என் மலர்
நீங்கள் தேடியது "Prisoners"
- மச்சாலா நகரில் உள்ள சிறையில் இரண்டு கும்பல்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது.
- சிறைச்சாலையின் உள்ளே இருந்து துப்பாக்கிச் சூடுகள், வெடிச்சத்தங்கள் மற்றும் உதவிக்கான கூக்குரல்கள் கேட்டதாக உள்ளூர்வாசிகள் தெரிவித்தனர்.
ஈக்வடார் நாட்டின் சிறையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட கலவரத்தில் 27 கைதிகள் மற்றும் நான்கு ஊழியர்கள் கொல்லப்பட்டனர். 33 கைதிகள் காயமடைந்தனர்.
எல் ஓரோ மாகாணத்தில் உள்ள துறைமுக நகரமான மச்சாலாவில் ஏற்பட்ட சிறைக் கலவரத்தில் 27 கைதிகள் கொல்லப்பட்டனர். சிலர் மூச்சுத் திணறலால் இறந்தனர், மற்றவர்கள் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டதாக சிறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
மச்சாலா நகரில் உள்ள சிறைச்சாலையில் இருந்து சில கைதிகளை அருகிலுள்ள மாகாணத்தில் உள்ள ஒரு புதிய, உயர் பாதுகாப்பு சிறைச்சாலைக்கு மாற்றுவதற்கான திட்டத்தை எதிர்த்து கலவரம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
சிறைச்சாலையின் உள்ளே இருந்து துப்பாக்கிச் சூடுகள், வெடிச்சத்தங்கள் மற்றும் உதவிக்கான கூக்குரல்கள் கேட்டதாக உள்ளூர்வாசிகள் தெரிவித்தனர்.
உடனடியாக ஒரு சிறப்பு போலீஸ் குழு சிறைக்குள் நுழைந்து நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தது.
சிறைச்சாலைக்குள் இரண்டு கும்பல்களுக்கு இடையேயான கலவரமாக இது இருக்கலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
முன்னதாக செப்டம்பர் மாத இறுதியில், அதே சிறையில் நடந்த மற்றொரு ஆயுதமேந்திய கிளர்ச்சியில் 13 கைதிகளும் ஒரு சிறைக் காவலரும் கொல்லப்பட்டனர்.
- நேபாளத்தில் ஆட்சி மாற்றம் வேண்டும் என்ற கோரிக்கையுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- சமூக வலைதளங்களை நேபாள அரசு முடக்கியது போராட்டத்திற்கு முக்கிய காரணமானது.
காத்மண்டு:
ஊழல், வேலைவாய்ப்பின்மை உள்பட பல்வேறு பிரச்சனைகளை முன்வைத்து நேபாள அரசுக்கு எதிராக இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சமூக வலைதளங்களை அந்நாட்டு அரசு முடக்கியது போராட்டத்திற்கு முக்கிய காரணமாக அமைந்தது.
மேலும், நேபாளத்தில் ஆட்சி மாற்றம் வேண்டும் என்ற கோரிக்கையுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டக்காரர்களை தடுக்க முற்பட்டதால் ஏற்பட்ட கலவரத்தால் பாராளுமன்றம், பிரதமர், ஜனாதிபதி வீடுகள் தீ வைத்து எரிக்கப்பட்டன. இந்தக் கலவரத்தில் போராட்டக்காரர்கள் 22 பேர் உயிரிழந்தனர்.
கலவரம் தீவிரமானதால் ஜனாதிபதி ராம் சந்திரா பவுடல், பிரதமர் கே.பி.சர்மா ஒலி உள்பட பலர் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர். இதனால் ராணுவம் கட்டுப்பாட்டில் நேபாளம் சென்றுள்ளது.
இந்நிலையில், அரசுக்கு எதிராக நடைபெற்ற போராட்டம் மற்றும் கலவரத்தில் நாடு முழுவதும் பல்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த சுமார் 7,000 கைதிகள் தப்பிச்சென்றதாக தகவல் வெளியாகியது.
சிறைகளில் இருந்து தப்ப முயன்ற 5 பேர் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனர் எனவும் தகவல் வெளியானது.
