search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "T20"

    • மீபத்தில் சர்வதேச கிரிக்கெட் விளையாடுவதில் இருந்து தற்காலிக பிரேக் எடுத்துக் கொண்டார்.
    • பிசிசிஐ அவரது பெயரை மத்திய ஒப்பந்த பட்டியலில் இருந்து நீக்கினர்.

    இந்திய அணி விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேன் இஷான் கிஷன். அவர் சமீபத்தில் சர்வதேச கிரிக்கெட் விளையாடுவதில் இருந்து தற்காலிக பிரேக் எடுத்துக் கொண்டார். ஆனால் அவருக்கு தெரியாது இந்த பிரேக் அவரது வாழ்க்கையை மாற்றப் போகும் தருணம் என்று.

    இஷான் கிஷன் இந்திய அணிக்கு கடைசியாக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆஸ்திரேலயாவை எதிர்த்து கடந்த ஆண்டு நவம்பர் மாதம் விளையாடினார். ஆனால் தனிப்பட்ட காரணத்தால் டெஸ்ட் தொடரில் அவரால் விளையாட முடியவில்லை.

    அதற்கு பிறகு நடைபெற்ற ரஞ்சி டிராபியிலும் இஷான் விளையாட மறுத்தார். இதனால் பிசிசிஐ அவரது பெயரை மத்திய ஒப்பந்த பட்டியலில் இருந்து நீக்கினர்.

    இந்திய அணியின் முன்னாள் தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட், இஷான் மறுபடியும் விளையாட வேண்டும் என்றால், உள்ளூர் போட்டிகளில் நன்றாக விளையாடினால் மட்டுமே அவரால் மீண்டும் அணிக்காக விளையாட முடியும் என கூறியுள்ளார்.

    இது குறித்து சமீபத்தில் இஷான் கிஷன் அளித்த பேட்டியில், "என்னை உள்ளூர் கிரிக்கெட் போட்டியில் நன்றாக விளையாடினால், சர்வதேச போட்டியில் விளையாட முடியும் என கூறினார்கள். ஆனால் உள்ளூர் கிரிக்கெட் போட்டியில் விளையாடுவதற்கு சரியான மனநிலையில் நான் இல்லை. தொடர்ந்து நான் இந்திய அணிக்காக விளையாடி இருக்கலாம். இப்போது வருத்தமாகத் தான் உள்ளது." என்று கூறியுள்ளார்.

    தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான தொடர் மற்றும் ரஞ்சி டிராஃபி போட்டிகளில் விளையாடாத இஷான் கிஷன் இந்தியன் ப்ரீமியர் லீக்கில் இந்தாண்டு தொடக்கத்தில் விளையாடினார். ஆனால் அதில் அவர் நினைத்ததுப் போல் விளையாட முடியவில்லை. இதனால் அவர் டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் அவர் தேர்வு செய்யப்படவில்லை.

    • தென் ஆபிரிக்க அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 189 ரன்கள் குவித்தது.
    • வெற்றிக்கு 2 பந்துகளில் 31 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் கடைசி கட்டத்தில் ஜெமிமா 18 ரன்கள் ஸ்கோர் செய்தார்.

    சென்னை சேப்பாக்கம் மைதானத்தின் எம்.ஏ. சிதம்பரம் அரங்கத்தில் வைத்து நேற்று நடைபெற்ற மகளிர் டி 20 தொடரின் முதல் போட்டியில் இந்திய அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா அபார வெற்றி பெற்றது. போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் இறங்கிய தென் ஆப்பிரிக்க கேப்டன் லாரா வுல்வார்ட்- டன்ஸிம் பிரிட்ஸ் ஜோடி முதல் 7 ஓவரில் 50 ரன்கள் விளாசியது.

