என் மலர்
நீங்கள் தேடியது "Yuzvendra Chahal"
- மினி ஏலத்தில் பங்கேற்க ஆஸ்திரேலிய வீரர் க்ளென் மேக்ஸ்வெல் தனது பெயரை பதிவு செய்யவில்லை.
சென்னை:
19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்கள் மினி ஏலம் வருகிற 16-ந் தேதி அபுதாபியில் நடக்கிறது. இதையொட்டி தக்கவைக்கப்படும் வீரர்கள் மற்றும் விடுவிக்கப்படும் வீரர்களின் பட்டியலை கடந்த 15-ந் தேதி இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் 10 அணிகளும் சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டு இருந்தது.
அதன்படி ஐ.பி.எல். போட்டியில் பங்கேற்கும் 10 அணிகளும் விடுவித்த வீரர்கள் மற்றும் தக்கவைத்த வீரர்கள் விவரம் அதிகாரபூர்வமாக வெளியிட்டன. மொத்தம் 173 வீரர்கள் தக்க வைக்கப்பட்டு உள்ளனர்.
இந்த மினி ஏலத்தில் பங்கேற்க ஆஸ்திரேலிய வீரர் க்ளென் மேக்ஸ்வெல் தனது பெயரை பதிவு செய்யவில்லை. ஐ.பி.எல். போட்டிகளில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக விளையாடி வரும் க்ளென் மேக்ஸ்வெல் இந்த ஆண்டு இடம் பெறாதது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் உங்களை மிஸ் செய்யப் போகிறேன் என கடந்த ஆண்டு பஞ்சாப் அணியில் விளையாடிய இந்திய அணி வீரர் யுஸ்வேந்திர சாஹல் தெரிவித்துள்ளார். அதில் உங்களை மிஸ் செய்யப் போகிறேன் maxi bro. மகிழ்ச்சி, குறும்புத்தனம், கேலி பேச்சு... நீங்கள் இல்லாமல் டிரெஸிங் ரூம் முன்பு போல் நிச்சயம் இருக்காது என கூறியுள்ளார்.
- சாஹல், தனஸ்ரீ தம்பதி கருத்து வேறுபாடு காரணமாக 2 ஆண்டுகள் பிரிந்து வாழ்ந்தனர்.
- சாஹல், தனஸ்ரீக்கு ரூ. 4.75 கோடி ஜீவனாம்சம் வழங்கியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் வீரர் யுஸ்வேந்திர சாஹல் நடனக் கலைஞரான தனஸ்ரீ வர்மாவை 2020 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். அதன் பின் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் இரண்டு ஆண்டுகள் பிரிந்து வாழ்ந்தனர். இதையடுத்து, இருவரும் விவாகரத்து கோரி மும்பை குடும்ப நீதிமன்றத்தை நாடினார்கள்.
இவர்கள் இருவரும் ஏற்கனவே 18 மாதங்கள் பிரிந்து வாழ்ந்துவிட்டதால், நீதிமன்றம் மார்ச் மாதம் விவாகரத்து கொடுத்தது. மேலும், கிரிக்கெட் வீரர் தனஸ்ரீக்கு ரூ. 4.75 கோடி ஜீவனாம்சம் வழங்கியுள்ளார்.
இவர்கள் இருவரும் பிரிந்த பிறகு யுஸ்வேந்திர சாஹலின் ரசிகர்கள் தனஸ்ரீ வர்மாவை இணையத்தில் கடுமையாக விமர்சனம் செய்து கேலி செய்து வந்தனர்.
இதனிடையே நிகழ்ச்சி ஒன்றில் தனது விவாகரத்து குறித்து பேசிய தனஸ்ரீ வர்மா, "சஹாலுடன் திருமணம் ஆன இரண்டு மாதத்திலேயே இந்த உறவு நீடிக்காது என்று கண்டுபிடித்துவிட்டேன். அவர் என்னை ஏமாற்றுகிறார் என்று இரண்டு மாதத்திலேயே தெரிந்துவிட்டது. திருமண உறவு நீடிக்க வேண்டும் என்று கொஞ்சம் நான் பொறுமையாக இருந்தேன்" என்று தெரிவித்தார்.
