என் மலர்
நீங்கள் தேடியது "Dale Steyn"
- பும்ரா களம் இறங்க வாய்ப்பில்லை.
- ஆகாஷ் தீப், அர்ஷ்தீப் சிங் விளையாட இருக்கிறார்கள்.
இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5ஆவது மற்றும் கடைசி போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் இன்று மதியம் தொடங்குகிறது. இந்திய அணியில் பும்ரா இடம் பெறமாட்டார் எனத் தெரிகிறது. இதனால் முகமது சிராஜ் வேகப்பந்து வீச்சு குழுவை முன்னின்று நடத்த உள்ளார்.
முகமது சிராஜ், ஆகாஷ் தீப், அர்ஷ்தீப் சிங் ஆகியோர் என்று களம் இறங்க வாய்ப்புள்ளது. இந்த நிலையில் முகமது சிராஜ் லண்டன் ஓவல் மைதானத்தில் 5 விக்கெட் வீழ்த்துவார் என ஸ்டெயின் கணித்துள்ளார்.
- முதல் முறையாக கேப்டன் பொறுப்பை வகிக்கும் சுப்மன் கில்லுக்கு இந்த தொடர் அனுபவத்தை அளிக்கும்.
- 5 டெஸ்ட் போட்டியும் பரபரப்பாக இருக்கும். எல்லாவற்றுக்கும் முடிவு ஏற்படும்.
புதுடெல்லி:
சுப்மன்கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்காக இங்கிலாந்து சென்றுள்ளது.
இரு அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி வருகிற 20-ந்தேதி லீட்ஸ் மைதானத்தில் தொடங்குகிறது. விராட்கோலி, ரோகித்சர்மா, அஸ்வின் போன்ற சீனியர் வீரர்கள் ஓய்வு பெற்ற பிறகு முதல் முறையாக இளம் வீரர்களை கொண்ட இந்திய அணி இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் ஆடுகிறது.
இந்த நிலையில் இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இங்கிலாந்து 3-2 என்ற கணக்கில் கைப்பற்றும் என்று தென்ஆப்பிரிக்க முன்னாள் வேகப்பந்து வீரர் ஸ்டெய்ன் கணித்து உள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
5 டெஸ்ட் போட்டியும் பரபரப்பாக இருக்கும். எல்லாவற்றுக்கும் முடிவு ஏற்படும். இங்கிலாந்து 3-2 என்ற கணக்கில் தொடரை கைப்பற்ற வாய்ப்பு இருக்கிறது. எந்த அணியும் எளிதில் வெற்றி பெற முடியாது. 5 டெஸ்டும் மிகவும் நெருக்கமாக இருக்கும்.
முதல் முறையாக கேப்டன் பொறுப்பை வகிக்கும் சுப்மன் கில்லுக்கு இந்த தொடர் அனுபவத்தை அளிக்கும். கடினமான சூழலை ஏற்படுத்தும்.
இவ்வாறு ஸ்டெய்ன் கூறியுள்ளார்.
அதேநேரத்தில் இங்கிலாந்து அணிக்கு இந்தியா சவால் அளிக்கும் என்று ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணியில் அனுபவம் மிகுந்த வீரர்களான விராட் கோலி, ரோகித் சர்மா ஆகியோர் இல்லை. அணியில் இடம்பெற்றுள்ள பெரும்பாலான வீரர்கள் குறைந்த டெஸ்ட் போட்டியில் விளையாடியவர்கள்.
அதே நேரத்தில் பந்துவீச்சில் எதிர் அணியை நிலைகுலையச் செய்ய பும்ரா இருக்கிறார். அவர் எப்படி செயல்படபோகிறார் என்பதைப் பார்க்க வேண்டும். அணியில் இளம் வீரர்கள் இருக்கிறார்கள். எனவே இங்கிலாந்துக்கு இந்திய அணி நிச்சயம் சவால் அளிக்கும். சாய் சுதர்ஷன், நிதிஷ் குமார் ரெட்டி, ஜெய்ஸ்வால், அர்ஷ்தீப் சிங், பிரசித் கிருஷ்ணா, சிராஜ், ஆகாஷ் தீப் ஆகியோர் சறப்பாக செயல்படுவார்கள்.
