என் மலர்
நீங்கள் தேடியது "நேபாளம்"
- ஒருதலைப்பட்சமான இந்த நடவடிக்கையை ஏற்க முடியாது என நேபாளத்துக்கு எச்சரிக்கையும் விடுத்தது.
- நேபாள ராஷ்டிர வங்கி வெளியிட்டுள்ள இந்த ரூபாய் நோட்டுகளால் இந்த விவகாரம் மீண்டும் பூதாகரமாகி இருக்கிறது.
உத்தரகாண்ட் எல்லையில் அமைந்துள்ள இந்திய பகுதிகளான காலாபனி, லிபுலேக் மற்றும் லிம்பியாதுரா பிராந்தியங்களை நேபாளம் சொந்தம் கொண்டாடி வருகிறது. கடந்த 2020-ம் ஆண்டு நேபாளத்தின் அப்போதைய கே.பி.சர்மா ஒலி அரசு, இந்த பகுதிகளை இணைத்து வரைபடம் வெளியிட்டது. இதை அந்த நாட்டு பாராளுமன்றமும் பின்னர் அங்கீகரித்தது.
இதற்கு அப்போது இந்தியா கடும் எதிர்ப்பை பதிவு செய்தது. ஒருதலைப்பட்சமான இந்த நடவடிக்கையை ஏற்க முடியாது என நேபாளத்துக்கு எச்சரிக்கையும் விடுத்தது.
தற்போது இந்த பகுதிகளை உள்ளடக்கிய வரைபடத்துடன் புதிய 100 ரூபாய் நோட்டுகளை நேபாளம் வெளியிட்டு உள்ளது. நேபாள ராஷ்டிர வங்கி வெளியிட்டுள்ள இந்த ரூபாய் நோட்டுகளால் இந்த விவகாரம் மீண்டும் பூதாகரமாகி இருக்கிறது. நேபாளத்தின் இந்த நடவடிக்கை இந்தியாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
- ரன்வேயில் இரவு நேரத்தில் விமானங்கள் தரையிறங்க ஏதுவாக மின்விளக்குகள் பொருத்தப்பட்டன.
- தொழில்நுட்ப கோளாறால் ரன்வேயில் பொருத்தப்பட்ட மின் விளக்குகள் அனைத்தும் ஒளிரவில்லை.
காத்மண்டு:
நேபாளத்தின் தலைநகர் காத்மண்டுவில் சர்வதேச விமான நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த விமான நிலையத்தின் ரன்வேயில் இரவு நேரத்தில் விமானங்கள் தரையிறங்க ஏதுவாக மின்விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில், தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமான நிலைய ரன்வேயில் பொருத்தப்பட்டுள்ள மின் விளக்குகள் அனைத்தும் ஒளிரவில்லை. விமான நிலைய ரன்வே வெளிச்சமின்றி இருட்டாக காணப்படுகிறது. இதனால், விமானங்கள் காத்மண்டு விமான நிலையத்தில் தரையிறங்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
காத்மண்டு விமான நிலையத்தில் இருந்து புறப்படும் விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் பயணிகள் மிகுந்த அவதிப்பட்டனர்.
தொழில்நுட்ப கோளாறை செய்யும் பணியில் விமான நிலைய ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
- நேபாளத்தில் இளைஞர்கள் போராட்டத்தில் பிரதமர் ராஜினாமா செய்தார்.
- அடுத்த வருடம் மார்ச் மாதம் பொதுத்தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நேபாளத்தில் இளைஞர்கள் போராட்டத்தால் பிரதமர் ஒலி பதவி விலகினார். இதனால் கார்கி பிரதமராக பதவி ஏற்றுள்ளார். இவர் மார்ச் 5 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவித்திருந்தார். அதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறார்.
இந்த நிலையில் நேபாளத்தில் உள்ள 10 கம்யூனிஸ்டு கட்சிகள் ஒன்றாக இணைந்துள்ளன. இதில் CPN (மாவோயிஸ்ட் மையம்), CPN (ஒருங்கிணைந்த சோசலிஸ்ட்) கட்சிகளும் அடங்கும்.
CPN (மாவோயிஸ்ட் மையம்) கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதமருமான புஷ்பகமல் தஹால் பிரசந்தா ஒருங்கிணைப்பாளராக செயல்படுவார். CPN (ஒருங்கிணைந்த சோசலிஸ்ட்) கட்சி தலைவர் மாதவ் குமார் நேபாள் துணை ஒருங்கிணைப்பாளராக செயல்படுவார்.
