search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Nepal"

    • அநீதிக்கு எதிரான நீதியின் வெற்றி மற்றும் தீமைக்கு எதிரான அறத்தின் வெற்றி கொண்டாட்டம்.
    • பதற்றமான பகுதிகளில் பாதுகாப்பு நிலைமையை கண்காணிக்க ட்ரோன்களையும் போலீசார் பயன்படுத்தியுள்ளனர்.

    நேபாளம் தலைநகர் காத்மாண்டு மற்றும் நாடு முழுவதும் உள்ள மலைப்பாங்கான மாவட்டங்களில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் வண்ணங்களின் திருவிழாவான ஹோலி பண்டிகை இன்று கொண்டாடப்பட்டது.

    இருப்பினும், நாட்டின் தெற்கு சமவெளிப் பகுதியான தேரையில், ஹோலி திருவிழா நாளை கொண்டாடப்படுகிறது. நேபாள ஜனாதிபதி ராம்சந்திர பவுடல் ஹோலி பண்டிகையை முன்னிட்டு, " ஹோலி "சமூகத்தில் பரஸ்பர நல்லிணக்கத்தை ஊக்குவிக்கும் மற்றும் தேசிய ஒற்றுமையை மேலும் வலுப்படுத்தும்" என்று நம்பிக்கை தெரிவித்தார்.

    மேலும், "உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் உள்ள அனைத்து நேபாள மக்களுக்கும் மகிழ்ச்சி, அமைதி மற்றும் செழிப்புக்கான தனது நல்வாழ்த்துக்களை தெரிவித்த ஜனாதிபதி பௌடெல், ஹோலி பண்டிகையை "அநீதிக்கு எதிரான நீதியின் வெற்றி மற்றும் தீமைக்கு எதிரான அறத்தின் வெற்றி கொண்டாட்டம்" என்று விவரித்தார்.

    அசம்பாவிதம் ஏதும் ஏற்படாமல் இருக்க காத்மாண்டு பள்ளத்தாக்கு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நேபாள போலீசார் பாதுகாப்பை தீவிரப்படுத்தியுள்ளனர். சட்டம் ஒழுங்கை பாதுகாக்க பள்ளத்தாக்கில் சுமார் 5,000 போலீசார் குவிக்கப்பட்டனர்.

    பதற்றமான பகுதிகளில் பாதுகாப்பு நிலைமையை கண்காணிக்க ட்ரோன்களையும் போலீசார் பயன்படுத்தியுள்ளனர். ஹோலி பண்டிகையின்போது போக்குவரத்து விதி மீறல்களை கண்காணிக்க சுமார் 100 இடங்களில் வாகன சோதனையை படை தொடங்கியது.

    அனுமதியின்றி யாரேனும் மக்கள் மீது வண்ணங்களை தெளித்தோ அல்லது தண்ணீரை வீசினால் நடவடிக்கை எடுக்கப்படும் என உள்ளாட்சி நிர்வாகம் எச்சரித்துள்ளது. காத்மாண்டு பள்ளத்தாக்கு போக்குவரத்து காவல்துறை அலுவலகம் போக்குவரத்து விதிகளை மீறியதற்காக குறைந்தது 250 வாகனங்கள் மீது நடவடிக்கை எடுத்துள்ளது.

    • மத்திய வெளியுறவுத் துறை மந்திரி ஜெய்சங்கர் இன்று நேபாள நாட்டிற்கு சென்றார்.
    • நேபாள அதிபர் மற்றும் பிரதமர் ஆகியோரை வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் சந்தித்தார்.

    புதுடெல்லி:

    இரண்டு நாள் பயணமாக மத்திய வெளியுறவுத் துறை மந்திரி ஜெய்சங்கர் இன்று நேபாள நாட்டிற்கு சென்றார்.

    இந்நிலையில், நேபாள நாட்டின் அதிபர் ராம் சந்திர பவுடெல் மற்றும் பிரதமர் புஷ்ப கலம் தாஹல் ஆகியோரை வெளியுறவுத் துறை மந்திரி ஜெய்சங்கர் இன்று சந்தித்தார்.


