search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Nepal"

    • நிலச்சரிவால் பல பகுதிகளில் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது.
    • நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

    காத்மண்டு:

    நேபாளத்தில் கடந்த வாரம் கனமழை பெய்தது. பல நகரங்கள் வெள்ளக்காடாக காட்சி அளிக்கின்றன.

    தலைநகர் காத்மண்டுவில் 200-க்கு மேற்பட்ட வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின. அங்கு பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் பலர் சிக்கிக் கொண்டனர்.

    நேபாளம் முழுவதும் மழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 150-ஐ நெருங்கியது.

    பல நெடுஞ்சாலைகள் மற்றும் சாலைகள் சீர்குலைந்துள்ளன. நூற்றுக்கணக்கான வீடுகள் மற்றும் பாலங்கள் அடித்துச் செல்லப்பட்டன, இதனால் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் இடம் பெயர்ந்துள்ளன.

    இந்நிலையில், நேபாளத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 217 ஆக அதிகரித்துள்ளது. மேலும் 29 பேரை காணவில்லை என மீட்புக்குழுவினர் தெரிவித்தனர்.

    பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. மாயமானோரை தேடும் பணியும் நடந்து வருகிறது. மீட்புப் பணிகள் நடந்து வருகின்றன என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • கிழக்கு மற்றும் மத்திய பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின.
    • நிலச்சரிவால் பல பகுதிகளில் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது.

    காத்மண்டு:

    நேபாளத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. பல நகரங்கள் வெள்ளக் காடாக காட்சியளிக்கின்றன. தலைநகர் காத்மண்டுவில் 200-க்கு மேற்பட்ட வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின. அங்கு பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் பலர் சிக்கிக் கொண்டனர்.

    நேபாளம் முழுவதும் மழை வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 100-ஐ கடந்தது.

    அதிகபட்சமாக காத்மண்டு பள்ளத்தாக்கில் 48 பேர் உயிரிழந்தனர். மேலும் 64 பேரை காணவில்லை. தொடர் மழையால் காத்மண்டுவின் முக்கிய நதியான பாக்மதியில் அபாய அளவை தாண்டி தண்ணீர் பாய்ந்து செல்கிறது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப்பணிகள் நடந்து வருகிறது.

    பல நெடுஞ்சாலைகள் மற்றும் சாலைகள் சீர்குலைந்துள்ளன. நூற்றுக்கணக்கான வீடுகள் மற்றும் பாலங்கள் அடித்துச் செல்லப்பட்டன, இதனால் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் இடம் பெயர்ந்துள்ளன.

    நேபாளம் பாதுகாப்பு படைகளைச் சேர்ந்த 3,000 வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுடன் உள்ளூர் மக்களும் இணைந்து மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    இந்நிலையில், நேபாளத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 148 ஆக உயர்ந்துள்ளது என மீட்புக் குழுவினர் தெரிவித்தனர்.

    • வெள்ளப் பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளதாக பேரிடர் அதிகாரிகள் எச்சரித்தளனர்.
    • வெள்ளத்தில் சிக்கி 11 பேர் காணாமல் போயுள்ளதாகவும் கூறப்படுகிறது.

    நேபாளத்தில் இடைவிடாத மழையினால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி இதுவரை 39 பேர் உயிரிழந்துள்ளனர்.

    நேபாளத்தின் சில பகுதிகள் நேற்று பெய்த கனமழையால் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இதனால் வெள்ளப் பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளதாக பேரிடர் அதிகாரிகள் எச்சரித்தளனர்.

    இந்நிலையில், வெள்ளப்பெருக்கில் சிக்கி 39 பேர் இறந்துள்ளனர். இதில், காத்மாண்டுவில் 9 பேரும், லலித்பூரில் 16 பேரும், பக்தபூரில் 5 பேரும், கவ்ரேபாலன்சௌக்கில் 3 பேரும், பஞ்ச்தார் மற்றும் தன்குடாவில் தலா இரண்டு பேரும், ஜாபா மற்றும் தாடிங்கில் இருந்து தலா ஒருவரும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும், வெள்ளத்தில் சிக்கி 11 பேர் காணாமல் போயுள்ளதாகவும் கூறப்படுகிறது.