இந்நிலையில், தனஸ்ரீ குற்றச்சாட்டு குறித்து பேசிய சாஹல், "நான் ஒரு விளையாட்டு வீரன். நான் ஏமாற்றவில்லை. நான் ஏமாற்றியதை நீங்கள் 2 ஆவது மாதத்திலேயே கண்டுபிடித்திருந்தால் அந்த உறவு எப்படி நீடிக்கும்? எனக்கு, இந்த அத்தியாயம் முடிந்துவிட்டது. நான் இதனை கடந்து முன்னேறி செல்கிறேன். நான் மீண்டும் இதை பற்றிப் பேச விரும்பவில்லை. நான் என் வாழ்க்கையிலும் என் விளையாட்டிலும் கவனம் செலுத்தவுள்ளேன்" என்று தெரிவித்தார்.
- தீர்ப்பு வழங்கப்படவிருந்தபோது நான் மிகவும் உணர்ச்சிவசப்பட்டேன்.
- இணையத்தில் பரவும் வதந்திகள் எனக்கு மட்டுமில்லை யாருக்குமே நடக்கக்கூடாது என்று நான் நினைக்கிறேன்.
இந்திய கிரிக்கெட் வீரர் யுஸ்வேந்திர சாஹல் நடனக் கலைஞரான தனஸ்ரீ வர்மாவை 2020 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். அதன் பின் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் இரண்டு ஆண்டுகள் பிரிந்து வாழ்ந்தனர். இதையடுத்து, இருவரும் விவாகரத்து கோரி மும்பை குடும்ப நீதிமன்றத்தை நாடினார்கள்.
இவர்கள் இருவரும் ஏற்கனவே 18 மாதங்கள் பிரிந்து வாழ்ந்துவிட்டதால், நீதிமன்றம் மார்ச் மாதம் விவாகரத்து கொடுத்தது. மேலும், கிரிக்கெட் வீரர் தனஸ்ரீக்கு ரூ. 4.75 கோடி ஜீவனாம்சம் வழங்கியுள்ளார்.
இவர்கள் இருவரும் பிரிந்த பிறகு யுஸ்வேந்திர சாஹலின் ரசிகர்கள் தனஸ்ரீ வர்மாவை இணையத்தில் கடுமையாக விமர்சனம் செய்து கேலி செய்து வந்தனர்.
இந்நிலையில் விவாகரத்து பற்றி இத்தனை நாட்களாக பதில் எதுவும் அளிக்காமல் இருந்த தனஸ்ரீ வர்மா முதன் முறையாக மனம் திறந்து பேசி உள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
தனிப்பட்ட வாழ்க்கை என்று நாம் சொல்வதற்கு ஒரு காரணம் உள்ளது. ஏன் என்றால், அது ரகசியமாக இருக்க வேண்டும். ஒரு நாணயத்திற்கு இரண்டு பக்கங்கள் இருக்கின்றன. ஒரு கை ஓசை தராது. நான் ஒரு விஷயம் பற்றி பேசவில்லை என்பதற்காக பலரும் தங்களுக்கு தெரியாத விஷயத்தை பேசுவது சரியில்லை.
இதுபோன்று இணையத்தில் பரவும் வதந்திகள் எனக்கு மட்டுமில்லை யாருக்குமே நடக்கக்கூடாது என்று நான் நினைக்கிறேன். என் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பேசுவதற்கு நிறைய விஷயங்கள் உள்ளன. அதை இனி வரும் காலத்தில் தெளிவாக கூறுகிறேன். வாழ்க்கையில் ஒரு விஷயத்தை கடந்து சென்று பெரிய விஷயங்களைச் சாதிக்க விரும்பினால், அதை மீண்டும் மீண்டும் பேசத் தேவையில்லை. என் பக்க நியாயம் இருக்கிறது.