     

    தென் ஆப்பிரிக்கா அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 189 ரன்கள் குவித்தது. 190 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் பேட்டிங்கை தொடங்கிய இந்தியா சார்பில் முதலில் களமிறங்கிய ஷபாலி வர்மா, ஸ்மிரிதி மந்தனா ஜோடி முதல் விக்கெட்டுக்கு 56 ரன்கள் குவித்தது. 10 வது ஓவருக்கு பிறகு களமிறங்கிய கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் மற்றும் ஜெமிமா ரோட்ரிக்ஸ் ஜோடி இந்தியாவின் ரன் ரேட்டை உயர்த்தினர்.

     

    வெற்றிக்கு 2 பந்துகளில் 31 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் கடைசி கட்டத்தில் ஜெமிமா 18 ரன்கள் ஸ்கோர் செய்தார். ஆனால் கடைசி ஓவரில் 190 ரன்கள் என்ற இலக்கை எட்ட இந்திய அணிக்கு 21 ரன்கள் தேவையாக இருந்த போதிலும் 9 ரன்கள் மட்டுமே எடுத்து 12 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணியிடம் இந்தியா தோல்வியடைந்தது. 

     

    • இந்தியா, ஆஸ்திரேலியா, தென்ஆப்ரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட எட்டு அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றன.
    • வெஸ்ட் இண்டீஸ் அணியும் உலகக்கோப்பையை தனது சொந்த மண்ணில் தவறவிட்டிருக்கிறது.

    விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாத ஒன்பதாவது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. 20 அணிகள் பங்கேற்றதில் இந்தியா, ஆஸ்திரேலியா, தென்ஆப்ரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட எட்டு அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றன.

    எட்டு அணிகளும் இரண்டு குழுக்களாக பிரிக்கப்பட்டு, சூப்பர் 8 சுற்றில் ஒவ்வொரு அணியும் தங்கள் குழுவில் உள்ள மற்ற மூன்று அணிகளுடன் ஒரு முறை போட்டியிடும் வகையில் அட்டவணை வடிவமைக்கப்பட்டுள்ளது.

    டி20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர் 8 சுற்றில் தென்னாப்பிரிக்கா அணியை எதிர்த்து வெஸ்ட் இண்டீஸ் அணி களமிறங்கியது. இந்த போட்டியில் வெற்றிபெறும் அணி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறும் என்பதால் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு எகிறியது.

    ஆன்டிகுவா மைதானத்தில் தொடங்கிய போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா கேப்டன் மார்க்ரம் பவுலிங்கை தேர்வு செய்தார். இதன்பின் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 135 ரன்களை சேர்த்தது.

    தென் ஆப்பிரிக்கா அணி 16.1 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 124 ரன்களை குவித்தது. இதன் மூலம் தென் ஆப்பிரிக்கா அணி டக்வெர்த் லீவிஸ் முறைப்படி 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. வெஸ்ட் இண்டீஸ் சார்பில் ஆண்ட்ரே ரசல், அல்சாரி ஜோசப் தலா 2 விக்கெட்டுகளையும், ரோஸ்டன் சேஸ் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

    இந்த வெற்றி மூலம் தென் ஆப்பிரிக்கா அணி டி20 உலகக் கோப்பை தொடரின் அரையிறுதி போட்டிக்கு முன்னேறியது. அதேபோல் சொந்த மண்ணில் நடந்த டி20 உலகக்கோப்பை சூப்பர் 8 சுற்றுடன் வெஸ்ட் இண்டீஸ் அணி வெளியேறி இருக்கிறது. அமெரிக்காவும் அரையிறுதி வாய்ப்பை இழந்தது.


    கடந்த 2022ம் ஆண்டு டி20 போட்டி ஆஸ்திரேலியாவில் நடைபெற்றது. ஆஸ்திரேலியா அணியும் தனது டி20 உலகக் கோப்பையை தனது சொந்த மண்ணில் தவறவிட்டது. இதேபோல் இந்த ஆண்டு நடைபெற்ற டி20 போட்டியிலும் வெஸ்ட் இண்டீஸ் அணியும் உலகக்கோப்பையை தனது சொந்த மண்ணில் தவறவிட்டிருக்கிறது.

    இதன்மூலம் போட்டிகளை நடத்தும் நாடுகள் 9-வது முறையாக சாம்பியன் பட்டத்தை வெல்லும் வாய்ப்பை இழந்துள்ளது.

