என் மலர்
நீங்கள் தேடியது "இந்தியா தென் ஆப்பிரிக்கா தொடர்"
- தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 5-வது டி20 போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது.
- இந்த போட்டியில் ஆட்டநாயகனாக ஹர்திக் பாண்ட்யா தேர்வு செய்யப்பட்டார்.
இந்தியா- தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 5-வது மற்றும் கடைசி டி20 போட்டி நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுகளை இழந்து 230 ரன்கள் எடுத்தது.
இதனையடுத்து களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா 201 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் இந்திய அணி 30 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 3-1 என்ற கணக்கில் இந்தியா தொடரையும் கைப்பற்றி அசத்தியது.
முன்னதாக இந்த போட்டியின் போது ஹர்திக் பாண்ட்யா சிக்சர் அடித்த பந்து, பவுண்டரி லைனில் இருந்த கேமரா மேன் மீது பட்டது. இதனையடுத்து அவர் கையில் ஐஸ்பேக் ஒத்தரம் கொடுக்கப்பட்டது. இதனை அறிந்த ஹர்திக் பாண்ட்யா அவரை கட்டியணைத்து காயம் எப்படி இருக்கிறது என்பதை விசாரித்தார். அதற்கு கேமராமேன் அதிர்ஷ்டவசமாக கையில் பட்டது. கொஞ்சம் மேலே பட்டிருந்தால் அவ்வளவு தான் என சிரித்தப்படி கூறினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
- முதலில் ஆடிய இந்தியா 20 ஓவரில் 231 ரன்கள் குவித்தது.
- திலக் வர்மா, ஹர்திக் பாண்ட்யா ஆகியோர் அரை சதமடித்தனர்.
அகமதாபாத்:
இந்தியா, தென் ஆப்பிரிக்கா இடையிலான 5-வது மற்றும் கடைசி டி20 போட்டி அகமதாபாத்தில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட் செய்த இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 231 ரன்கள் குவித்தது. திலக் வர்மா 73 ரன்னும், ஹர்திக் பாண்ட்யா 63 ரன்னும் அடித்தனர்.
தென் ஆப்பிரிக்கா தரப்பில் கார்பின் போஷ் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
அடுத்து ஆடிய தென் ஆப்பிரிக்கா 201 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் இந்தியா 30 ரன் வித்தியாசத்தில் வென்றது.
இந்நிலையில், இந்தப் போட்டியில் தென் ஆப்பிரிக்க பந்துவீச்சை வெளுத்து வாங்கிய ஹர்திக் பாண்ட்யா வெறும் 16 பந்தில் அரை சதம் விளாசினார்.
இதன்மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் குறைந்த பந்துகளில் அரைசதம் விளாசிய 2-வது இந்திய வீரர் என்ற அபிஷேக் சர்மாவின் (17 பந்துகள்) சாதனையை பாண்ட்யா முறியடித்துள்ளார்.
இந்தப் பட்டியலில் யுவராஜ் சிங் முதலிடத்தில் உள்ளார்.
யுவராஜ் சிங் - 12 பந்து
ஹர்திக் பாண்ட்யா - 16 பந்து
அபிஷேக் சர்மா - 17 பந்து
- டி20 பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் வருண் சக்ரவர்த்தி 818 புள்ளிகளை பெற்றுள்ளார்.
- டி20 பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் அதிக புள்ளிகள் பெற்ற வீரர் 8-வது வீரர் ஆவார்.
ஆடவருக்கான தரவரிசை பட்டியலை சிறிய மாற்றத்துடன் ஐசிசி இன்று வெளியிட்டுள்ளது. அதில் டி20 பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி முதலிடத்தில் தொடர்கிறார்.
இந்நிலையில் தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான டி20 தொடரில் சிறப்பாக பந்துவீசிய நிலையில், வருண் சக்ரவர்த்தி 818 புள்ளிகளை பெற்று அசத்தியுள்ளார். இதன் மூலம் டி20 பந்து வீச்சாளர்கள் தரவரிசை புள்ளிகளில் அதிக புள்ளிகள் பெற்ற முதல் இந்தியர் என்ற வரலாற்று சாதனையை வருண் சக்கரவர்த்தி படைத்துள்ளார்.