தீர்ப்பு வழங்கப்படவிருந்தபோது நான் அங்கே நின்றபோது எனக்கு இன்னும் நினைவிருக்கிறது. மனதளவில் நாங்கள் மிகவும் தயாராக இருந்தபோதிலும், நான் மிகவும் உணர்ச்சிவசப்பட்டேன். எல்லோர் முன்னிலையிலும் நான் அலற ஆரம்பித்தேன். அந்த நேரத்தில் நான் என்ன உணர்ந்தேன் என்பதை என்னால் வெளிப்படுத்தக்கூட முடியவில்லை. நான் அழுது கொண்டே இருந்தேன் , அலறி அழுது கொண்டே இருந்தேன் என்பது எனக்கு நினைவிருக்கிறது . நிச்சயமாக! அதெல்லாம் நடந்தது, அவர் (சாஹல்) முதலில் வெளியேறினார்.
என்று தனஸ்ரீ வர்மா அந்த பேட்டியில் கூறியுள்ளார்.
- கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் 16 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் வெற்றி பெற்றது.
- இந்த வெற்றிக்கு 4 முக்கிய விக்கெட்களை வீழ்த்திய யுஸ்வேந்திர சாஹல் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
முல்லான்பூர்:
ஐபிஎல் தொடரின் நேற்றைய கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் 16 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்கு 4 முக்கிய விக்கெட்களை வீழ்த்திய யுஸ்வேந்திர சாஹல் ஆட்ட நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
இந்த நிலையில் அவரது காதலியாக சொல்லப்படும் ஆர்.ஜே. மாவாஷ் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அதில் "என்ன ஒரு திறமையான மனிதர் இவர்! ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்களை வீழ்த்தியதற்கு இதுவும் ஒரு காரணம்" என கூறியுள்ளார். இந்த பதிவு ரசிகர்கள் மத்தியில் வேகமாக பரவி வருகிறது.

பலரும் அவர்கள் இருவரும் காதலில் இருப்பது இந்த பதிவின் மூலம் உறுதியாகிவிட்டது எனவும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
ஐபிஎல் தொடரில் சாஹல் 166 போட்டிகளில் விளையாடி 211 விக்கெட்களை வீழ்த்தி இருக்கிறார். மேலும் ஐபிஎல் வரலாற்றிலேயே அதிக விக்கெட்கள் வீழ்த்திய பந்துவீச்சாளரும் சாஹல் என்பது குறிப்பிடத்தக்கது.
- சாஹலின் பெயரை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து தனஸ்ரீ நீக்கினார்.
- தனஸ்ரீ வெர்மாவுக்கு ரூ. 4.75 கோடியை சாஹல் ஜீவமான்சமாக வழங்க உள்ளார்.
இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல், கடந்த 2020-ம் ஆண்டு தனஸ்ரீ என்பவரை திருமணம் செய்து கொண்டார். மாடலிங்கில் ஈடுபட்டு வந்த தனஸ்ரீ, அடுத்தடுத்து கான்சர்ட்-களில் பாடகியாக அறிமுகமாகினார். இதன் உச்சமாக கடந்த ஆண்டு ஜூலை மாதம் பிரபல தொலைக்காட்சி ஒன்றில் நடன நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்கும் வாய்ப்பு தனஸ்ரீ-க்கு கிடைத்தது.
தனஸ்ரீயின் நடவடிக்கைகள் சாஹலுக்கு பிடிக்கவில்லை என்று கூறப்பட்டு வந்த நிலையில், மனைவி தனஸ்ரீயை விவகாரத்து செய்யப் போவதாக தொடர்ச்சியாக தகவல்கள் வெளியாகி வந்தது. ஆனால் பல்வேறு தருணங்களிலும் தனஸ்ரீ-க்கு ஆதரவாக சாஹல் பேசிய வீடியோக்கள் வெளியாகின.
ஆனால் 2023-ம் ஆண்டிலேயே சாஹலின் பெயரை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து தனஸ்ரீ நீக்கினார். இருப்பினும் விவாகரத்து குறித்து எந்த வித அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளிவராமல் இருந்தது.