    இந்நிலையில் அடுத்த டி20 உலகக் கோப்பை 2026-ல் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக 30 பந்துகளில் டி20 சதம் விளாசினார் கெயில்.
    • அதிக சிக்ஸர்கள் அடித்தவர்கள் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்தார் சௌஹான்.

    மேற்கிந்தியத் தீவுகளின் முன்னாள் வீரர் கிறிஸ் கெய்லின் அதிவேக டி20 சதம் என்ற சாதனையை இந்திய வம்சாவளி வீரர் சாஹில் சவுகான் முறியடித்துள்ளார்.

    ஐபிஎல் 2013ல் புனே வாரியர்ஸ் இந்தியாவுக்கு எதிராக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக 30 பந்துகளில் டி20 சதம் விளாசினார் கெயில்.

    27 பந்துகளில் சதம் அடித்து கெய்லின் சாதனையை எஸ்டோனியா வீரர் சாஹில் சவுகான் முறியடித்துள்ளார். எபிஸ்கோபியில் நடைபெற்ற சைப்ரஸுக்கு எதிரான சர்வதேச ஆட்டத்தில் அவர் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

    பிப்ரவரி 2024 இல் நேபாளத்திற்கு எதிராக தனது டி20 சதத்தை எட்ட 33 பந்துகளை எடுத்த நமீபிய ஜான்-நிகோல் லோஃப்டி ஈட்டனின் சாதனையை சௌஹான் முறியடித்தார் .

    எஸ்டோனியா மற்றும் சைப்ரஸ் அணிகளுக்கு இடையிலான ஆறு போட்டிகள் கொண்ட தொடரின் இரண்டாவது ஆட்டத்தில், எபிஸ்கோபியில் ஆரடவர்கள் முதலில் பேட் செய்து 191/7 ரன்கள் எடுத்தனர், தரன்ஜித் சிங் வெறும் 17 பந்துகளில் 44 ரன்கள் எடுத்தார். சைப்ரஸ் தரப்பில் சமல் சதுன் 28 ஓட்டங்களையும், எஸ்தோனியா தரப்பில் பிரனய் கீவாலா மற்றும் அர்ஸ்லான் அம்ஜத் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

    இதையடுத்து களமிறங்கிய எஸ்டோனியா அணி ஆறு விக்கெட்டுகள் மற்றும் 7 ஓவர்கள் மீதமுள்ள நிலையில் வெற்றி பெற்றது.

    இந்த போட்டியில் மொத்தமாக 18 சிக்ஸர்களை அடித்து ஆடவர் டி20யில் இன்னிங்ஸில் அதிக சிக்ஸர்கள் அடித்தவர்கள் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்தார் சௌஹான்.

    ஆடவர் டி20யில் இன்னிங்ஸில் இரண்டாவது அதிக சிக்ஸர்களை அடித்தவர் ஆப்கானிஸ்தானின் ஹஸ்ரதுல்லா ஜசாய், அயர்லாந்துக்கு எதிராக 16 சிக்ஸர்களை அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • டி20 உலகக்கோப்பை தொடர் அமெரிக்கா, வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வருகிறது.
    • அப்போட்டியில் 18- வது ஓவரை இங்கிலாந்து சுழற்பந்து வீச்சாளரான ஆதில் ரஷீத் பந்து வீசினார்.

    டி20 உலகக்கோப்பை தொடர் அமெரிக்கா, வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வருகிறது. ஜூன் 8 ஆம் தேதி ஆஸ்திரேலயா மற்றும் இங்கிலாந்து இடையேயான போட்டி கென்சிங்டன் ஓவல் மைதானத்தில் நடந்தது.

    அப்போட்டியில் 18- வது ஓவரை இங்கிலாந்து சுழற்பந்து வீச்சாளரான ஆதில் ரஷீத் பந்து வீசினார். ஆனால் அப்பந்து டெட் பாலாக இருக்கும் என ஆஸ்திரேலிய வீரர் மேத்யூ வேட் அப்பந்தை தவிர்த்தார். ஆனால் அம்பயர் நித்தின் மேனன் அப்பந்தை டெட் பால் என அறிவிக்கவில்லை.

