என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Jasprit Bumrah"

    • 31 வயதான பும்ரா தற்போது டெஸ்ட் கிரிக்கெட்டில் நம்பர் 1 பந்து வீச்சாளராக உள்ளார்.
    • என்னுடைய குடும்பத்தை பொறுத்தவரை பொறுத்தவரை, நான் ஒரு கிரிக்கெட் வீரர் அல்ல.

    ஜஸ்பிரித் பும்ரா தற்போது உலகின் மிகசிறந்த வேகப்பந்து வீச்சாளராக கருதப்படுகிறார். 31 வயதான பும்ரா தற்போது டெஸ்ட் கிரிக்கெட்டில் நம்பர் 1 பந்து வீச்சாளராக உள்ளார்.

    இந்நிலையில், தனது கிரிக்கெட் வாழ்க்கைக்கும் தனிப்பட்ட வாழ்க்கைக்கும் இடையிலான சமநிலை குறித்து முன்னாள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் மைக்கேல் கிளார்க்குக்கு அளித்த பேட்டியில் பும்ரா மனம் திறந்து பேசியுள்ளார்.

    அந்த நேர்காணலில் பேசிய பும்ரா, "நான் தீவிரமாக 2 விஷயங்களை எடுத்துக் கொள்கிறேன். ஒன்று எனது குடும்பம், மற்றொன்று கிரிக்கெட். ஆனால் எனக்கு, என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையை விட என்னுடைய குடும்பம் முக்கியமானது. ஏனென்றால் குடும்பம் தான் நிலையானது என்பது உங்களுக்குத் தெரியும்,

    என்னுடைய குடும்பத்தை பொறுத்தவரை பொறுத்தவரை, நான் ஒரு கிரிக்கெட் வீரர் அல்ல. நான் அவர்களில் ஒருவன், ஒரு மனிதன்" என்று தெரிவித்தார்.

    • லீக் போட்டிகளின் முடிவில் பிளே ஆப் சுற்றுக்கு பஞ்சாப், பெங்களூரு, குஜராத், மும்பை ஆகிய அணிகள் தகுதி பெற்றன.
    • குஜராத் -மும்பை அணிகள் எலிமினேட்டர் போட்டியில் வரும் வெள்ளிக்கிழமை மோதுகிறது.

    நடப்பு ஐ.பி.எல். தொடரில் லீக் சுற்று ஆட்டங்கள் முடிவடைந்தன. லீக் போட்டிகளின் முடிவில் பிளே ஆப் சுற்றுக்கு பஞ்சாப், பெங்களூரு, குஜராத், மும்பை ஆகிய அணிகள் தகுதி பெற்றன.

    புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்த பஞ்சாப், 2-வது இடம் பிடித்த ஆர்சிபி அணியுடன் குவாலிபையர் 1 சுற்றில் நாளை மோதுகிறது. புள்ளிப்பட்டியலில் 3-ம் இடம் பிடித்த குஜராத், 4 -ம் இடம்பிடித்த மும்பை அணியுடன் எலிமினேட்டர் போட்டியில் வரும் வெள்ளிக்கிழமை (மே 30) மோதுகிறது.

    இந்நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணி வீரர்கள் பயிற்சியின் போது அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளர் டிரெண்ட் போல்ட், சக வீரரான மிட்செல் சான்ட்னர் மாதிரி சுழற்பந்து வீசினார். அருகில் இருந்த பும்ரா இதனை சிரித்தப்படி பார்த்துக் கொண்டிருந்தார். கிட்ட தட்ட அவரே மாதிரி போல்ட் பந்து வீசினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    • இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி தேர்வு வருகிற 19-ந்தேதி நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    • கேப்டன் பதவிக்கான போட்டியில் வேகப்பந்து வீரர் பும்ரா, தொடக்க வீரர் சுப்மன்கில் ஆகியோர் இருக்கிறார்கள்.

    புதுடெல்லி:

    இந்திய கிரிக்கெட் அணி ஜூன் 20-ந்தேதி முதல் ஆகஸ்ட் 4-ந்தேதி வரை இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்டில் விளையாடுகிறது.