10 கட்சிகள் இணைந்துள்ள புதுக்கட்சிக்கு நேபாளி கம்யூனிஸ்ட் கட்சி எனப் பெயரிடப்பட்டுள்ளது. இதன்மூலம் பெரும்பாலான கம்யூஸ்ட் கட்சிகளில் உள்ள மாவோயிஸ்ட் பெயர் கைவிடப்படுகிறது. முக்கியமாக மாவோயிஸ்ட் மையம் கட்சி கைவிடுகிறது.
- அடுத்த ஆண்டு மார்ச் மாதம் பொதுத் தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
- ஒருமித்த கருத்து ஏற்பட கட்சி தலைவர்கள் உள்ளிட்டோர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
இந்தியாவின் அண்டை மாநிலமான நேபாளத்தில், ஊழல் அரசியல் தலைவர்களுக்கு எதிராக Gen Z என்ற பெயரில் இளைஞர்கள் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டம் காரணமாக பிரதமர் கே.பி. ஷர்மா ஒலி தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனால் 73 வயதான முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி சுஷிலா கார்கி பிரதமராக பதவி ஏற்றார். பதவி ஏற்ற சுஷிலா கார்கி, அடுத்த வருடம் மார்ச் 5ஆம் தேதி பொதுத் தேர்தல் நடத்தப்படும் என அறிவித்தார்.
அதற்கான பணிகளை அவர் செய்து வருகிறார். இந்த நிலையில், நேபாளத்தில் உள்ள 7 மாகாண முதல்வர்களுடன் இன்று ஆலோசனை நடத்தினார்.
மாறிவிட்ட அரசியல் சூழலில் மத்திய மற்றும் மாகாண அரசுகளுக்கு இடையேயான உரையாடல் மற்றும் ஒருங்கிணைப்பை வலுப்படுத்துவதற்காக இந்தக் கூட்டம் கூட்டப்பட்டதாக பிரதமரின் செய்தித் தொடர்பாளர் ராம் பகதூர் ராவல் தெரிவித்தார்.
தேர்தல் தொடர்பாக கட்சிகளின் நிலைகளை தெளிவாக தெரிந்து கொள்ள நேற்று, நேபாளி காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர்கள் ககன் தபா, பிஷ்வா பிரகாஷ் சர்மாவை சந்தித்து பேசினார்.
நேபாளி காங்கிரஸ், தேர்தலில் போட்டியிட திட்டமிட்டுள்ளது என உறுதி அளித்துள்ளது. நாங்கள் Gen Z குரூப்புகளுடனும் மற்ற அரசியல் கட்சிகளுடன் தீவிர பேச்சுவார்த்தை நடத்துவோம் எனத் தெரிவித்தனர்.
- காணாமல் போனவர்களைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது.
- இந்தியாவின் மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங் அருகே மிரிக் பகுதியில் கனமழை வெள்ளத்தால் பாலம் இடிந்து விழுந்ததில் 7 பேர் உயிரிழந்தனர்.
நேபாளத்தில் நேற்று முதல் பெய்து வரும் கனமழை, திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் இதுவரை 47 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்திய எல்லைக்கு அருகிலுள்ள கிழக்கு நேபாளத்தின் இலாம் மாவட்டத்தில் மட்டும் ஏற்பட்ட பல நிலச்சரிவுகளில் 35 பேர் கொல்லப்பட்டனர். காணாமல் போனவர்களைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது.
தலைநகர் காத்மாண்டுவில் பாகமதி உள்ளிட்ட பல ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வீடுகள் நீரில் மூழ்கியுள்ளன.
இதனால் காத்மாண்டு சாலைகள் நாட்டின் பிற பகுதிகளில் இருந்து துண்டிக்கப்பட்டுள்ளது.
தென்கிழக்கு நேபாளத்தில் உள்ள கோசி ஆற்றில் அபாய அளவைத் தாண்டி வெள்ளம் பாய்வதால், கோசி தடுப்பணையின் 56 மதகுகளும் திறந்துவிடப்பட்டுள்ளன.
மேலும் நேபாளத்தில் நாளை வரை மழை நீடிக்க வாய்ப்புள்ளதாக வானிலை மையம் எச்சரித்துள்ளது.
இதற்கிடையே இந்தியாவின் மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங் அருகே மிரிக் பகுதியில் கனமழை வெள்ளத்தால் பாலம் இடிந்து விழுந்ததில் 7 பேர் உயிரிழந்தனர்.

இந்த விபத்தால் சிலிகுரி - மிரிக் இடையே போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.
விபத்து நடந்த பகுதியின் பல இடங்களில் மண் சரிவு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாலம் இடிந்த விபத்தில் பலர் நீரில் அடித்துச்செல்லப்பட்டதால் உயிரிழப்பு அதிகரிக்க கூடும் என்று அஞ்சப்படுகிறது.