தப்பியோடிய கைதிகளை மீண்டும் கைதுசெய்ய ராணுவம் நடவடிக்கை எடுத்து வருகிறது.
- அதிக எண்ணிக்கையிலான இறப்புகள் 2016 இல் பதிவாகியுள்ளன.
- கடந்த 5 ஆண்டுகளில் சிறைகளில் தற்கொலை விகிதம் அதிகரித்துள்ளதாகவும் அறிக்கை காட்டுகிறது.
இந்திய சிறைச்சாலைகளில் 2014 முதல் 2022 வரை ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 170 இயற்கைக்கு மாறான மரணங்கள் பதிவாகின்றன .
தேசிய குற்றப் பதிவுப் பணியகம் (NCRB) வெளியிட்ட கடைசி சிறைச்சாலை புள்ளிவிவர அறிக்கையில்இது தெரியவந்துள்ளது.
2014 முதல் 2022 வரையிலான காலகட்டத்தில், சிறையில் 1521 பேர் மர்மமான சூழ்நிலையில் இறந்தனர். இதில் 70 சதவீதம் தற்கொலைகள். அதிக எண்ணிக்கையிலான இறப்புகள் 2016 இல் பதிவாகியுள்ளன. அந்த ஆண்டில் 231 பேர் இருந்துள்ளனர். இதில் 102 தற்கொலைகள்.
அதேபோல் 2022 இல்பதிவு செய்யப்பட்ட 159 இயற்கைக்கு மாறான மரணங்களில், அதில் 119 தற்கொலைகள் ஆகும்.
கடந்த 5 ஆண்டுகளில் சிறைகளில் தற்கொலை விகிதம் அதிகரித்துள்ளதாகவும் அறிக்கை காட்டுகிறது.
கைதிகளின் மனநலப் பிரச்சனைகள் போதுமான அளவு கவனிக்கப்படவில்லை என்றும், சிறைகளில் போதுமான மனநல மருத்துவர்கள் இல்லை என்றும் சமூக ஆர்வலர்கள் குறிப்பிடுகின்றனர்.
- ஜெயிலில் இருந்த நாகராஜுக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது.
- வேலூர் ஜெயிலில் உடல் நலக்குறைவு காரணமாக கைதிகள் உயிரிழக்கும் சம்பவங்கள் தொடர்ந்து நடக்கிறது.
வேலூர்:
வேலூர் விருப்பாட்சிபுரத்தை சேர்ந்தவர் நாகராஜ் (வயது 50). இவர் கடந்த 2018-ம் ஆண்டு போக்சோ வழக்கில் 10 ஆண்டுகள் தண்டனை பெற்று வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.
நேற்று ஜெயிலில் இருந்த நாகராஜுக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டது. தரையில் சரிந்து விழுந்த அவரை மீட்டு ஜெயில் ஆஸ்பத்திரியில் முதலுதவி அளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் அவரை சேர்த்தனர்.
அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே நாகராஜ் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதனைப் போல தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டி பட்டி பகுதியை சேர்ந்தவர் ஜெயராமன் (70). இவர் கடந்த 2019-ம் ஆண்டு குற்ற வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டிருந்தார். இவருக்கு கடந்த மே மாதம் 31-ந் தேதி திடீரென மூச்சுத் திணறல் மற்றும் நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டது.
இதையடுத்து அவர் வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு ஜெயராமன் பரிதாபமாக உயிரிழந்தார்.
இது சம்பந்தமாக பாகாயம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வேலூர் ஜெயிலில் உடல் நலக்குறைவு காரணமாக கைதிகள் உயிரிழக்கும் சம்பவங்கள் தொடர்ந்து நடக்கிறது.
இதனை தடுக்க ஜெயிலில் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
- தாயின் இறுதிச் சடங்கில் பங்கேற்க புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தனது சகோதரனுக்கு விடுப்பு கோரி சகோதரி மனு.