    ரோகித் சர்மா, விராட் கோலி, அஸ்வின் ஆகிய 3 சீனியர்கள் இல்லாமல் முதல் முறையாக இந்திய அணி இந்த தொடரில் விளையாடுகிறது. அஸ்வின் ஆஸ்திரேலியா பயணத்தில் பாதியில் ஓய்வு முடிவை அறிவித்தார். ஐ.பி.எல். போட்டி நடைபெற்றுக் கொண்டு இருக்கும்போது ரோகித் சர்மாவும், விராட் கோலியும் சமீபத்தில் ஓய்வு முடிவை அறிவித்தனர்.

    இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி தேர்வு வருகிற 19-ந்தேதி நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அஜித் அகர்கர் தலைமையிலான தேர்வு குழு கூடி இந்திய வீரர்களை அறிவிக்கப்படுகிறது.

    ரோகித் சர்மாவின் ஓய்வால் புதிய டெஸ்ட் கேப்டனாக யார் தேர்வு பெறுவார் என்ற எதிர்பார்ப்பு அதிகமாக இருக்கிறது. கேப்டன் பதவிக்கான போட்டியில் வேகப்பந்து வீரர் பும்ரா, தொடக்க வீரர் சுப்மன்கில் ஆகியோர் இருக்கிறார்கள். இதில் சுப்மன்கில்லுக்கு அதிகமான வாய்ப்பு இருக்கிறது.

    பந்து வீச்சாளரான பும்ராவால் 5 டெஸ்டுக்கு கேப்டனாக பணியாற்றுவது கடினமானது. இதனால் கிரிக்கெட் வாரியத்தின் தேர்வு சுப்மன்கில்லாக இருக்கிறது. மேலும் கடந்த சில தினங்களுக்கு முன்பு சுப்மன் கில்லை பயிற்சியாளர் காம்பீர் சந்தித்து ஆலோசித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் சுப்மன்கில் கேப்டனாக தேர்வு செய்யப்படவே அதிகமான வாய்ப்பு இருக்கிறது.

    தமிழக வீரர் சாய் சுதர்சனுக்கு டெஸ்ட் அணியில் வாய்ப்பு வழங்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. அவர் 3-வது வரிசையில் விளையாடலாம்.

    சுப்மன்கில்லும், ஜெய்ஷ்வாலும் தொடக்க வீரர்களாக களம் இறங்குவார்கள். விராட் கோலியின் இடமான 4-வது வரிசையில் கே.எல். ராகுல் விளையாடுவார்.

    நிதிஷ்குமார் ரெட்டி, ஈஸ்வரன், ஹர்சித் ராணா, பிரசித் கிருஷ்ணா ஆகியோரும் தேர்வுக்கான வாய்ப்பில் இருக்கிறார்கள். சுழற்பந்து வீரர்கள் ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ் தேர்வு பெறலாம்.

    • இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக இங்கிலாந்து செல்ல உள்ளது.
    • இது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் ஒரு அங்கமாக நடைபெறவுள்ளது.

    ஐபிஎல் தொடர் மே 25-ந் தேதியுடன் முடிவடைகிறது. இதனை தொடர்ந்து இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக இங்கிலாந்து செல்ல உள்ளது. இது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் ஒரு அங்கமாக நடைபெறவுள்ளது.

    இத்தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக ரோகித் சர்மா மீண்டும் செயல்படுவதாக முடிவாகி உள்ளது. மேலும் இந்த தொடருக்காக இந்திய அணியில் குல்தீப் யாதவ், கருண் நாயர் டெஸ்ட் அணியில் இடம் பெறவும் வாய்ப்புள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

    இந்நிலையில் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவுக்கு துணை கேப்டன் பதவி வழங்கப்படாது என்ற தகவல் வெளியாகியுள்ளது. இது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    முன்னதாக நடந்து முடிந்த ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரில் இந்திய அணியின் துணைக்கேப்டனாக ஜஸ்பிரித் பும்ரா நியமிக்கப்பட்டிந்தார். மேற்கொண்டு ரோகித் சர்மா பங்கேற்காத போட்டிகளுக்கு பும்ரா கேப்டனாகவும் செயல்பட்டு வந்தார். ஆனால் அத்தொடாரின் கடைசி போட்டியின் போது கேப்டனாக செயல்பட்டு வந்த ஜஸ்பிரித் பும்ரா காயத்தை சந்தித்ததுடன் போட்டியில் இருந்தும் பாதியிலேயே வெளியேறினார்.