    காத்மாண்டுவில் 226 வீடுகள் நீரில் மூழ்கியுள்ளதாகவும், பாதிக்கப்பட்ட பகுதிகளில் நேபாள காவல்துறையில் இருந்து சுமார் 3,000 பாதுகாப்புப் பணியாளர்களைக் கொண்ட மீட்புக் குழு நிறுத்தப்பட்டுள்ளதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.

    • வைணவ சமயத்தில் 108 திவ்ய தேசங்கள் உண்டு.
    • 106 திவ்ய தேசங்கள் பூமியில் உள்ளன.

    ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட கோவில்களை 'திவ்ய தேசங்கள்' என்று அழைப்பார்கள். அந்த திவ்ய தேசங்களில் ஒன்றுதான், நேபாளத்தில் உள்ள 'முக்திநாத்'.

    உண்மையில் முக்திநாத் என்பது ஒரு சிறிய கிராமம் தான். அங்கிருந்து 2 கிலோமீட்டர் தூரத்தில் ஆலயம் இருக்கிறது. இந்த ஆலயத்தை சுற்றி சாலமரங்கள் நிறைந்து காணப்பட்டதால், இந்த ஆலயம் 'சாளக்கிராம ஷேத்திரம்' என்று அழைக்கப்படுகிறது.


    இமயமலைச் சாரலில் மிக அதிகமான உயரத்தில் இருக்கும் ஆலயம் இது. இங்கே அருளும் நாராயணர், சுயம்பு மூர்த்தியாக உருவானவர் ஆவார்.

    நேபாளத்தின் தலைநகரான காட்மாண்டில் இருந்து 250 கிலோமீட்டர் தூரத்தில் முக்திநாத் ஷேத்திரம் அமைந்துள்ளது.

    இந்த திவ்யதேசத்தை திருமங்கையாழ்வாரும், பெரியாழ்வாரும் 12 பாடல்களால், மங்களாசாசனம் செய்துள்ளனர். முக்திநாத் கிராமத்தில் உள்ளவர்கள் இந்த கோவிலை 'முக்தி நாராயண ஷேத்திரம்' என்று அழைக்கிறார்கள்.

    இதற்கு மேல் 105 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது, தாமோதர குண்ட் (நீர்த்தேக்கம்). இதைத்தான் உள்ளூர் மக்கள் 'முக்திநாதர் ஆலயம்' என்கிறார்கள்.

    முக்திநாத் கோவில் பல அற்புதங்கள் நிறைந்தது. இங்கே சிறிய சன்னிதி, நேபாள பாணியில் கட்டப்பட்டுள்ளது. கோவிலில் சிறிய யாகசாலையும் உண்டு. கோவிலின் உட்புறம் முக்தி நாராயணர், ஸ்ரீதேவி - பூதேவியுடன் அமர்ந்த திருக்கோலத்தில் மேற்கு நோக்கி காட்சியளிக்கிறார்.

    மிகப்பழமையான நூல்களில், இந்த ஆலய இறைவன் நின்ற கோலத்தில் வடக்கு நோக்கி சேவை சாதிப்பதாகவே சொல்லப்பட்டுள்ளது. திருமங்கை ஆழ்வார் தனது பாசுரத்தில் கூட இதை உறுதி செய்கிறார். கால மாற்றத்தில்தான், இறைவன் அமர்ந்த கோல தோற்றத்திற்கு மாறியிருக்க வேண்டும்.

    தவிர இந்த ஆலயத்தில் கருடன், சந்தோஷமாதா, லலிதா, விநாயகர், சாளக்கிராம ரூபங்கள், பார்வதி பரமேஸ்வரன் ஆகியோரும் சிறிய விக்கிரக வடிவில் காட்சி தருகிறார்கள்.


    இந்த கோவிலில் அர்ச்சனை, சிறப்பு வழிபாடுகள் என்று எதுவும் கிடையாது. சிறு மணியை பிரார்த்தனையாக கட்டும் வழக்கம் மட்டும் உள்ளது. லட்ச தீபம் ஏற்றும் வழிபாடு உண்டு. இங்குள்ள சிறிய யாகசாலையில் எப்பொழுதும் அக்னி எரிந்துகொண்டிருக்கும். அதில் நாமே ஹோமம் செய்துகொள்ளலாம்.