- தமிழக உள்துறை செயலாளருக்கு சென்னை உயர்நீதிமன்றம் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
நெருங்கிய உறவினர்களின் இறுதிச் சடங்கில் கைதிகள் பங்கேற்க சிறைத்துறை அதிகாரிகளே அனுமதி வழங்கும் வகையில் சுற்றறிக்கை பிறப்பிக்க வேண்டும் என்று தமிழக உள்துறை செயலாளருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தாயின் இறுதிச் சடங்கில் பங்கேற்க புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தனது சகோதரனுக்கு விடுப்பு கோரி சகோதரி மனு அளித்துள்ளார்.
இந்த மனு மீதான விசாரணையின்போது, விடுப்பு வழங்க சிறைத்துறை அதிகாரிகளுக்கு அதிகாரம் உள்ள நிலையில் விசாரணை கைதிகள் நீதிமன்றங்களை நாட வேண்டியுள்ளதாக நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், இதனால் நெருங்கிய உறவினர்களின் இறுதிச் சடங்கில் கைதிகள் பங்கேற்க சிறைத்துறை அதிகாரிகளே அனுமதி வழங்கும் வகையில் சுற்றறிக்கை பிறப்பிக்க வேண்டும் என்று தமிழக உள்துறை செயலாளருக்கு சென்னை உயர்நீதிமன்றம் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
- 2024-25-ம் நிதியாண்டில் மொத்தம் 9 ஆயிரத்து 106 சிறைவாசிகள் கல்வி பயின்று வருகின்றனர்.
- 24 பேர் வணிக மேலாண்மை இளங்கலை பட்டப்படிப்பையும், 268 பேர் பட்டய படிப்பையும் படித்து வருகின்றனர்.
சென்னை:
சிறைவாசிகளுக்கு 100 சதவீத கல்வி அறிவை புகட்டும் விதமாக தமிழக அரசும், மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகமும் ஒருங்கிணைந்த பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
அதன்படி, அனைத்து சிறைகளிலும் எழுதப்படிக்க தெரியாத சிறைவாசிகளுக்கு பள்ளி கல்வித்துறையின் சிறப்பு கல்வியறிவு திட்டத்தின் மூலமாக அடிப்படை கல்வி கற்றுக்கொடுக்கப்படுகிறது.
இந்த திட்டத்தால் பயன் அடைந்து வரும் சிறை கைதிகள் குறித்து சிறைத்துறை உயர் அதிகாரி கூறியதாவது:-
அனைத்து மத்திய சிறைகள், பெண்கள் தனி சிறைகள் மற்றும் புதுக்கோட்டை மாவட்ட சிறை ஆகியவற்றில் தகுதிவாய்ந்த ஆசிரியர்களை கொண்ட ஆரம்ப பள்ளிகள் மற்றும் தமிழ்நாடு திறந்தவெளி பல்கலைக்கழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட மகாத்மா காந்தி சமுதாய கல்லூரியும் செயல்பட்டு வருகின்றன.
2024-25-ம் கல்வி ஆண்டில் சிறை கைதிகளில் 135 பேர் பிளஸ்-2 தேர்வும், 137 பேர் பிளஸ்-1 தேர்வும், 247 பேர் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வும், 232 பேர் 8-ம் வகுப்பு தேர்வும் எழுதி உள்ளனர்.
2024-25-ம் நிதியாண்டில் மொத்தம் 9 ஆயிரத்து 106 சிறைவாசிகள் கல்வி பயின்று வருகின்றனர். இதில் 24 பேர் வணிக மேலாண்மை முதுகலை பட்டப்படிப்பும், 3 பேர் கலை அறிவியல் முதுகலை படிப்பும் படித்து வருகின்றனர். ஒருவர் கணினி முதுகலை பட்டப்படிப்பும் படித்து வருகிறார்.
120 பேர் கலை, அறிவியல், வணிகவியல், இலக்கியம் ஆகியவற்றில் இளங்கலை பட்டப்படிப்பும், 24 பேர் வணிக மேலாண்மை இளங்கலை பட்டப்படிப்பையும், 268 பேர் பட்டய படிப்பையும் படித்து வருகின்றனர்.
'கத்தியை தீட்டாதே...புத்தியை தீட்டு' என்ற அறிவுரையை ஏற்று சிறை கைதிகள் மனம்மாறி கல்வி கற்பதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- கைதிகள் அனைவரும் காலை உணவு சாப்பிட வரிசையில் நின்று கொண்டிருந்தனர்.
