search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Vishnu Vishal"

    • இப்படத்தில் போலீஸ் அதிகாரியாக விஷ்ணு விஷால் நடிக்கிறார்.
    • இப்படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைக்கிறார்.

    விஷ்ணு விஷால் நடிப்பில் அண்மையில் வெளியான 'லால் சலாம்' திரைப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது.

    இதனையடுத்து அவர் ஆர்யன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை பிரவீன் என்பவர் இயக்கி வருகிறார்.

    இன்று விஷ்ணு விஷாலின் பிறந்தநாளை முன்னிட்டு ஆர்யன் படத்தின் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்படத்தில் போலீஸ் அதிகாரியாக விஷ்ணு விஷால் நடிக்கிறார்.

    இப்படத்தில் செல்வராகவன், ஷ்ரத்தா ஸ்ரீநாத் முக்கிய பாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைக்கிறார்.

    இந்தப் படத்தைத் தொடர்ந்து விஷ்ணு விஷால் நடிக்கும் புதிய படத்துக்கு 'ஓர் மாம்பழ சீசனில்' என பெயரிடப்பட்டுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இப்படத்தை வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேஷ் தயாரிக்கிறார்.
    • படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என படக்குழு தெரிவித்துள்ளது.

    விஷ்ணு விஷால் நடிக்கும் அடுத்த படம் குறித்த அப்டேட் வெளியானது. இப்படத்தை 'பேச்சுலர்' பட இயக்குநர் சதீஷ் செல்வகுமார் இயக்குகிறார்.

    விஷ்ணு விஷால் நடிப்பில் அண்மையில் வெளியான 'லால் சலாம்' திரைப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது. இந்தப் படத்தைத் தொடர்ந்து அவர் நடிக்கும் புதிய படத்துக்கு 'ஓர் மாம்பழ சீசனில்' என பெயரிடப்பட்டுள்ளது.

    இப்படத்தை வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேஷ் தயாரிக்கிறார்.

    படத்தில் நடிக்கவுள்ள நடிகர்கள் குறித்தோ, தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்தோ தகவல் வெளியாகவில்லை. இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என படக்குழு தெரிவித்துள்ளது.

    விஷ்ணு விஷால் நடித்துள்ள 'மோகன்தாஸ்' திரைப்படம் விரைவில் திரைக்கு வர உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • ஹைட்ரஜன் பெராக்சைடு சிகிச்சை தொடர்பான சமந்தாவின் இன்ஸ்டாகிராம் பதிவு வைரலானது.
    • மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் யாரும் தாங்களாகவே மருந்துகள் எடுக்கக் கூடாது.

    மயோசிடிஸ் என்ற தசை அழற்சி நோயால் பாதிக்கப்பட்ட நடிகை சமந்தா, சில வருட சிகிச்சைக்குப் பின் தற்போது குணமடைந்துள்ளார். இதனையடுத்து நடிப்பில் அவர் கவனம் செலுத்தி வருகிறார்.

    சமந்தா அடிக்கடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஃபிட்னஸ் தொடர்பான பல்வேறு பதிவுகளை பகிர்ந்து வருகிறார்.

    சமீபத்தில், சமந்தா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் 'நெபுலைசர்' கருவியை தனது மூக்கில் வைத்தவாறு ஒரு புகைப்படத்தை பதிவிட்டிருந்தார். அத்துடன் "ஒரு பொதுவான வைரலுக்கு மருந்து எடுத்துக் கொள்ளும் முன், ஒரு மாற்றுவழியை முயற்சி செய்து பாருங்கள். அதில் ஒரு வழி, ஹைட்ரஜன் பெராக்சைடு மற்றும் காய்ச்சி வடிகட்டிய நீர் ஆகியவற்றின் கலவையுடன் நெபுலைஸ் செய்வது" என்று குறிப்பிட்டிருந்தார்.

    ஹைட்ரஜன் பெராக்சைடு சிகிச்சை தொடர்பான சமந்தாவின் இந்த இன்ஸ்டாகிராம் பதிவு சமூக வலைத்தளங்களில் சர்ச்சையை கிளப்பியது.

    இதனையடுத்து, பலரும் சமூக வலைத்தளங்களில் சமந்தாவை விமர்சிக்க ஆரம்பித்தனர். குறிப்பாக பேட்மிட்டன் வீராங்கனையும் நடிகர் விஷ்ணு விஷாலின் மனைவியுமான ஜுவாலா கட்டா இந்த விவகாரம் தொடர்பாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.

