என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Glenn Maxwell"

    • மினி ஏலத்தில் பங்கேற்க ஆஸ்திரேலிய வீரர் க்ளென் மேக்ஸ்வெல் தனது பெயரை பதிவு செய்யவில்லை.

    சென்னை:

    19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்கள் மினி ஏலம் வருகிற 16-ந் தேதி அபுதாபியில் நடக்கிறது. இதையொட்டி தக்கவைக்கப்படும் வீரர்கள் மற்றும் விடுவிக்கப்படும் வீரர்களின் பட்டியலை கடந்த 15-ந் தேதி இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் 10 அணிகளும் சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டு இருந்தது.

    அதன்படி ஐ.பி.எல். போட்டியில் பங்கேற்கும் 10 அணிகளும் விடுவித்த வீரர்கள் மற்றும் தக்கவைத்த வீரர்கள் விவரம் அதிகாரபூர்வமாக வெளியிட்டன. மொத்தம் 173 வீரர்கள் தக்க வைக்கப்பட்டு உள்ளனர்.

    இந்த மினி ஏலத்தில் பங்கேற்க ஆஸ்திரேலிய வீரர் க்ளென் மேக்ஸ்வெல் தனது பெயரை பதிவு செய்யவில்லை. ஐ.பி.எல். போட்டிகளில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக விளையாடி வரும் க்ளென் மேக்ஸ்வெல் இந்த ஆண்டு இடம் பெறாதது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    இந்நிலையில் உங்களை மிஸ் செய்யப் போகிறேன் என கடந்த ஆண்டு பஞ்சாப் அணியில் விளையாடிய இந்திய அணி வீரர் யுஸ்வேந்திர சாஹல் தெரிவித்துள்ளார். அதில் உங்களை மிஸ் செய்யப் போகிறேன் maxi bro. மகிழ்ச்சி, குறும்புத்தனம், கேலி பேச்சு... நீங்கள் இல்லாமல் டிரெஸிங் ரூம் முன்பு போல் நிச்சயம் இருக்காது என கூறியுள்ளார்.

    • ஐ.பி.எல். தொடருக்கான மினி ஏலம் துபாயில் வருகிற 16-ந்தேதி நடைபெற உள்ளது.
    • மினி ஏலத்தில் பங்கேற்க 1,355 வீரர்கள் பதிவு செய்துள்ளனர்.

    2026-ம் ஆண்டு நடைபெற உள்ள ஐ.பி.எல். தொடருக்கான மினி ஏலம் துபாயில் வருகிற 16-ந்தேதி நடைபெற உள்ளது. இந்த மினி ஏலத்தில் பங்கேற்க வீரர்கள் பதிவு செய்வதற்கான காலக்கெடு நேற்று முன்தினம் நிறைவடைந்தது. இதனை தொடர்ந்து மினி ஏலத்தில் பங்கேற்க 1,355 வீரர்கள் பதிவு செய்துள்ளனர்.

    இந்த மினி ஏலத்தில் 10 அணிகள் சேர்ந்து 77 பேரை ஏலத்தில் எடுக்கலாம். அதிகபட்சமாக கொல்கத்தா அணியிடம் ரூ.64.30 கோடியும், சென்னை அணியிடம் ரூ.43.40 கோடி பணமும் உள்ளது.

    இந்த நிலையில், ஐ.பி.எல். மினி ஏலத்தில் பங்கேற்க ஆஸ்திரேலிய வீரர் க்ளென் மேக்ஸ்வெல் தனது பெயரை பதிவு செய்யவில்லை. ஆண்ட்ரே ரசல், மேக்ஸ்வெல் போன்ற முன்னணி வீரர்கள் ஏலத்தில் இல்லாததால் மேகரூன் கிரீனுக்கு பல அணிகள் போட்டி போட வாய்ப்பு உள்ளது.

    ஐ.பி.எல். போட்டிகளில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக விளையாடி வரும் க்ளென் மேக்ஸ்வெல் இந்த ஆண்டு இடம் பெறாதது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

    • வருண் சக்கரவர்த்தி பந்து வீச வரும்போதெல்லாம், கிளென் மேக்ஸ்வெல்லின் கால்கள் நடுங்குகின்றன.
    • குறிப்பிட்ட பேட்டர்களை முயல் போல் பிடிக்கிறார்.

    இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான 4ஆவது டி20 போட்டி நேற்று நடைபெற்றது. இதில் முதலில் விளையாடிய இந்தியா 8 விக்கெட் இழப்பிற்கு 167 ரன்கள் எடுத்திருந்தது. பின்னர் 168 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா களம் இறங்கியது. இந்திய வீரர்கள் சிறப்பாக பந்து வீச, ஆஸ்திரேலியா 119 ரன்களில் சுருண்டு 48 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

    இந்த போட்டியில் மேக்ஸ்வெல் வருண் சக்ரவர்த்தி பந்தில் க்ளீன் போல்டாகியுள்ளார். டி20 கிரிக்கெட்டில் வருண் சக்கரவர்த்தி பந்தை 33 முறை எதிர்கொண்டுள்ளார். இதில் 5 முறை அவுட்டாகியுள்ளார்.

    மேக்ஸ்வெல்லை அடிக்கடி அவுட்டாக்கி வரும் வருண் சக்கரவர்த்தியை முன்னாள் வீரரும், இந்திய அணியின் தேர்வாளருமான ஸ்ரீகாந்த் பாராட்டிள்ளார்.

    இது தொடர்பாக ஸ்ரீகாந்தி கூறியதாவது:-

    வருண் சக்கரவர்த்தி பந்து வீச வரும்போதெல்லாம், கிளென் மேக்ஸ்வெல்லின் கால்கள் நடுங்குகின்றன. குறிப்பிட்ட பேட்டர்களை முயல் போல் பிடிக்கிறார் (அவுட்டாக்குகிறார்), குறிப்பாக மேக்ஸ்வெல்லை பார்க்கும்போது, அவர் கேக் துண்டை லபக் என்று விழுங்குவபோல், உடனடியாக அவுட்டாக்குகிறார்.

    இவ்வாறு ஸ்ரீகாந்த் தெரிவித்தார்.

    • ஆஸ்திரேலியா- இந்தியா அணிகள் மோதும் கடைசி ஒருநாள் போட்டி நாளை நடக்கவிருக்கிறது.
    • இதனை தொடர்ந்து இரு அணிகளுக்கு இடையேயான டி20 தொடர் வருகிற 29-ந் தேதி தொடங்குகிறது.

    இந்தியா ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இதில் முதலில் நடந்த போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 2-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா தொடரை கைப்பற்றியது.

    இதனையடுத்து நாளை கடைசி ஒருநாள் போட்டி நடக்கவிருக்கிறது. இதனை தொடர்ந்து இரு அணிகளும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடர் வருகிற 29-ந் தேதி தொடங்குகிறது.

    இந்நிலையில் டி20 தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் அதிரடி ஆல்ரவுண்டர் கிளென் மேக்ஸ்வெல் இணைந்துள்ளார். காயத்தில் இருந்து மீண்டு வந்த அவர், முதல் 2 டி20 போட்டிகளில் விளையாடவில்லை. கடைசி 3 போடிகளில் மட்டுமே விளையாட உள்ளார்.

    இது இந்தியாவுக்கு சோக செய்தியாக அமைந்துள்ளதாக கருதப்படுகிறது. எனென்றால் அவர் இந்தியாவுக்கு எதிராக மட்டும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த கூடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ஆஸ்திரேலியா- நியூசிலாந்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளது.
    • இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டி20 போட்டி நாளை நடக்கிறது.

    ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுவதற்காக நியூசிலாந்து சென்றுள்ளது. இரு அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டி அக்டோபர் 1-ந் தேதி நடக்கிறது.

    இந்த தொடருக்காக ஆஸ்திரேலியா அணியில் இடம் பெற்றிருந்த அதிரடி ஆல் ரவுண்டர் கிளென் மேக்ஸ்வெல் காயம் காரணமாக இந்த தொடரில் இருந்து விலகி உள்ளார்.

    மேலும் அவருக்கு பதிலாக ஜோஷ் பிலிப் அணியில் இடம் பெற்றுள்ளார்.    

    • ஆஸ்திரேலியா 20 ஓவரில் 178 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது.
    • அந்த அணியின் டிம் டேவிட் 52 பந்தில் 83 ரன் குவித்தார்.

    டார்வின்:

    ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா இடையிலான முதல் டி20 போட்டி டார்வினில் நேற்று நடைபெற்றது. முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா 20 ஓவரில் 178 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. டிம் டேவிட் 52 பந்தில் 83 ரன் குவித்தார்.

