என் மலர்

    நீங்கள் தேடியது "Glenn Maxwell"

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • நாளைய போட்டியில் அஸ்வினுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    • உலகக்கோப்பை போட்டிக்கான அணியில் இடம் பிடித்துள்ள சில வீரர்களுக்கு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இத்தொடர் பயன் உள்ளதாக இருக்கும்.

    மொகாலி:

    கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து மூன்று ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது.

    முதல் போட்டி நாளை மொகாலியில் நடக்கிறது. 2-வது போட்டி 24-ந்தேதி இந்தூரிலும், 3-வது மற்றும் கடைசி போட்டி 27-ந்தேதி ராஜ்கோட்டிலும் நடக்கிறது. இப்போட்டிகள் அனைத்தும் மதியம் 1.30 மணிக்கு தொடங்குகிறது.

    முதல் 2 ஆட்டங்களில் கேப்டன் ரோகித் சர்மா, விராட்கோலி, ஹர்த்திக் பாண்ட்யா, குல்தீப் யாதவ் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. லோகேஷ் ராகுல் கேப்டனாக நியமிக்கபட்டுள்ளார்.

    அஸ்வின் அணிக்கு திரும்பியுள்ளார். பேட்டிங்கில் சுப்மன்கில், ருதுராஜ் கெய்க்வாட், இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், திலக்வர்மா, ஸ்ரேயாஸ் அய்யர் ஆகியோர் உள்ளனர்.

    பந்து வீச்சில் பும்ரா, முகமது சிராஜ், முகமது சமி, பிரசித் கிருஷ்ணா உள்ளனர். ஆல்-ரவுண்டர்கள் ஷர்துல் தாக்கூர், வாஷிங்டன் சுந்தர் உள்ளனர். நாளைய போட்டியில் அஸ்வினுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உலகக்கோப்பை போட்டிக்கான அணியில் இடம் பிடித்துள்ள சில வீரர்களுக்கு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இத்தொடர் பயன் உள்ளதாக இருக்கும். இதனால் அவர்கள் சிறப்பாக விளையாட முயற்சிப்பார்கள்.

    ஆஸ்திரேலிய அணி, சமீபத்தில் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடரில் விளையாடி விட்டு இந்தியா வந்து உள்ளது. டேவிட் வார்னர், லபுஸ்சேன், மேத்யூ ஷார்ட், மிட்செல் மார்ஷ், ஸ்டோனிஸ், கேமரூன் கிரீன், ஹேசல்வுட், ஆடம் ஜம்பா, நாதன் எல்லிஸ் ஆகிய வீரர்கள் உள்ளனர்.

    உலகக்கோப்பை போட்டிக்கு தயாராகுவதற்கு இந்த தொடர் உதவியாக இருக்கும் என்பதால் இரு அணி வீரர்களும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் முனைப்பில் உள்ளனர்.

    இந்நிலையில் இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இருந்து ஆஸ்திரேலிய அணியின் மிட்செல் ஸ்டார்க் மற்றும் மேக்ஸ்வெல் ஆகியோர் விலகி உள்ளனர்.

    இரு அணி வீரர்கள் விபரம் வருமாறு:-

    இந்தியா:- லோகேஷ் ராகுல் (கேப்டன்), ரவீந்திர ஜடேஜா (துணை கேப்டன்), ருதுராஜ் கெய்க்வாட், சுப்மன்கில், ஸ்ரேயாஸ் அய்யர், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, இஷான்கிஷன் ஷர்துல் தாகூர், வாஷிங்டன் சுந்தர், அஸ்வின், பும்ரா, முகமது சமி, முகமது சிராஜ், பிரசித்கிருஷ்ணா.