    அதில், 'மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் யாரும் தாங்களாகவே மருந்துகள் எடுக்கக் கூடாது என்று கூறப்பட்டு வரும் நிலையில் சமந்தாவின் இந்த கருத்து ஏற்றுக்கொள்ள கூடியது அல்ல. சமந்தா கூறுவது போல் யாரும் செய்ய வேண்டாம். உடல்நிலை சரியில்லை என்றால் உடனே மருத்துவரை அணுகி அவர்களுடைய அறிவுரையின்படி தான் மருந்துகளை எடுக்க வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.

    இறுதியாக இத்தகைய விமர்சனங்களுக்கு சமந்தா பதில் அளித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், என்னுடைய சொந்த அனுபவத்தை தான் நான் பகிர்ந்தேன். இருப்பினும் பொதுவெளியில் மருத்துவ ஆலோசனைகளை வழங்கும் போது அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்பதையும் அவர் ஒப்புக் கொண்டுள்ளார். 

    • படத்திற்காக ஆர்யா கடுமையாக உடற்பயிற்சி செய்யும் புகைப்படங்களும் வெளியாகின.
    • கடைசி நாள் சூட்டிங்கில் இதை படக்குழு கேக் வெட்டி கொண்டாடும் புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது

    நடிகர்கள் ஆர்யா மற்றும் கவுதம் கார்த்திக் கூட்டணியில் பிரின்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வரும் படம் மிஸ்டர் X. விஷ்ணு விஷாலின் எப்.ஐ.ஆர் படத்தை இயக்கிய மனு ஆனந்த் இந்த படத்தை இயக்கி வருகிறார்.

    ஆக்ஷன் திரில்லர் பாணியில் உருவாகி வரும் இந்த படத்தில் ஆர்யா கதாநாயகனாக நடிக்க முதல் கவுதம் கார்த்திக் வில்லனாக நடித்துள்ளதாக கூறப்படுகிறது. சரத்குமார், மஞ்சு வாரியார் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். திபு நிபுணன் தாமஸ் இசையமைக்கும் இந்த படத்துக்கு தன்வீர் மிர் ஒளிப்பதிவு செய்கிறார்.

     

    இப்படத்தின் படப்பிடிப்பு உகாண்டா, செர்பியா உள்ளிட்ட நாடுகளில் நடந்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. படத்திற்காக ஆர்யா கடுமையாக உடற்பயிற்சி செய்யும் புகைப்படங்களும் வெளியாகின. ஆர்யாவின் காட்சிகள் ஏற்கனவே படம்பிடிக்கப்பட்ட மீதமுள்ள காட்சிகள் படமாக்கப்பட்டு வந்தன. இடையில் படத்தின் மோஷன் போஸ்டரும் வெளியாகியிருந்தது.

     

     

    இந்த நிலையில்தான் படத்தின் படப்பிடிப்பு தற்போது முழுவதுமாக முடிவடைத்துள்ளது. கடைசி நாள் சூட்டிங்கில் இதை படக்குழு கேக் வெட்டி கொண்டாடும் புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது. படத்தைக் குறித்த அடுத்தடுத்த அப்டேட்கள் விரைவில் வெளியாகும் என்று தெரிகிறது. 

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • நடிகர் விக்ரம் ‘சித்தா’ பட இயக்குநர் அருண்குமாருடன் இணையும் புதிய படத்துக்கு ‘வீர தீர சூரன்’ என பெயரிடப்பட்டுள்ளது
    • இந்தப் படத்தை ஹெச்.ஆர்.பிக்சர்ஸ் சார்பில் ரியா ஷிபு தயாரிக்கிறார். படத்துக்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார்

    நடிகர் விக்ரம் 'சித்தா' பட இயக்குநர் அருண்குமாருடன் இணையும் புதிய படத்துக்கு 'வீர தீர சூரன்' என பெயரிடப்பட்டுள்ளது.

    விக்ரமின் 62-வது படமான இதில் எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு, துஷாரா விஜயன் உட்பட பலர் நடிக்கின்றனர். இந்தப் படத்தை ஹெச்.ஆர்.பிக்சர்ஸ் சார்பில் ரியா ஷிபு தயாரிக்கிறார். படத்துக்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார்.