- 50-க்கும் மேற்பட்ட கைதிகள் சிறையில் இருந்து தப்பி ஓடினர்.
ஜகார்த்தா:
இந்தோனேசியாவின் ஆச்சே மாகாணம் குடகேன் நகரில் பிரதான சிறைச்சாலை அமைந்துள்ளது. அங்கு விசாரணை மற்றும் தண்டனை கைதிகள் என சுமார் 400 பேர் அடைத்து வைக்கப்பட்டு உள்ளனர்.
இதற்கிடையே அங்கு 100 பேர் மட்டுமே தங்குவதற்கு இடம் இருப்பதாகவும், இதனால் கடுமையான கூட்ட நெரிசலாக இருப்பதாகவும் கைதிகள் குற்றம்சாட்டினர்.
இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க கோரி சிறை அதிகாரிகளிடம் கைதிகள் முறையிட்டனர். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் அவர்களில் பலர் போராட்டத்தில் குதித்தனர்.
எனினும் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதனையடுத்து சிறையில் இருந்து தப்பியோட கைதிகள் முடிவு செய்தனர். இதற்கான சமயத்தை அவர்கள் எதிர்பார்த்து இருந்தனர்.
இந்தநிலையில் கைதிகள் அனைவரும் காலை உணவு சாப்பிட வரிசையில் நின்று கொண்டிருந்தனர். அப்போது மிகுதியான காவலர்கள் பணியில் இல்லாததால் அதனை வாய்ப்பாக பயன்படுத்தி சிறையின் பிரதான கதவை உடைத்தனர்.
பின்னர் 50-க்கும் மேற்பட்ட கைதிகள் சிறையில் இருந்து தப்பி ஓடினர். இதனையடுத்து அவர்களை விரட்டிச் சென்ற போலீசார் 20 கைதிகளை கைது செய்தனர். அதேசமயம் தப்பியோடிய மற்ற கைதிகள் தலைமறைவாகினர். எனவே அவர்களை கைது செய்யும் பணியில் போலீசார் தீவிரமாக இறங்கி உள்ளனர். இதற்கிடையே கைதிகள் சிறையில் இருந்து தப்பி ஓடிய காட்சிகள் அங்குள்ள சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
- பாளையில் சிறை கைதிகளால் நடத்தப்பட்டு வரும் பெட்ரோல் பங்கில் புதிதாக ஒரு அறை திறக்கப்பட்டுள்ளது.
- திறக்கப்பட்ட அந்த அறைக்கு மின்னல் டிரஸ்ட் நிறுவனரும், முன்னாள் சிறைவாசியுமான மில்லத் இஸ்மாயில் தனது செலவில் ரூ.25 ஆயிரம் மதிப்பில் கைதிகளுக்கு புத்தகம் மற்றும் பேனாக்களை வழங்கினார்
நெல்லை:
பாளை மத்திய சிறையில் தண்டனை, விசாரணை கைதிகள் என 1200-க்கும் மேற்பட்டவர்கள் அடைக்கப்பட்டுள்ளனர்.
சிறை கைதிகள்
இவர்களில் பலர் சந்தர்ப்ப சூழ்நிலைகளால் உணர்ச்சிவசப்பட்டு குற்றவாளிகளாகவும், சிலர் பழிக்கு, பழி குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு தண்டனை கைதிகளாகவும் இருந்து வருகின்றனர். இவர்கள் தங்களது குற்றத்தை உணர்ந்து திருந்தி வாழ நூலகத்துறை சார்பில் சிறைச்சாலைக்குள் நூலகம் அமைக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் கைதி களுக்கு புத்தக வாசிப்பு அதிகரித்துள்ளது. பலர் சிறைக்குள் இருந்தே படித்து கல்லூரி பேராசிரி யராகவும் உயர்ந்துள்ளனர். அவர்களை போல் மற்ற கைதிகள் வாசிப்பு பழக்கத்தை அதிகப்படுத்தி, வாழ்வில் உயரும் விதமாக அவர்களுக்கு புத்தகங்களை வழங்கிட சமூக ஆர்வலர்கள் ஆசைப்படுகின்றனர்.