    இதனால் கோபமுற்ற வேட் அம்பயரிடம் வாக்கு வாதத்தில் ஈடுப்பட்டார். கிரிக்கெட் விதிமுறைகளை மீறி அவதூராக பேசி அம்பயரிடம் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டதால் ஐ.சி.சி. சார்பில் ஆஸ்திரேலயா வீரர் வேட் மீது கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    வழக்கமாக அம்பயர்களிடம் வாக்குவாதம் செய்யும் வீரர்களுக்கு போட்டி ஊதியத்தில் குறிப்பிட்ட சதவீதம் அபராதமாக விதிக்கப்படும். எனினும், இந்த சம்பவத்தில் மேத்யூ வேட் தனக்கு அபராதம் விதிக்க வேண்டாம் என்று வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. இதையடுத்து மேத்யூ வேட்-க்கு இரண்டு டிமெரிட் புள்ளிகள் வழங்கப்பட்டது.மேலும் தான் அம்பயரிடம் அவ்வாறு பேசியது தவறுதான் என்று ஒப்புக்கொண்டார்.

    • டி20 உலகக் கோப்பை தொடரில் நடைபெற்ற போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின.
    • முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் கம்ரான் அக்மலை வன்மையாக கண்டித்து அவரது எக்ஸ் தளத்தில் பதிவிட்டார்.

    டி20 உலகக் கோப்பை தொடரில் நடைபெற்ற போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்த போட்டியில் இந்திய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி திரில் வெற்றி பெற்றது.

    இது குறித்து பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரரான கம்ரன் அக்மல் டி20 போட்டி நடக்கும் போது நேரலை நிகழ்ச்சியில் இந்திய கிரிக்கெட் வீரரான அர்ஷ்தீப் சிங்கை ஒரு சீக்கியர் என்பதால் அவரை அவதூராக பேசினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியது.

    முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் கம்ரான் அக்மலை வன்மையாக கண்டித்து அவரது எக்ஸ் தளத்தில் பதிவிட்டார். அதில் "நீங்கள் சீக்கியர்களை பற்றி விமர்சிக்கும் பொழுது அவர்களை பற்றியும் அவர்களது வரலாற்றை பற்றியும் தெரிந்துக் கொண்டு பேசுங்கள். உங்களின் தாய்மார்கள் மற்றும் சகோதிரிகள் கடத்தப்பட்ட போது நேரம் காலம் பார்க்காமல் சீக்கியர்கள் காப்பாற்றினார்கள். அதனால் பேசும் பொழுது வார்த்தையை பார்த்து பேசுங்கள். உங்களை நினைக்கும் போது வெட்க கேடாக இருக்கிறது," என்று பதிவு செய்துள்ளார்.

    இதற்கு பகிரங்க மன்னிப்பு கேட்டு கம்ரன் அக்மல் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில் "நான் சமீபத்தில் சொன்ன கருத்தை நினைத்து வேதனை அடைகிறேன். என்னை மன்னித்து விடுங்கள். என்னுடைய வார்த்தை மரியாதை தக்கதல்ல. எனக்கும் உலகம் முழுவதும் உள்ள சீக்கியர்கள் மீது அளவு கடந்த மரியாதை இருக்கிறது. நான் யார் மனதையும் புண்படுத்தும் நோக்கில் அவ்வாறு பேசவில்லை," என கூறியிருக்கிறார்.

    • டி20 உலகக் கோப்பை தொடரில் நேற்றிரவு நடைபெற்ற போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின.
    • 120 ரன்களை இலக்காக துரத்திய பாகிஸ்தான் அணி கடைசி ஓவர் வரை போராடி தோல்வியை தழுவியது.

    டி20 உலகக் கோப்பை தொடரில் நேற்றிரவு நடைபெற்ற போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 119 ரன்களில் ஆல் அவுட் ஆனது.