மேலும் டி20 பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் அதிக புள்ளிகள் பெற்ற வீரர் 8-வது வீரர் என்ற சாதனையை வருண் சக்கரவர்த்தி படைத்துள்ளார். இந்த பட்டியலில் பாகிஸ்தான் வீரர் உமர் குல் (865 புள்ளிகள்) முதல் இடத்தில் உள்ளார்.
டி20 பந்து வீச்சாளர் தரவரிசையில் அதிக புள்ளிகள் பெற்ற வீரர்கள்:-
உமர் குல் (பாகிஸ்தான்) 865
சாமுவேல் பத்ரீ (வெஸ்ட் இண்டீஸ்) 864
டேனியல் வெட்டோரி (நியூசிலாந்து) 858
சுனில் நரைன் (வெஸ்ட் இண்டீஸ்) 832
ரஷித் கான் (ஆப்கானிஸ்தான்) 828
தப்ரைஸ் ஷம்சி (தென்னாப்பிரிக்கா) 827
ஷாஹித் அப்ரிடி (பாகிஸ்தான்) 822
வருண் சக்ரவர்த்தி (இந்தியா) 818
ஷதாப் கான் (பாகிஸ்தான்) 811
வனிந்து ஹசரங்கா (இலங்கை) 809
- தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது.
- இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
இந்தியா, தென் ஆப்பிரிக்கா இடையிலான டி20 தொடரின் 3-வது போட்டி தர்மசாலாவில் நேற்று நடைபெற்றது.
இப்போட்டியில் முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்கா 20 ஓவரில் 117 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. இதை அடுத்து ஆடிய இந்தியா 15.5 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 120 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
இந்நிலையில் இந்த போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரர் அபிஷேக் சர்மா முதல் பந்திலேயே சிக்சரை விளாசினார். இதன் மூலம் சர்வதேச டி20 போட்டிகளில் இன்னிங்சின் முதல் பந்தில் 3 முறை சிக்ஸர் விளாசிய முதல் இந்திய வீரர் என்ற பெருமையை அபிஷேக் சர்மா பெற்றுள்ளார்.
இதற்கு முன்பு ரோகித், ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன் ஆகியோர் தலா ஒருமுறை முதல் பந்தில் சிக்சர் பறக்கவிட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- சாம்சன் தொடக்க வீரராக 3 சதங்கள் அடித்தார்.
- அபிஷேக் சர்மாவுக்கு அடுத்தபடியாக நல்ல சராசரியைக் கொண்ட ஓப்பனிங் பேட்ஸ்மேனாக சாம்சன் தன்னை நிரூபித்தார்.
இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற டி20 போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது. இதனையடுத்து இரு அணிகளுக்கு இடையேயான 2-வது ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி 51 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் சுப்மன் கில் டக் அவுட் ஆகி வெளியேறினார்.
இந்நிலையில் எந்த தவறும் செய்யாத சாம்சனை சொதப்பும் கில்லுக்கு பதிலாக ஓப்பனிங்கில் விளையாட வைக்க வேண்டும் என்று முன்னாள் இந்திய வீரர் ராபின் உத்தப்பா கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
அபிஷேக் சர்மா - சஞ்சு சாம்சன் ஜோடியை மாற்றும் அளவுக்கு என்ன தவறு செய்தார்கள் என்ற கேள்வியை நான் கேட்கிறேன்? சம்சானுக்கு முன் கில் டி20 அணியில் இருந்தார் என்று சூர்யகுமார் செய்தியாளர்கள் சந்திப்பில் சொன்னதை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது.
ஆனால் சாம்சன் வாய்ப்பைப் பெற்ற போது 3 சதங்கள் அடித்தார். அதன் பின்பே அபிஷேக், திலக் வர்மா ஆகியோரும் சதங்களை அடித்தார்கள். எனவே அவருடைய சதம் நமது இளம் வீரர்களை உத்வேகமடைய வைத்துள்ளது. அந்த சமயத்தில் இந்தியாவுக்காக அடுத்த டி20 ஓப்பனர் யார்? என்ற நிலைமையே இருந்தது.
