search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Dale Steyn"

    • இவர் 155.8 கிமீ வேகத்தில் வீசிய பந்து இந்த தொடரில் வீசப்பட்ட வேகமான பந்து என்ற சாதனையை படைத்தது
    • லக்னோ அணியில் அறிமுகமான தனது முதல் போட்டியிலேயே மயங்க் யாதவ் ஆட்டநாயகன் விருதை வென்றார்

    ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரின் 11 ஆவது லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி பேட்டிங் தேர்வு செய்தது.

    பேட்டிங்கை துவங்கிய லக்னோ அணி 8 விக்கெட்டுகளை இழந்து 199 ரன்களை குவித்தது. 200 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணி 5 விக்கெட்டுகளை இழந்து 178 ரன்களை மட்டுமே அடித்து தோல்வியை தழுவியது.

    இதன் மூலம் லக்னோ அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. லக்னோ அணி சார்பில் சிறப்பாக பந்துவீசிய மயங்க் யாதவ் மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினார். மோசின் கான் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    குறிப்பாக இவர் 155.8 கிமீ வேகத்தில் வீசிய பந்து இந்த தொடரில் வீசப்பட்ட வேகமான பந்து என்ற சாதனையை படைத்தது. தொடர்ச்சியாக 150 கிமீ வேகத்தில் அவர் பந்துவீசி பஞ்சாப் பேட்ஸ்மேன்களை திணறடித்தார். அதனால் தான் லக்னோ அணியில் அறிமுகமான தனது முதல் போட்டியிலேயே மயங்க் யாதவ் ஆட்டநாயகன் விருதை வென்றார்.

    அதன் பின்னர் பேசிய அவர், தென்னாப்பிரிக்காவின் ஜாம்பவான் வீரர் டேல் ஸ்டைன் தான் தம்முடைய ரோல் மாடல் என்று கூறினார் . மேலும் காயத்தை சந்தித்திருக்காமல் போயிருந்தால் கடந்த வருடமே ஐபிஎல் தொடரில் அறிமுகமாகி விளையாடியிருப்பேன் என்று தெரிவித்தார்.

    இந்நிலையில், மயங்க் யாதவை தென்னாப்பிரிக்க முன்னாள் வீரர் டேல் ஸ்டைன் பாராட்டியுள்ளார். இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், "மணிக்கு 155.8 கி.மீ வேகம். மயங்க் யாதவ், நீங்கள் எங்கே ஒளிந்திருந்தீர்கள் என்று வியப்புடன் பாராட்டியுள்ளார்.

    மேலும் மயங்க் யாதவ் பற்றி ஆஸ்திரேலியா முன்னாள் ஜாம்பவான் வேகப்பந்து வீச்சாளர் பிரட் லீ தன்னுடைய ட்விட்டரில் பாராட்டி பதிவிட்டுள்ளார். அதில், "இந்தியா தனது வேகப்பந்து வீச்சாளரை கண்டு பிடித்துள்ளது. மயங்க் யாதவ், மிரட்டலான வேகம். மிகவும் ஈர்க்கக் கூடியதாக இருக்கிறது" என்று பதிவிட்டுள்ளார்.

    காயத்தில் இருந்து முழுமையாக குணம் அடையாததால், இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஆட்டத்தில் ஸ்டெயின் கலந்து கொள்ளமாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
    உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நாளைமறுநாள் தொடங்குகிறது. முதல் ஆட்டத்தில் போட்டியை நடத்தும் இங்கிலாந்து தென்ஆப்பிரிக்காவை எதிர்கொள்கிறது.

    தென்ஆப்பிரிக்கா அணியில் வேகப்பந்து வீச்சாளர் ஸ்டெயின் இடம் பிடித்துள்ளார். இவர் ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணிக்காக விளையாடும்போது தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் இன்னும் சரியாகவில்லை. இதனால் இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஆட்டத்தில் விளையாடமாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



    இதுகுறித்து தென்ஆப்பிரிக்கா அணியின் தலைமை பயிற்சியாளர் ஒட்டிஸ் கிப்சன் கூறுகையில் ‘‘ஸ்டெயின் இன்னும் சிறந்த வகையில் குணமடையவில்லை. குணமடைவதற்கு இன்னும் வெகுதூரம் இல்லை. இருந்தாலும் தயாராகவில்லை.