    கருவறையில் உள்ள இறைவனுக்கு நம் ஊரில் நடப்பது போல அபிஷேகம் செய்வது கிடையாது. செப்பு தட்டில் ஐந்து கிண்ணங்கள் இருக்கும். அதில் சந்தனம், குங்குமம், ஜவ்வாது போன்றவை இருக்கும். அவற்றை ஒரு துணியில் தொட்டு, முக்திநாதரை துடைப்பார்கள். அதுதான் அங்கே அபிஷேகம் ஆகும்.

    இந்த ஆலயத்தில் 108 தீர்த்தங்கள் செயற்கையாக அமைக்கப்பட்டுள்ளன. ஒரு தொட்டியில் தனித்தனி குழாய் வைத்து இந்த தீர்த்தங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இது தவிர, பாவ புண்ணிய தீர்த்தங்கள் என்று இரண்டு தீர்த்தங்கள் உள்ளன.


    மேற்கண்ட அனைத்து தீர்த்தங்களிலும் நவம்பர் முதல் மார்ச் வரையான மாதங்களில் கடுமையான குளிர் காரணமாக நீராட சிரமமாக இருக்கும்.

    பனி சூழ்ந்த உயரமான மலையில் அமைந்துள்ள இந்த ஆலயம், அற்புதமான அனுபவங்களை கட்டாயம் கொடுக்கும். வாழ்க்கையில் ஒரு முறை நிச்சயம் தரிசிக்க வேண்டிய ஆலயம் இதுவாகும்.

    இந்த ஆலயத்திற்கு சென்று திரும்புபவர்கள், காட்மாண்டு சென்று அங்கும் பல ஆலயங்களை தரிசிக்கலாம். மேலும் இங்கு சாளக்கிராமம் வாங்கிக்கொண்டு வந்து நம் இல்லத்தில் வைத்து பூஜிப்பது மிகுந்த புண்ணியத்தைத் தரும்.

    சாளக்கிராம அபிஷேக தீர்த்தமானது, கங்கை நீருக்கு சமம் என்பார்கள். மேலும் சாளக்கிராமத்தை துளசி கொண்டு பூஜிப்பவர்களின் இல்லங்களில் நரக பயம் இருக்காது.

    செல்லும் வழி

    சென்னையில் இருந்து ரெயில் மூலம் அல்லது விமானத்தின் மூலம் கோரக்பூர் சென்று, கோரக்பூரில் இருந்து டாக்சி மூலம் சுனோலி எல்லையை அடைய வேண்டும். சுனோலி எல்லையை ஐந்து நிமிடம் நடந்து கடக்கலாம். அந்த இடத்திற்கு 'பைரவா' என்று பெயர்.

    அங்கிருந்து விமானத்தின் மூலம் அல்லது பஸ் அல்லது வேறு வாகனத்தின் மூலமும் போக்ரா என்ற இடத்தை அடையலாம். போக்ராவில் ஒரு நாள் தங்க வேண்டியதிருக்கும். போக்ராவில் இருந்து முக்திநாத் செல்ல அனுமதி வாங்க வேண்டும்.

    போக்ராவில் இருந்து ஜேம்சன் என்ற இடத்திற்குச் சென்று அங்கிருந்து முக்திநாத் செல்ல வேண்டும். முக்திநாத்தில் இருந்து கோவிலை அடைய நடந்து அல்லது குதிரையில் செல்ல வேண்டும்.

    108 திவ்ய தேசங்கள்

    வைணவ சமயத்தில் 108 திவ்ய தேசங்கள் உண்டு. அவற்றில் 106 திவ்ய தேசங்கள் பூமியில் உள்ளன. 'திருப்பாற்கடல்', 'வைகுண்டம்' ஆகிய இரண்டு திவ்ய தேசங்களை தரிசிக்கும் பாக்கியம் வானுலகில்தான் வாய்க்கும்.

    பூமியில் உள்ள 106 திவ்ய தேசங்களில் 105 இந்தியாவிலும், நேபாளத்தில் ஒன்றும் அமைந்துள்ளன. நேபாளத்தில் அமைந்த திவ்ய தேசம்தான் 'முக்திநாத்' ஆகும்.

    ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட கோவில்களின் தொகுப்பே '108 திவ்ய தேசங்கள்'. மங்களாசாசனம் என்பது, திருமாலையும் அவர் இருந்து ஆட்சி செய்யும் தலங்களையும் பாடிய பாடல்களை குறிக்கும்.

    108 திவ்ய தேசங்களையும் தொகுத்துக் காட்டியவர், அழகிய மணவாளதாசர் என்பவர் ஆவார். இவர் திருமலை நாயக்கர் ஆட்சியில், அலுவலராகப் பணியாற்றியவர். 108 ஆலயங்களையும், நாடு வாரியாகப் பிரித்து, ஒவ்வொரு ஊருக்கும் ஒரு வெண்பா பாடியுள்ளார். அவை 'நூற்றெட்டு திருப்பதி அந்தாதி' என்று அழைக்கப்படுகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பஸ் பொக்ராவில் இருந்து காத்மாண்டு நோக்கி சென்றுகொண்டிருந்தது.
    • மீட்பு பணிகளை மேற்கொள்வதற்காக சம்பவ இடத்திற்கு காவல் துறையினர் விரைந்துள்ளனர்.

    நேபாளம்:

    நேபாளத்தின் தனாஹுன் மாவட்டத்தில் 40 பேருடன் இந்திய பயணிகள் பஸ் ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

    இந்த பஸ் பொக்ராவில் இருந்து காத்மாண்டு நோக்கி சென்றுகொண்டிருந்தபோது காலை 11.30 மணியளவில் மார்ஸ்யாங்டி ஆற்றில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதாக தெரிய வந்துள்ளது.

    மீட்பு பணிகளை மேற்கொள்வதற்காக சம்பவ இடத்திற்கு காவல் துறையினர் விரைந்தனர்.

    "UP FT 7623 என்ற எண் கொண்ட பஸ் ஆற்றில் விழுந்து ஆற்றின் கரையில் கிடக்கிறது என்று டிஎஸ்பி தீப்குமார் ராயா உறுதிபடுத்தினார்.

    இந்நிலையில் ஆற்றில் கவிழ்ந்த பஸ்சில் பயணித்த 40 இந்தியர்களில் 14 பேர் பலியான நிலையில் இதுவரை 16 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.

    • விமானம் விபத்தில் சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
    • தீயணைப்பு துறையினர் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

    நேபாளம் நாட்டின் காத்மாண்டுவில் உள்ள திருபுவன் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து போக்கரா புறப்பட்ட விமானம் விபத்தில் சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    இன்று (ஜூலை 24) காலை 11 மணி அளவில் புறப்பட்ட சௌரியா ஏர்லைன்ஸ்-க்கு சொந்தமான விமானம் போக்கராவுக்கு செல்ல டேக் ஆஃப் ஆகும் போது விபத்தில் சிக்கியது. இந்த விமானத்தில் ஊழியர் குழு உள்பட 19 பேர் இருந்தனர்.


    இந்த நிலையில் விமானத்தில் பயணம் செய்தவர்களில் 18 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. விமானத்தை இயக்கிய விமானி அருகாமையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    விபத்துக் களத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர், விமானத்தில் ஏற்பட்ட தீயை கட்டுப்படுத்தினர். தொடர்ந்து போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

    • இந்தியா, நேபாளம் அணிகள் மோதின.
    • இந்திய அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு.

    9-வது ஆசிய கோப்பை மகளிர் கிரிக்கெட் போட்டி இலங்கையில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்கும் 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ஏ பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, நேபாளம், பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம் அணிகள் இடம்பெற்றுள்ளன.

    பி பிரிவில் வங்காளதேசம், மலேசியா, இலங்கை, தாய்லாந்து அணிகள் இடம்பெற்றுள்ளன. லீக் சுற்று முடிவில் இரு பிரிவுகளில் முதல் இரண்டு அணிகள் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறும். அந்த வகையில், நேற்றிரவு நடைபெற்ற போட்டியில் இந்தியா, நேபாளம் அணிகள் மோதின.

    இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. முதல் விக்கெட்டுக்கு 122 ரன்கள் சேர்த்த நிலையில் ஹேமலதா 47 ரன்னில் அவுட்டானார். அதிரடியாக ஆடிய ஷபாலி வர்மா 48 பந்தில் 81 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். சஜனா 10 ரன்னில் அவுட் ஆனார்.