இவ்வாறு மைக்கேல் கிளார்க் கூறியுள்ளார்.
- நடப்பு சீசனின் முதல் போட்டியிலேயே ஐதராபாத் 286 ரன்கள் குவித்துள்ளது.
- ஐ.பி.எல். தொடரில் ஐதராபாத் 250 ரன்களுக்கு மேல் குவிப்பது இது 4-வது முறையாகும்.
ஐபிஎல் தொடர் கடந்த 22-ந் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக நேற்று ஐதராபாத் மற்றும் ராஜஸ்தான் அணிகள் மோதியது ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது. இதில் ஐதராபாத் அணி 44 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் அணி தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தனர். அபாரமாக விளையாடிய இஷான் கிஷன் சதம் விளாசி அசத்தினார். அவர் மட்டுமல்லாமல் டிராவிஸ் ஹெட், நிதிஷ் குமார், கிளாசன் ஆகியோரின் அதிரடியால் 20 ஓவரில் 286 ரன்கள் குவித்தது.
ஐ.பி.எல். தொடரில் 250 ரன்களுக்கு மேல் குவிப்பது இது 4-வது முறையாகும். இதன் மூலம் ஒட்டுமொத்த 20 ஓவர் போட்டியில் அதிக முறை 250 ரன்களுக்கு மேலான ஸ்கோரை எடுத்த அணி என்ற சாதனையை ஐதராபாத் அணி படைத்துள்ளது.
அதற்கு அந்த அணி தொடக்க வீரர்களான அபிஷேக் சர்மா, ஹெட் முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. இவர்களையடுத்து இந்த சீசனில் இஷான் கிஷன் இணைந்துள்ளார். அவர் முதல் போட்டியிலேயே சதம் அடித்து அசத்தி உள்ளார். அவரையடுத்து நிதிஷ் ரெட்டி, கிளாசன் போன்ற அதிரடி பேட்ஸ்மேன்கள் இருக்கின்றனர். அவர்கள் 300 ரன்களை எடுப்பது வெகு தூரம் இல்லை.
இந்நிலையில் மும்பை அணிக்கு எதிரான போட்டியில் ஐதராபாத் அணி 300 ரன்களை எட்டும் என தென் ஆப்பிரிக்காவின் முன்னாள் வீரர் டேல் ஸ்டெயின் கணித்துள்ளார்.
இது குறித்து எக்ஸ் தளத்தில் அவர் கூறியதாவது, ஒரு சின்ன கணிப்பு. ஏப்ரல் 17 அன்று ஐபிஎல்லில் முதல் 300 ரன்களைப் பார்ப்போம்.
யாருக்குத் தெரியும், அது நடப்பதைப் பார்க்க நான் கூட அங்கே இருக்கலாம் என கூறியுள்ளார்.
ஏப்.17-ம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் போட்டியில் மும்பை - ஐதராபாத் அணிகள் மோதுகின்றனர்.
- இவர் 155.8 கிமீ வேகத்தில் வீசிய பந்து இந்த தொடரில் வீசப்பட்ட வேகமான பந்து என்ற சாதனையை படைத்தது
- லக்னோ அணியில் அறிமுகமான தனது முதல் போட்டியிலேயே மயங்க் யாதவ் ஆட்டநாயகன் விருதை வென்றார்
ஐ.பி.எல். 2024 கிரிக்கெட் தொடரின் 11 ஆவது லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி பேட்டிங் தேர்வு செய்தது.
பேட்டிங்கை துவங்கிய லக்னோ அணி 8 விக்கெட்டுகளை இழந்து 199 ரன்களை குவித்தது. 200 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் கிங்ஸ் அணி 5 விக்கெட்டுகளை இழந்து 178 ரன்களை மட்டுமே அடித்து தோல்வியை தழுவியது.