    இதைத் தொடர்ந்து 120 ரன்களை இலக்காக துரத்திய பாகிஸ்தான் அணி கடைசி ஓவர் வரை போராடி தோல்வியை தழுவியது. இந்திய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    பாகிஸ்தான் அணி போட்டியில் தோற்றது குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரரான ஷோயப் அக்தர் தனது அதிருப்தியை வெளிப்படுத்தி வீடியோ ஒன்றை எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

    அதில் "இந்த போட்டியில் பாகிஸ்தான் அணி வெற்றி பெற்றிருக்க வேண்டும். இந்தியா 11 ஓவர்கள் முடிவில் 82 ரன்களில்தான் இருந்தார்கள். 160 ரன்கள் அடிக்க நினைத்த இந்திய அணியால் அதை செய்ய இயலவில்லை. ஆனால் பாகிஸ்தானிற்கு அப்படி கிடையாது அவர்கள் எளிதில் வெற்றி பெற்றிருக்கலாம், ரிஸ்வான் இன்னும் கூடுதலாக 20 ரன்கள் எடுத்து இருந்தால் போதுமானதாக இருந்திருக்கும்."

    "இந்த போட்டியில் வெற்றி எளிமையாகவே இருந்தது, கொஞ்சம் மூளையை உபயோகப்படுத்தி இருந்தால் ஜெயித்திருக்கலாம், 47 பந்துகளில் 46 ரன்கள் தேவை. ஃபகர் இன்னும் ஆட்டமிழக்காமல் இருக்கிறான் அப்படி இருந்தும் நம்மால் ஜெயிக்க முடியவில்லை. இது மிகவும் வருத்தமாக இருக்கிறது" என்று அவரது வேதனையையும் அதிருப்தியையும் வெளிப்படுத்தி உள்ளார்.

    இந்த வீடியோவுக்கு அவர், "ஏமாற்றப்பட்டேன், காயமுற்றேன்" போன்ற வார்த்தைகளை நான் பதிவிட தயாராக வைத்திருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்," என தலைப்பிட்டுள்ளார். இந்த வீடியோவை பலர் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

    • லோகன் வான் பெக் 23 ரன்களை சேர்த்தார்.
    • டேவிட் மில்லர் ரன் கவிப்பில் ஈடுபட்டார்.

    டி20 உலகக் கோப்பை தொடரில் நேற்றிரவு நடைபெற்ற போட்டியில் நெதர்லாந்து மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி பேட்டிங்கை தொடங்கிய நெதர்லாந்து அணி 103 ரன்களை சேர்த்தது. நெதர்லாந்து அணி சார்பில் பொறுமையாக விளையாடிய சிப்ராண்ட் 40 ரன்களை சேர்த்தார். இறுதியில் போராடிய லோகன் வான் பெக் 23 ரன்களை சேர்த்தார்.

    இதைத் தொடர்ந்து எளிய இலக்கை துரத்திய தென் ஆப்பிரிக்கா அணி துவக்கத்திலேயே விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அந்த அணியின் துவக்க வீரர்களான ஹென்ட்ரிக்ஸ் 3 ரன்களில் ஆட்டமிழந்தார். இவருடன் களமிறங்கிய குவிண்டன் டி கார் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த கேப்டன் மார்க்ரமும் ரன் ஏதும் எடுக்காமல் வந்த வேகத்தில் நடையை கட்டினார்.

    இதையடுத்து ஸ்டப்ஸ் நிதானமாக ஆடி 33 ரன்களை சேர்த்தார். இவருடன் ஜோடி சேர்ந்த டேவிட் மில்லர் ரன் கவிப்பில் ஈடுபட தென் ஆப்பிரிக்கா அணி 18.5 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 106 ரன்களை குவித்து 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    போட்டி முடிவில் டேவிட் மில்லர் 59 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். நெதர்லாந்து சார்பில் சிறப்பாக பந்துவீசிய கிங்மா மற்றும் வான் பெக் தலா 2 விக்கெட்டுகளையும், பாஸ் டி லீட் 1 விக்கெட் வீழ்த்தினர்.