இதனையடுத்து சில நாட்களுக்கு முன்னர் இருவரும் மும்பையில் உள்ள பாந்த்ரா குடும்ப நீதிமன்றத்தில் ஆஜராகி பரஸ்பர விவகாரத்து பெற்றனர். அதிகாரபூர்வ விவாகரத்து ஆணையை குடும்ப நல நீதிமன்றம் இன்று வழங்கியது.
இந்நிலையில் முன்னாள் மனைவி தனஸ்ரீ வெர்மாவுக்கு ரூ. 4.75 கோடியை கிரிக்கெட் வீரர் யுவேந்திர சாஹல் ஜீவமான்சமாக வழங்க உள்ளதாக, விவாகரத்து வழக்கில் மும்பை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இதில் ரூ.2.37 கோடி கொடுக்கப்பட்டுள்ளது. விவாகரத்து ஆணை வழங்கப்பட்ட பிறகு மீதமுள்ள தொகையை சாஹல் செலுத்துவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று குடும்ப நலநீதிமன்றத்திற்கு வருகை தந்த சாஹல் "Be Your Own Sugar Daddy" என்ற வாசகம் பொருந்திய டி- ஷர்ட் அணிந்து வந்திருந்தார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
பாலியல் உறவு, நட்பு போன்றவற்றுக்கு ஈடாக பெண் ஒருவருக்கு பணம், பரிசுகள் போன்றவற்றை வழங்கும் வயதான பணக்கார ஆணை சுகர் டாடி என்று குறிப்பிடுகிறார்கள்.
- 2023-ம் ஆண்டிலேயே சாஹலின் பெயரை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து தனஸ்ரீ நீக்கினார்.
- யுஸ்வேந்திர சாஹல், கடந்த 2020-ம் ஆண்டு தனஸ்ரீ என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
மும்பை:
இந்திய அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல், கடந்த 2020-ம் ஆண்டு தனஸ்ரீ என்பவரை திருமணம் செய்து கொண்டார். மாடலிங்கில் ஈடுபட்டு வந்த தனஸ்ரீ, அடுத்தடுத்து கான்சர்ட்-களில் பாடகியாக அறிமுகமாகினார். இதன் உச்சமாக கடந்த ஆண்டு ஜூலை மாதம் பிரபல தொலைக்காட்சி ஒன்றில் நடன நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்கும் வாய்ப்பு தனஸ்ரீ-க்கு கிடைத்தது.
தனஸ்ரீயின் நடவடிக்கைகள் சாஹலுக்கு பிடிக்கவில்லை என்று கூறப்பட்டு வந்த நிலையில், மனைவி தனஸ்ரீயை விவகாரத்து செய்யப் போவதாக தொடர்ச்சியாக தகவல்கள் வெளியாகி வந்தது. ஆனால் பல்வேறு தருணங்களிலும் தனஸ்ரீ-க்கு ஆதரவாக சாஹல் பேசிய வீடியோக்கள் வெளியாகின.
ஆனால் 2023-ம் ஆண்டிலேயே சாஹலின் பெயரை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து தனஸ்ரீ நீக்கினார். இருப்பினும் விவாகரத்து குறித்து எந்த வித அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளிவராமல் இருந்தது.
இதனையடுத்து சில நாட்களுக்கு முன்னர் இருவரும் மும்பையில் உள்ள பாந்த்ரா குடும்ப நீதிமன்றத்தில் ஆஜராகி பரஸ்பர விவகாரத்து பெற்றனர். அவர்களுக்கு அதிகாரபூர்வமாக விவாகரத்து வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.
இந்நிலையில் முன்னாள் மனைவி தனஸ்ரீ வெர்மாவுக்கு ரூ. 4.75 கோடியை கிரிக்கெட் வீரர் யுவேந்திர சாஹல் ஜீவமான்சமாக வழங்க உள்ளதாக, விவாகரத்து வழக்கில் மும்பை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இதில் ரூ.2.37 கோடி கொடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
- குல்தீப்புடன் பந்துவீசுவது எனக்கு மிகவும் பிடிக்கும்.