இதன் மூலம் லக்னோ அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. லக்னோ அணி சார்பில் சிறப்பாக பந்துவீசிய மயங்க் யாதவ் மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினார். மோசின் கான் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
குறிப்பாக இவர் 155.8 கிமீ வேகத்தில் வீசிய பந்து இந்த தொடரில் வீசப்பட்ட வேகமான பந்து என்ற சாதனையை படைத்தது. தொடர்ச்சியாக 150 கிமீ வேகத்தில் அவர் பந்துவீசி பஞ்சாப் பேட்ஸ்மேன்களை திணறடித்தார். அதனால் தான் லக்னோ அணியில் அறிமுகமான தனது முதல் போட்டியிலேயே மயங்க் யாதவ் ஆட்டநாயகன் விருதை வென்றார்.
அதன் பின்னர் பேசிய அவர், தென்னாப்பிரிக்காவின் ஜாம்பவான் வீரர் டேல் ஸ்டைன் தான் தம்முடைய ரோல் மாடல் என்று கூறினார் . மேலும் காயத்தை சந்தித்திருக்காமல் போயிருந்தால் கடந்த வருடமே ஐபிஎல் தொடரில் அறிமுகமாகி விளையாடியிருப்பேன் என்று தெரிவித்தார்.
இந்நிலையில், மயங்க் யாதவை தென்னாப்பிரிக்க முன்னாள் வீரர் டேல் ஸ்டைன் பாராட்டியுள்ளார். இது தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், "மணிக்கு 155.8 கி.மீ வேகம். மயங்க் யாதவ், நீங்கள் எங்கே ஒளிந்திருந்தீர்கள் என்று வியப்புடன் பாராட்டியுள்ளார்.
மேலும் மயங்க் யாதவ் பற்றி ஆஸ்திரேலியா முன்னாள் ஜாம்பவான் வேகப்பந்து வீச்சாளர் பிரட் லீ தன்னுடைய ட்விட்டரில் பாராட்டி பதிவிட்டுள்ளார். அதில், "இந்தியா தனது வேகப்பந்து வீச்சாளரை கண்டு பிடித்துள்ளது. மயங்க் யாதவ், மிரட்டலான வேகம். மிகவும் ஈர்க்கக் கூடியதாக இருக்கிறது" என்று பதிவிட்டுள்ளார்.
- நான் பேட்டிங் செய்ய வரும் முன்னர் அவரது பந்து வீச்சு வீடியோவை 100 முறை பார்த்து விட்டுதான் பேட்டிங் செய்ய வருவேன்.
- அவர் ஒரு மிரட்டலான பந்து வீச்சாளராக இருந்தார்.
இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா துபாயில் உள்ள எப் எம் சேனல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு சுவாரஸ்யமாக பதிலளித்தார்.
அதில், நீங்கள் சந்தித்ததில் கடினமான பந்துவீச்சாளர் யார் என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு ரோகித் தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளரை கூறினார்.
இது குறித்து ரோகித் கூறியதாவது:-
நான் பேட்டிங் செய்ய வரும் முன்னர் அவர் பந்து வீச்சு வீடியோவை 100 முறை பார்த்து விட்டுதான் பேட்டிங் செய்ய வருவேன். அவர்தான் தென் ஆப்பிரிக்கா வீரர் டேல் ஸ்டெய்ன். அவர் கிரிக்கெட்டின் ஜாம்பவான்.
மேலும் அவர் தனது வாழ்க்கையில் என்ன சாதித்திருக்கிறார் என்பதை பார்ப்பதற்கு மிகவும் அருமையாக உள்ளது. நான் அவரை பலமுறை எதிர்கொண்டேன். அவரது பந்து வீச்சு வேகமாக இருக்கும். அதில் ஸ்விங்கும் செய்வார். அப்படி பந்து வீசுவது மிகவும் கடினமானது.