    தென் ஆப்பிரிக்கா சார்பில் மபாகா 4 விக்கெட்டும், ரபடா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    அடுத்து இறங்கிய தென் ஆப்பிரிக்காவில் முன்னணி வீரர்கள் விரைவில் அவுட்டாகினர். தென் ஆப்பிரிக்கா சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது.

    ஆனால் தொடக்க ஆட்டக்காரர் ரிக்கல்டன் அணியின் வெற்றிக்காகப் போராடினார். வெற்றிக்கு கடைசி ஓவரில் 21 ரன் தேவைப்பட்ட நிலையில் ரிக்கல்டன் இருந்ததால் அந்த அணிக்கு வெற்றி மேல் நம்பிக்கை இருந்தது.

    கடைசி ஓவரின் முதல் பந்தில் ரன் எதுவும் அடிக்கவில்லை. 2-வது பந்தை ரிக்கல்டன் தூக்கி அடித்தார். சிக்சர் செல்லும் என நினைத்த நிலையில், பவுண்டரி லைனில் பீல்டிங் செய்த மேக்ஸ்வெல் அதனை அந்தரத்தில் பாய்ந்து பிடித்தார். தரையில் கால் படும் முன் பந்தை பவுண்டரி எல்லைக்கு உள்ளே தூக்கி வீசிய அவர், தரை இறங்கியதும் பவுண்டரிக்கு வெளியே இருந்து தாவி அற்புதமாக கேட்ச் பிடித்தார். இது ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்தது. இந்த வீடியோ இணைய தளத்தில் வைரலாகி வருகிறது.

    • மேக்ஸ்வெல் இதுவரை 149 ஒருநாள் போட்டிகளை விளையாடியுள்ளார்.
    • சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் அவர் 3,990 ரன்களை விளாசியுள்ளார்.

    சர்வதேச ஒருநாள் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக ஆஸ்திரேலிய வீரர் க்ளென் மேக்ஸ்வெல் அறிவித்துள்ளார்.

    2012ஆம் ஆண்டு சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அறிமுகமான மேக்ஸ்வெல் இதுவரை 149 ஒருநாள் போட்டிகளை விளையாடியுள்ளார். அதில், 126.7 ஸ்ட்ரைக் ரேட்டுடன் 3,990 ரன்களை விளாசியுள்ளார். இதில் 23 அரைசதங்களும் அடங்கும். பேட்டிங் மட்டுமில்லாமல் பந்துவீச்சிலும் சிறப்பாக செயல்பட்ட மேக்ஸ்வெல் 77 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

    குறிப்பாக கடந்த உலகக்கோப்பையில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக காலில் காயம் ஏற்பட்ட நிலையிலும் 201 ரன்களை எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தது ஒருநாள் கிரிக்கெட்டின் மிக சிறந்த இன்னிங்ஸ்களில் ஒன்று என்று பாராட்டப்பட்டது.

    தனது ஓய்வு முடிவு குறித்து பேசிய மேக்ஸ்வெல், "2027ஆம் ஆண்டு நடக்கும் ஒருநாள் உலகக்கோப்பை வரை தனது உடல் ஒருநாள் போட்டிகளில் ஒத்துழைக்காது. தான் அணியில் இருப்பது ஆஸ்திரேலியா அணிக்குதான் பின்னடைவுதான். அதனால் தான் ஒருநாள் போட்டிகளில் தனது ஓய்வை அறிவிக்கிறேன்" என்று தெரிவித்தார்.

    அதே சமயம் 2026 ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெறும் 20 ஓவர் உலகக்கோப்பையில் விளையாடுவேன் என்று மேக்ஸ்வெல் தெரிவித்துள்ளார்.

    • சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் தொடரில் இருந்து வெளியேறின.
    • காயம் காரணமாக எஞ்சிய தொடரில் இருந்து மேக்ஸ்வெல் விலகினார்.

    புதுடெல்லி:

    18-வது ஐ.பி.எல். தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இதுவரை 53 லீக் ஆட்டங்கள் நடந்து முடிந்துள்ளன.

    இந்த லீக் ஆட்டங்களின் முடிவில் முன்னாள் சாம்பியன்களான சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் தொடரில் இருந்து வெளியேறின.

    மேலும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, மும்பை இந்தியன்ஸ், குஜராத் டைட்டன்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் புள்ளிப்பட்டியலில் முதல் 4 இடங்களில் உள்ளன. கடந்த சீசன்களில் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த பஞ்சாப் கிங்ஸ் தற்போது ஷ்ரேயாஸ் அய்யர் தலைமையில் சிறப்பாக ஆடி வருகிறது.