     


    இந்திய அணி 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 178 ரன்களை குவித்தது. நேபாளம் சீதா ரானா மகர் இரண்டு விக்கெட்டுகளையும், கபிதா ஜோஷி ஒரு விக்கெட் வீழ்த்தினார். 179 ரன்களை துரத்திய நேபாளம் அணி துவக்கத்திலேயே தடுமாறியது.

    அந்த அணியின் சம்ஜனா கட்கா 7 ரன்னில் அவுட் ஆனார். இவருடன் களமிறங்கிய சீதா ரானா மகர் 18 ரன்களை அடித்தார். அடுத்து வந்தவர்களில், கேப்டன் இந்து பர்மா 14 ரன்களையும், ருபினா சேத்ரி 15 ரன்களையும் அடித்து அவுட் ஆகினர். இடையில் பிந்து ராவல் நிதானமாக ஆடி 17 ரன்களை அடித்தார்.

    மற்ற வீராங்கனைகள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். 20 ஓவர்கள் முடிவில் நேபாளம் அணி 9 விக்கெட்டுகளை இழந்து 96 ரன்களை மட்டுமே அடித்தது. இதனால் இந்திய அணி 82 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்திய அணி சார்பில் தீப்தி ஷர்மா மூன்று விக்கெட்டுகளையும், அருந்ததி ரெட்டி மற்றும் ராதா யாதவ் தலா இரண்டு விக்கெட்டுகளையும், ரேனுகா சிங் ஒரு விக்கெட் வீழ்த்தினர். நேற்றைய போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் இந்திய அணி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியது.

    • திரிசூலி ஆற்றில் 65 பயணிகளுடன் சென்ற இரண்டு பேருந்துகள் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டன.
    • நதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிவதால், இதுவரை யாரையும் கண்டுப்பிடிக்கப்படவில்லை.

    நேபாளத்தில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் இரண்டு பேருந்துகள் ஆற்றில் கவிழந்து விபத்துக்குள்ளானது. இதில், 7 இந்தியர்கள் உள்பட 60க்கும் மேற்பட்டோர் மாயமாகியுள்ளனர்.

    தலைநகர் காத்மாண்டுவில் இருந்து 100 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சிட்வான் மாவட்டத்தில் உள்ள நாராயண்காட்- மக்லிங் சாலையில் உள்ள சிமால்டால் பகுதியில் உள்ள திரிசூலி ஆற்றில் 65 பயணிகளுடன் சென்ற இரண்டு பேருந்துகள் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டன. இந்த விபத்து இன்று அதிகாலை 3.30 மணியளவில் ஏற்பட்டதாக தெரியவந்துள்ளது.

    காத்மாண்டு நோக்கிச் செல்லும் ஏஞ்சல் பேருந்தில் 24 பேர் இருந்த நிலையில், நேபாளத் தலைநகரில் இருந்து கவுர் நோக்கிச் சென்று கொண்டிருந்த கணபதி டீலக்ஸில் 41 பேர் பயணம் செய்துள்ளனர்.

    காணாமல் போன இந்தியர்கள் சந்தோஷ் தாக்கூர், சுரேந்திர சா, ஆதித் மியான், சுனில், ஷாநவாஜ் ஆலம் மற்றும் அன்சாரி என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

    நதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிவதால், இதுவரை யாரையும் கண்டுப்பிடிக்கப்படவில்லை என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.

    இதற்கிடையே, கணபதி டீலக்ஸ் பேருந்தில் இருந்த 3 பயணிகள் வாகனத்தில் இருந்து குதித்து தப்பியதாக கூறப்படுகிறது.

    நேபாள பிரதமர் புஷ்ப கமல் தஹால் 'பிரசந்தா' விபத்து குறித்து வருத்தம் தெரிவித்ததோடு, உடனடி தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளுக்கான உத்தரவுகளை வழங்கினார்.

    • தெற்காசியா முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் இறப்பு மற்றும் அழிவைக் கொண்டு வருகிறது.
    • அபாயகரமான வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

    நேபாளத்தில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக நாடு முழுவதும் 14 பேர் உயிரிழந்துள்ளனர்.