நூலகம்
ஆனால் இந்த நூலகத்திற்கு பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் தங்களது விருப்பத்தின்பேரில் புத்தகங்களை வழங்க முடியாத சூழ்நிலை இருந்து வருகிறது. இதனை தீர்க்கும் விதமாக பாளையில் சிறை கைதிகளால் நடத்தப்பட்டு வரும் பெட்ரோல் பங்கில் புதிதாக ஒரு அறை திறக்கப்பட்டுள்ளது.
அந்த அறைக்கு சிறை கைதிகளுக்கு புத்தக தானம் செய்யும் அறை என பெயரிடப்பட்டுள்ளது. அதில் பொதுமக்கள் இலவசமாக வழங்க விரும்பும் புத்தகங்களை வைப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதனை சிறை காவலர்கள் எடுத்துச்சென்று சிறையில் உள்ள நூலகத்தில் சேர்ப்பார்கள்.
ரூ.25 ஆயிரம் புத்தகம்
இன்று திறக்கப்பட்ட அந்த அறைக்கு மின்னல் டிரஸ்ட் நிறுவனரும், முன்னாள் சிறைவாசியுமான மில்லத் இஸ்மாயில் தனது செலவில் ரூ.25 ஆயிரம் மதிப்பில் கைதிகளுக்கு புத்தகம் மற்றும் பேனாக்களை வழங்கினார். அதனை உதவி ஜெயிலர் சண்முகம், முதல் தலைமை காவலர் முத்துச்சாமி ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.
இதில் முன்னாள் மேயர் புவனேஸ்வரி, தொழில் அதிபர்கள் மவுலானா, பீர் மைதீன், ஏ.கே.ஒய். பாலிடெக்னிக் இயக்குனர்கள் எஸ். செய்யது முகம்மது, எம்.செய்யது முகம்மது உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- மதுரை மத்திய சிறை கைதிகளுக்கு ஆன்லைன் மூலம் டாக்டர்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தபட்டது.
- மதுரை சரக போலீஸ் டி.ஐ.ஜி. பழனி, போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) வசந்த கண்ணன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
மதுரை
தமிழக சிறைகளில் மாரடைப்பு மரணங்கள் தொடர்கதையாக உள்ளன. போலீஸ் உயர் அதிகாரிகள் இது தொடர்பாக மருத்துவ ரீதியாக ஆய்வு செய்தனர். அப்போது கைதிகள் மட்டுமின்றி போலீசாருக்கும் மாரடைப்பு பற்றிய சரியான புரிதல்-விழிப்புணர்வு இல்லை என்பது தெரிய வந்தது.
தமிழக சிறைச்சாலை களில் உள்ள கைதிகளுக்கும் மாரடைப்பு பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று டி.ஜி.பி. அம்ரேஷ் பூஜாரி உத்தரவிட்டார். மதுரை மத்திய சிறையில் கைதிகளுக்கான மாரடைப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தபட்டது. மதுரை சரக போலீஸ் டி.ஐ.ஜி. பழனி, போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) வசந்த கண்ணன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து ஆன்லைன் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. இதில் மாரடைப்பு சிறப்பு மருத்துவ நிபுணர் மதன்மோகன், சென்னை ஸ்டான்லி மருத்துவமனை இருதய பிரிவு விரிவுரையாளர் முருகன் ஆகியோர் கலந்து கொண்டு ஆன்லைன் மூலம் கூறியதாவது:-
மனித உடலில் இதயம் இயங்கவில்லை என்றால் மற்ற பாகங்கள் செயல்படாது. ஒரு குடும்பம் தலைவரை இழந்தால், அவர்களுக்கு ஏற்படும் இழப்பு ஈடுகட்ட முடியாது. போலீசாரும், டாக்டர்களும் ஒன்றுதான். ஏனென்றால் வருடத்தின் 365 நாட்களும் பொது மக்களுக்கு சேவை செய்து வருகிறோம்.