    நடப்பு சீசனில் பஞ்சாப் அணியில் இடம்பிடித்திருந்த ஆஸ்திரேலிய ஆல் ரவுண்டர் மேக்ஸ்வெல் விரலில் ஏற்பட்ட எலும்பு முறிவு காரணமாக எஞ்சிய தொடரில் இருந்து வெளியேறினார்.

    இந்நிலையில், மேக்ஸ்வெல்லுக்கு பதிலாக ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஆல்ரவுண்டர் மிட்செல் ஓவனை ரூ.3 கோடிக்கு பஞ்சாப் அணி ஒப்பந்தம் செய்துள்ளது.

    • மேக்ஸ் வெல் இந்த தொடரில் இதுவரை 7 போட்டிகளில் வெறும் 48 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார்.
    • பஞ்சாப் கிங்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் 2வது இடத்துக்கு முன்னேறி அசத்தியுள்ளது.

    நடப்பு ஐபிஎல் தொடரில் எழுச்சி பெற்றுள்ள பஞ்சாப் கிங்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் 2வது இடத்துக்கு முன்னேறி அசத்தியுள்ளது.

    இந்நிலையில், பஞ்சாப் கிங்ஸ் அணியில் விளையாடி வந்த மேக்ஸ்வெல் விரலில் ஏற்பட்ட எலும்பு முறிவு காரணமாக நடப்பு ஐ.பி.எல். தொடரில் இருந்து முழுமையாக விளக்கியுள்ளதாக அந்த அணியின் கேப்டன் ஷ்ரேயாஸ் தெரிவித்தார்.

    மேக்ஸ் வெல் இந்த தொடரில் இதுவரை 7 போட்டிகளில் வெறும் 48 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். அதே சமயம் 13 ஓவர்கள் பந்துவீசி 4 விக்கெட்டுகளையும் அவர் வீழ்த்தியுள்ளார்.

    • குஜராத் அணி கேப்டன் சுப்மன் கில் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தார்.
    • பஞ்சாப் அணியின் ஷ்ரேயாஸ் ஐயர் அரை சதமடித்து அசத்தினார்.

    அகமதாபாத்:

    ஐபிஎல் 2025 சீசனின் 5-வது போட்டி குஜராத்தின் அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

    இதில் குஜராத் டைட்டன்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதி வருகின்றன. இதற்கான டாஸ் சுண்டப்பட்டது. குஜராத் அணி கேப்டன் சுப்மன் கில் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தார்.

    அதன்படி, பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் களமிறங்கியது. இதில், பஞ்சாப் அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 243 ரன்களை எடுத்தது.

    இதற்கிடையே, ஆட்டத்தின் 11வது ஓவரில் களமிறங்கிய கிளென் மேக்ஸ்வெல் முதல் பந்தில் டக் அவுட்டாகி வெளியேறினார்.

    இந்நிலையில், பஞ்சாப் வீரர் கிளென் மேக்ஸ்வெல் 19வது முறையாக டக் அவுட்டாகி ஐ.பி.எல். வரலாற்றில் அதிக முறை டக் அவுட்டான வீரர் என்ற மோசமான சாதனையை படைத்தார்.

    • 15 பேர் கொண்ட ஆஸ்திரேலிய அணியில் மாற்று விக்கெட் கீப்பர் கிடையாது.
    • ஒரு வேளை மேத்யூ வேட் கீப்பிங் பன்ன முடியாமல் போனால் மேக்ஸ்வெல் அல்லது டேவிட் வார்னர் அந்த பணியை கவனிப்பார்கள்.

    மெல்போர்ன்:

    20 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட்டில் இன்று (வெள்ளிக்கிழமை) சூப்பர்12 சுற்றில் இரண்டு லீக் ஆட்டங்கள் நடக்கின்றன. மெல்போர்னில் இந்திய நேரப்படி காலை 9.30 மணிக்கு நடக்கும் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான்-அயர்லாந்து அணிகள் மோதுகின்றன.

    இதைத் தொடர்ந்து இதே மைதானத்தில் பிற்பகல் 1.30 மணிக்கு நடக்கும் மற்றொரு ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி, ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்துகிறது. தலா ஒரு வெற்றி, ஒரு தோல்வியுடன் உள்ள இவ்விரு அணிகளுக்கும் இந்த ஆட்டத்தின் முடிவு மிகவும் முக்கியமானது. தோற்கும் அணிக்கு அரைஇறுதி வாய்ப்பு கேள்விக்குறியாகி விடும்.