    இரு நாடுகளிடையே நீர் மின்சக்தி, டிஜிட்டல் பணப்பரிமாற்றம், வர்த்தகம் உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்தும் நோக்கத்துடன் மத்திய மந்திரி ஜெய்சங்கர் இந்தப் பயணத்தை மேற்கொண்டுள்ளதாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    கடந்த ஜூன் மாதம் மேற்கொள்ளப்பட்ட முடிவின்படி அடுத்த 10 ஆண்டுகளில் நேபாளத்தில் இருந்து 10,000 மெகாவாட் மின்சாரத்தை இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்யும் முறைகள் குறித்த ஒப்பந்தத்தில் இருதரப்பினரும் கையெழுத்திடுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
    • ஜன்னல்கள், கூரைகள் தங்கம் கலந்த செப்புத்தகடுகளால் வேயப்பட்டுள்ளது.

    நேபாள நாட்டின் பக்தபூர் மாவட்டத்தில் உள்ளது தவளகிரி மலைப்பகுதி. இதையொட்டி அமைந்த ஒரு கிராமம் தான், 'சங்கு. திருமாலின் கரத்தில் இருக்கும் தெய்வீக அம்சம் பொருந்திய திருச்சங்கின் பெயரில் அமைந்த இந்த கிராமத்தில், 'சங்குநாராயணர் கோவில்' என்ற பெயரில் திருமாலுக்கு ஒரு ஆலயமும் அமைந்திருக்கிறது. நேபாளத்தில் மிகவும் பழமையான ஆலயங்களில் ஒன்றாக கருதப்படும் இந்த கோவில், யுனெஸ்கோ அமைப்பால் உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

    இந்த ஆலயம் நேபாள நாட்டின் பவுத்த கட்டிடக் கலை அமைப்பில் கட்டமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆலயம் கி.மு.325-ம் ஆண்டு, லிச்சாவி வம்ச மன்னன் ஹரி தத்தா வர்மனின் காலத்தில் கட்டப்பட்டதாக அறியப்படுகிறது.

    இந்த ஆலயத்தின் தரை தளத்தில் அமைந்த கல் தூண்களில், கி.பி. 496-ம் ஆண்டு முதல் கி.பி.524-ம் ஆண்டு வரை ஆட்சி செய்த மகாதேவன் என்ற மன்னனின் படையெடுப்புகள் குறித்து பொறிக்கப்பட்டுள்ளது. இந்த பகுதியை கி.பி.1585 முதல் 1614-ம் ஆண்டு வரை ஆட்சி செய்த சிவ சிம்ம மல்லன் என்ற அரசனின் பட்டத்து அரசியான கங்கா ராணி என்பவர். இந்த ஆலயத்தை மீண்டும் புதுப்பித்துள்ளார்.

    இந்த கோவிலின் கதவுகள், ஜன்னல்கள் மற்றும் கூரைகள் அனைத்தும் தங்கம் கலந்த செப்புத் தகடுகளால் வேயப்பட்டுள்ளது. இதனை கி.பி.1708-ம் ஆண்டு இப்பகுதியை ஆட்சி செய்த பாஸ்கர மல்லர் என்ற மன்னன் செய்திருக்கிறான். கருங்கற்களால் இரண்டு அடுக்குகளாக கட்டப்பட்ட இந்த ஆலயம், நேபாள நாட்டிலேயே மிகவும் பழமையானது என்று போற்றப்படுகிறது. இந்த கோவிலைச் சுற்றிலும் திருமாலுக்கு உரிய சிற்பங்கள் அதிகமாக செதுக்கப்பட்டுள்ளன.

    முதன்மை கோவிலின் பிரகாரத்தில் சிவன், கிருஷ்ணர், சின்ன மஸ்தா ஆகிய தெய்வங்களின் சன்னிதிகள் அமைந்துள்ளன. அந்த சன்னிதிகளின் வாசல்களின் சிங்கங்கள், சரபங்கள், யானைகள் மற்றும் யாழி சிற்பங்கள் காவலுக்கு வைக்கப்பட்டுள்ளன.