    ஆஸ்திரேலியா:- கம்மின்ஸ் (கேப்டன்), டேவிட் வார்னர், ஸ்டீவன் சுமித், மிட்செல் மார்ஷ், லபுஸ்சேன், ஸ்டோனிஸ், அலெக்ஸ் கேரி, மேக்ஸ்வெல், ஜோஷ் இங்கிலிஸ், மேத்யூ ஷார்ட், கேமரூன் கிரீன், சீன் அபோட், மிட்செல் ஸ்டார்க், ஆடம் ஜம்பா, ஹேசல்வுட், நாதன் எல்லீஸ், ஸ்பென்சர் ஜான்சன், தன்வீர் சங்கா.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மேக்ஸ்வெல்லுக்கு பயிற்சியின் போது காயம் ஏற்பட்டுள்ளது.
    • அவருக்கு பதிலாக அணியில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் மேத்யூ வேட் சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    மெல்போர்ன்:

    ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று ஆட உள்ளது. இந்த தொடரில் முதலில் டி20 போட்டிகள் நடைபெற உள்ளன. இரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 போட்டி வரும் 30-ம் தேதி நடைபெற உள்ளது.

    இந்நிலையில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் ஆஸ்திரேலிய அணியில் டி 20 மற்றும் ஒருநாள் அணிகளில் இடம் பெற்றிருந்த அதிரடி ஆட்டக்காரர் க்ளென் மேக்ஸ்வெல் கணுக்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக விலகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    டி20 தொடர் நிறைவடைந்த பின்னர் அவருக்கு குழந்தை பிறக்க இருப்பதை முன்னிட்டு மேக்ஸ்வெல் ஏற்கனவே ஆஸ்திரேலியா செல்ல திட்டமிட்டிருந்தார். இந்நிலையில் அவருக்கு பயிற்சியின் போது காயம் ஏற்பட்டுள்ளது.

    வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் இந்தியாவில் 50 ஓவர் உலகக்கோப்பை தொடர் நடைபெற இருப்பதால் அதற்கு அவர் முழு உடற்தகுதியுடன் இருக்க வேண்டும் என்பதால் அவர் டி20 தொடருக்கான அணியிலிருந்தும் விலகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், அவருக்கு பதிலாக அணியில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் மேத்யூ வேட் சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • மேக்ஸ்வெல், வினி ராமன் காதலித்து கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
    • இருவரது திருமணம் தமிழ் முறைப்படி நடைபெற்றது.

    பிரபல ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் கிளென் மேக்ஸ்வெல். இவர் கடந்த ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்காக விளையாடினார். மேக்ஸ்வெல் தமிழ்ப் பெண் வினி ராமனை காதலித்து கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

    இந்நிலையில் வினி ராமன் கர்ப்பமாகியுள்ளார். அதனால் அவருக்கு தமிழ் முறைப்படி வளைகாப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    மேக்ஸ்வெல் 2015 உலகக் கோப்பை மற்றும் 2021 ஐசிசி டி 20 உலகக் கோப்பையை வென்ற ஆஸ்திரேலிய அணியில் இடம் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ஆஸ்திரேலிய அணிக்காக 7 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள மேக்ஸ்வெல் 339 ரன்களையும், 128 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 3,490 ரன்களை குவித்துள்ளார். 98 டி20 போட்டிகளில் ஆடி 2159 ரன்களையும் குவித்துள்ளார். ஒருநாள் கிரிக்கெட்டில் 60 விக்கெட்டுகளையும், டி20-ல் 39 விக்கெட்டுகளையும் எடுத்திருக்கிறார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • பிராவோவுக்கு கீழ் பயிற்சி செய்யும் போது இளம் பந்துவீச்சாளர்கள் நம்பிக்கையை பெறுவார்கள் என நம்புகிறேன்.
    • டுபிளசிஸ் மற்றும் மேக்ஸ்வெல் இருவரும் தொடர்ந்து விளையாடி இருந்தால் அவர்கள் 18-வது ஒவரின் முடிவிலே போட்டியை வென்றிருப்பார்கள்.

    பெங்களூரு:

    ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று சிஎஸ்கே - ஆர்சிபி அணிகள் மோதியது. இந்த போட்டியில் இந்த போட்டியில் சிஎஸ்கே அணி 227 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்திருந்தது.