- சிறுமிக்கு முன்பாக எருமையை பலியிடுவார்கள். அதனைக் கண்டு அஞ்சாத சிறுமி அடுத்த குமாரியாகத் தேர்வு செய்யப்படுகிறார்.
- குமாரி ஒரு வருடத்துக்கு 13 முறை மட்டுமே வெளியே அனுமதிக்கப்படுகிறார்.
நேபாள தலைநகர் காத்மாண்டுவில் தலேஜு பவானி திருக்கோயிலில் பருவமடையாத சிறுமிகள் வழிபாட்டுத் தெய்வமாகப் போற்றும் முறை நடைமுறையில் உள்ளது. இவர்கள் குமாரி என்று அழைக்கப்படுவர்.
இந்நிலையில் தசரா (தசேன்) கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக ஆர்யதாரா சாக்யா என்ற 2 வயது சிறுமி புதிய குமாரியாக தேர்தெடுக்கப்பட்டார்.
பருவமடைந்தவுடன், குமாரி ஒரு சாதாரண மனிதராகக் கருதப்படுவார் என்பது மரபு.
எனவே 2017 ஆம் ஆண்டு குமாரியாகப் பதவியேற்ற முன்னாள் குமாரி திரிஷ்ணா சாக்யா (வயது 11) பேருவமடைந்ததன் காரணமாக ஆர்யதாரா சாக்யா புதிய குமாரியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
புதிய குமாரி ஆர்யதாரா சாக்யா காத்மாண்டுவில் உள்ள அவரது வீட்டிலிருந்து நேற்று (செவ்வாய்க்கிழமை) கோவிலுக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
ஆர்யதாரா சாக்யாவின் தந்தை, தனது மனைவி கர்ப்பமாக இருந்தபோது தெய்வமாக கனவு கண்டதாகவும், தனது மகள் சிறப்புமிக்கவராக இருப்பார் என்று நம்பியதாகவும் கூறியுள்ளார்.

குமாரி தேர்வு செய்யப்படும் முறை
2 முதல் 4 வயதுக்குள் உள்ள சிறுமிகள் குமாரிகளாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
குமாரியாக தேர்வு செய்யப்படுவதற்கு பல கட்ட சோதனைகள் நடைபெறும். குறிப்பாக அவரது மனதும், உடலும் வலிமையானதாக இருப்பதைச் சோதனை செய்வர்.
இறுதியாக சிறுமிக்கு முன்பாக எருமையை பலியிடுவார்கள். அதனைக் கண்டு அஞ்சாத சிறுமி அடுத்த குமாரியாகத் தேர்வு செய்யப்படுகிறார்.
குமாரிகள் அரண்மனைக் கோவிலுக்குள் தனிமைப்படுத்தப்பட்ட வாழ்க்கை வாழ்வார்கள். அவர்களுக்கு தனிப்பட்ட முறையில் கல்வி கற்பிக்கப்படும்.
குமாரி ஒரு வருடத்துக்கு 13 முறை மட்டுமே வெளியே அனுமதிக்கப்படுகிறார்.
குமாரியின் கால்கள் தரையில் படுவது பாவச் செயலாகக் கருதப்படுகிறது. எனவே பல்லக்கில் வைத்துச் சுமந்து செல்லப்படுவார்.
ஓய்வுபெறும் குமாரிகளுக்கு அரசு மாத ஓய்வூதியம் வழங்கும். குராமரியாக இருந்து ஓய்வுபெற்ற பெண்களை திருமணம் செய்பவர் விரைவில் இறந்துவிடுவார் என்ற நம்பிக்கை இருப்பதால் பல முன்னாள் குமாரிகள் திருமணம் செய்துகொள்ளாமலேயே வாழ்வர்.
- முதலில் பேட்டிங் செய்த நேபாளம் அணி 173 ரன்கள் குவித்தது.
- இதனையடுத்து விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 83 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
சார்ஜா:
வெஸ்ட் இண்டீஸ், நேபாளம் அணிகள் மோதும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் சார்ஜாவில் நடக்கிறது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டியில் நேபாளம் 19 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் முழு உறுப்பினர் அணிக்கு எதிராக முதல் வெற்றியை நேபாளம் பதிவு செய்தது.
இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையேயான 2-வது டி20 போட்டி நேற்று நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த நேபாளம் அணி 20 ஓவரில் 173 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ஆசிஃப் ஷேக் 68 ரன்கள் குவித்தார்.