    திருமாலின் பத்து அவதாரங்களைக் குறிக்கும் வகையிலான சிற்பங்கள் இந்த ஆலயத்தின் கூரையை தாங்கியபடி அமைந்துள்ளது. மேற்கு வாசலின் எதிரில் உள்ள தூணில் திருமாலின் ஆயுதங்களான சங்கு, சக்கரம், கட்கம் மற்றும் தாமரை ஆகியவற்றின் சிற்பங்கள் வடிக்கப்பட்டுள்ளன. இந்த துண் கி.மு.464-ம் ஆண்டு லிச்சாவி இன மன்னன் மனதேவன் என்பவரால் எழுப்பப்பட்டதாக சொல்லப்படுகிறது. இந்த ஆலயத்தில் சில முக்கிய சிற்பங்கள் போற்றுதலுக்குரியதாக உள்ளன.

    அவற்றில் திருமாலின் வாகனமான கருடனின் சிற்பமும் ஒன்று. இது தவிர கருட வாகனத்தில் பறக்கும் திருமாலின் 7-ம் நூற்றாண்டு சிற்பம் சிறப்புற அமைந்துள்ளது. இந்த தெய்வத்தை 'சந்திர நாராயணர்' என்று அழைக் கிறார்கள்.

    மேலும் கலைநயத்துடன் அமைந்த விஷ்ணு, லட்சுமி மற்றும் கருடன் சிற்பங்கள், சின்ன மஸ்தா என்ற தேவி, தன்னுடைய தலையை தானே கொய்து, பசித்திருக்கும் டாகினி மற்றும் வார்னீ என்ற யட்சிகளுக்கு ரத்தம் வழங்குதல், அர்ச்சுனனுக்கு பகவத் கீதை உபசரிக்கும் கண்ணனின் விஸ்வரூபக் காட்சி, இரணியகசிபுவை வதம் செய்து பிரகலாதனைக் காத்த நரசிம்மர் ஆகியோரது சிற்பங்களும், இரண்டாம் அடுக்கில் அமைந்த சிவன் கோவிலும் முக்கியத்துவம் பெறுகின்றன.

    இந்த ஆலயத்தில் தினமும் பூஜைகள் நடைபெறுவதில்லை. ஏகாதசி, அஷ்டமி, நவமி ஆகிய திதிகளில் சிறப்பு பூஜைகள் செய்யப்படுகின்றன. இந்த ஆலயத்தின் முக்கியமான திருவிழாவாக. சங்கு நாராயணர் யாத்திரை திருவிழாவும், மகாஷானன் திருவிழாவும் உள்ளன.

    அமைவிடம்

    காத்மாண்டு நகரத்தில் கிழக்கில் 20 கிலோமீட்டர் தொலைவிலும், பக்தபூர் நகரின் வடக்கே 7 கிலோமீட்டர் தூரத்திலும் சங்குநாராயணர் கோவில் அமைந்துள்ளது.

    • முதலில் ஆடிய நேபாளம் 52 ரன்களில் ஆல் அவுட்டானது.
    • இந்தியா சார்பில் ராஜ் லிம்பானி 7 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.

    துபாய்:

    10-வது ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் (19 வயதுக்கு உட்பட்டோர்) துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகள் 2 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.

    ஏ பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், நேபாளம், ஆப்கானிஸ்தான், பி பிரிவில் இலங்கை, வங்காளதேசம், ஐக்கிய அரபு அமீரகம், ஜப்பான் ஆகிய அணிகள் இடம் பிடித்துள்ளன.

    ஏ பிரிவில் இந்திய அணி 2 ஆட்டங்களில் விளையாடி ஆப்கானிஸ்தானுக்கு எதிராக வெற்றியும், பாகிஸ்தானுக்கு எதிராக தோல்வியும் கண்டுள்ளது.

    இந்நிலையில், இந்திய அணி 3-வது லீக் ஆட்டத்தில் இன்று நேபாள அணியுடன் மோதியது. டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட்டிங் செய்த நேபாள அணி இந்தியாவின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமால் 22.1 ஓவரில் 52 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அந்த அணியில் ஒரு பேட்ஸ்மேன்கூட இரட்டை இலக்கத்தை தொடவில்லை.