    உலகக்கோப்பை தொடர் ஆறுவாரக் காலம் நடைபெறுகிறது. இந்த விஷயம் குறித்து உடனடியாக முடிவு எடுக்க தேவையில்லை. அவர் முதல் ஆட்டத்தில் இடம்பிடிக்க மாட்டார். நாங்கள் அவரைத்தவிர 14 வீரர்கள் பெற்றுள்ளோம். அதில் இருந்து நான்கு பேரை தேர்வு செய்வோம்’’ என்றார்.
    ஐபிஎல் தொடரில் மோசமாக விளையாடி வரும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி தென்ஆப்பிரிக்காவின் வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெயினை ஒப்பந்தம் செய்துள்ளது. #IPL2019 #RCB
    ஐபிஎல் 2019 கிரிக்கெட் தொடர் கடந்த மாதம் 23-ந்தேதி தொடங்கி தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. இதில் சென்னை அணி ஆதிக்கம் செலுத்தி வருகின்றன.

    விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு 6 போட்டிகளில் விளையாடி ஆறிலும் தோல்வியைச் சந்தித்துள்ளன. அந்த அணி ஆஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சாளரான கவுல்டர்-நைல்-ஐ ஏலத்தில் எடுத்திருந்தது. பாகிஸ்தானுக்கு எதிரான தொடரில் விளையாடியதால் ஐபிஎல் தொடக்கத்தில் அவர் விளையாடவில்லை.

    பின்னர் அணியில் இணைய இருந்த நேரத்தில் அவருக்கு காயம் ஏற்பட்டது. இதனால் ஐபிஎல் தொடரில் இருந்து விலகியுள்ளார். இந்நிலையில் அவருக்கு மாற்று வீரராக தென்ஆப்பிரிக்காவின் வேகப்பந்து வீச்சாளரான டேல் ஸ்டெயினை தேர்வு செய்துள்ளது.
    வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெயின் சுமார் இரண்டு ஆண்டுகளுக்குப் பின் தென்ஆப்பிரிக்காவின் ஒருநாள் கிரிக்கெட் அணியில் இடம்பிடித்துள்ளார். #DaleSteyn
    தென்ஆப்பிரிக்கா அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளராக திகழ்பவர் டேல் ஸ்டெயின். கடந்த 2016-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் விளையாடும்போது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. இதனால் சுமார் ஒன்றரை ஆண்டுகள் ஓய்வில் இருந்தார்.

    இந்த வருடம் தொடக்கத்தில் இந்தியாவிற்கு எதிரான தொடரில் களம் இறங்கினார். ஆனால் காலில் ஏற்பட்ட காயத்தால் தொடர்ந்து விளையாட முடியவில்லை. சமீபத்தில் கவுன்ட்டி கிரிக்கெட்டில் விளையாடும்போதும் கூட காயத்தில் அவதிப்பட்டார்.



    இந்நிலையில் தென்ஆப்பிரிக்கா ஜிம்பாப்வேயிற்கு எதிராக ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது. இதற்கான தென்ஆப்பிரிக்கா அணியில் டேல் ஸ்டெயின் இடம்பிடித்துள்ளார். இதன்மூலம் சுமார் இரண்டு வருடத்திற்குப் பிறகு ஒருநாள் அணியில் விளையாடுகிறார்.
    தென்ஆப்பிரிக்கா அணிக்கு அனுபவம் இல்லாத பந்து வீச்சு யுனிட் மிகப்பெரிய பிரச்சனை என ஸ்டெயின் தெரிவித்துள்ளார். #DaleSteyn
    இங்கிலாந்தில் அடுத்த வருடம் 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெறுகிறது. இந்த தொடரில் தென்ஆப்பிரிக்கா அணிக்கு அனுபவம் இல்லாத பந்து வீச்சு யுனிட்டுதான் மிகப்பெரிய பிரச்சனையாக இருக்கும் என டேல் ஸ்டெயின் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து டேல் ஸ்டெயின் கூறுகையில் ‘‘ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் எங்களது மிகப்பெரிய பிரச்சனையே பந்து வீச்சு யுனிட்டுதான். இது மிகமிகப்பெரிய பிரச்சனையாக இருக்கும் என்று தோன்றவில்லை. ஆனால், அனுபவம் மிகப்பெரிய பிரச்சனைதான்.