- குல்தீப்புக்கும் எனக்கும் ஒரு சிறந்த பிணைப்பு உள்ளது
இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் சாஹல் கடைசியாக 2023 ஆகஸ்டில் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் விளையாடினார். அதன்பின்பு அவர் இந்திய அணியில் இடம்பெறவில்லை. இதன்பின்பு அவருக்கும் அவரது மனைவிக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும் இருவரும் விவாகரத்து செய்யவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.
இதனிடையே வாஷிங்டன் சுந்தர், வருண் சக்கரவர்த்தி ஆகிய சுழற்பந்து வீச்சாளர்கள் இந்திய அணியில் இடம்பிடித்து அசத்தி வருகின்றனர்.
இந்நிலையில், இந்திய அணிக்கு மீண்டும் கம்பேக் கொடுப்பது குறித்து சாஹல் மனம் திறந்து பேசியுள்ளார்.
இந்துஸ்தான் டைம்ஸ் செய்தித்தாளுக்கு பேட்டி அளித்த சாஹல், " இந்திய அணி நான் கம்பேக் கொடுப்பது எனது கையில் இல்லை. குல்தீப் தான் தற்போது உலகின் சிறந்த ரிஸ்ட் சுழற்பந்து வீச்சாளர், ஐபிஎல் மற்றும் சர்வதேச கிரிக்கெட்டில் அவரது பந்துவீச்சைப் பார்த்தால் இது தெளிவாக தெரிகிறது. குல்தீப்புடன் பந்துவீசுவது எனக்கு மிகவும் பிடிக்கும். மைதானத்திற்கு உள்ளேயும் வெளியேயும் எங்களுக்கு ஒரு சிறந்த பிணைப்பு உள்ளது" என்று தெரிவித்தார்.
சாஹலும் குல்தீப்பும் ஒன்றாக 37 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 130 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர். ஐபிஎல் 2025 சீசனில் குல்தீப் டெல்லி கேபிடல்ஸ் அணியில் விளையாடுகிறார். சாஹல் பஞ்சாப் கிங்ஸ் அணியில் விளையாடவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- பேட்டிங்குக்கு சாதகமான ஆடுகளத்தில் இந்திய வீரர்கள் போதுமான ரன்களை எடுக்கவில்லை
- இன்னும் அதிகமான ரன்கள் எடுத்து இருந்தால் ஏதாவது நடந்து இருக்கலாம் என சேவாக் கருத்து
புதுடெல்லி:
20 ஓவர் உலக கோப்பை போட்டி அரையிறுதியில் இந்திய அணி மோசமாக தோற்றது குறித்து தேர்வு குழு முன்னாள் உறுப்பினர் சரண்தீப்சிங் கூறியதாவது:-
லெக் ஸ்பின்னரான யுஸ்வேந்திர சாஹலுக்கு 20 ஓவர் உலக கோப்பை போட்டியில் ஒரு ஆட்டத்தில் கூட விளையாட வாய்ப்பு வழங்கவில்லை. இந்திய அணி நிர்வாகத்தின் இந்த முடிவு மிகப்பெரிய தவறாகும்.
குறிப்பாக இங்கிலாந்துக்கு எதிரான அரை இறுதியில் வாய்ப்பு அளித்து இருக்க வேண்டும். ஏனென்றால் அவர் தாக்கத்தை ஏற்படுத்தி இருப்பார். இதே போல ரிஷப் பண்டுக்கு சரியான முறையில் வாய்ப்பு கொடுக்காதது ஏன்? என்று தெரியவில்லை. அடுத்த உலக கோப்பைக்கான அணியை இப்போதே திட்டமிட வேண்டும். ரோகித் சர்மா, வீராட் கோலி, அஸ்வின், முகமது ஷமி, புவனேஷ்வர் குமார் ஆகியோர் அடுத்த உலகக் கோப்பை அணியில் இருக்க மாட்டார்கள்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
முன்னாள் அதிரடி தொடக்க வீரர் வீரேந்தர் ஷேவாக் கூறியதாவது:-
இந்திய பேட்ஸ்மேன்கள் யாருமே அச்சம் இல்லாமல் விளையாடவில்லை. பயப்படாமல் களத்தில் ஆடவில்லையென்றால் போட்டியை விட்டு வெளியேற வேண்டிய நிலைதான் ஏற்படும். அச்சமற்ற கிரிக்கெட் இப்போது காணாமல் போய் விட்டது. தோற்றாலும் குறைந்தபட்சம் போராடி இருக்கவேண்டும்.