அவர் ஒரு மிரட்டலான பந்து வீச்சாளராக இருந்தார். அவர் அனைத்து போட்டி, சீசனிலும் வெற்றி பெற வேண்டும் என்ற எண்ணத்தில் விளையாடுவார். அவருக்கு எதிராக விளையாடியதில் மகிழ்ச்சியாக இருந்தது.
இவ்வாறு ரோகித் கூறினார்.
- 2024 டி20 உலகக் கோப்பையில் வர்ணனையாளராக டேல் ஸ்டெய்ன் இருந்து வருகிறார்.
- ஸ்டெய்னுக்கு அமெரிக்க ஊழியர் ஒருவர் பந்துவீச சொல்லி கொடுத்த ஒரு வீடியோ அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
டி20 உலகக் கோப்பை 2024 கடந்த ஜூன் 2-ம் தேதி முதல் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. இதில், எந்த உலகக் கோப்பையிலும் இல்லாத அளவிற்கு 20 அணிகள் பங்கேற்று வருகிறது.
இந்நிலையில், தென் ஆப்பிரிக்கா ஜாம்பவான் டேல் ஸ்டெய்னுக்கு அமெரிக்க ஊழியர் ஒருவர் பந்துவீச சொல்லி கொடுத்த ஒரு வீடியோ அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
2024 டி20 உலகக் கோப்பையில் வர்ணனையாளராக டேல் ஸ்டெய்ன் இருந்து வருகிறார். ஏதேனும் ஒரு அணியில் வளர்ந்து வரும் வேகப்பந்துவீச்சாளர்களுக்கு சந்தேகம் என்றால் சொல்லி கொடுப்பார். ஆனால், ஸ்டெய்ன் யார் என்றே அடையாளத்தை முழுமையாக தெரியாத அமெரிக்க ஊழியர் ஒருவர், ஜாம்பவான் ஸ்டெய்னுக்கு சில பந்துவீச்சு அறிவுரைகளை வழங்கியுள்ளார்.
இதை எதையும் பெரிதாக எடுத்துக்கொள்ளாத ஸ்டெயினும் தனக்கு எதுவும் தெரியாததுபோல், அனைத்தையும் ஆர்வத்துடன் கற்றுகொண்டு தான் முதல்முறை பந்துவீசுவதுபோல் முயற்சி செய்தார்.
இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் நீ படிச்ச ஸ்கூல்ல அவர் ஹெட்மாஸ்டர் டா என்ற வசனத்தை முன் வைத்து கலாய்த்து வருகின்றனர். மேலும் சிலர், அமெரிக்காவில் கிரிக்கெட் பிரபலம் இல்லை என்பதை இதன்மூலம் தான் தெரிகிறது என கருத்து தெரிவித்து வருகின்றனர்.
அமெரிக்காவில் கிரிக்கெட் மிகவும் பிரபலமான விளையாட்டு அல்ல. இதனால்தான், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) அமெரிக்காவில் கிரிக்கெட்டை ஊக்குவிக்கும் வகையில் 2024 டி20 உலகக் கோப்பையை நடத்த அனுமதி வழங்கியுள்ளது.
- தென் ஆப்பிரிக்கா அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
- 4 புள்ளிகளுடன் தென்ஆப்பிரிகா அணி அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்பு உள்ள நிலையில், கடைசி சூப்பர் 8 சுற்றில் மேற்கிந்திய தீவுகள் அணியை வீழ்த்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
ஐசிசி ஆண்கள் டி20 உலக கோப்பை போட்டியில் தென்ஆப்பிரிக்கா வீரர் டேல் ஸ்டெய்னின் பந்து வீச்சு சாதனையை அன்ரிச் நோர்ஜே முறியடித்துள்ளார்.
டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற சூப்பர் 8 சுற்று போட்டியில் இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின. தென் ஆப்பிரிக்கா அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் அன்ரிச் நோர்ஜே ஒரு விக்கெட்டை எடுத்தபோது அவர் டேல் ஸ்டெய்னின் சாதனையை முறியடித்துள்ளார்.