    மேற்கொண்டு காயம் காரணமாக சாம்பியன்ஸ் கோப்பை தொடரையும் அவர் தவறவிட்டார். அப்போதே பும்ரா தொடர்ந்து விளையாடியதன் காரணமாகவே காயத்தை சந்தித்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்நிலையில் தான் இனிவரும் தொடர்களில் பும்ராவின் பணிச்சுமையைக் குறைக்கும் வகையில் அவரை அனைத்து போட்டிகளிலும் விளையாடவைப்பதற்கு பதிலாக முக்கிய ஆட்டங்களில் மட்டும் விளையாட பிசிசிஐ அனுமதிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

    இதன் காரணமாகவே அவரை டெஸ்ட் அணியின் துணைக்கேப்டன் பொறுப்பிலிருந்து விலக்கவுள்ளதாகவும் அதேசமயம் இந்திய ஒருநாள் அணியின் துணைக்கேப்டனாக செயல்பட்டுவரும் சுப்மன் கில்லை டெஸ்ட் அணியின் துணைக்கேப்டனாக நியமிக்க பிசிசிஐ திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. 

    • ஆண்டுதோறும் சிறந்த 5 வீரர்களை தேர்வு செய்து அவர்களது சாதனை விவரங்களை வெளியிட்டு கவுரவிப்பது வழக்கமாகும்.
    • இங்கிலாந்து மண்ணில் நடைபெறும் போட்டிகளில் சிறப்பாக செயல்படும் வீரர், வீராங்கனைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

    புதுடெல்லி:

    இங்கிலாந்து தலைநகர் லண்டனில் இருந்து வெளியாகும் 'கிரிக்கெட் உலகின் பைபிள்' என்று போற்றப்படும் 'விஸ்டன்' புத்தகம் ஆண்டுதோறும் சிறந்த 5 வீரர்களை தேர்வு செய்து அவர்களது சாதனை விவரங்களை வெளியிட்டு கவுரவிப்பது வழக்கமாகும். இதில் இங்கிலாந்து மண்ணில் நடைபெறும் போட்டிகளில் சிறப்பாக செயல்படும் வீரர், வீராங்கனைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

    இதன்படி 2025-ம் ஆண்டு பதிப்பில் இடம் பெறும் சிறந்த 5 வீரர், வீராங்கனைகள் யார் என்பதை 'விஸ்டன்' வெளியிட்டுள்ளது. இதில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா, இந்திய பெண்கள் அணியின் துணை கேப்டன் ஸ்மிருதி மந்தனா ஆகியோரின் பெயர்களும் இடம் பெற்றுள்ளது.

    31 வயதான பும்ரா கடந்த ஆண்டில் (2024) டெஸ்ட் கிரிக்கெட்டில் 71 விக்கெட்டுகளை வீழ்த்தியது. இதில் சராசரியாக 14.92 ரன்னுக்கு ஒரு விக்கெட் சாய்த்து இருந்தார். ஒரு சீசனில் இவ்வளவு குறைவான ரன் சராசரியுடன் அதிக விக்கெட் வீழ்த்திய பவுலராக பும்ரா திகழ்கிறார் என விஸ்டன் பாராட்டி இருக்கிறது. அத்துடன் அவர் 20 ஓவர் உலகக் கோப்பை போட்டியில் 15 விக்கெட்டுகள் வீழ்த்தி தொடர்நாயகன் விருதை கைப்பற்றியதும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

    28 வயதான மந்தனா கடந்த ஆண்டில் மூன்று வடிவிலான போட்டியிலும் சேர்த்து 1,659 ரன்கள் குவித்தார். இது, சர்வதேச கிரிக்கெட்டில் ஒரு ஆண்டில் வீராங்கனை ஒருவர் எடுத்த அதிகபட்ச ரன் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

    இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் அட்கின்சன், விக்கெட் கீப்பர் ஜாமி சுமித், இங்கிலாந்து வீராங்கனை சோபி எக்லெஸ்டோன் ஆகியோரின் பெயரும் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளது.