பேட்டிங்குக்கு சாதகமான ஆடுகளத்தில் இந்திய வீரர்கள் போதுமான ரன்களை எடுக்கவில்லை. மேலும் இங்கிலாந்தின் பந்துவீச்சு துறைக்கு எதிராககூட சவால் கொடுக்கவில்லை. இன்னும் அதிகமான ரன்கள் எடுத்து இருந்தால் ஏதாவது நடந்து இருக்கலாம்.
கடந்த உலக கோப்பையில் இருந்த அதே அணுகுமுறை தான் தற்போதும இருக்கிறது. நெருக்கடியான போட்டியில் வீராட் கோலி மட்டுமே ரன்களை எடுத்தார்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
முன்னாள் கேப்டன் கபில்தேவ் கூறுகையில், 'இந்திய அணியின் இந்த தோல்வியால் அதிகமாக விமர்சிக்க வேண்டாம். இந்திய அணி மோசமாக ஆடியதை நான் ஒப்புக் கொள்கிறேன். ஒரு ஆட்டத்தின் அடிப்படையில் அதிகமாக விமர்சிக்க முடியாது. இங்கிலாந்து அணி நிலைமையை சிறப்பாக கையாண்டு இந்தியாவை முற்றிலும் வெளியேற்றியது' என்றார்.
'ஒரு நாணயத்துக்கு இரண்டு பக்கங்கள் உண்டு. அணியின் வெற்றியை சொந்த வெற்றியை போல் கொண்டாடினால், தோல்வியை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும்' என சச்சின் தெண்டுல்கர் தெரிவித்தார்.
- தொடரின் தொடக்கத்திலேயே கேப்டனும், பயிற்சியாளரும்,அவர்களிடம் தெளிவுபடுத்தி விட்டார்கள்.
- உலகக்கோப்பை தொடர் முழுவதும் யஷ்வேந்திர சஹால் ஒரு போட்டியில் கூட வாய்ப்புக் கொடுக்கப்படவில்லை.
இந்திய அணி உலகக்கோப்பையில் அரையிறுதியோடு வெளியேறியது ரசிகர்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளித்தது. இதையடுத்து கடுமையான விமர்சனங்களை சந்தித்து வரும் இந்திய அணி விரைவில் தலைமை மாற்றத்துக்கு ஆளாகலாம் என சொல்லப்படுகிறது.
இந்நிலையில் உலகக்கோப்பை தொடரில் யஷ்வேந்திர சாஹல் ஒரே ஒரு போட்டியில் கூட பயன்படுத்தவில்லை. இதுகுறித்து இப்போது தினேஷ் கார்த்திக் பதிலளித்துள்ளார். அதில் சஹாலோ அல்லது ஹர்ஷல் படேலோ தங்களுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை என்று அதிருப்தி அடையவில்லை. ஏனென்றால் தொடரின் தொடக்கத்திலேயே கேப்டனும், பயிற்சியாளரும்,அவர்களிடம் தெளிவுபடுத்தி விட்டார்கள். தேவைப்பட்டால் மட்டுமே உங்களை அணியில் எடுப்போம். இல்லை என்றால் கடினம்தான் என்று தெளிவுபடுத்திவிட்டார்கள். அதனால் அவர்கள் இருவரும் தங்களுக்கு வாய்ப்புக் கிடைத்தால், எப்படி தங்களது சிறப்பானதைக் கொடுக்க முடியும் என்று காத்திருந்தனர் என்று கூறியுள்ளார்.
