search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "varun chakravarthy"

    • ரஜினிகாந்த்துடன் எடுக்கப்பட்ட புகைப்படங்களை வருண் சக்கரவர்த்தி டுவிட்டரில் பகிர்ந்துள்ளார்.
    • சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்துமுடிந்த இந்த ஆட்டத்தில் வருண் சக்கரவர்த்தி 2 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.

    கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த வருண் சக்கரவர்த்தி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். ஐபிஎல் தொடரில் ஒவ்வொரு ஆட்டத்திலும் குறைந்தபட்சம் 1 விக்கெட்டையாவது வீழ்த்தி விடுகிறார். அசத்தலாக சுழற்பந்து வீசி வரும் வருண் சக்கரவர்த்தி, கொல்கத்தா அணியின் வெற்றிக்கு முக்கியப் பங்களித்து வருகிறார்.

    சிஎஸ்கே, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இடையே 61-வது லீக் ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கடந்த 14-ம் தேதி நடைபெற்றது. நடந்துமுடிந்த இந்த ஆட்டத்தில் வருண் சக்கரவர்த்தி 2 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.

    இந்நிலையில், வருண் சக்கரவர்த்தி நடிகர் ரஜினிகாந்தை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார். இதுதொடர்பாக புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ள அவர்,

    வானத்தில் லட்சக்கணக்கான நட்சத்திரங்களை நாம் தினமும் பார்க்கலாம். ஆனால், சூப்பர் ஸ்டாரை பார்ப்பது வாழ்நாளில் மறக்க முடியாத தருணம். குடும்பத்தில் ஒருவரைப் போல உணர வைக்கும் அளவுக்கு அவர் அன்புடன் பேசினார். லவ் யூ தலைவா" என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார். அவருடன் வெங்கடேஷ் ஐயரும் உடனிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

    • ஏலத்தின் போது வருண் சக்கரவர்த்தியை எடுக்க முடியாமல் போனது எங்களுக்கு இன்னும் வருத்தமாகவே இருக்கிறது.
    • பல்வேறு அணிகளைச் சுற்றியிருக்கும் தமிழக வீரர்களிடம் விஷயம் இருக்கிறது.

    சென்னை:

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சேப்பாக்கத்தில் நடந்த கடைசி லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்சிடம் 6 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது.

    இந்த தோல்விக்கு கொல்கத்தா அணியில் இடம்பெற்ற தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி காரணமாக இருந்தார் அவர் 4 ஓவர் வீசி 36 ரன் கொடுத்து 2 விக்கெட் வீழ்த்தினார். ருதுராஜ் கெய்க்வாட், ரகானே ஆகியோரது விக்கெட்டை கைப்பற்றினார்.

    31 வயதான சென்னையை சேர்ந்த வருண் சக்கரவர்த்தி கடந்த காலங்களில் சி.எஸ்.கே. அணி வீரர்களுக்கு வலை பயிற்சி பந்து வீச்சாளராக திகழ்ந்தார்.

    2019-ம் ஆண்டு ஐ.பி.எல். ஏலத்தில் அவரை பஞ்சாப் கிங்ஸ் அணி ரூ.8.4 கோடிக்கு எடுத்தது. பின்னர் 2020-ம் ஆண்டு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அவரை ரூ.4 கோடிக்கு வாங்கியது. வருண் சக்கரவர்த்தி இந்த சீசனில் இதுவரை 19 விக்கெட் கைப்பற்றி உள்ளார். ஒட்டு மொத்தமாக 61 விக்கெட் வீழ்த்தி உள்ளார்.

    இந்த நிலையில் வருண் சக்கரவர்த்தியை ஏலத்தில் எடுக்காதது இன்னும் வருத்தமாகவே இருக்கிறது என்று பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் கூறியுள்ளார்.

    இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    வருண் சக்கரவர்த்தி எங்கள் அணியின் வலை (நெட்) பயிற்சி பவுலராக சில காலங்களில் இருந்தார். அப்போது அவர் எங்களது பேட்ஸ்மேன்களுக்கு தொந்தரவு அளிக்கும் வகையில் பந்து வீசினார். தற்போது ஐ.பி.எல். போட்டியில் அவர் அபாரமாக பந்து வீசி வருகிறார்.

    கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஏலத்தின் போது வருண் சக்கரவர்த்தியை எடுக்க முடியாமல் போனது எங்களுக்கு இன்னும் வருத்தமாகவே இருக்கிறது.

    பல்வேறு அணிகளைச் சுற்றியிருக்கும் தமிழக வீரர்களிடம் விஷயம் இருக்கிறது.

    இவ்வாறு ஸ்டீபன் பிளமிங் கூறியுள்ளார்.

    • டோனி ரசிகர்களை பார்த்து கையை அசைத்து நன்றி என்று தெரிவித்தார்.
    • முன்னாள் கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர் ஓடி வந்து தன் சட்டையில் டோனிடம் ஆட்டோகிராப் வாங்கினார்.

