என் மலர்
நீங்கள் தேடியது "Jasprit Bumrah"
- இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடர் வருகிற 30-ந் தேதி நடைபெற உள்ளது.
- டி20 தொடரில் அவர்கள் விளையாடுவார்கள் என தெரிய வந்துள்ளது.
இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான முதல் டெஸ்டில் இந்திய அணி படுதோல்வி அடைந்தது. இதனையடுத்து இரு அணிகளுக்கு இடையேயான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கவுகாத்தியில் வருகிற 22-ந் தேதி தொடங்குகிறது.
அதனை தொடர்ந்து இரு அணிகளுக்கும் இடையேயான ஒருநாள் தொடர் நடைபெற உள்ளது. இதன் முதல் போட்டி வருகிற 30-ந் தேதி ராஞ்சியில் நடைபெறுகிறது.
இந்நிலையில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஹர்திக் பாண்ட்யா, பும்ரா ஆகியோர் இடம்பெறவில்லை. அவர்களுக்கு ஒருநாள் தொடரில் ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து வரும் டி20 தொடரில் அவர்கள் விளையாடுவார்கள் என தெரிய வந்துள்ளது.
அடுத்த ஆண்டு நடக்கும் டி20 உலக கோப்பை தொடரில் பங்கேற்பதற்காக அவர்களுக்கு ஒருநாள் தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. மேலும் கடந்த மாதம் ஆஸ்திரேலியாவில் நடந்த ஒருநாள் போட்டியின் போது காயமடைந்த ஷ்ரேயாஸ் ஐயர் இந்த தொடருக்கு திரும்பவது கடினம் என தெரிய வந்துள்ளது.
மேலும் சுப்மன் கில் ஒருநாள், மற்றும் டி20 தொடரில் இடம்பெறுவாரா என்பது பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
- ஆசிய கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதின.
- முதலில் ஆடிய பாகிஸ்தான் 19.1 ஓவரில் 146 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
துபாய்:
இந்தியா- பாகிஸ்தான் இடையிலான ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்றின்போது பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஹரிஸ் ராஃப், இந்தியாவின் 6 விமானங்களை பாகிஸ்தான் சுட்டு வீழ்த்தியதை குறிக்கும் வகையில், 6 கைவிரல்களை காட்டினார். மேலும், விமானம் விழுவது போன்று சைகை காட்டினார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அவரது செயலுக்கு போட்டிச் சம்பளத்தில் முப்பது சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டது.
இதற்கிடையே, ஆசிய கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதி வருகின்றன. முதலில் ஆடிய பாகிஸ்தான் 19.1 ஓவரில் 146 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இந்நிலையில், பாகிஸ்தானி ஹரிஸ் ராஃப் விக்கெட்டை போல்டாக்கிய பும்ரா, அதன்பிறகு விமானம் மேலிருந்து கீழே விழுந்து நொறுங்குவதைப் போல சைகை செய்தார்.
ஹரிஸ் ராஃப் செய்கைக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பும்ரா அதே சைகையை செய்தது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
- ஆசிய கோப்பையில் அவர் ஆரம்பத்திலேயே 3 ஓவர்கள் போட்டு விடுகிறார்.
- காயத்தை தவிர்ப்பதற்காகவே பும்ராவை ஆரம்பத்திலேயே சூர்யகுமார் பயன்படுத்தி விடுவதாக முகமது கைப் கூறினார்.
ஆசியக் கோப்பை 2025 தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய அணி பாகிஸ்தான் அணியுடன் வரும் 28-ந் தேதி மோதவுள்ளது.
முன்னதாக இத்தொடரில் இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரம் ஜஸ்ப்ரித் பும்ரா ஓமனுக்கு எதிரான போட்டியில் மட்டும் ஓய்வெடுத்தார். மற்ற அனைத்துப் போட்டிகளிலும் விளையாடினார்.