    • பும்ராவின் ஒரே ஓவரில் கருண் நாயர் 18 ரன்கள் விளாசினார்.
    • கருண் நாயர் மற்றும் பும்ராவுக்கு இடையே மோதல் எழுந்தது.

    ஐபிஎல் தொடரில் 29 ஆவது லீக் ஆட்டத்தில் டெல்லி-மும்பை அணிகள் மோதின. இதில் முதலில் விளையாடிய மும்பை அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 205 ரன்கள் எடுத்தது.

    இதனையடுத்து களமிறங்கிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 19 ஓவரில் 193 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ஒரு கட்டத்தில் டெல்லி அணி எளிதாக வெற்றி பெறும் என்ற நிலையில் இருந்தது. அதற்கு முக்கிய காரணமாக கருண் நாயர் இருந்தார். அவர் மூன்றாம் வரிசையில் பேட்டிங் செய்ய வந்தார். அவருக்கு இந்த ஆண்டு இதுவே முதல் ஐபிஎல் போட்டியாகும்.

    அவர் மும்பை இந்தியன்ஸ் அணியின் வேகப்பந்துவீச்சாளர்களான தீபக் சாஹர், ட்ரென்ட் போல்ட் மற்றும் பும்ரா ஆகியோரின் பந்துவீச்சில் பவுண்டரி சிக்சர்களுமாக பறக்க விட்டார்.

    அந்த சூழலில் கருண் நாயர் மற்றும் பும்ராவுக்கு இடையே மோதல் எழுந்தது. பும்ராவின் ஒரே ஓவரில் கருண் நாயர் 18 ரன்கள் விளாசினார். அந்த ஓவரில் 2 ரன்களுக்காக ஓடும் போது பும்ரா மீது எதிர்பாராத விதமாக கருண் நாயர் மோதினார். மோதியவுடன் கருண் நாயர் மன்னிப்பும் கேட்டுக் கொண்டார்.

    அந்த ஓவர் முடிந்தவுடன் இடைவேளை விடப்பட்டது. அப்போது பும்ரா கருண் நாயர் அருகே சென்று அவரை சீண்டும் வகையில் பேசினார். தான் எந்த தவறும் செய்யவில்லை என தனது பக்க நியாயத்தை சொல்ல முன் வந்தார் கருண் நாயர்.

    நிலைமை எல்லை மீறி செல்வதை பார்த்த மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா கருண் நாயர் அருகே சென்று அவரை சமாதானம் செய்து அனுப்பி வைத்தார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலானது.

    இந்நிலையில், டெல்லி-மும்பை போட்டி முடிந்த பின்பு ஜஸ்பிரித் பும்ராவும் கருண் நாயரும் சமாதானமாகி கட்டிப்பிடிக்கும் வீடியோவை டெல்லி அணி தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

    • என்னுடைய பேட்டிங் குறித்து பேசுவதில் எந்த பயனும் கிடையாது.
    • பும்ரா தான் உலகின் மிகச்சிறந்த பந்துவீச்சாளர் அவர் எங்கு பந்து வீசப்போகிறார்? என்பதை கூர்மையாக கவனித்தேன்.

    ஐபிஎல் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் மும்பை -டெல்லி அணிகள் மோதின. இந்த போட்டியில் டெல்லி அணியில் கருண் நாயர் இடம்பெற்றிருந்தார்.

    ஐபிஎல் தொடரில் இடம் பிடித்திருந்தாலும் பிளேயிங் லெவனில் களமிறக்கப்படாமல் இருந்து வந்த நிலையில் நேற்று களமிறங்கி அதிரடியாக விளையாடி அனைவரது கவனத்தை ஈர்த்தார்.

    கருண் நாயர் துவக்கத்தில் இருந்தே பவுண்டரியும், சிக்சருமாக பறக்கவிட்டு 40 பந்துகளில் 12 பவுண்டரி மற்றும் 5 சிக்ஸர்கள் என 89 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். குறிப்பாக பும்ராவின் ஓவரில் 2 சிக்சர்களை பறக்கவிட்ட கருண் நாயர் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார். அவர் ஆட்டமிழந்ததும் அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழவே இறுதியில் டெல்லி அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.