அந்த சூழ்நிலையில் அபிஷேக் சர்மாவுக்கு அடுத்தபடியாக நல்ல சராசரியைக் கொண்ட ஓப்பனிங் பேட்ஸ்மேனாக சாம்சன் தன்னை நிரூபித்தார். இருப்பினும் அவரை மிடில் ஆர்டருக்கு நகர்த்திய நீங்கள் தற்போது மெதுவாக கழற்றி விட்டுள்ளீர்கள். சாம்சன் என்ன தவறு செய்தார்? என்பதே என்னுடைய கேள்வி. தற்சமயத்தில் துணைக் கேப்டனாக இருந்தாலும் கில்லுக்கு எதுவும் வேலை செய்யாததால் அழுத்தத்திற்குள் இருக்கிறார். எனவே பெரிதாக எந்த தவறும் செய்யாத சாம்சனுக்கு வாய்ப்பளிக்க வேண்டும்.
என்று கூறினார்.
- அர்ஷ்தீப்சிங் ஒரு ஓவரில் மட்டும் எக்ஸ்டிரா வகையில் 7 வைடுகளை வாரி வழங்கினார்.
- பும்ரா, அர்ஷ்தீப்சிங் விக்கெட் ஏதும் எடுக்கவில்லை.
இந்தியா- தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 2-வது ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் தென் ஆப்பிரிக்கா அணி 51 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் இந்திய அணி நிறைய தடுமாற்றத்தை சந்தித்தது.
ஆட்டத்தின் 11-வது ஓவரை இந்திய வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப்சிங் வீசினார். பனியின் தாக்கத்தால் பந்து ஈரமானதால் அதை சரியாக பிடித்து வீச முடியாமல் சிரமப்பட்டார். அந்த ஓவரில் மட்டும் எக்ஸ்டிரா வகையில் 7 வைடுகளை வாரி வழங்கினார். இதையும் சேர்த்து அந்த ஓவரில் மொத்தம் 13 பந்துகள் வீசினார்.
இதனை பார்த்த இந்திய பயிற்சியாளர் கவுதம் கம்பீர் டக் அவுட்டில் இருந்து கோபமாக கத்தினார். இது சமூக வலைதளங்களில் வைரலானது.
ஐ.சி.சி.யின் முழு உறுப்பினர் நாடுகளில் ஒரு ஓவரில் அதிக பந்துகள் போட்ட மோசமான பவுலர்களின் வரிசையில் பாகிஸ்தானின் நவீன் உல்-ஹக்கை (கடந்த ஆண்டு ஜிம்பாப்வேக்கு எதிராக ஒரே ஓவரில் 13 பந்து வீசினார்) சமன் செய்தார்.
இந்த ஆட்டத்தில் இந்திய பிரதான வேகப்பந்து வீச்சாளர்கள் பும்ரா, அர்ஷ்தீப்சிங் விக்கெட் ஏதும் எடுக்கவில்லை. இருவரும் இணைந்து மொத்தம் 99 ரன்களை விட்டுக்கொடுத்தது பின்னடைவாக அமைந்தது.
இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவின் தடுமாற்றம் தொடருகிறது. 20 ஓவர் கிரிக்கெட்டில் கடைசி 20 இன்னிங்சில் அவர் ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை.
தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக இந்திய அணியின் 13-வது தோல்வி இதுவாகும். 20 ஓவர் கிரிக்கெட்டில் குறிப்பிட்ட அணிக்கு எதிராக இந்தியா சந்தித்த அதிக தோல்வி இதுதான்.
- அர்ஷ்தீப் சிங் ஒரே ஓவரில் 7 வைடு பந்துகளை வீசினார்.
- 4 ஓவர்கள் பந்துவீசிய அர்ஷ்தீப் சிங் 54 ரன்கள் விட்டுக்கொடுத்தார்
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது. இதனால் தொடர் 1-0 என்ற கணக்கில் இந்தியா முன்னிலை பெற்றுள்ளது.