இருப்பினும் கேப்டன் சூர்யகுமார் அவரை வித்தியாசமாக பயன்படுத்தினார். ரோகித் சர்மா, விராட் கோலி உள்ளிட்ட முந்தைய கேப்டன்கள் அவரை டெத் ஓவர்களில் பயன்படுத்தி எதிரணியை சாய்ப்பதற்காக பவர்பிளேவில் குறைவாக பயன்படுத்துவார்கள்.
அதே சமயம் முதல் ஓவரை ஜஸ்ப்ரித் பும்ரா தான் வீசுவார். ஆனால் முதல் ஓவரை ஹர்திக் பாண்டியாவிடம் கொடுக்கும் சூர்யகுமார் பவர் பிளேவில் பும்ராவை 3 ஓவர்கள் வீச வைத்து விடுகிறார்.
இந்நிலையில் காயத்தை தவிர்ப்பதற்காகவே ஜஸ்ப்ரித் பும்ராவை ஆரம்பத்திலேயே சூர்யகுமார் பயன்படுத்தி விடுவதாக முன்னாள் வீரர் முகமது கைப் குற்றம் சாட்டினார். இது போன்ற நகர்வு டி20 உலகக் கோப்பையில் இந்தியாவுக்கு பின்னடைவைக் கொடுக்கலாம் என்றும் அவர் விமர்சித்தார்.
இது குறித்து கைப் கூறியதாவது:-
ஜஸ்ப்ரித் பும்ரா பொதுவாக ரோகித் தலைமையில் 1, 13, 17, 19-வது ஓவர்களை போடுவார். ஆனால் சூர்யகுமார் தலைமையில் ஆசிய கோப்பையில் அவர் ஆரம்பத்திலேயே 3 ஓவர்கள் போட்டு விடுகிறார்.
இப்போதெல்லாம் காயத்தை தவிர்ப்பதற்காக பும்ரா தன்னுடைய உடல் தயாராக இருக்கும் போதே பவுலிங் செய்ய விரும்புகிறார். ஆனால் எஞ்சிய 14 ஓவர்களில் பும்ரா 1 ஓவர் மட்டுமே வீசுவார் என்பது எதிரணி பேட்ஸ்மேன்களுக்கு மிகப்பெரிய நிவாரணம். இது உலகக்கோப்பை போன்ற தொடர்களில் வலுவான அணிகளுக்கு எதிராக இந்தியாவுக்கு வலியைக் கொடுக்கலாம்.
என்று கூறினார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஜஸ்ப்ரித் பும்ரா "இதற்கு முன்பும் தவறானது. மீண்டும் தவறாக இருக்கிறது" என்று அவருக்கு பதிலடி கொடுத்துள்ளார்.
அதாவது அன்றும் இன்றும் சூழ்நிலைக்கு தகுந்தார் போலவும் கேப்டனின் விருப்பத்திற்கு இணங்க அணிக்காக பந்து வீசுவதாக பும்ரா தெரிவித்துள்ளார்.
- வேலைப்பளு காரணமாக பும்ரா தொடர்ந்து விளையாடுவது கடினம்.
- இங்கிலாந்து தொடரில் கூட 3 போட்டிகளில் மட்டுமே விளையாடினார்.
இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் பும்ரா. இவருக்கு அடிக்கடி காயம் ஏற்படுவதால் தொடர்ந்து விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக ஐந்து நாட்கள் கொண்ட டெஸ்ட் போட்டியில் தொடர்ந்து விளையாட முடியாத நிலை ஏற்பட்டது.
இதனால்தான் ஐந்து போட்டிகள் கொண்ட இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் 3 போட்டிகளில் மட்டுமே விளையாட வைக்கப்பட்டுள்ளார்.
இந்திய அணி அடுத்ததாக ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் விளையாட இருக்கிறது. அதன்பின் இந்திய மண்ணில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக டெஸ்ட் தொடரில் இந்தியா விளையாட இருக்கிறது.
பும்ராவின் வேலைப்பளு (WorkLoad) பெரிய அச்சத்தை ஏற்படுத்தியதால் ஆசிய கோப்பை டி20 மற்றும் டெஸ்ட் தொடரில் தொடர்ச்சியாக விளையாட முடியாது நிலை ஏற்பட்டுள்ளது. இரண்டில் ஒன்றில்தான் விளையாட முடியும்.