    எங்களுடைய டாப் சிக்ஸ் பேட்ஸ்மேன்களை எடுத்துக்கொண்டால், அனைத்து வீரர்களும் 800-க்கும் மேற்பட்ட போட்டியில் விளையாடியுள்ளனர். அதேவேளையில், பந்து வீச்சாளர்களை பார்த்தீர்கள் என்றால், கடைசி நான்கு வீரர்கள் 150 போட்டிகளில்தான் விளையாடியுள்ளனர்.

    35 வயதானாலும் இன்னும் நான் கற்றுக் கொண்டுதான் இருக்கிறேன். ஆனால், நான் என்ன செய்து கொண்டிருக்கிறேன் என்பது எனக்குத் தெரியும். ஒருநாள் போட்டியில் விளையாடும் வாய்ப்பு கிடைத்தால், கட்டாயம் விளையாடி அணிக்கு வெற்றி தேடிக்கொடுப்பேன்.



    ரபாடா, லுங்கி நிகிடி, டேன் பேட்டர்சன், வில்லியம் முல்டர் அவர்களுடைய ஆட்டத்தில் இருந்து கற்றுக் கொண்டு வருகிறார்கள். ஆனால் துரதிருஷ்டவசமாக உலகக்கோப்பை தொடருக்கு கற்றுக் கொண்டிருக்கும்போதே செல்ல முடியாது. நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் என்பதை நீங்கள் தெரிந்துக் கொள்வது தேவையானது’’ என்றார்.

    டேல் ஸ்டெயின் தென்ஆப்பிரிக்கா அணிக்காக 116 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 178 விக்கெட்டுக்கள் வீழ்த்தியுள்ளார்.
    விராட் கோலி தலைமையின் கீழ் 200 விக்கெட்டுக்கள் வீழ்த்தி, சர்வதேச அளவிலான சாதனையில் வார்னே உடன் இணைந்துள்ளார் அஸ்வின். #Ashwin #Viratkohli
    இங்கிலாந்து - இந்தியா இடையிலான முதல் டெஸ்ட் எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்று வருகிறது. இதில் சுழற்பந்து வீச்சாளரான அஸ்வின் அபாரமான பந்து வீச்சை வெளிப்படுத்தினார். முதல் இன்னிங்சில் நான்கு விக்கெட்டுக்களை வீழ்த்தி இங்கிலாந்தை 287 ரன்னுக்குள் சுருட்ட முக்கிய காரணமாக இருந்தார்.

    2-வது இன்னிங்சிலும் சிறப்பான பந்து வீச்சை வெளிப்படுத்தினார். முதல் மூன்று விக்கெட்டுக்களை வீழ்த்தி இங்கிலாந்து திணற காரணமாக இருந்தார். இரண்டு இன்னிங்சிலும் 7 விக்கெட் வீழ்த்திய அஸ்வின் விராட் கோலி தலைமையின் கீழ் 200 விக்கெட்டுக்கள் வீழ்த்தியுள்ளார்.



    ஒரு கேப்டன் தலைமையின் கீழ் 200 விக்கெட்டுக்கள் வீழ்த்திய முதல் இந்திய வீரர் என்ற பெருமையை பெற்ற அஸ்வின், சர்வதேச அளவில் விரைவாக வீழ்த்திய 2-வது வீரர் என்ற பெருமையை ஷேன் வார்னே உடன் பகிர்ந்துள்ளார்.

    சனத் ஜெயசூர்யா தலைமையின் கீழ் முத்ததையா முரளீதரன் 30 போட்டியில் இந்த சாதனையைப் படைத்து முதல் இடத்தில் உள்ளார். வார்னே ரிக்கி பாண்டிங் தலைமையின் கீழ், அஸ்வின் விராட் கோலி தலைமையின் கீழ் 34 போட்டியில் இந்த சாதனையைப் படைத்துள்ளனர்.