    இதனை அடுத்து களமிறங்கிய ஆர்சிபி அணி 191 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து வெற்றியின் அருகே இருந்த நிலையில் சிஎஸ்கே அணியின் அபார பந்துவீச்சால் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து 8 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

    இந்த நிலையில் வெற்றி குறித்து சிஎஸ்கே கேப்டன் டோனி கூறியிருப்பதாவது:-

    பெங்களூரு பேட்டிங்கிற்கு சாதகமான ஆடுகளம். இரவு நேரத்தில் பனிப்பொழிவும் இருக்கும். இதற்கு தகுந்தார் போல் உங்கள் மனதை நீங்கள் மாற்றிக் கொண்டு விளையாட வேண்டும். நாம் 220 ரன்களுக்கு மேல் இலக்கை நிர்ணயித்து விட்டோம் என்றால் இரண்டாவது பேட்டிங் செய்யும் அணி அதிரடியாக ஆடுவார்கள் என்பது தெரியும்.

    டுபிளசிஸ் மற்றும் மேக்ஸ்வெல் இருவரும் தொடர்ந்து விளையாடி இருந்தால் அவர்கள் 18-வது ஒவரின் முடிவிலே போட்டியை வென்றிருப்பார்கள். நான் விக்கெட் கீப்பராக களத்திற்கு பின்னால் நின்று ஆடுகளம் எவ்வாறு செயல்படுகிறது என்பதை கவனித்துக் கொண்டு இருந்தேன்.

    நான் போட்டியின் முடிவு குறித்து யோசிக்காமல் ஆட்டத்தில் என்னென்ன மாற்றங்களை செய்ய வேண்டும்? பந்துவீச்சாளர்களை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை தான் யோசிப்பேன். இதனை நாம் சரியாக செய்தால் முடிவுகள் நமக்கு தகுந்தாற்போல் வரும். எங்கள் அணியில் இளம் பந்துவீச்சாளர்கள் அதிக அளவு இருக்கிறார்கள். நிச்சயமாக இது போன்ற சூழலில் பந்து வீசும் போது அவர்களுக்கு கடினமாக இருக்கும்.

    இருப்பினும் எங்கள் வீரர்கள் கடுமையாக உழைத்து வருகின்றனர். பிராவோ கீழ் அவர்கள் பயிற்சி செய்யும் போது இளம் பந்துவீச்சாளர்கள் நம்பிக்கையை பெறுவார்கள் என நம்புகிறேன்.

    இவ்வாறு டோனி கூறினார்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • 15 பேர் கொண்ட ஆஸ்திரேலிய அணியில் மாற்று விக்கெட் கீப்பர் கிடையாது.
    • ஒரு வேளை மேத்யூ வேட் கீப்பிங் பன்ன முடியாமல் போனால் மேக்ஸ்வெல் அல்லது டேவிட் வார்னர் அந்த பணியை கவனிப்பார்கள்.

    மெல்போர்ன்:

    20 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட்டில் இன்று (வெள்ளிக்கிழமை) சூப்பர்12 சுற்றில் இரண்டு லீக் ஆட்டங்கள் நடக்கின்றன. மெல்போர்னில் இந்திய நேரப்படி காலை 9.30 மணிக்கு நடக்கும் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான்-அயர்லாந்து அணிகள் மோதுகின்றன.

    இதைத் தொடர்ந்து இதே மைதானத்தில் பிற்பகல் 1.30 மணிக்கு நடக்கும் மற்றொரு ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி, ஜோஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்துகிறது. தலா ஒரு வெற்றி, ஒரு தோல்வியுடன் உள்ள இவ்விரு அணிகளுக்கும் இந்த ஆட்டத்தின் முடிவு மிகவும் முக்கியமானது. தோற்கும் அணிக்கு அரைஇறுதி வாய்ப்பு கேள்விக்குறியாகி விடும்.

    ஆஸ்திரேலிய அணிக்கு திடீர் பின்னடைவாக அந்த அணியின் விக்கெட் கீப்பர் மேத்யூ வேட் லேசான அறிகுறியுடன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். 15 பேர் கொண்ட ஆஸ்திரேலிய அணியில் மாற்று விக்கெட் கீப்பர் கிடையாது. அதனால் மேத்யூ வேட் கொரோனா தொற்றுடன் களம் இறங்குவார் என்று தெரிகிறது. ஒரு வேளை முடியாமல் போனால் மேக்ஸ்வெல் அல்லது டேவிட் வார்னர் அந்த பணியை கவனிப்பார்கள். நேற்று சிறிது நேரம் மேக்ஸ்வெல் விக்கெட் கீப்பிங் பயிற்சியில் ஈடுபட்டதை பார்க்க முடிந்தது.