இதனால் பும்ராவை ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் விளையாட வைப்பதா? அல்லது வெஸ்ட் இண்டீஸ், தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாட வைப்பதா? என்பது குறித்து தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் மற்றும் தேர்வுக்குழு தலைவர் அகர்கர் ஆகியோர்தான் இறுதி முடிவு எடுப்பார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.
- முன்னணி வேகப்பந்து வீரரான ஜஸ்பிரித் பும்ரா இந்த டெஸ்டில் ஆடுவது உறுதியாகியுள்ளது.
- இங்கிலாந்தில் முரளிதரன் சாதனையை சமன் செய்வார்.
மான்செஸ்டர்:
இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் 4-வது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் உள்ள ஓல்ட் டிரா போர்ட் மைதானத்தில் இன்று தொடங்குகிறது.
5 போட்டிக் கொண்ட டெஸ்ட் தொடரில் சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி 1-2 என்ற கணக்கில் பின்தங்கி இருக் கிறது. இதனால் இந்த டெஸ் டில் வெற்றி பெற வேண்டிய நெருக்கடியில் உள்ளது.
நிதிஷ்குமார் ரெட்டி, ஆகாஷ்தீப், அர்ஷ்தீப் ஆகி யோர் காயம் அடைந்ததால் இந்திய அணியோடு இணைந்துள்ள 24 வயது வேகப்பந்து வீரர் அன் சுதல் கம்போஜ் டெஸ்டில் அறிமுகம் ஆகிறார்.
முன்னணி வேகப்பந்து வீரரான ஜஸ்பிரித் பும்ரா இந்த டெஸ்டில் ஆடுவது உறுதியாகியுள்ளது. இந்த தொடரில் அவர் 5 டெஸ்டில் 3 போட்டியில் மட்டுமே விளையாடுவார் என்று ஏற்கனவே தெரிவிக்கப்பட்டது. அதன்படி அவர் முதல் டெஸ்டிலும், 3-வது டெஸ்டிலும் விளையாடினார். 2-வது டெஸ்டில் இடம் பெறவில்லை. அவர் 2 டெஸ்டில் 12 விக்கெட் கைப்பற்றியுள்ளார்.
இன்று தொடங்கும் 4-வது டெஸ்டில் பும்ரா பல சாதனைகளை படைக்க வாய்ப்பு உள்ளது. 5 விக்கெட் கைப்பற்றினால் புதிய வரலாறு படைப்பார். ஒரு விக்கெட் எடுத்தால் இங்கிலாந்துக்கு எதிராக இங்கிலாந்தில் 50 விக்கெட் கைப்பற்றிய முதல் இந்திய வீரர் என்ற பெருமையை பெறுவார்.
5 விக்கெட் வீழ்த்தினால் இங்கிலாந்தில் அதிக விக்கெட் கைப்பற்றிய ஆசிய வீரர் என்ற சாதனையை படைப்பார். அவர் பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீரர் வாசிம் அக்ரமை (53 விக்கெட்) முந்துவார்.
பும்ரா மேலும் ஒருமுறை 5 விக்கெட்டுக்கு மேல் எடுத்தால் சேனா நாடுகளில் (தென் ஆப்பிரிக்கா , இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா) அதிக முறை (12 தடவை) 5 விக்கெட் எடுத்த முதல் ஆசிய பவுலர் என்ற பெருமையை பெறுகிறார். மேலும் இங்கிலாந்தில் முரளிதரன் சாதனையை சமன் செய்வார்.
- 3 போட்டிகள் முடிவில் 2-1 என்ற கணக்கில் இங்கிலாந்து முன்னிலையில் உள்ளது.
- இங்கிலாந்து இந்தியா அணிகளுக்கு இடையேயான 4-வது டெஸ்ட் வருகிற 23-ந் தேதி தொடங்குகிறது.
