இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர்- சிறந்த பீல்டர் விருதை வென்ற ஷ்ரேயாஸ்
Rebecca
இதில் இந்திய அணி 4-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி அசத்தியது. இதனையடுத்து ஒருநாள் தொடர் நடைபெற்றது. இதில் 3-0 என்ற கணக்கில் இங்கிலாந்தை இந்திய அணி ஒயிட் வாஷ் செய்தது.
இந்நிலையில் ஒவ்வொரு தொடரிலும் பீல்டிங் துறையில் சிறந்து விளங்கும் இந்திய வீரருக்கு பி.சி.சி.ஐ. சார்பில் 'இம்பேக்ட் பீல்டர்' விருது வழங்கி கவுரவிக்கப்படுகிறது.
அந்த வகையில் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரின் சிறந்த பீல்டருக்கான விருதை ஷ்ரேயாஸ் ஐயர் தட்டிச் சென்றார். இந்திய அணியின் துணை கேப்டன் சுப்மன் கில் இந்த விருதினை அவருக்கு வழங்கினார்.