    இன்னொரு பக்கம் மழையும் அச்சுறுத்திக்கொண்டிருக்கிறது. மெல்போர்னில் இன்று மழை பெய்வதற்கு 90 சதவீதம் வாய்ப்பிருப்பதாக அங்குள்ள வானிலை ஆய்வு மையத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • டிராவிஸ் ஹெட் காயமடைந்ததால் 5-வது ஒருநாள் போட்டி மற்றும் டெஸ்ட் தொடரில் இருந்து விலகி உள்ளார்.
    • வருகிற ஜூன் 29-ந் தேதி முதல் டெஸ்ட் போட்டி தொடங்குகிறது.

    இலங்கைக்கு எதிரான 5-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று கொழும்புவில் நடைபெறுகிறது. 5 போட்டிகள் கொண்ட தொடரில் இலங்கை அணி 3-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.

    அடுத்ததாக தொடங்க இருக்கும் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா அணி வீரர் மேக்ஸ்வெல் சேர்க்கப்பட்டுள்ளார்.

    ஆஸ்திரேலிய அணியின் அதிரடி பேட்ஸ்மேனான மேக்ஸ்வெல் டி20 மற்றும் ஒருநாள் அணிகளில் முக்கியமான வீரராகவும் மேட்ச் வின்னராகவும் திகழ்ந்து வருகிறார். ஆனால் 2013-ம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான மேக்ஸ்வெல், வெறும் ஏழே டெஸ்ட் போட்டிகளில் ஆடி 339 ரன்கள் மட்டுமே அடித்துள்ளார். இதில் ஒரு சதம் அடங்கும்.

    கடைசியாக 2017ம் ஆண்டு வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஆடினார். அதன்பின்னர் 5 ஆண்டுகளாக டெஸ்ட் அணியில் இடம்பெறாத மேக்ஸ்வெல்லுக்கு தற்ப்போது இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் இடம் கிடைத்துள்ளது.

    டிராவிஸ் ஹெட் காயமடைந்ததால் 5-வது ஒருநாள் போட்டி மற்றும் டெஸ்ட் தொடரில் இருந்து விலகி உள்ளார். இதனால் ஹெட்டுக்கு பதிலாக மேக்ஸ்வெல் ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

    வருகிற ஜூன் 29-ந் தேதி முதல் டெஸ்ட் போட்டி தொடங்குகிறது. ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கான போட்டிகள் என்பதால் இரு அணிகளுமே வெற்றிக்காக போராடும்.

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    ரிஷப் பந்த் பேட்டிங் செய்ய வந்தாலே டிவி பக்கம் திரும்பி விடுவேன். அவரின் திறமையில் ஒரு பகுதியைத்தான் நாம் பார்த்துள்ளோம் என மேக்ஸ்வெல் தெரிவித்துள்ளார். #AUSvIND
    இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பராக ரிஷப் பந்த் செயல்பட்டு வருகிறார். 20 வயதே ஆகும் ரிஷப் பந்த் இங்கிலாந்திற்கு எதிரான கடைசி டெஸ்டில் சதம் அடித்து அசத்தினார். தற்போது ஆஸ்திரேலியா தொடரில் விளையாடி வருகிறார். பெரிய அளவில் சாதிக்கவில்லை என்றாலும், குறிப்பிடத்தகுந்த வகையில் விளையாடி வருகிறார்.

    7-வது நபராக களம் இறங்கும் ரிஷப் பந்த், கடைநிலை வீரர்களுடன் விளையாட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி விரைவில் அவுட்டாகும் நிலை ஏற்படுகிறது.

    இந்நிலையில் ரிஷப் பந்த் அபாயகரமான பேட்ஸ்மேன். அவரது திறமையில் ஒரு பகுதியைத்தான் நாம் பார்த்துள்ளோம் என்று மேக்ஸ்வெல் ஆஸ்திரேலியா அணிக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    ரிஷப் பந்த் குறித்து மேக்ஸ்வெல் கூறுகையில் ‘‘ரிஷப் பந்த் மிகவும் சிறப்பான கிரிக்கெட் திறமையை பெற்றுள்ளார். ஆடுளத்தின் மீது ஒரு சிறிய வெடிப்பு ஏற்பட்டிருப்பதை போன்றுதான், ரிஷப் பந்தின் திறமையில் சிறிய பகுதியை மட்டுமே நாம் பார்த்துள்ளோம்.