இங்கிலாந்து - இந்தியா அணிகளுக்கு இடையேயான ஆண்டர்சன் - டெண்டுல்கர் கோப்பை டெஸ்ட் தொடரின் 4-வது போட்டி எதிர்வரும் ஜூலை 23-ம் தேதி மான்செஸ்டரில் உள்ள ஓல்ட் டிராஃபோர்ட் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதுவரை நடந்த 3 போட்டிகள் முடிவில் 2-1 என்ற கணக்கில் இங்கிலாந்து முன்னிலையில் உள்ளது.
4-வது டெஸ்டில் பும்ரா விளையாடுவாரா இல்லையா என்பது குறித்து சக வீரர் முகமது சிராஜ் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
எனக்குத் தெரிந்தவரை பும்ரா 4-வது டெஸ்ட் போட்டியில் விளையாடுவார். ஆகாஷ் தீப் தற்சமயம் காயத்தில் இருந்து மீண்டு பந்துவீசி வருகிறார். இருப்பினும் மருத்துவ குழு அவரை கண்காணித்து வருகின்றனர். அதனால் எங்களுடைய திட்டத்தை எளிதாக வைத்துள்ளோம். என்று கூறினார்.
- பும்ராவிற்கு பதில் ஆகாஷ் தீப் அணியில் இடம்பிடித்துள்ளார்.
- பும்ரா அணியில் இடம் பெறாதது குறித்து ஸ்டெய்ன் விமர்சனம் செய்துள்ளனர்.
இங்கிலாந்து - இந்தியா அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
இந்திய அணியில் 3 மாற்றங்கள் செய்யப்பட்டது. ஷர்துல் தாகூர், பும்ரா, சாய் சுதர்சன் ஆகியோர் நிக்கப்பட்டு வாஷிங்டன் சுந்தர், நிதிஷ் குமார், ஆகாஷ் தீப் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டனர்.
இந்நிலையில் பும்ரா அணியில் இடம் பெறாதது குறித்து முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெய்ன் விமர்சனம் செய்துள்ளனர்.
இது தொடர்பாக ஸ்டெய்ன் தனது எக்ஸ் பதிவில், "போர்ச்சுகல் அணியில் உலகத்திலேயே தலைசிறந்த ஸ்ட்ரைக்கர் ரொனால்டோ தான். ஆனால் அவர்கள் அவரையே அணியில் விளையாடாமல் இருக்க முடிவு செய்தனர். இது பைத்தியக்காரத்தனம். அதேபோல இந்தியாவும் பும்ராவை அணியில் வைத்துகொண்டே விளையாடாமல் இருக்க முடிவு செய்தனர். எனக்கு இது குழப்பமாக உள்ளது" என்று பதிவிட்டுள்ளார்.
- வாஷிங்டன் சுந்தர், நிதிஷ் குமார், ஆகாஷ் தீப் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டனர்.
- இந்திய அணியின் தேர்வு சர்ப்ரைஸாக இருக்கிறது.
இங்கிலாந்து - இந்தியா அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
இந்திய அணியில் 3 மாற்றங்கள் செய்யப்பட்டது. ஷர்துல் தாகூர், பும்ரா, சாய் சுதர்சன் ஆகியோர் நிக்கப்பட்டு வாஷிங்டன் சுந்தர், நிதிஷ் குமார், ஆகாஷ் தீப் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டனர்.
இந்நிலையில் பும்ரா, சாய் சுதர்சன் ஆகியோர் அணியில் இடம் பெறாதது குறித்து இந்திய அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி விமர்சனம் செய்துள்ளனர்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
இந்திய அணியின் தேர்வு சர்ப்ரைஸாக இருக்கிறது. இது மிக முக்கியமான போட்டி. ஒரு வாரத்துக்கும் மேலாக ஓய்வெடுத்துவிட்டு இந்தப் போட்டிக்கு வருகிறீர்கள். ஆனால், அணியில் பும்ரா இல்லை. இதுதான் எனக்கு சர்ப்ரைஸாக இருக்கிறது.