சில ஆண்டுகளுக்கு முன்பு 3 ஆயிரம் பேருக்கு உடல் பரிசோதனை நடத்தினோம். அதில் 300 பேருக்கு மாரடைப்பு பாதிப்பு இருப்பது தெரியவந்தது. அவர்களில் 50 பேருக்கு அறுவை சிகிச்சை செய்து குணப்படுத்தினோம். சினிமாவில் வருகிற மாதிரி மாரடைப்பு பாதிப்பு என்பது உடனடியாக வராது. இதற்கான அறிகுறிகள் ஏற்படும். அப்போது உடனடியாக மருத்துவமனைக்கு செல்வது முக்கியம்.
மாரடைப்பு பாதிப்பு ஏற்படுபவருக்கு உடலில் ரத்தம் செல்லாத பகுதியில் செல் அணுக்கள் படிப்படி யாக இறந்துவிடும். அதன் பிறகு அவரை மரணத்தின் பிடியில் இருந்து மீட்டு கொண்டு வருவது சிரமமான விஷயம். இதயத்தில் 3 தமனிகள் உண்டு. அதில் கொழுப்பு படிந்து ரத்த ஓட்டம் தடைபடுவது தான் மாரடைப்பு ஆகும்.
நடக்கும்போது நெஞ்செரிச்சல் இருந்தால் அது மாரடைப்பின் அறிகுறி. சிலர் அல்சர் என்று மாத்திரை சாப்பிடுகிறார்கள். அது தவறு. சிலருக்கு படி ஏறும் போது அதிகப்படியாக மூச்சு வாங்கும். இது பிரச்சினையின் அறிகுறி. அவர்கள் உடனடியாக இ.சி.ஜி. எடுத்து பார்த்தால் மாரடைப்பு பாதிப்பு வருமா? வராதா? என்பதை கண்டறிய இயலும்.
நெஞ்சுவலி, மயக்கம், மூச்சு வாங்கல், களைப்பு ஆகியவை மாரடைப்பின் அறிகுறி. சிகரெட் குடித்தால் இதய புற்றுநோய் வரும் என்று சொல்வார்கள். ஆனால் மாரடைப்பு தான் முக்கியமாக வரும். 10 ஆண்டுகள் சிகரெட் பிடித்தால் 100 சதவீதம் மாரடைப்பு வாய்ப்புண்டு. அப்பாவுக்கு குறிப்பிட்ட வயதில் மாரடைப்பு வந்தால் பையனுக்கும் வரும். அவர்கள் ஆண்டுக்கு ஒரு முறை உடல் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். உடற்பயிற்சி செய்யாமல் இருந்தாலும் பாதிப்பு வரும்.
வயது முதிர்வு, உடல் குண்டு தன்மை, பதற்றம், நீரிழிவு, ரத்த கொதிப்பு ஆகியவை மாரடைப்பின் வேகத்தை அதிகரிக்கும். பெண்களுக்கு மெனோபாசுக்கு பிறகு ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் சுரப்பு குறையும். இதனால் அவர்களுக்கு மாரடைப்பு பாதிப்பு வர வாய்ப்புகள் உண்டு. 50 வயதை தாண்டிய பெண்கள் வருடாந்திர சோதனை செய்து பார்க்க வேண்டும்.
புகை பிடிப்பதால் 4 மடங்கு மாரடைப்பு வருவதற்கான வாய்ப்புகள் உண்டு. இ-சிகரெட் புகைத்தால் பாதிப்பு வராது என்று சொல்வார்கள். அப்படி இல்லை. மூளை பாதிப்பு ஏற்படும். 10 ஆண்டுகள் புகை பிடித்தல், மாரடைப்பு பாதிப்பு உறுதியாக வரும். அறியாத வயதில் பழகிவிட்டோம்: அறிந்த வயதில் விட்டுவிட வேண்டும். உடல்நல குறைவு என்று படுக்கையில் உள்ள நோயாளிகளுக்கு சிகரெட் நினைப்பு வராது. உயிர் முக்கியம் என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும்.