    ரிஷப் பந்த் பேட்டிங் செய்யும்போதெல்லாம் நான் எனது டிவி-யால் இழுக்கப்பட்டு விடுவேன். அவர் களத்தில் இறங்கிவிட்டால், அவரது ஆட்டத்தை பார்க்க சூப்பராக இருக்கும்.

    ஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்காக இருவரும் இணைந்து விளையாடிள்ளோம். அப்போது அபாரமான சில இன்னிங்ஸை எங்களுக்கு அளித்துள்ளார். மாறுபட்ட ஷாட் அடிப்பதற்கு ஏற்றபடி உடலை அவரால் எறிதாக மாற்றிக்கொள்ள முடியும்’’ என்றார்.
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    களத்தில் இறங்கிவிட்டால் தடுத்து நிறுத்த முடியாத ரோகித் சர்மா ஒருநாள் மற்றும் டி20 போட்டியில் மிகச்சிறந்த ஸ்டார் என்று மேக்ஸ்வெல் புகழாரம் சூட்டியுள்ளார். #AUSvIND
    இந்திய அணியின் தொடக்க பேட்ஸ்மேன் ஆன ரோகித் சர்மா அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். ஒருநாள் போட்டியில் அதிக இரட்டை சதங்களும், டி20 போட்டியில் அதிக சதமும் அடித்த ஒரே வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

    ஆஸ்திரேலியா - இந்தியா இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் நாளைமறுநாள் (21-ந்தேதி) பிரிஸ்பேனில் தொடங்குகிறது. இந்த தொடரில் ரோகித் சர்மா மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்நிலையில் தடுத்து நிறுத்த முடியாத ரோகித் சர்மா ஒயிட் பந்து போட்டியில் மிகப்பெரிய ஸ்டார் என்று ஆஸ்திரேலியாவின் அதிரடி மன்னன் மேக்ஸ்வெல் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து மேக்ஸ்வெல் கூறுகையில் ‘‘ஒயிட் பால் கிரிக்கெட்டில் (ஒருநாள் மற்றும் டி20) ரோகித் சர்மாதான் ஸ்டார். ஒருநாள் போட்டியில் மூன்று இரட்டை சதங்கள் என்பது குறைத்து மதிப்பிடும் சாதனை கிடையாது. இலங்கைக்கு எதிராக 264 ரன்கள் விளாசிய இன்னிங்சை நினைத்து பார்த்தால், களத்தில் இறங்கிய விளாசிய பின்னர் அவரை தடுத்து நிறுத்த முடியாது.



    ரோகித் சர்மா பேட்டிங் செய்ய வரும்போது ஒரு நாள் கிரிக்கெட் ஈசியானது போன்று எண்ணத் தோன்றும். அவரது ஆட்டத்தை பார்க்க நான் விரும்புவேன். அவர் பந்தை எங்க அடிக்க விரும்புகிறாரோ? அங்கே பந்தை அடிக்கும் திறமை பெற்றவர். அது வேகப்பந்தாக இருந்தாலும் சரி, சுழற்பந்து வீச்சாக இருந்தாலும் சரி. அவர் விரும்பும்போது பந்தை வெகு தூரத்திற்கு விரட்டுவார்’’ என்றார்.
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    நேற்று நடைபெற்ற மும்பை, டெல்லி இடையிலான போட்டியில், மேக்ஸ்வெல் மற்றும் போல்ட் இருவரும் இணைந்து இரண்டு கேட்ச்கள் பிடித்து அனைவரையும் ஆச்சர்யப்படுத்தினர். #VIVOIPL #IPL2018 #DelhiDaredevils #GlennMaxwell #TrentBoult

    புதுடெல்லி:

    ஐபிஎல் தொடரின் 55-வது லீக் போட்டி நேற்று டெல்லியில் நடைபெற்றது. இதில் டெல்லி டேர்டெவில்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. இதில், டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. 