    மால்கம் மார்ஷல் விவியன் ரிச்சர்ட்ஸ் தலைமையின் கீழ், ஆலன் டொனால்டு குரோஞ்ச் தலைமையின் கீழ், டேல் ஸ்டெயின் ஸ்மித் தலைமையின் கீழ் 40 போட்டியில் 200 விக்கெட்டுக்கள் வீழ்த்தி 3-வது இடத்தில் உள்ளனர்.
    முற்றிலும் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக இருக்கும் சமயத்தில் பால் டேம்பரிங் சம்பவம் உதவிக்காக அழுவதுபோல் உள்ளது என டேல் ஸ்டெயின் தெரிவித்துள்ளார்.
    ஆஸ்திரேலியா டெஸ்ட் அணி கடந்த மார்ச் மாதம் தென்ஆப்பிரிக்கா சென்று விளையாடியது. அப்போது கேப் டவுன் டெஸ்டின்போது ஆஸ்திரேலியா பேட்ஸ்மேன் பான்கிராப்ட் பந்தை சேதப்படுத்தியது தெரியவந்தது. இந்த சம்பவம் கேப்டன் ஸ்மித்திற்கும், துணைக் கேப்டன் வார்னருக்கும் தெரியும் என்று விசாரணையில் தெரிந்தது.

    பந்து சேதப்படுத்திய குற்றத்திற்காக ஐசிசி ஒரு டெஸ்டில் விளையாட தடையும், அபாரதமும் விதித்தது. ஆனால் ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் ஸ்மித், வார்னர் ஆகியோருக்கு தலா ஒரு வருடம் தடைவிதித்தது. பான்கிராப்ட்டிற்கு 9 மாதம் தடைவித்தது.

    ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியத்தின் தண்டனையை பெரும்பாலான முன்னாள் வீரர்கள் விரும்பவில்லை. இது மிகப்பெரிய தண்டனை என்று குறிப்பிட்டனர்.

    இந்நிலையில் பேட்ஸ்மேன்களுக்கே சாதகமாக இருக்கும் நிலையில் பால் டேம்பரிங் விவகாரம் உதவிக்காக அழுவது என்று தென்ஆப்பிரிக்கா வேகப்பந்து வீச்சாளர் ஸ்டெயின் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து ஸ்டெயின் கூறுகையில் ‘‘கேப்டவுன் டெஸ்டின் போது நடைபெற்ற சம்பவம் குறித்த தகவல் வெளிப்படையாக இல்லை. இது குறித்து நீங்கள் யோசித்தால், அது கிட்டத்தட்ட உதவிக்காக அழுவது போல் உள்ளது. நாம் ஏதாவது செய்ய வேண்டும்.



    பந்து வீச்சாளர்கள் எது செய்தாலும் அது மிகப்பெரிய அளவில் பேசப்படுகிறது. இது பேட்ஸ்மேன்களுக்கு போட்டியை எளிதாக்கும் வகையில் அமைகிறது. பந்து வீச்சாளர்களுக்கு கடினமாகி விடுகிறது.

    தற்போதைய காலத்தில் பேட்ஸ்மேன்களுக்கு அதிக அளவில் சாதகமாக உள்ளது. மைதானத்தின் அளவு மிகவும் குறைவாக உள்ளது, இரண்டு புதிய பந்துகள், பவர்பிளே, நிர்ணயித்ததை விட பெரிய பேட் என நீண்டு கொண்டே செல்கிறது.

    பந்து வீச்சாளர் நோ-பால் வீசினால், அது ப்ரீ ஹிட்டாக மாறிவிடுகிறது. பந்து வீச்சாளர்களுக்கு சாதகமான வகையில் விதிமுறை மாற்றப்பட்டதை நான் பார்க்கவே இல்லை’’ என்றார்.
    தென்ஆப்பிரிக்க அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் டெல் ஸ்டெயின் உலககோப்பைக்கு பிறகு ஒருநாள் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக தெரிவித்துள்ளார். #DaleSteyn #SouthAfrica

    தென்ஆப்பிரிக்க அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் டெல் ஸ்டெயின். காயத்தால் அவதிப்பட்ட அவர் அதிலிருந்து மீண்டும் வந்துள்ளார். இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடினார்.