    காணாமல் போன 9 பேரை பேரிடர் குழுக்கள் தேடி வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

    அண்டை நாடான இந்தியாவிலும், பங்களாதேஷின் கீழ்பகுதியிலும் ஏற்பட்ட வெள்ளம் பரவலான சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. இது மில்லியன் கணக்கான மக்களை பாதித்துள்ளது.

    இதுகுறித்து நேபாள காவல்துறை செய்தித் தொடர்பாளர் கூறுகையில்," காணாமல் போனவர்களைக் கண்டுபிடிக்க காவல்துறை மற்ற அமைப்புகள் மற்றும் உள்ளூர்வாசிகளுடன் இணைந்து பணியாற்றி வருகிறது" என்றார்.

    ஜூன் முதல் செப்டம்பர் மாதம் வரையிலான பருவமழை தெற்காசியா முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் இறப்பு மற்றும் அழிவைக் கொண்டு வருகிறது. அதேபோல், சமீபத்திய ஆண்டுகளில் அபாயகரமான வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

    நேபாளத்தின் சில பகுதிகளில் கடந்த வியாழன் முதல் பலத்த மழை பெய்து வருகிறது. இமயமலை தேசத்தில் பேரழிவு அதிகாரிகள் பல நதிகளில் திடீர் வெள்ளம் ஏற்படும் என்று எச்சரித்துள்ளனர்.

    கடந்த மாதம் நேபாளத்தில் நிலச்சரிவு, மின்னல் மற்றும் வெள்ளம் காரணமாக ஏற்பட்ட பயங்கர புயல்களில் சிக்கி 14 பேர் உயிரிழந்தனர்.

    இந்தியாவில், வடகிழக்கு மாநிலமான அசாமில் வெள்ளம் சூழ்ந்துள்ளது, கடந்த 24 மணி நேரத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர் என்று அசாமின் பேரிடர் மேலாண்மை ஆணையம் நேற்று தெரிவித்துள்ளது.

    • ராம் பகதூர் பாம்ஜான் ஒரு மரத்தின் கீழ் 10 மாதங்கள் தவம் இருந்தான் என்று சொல்லப்படுகிறது.
    • அந்த சமயத்தில் அவர் உணவு, தண்ணீர், உறக்கம் என எதுவும் இல்லாமல் இருந்தார் என ஆயிரக்கணக்கான மக்கள் நம்புகின்றனர்.

    2005 ஆம் ஆண்டு ராம் பகதூர் பாம்ஜான் என்ற சிறுவன் நேபாளத்தில் உள்ள அடர்த்தியான காடுகளில் உள்ள ஒரு மரத்தின் கீழ் 10 மாதங்கள் தவம் இருந்தான் என்றும் அந்த சமயத்தில் அந்த சிறுவன் உணவு, தண்ணீர், உறக்கம் என எதுவும் இல்லாமல் இருந்தான் என்று ஆயிரக்கணக்கான மக்கள் நம்புகின்றனர்.

    இதன் காரணமாக அந்த சிறுவனை புத்தரின் மறு அவதாரம் என்று பெரும்பாலான மக்கள் நம்ம ஆரம்பித்தனர்.

    இந்நிலையில் 33 வயதாகும் ராம் பகதூர் பாம்ஜான் மீது குழந்தைகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தியது தொடர்பாக பொக்சோ வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கில் அவர் குற்றவாளி என்று நேபாள நீதிமன்றம் தீர்ப்பு கொடுத்துள்ளது.

    ஜூலை 1 ஆம் தேதி தண்டனை விவரங்கள் அறிவிக்கப்படும் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இக்குற்றத்திற்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

    • அபார பந்து வீச்சால் வங்காளதேசம் திணறியது.
    • வங்காளதேசம் 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    கிங்ஸ்டவுன்:

    20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வருகிறது.

    செயினட் வின்சென்டில் இந்திய நேரப்படி இன்று காலை 5 மணிக்கு தொ டங்கிய 37-வது லீக் ஆட்டத்தில் டி பிரிவில் வங்காள தேசம்-நேபாளம் அணிகள் மோதின.

    டாஸ் ஜெயித்த நேபாளம் பந்து வீச்சை தேர்வு செய்தது. அந்த அணியின் அபார பந்து வீச்சால் வங்காளதேசம் திணறியது.