    இதைத்தொடர்ந்து களமிறங்கிய டெல்லி அணியில், விக்கெட் கீப்பர் ரிஷப் பாண்ட் 44 பந்துகளில் 64 ரன்கள் குவித்து அசத்தினார். மற்றொரு டெல்லி வீரரான விஜய் சங்கர் 30 பந்துகளில் 43 ரன்கள் குவிக்க, 20 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி 4 விக்கெட் இழப்பிற்கு 174 ரன்கள் குவித்தது. 

    175 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை அணி விளையாடியது. அந்த அணி 163 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனால் டெல்லி அணி 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் தோல்வியடைந்ததன் மூலம் மும்பை அணி பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெறுவதற்கான வாய்ப்பை இழந்தது.


    இந்த போட்டியில் மும்பை அணி பேட்டிங் செய்த போது, சந்தீப் லமிசானே வீசிய பந்தை பொலார்டு சிக்சருக்கு அடிக்க முயன்றார். அந்த பந்தை டெல்லி அணி வீரர் மேக்ஸ்வெல் பவுண்டரி லைனில் கேட்ச் பிடித்து, பின்னர் பவுண்டரியைத் தாண்டுவதற்கு முன் சக வீரரான போல்ட்டிடம் பந்தை வீசினார். அந்த பந்தை போல்ட் கேட்ச் பிடித்ததன் மூலம் பொலார்டை அவுட் ஆக்கினர்.



    அந்த கேட்சை தொடர்ந்து, ஆட்டத்தின் முக்கிய கட்டத்தில் மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மாவையும் அதேபோல் மேக்ஸ்வெல் மற்றும் போல்ட் இருவரும் ஒன்று சேர்ந்து கேட்ச் பிடித்து அவுட்டாக்கினர். முன்னதாக பஞ்சாப் அணியின் மனோஜ் திவாரி, மயன்க் அகர்வால் இருவரும் இணைந்து இதேபோன்று கேட்ச் பிடித்து ஸ்டோக்சை ஆட்டமிழக்க செய்தனர்.

    இதுவரை நடந்த ஐபிஎல் போட்டிகளில் பல வீரர்கள் சிறப்பான கேட்ச்கள் பிடித்திருந்தாலும் இந்த தொடரில் கிளென் மேக்ஸ்வெல், டிரெண்ட் போல்ட் ஜோடி இரண்டு முறை கேட்ச் பிடித்து அசத்தியுள்ளது. #VIVOIPL #IPL2018 #DelhiDaredevils #GlennMaxwell #TrentBoult
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    அதிரடி பேட்ஸ்மேன் ஆன மேக்ஸ்வெல் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடுவதற்கு தகுதியானர் என்று முன்னாள் கேப்டன் ஆலன் பார்டன் தெரிவித்துள்ளார்.
    ஆஸ்திரேலியா அணியின் முன்னணி அதிரடி பேட்ஸ்மேன் மேக்ஸ்வெல். ஒருநாள் மற்றும் டி20 அணியில் இடம்பிடித்து விளையாடி வரும் இவருக்கு டெஸ்ட் போட்டியில் அதிக அளவில் இடம் கிடைத்தது கிடையாது. உள்ளூர் தொடரில் தொடர்ச்சியாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தாததே இதற்கு காரணம் என்று ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் கூறியது.

    இந்நிலையில், ‘‘மேக்ஸ்வெல் சுழற்பந்து வீச்சாளருடன் சிறப்பாக பீல்டிங் செய்யக்கூடியவர். இதேபோல் அதிரடியாக விளையாடக் கூடியவர். இதனால் தேர்வாளர்களின் பார்வை அவர் மீது விழுந்திருக்கும்’’ என்று முன்னாள் கேப்டன் ஆலன் பார்டர் தெரிவித்துள்ளது.



    தற்போது பால் டேம்பரிங் விவகாரத்தில் ஸ்மித், வார்னர், பான்கிராப்ட் ஆகியோர் விளையாட தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதனால் மேக்ஸ்வெல்லிற்கு இடம் கிடைக்கலாம்.