இதனையடுத்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். அந்த அணியில் 3 பேர் மட்டுமே இரட்டை இலக்க ரன்களை எடுத்தனர். இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணி 17.1 ஓவரில் 83 ரன்னில் ஆல் அவுட் ஆனது. இதனால் நேபாளம் அணி 90 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை நேபாளம் அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியுள்ளது.
- இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி நடந்தது.
- இந்தப் போட்டியில் நேபாளம் வெஸ்ட் இண்டீசை வீழ்த்தியது.
சார்ஜா:
வெஸ்ட் இண்டீஸ், நேபாளம் அணிகள் மோதும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் சார்ஜாவில் நடக்கிறது.
இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி நடந்தது. முதலில் பேட் செய்த நேபாளம் 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 148 ரன்கள் எடுத்தது. கேப்டன் ரோகித் பவுடல் 38 ரன்கள் எடுத்தார்.
வெஸ்ட் இண்டீஸ் சார்பில் ஹோல்டர் 4 விக்கெட்டும், நவின் பிடாய்சி 3 விக்கெட்டும் கைப்பற்றினர்.
தொடர்ந்து 149 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி ஆடிய வெஸ்ட் இண்டீசுக்கு சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் சரிந்தன.
இறுதியில், வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 129 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் நேபாளம் 19 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதன்மூலம் முழு உறுப்பினர் அணிக்கு எதிராக முதல் வெற்றியை நேபாளம் பதிவு செய்தது.
- இளைஞர்கள் போராட்டத்தால் பிரதமர் ஷர்மா ஒலி, தனது பதவியை ராஜினாமா செய்தார்.
- அவருக்குப் பதிலாக சுஷிலா கார்கி பிரதமராக பதவி ஏற்ற நிலையில், அடுத்த வருடம் பொதுத்தேர்தல் நடைபெறும் என அறிவித்துள்ளார்.
இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தில் அரசு ஊழல் செய்வதாக குற்றம்சாட்டி இளைஞர்கள் தலைமையிலான Gen Z குரூப் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டது. போராட்டம் வன்முறையாக வெடித்தது. இளைஞர்கள் பிரதமர் வீட்டை சூறையாடினர். பாராளுமன்ற கட்டிடத்திற்கு தீ வைத்தனர். இதனைத்தொடர்ந்து பிரதமர் கே.பி. ஷர்மா ஒலி தனது பதவியை ராஜினாமா செய்தார். அதன்பின் வன்முறை முடிவுக்கு வந்தது. முன்னாள் தலைமை நீதிபதி சுஷிலா கார்கி பிரதமராக பதவி ஏற்றுள்ளார்.
பிரதமராக பதவி ஏற்றதும், அடுத்த வருடம் மார்ச் மாதம் 5ஆம் தேதி பொதுத்தேர்தலை நடத்துவற்கான பணிகள் நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் நேபாள அதிபர், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான வயதை 18 வயதில் இருந்து, 16ஆக குறைப்பதற்கான சட்டத்திருத்தத்திற்கு ஒப்புதல் வழங்கியுள்ளார்.
இதன்மூலம் நேபாளத்தில் 16 வயது நிறைவடைந்தோர், வாக்காளர் பட்டியலில் தனது பெயரை சேர்க்க விண்ணப்பிக்கலாம். பொதுவாக தேர்தல் நடைபெறுவதற்கு முன்னதாக பெயர் சேர்ப்பதற்கான காலஅவகாசம் வழங்கப்படும். தற்போது இப்போதில் இருந்தே விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
ஆனால், 16 வயதில் விண்ணப்பித்து வாக்காளர் அடையாள அட்டை பெற்றாலும், 18 வயது நிரம்பிய பின்னர்தான் வாக்கு செலுத்த முடியும்.
- நேபாளத்தில் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
- போராட்டம் வன்முறையா வெடித்து 74 பேர் உயிரிழந்தனர்.
இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தில் அரசு ஊழல் செய்வதாக குற்றம்சாட்டி இளைஞர்கள் தலைமையிலான Gen Z குரூப் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டது. போராட்டம் வன்முறையாக வெடித்தது. இளைஞர்கள் பிரதமர் வீட்டை சூறையாடினர். பாராளுமன்ற கட்டிடத்திற்கு தீ வைத்தனர். இதனைத்தொடர்ந்து பிரதமர் கே.பி. ஷர்மா ஒலி தனது பதவியை ராஜினாமா செய்தார். அதன்பின் வன்முறை முடிவுக்கு வந்தது. முன்னாள் தலைமை நீதிபதி சுஷிலா கார்கி பிரதமராக பதவி ஏற்றுள்ளார்.