தென்ஆப்பிரிக்கா வீரரான டேல் ஸ்டெய்ன், டி20 உலக கோப்பை போட்டிகளில் 30 விக்கெட்டுக்களை எடுத்து இருந்தார். தற்போது நோர்ஜே 31 விக்கெட்டுகளுடன் அவரை முந்தியுள்ளார்.
இந்த போட்டியில், அன்ரிச் நோர்ஜே 13 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்துள்ளார். தற்போது நடைபெற்று வரும் தொடரில் இதுவரை அவர் 11 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
டி20 உலகக் கோப்பையில் அன்ரிச் நோர்ஜே 16 போட்டிகளில் 31 விக்கெட்டுகளும், டேல் ஸ்டெய்ன் 23 போட்டிகளில் 30 விக்கெட்டுகளும், மோர்னே மோர்கல் 17 போட்டிகளில் 24 விக்கெட்டுகளும், ரபாடா 19 போட்டிகளில் 24 விக்கெட்டுகளும் எடுத்துள்ளனர்.
4 புள்ளிகளுடன் தென்ஆப்பிரிகா அணி அரையிறுதிக்கு செல்லும் வாய்ப்பு உள்ள நிலையில், கடைசி சூப்பர் 8 சுற்றில் மேற்கிந்திய தீவுகள் அணியை வீழ்த்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
- 10 ஆண்டுக்கு பிறகு ஸ்மித் கோல்டன் டக் அவுட் ஆகியுள்ளார்.
- முதல் முறையாக தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக கோல்டன் டக் அவுட் ஆனார்.
முதல் இன்னிங்சில் விளையாடிய ஆஸ்திரேலிய அணி, இந்திய அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.
ஆஸ்திரேலியா - இந்தியா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்தியா பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் விளையாடிய இந்திய அணி 150 ரன்னில் சுருண்டது.
இதனை தொடர்ந்து முதல் இன்னிங்சில் விளையாடிய ஆஸ்திரேலிய அணி, இந்திய அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.
பும்ரா பந்து வீச்சில் கவாஜா 8 ரன்னில் ஆட்டமிழந்த போது ஸ்மித் களமிறங்கினார். அவர் சந்தித்த முதல் பந்திலேயே கோல்டன் டக் அவுட் முறையில் வெளியேறினார்.
இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஸ்மித்தை கோல்டன் டக் அவுட் முறையில் வீழ்த்திய 2-வது வீரர் பும்ரா ஆவார். இதற்கு முன்பு தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் ஸ்டெய்ன் பந்து வீச்சில் கோல்டன் டக் அவுட் முறையில் ஆட்டமிழந்தார். 2014-ம் ஆண்டுக்கு பிறகு இந்த போட்டியில் தான் கோல்டன் டக் அவுட் ஆகியுள்ளார் ஸ்மித். இரண்டு அவுட்டுமே எல்.பி.டபிள்யூ. முறையில் வீழ்த்தப்பட்டது.
தென்ஆப்பிரிக்கா அணியில் வேகப்பந்து வீச்சாளர் ஸ்டெயின் இடம் பிடித்துள்ளார். இவர் ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணிக்காக விளையாடும்போது தோள்பட்டையில் ஏற்பட்ட காயம் இன்னும் சரியாகவில்லை. இதனால் இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஆட்டத்தில் விளையாடமாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தென்ஆப்பிரிக்கா அணியின் தலைமை பயிற்சியாளர் ஒட்டிஸ் கிப்சன் கூறுகையில் ‘‘ஸ்டெயின் இன்னும் சிறந்த வகையில் குணமடையவில்லை. குணமடைவதற்கு இன்னும் வெகுதூரம் இல்லை. இருந்தாலும் தயாராகவில்லை.
உலகக்கோப்பை தொடர் ஆறுவாரக் காலம் நடைபெறுகிறது. இந்த விஷயம் குறித்து உடனடியாக முடிவு எடுக்க தேவையில்லை. அவர் முதல் ஆட்டத்தில் இடம்பிடிக்க மாட்டார். நாங்கள் அவரைத்தவிர 14 வீரர்கள் பெற்றுள்ளோம். அதில் இருந்து நான்கு பேரை தேர்வு செய்வோம்’’ என்றார்.
விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு 6 போட்டிகளில் விளையாடி ஆறிலும் தோல்வியைச் சந்தித்துள்ளன. அந்த அணி ஆஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சாளரான கவுல்டர்-நைல்-ஐ ஏலத்தில் எடுத்திருந்தது. பாகிஸ்தானுக்கு எதிரான தொடரில் விளையாடியதால் ஐபிஎல் தொடக்கத்தில் அவர் விளையாடவில்லை.
பின்னர் அணியில் இணைய இருந்த நேரத்தில் அவருக்கு காயம் ஏற்பட்டது. இதனால் ஐபிஎல் தொடரில் இருந்து விலகியுள்ளார். இந்நிலையில் அவருக்கு மாற்று வீரராக தென்ஆப்பிரிக்காவின் வேகப்பந்து வீச்சாளரான டேல் ஸ்டெயினை தேர்வு செய்துள்ளது.
இந்த வருடம் தொடக்கத்தில் இந்தியாவிற்கு எதிரான தொடரில் களம் இறங்கினார். ஆனால் காலில் ஏற்பட்ட காயத்தால் தொடர்ந்து விளையாட முடியவில்லை. சமீபத்தில் கவுன்ட்டி கிரிக்கெட்டில் விளையாடும்போதும் கூட காயத்தில் அவதிப்பட்டார்.

இந்நிலையில் தென்ஆப்பிரிக்கா ஜிம்பாப்வேயிற்கு எதிராக ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடுகிறது. இதற்கான தென்ஆப்பிரிக்கா அணியில் டேல் ஸ்டெயின் இடம்பிடித்துள்ளார். இதன்மூலம் சுமார் இரண்டு வருடத்திற்குப் பிறகு ஒருநாள் அணியில் விளையாடுகிறார்.
இதுகுறித்து டேல் ஸ்டெயின் கூறுகையில் ‘‘ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் எங்களது மிகப்பெரிய பிரச்சனையே பந்து வீச்சு யுனிட்டுதான். இது மிகமிகப்பெரிய பிரச்சனையாக இருக்கும் என்று தோன்றவில்லை. ஆனால், அனுபவம் மிகப்பெரிய பிரச்சனைதான்.

எங்களுடைய டாப் சிக்ஸ் பேட்ஸ்மேன்களை எடுத்துக்கொண்டால், அனைத்து வீரர்களும் 800-க்கும் மேற்பட்ட போட்டியில் விளையாடியுள்ளனர். அதேவேளையில், பந்து வீச்சாளர்களை பார்த்தீர்கள் என்றால், கடைசி நான்கு வீரர்கள் 150 போட்டிகளில்தான் விளையாடியுள்ளனர்.
35 வயதானாலும் இன்னும் நான் கற்றுக் கொண்டுதான் இருக்கிறேன். ஆனால், நான் என்ன செய்து கொண்டிருக்கிறேன் என்பது எனக்குத் தெரியும். ஒருநாள் போட்டியில் விளையாடும் வாய்ப்பு கிடைத்தால், கட்டாயம் விளையாடி அணிக்கு வெற்றி தேடிக்கொடுப்பேன்.

ரபாடா, லுங்கி நிகிடி, டேன் பேட்டர்சன், வில்லியம் முல்டர் அவர்களுடைய ஆட்டத்தில் இருந்து கற்றுக் கொண்டு வருகிறார்கள். ஆனால் துரதிருஷ்டவசமாக உலகக்கோப்பை தொடருக்கு கற்றுக் கொண்டிருக்கும்போதே செல்ல முடியாது. நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் என்பதை நீங்கள் தெரிந்துக் கொள்வது தேவையானது’’ என்றார்.
டேல் ஸ்டெயின் தென்ஆப்பிரிக்கா அணிக்காக 116 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 178 விக்கெட்டுக்கள் வீழ்த்தியுள்ளார்.






