search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ravi Teja"

    • தெலுங்கு முன்னணி நடிகர் சிரஞ்சீவி நடித்து வரும் திரைப்படம் 'வால்டேர் வீரய்யா'.
    • இப்படத்தில் சிரஞ்சீவியுடன் இணைந்து ரவிதேஜா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்.

    தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான சிரஞ்சீவியின் 154-வது படம் 'வால்டேர் வீரய்யா'. இந்த படத்தை இயக்குனர் பாபி என்கிற கே.எஸ்.ரவீந்திரா இயக்கி வருகிறார். இப்படத்தில் சிரஞ்சீவியுடன் இணைந்து ரவிதேஜா நடிக்கிறார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் நவீன் யெர்னேனி மற்றும் ஒய்.ரவி சங்கர் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர்.

     

    வால்டேர் வீரய்யா

    வால்டேர் வீரய்யா

    இதில் சிரஞ்சீவிக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடிக்கிறார். ஆர்தர்.ஏ.வில்சன் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். இப்படத்தின் முதல் பாடலான 'பாஸ் பார்ட்டி' பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்தது. அதன்படி இப்படம் வருகிற ஜனவரி 13-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

     

    வால்டேர் வீரய்யா

    வால்டேர் வீரய்யா

    இந்நிலையில் இப்படத்தின் புதிய போஸ்டரை படக்குழு வெளியிட்டு, ரவிதேஜா கதாப்பாத்திரத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அதில் இப்படத்தில் ரவிதேஜா விக்ரம் சாகர் என்ற கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரும் எதிர்பார்ப்பில் உருவாகி வரும் இப்படத்தின் போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது.

    • இயக்குனர் வம்சி இயக்கத்தில் ரவி தேஜா நடித்து வரும் படம் 'டைகர் நாகேஸ்வர ராவ்'.
    • இந்த திரைப்படம் பான் இந்தியா திரைப்படமாக உருவாகி வருகிறது.

    இயக்குனர் வம்சி இயக்கத்தில் தெலுங்கு முன்னணி நடிகர் ரவி தேஜா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'டைகர் நாகேஸ்வர ராவ்'. இப்படத்தில் நூபுர் சனோன், காயத்ரி பரத்வாஜ், ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார்.

    மிக பிரமாண்டமாக உருவாகி வரும் இப்படம் தெலுங்கில் மட்டுமல்லாமல் தமிழ், கன்னடம், மலையாளம், இந்தி ஆகிய மொழிகளிலும் உருவாகி வருகிறது.


    ரவி தேஜா

    'டைகர் நாகேஸ்வர ராவ்' 1970-களில் ஸ்டூவர்ட் புரம் என்ற கிராமத்தில் வாழ்ந்த திருடன் என்பதுடன் அவருடைய வாழ்க்கை வரலாற்றை தழுவி இந்த திரைப்படம் உருவாவதால், கதையின் கதாநாயகனாக நடிக்கும் ரவி தேஜா, இந்த கதாபாத்திரத்திற்காக தன்னுடைய உடல் மொழி, வசனம் மற்றும் தோற்றத்தை மாற்றியிருக்கிறார்.

    இந்நிலையில், இந்தப் படத்தில் சிறந்த நடிப்பிற்காக தேசிய விருது பெற்ற பாலிவுட் நடிகர் அனுபம் கேர் இணைந்திருக்கிறார். அழுத்தமான வேடத்தில் நடிக்கவிருக்கும் அனுபம் கேர், 'டைகர் நாகேஸ்வர ராவ்' படத்தின் தயாரிப்பாளரான அபிஷேக் அகர்வால் தயாரித்து வழங்கிய 'தி காஷ்மீர் ஃபைல்ஸ்' எனும் படத்தில் நடித்திருந்தார்.

    அனுபம் கேர் 'டைகர் நாகேஸ்வரராவ்' படத்தின் நட்சத்திர பட்டாளத்தில் இணைந்திருப்பதால் இந்த படத்தை பற்றிய எதிர்பார்ப்பு இந்திய அளவில் அதிகரித்திருக்கிறது.

    விஜய் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான தெறி படத்தின் தெலுங்கு ரீமேக் பணிகள் மீண்டும் தொடங்கியுள்ளது. #Theri #Vijay #ThalapathyVijay
    விஜய் நடிப்பில் வெளியான படம் ‘தெறி’. அட்லி இயக்கத்தில் உருவான இப்படத்தில் எமி ஜாக்சன், சமந்தா என இரண்டு கதாநாயகிகள் நடித்திருந்தனர். ஜி.வி.பிரகாஷ் இசையமைத்த இப்படத்தை கலைப்புலி எஸ்.தாணு தயாரித்திருந்தார். இதில் விஜய் போலீஸ் அதிகாரியாக நடித்திருந்தார்.

    இப்படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. மேலும் வசூலிலும் சாதனை படைத்தது. தற்போது இப்படம் தெலுங்கில் ரீமேக்காக இருக்கிறது என்று ஏற்கனவே செய்திகள் வெளியானது. பின்னர் எந்த அறிவிப்பு வராததால் கைவிடப்பட்டது என்று தகவல் கசிந்தது.



    தற்போது தெறி படத்தின் ரீமேக் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக டோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதில் விஜய் கதாபாத்திரத்தில் ரவி தேஜா நடிக்க இருக்கிறார். எமி ஜாக்சன் கதாபாத்திரத்தில் கேத்ரின் தெரசா நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார்.