    விக்ரம் பிறந்த நாளை முன்னிட்டு இப்படத்திற்கான சிறப்பு வீடியோ ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது.

    இந்த வீடியோவில் விக்ரமின் தோற்றம் நம் கவனத்தை கவர்கிறது. படத்தின் டைட்டிலில் இரண்டாம் பாகம் என குறிப்பிடப்படுகிறது. இதன் முந்தைய பாகம் அடுத்து வெளியாகும் என தெரிகிறது.

     

    இந்நிலையில் வீர தீர் சூரன் என்ற தலைப்பில் விஷ்ணு விஷால் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கான போஸ்டரை படக்குழு ஏற்கனவே வெளியிட்டுள்ளது. இதனிடையே விக்ரம் படத்திற்கும் இதே தலைப்பு வைக்கப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • கடந்த 2020 ஆம் ஆண்டு விஷ்ணு விஷாலின் அப்பாவான ரமேஷ் குடவாலா மீது 2.7 கோடி ரூபாய் நில மோசடி வழக்கைத் தொடுத்தார் நடிகர் சூரி.
    • விஷ்ணு விஷால் மற்றும் சூரி இணைந்து இதுவரை 7 படங்களில் ஒன்றாக நடித்துள்ளனர்.

    கடந்த 2020 ஆம் ஆண்டு விஷ்ணு விஷாலின் அப்பாவான ரமேஷ் குடவாலா மீது 2.7 கோடி ரூபாய் நில மோசடி வழக்கைத் தொடுத்தார் நடிகர் சூரி. ரமேஷ் குடவாலா தமிழ்நாட்டின் முன்னள் டிஜிபி என்பது குறிப்பிடத்தக்கது.

    விஷ்ணு விஷால் மற்றும் சூரி இணைந்து இதுவரை 7 படங்களில் ஒன்றாக நடித்துள்ளனர். இருவருக்குமான பிரச்சனை நீண்ட நாட்களாக நடந்துக் கொண்டு இருக்கிறது. சமீபத்தில் விஷ்ணு விஷால் நடித்த லால் சலாம் படம் வெளியானது அப்போது நடந்த நேர்காணலில் இந்த பிரச்சனை குறித்து நானும் சூரியும் பேசிக் கொண்டுதான் இருக்கிறோம் என்று கூறினார்.

    இப்பொழுது அதிர்ச்சி அளிக்கும் வகையில் விஷ்ணு விஷால், சூரி மற்றும் ரமேஷ் ஆகியோர் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை விஷ்ணு விஷால் அவரின் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், நேரம் தான் எல்லாவற்றிற்கும் மற்றும் அனைவருக்கும் பதில், லவ் யூ அப்பா என பதிவிட்டுள்ளார்.

    அப்பதிவினை நடிகர் சூரி நடப்பவை எல்லாம் நன்மைக்கே என்ற தலைப்பில் அவரின் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • ஆர்.ஜே பாலாஜி நடிப்பில் 2024 ஆம் ஆண்டு வெளிவந்த சிங்கப்பூர் சலூன் படத்தை கோகுல் இயக்கினார்.
    • படத்தின் தலைப்பை கொரோனா குமாரில் இருந்து வைப் குமார் என்று மாற்றியுள்ளார்.

    இயக்குனர் கோகுல் இயக்கத்தில் 2013 ஆம் ஆண்டு இதற்குத் தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படம் வெளியாகியது. விஜய் சேதுபதி, அஸ்வின், சுவாதி, நந்திதா, பசுபதி போன்ற முன்னணி நடிகர்கள் நடித்தனர். இப்படம் மிகப் பெரிய வெற்றியைக் கொடுத்தது. அடுத்ததாக விஜய் சேதுபதி நடிப்பில் 2018 ஆம் ஆண்டு ஜுங்கா படத்தை இயக்கினார்.

    இதற்கடுத்து 2020 ஆம் ஆண்டு கொரொனா குமார் என்ற படத்தை சிம்பு நடிப்பில் இயக்க இருந்தார். ஆனால் சுழ்நிலைக் காரணமாக அப்படம் கைவிடப்பட்டது. ஆர்.ஜே பாலாஜி நடிப்பில் 2024 ஆம் ஆண்டு வெளிவந்த சிங்கப்பூர் சலூன் படத்தை கோகுல் இயக்கினார்.