புகையிலை, மதுபானம் அருந்தும் போது இதயத்துடிப்பு அதிகரிக்கும். பீர் குடித்தால் பாதிப்பு குறைவு என்பார்கள். அப்படி அல்ல. பீர் குடித்தால் 3 ஆண்டுகளில் இதயம் வீங்கி விடும். நீரிழிவு மிகவும் கொடியது. ஆளைக் கொல்லும் வியாதி. 10 வருடத்திற்கு பிறகு தான் பாதிப்பு தெரியும். மாரடைப்பு வருவதற்கான வாய்ப்புகள் 3 மடங்கு உண்டு. ஆண்டுக்கு 2 லட்சத்து 80 ஆயிரம் பேருக்கு பாதிப்பு தெரிகிறது. இதில் 60 சதவீதம் பேருக்கு மரண வாய்ப்பு அதிகமுண்டு. உடற்பயிற்சி செய்தால் உடலில் நல்ல கொழுப்பு அதிகரிக்கும். இதனால் மாரடைப்பு பாதிப்பில் இருந்து தப்பிக்கலாம். மாரடைப்பு வந்தவுடன் ஒரு மணி நேரத்தில் ஆஸ்பத்திரிக்கு சென்று விட வேண்டும். இல்லையெனில் உயிரிழப்பு ஏற்பட வாய்ப்பு உண்டு.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- மதுரையில் கைதிகளுடன், போலீசார் கைப்பந்து விளையாடினர்.
- கைதிகள் தனித்தனி அணிகளாக பிரிந்து விளையாடி வருகின்றனர்.
மதுரை
தமிழகம் முழுவதும் கைதிகளின் உடல் திறனை மேம்படுத்தி நல்வழிப்படுத்தும் வகையில் அனைத்து மத்திய சிறைகளிலும் விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. மதுரை மத்திய சிறையில் ஏற்கனவே கைப்பந்து, இறகுப்பந்து, கேரம், செஸ் ஆகியவற்றுக்கான உள்-வெளி அரங்கங்கள் உள்ளன. அங்கு கைதிகள் விளையாடி மகிழ்வதற்கான விளையாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டன. கைதிகள் தனித்தனி அணிகளாகப் பிரிந்து விளையாடி வருகின்றனர். அங்கு வந்த மதுரை சரக சிறைத்துறை டி.ஐ.ஜி. பழனி, போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) பரசுராமன் மற்றும் அதிகாரிகள் கைப்பந்து விளையாடும் கைதிகளுடன் சிறிது நேரம் விளையாடி மகிழ்ந்தனர்.
- தலை மறைவு மற்றும் குற்ற செயல்களில் ஈடுபடுவரை பிடிக்க போலீசார் கடும் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
- சேலம் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களில் மட்டும் தொடர் குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்த மற்றும் தலைமறைவாக இருந்த 15-க்கும் மேற்பட்ட குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர்.
நாமக்கல்:
தமிழக முழுவதும் பிடிவாரண்ட் கைதிகள் மற்றும் தொடர் குற்ற செயல்களில் ஈடுபடுபவர்களை பிடிக்க தமிழக டி.ஜி.பி சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார்.
இதை அடுத்து தமிழகம் முழுவதும் தலை மறைவு மற்றும் குற்ற செயல்களில் ஈடுபடுவரை பிடிக்க போலீசார் கடும் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
சேலம் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களில் மட்டும் தொடர் குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்த மற்றும் தலைமறைவாக இருந்த 15-க்கும் மேற்பட்ட குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர். மேலும் தொடர்ந்து தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.
இதே போல நாமக்கல் மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக போலீசார் தொடர் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். இதன் எதிரொலியாக கோர்ட் பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டு தலைமறைவாக இருந்த 10-க்கும் மேற்பட்ட கைதிகள் போலீசாரிடம் சிக்கி உள்ளனர். அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி போலீசார் சிறையில் அடைத்து வருகிறார்கள்.
மேலும் தலைமறைவாக உள்ள 60 பேரை பிடிக்க போலீசார் தொடர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். இந்த தேடுதல் வேட்டை தொடரும் என நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தெரிவித்துள்ளார்.
- தண்டனை காலத்தை சிறைச்சாலைகளில் கழித்து வரும் கைதிகள் அங்கு பல்வேறு வேலைகளை செய்து வருகிறார்கள்.
- கைதிகள் தயாரிக்கும் பொருட்களை விற்பனை செய்ய சூப்பர் மார்க்கெட் தொடங்கப்பட்டுள்ளன.