    எந்த வீரரும் நிலைத்து நின்று விளையாடவில்லை. வங்காளதேசம் 19.3 ஓவர்களில் 106 ரன்னுக்கு ஆல்-அவுட் அனது.

    நேபாளம் தரப்பில் சோம்பால்கமி, சந்தீப் லமிச்சனே, ரோகித் பவுடல், திபேந்திர சிங் ஆகியோர் தலா 2 விக்கெட் கைப்பற்றினர். பின்னர் இலக்கை நோக்கி விளையாடி நேபாளமும் திணறியது.

    அந்த அணி 26 ரன்னுக்குள் 5 விக்கெட்டை இழந்தது. அதன்பின் குவுல்மல்லா, திபேந்திர சிங் ஜோடி சிறிது தாக்குபிடித்து விளையாடியது. அவர்கள் அவுட் ஆனதும் விக்கெட்டுகள் சரிந்தன. நேபாளம் 19.2 ஓவரில் 85 ரன்னுக்கு ஆல்-அவுட் அனது. இதனால் வங்காளதேசம் 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    வங்காளதேசம் தரப்பில் தன்சிம் ஹசன் சாகிப் 4 விக்கெட்டும், முஸ்தாபிசுர் ரகுமான் 3 விக்கெட்டும், ஷகீப்-கல்-ஹசன் 3 விக்கெட்டும் கைப்பற்றினர்.

    இந்த வெற்றி மூலம் வங்காளதேசம் சூப்பர்-8 சுற்றுக்கு தகுதி பெற்றது. அந்த அணி 4 ஆட்டத்தில் 4 வெற்றி, ஒரு தோல்வியுடன் 6 புள்ளிகள் பெற்றது.

    ஏற்கனவே இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், ஆப்கானிஸ்தான், அமெரிக்கா ஆகிய அணிகள் சூப்பர்-8 சுற்றுக்கு தகுதி பெற்று விட்டன. பாகிஸ்தான், நியூசிலாந்து, இலங்கை, நெதர்லாந்து, அயர்லாந்து, கனடா, ஸ்காட்லாந்து, நமீபியா, ஓமன், உகாண்டா, பப்புலா நியூகினியா, நேபாளம் ஆகிய அணிகள் வெளியேற்றப் பட்டன.

    சூப்பர்-8 சுற்றுக்கான ஆட்டம் வருகிற 19-ந்தேதி தொடங்குகிறது.

    • 106 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
    • நேபாளம் அணியும் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

    டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நடந்த 37-வது லீக் போட்டியில் வங்காளதேசம் மற்றும் நேபாளம் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற நேபாளம் அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது.

    அதன்படி பேட்டிங்கை துவங்கிய வங்காளதேசம் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. அந்த அணியின் துவக்க வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர். வங்காளதேசம் சார்பில் யாரும் அதிகபட்சம் 20 ரன்களை கூட அடிக்காத நிலையில், அந்த அணி 19.3 ஓவர்களில் 106 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

    நேபாளம் சார்பில் சிறப்பாக பந்துவீசிய சோம்பால் கமி, திபேந்திர சிங், ரோகித் பௌடெல் மற்றும் சந்தீப் லமிசேன் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். 107 ரன்களை துரத்திய நேபாளம் அணியும் துவக்கத்திலேயே விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

    மிடில் ஆர்டரில் நேபாளம் அணியின் குஷல் மல்லா மற்றும் திபேந்திர சிங் விக்கெட்டை கொடுக்காமல் நிதானமாக ரன்களை சேர்த்தனர். இதனால் அந்த அணியின் ஸ்கோர் மெல்ல அதிகரித்தது. இவர்களும் முறையே 27 மற்றும் 25 ரன்களில் ஆட்டமிழக்க, நேபாளம் அணி மீண்டும் விக்கெட்டுகளை இழந்தது.

    19.2 ஓவர்களில் நேபாளம் அணி 85 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால் வங்காளதேசம் அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. வங்காளதேசம் சார்பில் டன்சிம் ஹாசன் 4 விக்கெட்டுகளையும், முஸ்தபிசுர் ரஹ்மான் 3 விக்கெட்டுகளையும், ஷகிப் அல் ஹாசன் 2 விக்கெட்டுகளையும், டஸ்கின் அகமது 2 விக்கெட் வீழ்த்தினர். 

    ×