    இந்நிலையில் அடுத்ததாக விஷ்ணு விஷால் நடிப்பில் படம் இயக்கவுள்ளார் . சிம்பு முதலில் நடிக்க இருந்த கொரோனா குமார் கதையைதான் இப்பொழுது விஷ்ணு விஷால் நடிப்பில் இயக்க போகிறார். படத்தின் தலைப்பை கொரோனா குமாரில் இருந்து வைப் குமார் என்று மாற்றியுள்ளார். இதற்குத் தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்திற்கும் இப்படத்திற்கும் தொடர்பு இருக்கிறது என கூறியுள்ளார்.

    விஜய் சேதுபதி இப்படத்தில் கவுரவ தோற்றத்தில் நடிப்பார் என்று எதிர்பார்க்க படுகிறது. 

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • இந்நிலையில் மமிதா பைஜு தனது 2-வது தமிழ் படமான VV21-ல் நாயகியாக நடிக்க உள்ளார்
    • முண்டாசுப்பட்டி, ராட்சசன், படங்களுக்குப் பிறகு விஷ்ணு விஷால் - ராம்குமார் மீண்டும் இந்த படத்தில் இணைகின்றனர்.


    மலையாள நடிகை மமிதா பைஜு தனது சமீபத்திய 'பிரேமலு' படத்தின் வெற்றி மூலம் புகழின் உச்சிக்கு சென்றுள்ளார். 

    இந்த படம் பாக்ஸ் ஆபிஸ் சாதனை படைத்து வருகிறது. மேலும் ஜி.வி.பிரகாஷ் நடித்த 'ரெபெல்'படத்தின் மூலம் மமிதா பைஜு தமிழில் அறிமுகமாகி உள்ளார். இந்த படம்

    வருகிற 22 -ந்தேதி வெளியாகிறது. இந்நிலையில் மமிதா பைஜு தனது 2-வது தமிழ் படமான VV21-ல் நாயகியாக நடிக்க உள்ளார். இயக்குனர் ராம்குமார் இயக்கத்தில் நடிகர் விஷ்ணு விஷால் கதாநாயகனாக நடிக்கும் அடுத்த புதிய படத்தின் தற்காலிக தலைப்பு விவி-21.

    முண்டாசுப்பட்டி, ராட்சசன், படங்களுக்குப் பிறகு விஷ்ணு விஷால் - ராம்குமார் மீண்டும் இந்த படத்தில்  இணைகின்றனர்.

    • அவர் நடிக்கும் படத்தில் கதையின் நாயகனாக நடித்ததில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி.
    • தேவையான கருத்தை கிரிக்கெட் மூலமாக இப்படம் பதிவு செய்திருக்கிறது.

    ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் 'லால் சலாம்'. கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவாகி உள்ள இந்த திரைப்படத்தில் விக்ராந்த், விஷ்ணு விஷால் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

    மேலும், இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிகர் ரஜினிகாந்த், முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில்தேவ் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படம் தொடர்பான நிகழ்ச்சி சமீபத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய நடிகர் விஷ்ணு விஷால் படத்தில் நடித்த அனுபவம் குறித்து பேசினார்.

    "திரைத்துறையில் 15 ஆண்டுகளை நிறைவு செய்த தருணத்தில் இந்த படம் எனக்கு ஒரு பரிசாக கிடைத்திருக்கிறது. ரஜினிகாந்த் அவர்களுடன் பலரும் நடிக்க ஏங்கிக் கொண்டிருக்கும் பொழுது அவர் நடிக்கும் படத்தில் அவர் அவருக்கு கீழ் ஒரு கதையின் நாயகனாக நடித்ததில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி."

    "இந்த காலக்கட்டத்திற்கு தேவையான கருத்தை கிரிக்கெட் மூலமாக இப்படம் பதிவு செய்திருக்கிறது. ஒரு இயக்குனராக இந்த கருத்தை படமாக்குவதும் அந்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் போன்ற மிகப்பெரிய ஆளுமை இருப்பதும் மிகுந்த சவால் அளிக்கும் விஷயம். இதை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் திறம்பட செய்து முடித்திருக்கிறார்," என்று தெரிவித்தார். 

    • நடிகர் விஷ்ணு விஷால் ‘லால் சலாம்’ திரைப்படத்தில் நடித்துள்ளார்.
    • இப்படம் பிப்ரவரி 9-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    வளர்ந்து வரும் நடிகர்களுள் ஒருவரான விஷ்ணு விஷால் 'வெண்ணிலா கபடி குழு' திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். 2018-ஆம் ஆண்டு இவர் நடிப்பில் வெளியான சைக்காலஜி த்ரில்லரான ராட்சசன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதைத்தொடர்ந்து பல தடைகளை தாண்டி வெளியான இவரது எஃப் ஐ ஆர் திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.