    சமந்தா கதாபாத்திரத்தில் நடிக்க முன்னணி நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறதாம். விரைவில் இப்படம் பற்றி முழுவிவரங்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க இருக்கிறார்கள். 
    தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் நடிக்க விரும்புவதாக கூறிய இலியானா, தனது சொந்த விஷயங்கள் குறித்து பேச விரும்பவில்லை என்று கூறியுள்ளார். #Ileana #AmarAkbarAnthony
    தமிழ், தெலுங்கு படங்களின் மூலம் பிரபலமான இலியானா இந்திக்கு சென்ற பிறகு தென்னிந்திய மொழிகளில் நடிப்பதை தவிர்த்தார்.

    இந்தியில் வாய்ப்பு இல்லாமல் போகவே மீண்டும் தெலுங்கில் அமர் அக்பர் ஆண்டனி படம் மூலம் களம் இறங்கி இருக்கிறார். தெலுங்கு படங்களின் இடைவெளி பற்றிக் கூறும் போது, “இந்தியில் அதிக படங்களுக்கு நேரம் ஒதுக்கியதால் தெலுங்கு படங்களுக்கு எனக்கு நேரம் குறைவாகவே கிடைத்தது.

    தெலுங்கு திரைப்படங்களில் நடனமாடுவதற்கும், ஒரு காட்சி பொருளாக இருப்பதற்கும் விரும்பவில்லை. சரியான கதை அம்சமுள்ள திரைப்படத்திற்காக காத்திருக்கும் போது, ‘அமர் அக்பர் ஆண்டனி’ அப்படி அமைந்திருக்கிறது. நான் தமிழ், தெலுங்கு படங்களில் நடிக்க மறுக்கிறேன் என்று பேசுகின்றனர். அது தவறு. இரண்டு மொழிகளிலும் நடிக்கத் தயாராகவே இருக்கிறேன். எனக்குத் திருமணம் ஆகிவிட்டது என்றும், கர்ப்பமாக இருக்கிறேன் என்றும் பலரும் பேசினார்கள். எனது திருமணம், குடும்பம் உள்ளிட்ட சொந்த வி‌‌ஷயங்கள் குறித்து பேச நான் விரும்பவில்லை. நான் 20 வயதில் இருந்தபோது என் நடிப்பு வாழ்க்கையை ஆரம்பித்தேன்.



    பல வருடங்களாக திரைப்படங்களில் எல்லாவற்றையும் செய்தேன். இப்பொழுது 32 வயதாகிறது. என் சிந்தனை செயல்முறை மற்றும் ஆளுமை ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. சில விவேகமான தேர்வுகள் செய்து வருகிறேன். நான் நடிக்கும் படங்களில் பிரதிபலிக்கிறேன். நீண்ட காலமாக நினைவுபடுத்தும் படங்களின் ஒரு பகுதியாகவே இருக்க விரும்புகிறேன்” என்று கூறியுள்ளார். #Ileana #AmarAkbarAnthony

    தெலுங்கில் முன்னணி நாயகியாக வலம் வந்த இலியானா, அமர் அக்பர் ஆண்டனி படத்தின் மூலம் ரீஎன்ட்ரி கொடுப்பதால், தான் விட்ட இடத்தை பிடிப்பேன் என்று கூறியுள்ளார். #IleanaDCruz #AmarAkbarAnthony #RaviTeja
    தெலுங்கில் முன்னணி நாயகியாக வலம் வந்த இலியானா கேடி, நண்பன் ஆகிய தமிழ்ப்படங்களில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களிடம் அறிமுகமானார். பர்பி எனும் படம் மூலம் இந்தியில் நுழைந்த இலியானா அதற்குப்பின் தெலுங்குப் பக்கம் வரவே இல்லை.

    சுமார் 6 ஆண்டுகளுக்குப் பிறகு அமர் அக்பர் ஆண்டனி எனும் படம் மூலம் மீண்டும் தெலுங்கு சினிமாவுக்குத் திரும்பி உள்ளார். ரவிதேஜா நாயகனாக நடித்திருக்கும் இந்தப் படத்தை ஸ்ரீனு வைட்லா இயக்கி உள்ளார். வரும் 16-ம் தேதி இந்தப் படம் வெளியாவதை முன்னிட்டு படக்குழுவினர் புரோமோ‌ஷன் பணிகளில் இறங்கி உள்ளனர். அதன் ஒருபகுதியாக சமீபத்தில் விழா ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.



    இவ்விழாவில் படக் குழுவினர் கலந்து கொண்டனர். அதில் நடிகை இலியானா பேசும்போது, “கடந்த 2012-ம் ஆண்டு இதே ரவிதேஜாவுடன் ‘தேவ்டு செசினா மனசுலு’ என்ற படத்தில் நடித்த பிறகு இப்போது மீண்டும் அதே ரவிதேஜா மூலம் தெலுங்கில் ரீஎன்ட்ரி கொடுத்துள்ளேன். இந்தப் படம் தெலுங்கு சினிமாவில் நான் விட்ட இடத்தைப் பிடித்துத்தரும் என்று நம்புகிறேன்.

    ஆறு வருடங்களுக்கு முன்பு ரவிதேஜாவிடம் இருந்த எனர்ஜி இந்தப் படத்தில் இன்னும் அதிகரித்திருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது” என்றார். #IleanaDCruz #AmarAkbarAnthony #RaviTeja

    ×