    இந்நிலையில் என்னுடைய பேட்டிங் குறித்து பேசுவதில் எந்த பயனும் கிடையாது என டெல்லி அணி வீரர் கருண் நாயர் கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    இந்த போட்டியின் போது இறுதியில் நாங்கள் தோல்வியை சந்தித்தது ஏமாற்றம் அளிக்கிறது. ஆனாலும் எனக்கு கிடைத்த வாய்ப்பை நான் சரியாக பயன்படுத்தியதாக உணர்கிறேன். ஐபிஎல் தொடரில் எப்போது வாய்ப்பு கிடைக்கும், எப்போது அசத்தலாம் என்று காத்துக் கொண்டிருந்த எனக்கு இந்த வாய்ப்பு அளிக்கப்பட்டது.

    தற்போதைக்கு பும்ரா தான் உலகின் மிகச்சிறந்த பந்துவீச்சாளர் அவர் எங்கு பந்து வீசப்போகிறார்? என்பதை கூர்மையாக கவனித்தேன். அதேவேளையில் என்னுடைய திறனை பயன்படுத்தி சரியான பந்தை சரியான திசையில் அடிக்க வேண்டும் என்று நினைத்தால் பும்ராவை மிகச் சிறப்பாக எதிர்கொண்டு அடிக்க முடிந்தது.

    மேலும் என்னுடைய பேட்டிங் குறித்து பேசுவதில் எந்த பயனும் கிடையாது. நான் நன்றாக ஆடினேன். ஆனால், என்னுடைய அணி தோற்றுவிட்ட பிறகு, எனது இன்னிங்ஸ்-க்கு எந்த மதிப்பும் இல்லை.

    என கருண் நாயர் கூறினார்.

    • இந்த போட்டியில் கருண் நாயர் 40 பந்துகளில் 89 ரன்கள் சேர்த்தார்.
    • தீபக் சாஹர், போல்ட் மற்றும் பும்ரா ஆகியோரின் பந்துவீச்சில் கருண் நாயர் அதிரடியாக விளையாடினார்.

    டெல்லி:

    ஐபிஎல் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் டெல்லி-மும்பை அணிகள் மோதின. இதில் முதலில் விளையாடிய மும்பை அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 205 ரன்கள் எடுத்தது.

    இதனையடுத்து களமிறங்கிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 19 ஓவரில் 193 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. ஒரு கட்டத்தில் டெல்லி அணி எளிதாக வெற்றி பெறும் என்ற நிலையில் இருந்தது. அதற்கு முக்கிய காரணமாக கருண் நாயர் இருந்தார். அவர் மூன்றாம் வரிசையில் பேட்டிங் செய்ய வந்தார். அவருக்கு இந்த ஆண்டு இதுவே முதல் ஐபிஎல் போட்டியாகும்.

    அவர் மும்பை இந்தியன்ஸ் அணியின் வேகப்பந்துவீச்சாளர்களான தீபக் சாஹர், ட்ரென்ட் போல்ட் மற்றும் பும்ரா ஆகியோரின் பந்துவீச்சில் பவுண்டரி சிக்சர்களுமாக பறக்க விட்டார்.

    அந்த சூழலில் கருண் நாயர் மற்றும் பும்ராவுக்கு இடையே மோதல் எழுந்தது. பும்ராவின் ஒரே ஓவரில் கருண் நாயர் 18 ரன்கள் விளாசினார். அந்த ஓவரில் 2 ரன்களுக்காக ஓடும் போது பும்ரா மீது எதிர்பாராத விதமாக கருண் நாயர் மோதினார். மோதியவுடன் கருண் நாயர் மன்னிப்பும் கேட்டுக் கொண்டார்.

    அந்த ஓவர் முடிந்தவுடன் இடைவேளை விடப்பட்டது. அப்போது பும்ரா கருண் நாயர் அருகே சென்று அவரை சீண்டும் வகையில் பேசினார். தான் எந்த தவறும் செய்யவில்லை என தனது பக்க நியாயத்தை சொல்ல முன் வந்தார் கருண் நாயர்.

