புகள் சார்ந்தும் அரசு மற்றும் தனியார் துறைகளில் உள்ள வேலைவாய்ப்புகள் குறித்தும் இப்படிப்புகள் படிப்பதற்கான வங்கிக டன்கள் பெறுவது குறித்தும் மற்றும் கல்வி உதவித்தொகை பெறுவது குறித்தும் சிறந்த வல்லுநர்களால் வழிகாட்டல் வழங்கப்படவுள்ளது.

    இதனை மாணவ, மாணவியர்களிடம் நீங்கள் கொண்டு சேர்க்க வேண்டும். மாணவ, மாணவியர்கள் எந்த துறையில் சிறப்பாக விளங்கிடலாம் என்பதனை அவர்களின் விருப்பத்திற்கேற்ப அறிந்து அவர்களுக்கு அத்துறையில் கல்விபயிலவும், தங்களின் திறமையை மேம்படுத்திக்கொள்ளவும் உறுதுணையாக இருக்க வேண்டும்.

    பொதுத்தேர்வில் ஏதேனும் சில பாடங்களில் தவறவிட்டாலும் கலங்காது துணைத்தேர்வில் நல்ல முயற்சி மேற்கொண்டு வெற்றி பெற நாம் உறுதுணையாக இருந்து அவர்கள் உயர்கல்வி பெற்றிட நாம் உதவி வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

    இந்நிகழ்வில் வருவாய் கோட்டாட்சியர் சங்கீதா, முதன்மை கல்வி அலுவலர் சுபாஷினி, மாவட்ட கல்வி அலுவலர் மாதவன், வேலுடையார் கல்வி நிறுவனங்கள் நிர்வாகி திரு.தியாகபாரி உள்ளிட்ட அரசு அலுவலர்கள், திருவாரூர் ஒன்றியத்திற்குட்பட்ட மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள், முதுகலை ஆசிரியர்கள், பெற்றோர், ஆசிரியர் கழக உறுப்பினர்கள், பள்ளி முன்னாள் மாணவர்கள், நாட்டு நலப்பணித்திட்ட மாணவ, மாணவியர்கள், பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள், இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.

    ×