இன்று பஞ்சாப் மாநிலம் முல்லன்பூரில் 2 ஆவது டி20 போட்டி நடைபெற்று வருகிறது.
இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி தென் ஆப்பிரிக்கா அணி முதலில் பேட்டிங் செய்யவுள்ளது.
அதன்படி முதலில் களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 213 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக டீ காக் 90 ரன்கள் அடித்து அவுட்டானார். இந்திய அணி தரப்பில் வருண் சக்கரவர்த்தி 2 விக்கெட்டும் அக்சர் படேல் 1 விக்கெட்டும் வீழ்த்தினார்.
இந்த போட்டியில் இந்திய பந்துவீச்சாளர் அர்ஷ்தீப் சிங் ஒரே ஓவரில் 7 வைடு பந்துகளை வீசி மோசமான சாதனை படைத்தார்.
அதாவது டி20 போட்டிகளில் ஒரே ஓவரில் அதிக வைடு வீசிய இந்திய வீரர் என்ற மோசமான சாதனையை அர்ஷ்தீப் சிங் படைத்தார். இதற்கு முன்பு கலீல் அகமது 6 வைடு பந்துகளை வீசியதே சாதனையாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
- முதல் பந்திலேயே கேட்ச் கொடுத்து துணை கேப்டன் சுப்மன் கில் கோல்டன் டக் அவுட்டானார்.
- கடந்த போட்டியில் துணை கேப்டன் சுப்மன் கில் 4 ரன்னில் ஆட்டமிழந்தார்.
இந்தியா- தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 2 ஆவது டி20 போட்டி முல்லன்பூரில் நடைபெற்று வருகிறது . இதில் முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்கா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட்டுகளை இழந்து 213 ரன்கள் எடுத்தது.
இதனையடுத்து இந்திய அணி 214 ரன்கள் என்ற இலக்குடன் விளையாடி வருகிறது. இப்போட்டியில் தான் சந்தித்த முதல் பந்திலேயே கேட்ச் கொடுத்து துணை கேப்டன் சுப்மன் கில் கோல்டன் டக் அவுட்டானார்.
முன்னதாக கடந்த போட்டியில் துணை கேப்டன் சுப்மன் கில் 4 ரன்னில் ஆட்டமிழந்தார். சுப்மன் கில் கடைசியாக விளையாடிய 15 போட்டிகளில் ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை. இதில் 3 முறை மட்டும் 30 ரன்களுக்கு மேல் அடித்துள்ளார். கடைசியா விளையாடிய 13 20(9), 10(7), 5(8), 47(28), 29(19), 4(3), 12(10), 37*(20), 5(10), 15(12), 46(40), 29(16), 4(2).
ஆனால் சஞ்சு சாம்சன் தொடக்க வீரராக கடைசி 10 போட்டியில் 3 சதம் விளாசியுள்ளார். இந்நிலையில் தொடர்ந்து இரு சதம் விளாசி அணியின் தொடக்க வீரராக நிரந்தர இடம் பிடித்த சஞ்சு சாம்சனை நீக்கி கில்லை தொடக்க வீரராக களமிறங்கினர். ஆனால் கில் பெரிய அளவில் சாதிக்கவில்லை. சஞ்சுவின் தொடக்க வீரர் இடத்தையும் பரித்துவிட்டு பின் வரிசையில் இறக்கி அவரது நம்பிக்கையை இழக்கும் வண்ணம் செய்தனர். அதனை தொடர்ந்து அணியில் இருந்தே சஞ்சு சாம்சனை தூக்கினர்.
தொடர்ந்து தொடர்ந்து சொதப்பும் கில்லுக்கு பதிலாக சஞ்சு சாம்சனை அணிக்கு கொண்டு வரவேண்டும் என்று ரசிகர்கள் காட்டமாக பதிவிட்டு வருகின்றனர்.
- டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
- அதிகபட்சமாக டீ காக் 90 ரன்கள் அடித்து அவுட்டானார்.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது. இதனால் தொடர் 1-0 என்ற கணக்கில் இந்தியா முன்னிலை பெற்றுள்ளது.