    இந்தியா சார்பில் ராஜ் லிம்பானி 7 விக்கெட்டும், ஆராத்யா சுக்லா 2 விக்கெட்டும், அர்ஷின் குல்கர்னி 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    53 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி, 7.1 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 57 ரன்கள் அடித்து வெற்றி பெற்றது. ஆதர்ஷ் சிங் 13 ரன்னும், அர்ஷின் குல்கர்னி 43 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். 7 விக்கெட் வீழ்த்திய ராஜ் லிம்பானி ஆட்ட நாயகன் விருது பெற்றார்.

    • கடந்த 16-ந்தேதி 4.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது
    • 2015-ல் ஏற்பட்ட கடும் நிலநடுக்கத்தில் சுமார் 9 ஆயிரம் பேர் உயிரிழந்தனர்

    நேபாளத்தில் உள்ள காத்மாண்டு பள்ளத்தாக்கில் இன்று காலை 6.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து உடனடித் தகவல் ஏதும் கிடைக்கவில்லை.

    அக்டோபர் 16-ந்தேதி நேபாளத்தின் சுதுர்பாசிம் மாகாணத்தில் 4.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. கடந்த 2015-ல் 7.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட தொடர் அதிர்வுகளால் சுமார் 9 ஆயிரம் பேர் உயிரிழந்தனர்.

    அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படும் நாடுகளில் 11-வது நாடாக நேபாளம் உள்ளது. நேபாளம் திபெத்- இந்திய டெக்டோனிக் பிளேட் சந்திக்கும் முகட்டில் அமைந்துள்ளது. இந்த பிளேட்டுகள் நூற்றாண்டிற்கு ஒருமுறை இரண்டு மீட்டர்கள் ஒன்றுடன் ஒன்று நெருக்கமாக நகருகின்றன. இந்த அழுத்தம் காரணமாக நிலநடுக்கம் ஏற்படுகிறது.

    • மூன்றாவது நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 4.1 ஆக பதிவாகி இருக்கிறது.
    • நிலநடுக்கம் காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு.

    நேபாளத்தின் மேற்கு பகுதிகளில் அடுத்தடுத்து இரண்டு முறை நிலநடுக்கம் உணரப்பட்டது. இவை ரிக்டர் அளவுகோலில் 5.3 மற்றும் 6.3 என்று பதிவாகி உள்ளன. இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில், மூன்றாவது முறையாக மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. மூன்றாவது நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 4.1 ஆக பதிவாகி இருக்கிறது.

    நிலநடுக்கம் காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக ஐந்து பேர் காயமுற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். நிலநடுக்கத்தால், கட்டிடங்களில் விரிசல் ஏற்பட்டு உள்ளது. மேலும் பல்வேறு வீடுகள் இடிந்து விழுந்து சேதம் அடைந்துள்ளன.

    இந்த நிலநடுக்கம் காரணமாக அருகாமையில் உள்ள இந்தியாவிலும் நில அதிர்வுகள் உணரப்பட்டன. தொடர்ச்சியான நிலநடுக்கம் குறித்து பேசிய உத்தரகண்ட் மாநிலத்தின் ஹெச்.என்.பி. மத்திய பல்கலைக்கழகத்தின் புவியியல் துறை பேராசிரியர் மகாவீர் நெகி, "இந்த சிறிய நிலநடுக்கங்கள் பெரிய அளவில் நிலநடுக்கம் ஏற்பட இருப்பதை உணர்த்துகின்றன," என்று தெரிவித்து உள்ளார்.

    மேலும் பேசிய அவர், "பெரிய நிலநடுக்கத்திற்கு பிறகு, பூமியில் உள்ள ஆற்றல் மட்டுமே வெளியேற்றப்படும். இது குறித்து நாம் அனைவரும் விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியம் ஆகும். இதோடு நிலநடுக்கத்தை தாங்கும் வகையிலான கட்டிடங்களை கட்டமைக்க வேண்டும்," என்று தெரிவித்தார்.

    • மழையால் தடைபட்ட ஆட்டம் நீண்ட இடைவெளிக்கு பிறகு தொடங்கியதுடன் ஓவர்கள் குறைக்கப்பட்டது.
    • இந்திய அணிக்கு 23 ஓவர்களில் 145 ரன்கள் எடுக்க வேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

    ஆசிய கோப்பை 2023 போட்டி கடந்த வாரம் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் இன்றைய போட்டியில் இந்தியா மற்றும் நேபாளம் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. நேபாளம் அணிக்கு துவக்க வீரர்களான குஷால் புர்டெல் மற்றும் ஆசிப் ஷேக் நல்ல துவக்கம் கொடுத்தது. இந்த ஜோடி முறையே 38 மற்றும் 58 ரன்களை குவித்து ஆட்டமிழந்தது.