    • இரு அணிகளும் நேற்று கார்டிப்பில் மூன்றாவது 20 ஓவர் போட்டியில் மோத இருந்தன.
    • 4-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி நாளை ஓவலில் நடக்கிறது.

    கார்டிப்:

    பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து நான்கு ஆட்டம் கொண்ட 20 ஓவர் போட்டித்தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளும் நேற்று கார்டிப்பில் மூன்றாவது 20 ஓவர் போட்டியில் மோத இருந்தன.

    ஆனால் மழை தொடர்ந்து பெய்ததால் ஒரு பந்து கூட வீசாமல் அப்போட்டி கைவிடப்பட்டது. இந்த தொடரில் இங்கிலாந்து 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. முதல் போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது. 2-வது போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்றது. 4-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி நாளை ஓவலில் நடக்கிறது.

    • 3-வது போட்டியில் தென்ஆப்பிரிக்கா 7 விக்கெட் இழப்பிற்கு 163 ரன்கள் சேர்த்தது.
    • வெஸ்ட் இண்டீஸ் 13.5 ஓவரில் 165 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கு முன்னதாக தென்ஆப்பிரிக்கா அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப் பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் விளையாட முடிவு செய்தது.

    ஏற்கனவே நடைபெற்று முடிந்த முதல் இரண்டு போட்டிகளிலும் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.

    இந்த நிலையில் 3-வது மற்றும் கடைசி போட்டி உள்ளூர் நேரப்படி நேற்றிரவு நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் விளையாடிய தென்ஆப்பிரிக்கா 7 விக்கெட் இழப்பிற்கு 163 ரன்கள் சேர்த்தது. கேப்டன் வான் டெர் டுசன் அதிகபட்சமாக 31 பந்தில் 51 ரன்கள் விளாசினார்.

    பின்னர் 164 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ்ட களம் இறங்கியது. தொடக்க வீரர் பிரெண்டன் கிங் 28 பந்தில் 44 ரன்கள் விளாசினார். மற்றொரு தொடக்க வீரர் ஜான்சன் சார்லஸ் 26 பந்தில் 69 ரன்கள் விளாசினார். கைல் மேயர்ஸ் ஆட்டமிழக்காமல் 23 பந்தில் 36 ரன்கள் அடிக்க 13.5 ஓவரில் 165 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    இந்த வெற்றியின் மூலம் வெஸ்ட் இண்டீஸ் தென்ஆப்பிரிக்காவை 3-0 என ஒயிட்வாஷ் செய்தது.

    • கிரிக்கெட் ரசிகர்கள் ஏராளமான பேர் நடராஜனுக்காக ஆதரவு குரல் கொடுத்து வருகின்றனர்
    • மே 25 - ந் தேதி வரை அணியை அப்டேட் செய்வதற்கான கால அவகாசம் உள்ளது.

    டி20 உலக கோப்பைக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே "நடராஜன்" என்ற பெயர் சமூக வலைதளங்களில் டிரெண்டிங்காக மாறியது.

    கிரிக்கெட் ரசிகர்கள் நடராஜனை ஏன் இப்போட்டியில் சேர்க்க வில்லை, தற்போது தேர்வுசெய்யப்பட்ட பவுலர்களை விடவா நடராஜன் மோசமாக பந்து வீசியுள்ளார் என்ற ஆதங்கம் குறித்து இணைய தளத்தில் அதிருப்தியை தெரிவித்து உள்ளனர்.




    இந்நிலையில் இது குறித்து முன்னாள் இந்திய அணி வீரர் சுப்ரமணியம் பத்ரிநாத் கருத்து தெரிவித்து உள்ளார். அவர் கூறியதாவது :-

    டி20 உலகக்கோப்பை போட்டியில் வேகப்பந்து வீச்சாளர்கள் அர்ஷ்தீப் சிங், முகமது சிராஜ், கலீல் அகமது, ஆவேஷ் கான் ஆகிய வீரர்கள் தேர்வுசெய்யப்பட்டுள்ளனர்.