இன்று பஞ்சாப் மாநிலம் முல்லன்பூரில் 2 ஆவது டி20 போட்டி நடைபெற்று வருகிறது.
இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி தென் ஆப்பிரிக்கா அணி முதலில் பேட்டிங் செய்யவுள்ளது.
அதன்படி முதலில் களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 213 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக டீ காக் 90 ரன்கள் அடித்து அவுட்டானார்.
இந்திய அணி தரப்பில் வருண் சக்கரவர்த்தி 2 விக்கெட்டும் அக்சர் படேல் 1 விக்கெட்டும் வீழ்த்தினார்.
- முதல் டி20 போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது.
- இன்று பஞ்சாப் மாநிலம் முல்லன்பூரில் 2 ஆவது டி20 போட்டி நடைபெற்று வருகிறது..
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது. இதனால் தொடர் 1-0 என்ற கணக்கில் இந்தியா முன்னிலை பெற்றுள்ளது.
இன்று பஞ்சாப் மாநிலம் முல்லன்பூரில் 2 ஆவது டி20 போட்டி நடைபெற்று வருகிறது..
இந்நிலையில், முல்லன்பூர் மைதானத்தில் இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங், இந்திய மகளிர் அணி கேப்டன் ஹர்மன்ப்ரீத் ஆகியோர் பெயரில் அமைக்கப்பட்டுள்ள கேலரிகள் இன்று திறக்கப்பட்டது.
- தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது.
- முதல் டி20 போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது. இதனால் தொடர் 1-0 என்ற கணக்கில் இந்தியா முன்னிலை பெற்றுள்ளது.
இன்று 2 ஆவது டி20 போட்டி நடைபெறுகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி தென் ஆப்பிரிக்கா அணி முதலில் பேட்டிங் செய்யவுள்ளது.
- முதல் 2 போட்டிகளிலும் ரன்கள் எடுக்காததால் கடைசி ஒருநாள் போட்டியில் பதட்டமாக இருந்தேன்.
- நான் எப்படி விளையாடலாம், என்ன செய்ய வேண்டும் என்று ரோகித் என்னிடம் விளக்கிக்கொண்டே இருந்தார்.
இந்தியா- தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடர் சமீபத்தில் நடந்து முடிந்தது. இதில் இந்தியா 2-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. இந்த தொடரின் முதல் 2 போட்டிகளில் பெரிய அளவில் விளையாடாத தொடக்க வீரர் ஜெய்ஸ்வால் 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் சதம் அடித்து அசத்தினார்.
இந்நிலையில் கடைசி ஒருநாள் போட்டியில் பேட்டிங் செய்ய தொடங்கிய போது பதட்டமாக இருந்ததாகவும் ரோகித் அடிக்கடி என்னிடம் பேசி விளக்கி கொண்டே இருந்ததாக ஜெய்ஸ்வால் கூறினார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
கடந்த இரண்டு போட்டிகளிலும் ரன்கள் எடுக்காததால் கடைசி ஒருநாள் போட்டியில் நான் பேட்டிங் செய்ய தொடங்கியபோது, பதட்டமாக இருந்தேன். அந்த இன்னிங்சில், நான் எப்படி விளையாடலாம், என்ன செய்ய வேண்டும் என்று ரோகித் என்னிடம் விளக்கிக்கொண்டே இருந்தார்.
நிறைய டாட் பந்துகளை ஆடியதால் அழுத்தத்தில் இருந்தேன், மேலும் ஒரு நல்ல ஸ்ட்ரைக் ரேட்டை பராமரிக்க வேண்டும் என்று யோசிக்க வேண்டியிருந்தது. அப்போது ரோகித் என்னிடம், 'நீ நிதானமாக விளையாடு, நான் ரிஸ்க் எடுக்கிறேன்' என்று சொன்னார். நான் நிலைத்து நின்று விளையாட வேண்டும் என்பதற்காக, அவரே பெரும்பாலான ரிஸ்க்குகளை எடுத்துக்கொண்டார்.
என ஜெய்ஸ்வால் கூறினார்.