சென்னை:
தமிழகத்தில் உள்ள சிறைச் சாலைகளில் தண்டனை கைதிகளாக இருப்பவர்கள் திருந்தி நல்ல மனிதர்களாக வெளியில் வருவதற்கான அனைத்து நடவடிக்கை களையும் தமிழக அரசு செய்து வருகிறது.
கொலை, கொள்ளை, ஆள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்டு கைதான குற்றவாளிகள் பலர் வழக்கு விசாரணை முடிந்து சிறையில் தண்டனை காலத்தை கழித்து வருகிறார்கள்.
இதுபோன்று தண்டனை காலத்தை சிறைச்சாலைகளில் கழித்து வரும் கைதிகள் அங்கு பல்வேறு வேலைகளை செய்து வருகிறார்கள்.
சிறைகளில் உள்ள தோட்டங்களில் நிலக்கடலை உள்ளிட்ட எண்ணை வித்துக்களை பயிரிட்டு அறுவடை செய்வது, இந்த நிலக்கடலையை சிறையிலேயே செக்கு எண்ணையாக தயாரிப்பது போன்ற பணிகளில் ஈடுபட்டு வரும் கைதிகள் பல்வேறு பொருட்களையும் உற்பத்தி செய்து வருகிறார்கள்.
இந்த பொருட்கள் சந்தை படுத்தப்பட்டு விற்பனையும் செய்யப்பட்டு வருகிறது. சிறைத்துறை டி.ஜி.பி. அம்ரேஷ் புஜாரி மேற் பார்வையில் கைதிகள் தயாரிக்கும் பொருட்களை விற்பனை செய்ய சூப்பர் மார்க்கெட் தொடங்கப்பட்டுள்ளன.
எழும்பூரில் உள்ள சிறைத்துறை தலைமை அலுவலக வளாகத்தில் தொடங்கப்பட்டுள்ள சூப்பர் மார்க்கெட் நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் மதுரையில் உள்ள சூப்பர் மார்க்கெட்டில் தினமும் ரூ.1 லட்சம் அளவுக்கு பொருட்கள் விற்பனை ஆகிக்கொண்டிருக்கின்றன.
இப்படி சிறைச்சாலை அருகில் உள்ள சந்தைகள் பொதுமக்கள் மத்தியில் பெரிய அளவில் வர வேற்பை பெற்றுள்ளதால் சிறைகளில் உற்பத்தி அளவும் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் தாங்கள் செய்யும் வேலையை மிகுந்த ஆர்வத்தோடு செய்ய சிறை கைதிகள் மாதம் ரூ.10 ஆயிரம் வரையில் சம்பாதிக்கிறார்கள்.
கைதிகள் செய்யும் வேலைக்கு ஏற்ப ஊதியம் நிர்ணயிக்கப்படுவதால் ரூ.5 ஆயிரம், ரூ.6 ஆயிரம் என சம்பாதிக்கப்பவர்களும் உண்டு. சிறையில் தரமான சாப்பாடு உள்ளிட்டவைகள் கைதிகளுக்கு வழங்கப்பட்டு வருவதால் இந்த சம்பளம் கைதிகளுக்கு மிச்சமாகி விடுகிறது.
கைதிகள் சம்பாதிக்கும் இந்த பணம் அவர்களிடம் நேரடியாக வழங்கப்படுவது இல்லை. இதுபோன்ற சம்பள பணத்தை கையாள்வதற்கே கணக்கர் ஒருவர் சிறைச்சாலைகளில் உள்ளார். அவர் கைதிகள் சம்பள பணத்தை பத்திரமாக வைத்திருந்து குடும்பத்தினர் பார்க்க வரும்போது அவர்களிடம் ஒப்படைத்து விடுகிறார்.
இதன்மூலம் சிறையில் இருந்தாலும் கைதிகள் தங்கள் குடும்பத்துக்காக பணம் சம்பாதித்து கொடுக்கும் நிலையில் இருந்து வேலைகளை செய்து வருவது அவர்களை மனதளவில் நல்ல மனிதர்களாக மாற்றுவதற்கு உந்து சக்தியாகவே இருப்பதாக சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.