    விஷ்ணு விஷால்- செல்லா அய்யாவு

    தொடர்ந்து பல வெற்றிப்படங்களை கொடுத்த விஷ்ணு விஷால் தற்போது ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் 'லால் சலாம்' திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படம் 9-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதைத்தொடர்ந்து, சமீபத்தில் விஷ்ணு விஷால், இயக்குனர் செல்லா அய்யாவு படத்தில் நடிக்கவுள்ளதாகவும் இந்த படத்தை விஷ்ணு விஷாலே தயாரிக்கவுள்ளதாகவும் அறிவித்திருந்தார்.


    இந்நிலையில், இவர் தன் அடுத்த படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி, விஷ்ணு விஷால் அடுத்ததாக இயக்குனர் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இந்த படத்தை ரோமியோ பிக்சர்ஸ் தயாரிக்கவுள்ளது. இதனை விஷ்ணு விஷால் தனது சமூக வலைதளத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். மேலும், புகைப்படத்தை பகிர்ந்து 'பெரிய சம்பவம் லோடிங்' என்றும் குறிப்பிட்டுள்ளார்.


    • நடிகர் விஷ்ணு விஷால் நடித்துள்ள திரைப்படம் 'லால் சலாம்'.
    • இப்படத்தில் ரஜினி சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.

    ரஜினிகாந்த் தனது மகள் ஐஸ்வர்யா இயக்கிய 'லால் சலாம்' படத்தில் நடித்துள்ளார். மொய்தீன் பாய் என்ற கதாபாத்திரத்தில் அவர் நடித்துள்ளார். மேலும், இதில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ், விஷ்ணு விஷால், விக்ராந்த் ஆகியோரும் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.


    இந்த படம் கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து தயாராகி உள்ளது. படத்தில் ரஜினியின் அதிரடி சண்டை காட்சிகளும் உள்ளன. இப்படம் பிப்ரவரி 9-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதையடுத்து இப்படத்தின் புரொமோஷன் பணிகளில் படக்குழு ஈடுபட்டுள்ளது.


    இந்நிலையில், நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்ட நடிகர் விஷ்ணு விஷால், "நான் ஒரு தீவிரமான ரஜினி ரசிகன். நான் 'லால் சலாம்' படம் பார்த்தது தெரிந்ததும் ரஜினி சார் என்னை பேச அழைத்தார். அவரிடம் இந்த மாதிரி ஒரு படம் செய்ததற்கு நான் ஒரு ரசிகனாக பெருமைப்படுகிறேன். இந்த தைரியம் யாருக்கும் வராது என்றேன். ரஜினி சார் படம் என்றாலே விசில் அடிக்க வேண்டும், கைத்தட்ட வேண்டும் என்ற எண்ணம் இருக்கும் அது எல்லாமே இந்த படத்தில் அளவாக இருக்கிறது. யாரும் அதை மிஸ் செய்யமாட்டார்கள். இந்த கதாபாத்திரத்தில் நடித்ததற்கு ரஜினி சாருக்கு தலை வணங்குகிறேன்" என்றார். 

    • நடிகர் விஷ்ணு விஷால் கதாநாயகனாக அறிமுகமான திரைப்படம் ‘வெண்ணிலா கபடிகுழு’.
    • இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று பாராட்டை குவித்தது.

    கடந்த 2009-ஆம் ஆண்டு சுசீந்திரன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் 'வெண்ணிலா கபடி குழு'. விஷ்ணு விஷால் இந்தப் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். சூரி, விஜய் சேதுபதி, அப்புக்குட்டி, சரண்யா மோகன் உள்பட பலர் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று பாராட்டை குவித்தது.

    இந்நிலையில், இப்படம் வெளியாகி 15 வருடங்களை கடந்துள்ளதையடுத்து நடிகர் விஷ்ணு விஷால் தனது சமூக வலைதளத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "என் முதல் படமான 'வெண்ணிலா கபடி குழு' வெளிவந்து பதினைந்து வருடங்கள் நிறைவடைந்துள்ளது. என் திரைப்பயணம் முழுக்க ஒரு ரோலர்கோஸ்டர் போல பரபரப்பாகவும், இனிமையாகவும் அமைந்ததில், நான் மிகவும் பெருமைப்படுகிறேன். எனது திரை வாழ்க்கைக்குச் சிறப்பான தொடக்கத்தை அளித்த. என் இயக்குனர் சுசீந்திரன் அவர்களுக்கு, இந்நேரத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.