    சரியாக செயல்படாத வீரர்கள் உலகக்கோப்பை போட்டிக்கு செல்கிறார்கள். ஆனால் தமிழ்நாடு வீரர்கள் மட்டும் 2 மடங்கு 'பெர்பாம்' செய்தாலும் இதில் தேர்வுசெய்யப்படாமல் புறக்கணிக்கப்பட்டு உள்ளார்கள்". என பத்ரிநாத் ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளார்.




    மேலும் கிரிக்கெட் ரசிகர்கள் ஏராளமான பேர் நடராஜனுக்காக ஆதரவு குரல் கொடுத்து வருகின்றனர். மே 25 - ந் தேதி வரை அணியை அப்டேட் செய்வதற்கான கால அவகாசம் உள்ளது. இந்நிலையில் இந்திய அணியில் மாற்றங்கள் செய்யப்படுமா என்ற எதிர்ப்பார்ப்பு தற்போது எழுந்துள்ளது.

    • டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் ஜூன் 1 முதல் 29 வரை நடக்க உள்ளது
    • இந்த கிரிக்கெட் போட்டி தொடரில் மொத்தமாக 20 அணிகள் பங்கேற்க உள்ளன.

    டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் போட்டிகள் ஜூன் 1 முதல் ஜூன் 29 வரை நடக்க உள்ளது. லீக் போட்டிகள் அமெரிக்காவிலும், நாக் அவுட் போட்டிகள் வெஸ்ட் இண்டீஸிலும் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது.

    இந்த கிரிக்கெட் போட்டி தொடரில் மொத்தமாக 20 அணிகள் பங்கேற்க உள்ளன. இதில் 4 குரூப்-களாக பிரிக்கப்பட்டு லீக் போட்டிகள் நடத்தப்பட உள்ளன.

    இந்நிலையில் டி20 உலக கோப்பை தொடரில் பங்கேற்க உள்ள 20 அணிகளும் மே 1- ந் தேதிக்குள் 15 வீரர்கள் கொண்ட அணியை அறிவித்து ஐசிசியிடம் சமர்ப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் டி20 உலகக்கோப்பை தொடருக்கான 15 வீரர்கள் கொண்ட நியூசிலாந்து அணியை நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்தது.




    இந்த அணிக்கு கேன் வில்லியம்சன் கேப்டனாக மீண்டும் நியமன செய்யப்பட்டுள்ளார். தொடக்க வீரர்களாக ஃபின் ஆலன், டெவான் கான்வே, ரச்சின் ரவீந்திரா ,

    டேரல் மிட்சல், ஜேம்ஸ் நீஷம், மார்க் சேப்மேன், பிரேஸ்வெல், ஆகியோரும் சேர்க்கப்பட்டு உள்ளனர்.

    மேலும் நட்சத்திர வீரர் கிளென் பிலிப்ஸ் பேக் அப் விக்கெட் கீப்பர், ஸ்பின்னராக சேர்க்கப்பட்டுள்ளார். சுழற்பந்து வீச்சாளர்களாக சான்ட்னர், இஷ் சோதி ஆகியோர் இதில் இடம் பிடித்துள்ளனர்.



    மேலும் வேகப்பந்துவீச்சாளர்களாக போல்ட், சவுதி, ஹென்ரி, ஃபெர்குசன் ஆகியோர் சேர்க்கப்பட்டு உள்ளனர்.4வது முறையாக டி20 உலகக்கோப்பையில் கேன் வில்லியன்சன் கேப்டனாக நியூசிலாந்து அணியை வழி நடத்த உள்ளார்.

    இதற்கு முன் அவரது தலைமையில் நியூசிலாந்து அணி 2016 -ம் ஆண்டு உலக கோப்பை அரையிறுதி சுற்றுக்கும், 2021- ம் ஆண்டு டி20 உலகக் கோப்பையில் இறுதி சுற்றுக்கும், 2022 -ம் ஆண்டு டி20 உலகக்கோப்பையில் அரையிறுதிக்கும் முன்னேறியது குறிப்பிடத்தக்கது.

    ×