என் மலர்
உலகம்

நேபாளத்தில் ஆற்றில் பேருந்து கவிழ்ந்து விபத்து- 17 பேர் உயிரிழப்பு
- விபத்தில், 6 பெண்கள், 11 ஆண்கள் என மொத்தம் 17 பேர் உயிரிழந்தனர்.
- 8 பெண்கள் உள்ளிட்ட 27 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நேபாளத்தின் போக்கராவிலிருந்து காத்மாண்டுக்கு பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்ற பேருந்து ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளானது.
இந்த கோர விபத்தில், 6 பெண்கள், 11 ஆண்கள் என மொத்தம் 17 பேர் உயிரிழந்தனர்.
ஆற்றில் பேருந்து விழுந்த விபத்தில் படுகாயமடைந்த 8 பெண்கள் உள்ளிட்ட 27 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும், விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