- நேற்றைய போட்டியில் சாஹல் 2 ஓவர்கள் பந்துவீசி 4 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார்.
- புவனேஸ்வர் குமார் 87 போட்டிகளில் விளையாடி 90 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரானது தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான இரண்டாவது டி20 போட்டி லக்னோ மைதானத்தில் நடைபெற்றது.
இதில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் 1-1 என்ற கணக்கில் சம நிலையில் உள்ளது.
இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளரான யுஸ்வேந்திர சாஹல் இரண்டு ஓவர்கள் பந்துவீசி ஒரு மெய்டன் உட்பட 4 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார். இதன்மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இந்திய பவுலராக சாதனை ஒன்றினை படைத்துள்ளார்.
இந்திய அணிக்காக டி20 கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பவுலராக புவனேஸ்வர் குமார் முதலிடத்தில் இருந்தார். அவர் 87 போட்டிகளில் விளையாடி 90 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.
அந்த சாதனையை யுஸ்வேந்திர சாஹல் முறியடித்துள்ளார். அவர் 75-வது போட்டியில் விளையாடி 91 விக்கெட்டுகளை வீழ்த்தி டி20 கிரிக்கெட்டில் இந்திய அணி சார்பாக அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய பவுலர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
- குல்தீப் யாதவ் கையை சுழற்றுவதில் முன்பு மெதுவாக சுழற்றினார். இப்போது கொஞ்சம் வேகமாக சுழற்றுகிறார்.
- சாஹல் கையை மெதுவாகச் சுழற்றுகிறார் இதனால் பந்தில் ஸ்பின் இல்லாமல் போய் விடுகிறது.
குல்தீப் யாதவ் வங்காளதேசத்தில் டிசம்பரில் நடந்த தொடரில் அவர் விளையாடிய ஒரே டெஸ்டில் ஐந்து விக்கெட்டுகளை எடுத்து ஆட்ட நாயகன் விருதை பெற்றார். அவர் இலங்கை மற்றும் நியூசிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் நடந்த ஒருநாள் தொடர்களில் மேட்ச்-வின்னிங் ஸ்பெல்களுடன் அதைத் தொடர்ந்தார்.
மேலும் அடுத்த வாரம் நாக்பூரில் தொடங்கும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியில் இடம்பிடித்தார்.
இந்நிலையில் இந்திய தேர்வுக் குழுவின் ஒரு பகுதியாக இருந்த முன்னாள் இந்திய இடது கை சுழற்பந்து வீச்சாளர் சுனில் ஜோஷி 2023 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் யுஸ்வேந்திர சாஹலுக்கு பதில் குல்தீப் யாதவ் சேர்க்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
இந்திய அணியிலிருந்து குல்தீப் யாதவ்வை நீக்கிய பிறகு உத்தரப்பிரதேச அணியில் அவருடன் பணியாற்றியிருக்கிறேன். கையை சுழற்றுவதில் முன்பு மெதுவாக சுழற்றினார். இப்போது கொஞ்சம் வேகமாக சுழற்றுகிறார். அவர் வீசும் திசையும் நன்றாக உள்ளது. முன்பை விட இப்போது பந்து அதிகமாக ஸ்பின் ஆகிறது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக குல்தீப் யாதவ்வை டெஸ்ட் போட்டிகளில் வைத்துக் கொள்ள வேண்டும். பிட்ச், மைதானம், ஊர் இதெல்லாம் கணக்கில் எடுத்துக் கொள்ளக் கூடாது. குல்தீப் எப்படி வீசுகிறார் என்பதைத்தான் பார்க்க வேண்டும்.
சமீபத்தில் அவர் ஆடிய டெஸ்ட், ஒருநாள், போட்டிகளில் அவர் விக்கெட்டுகளை வீழ்த்தும் விதங்களைப் பார்க்க வேண்டும், அவரிடம் ஆட்டமிழந்தவர்கள் 30 யார்டு சர்க்கிளுக்குள் கேட்ச் ஆகி அவுட் ஆகின்றனர். அல்லது பவுல்டு, எல்.பி.என்று வீழ்த்துகிறார். இது பெரிய விஷயம்.