    நிலைமை எல்லை மீறி செல்வதை பார்த்த மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா கருண் நாயர் அருகே சென்று அவரை சமாதானம் செய்து அனுப்பி வைத்தார்.

    பும்ராவை மற்ற மும்பை இந்தியன்ஸ் வீரர்கள் சமாதானம் செய்தனர். ரோகித் சர்மா இதையெல்லாம் ஓரமாக நின்று ரசித்துக் கொண்டு சிரித்துக் கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஜஸ்பிரித் பும்ரா (2015), முகமது சிராஜ் (2023) கலீல் அகமது (2024) போன்றவர்கள் தொடர்ச்சியாக நான்கு வைடுகள் வீசியுள்ளனர்.
    • மொத்தத்தில் லக்னோ பவுலர்கள் வைடு வகையில் 20 ரன்களை வாரி வழங்கினர்.

    ஐபிஎல் தொடரின் நேற்றைய முதல் ஆட்டத்தில் கொல்கத்தா- லக்னோ அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி 20 ஓவரில் 238 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து களமிறங்கிய கொல்கத்தா அணி 20 ஓவரில் 234 ரன்கள் எடுத்தது. இதனால் லக்னோ அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

    இந்த பரபரப்பான ஆட்டத்தில் லக்னோ அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஷர்துல் தாகூர் 13-வது ஓவரில் தொடர்ந்து 5 வைடுகளை வீசினார்.

    ஐ.பி.எல். வரலாற்றில் ஒரு பவுலர் தொடர்ச்சியாக 5 வைடு வீசியது இதுவே முதல் முறையாகும். மொத்தத்தில் லக்னோ பவுலர்கள் வைடு வகையில் 20 ரன்களை வாரி வழங்கினர். இதில் தாக்குரின் பங்களிப்பு மட்டும் 8. ஒரு இன்னிங்சில் அதிக வைடு போட்ட மோசமான பவுலர் என்ற சாதனைக்கு சொந்தக்காரர் ஆனார்.

    ஜஸ்பிரித் பும்ரா (2015), பிரவீன் குமார் (2017), முகமது சிராஜ் (2023) மற்றும் கலீல் அகமது (2024) போன்றவர்கள் தொடர்ச்சியாக நான்கு வைடுகள் வீசியுள்ளனர்.

    மேலும் அவர் ஒரு ஓவரில் 11 பந்துகளை வீசி, துஷார் தேஷ்பாண்டே மற்றும் முகமது சிராஜ் ஆகியோரின் சாதனையையும் சமன் செய்தார். தேஷ்பாண்டே எல்எஸ்ஜிக்கு எதிராகவும் சிராஜ் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராகவும் ஒரு ஓவரில் 11 பந்துகளை வீசியுள்ளனர். 2023-ம் ஆண்டு இந்த சம்பவம் அரங்கேறியது.

    • முதலில் விளையாடிய ஆர்சிபி அணி 221 ரன்கள் குவித்தது.
    • விராட் கோலி 67 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ்- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதி வருகிறது. இதில் டாஸ் வென்ற மும்பை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் விளையாடிய ஆர்சிபி அணி, விராட் கோலி (67), படித்தார் (64) , ஜித்தேஷ் சர்மா (40) ஆகியோரின் அதிரடி ஆட்டத்தால் 20 ஓவரில் 221 ரன்கள் குவித்தது.

    முன்னதாக இந்த போட்டியில் தனது 2-வது ஓவரை பும்ரா வீசினார். அப்போது படித்தார் மற்றும் விராட் கோலி களத்தில் இருந்தனர். அந்த ஓவரில் படித்தார் தடுத்து ஆடுவார். அப்போது பும்ரா அந்த பந்தை எடுத்து மறுமுனையில் இருந்த விராட் கோலி பக்கம் அடிக்க முயற்சிப்பார். சுதாரித்து கொண்ட விராட் கோலி கீரிஸ் உள்ளே சென்று விடுவார்.

    சிரித்தப்படி நடந்து வந்த பும்ராவிடம் விராட் கோலி என்னை அவுட் செய்ய பார்க்கிறாயா என்பது போல சிரித்தபடி பேசி செல்வார். இது தொடர்பான வீடியோ கிரிக்கெட் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

    • ஐபிஎல்-இல் மும்பை இந்தியன்ஸ் அணியின் முதல் 4 போட்டிகளில் பும்ரா பங்கேற்கவில்லை.
    • ஐபிஎல் 2-வது பாதியில் பும்ரா விளையாடுவார் என்று கூறப்பட்டது.