    16-வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டி மிகவும் விறுவிறுப்பாக இந்தியாவில் பல மாநிலங்களில் நடைபெற்று வருகிறது. சென்னை சேப்பாக்கத்தில் நேற்று லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. இப்போட்டியின் முடிவில் கொல்கத்தா 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 147 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் சென்னையை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

    ஐபிஎல் தொடரில் சேப்பாக்கத்தில் நேற்று நடைபெற்ற ஆட்டம் கடைசி லீக் ஆட்டமாகும். இதனால் போட்டி முடிந்ததும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினர் மைதானத்தில் திரண்டிருந்த ரசிகர்களுக்கு நன்றிகளை தெரிவித்தனர்.

    இதனையடுத்து, டோனி ரசிகர்களை பார்த்து கையை அசைத்து நன்றி என்று தெரிவித்தார். பிறகு டென்னிஸ் பந்துகளை மைதானத்தில் கூடியிருந்த ரசிகர்கள் மீது வீசினார். இதனால் உற்சாகம் அடைந்த ரசிகர்கள் டோனியை பார்த்து ஆர்ப்பரிக்க ஆரம்பித்தனர்.

    டோனி மைதானத்தில் தன் அணியினருடன் நடந்து வந்துக்கொண்டிருந்தபோது முன்னாள் கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர் ஓடி வந்து தன் சட்டையில் டோனிடம் ஆட்டோகிராப் வாங்கினார்.

    இவரையடுத்து, கொல்கத்தா வீரர்கள் ரிங்கு சிங், வருண் சக்கரவர்த்தியும் தன் அணி சட்டையை கொண்டு வந்து டோனியிடம் ஆட்டோகிராஃப் பெற்றனர்.

    சமீபத்தில் டோனி இந்த ஐபிஎல் சீசன் முடிந்ததும் விடை பெற்றுவிடுவாரோ என்று சோகத்தில் ஆழ்ந்த ரசிகர்களுக்கு, திடீரென்று லக்னோ அணிக்கு எதிரான லீக் போட்டியில் 'இது எனது கடைசி ஐபிஎல் சீசன் என நான் சொல்லவில்லை' என்று வர்ணனையாளரிடம் தெரிவித்து ரசிகர்களை இன்ப கடலில் ஆழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    தற்போது ரிங்கு சிங், வருண் சக்கரவர்த்தியும் டோனியிடம் ஆட்டோகிராஃப் வாங்கிய வீடியோ இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.   

    • வருண் சக்கரவர்த்திக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.
    • எனது முதல் ஓவரில் 12 ரன்கள் சென்றது. மார்க்ரம் சில அற்புதமான ஷாட்களை விளையாடினார்.

    ஐதராபாத்:

    ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ஐதராபாத்தில் நேற்று இரவு நடந்த லீக் ஆட்டத்தில் கொல்கத்தா ரைட்ரைடர்ஸ் அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் ஐதராபாத்தை வீழ்த்தியது.

    கொல்கத்தா நிர்ணயித்த 172 ரன் இலக்கை நோக்கி விளையாடிய ஐதராபாத் 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 166 ரன்னே எடுத்தது.

    அந்த அணி வெற்றிக்கு கடைசி ஓவரில் 9 ரன்கள் தேவைப்பட்டது. அந்த ஓவரை வீசிய கொல்கத்தா அணியின் சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்கரவர்த்தி 3 ரன்கள் மட்டுமே விட்டு கொடுத்து ஒரு விக்கெட்டை கைப்பற்றினார்.

    அவர் 4 ஓவர் வீசி 20 ரன்கள் விட்டு கொடுத்து ஒரு விக்கெட் வீழ்த்தினார். அவர் கொல்கத்தா வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார்.

    வருண் சக்கரவர்த்திக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது. அப்போது அவர் கூறியதாவது:-

    எனது இதய துடிப்பு நிமிடத்துக்கு 200-யை தொட்டு விட்டது. ஆனால் நீண்ட தூர பகுதியை மனதில் வைத்து நான் அவர்களுக்கு சவால் அளிக்க விரும்பினேன். அதுதான் எனது திட்டமாக இருந்தது. அது மட்டுமே என் மனதில் இருந்தது. எனது முதல் ஓவரில் 12 ரன்கள் சென்றது. மார்க்ரம் சில அற்புதமான ஷாட்களை விளையாடினார்.

    அதே வேளையில் உங்கள் செயல்பாட்டில் நீங்கள் இருப்பது முக்கியம் உணர்ச்சிகள் எழுந்தவுடன் நமது செயல்முறை மறந்து விடலாம்.

    கடந்த ஆண்டு நான் 85 கி.மீ. வேகத்தில் பந்து வீசினேன். எனவே நான் பல விஷயங்களை முயற்சித்து கொண்டிருந்தேன். அது உண்மையில் உதவுகிறது என்றார்.

    ×