போட்டியில் ஒரு வீரர் ஆட வேண்டுமா இல்லையா என்பதைக் கேப்டனும் பயிற்சியாளர்களும் மட்டும்தான் முடிவு செய்ய வேண்டும். இது முக்கியமான போட்டி. முதல் போட்டியில் இந்திய அணி தோற்றிருக்கிறது. இந்தப் போட்டியில் இந்திய அணி பதிலடி கொடுக்கவேண்டும். அப்படியிருக்க பும்ரா இந்தப் போட்டியில் களமிறங்கியிருக்க வேண்டும்.
லார்ட்ஸ் போட்டியை பிறகு பார்த்துக் கொள்ளலாம். முதலில் இந்தப் போட்டியில் கவனம் செலுத்தியிருக்க வேண்டும். சாய் சுதர்சனும் இல்லை. அவர் முதல் போட்டியில் நன்றாகத்தான் ஆடியிருந்தார். அவரை ட்ராப் செய்தது ரொம்பவே கடுமையான முடிவு. குல்தீப் யாதவும் அவருடைய வாய்ப்புக்காக இன்னும் காத்திருக்க வேண்டிய சூழலே நிலவுகிறது.
என ரவி சாஸ்திரி கூறினார்.
- லீட்சில் நடைபெற்ற முதல் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
- இங்கிலாந்து - இந்தியா இடையிலான 2-வது போட்டி பர்மிங்காமில் ஜூலை 2-ம் தேதி தொடங்க உள்ளது.
பிர்மிங்காம்:
சுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் லீட்சில் நடைபெற்ற முதல் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 2-வது போட்டி பர்மிங்காமில் ஜூலை 2-ம் தேதி தொடங்க உள்ளது.
இந்நிலையில் 2-வது டெஸ்ட் போட்டியில் ஜஸ்பிரித் பும்ரா விளையாட மாட்டார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இது இந்திய அணிக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
முதல் டெஸ்ட் போட்டியில் அதிக விக்கெட் வீழ்த்திய இந்திய பந்துவீச்சாளராக பும்ரா இருந்தார். முதல் இன்னிங்சில் அவர் ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். 2-வது இன்னிங்சில் விக்கெட் ஏதும் எடுக்கவில்லை. அதே சமயம் அவர் அதிக ஓவர்களையும் அவர் வீசினார்.
இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் 5 போட்டிகளிலும் விளையாட முடியாது என முன்பே அறிவிக்கப்பட்டது. மூன்று போட்டிகளில் தான் அவர் விளையாடுவார் என பிசிசிஐயும் முன்பே தெரிவித்திருந்தது.
எனவே அந்த இரண்டு போட்டிகளிலும் அடுத்தடுத்து விளையாடுவது அவருக்கு அதிக பணிச்சுமையை ஏற்படுத்தும் என்பதால் 2-வது போட்டியின் போது அவருக்கு ஓய்வு அளிக்கப்பட்டிருக்கிறது. லாட்ஸ் மைதானத்தில் நடைபெறும் 3-வது டெஸ்ட் போட்டியின் போது இந்திய அணியில் பும்ரா விளையாடுவார் எனக் கூறப்படுகிறது.
- இந்திய அணி முதல் இன்னிங்சில் 471 ரன்கள் குவித்தது.
- இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 465 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
லண்டன்:
இங்கிலாந்து சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 'ஆண்டர்சன்-தெண்டுல்கர்' கோப்பைக்கான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.
இந்தியா-இங்கிலாந்து இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி லீட்சில் நடந்து வருகிறது. முதலில் ஆடிய இந்திய அணி முதல் இன்னிங்சில் 471 ரன்கள் குவித்தது. கேப்டன் சுப்மன் கில் 147 ரன்னும், ரிஷப் பண்ட் 134 ரன்னும், ஜெய்ஸ்வால் 101 ரன்னும் அடித்தனர்.
அடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 465 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இந்திய அணி சார்பில் பும்ரா 5 விக்கெட்டும், பிரசித் கிருஷ்ணா 3 விக்கெட்டும், சிராஜ் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இந்நிலையில், டெஸ்ட் அரங்கில் 14-வது முறையாக 5 விக்கெட் (46 போட்டி) வீழ்த்தினார் ஜஸ்பிரீத் பும்ரா.
அந்நிய மண்ணில் அதிக முறை 5 விக்கெட் வீழ்த்திய இந்திய பவுலர்களில் முதலிடத்தை பகிர்ந்து கொண்டார்.
ஏற்கனவே கபில் தேவ் 66 போட்டிகளில் 12 முறை 5 விக்கெட் வீழ்த்தியுள்ளார். பும்ரா 34 போட்டிகளில் 12 முறை 5 விக்கெட் வீழ்த்தினார்.
- ஜோ ரூட் 28 ரன்னில் பும்ரா பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.
- ஜோ ரூட்டை அதிகமுறை அவுட் செய்த வீரர்கள் பட்டியலில், ஹசில்வுட் சாதனையை (2வது இடம்) பும்ரா சமன் செய்தார்.
இங்கிலாந்து சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 'ஆண்டர்சன்-தெண்டுல்கர்' கோப்பைக்கான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.
இந்தியா-இங்கிலாந்து இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி லீட்சில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, இந்திய அணி முதல் இன்னிங்சில் 113 ஓவரில் 471 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆனது.
இதையடுத்து, இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சில் களமிறங்கியது. இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 49 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 209 ரன்கள் எடுத்தது.
முன்னதாக ஜோ ரூட் 28 ரன்னில் பும்ரா பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். இதன் மூலம் டெஸ்ட் போட்டிகளில் ஜோ ரூட்டை அதிகமுறை அவுட் செய்த வீரர்கள் பட்டியலில், ஹசில்வுட் சாதனையை (2வது இடம்) சமன் செய்த பும்ரா சமன் செய்தார். ரூட்டை அதிகமுறை விக்கெட் எடுத்த வீரர் பட்டியலில் ஆஸ்திரேலியாவை சேர்ந்த பேட் கம்மின்ஸ் (11 முறை) வீழ்த்தி முதல் இடத்தில் உள்ளார்.
- 31 வயதான பும்ரா தற்போது டெஸ்ட் கிரிக்கெட்டில் நம்பர் 1 பந்து வீச்சாளராக உள்ளார்.
- என்னுடைய குடும்பத்தை பொறுத்தவரை பொறுத்தவரை, நான் ஒரு கிரிக்கெட் வீரர் அல்ல.
ஜஸ்பிரித் பும்ரா தற்போது உலகின் மிகசிறந்த வேகப்பந்து வீச்சாளராக கருதப்படுகிறார். 31 வயதான பும்ரா தற்போது டெஸ்ட் கிரிக்கெட்டில் நம்பர் 1 பந்து வீச்சாளராக உள்ளார்.
இந்நிலையில், தனது கிரிக்கெட் வாழ்க்கைக்கும் தனிப்பட்ட வாழ்க்கைக்கும் இடையிலான சமநிலை குறித்து முன்னாள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் மைக்கேல் கிளார்க்குக்கு அளித்த பேட்டியில் பும்ரா மனம் திறந்து பேசியுள்ளார்.
அந்த நேர்காணலில் பேசிய பும்ரா, "நான் தீவிரமாக 2 விஷயங்களை எடுத்துக் கொள்கிறேன். ஒன்று எனது குடும்பம், மற்றொன்று கிரிக்கெட். ஆனால் எனக்கு, என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையை விட என்னுடைய குடும்பம் முக்கியமானது. ஏனென்றால் குடும்பம் தான் நிலையானது என்பது உங்களுக்குத் தெரியும்,
என்னுடைய குடும்பத்தை பொறுத்தவரை பொறுத்தவரை, நான் ஒரு கிரிக்கெட் வீரர் அல்ல. நான் அவர்களில் ஒருவன், ஒரு மனிதன்" என்று தெரிவித்தார்.