    திரைப்படங்கள் சமூகத்தில் அழுத்தமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை நான் உறுதியாக நம்புகிறேன். எனக்கு வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம், எனது படங்களின் மூலம் நல்ல கருத்துக்களைப் பார்வையாளர்களுக்கு எடுத்துச் சொல்ல முயன்றுள்ளேன். எனது படங்கள் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தாவிட்டாலும், எந்தவித எதிர்மறையான தாக்கத்தையும் ஏற்படுத்திவிடக் கூடாது என்பதில் நான் தெளிவாக இருக்கிறேன். அந்த வகையில் எனது திரைப்படங்கள் மக்களிடம் பாஸிட்டிவான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன என்பதில் நான் பெருமைப்படுகிறேன்.

    எனது பதினைந்து வருடப் பயணத்தில் எப்போதும் வித்தியாசமாக ஏதாவது செய்யவே முயன்றிருக்கிறேன். இதுவரை நான் நடித்துள்ள 20 படங்களில், பாதிக்கு மேல் தமிழ் சீனிமா ரசீகர்களின் இதயங்களில், என்றென்றும் வாழும் என்பதே எனக்குப் பெருமை.


    என் திரைப்பயணத்தின் இந்த 15-வது ஆண்டு எனக்கு இன்னும் ஸ்பெஷலாக அமைந்துள்ளது. 'லால் சலாம்' எனும் அற்புதமான படத்தில், நம் திரையுலகின் மிகப்பெரிய ஆளுமை மற்றும் சிறந்த மனிதரான, மதிப்பிற்குரிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுடன் திரையைப் பகிர்ந்து கொள்கிறேன். எனது பயணம் சரியான தருணத்திலும் சரியான திசையிலும் உச்சத்தை நோக்கச் செல்வது மகிழ்ச்சி.!

    இந்தப் பயணத்தில் இதுவரை என் மீது நம்பிக்கை வைத்த தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்கள் அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஒவ்வொரு படத்திலும் பணியாற்றிய லைட்மேன்கள் முதல் எனது உதவியாளர்கள் வரை, அனைத்து படக்குழு உறுப்பினர்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.


    என் மீது அன்பும், ஆதரவும் காட்டிய தமிழ் சினிமா ரசிகர்களுக்கு என் இதயம் கனிந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் என் பணிகளை பற்றி, நேர்மையாக விமர்சனங்களைத் தந்து, நான் சரியான திரைப்படங்களைத் தேர்ந்தெடுக்க ஊக்கம் தந்த. விமர்சகர்கள் மற்றும் ஊடகங்களுக்கும் நான் முழு மனதுடன் நன்றி தொவித்துக் கொள்கிறேன்.

    எனது வாழ்வின் ஏற்றத் தாழ்வுகளில், எனக்கு மிகப்பெரும் ஆதரவாக, எனது குடும்பம் இருந்தது. நல்லது கெட்டது இரண்டிலும் எப்போதும் தோள் கொடுக்க முன்வரும் என் பெற்றோர். மனைவி, சகோதரிகள், சகோதரன் மற்றும் என் நண்பர்கள் அனைவருக்கும் நன்றி.


    விஷ்ணு விஷால் அறிக்கை

    அடுத்து வெளிவர இருக்கும் பல சுவாரஸ்யமான படைப்புகளில் நான் இணைந்திருக்கிறேன் என்பது. எனக்கு மிகுந்த உற்சாகத்தைத் தருகிறது. இந்நேரத்தில் ஒன்றை மட்டும் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன் - 'வாழ்க்கை உங்களைச் சோதிக்கும். உங்கள் திறமைக்குப் பலசவால்களைத் தரும். ஆனால் விடாமுயற்சியுடன் தெளிவான நோக்கத்துடன். உங்கள் பணியில் நீங்கள் கவனம் செலுத்தி, வலுவாக நின்றால், வெற்றியை யாராலும் எதனாலும் தடுக்க முடியாது.!" என்று நெகிழ்ச்சியாக குறிப்பிட்டுள்ளார்.


    ×