    ஆஸ்திரேலிய அணிக்கு திடீர் பின்னடைவாக அந்த அணியின் விக்கெட் கீப்பர் மேத்யூ வேட் லேசான அறிகுறியுடன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். 15 பேர் கொண்ட ஆஸ்திரேலிய அணியில் மாற்று விக்கெட் கீப்பர் கிடையாது. அதனால் மேத்யூ வேட் கொரோனா தொற்றுடன் களம் இறங்குவார் என்று தெரிகிறது. ஒரு வேளை முடியாமல் போனால் மேக்ஸ்வெல் அல்லது டேவிட் வார்னர் அந்த பணியை கவனிப்பார்கள். நேற்று சிறிது நேரம் மேக்ஸ்வெல் விக்கெட் கீப்பிங் பயிற்சியில் ஈடுபட்டதை பார்க்க முடிந்தது.

    இன்னொரு பக்கம் மழையும் அச்சுறுத்திக்கொண்டிருக்கிறது. மெல்போர்னில் இன்று மழை பெய்வதற்கு 90 சதவீதம் வாய்ப்பிருப்பதாக அங்குள்ள வானிலை ஆய்வு மையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    • பிராவோவுக்கு கீழ் பயிற்சி செய்யும் போது இளம் பந்துவீச்சாளர்கள் நம்பிக்கையை பெறுவார்கள் என நம்புகிறேன்.
    • டுபிளசிஸ் மற்றும் மேக்ஸ்வெல் இருவரும் தொடர்ந்து விளையாடி இருந்தால் அவர்கள் 18-வது ஒவரின் முடிவிலே போட்டியை வென்றிருப்பார்கள்.

    பெங்களூரு:

    ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று சிஎஸ்கே - ஆர்சிபி அணிகள் மோதியது. இந்த போட்டியில் இந்த போட்டியில் சிஎஸ்கே அணி 227 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்திருந்தது.

    இதனை அடுத்து களமிறங்கிய ஆர்சிபி அணி 191 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து வெற்றியின் அருகே இருந்த நிலையில் சிஎஸ்கே அணியின் அபார பந்துவீச்சால் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து 8 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

    இந்த நிலையில் வெற்றி குறித்து சிஎஸ்கே கேப்டன் டோனி கூறியிருப்பதாவது:-

    பெங்களூரு பேட்டிங்கிற்கு சாதகமான ஆடுகளம். இரவு நேரத்தில் பனிப்பொழிவும் இருக்கும். இதற்கு தகுந்தார் போல் உங்கள் மனதை நீங்கள் மாற்றிக் கொண்டு விளையாட வேண்டும். நாம் 220 ரன்களுக்கு மேல் இலக்கை நிர்ணயித்து விட்டோம் என்றால் இரண்டாவது பேட்டிங் செய்யும் அணி அதிரடியாக ஆடுவார்கள் என்பது தெரியும்.

    டுபிளசிஸ் மற்றும் மேக்ஸ்வெல் இருவரும் தொடர்ந்து விளையாடி இருந்தால் அவர்கள் 18-வது ஒவரின் முடிவிலே போட்டியை வென்றிருப்பார்கள். நான் விக்கெட் கீப்பராக களத்திற்கு பின்னால் நின்று ஆடுகளம் எவ்வாறு செயல்படுகிறது என்பதை கவனித்துக் கொண்டு இருந்தேன்.

    நான் போட்டியின் முடிவு குறித்து யோசிக்காமல் ஆட்டத்தில் என்னென்ன மாற்றங்களை செய்ய வேண்டும்? பந்துவீச்சாளர்களை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை தான் யோசிப்பேன். இதனை நாம் சரியாக செய்தால் முடிவுகள் நமக்கு தகுந்தாற்போல் வரும். எங்கள் அணியில் இளம் பந்துவீச்சாளர்கள் அதிக அளவு இருக்கிறார்கள். நிச்சயமாக இது போன்ற சூழலில் பந்து வீசும் போது அவர்களுக்கு கடினமாக இருக்கும்.

    இருப்பினும் எங்கள் வீரர்கள் கடுமையாக உழைத்து வருகின்றனர். பிராவோ கீழ் அவர்கள் பயிற்சி செய்யும் போது இளம் பந்துவீச்சாளர்கள் நம்பிக்கையை பெறுவார்கள் என நம்புகிறேன்.

    இவ்வாறு டோனி கூறினார்.

    ×