    அடுத்த வந்த பீம் ஷர்கி, ரோஹித் குமார் பவுடல், குஷால் மல்லா ஆகியோர் முறையே 7, 5 மற்றும் 2 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். இவர்களை தொடர்ந்து வந்த குல்ஷன் குமார் ஜா மற்றும் திபேந்திர சிங் ஐரி முறையே 23 மற்றும் 29 ரன்களை எடுத்தனர்.

    போட்டி முடிவில் நேபாளம் அணி 230 ரன்களை குவித்து 48.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இந்தியா தரப்பில் சிறப்பாக பந்துவீசிய ரவீந்திர ஜடேஜா பத்து ஓவர்களில் 40 ரன்களை மட்டுமே கொடுத்து மூன்று விக்கெட்களை வீழ்த்தினார். முகமது சிராஜ் 3 விக்கெட்களை வீழ்த்தினார். இவர்கள் தவிர, ஹர்திக் பான்டியா, ஷர்துல் தாக்கூர் மற்றும் முகமது ஷமி தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 231 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது.

    இந்நிலையில், இந்திய அணி 2.1 ஓவர்களின் விக்கெட் இழப்பின்றி 17 ரன்கள் எடுத்தது. அப்போது மழை குறுக்கிட்டதால் போட்டி மீண்டும் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.

    நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் ஆட்டம் தொடங்கியதுடன் ஓவர்கள் குறைக்கப்பட்டது. மேலும், இந்திய அணிக்கு 23 ஓவர்களில் 145 ரன்கள் எடுக்க வேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.

    இதில், ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் அசத்தலாக விளையாடினர். அவ்வபோது 6, 4-களை அள்ளி வீசினர்.

    இறுதியில் இந்திய அணி 20.1 ஓவர்களில் இலக்கை கடந்து 10 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது.

    ரோகித் சர்மா 74 ரன்களும், சுப்மன் கில் 67 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் விளையாடினர்.

    இதன்மூலம், இந்திய அணி சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • நேபாளம் அணிக்கு துவக்க வீரரான ஆசிப் ஷேக் 58 ரன்களை குவித்தார்.
    • இந்தியா தரப்பில் ரவீந்திர ஜடேஜா சிறப்பாக பந்துவீசி மூன்று விக்கெட்களை கைப்பற்றினார்.

    ஆசிய கோப்பை 2023 போட்டி கடந்த வாரம் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் இன்றைய போட்டியில் இந்தியா மற்றும் நேபாளம் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

    நேபாளம் அணிக்கு துவக்க வீரர்களான குஷால் புர்டெல் மற்றும் ஆசிப் ஷேக் நல்ல துவக்கம் கொடுத்தது. இந்த ஜோடி முறையே 38 மற்றும் 58 ரன்களை குவித்து ஆட்டமிழந்தது. அடுத்த வந்த பீம் ஷர்கி, ரோஹித் குமார் பவுடல், குஷால் மல்லா ஆகியோர் முறையே 7, 5 மற்றும் 2 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். இவர்களை தொடர்ந்து வந்த குல்ஷன் குமார் ஜா மற்றும் திபேந்திர சிங் ஐரி முறையே 23 மற்றும் 29 ரன்களை எடுத்தனர்.

     

    போட்டி முடிவில் நேபாளம் அணி 230 ரன்களை குவித்து 48.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இந்தியா தரப்பில் சிறப்பாக பந்துவீசிய ரவீந்திர ஜடேஜா பத்து ஓவர்களில் 40 ரன்களை மட்டுமே கொடுத்து மூன்று விக்கெட்களை வீழ்த்தினார். முகமது சிராஜ் 3 விக்கெட்களை வீழ்த்தினார். இவர்கள் தவிர, ஹர்திக் பான்டியா, ஷர்துல் தாக்கூர் மற்றும் முகமது ஷமி தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். 