இந்த நிலையில் போராட்டத்தின்போது உயிரிழப்புக்கு காரணமாக இருந்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சுஷிலா கார்கி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சுஷிலா கார்கி கூறியதாவது:-
தற்போதைய அரசுக்கு அரசிலமைப்பு திருத்துவதற்கும், நிர்வாக அமைப்பு மாற்றுவதற்கும் அதிகாரம் கிடையாது. ஊழலை முடிவுக்கு கொண்டு வரவும், சிறந்த நிர்வாகத்தை உறுதி செய்வதையும், மக்கள் எதிர்பார்க்கும் சேவையை மேம்படுத்தவும் உறுதி பூண்டுள்ளது.
போராட்டத்தின்போது உயிரிழப்பிற்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அவர்கள் மாணவர்களாக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும். அடுத்த வருடம் மார்ச் 5ஆம் தேதியில் பாராளுமன்ற தேர்தல் நடத்துவது தொடர்பான பணிகள் ஏற்கனவே தொடங்கிவிட்டது.
இவ்வாறு சுஷிலா கார்கி தெரிவித்தார்.
- ஜனாதிபதி, ராணுவ தளபதி, போராட்டக்குழு பிரதிநிதிகள் இடையே ஒருமித்த கருத்து.
- அதிபர் மாளிகை முறையாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இளைஞர்களின் போராட்டத்தால் பிரதமராக இருந்த கே.பி. சர்மா ஒலி பதவி விலகிய நிலையில், உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதி சுஷிலா கார்கி புதிய பிரதமராக பதவி ஏற்றுள்ளார். நேபாள நாட்டின் முதல் பெண் பிரதமர் இவராவார்.
அதிபர் ராம் சந்திரா பவுடல், நேபாள ராணுவத் தலைவர் அசோக் ராஜ் சிக்டெல் இடையே ஒருமித்த கருத்து ஏற்பட்ட நிலையில், அதிபர் மாளிகை இந்த முடிவை முறையாக அறிவித்துள்ளது. சுஷிலா கார்கியை தேர்வு செய்ய ஜென் இசட் போராட்ட இயக்க பிரதிநிதிகள் சம்மத் தெரிவித்துள்ளனர்.
கடந்த சில தினங்களுக்கு ஊழல் அரசியல்வாதிகளுக்கு எதிராக இளைஞர்கள் கடும் போராட்டம் நடத்தினர். இதன் விளைவாக பிரதமர் பதவி விலகினார். போராட்டத்தில் 51 பேர் உயிரிழந்தனர். அரசு கட்டிடங்கள், நட்சத்திர ஓட்டல்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டன. சிறைச்சாலைகள் உடைக்கப்பட்டு கைதிகள் தப்பி ஓடினர்.
- வன்முறையை முடிவுக்கு கொண்டு வர ராணுவம் தீவிர ஆலோசனை.
- குல்மான் கீசிங் இடைக்கால பிரதமராக பதவி ஏற்க வாய்பு இருப்பதாக கூறப்பட்டது.
நேபாளத்தில் ஊழல் அரசியல்வாதிகளுக்கு எதிராக சமூக வலைத்தளம் மூலம் குரூப் உருவாக்கி இளைஞர்கள் போராட்டத்திற்கு ஆதரவு திரட்டி வந்தனர். அதனைத் தொடர்ந்து அரசு சமூக வலைத்தளங்களுக்கு தடைவிதித்தது. இதனால் இளைஞர்கள் வீதியில் இறங்கி போராடினர். இந்த போராட்டம் வன்முறையாக வெடித்தது. அரசு கட்டிடங்களை தீவைத்து கொழுத்தினர். இன்னும் வன்முறை ஓய்ந்த பாடில்லை.
இந்த வன்முறையில் 51 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் இந்திய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இவர் காசியாபாத்தை சேர்ந்தவர். மூன்று போலீசார் அதிகாரிகளும் கொல்லப்பட்டுள்ளனர். இடைக்கால அரசு அமைத்து வன்முறையை முடிவுக்கு கொண்டு வர ராணுவம், போராட்டுக்குழு தலைவர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறது.
முதலில் உச்சநீதிமன்றம் முன்னாள் தலைமை தளபதி சுஷிலா கார்கி இடைக்கால பிரதமாக பதவி ஏற்க வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டது. பின்னர் நேபாள மின்சார ஆணையம் தலைவர் குல்மான் கீசிங் இடைக்கால பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியானது.
இந்த நிலையில், சுஷிலா கார்கி இடைக்கால பிரதமாக பதவி ஏற்க அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.