    ஆஸ்திரேலியாவில் கடந்த ஆண்டு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதில் இந்தியா 1-3 என்ற கணக்கில் தோல்வியடைந்தது. இந்த தொடரின் கடைசி டெஸ்ட்டின் போது பும்ராவுக்கு காயம் ஏற்பட்டது.

    இதனால் அவர் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இடம்பெறவில்லை. அதனை தொடர்ந்து ஐபிஎல் தொடரின் முதல் பாதியில் விளையாட வாய்ப்பு இல்லை எனவும் 2-வது பாதியில் விளையாடுவார் என்றும் கூறப்பட்டது.

    இதனால், ஐபிஎல்-இல் மும்பை இந்தியன்ஸ் அணியின் முதல் 4 போட்டிகளில் பும்ரா பங்கேற்கவில்லை

    இந்நிலையில், காயத்தில் இருந்து மீண்ட பும்ரா மும்பை இந்தியன்ஸ் அணியுடன் இணைந்துள்ளார். இதனை மும்பை இந்தியன்ஸ் அணி வீடியோ வெளியிட்டு அறிவித்துள்ளது.

    காயத்தில் இருந்து குணமடைந்து அணியில் இணைந்தாலும் நாளைய போட்டியில் பும்ரா விளையாட மாட்டார் தகவல் வெளியாகியுள்ளது.

    • பும்ராவின் காயம் சற்று கடுமையானது.
    • பும்ராவுக்கு மீண்டும் எலும்பு முறிவு ஏற்படுவதை மருத்துவக் குழு விரும்பவில்லை.

    ஆஸ்திரேலியாவில் கடந்த ஆண்டு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதில் இந்தியா 1-3 என்ற கணக்கில் தோல்வியடைந்தது. இந்த தொடரின் கடைசி டெஸ்ட்டின் போது பும்ராவுக்கு காயம் ஏற்பட்டது.

    இதனால் அவர் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இடம்பெறவில்லை. அதனை தொடர்ந்து ஐபிஎல் தொடரின் முதல் பாதியில் விளையாட வாய்ப்பு இல்லை எனவும் 2-வது பாதியில் விளையாடுவார் என்றும் கூறப்பட்டது.

    இந்நிலையில் அவருக்கு மீண்டும் ஒரு பிரச்சனை வந்துள்ளது. அவரது முதுகில் மீண்டும் ஒரு எழும்பு முறிவு ஏற்படும் என அஞ்சப்படுகிறது. இதனால் அவர் அணிக்கு திரும்புவது தாமதமாகிறது.

    அவர் காயம் குறித்து பிசிசிஐ வட்டாரங்கள் தரப்பில் இருந்து சில தகவல்கள் வெளியாகி உள்ளது. அதில், பும்ராவின் காயம் சற்று கடுமையானது. அவருக்கு மீண்டும் எலும்பு முறிவு ஏற்படுவதை மருத்துவக் குழு விரும்பவில்லை. பும்ரா கூட இதில் கவனமாக இருக்கிறார்.

    காயம் குணமடைந்து பும்ரா பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் பந்து வீச்சு பயிற்சியில் ஈடுபட்டார். ஆனால் முழு வீச்சில் இன்னும் பந்து வீசவில்லை. அதற்கு சில காலம் ஆகலாம்.

    அவர் அணிக்கு திரும்புவதற்கு காலக்கெடு எதுவும் இல்லை. அவர் ஏப்ரல் 2-வது வாரத்திற்குள் அணிக்கு திரும்புவார். குறிப்பாக இங்கிலாந்து எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 3 போட்டிகளில் மட்டுமே விளையாட முடியும் என கூறப்படுகிறது.

    இதனால் ஐபிஎல் தொடரில் அவர் விளையாட வாய்ப்பு இல்லை என தெளிவாக தெரிகிறது. இது மும்பை இந்தியன்ஸ் ரசிகர்களுக்கு சோகமான செய்தியாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×