    • நேபாளம் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணியில் முகமது ஷமி இடம்பிடித்துள்ளார்.
    • வெற்றி பெற்றாக வேண்டும் என்ற கட்டாயத்தில் இந்திய அணி விளையாடுகிறது.

    ஆசிய கோப்பை 2023 போட்டி கடந்த வாரம் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் இன்றைய போட்டியில் இந்தியா மற்றும் நேபாளம் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்து இருக்கிறது.

    இன்றைய போட்டியில் ஜஸ்பிரித் பும்ரா களமிறங்காத நிலையில், அவருக்கு மாற்றாக முகமது ஷமி இந்திய அணியில் சேர்க்கப்பட்டு இருக்கிறார். இந்த தொடரின் அடுத்த சுற்றுக்கு முன்னேற இந்திய அணி இந்த போட்டியில் வெற்ற பெற வேண்டிய கட்டாயத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

    • பாகிஸ்தான் அணி சார்பில் கேப்டன் பாபர் அசாம் 149 ரன்களை விளாசினார்.
    • நேபாளம் அணியின் சோம்பால் கமி இரண்டு விக்கெட்களை வீழ்த்தினார்.

    ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டத்தில் பாகிஸ்தான் மற்றும் நேபாளம் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது. பாகிஸ்தான் அணியின் துவக்க வீரர்கள் பஹார் ஜமான் 14 ரன்களிலும், இமாம் உல் ஹக் 5 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர்.

    அடுத்து களமிறங்கிய பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் அசாம் 129 பந்துகளில் 14 பவுன்டரிகள், 4 சிக்சர்களை விளாசி 151 ரன்களை குவித்தார். இவருடன் ஜோடி சேர்ந்து ஆடிய முகமது ரிஸ்வான் 45 ரன்களை எடுத்தார். அடுத்த வந்த சல்மான் ஆகா 5 ரன்களில் தனது விக்கெட்டை இழந்தார். இவருடன் ஆடிய இப்திகார் அகமது 71 பந்துகளில் 109 ரன்களை எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.

     

    அந்த வகையில் பாகிஸ்தான் அணி 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்களை இழந்து 342 ரன்களை குவித்து அசத்தியது. கடின இலக்கை துரத்திய நேபாளம் அணிக்கு துவக்க வீரர்களான குஷால் புர்டெல் மற்றும் ஆசிப் ஷேக் ஜோடி முறையே 8 மற்றும் 5 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றியது. அதன்பிறகு வந்த ரோஹித் பவுடல் டக் அவுட் ஆனார்.

    துவக்கத்திலேயே தடுமாறிய நேபாள அணிக்கு சோம்பால் கமி மற்றும் ஆரிப் ஷேக் ஜோடி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி, விக்கெட்கள் விழுவதை ஓரளவுக்கு தடுத்து நிறுத்தியது. இந்த ஜோடி முறையே 28 மற்றும் 26 ரன்களை குவித்து தங்களது விக்கெட்டை இழந்தது.

     

    இவர்களை தொடர்ந்து வந்த வீரர்கள் அதிக ரன்களை அடிக்காமல் அவுட் ஆக, நேபாளம் அணி 104 ரன்களை குவித்த நிலையில், 23.4 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இதன் மூலம் பாகிஸ்தான் அணி 238 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    • வெஸ்ட் இண்டீஸ் அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 339 ரன்கள் எடுத்தது.
    • நேபாளம் அணி 49.4 ஓவரில் 10 விக்கெட் இழப்பிற்கு 238 ரன்கள் எடுத்து தோல்வியை சந்தித்தது.

    உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான தகுதிச்சுற்று ஆட்டங்கள் ஜிம்பாப்வேயில் நடைபெற்று வருகின்றன.

    இந்நிலையில் இன்று வெஸ்ட் இண்டீஸ் மற்றும் நேபாளம் அணிகள் மோதியது. இதில் டாஸ் வென்ற நேபாளம் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கிங் - மேயர்ஸ் களமிறங்கினர்.

    மேயர்ஸ் 1 ரன்னிலும் அடுத்து வந்த சார்லஸ் 0 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். சிறிது நேரத்தில் கிங் 42 பந்துகளில் 32 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.