    இந்த நிலையில் 2019-ம் ஆண்டு உலக கோப்பைக்கு பிறகு ஒருநாள் போட்டியில் இருந்து ஓய்வு பெற போவதாக கூறியுள்ளார். அவர் கூறுகையில், அடுத்த ஆண்டு நடக்கும் உலக கோப்பை போட்டியில் விளையாட முயற்சிப்பேன். உலககோப்பைக்கு பிறகு ஒருநாள் போட்டியில் விளையாட முடியும் என்று நினைக்கவில்லை என்றார். #DaleSteyn #SouthAfrica
    இலங்கையில் ஸ்டெயின், பிளாண்டர், ரபாடா ஆகியோர் சிறப்பான பந்து வீச்சை வெளிப்படுத்துவார்கள் என டு பிளிசிஸ் கூறியுள்ளார். #SLvSA
    தென்ஆப்பிரிக்கா அணி இலங்கை சென்று மூன்று வகை கிரிக்கெட் தொடரிலும் விளையாட இருக்கிறது. முதலில் இரண்டு டெஸ்ட், அதன்பின் ஐந்து ஒருநாள் மற்றும் ஒரேயொரு டி20 போட்டி கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதற்கு முன் வரும் 7-ந்தேதி இரண்டு நாட்கள் கொண்ட பயிற்சி ஆட்டத்தில் விளையாடுகிறது. டெஸ்ட் தொடர் 12-ந்தேதி தொடங்குகிறது.

    சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான இலங்கை ஆடுகளத்திலும் எங்களது வேகப்பந்து வீச்சாளர்கள் சாதிப்பார்கள் என்று டு பிளிசிஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.



    இதுகுறித்து தென்ஆப்பிரிக்கா கேப்டன் டு பிளிசிஸ் கூறுகையில் ‘‘நாங்கள் எந்த நாட்டில், எந்த சூழ்நிலையில் விளையாடுகிறோம் என்பது பெரிய விஷயம் அல்ல. எங்களுடைய மிகப்பெரிய பலமே வேகப்பந்து வீச்சுதான். குறிப்பாக நாங்கள் டேல் ஸ்டெயின், ரபாடா, பிளாண்டர் ஆகிய தலைசிறந்த வேகப்பந்து வீச்சாளர்களை பெற்றுள்ளோம். இவர்கள் எப்போதுமே விக்கெட் வீழ்த்தும் பவுலர்கள் ஆவார்கள்.



    எந்தவொரு சூழ்நிலையில் சிறப்பாக பந்து வீச முடியும் என்பதை நிரூபித்துக் காட்டியுள்ளனர். ஆசியக் கண்டத்தில் டேல் ஸ்டெயின் சிறப்பான சாதனையை படைத்துள்ளார். ரபாடா தங்கம். இவரால் எதையும் செய்ய இயலும். மேலும் கேஷவ் என்ற சுழற்பந்து வீச்சாளரை வைத்துள்ளோம்.

    ஆடுகளம் மிகவும் மோசமாக இருந்தால் இரண்டு சுழற்பந்து வீச்சாளர் குறித்து யோசிப்போம்’’ என்றார்.
    இலங்கை தொடருக்கான தென்ஆப்பிரிக்கா டெஸ்ட் அணியில் வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெயின் இடம் பிடித்துள்ளார். #SLvSA
    தென்ஆப்பிரிக்கா அணி அடுத்த மாதம் முதல் இலங்கையில் சுற்றுப் பயணம் செய்து மூன்று வகை கிரிக்கெட் தொடரிலும் விளையாட இருக்கிறது. முதல் டெஸ்ட் ஜூலை 12-ந்தேதி முதல் 16-ந்தேதி வரையும், 2-வது டெஸ்ட் ஜூலை 20-ந்தேதி முதல் 24-ந்தேதி வரையும் நடக்கிறது. இதற்கு முன் இரண்டு நாட்கள் கொண்ட பயிற்சி ஆட்டம் ஒன்றில் விளையாடுகிறது.

    இதற்கான தென்ஆப்பிரிக்கா அணி இன்று அறிவிக்கப்பட்டது. தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் காரணமாக சுமார் ஓராண்டு ஓய்வில் இருந்து இந்தியா தொடருக்கு திரும்பிய ஸ்டெயின், முதல் டெஸ்டில் குதிக்காலில் ஏற்பட்ட காயத்தால் 2-வது இன்னிங்சில் இருந்து விலகினார். தற்போது காயம் குணமடைந்ததால் இலங்கைக்கு எதிரான தொடரில் இடம்பிடித்துள்ளார்.



    காயத்தால் ஐபிஎல் தொடரில் இருந்து விலகிய ரபாடாவும் அணியில் இடம்பிடித்துள்ளார். டி வில்லியர்ஸ் ஓய்வு பெற்றுள்ளதால் டி ப்ருயின், கிளாசன் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
    ×