சாஹல் கையை மெதுவாகச் சுழற்றுகிறார் இதனால் பந்தில் ஸ்பின் இல்லாமல் போய் விடுகிறது. இதனால் பேட்டர்கள் அவர் பந்துகளை எளிதில் அடித்து விட முடிகிறது. இப்போதெல்லாம் உடல் செயற்பாடில்லாமல் வெறுமனே கையால் பந்தை ரிலீஸ் மட்டுமே செய்கிறார். இதனால் பிளாட்டாக விழுகிறது. ஆனால் குல்தீப் அந்த விதத்தில் நல்ல நிலையில் இருக்கிறார்.
ஆகவே உலகக்கோப்பை போட்டிகளில் குல்தீப் யாதவ்வுக்குத்தான் இடமளிக்க வேண்டும்.
இவ்வாறு சுனில் ஜோஷி கூறினார்.
- முதலில் ஆடிய ராஜஸ்தான் 203 ரன்கள் குவித்தது.
- அடுத்து ஆடிய ஐதராபாத் 131 ரன்னில் ஆல் அவுட்டானது.
ஐதராபாத்:
ஐதராபாத்தில் நேற்று மாலை நடந்த 4-வது லீக்கில் முன்னாள் சாம்பியன்களான ஐதராபாத் சன்ரைசர்சும், ராஜஸ்தான் ராயல்சும் மல்லுக்கட்டின. டாஸ் ஜெயித்த ஐதராபாத் அணியின் பொறுப்பு கேப்டன் புவனேஷ்வர் குமார் முதலில் ராஜஸ்தானை பேட்டிங் செய்ய அழைத்தார்.
அதன்படி, முதலில் ஆடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 203 ரன்கள் குவித்தது. நடப்பு தொடரில் 200-ஐ கடந்த முதல் அணி என்ற பெருமையை ராஜஸ்தான் பெற்றது.
ஜோஸ் பட்லர் 54 ரன்னில் அவுட்டானார்.ஜெய்ஸ்வால் 54 ரன்னில் அவுட்டானார். கேப்டன் சாம்சன் நிலைத்து நின்று அரைசதம் அடித்து 55 ரன் எடுத்தார். பவர்-பிளேயான முதல் 6 ஓவரில் ராஜஸ்தான் 85 ரன் திரட்டியது.
இதையடுத்து, 204 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஐதராபாத் அணி 8 விக்கெட்டுக்கு 131 ரன் மட்டுமே எடுத்து தோற்றது. இதன்மூலம் ராஜஸ்தான் 72 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அப்துல் சமத் 32 ரன்களுடனும், உம்ரான் மாலிக் 19 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
ராஜஸ்தான் தரப்பில் சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இந்நிலையில், ராஜஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல் ஐதராபாத் வீரர் ஹாரி புரூக் விக்கெட்டை வீழ்த்தியபோது அது ஒட்டுமொத்த டி20 போட்டிகளில் அவரது 300-வது விக்கெட்டாக (265 ஆட்டம்) அமைந்தது. இந்த மைல்கல்லை எட்டிய முதல் இந்தியர் என்ற சாதனையை சாஹல் படைத்தார்.
அவர் நேற்று எடுத்த 4 விக்கெட்டையும் சேர்த்து ஐ.பி.எல்.-ல் இதுவரை 170 விக்கெட்டுகள் கைப்பற்றி இருக்கிறார். ஐ.பி.எல்.-ல் அதிக விக்கெட் எடுத்தவர்களின் வரிசையில் ஓய்வு பெற்ற வெய்ன் பிராவோ (183 விக்கெட்), மலிங்கா (170 விக்கெட்) ஆகியோருக்கு அடுத்த இடத்தில் சாஹல் உள்ளார்.