    இதனையடுத்து ஹோப்புடன் நிக்கோலஸ் பூரன் ஜோடி சேர்ந்து நேபாளம் அணியின் பந்து வீச்சை துவம்சம் செய்தனர்.

    அதிரடியாக விளையாடிய பூரன் சதம் அடித்து அசத்தினார். அவர் 115 ரன்கள் எடுத்து நிலையில் ஆட்டமிழந்தார். நிதானமாக விளையாடி கேப்டன் ஹோப்பும் சதம் அடித்தார்.

    இவர் 132 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். அடுத்து வந்த ரோவ்மேன் பவல் 14 பந்தில் 29 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

    இறுதியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 339 ரன்கள் எடுத்தது.

    இதையடுத்து நேபாளம் அணி களமிறங்கியது. முதலில் கவுஷல் பூர்டல் மற்றும் ஆசிப் ஷேக் ஜோடி சேர்ந்தனர்.

    இதில், கவுஷல் 6 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்ததாக பிம் ஷார்க்கி ஆசிப்புடன் ஜோடி சேர்ந்தார். பிம் ஷார்க்கி இரண்டே ரன்களில் ஆட்டமிழந்தார்.

    அடுத்ததாக ஆசிப்- ரோகித் பவுதல் விளையாடினர். இதில், ஆசிப் 28 ரன்கள் எடுத்து அவுட்டானார்.

    தொடர்ந்து விளையாடிய வீரர்களில், ரோகித் 30 ரன்களும், கவுஷல் மல்லா 2 ரன்களும், தீப்பேந்திர சிங் 23 ரன்களும், குல்சன் ஜா 42 ரன்களும், சந்தீப் ஒரு ரன்னும் எடுத்தனர்.

    ஆரிப் ஷேக் அரை சதம் அடித்து 63 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர், கரண் 28 ரன்கள் எடுத்து அவுட்டானார்.

    கடைசியாக களத்தில் இருந்த லலித் ராஜ்பான்ஷி பூஜ்ஜியம் ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    இந்த ஆட்டத்தின் முடிவில், நேபாளம் அணி 49.4 ஓவரில் 10 விக்கெட் இழப்பிற்கு 238 ரன்கள் எடுத்து தோல்வியை சந்தித்தது.

    இதன்மூலம், 101 ரன்களில் நேபாள அணியை வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் அபாரமாக வெற்றிப் பெற்றுள்ளது.

    • உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான தகுதிச்சுற்று ஆட்டங்கள் ஜிம்பாப்வேயில் நடைபெற்று வருகின்றன.
    • நேபாளம் அணி 2-வது ஆட்டத்தில் அமெரிக்காவை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

    உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான தகுதிச்சுற்று ஆட்டங்கள் ஜிம்பாப்வேயில் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் இன்று வெஸ்ட் இண்டீஸ் மற்றும் நேபாளம் அணிகள் மோதியது. இதில் டாஸ் வென்ற நேபாளம் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கிங் - மேயர்ஸ் களமிறங்கினர். மேயர்ஸ் 1 ரன்னிலும் அடுத்து வந்த சார்லஸ் 0 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். சிறிது நேரத்தில் கிங் 42 பந்துகளில் 32 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.

    இதனையடுத்து ஹோப்புடன் நிக்கோலஸ் பூரன் ஜோடி சேர்ந்து நேபாளம் அணியின் பந்து வீச்சை துவம்சம் செய்தனர். அதிரடியாக விளையாடிய பூரன் சதம் அடித்து அசத்தினார். அவர் 115 ரன்கள் எடுத்து நிலையில் ஆட்டமிழந்தார். நிதானமாக விளையாடி கேப்டன் ஹோப்பும் சதம் அடித்தார். இவர் 132 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.

    அடுத்து வந்த ரோவ்மேன் பவல் 14 பந்தில் 29 ரன்கள் எடுத்து வெளியேறினார். இறுதியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 339 ரன்கள் எடுத்தது.

    நேபாளம் அணி முதல் ஆட்டத்தில் ஜிம்பாப்வே அணியிடம் தோல்வியும் 2-வது ஆட்டத்தில் அமெரிக்காவை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியதும் குறிப்பிடத்தக்கது.

    ×