என் மலர்tooltip icon

    விளையாட்டு

    விவாகரத்து குறித்து மனம் திறந்த சாஹலின் முன்னாள் மனைவி
    X

    விவாகரத்து குறித்து மனம் திறந்த சாஹலின் முன்னாள் மனைவி

    • தீர்ப்பு வழங்கப்படவிருந்தபோது நான் மிகவும் உணர்ச்சிவசப்பட்டேன்.
    • இணையத்தில் பரவும் வதந்திகள் எனக்கு மட்டுமில்லை யாருக்குமே நடக்கக்கூடாது என்று நான் நினைக்கிறேன்.

    இந்திய கிரிக்கெட் வீரர் யுஸ்வேந்திர சாஹல் நடனக் கலைஞரான தனஸ்ரீ வர்மாவை 2020 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். அதன் பின் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் இரண்டு ஆண்டுகள் பிரிந்து வாழ்ந்தனர். இதையடுத்து, இருவரும் விவாகரத்து கோரி மும்பை குடும்ப நீதிமன்றத்தை நாடினார்கள்.

    இவர்கள் இருவரும் ஏற்கனவே 18 மாதங்கள் பிரிந்து வாழ்ந்துவிட்டதால், நீதிமன்றம் மார்ச் மாதம் விவாகரத்து கொடுத்தது. மேலும், கிரிக்கெட் வீரர் தனஸ்ரீக்கு ரூ. 4.75 கோடி ஜீவனாம்சம் வழங்கியுள்ளார்.

    இவர்கள் இருவரும் பிரிந்த பிறகு யுஸ்வேந்திர சாஹலின் ரசிகர்கள் தனஸ்ரீ வர்மாவை இணையத்தில் கடுமையாக விமர்சனம் செய்து கேலி செய்து வந்தனர்.

    இந்நிலையில் விவாகரத்து பற்றி இத்தனை நாட்களாக பதில் எதுவும் அளிக்காமல் இருந்த தனஸ்ரீ வர்மா முதன் முறையாக மனம் திறந்து பேசி உள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    தனிப்பட்ட வாழ்க்கை என்று நாம் சொல்வதற்கு ஒரு காரணம் உள்ளது. ஏன் என்றால், அது ரகசியமாக இருக்க வேண்டும். ஒரு நாணயத்திற்கு இரண்டு பக்கங்கள் இருக்கின்றன. ஒரு கை ஓசை தராது. நான் ஒரு விஷயம் பற்றி பேசவில்லை என்பதற்காக பலரும் தங்களுக்கு தெரியாத விஷயத்தை பேசுவது சரியில்லை.

    இதுபோன்று இணையத்தில் பரவும் வதந்திகள் எனக்கு மட்டுமில்லை யாருக்குமே நடக்கக்கூடாது என்று நான் நினைக்கிறேன். என் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பேசுவதற்கு நிறைய விஷயங்கள் உள்ளன. அதை இனி வரும் காலத்தில் தெளிவாக கூறுகிறேன். வாழ்க்கையில் ஒரு விஷயத்தை கடந்து சென்று பெரிய விஷயங்களைச் சாதிக்க விரும்பினால், அதை மீண்டும் மீண்டும் பேசத் தேவையில்லை. என் பக்க நியாயம் இருக்கிறது.

    தீர்ப்பு வழங்கப்படவிருந்தபோது நான் அங்கே நின்றபோது எனக்கு இன்னும் நினைவிருக்கிறது. மனதளவில் நாங்கள் மிகவும் தயாராக இருந்தபோதிலும், நான் மிகவும் உணர்ச்சிவசப்பட்டேன். எல்லோர் முன்னிலையிலும் நான் அலற ஆரம்பித்தேன். அந்த நேரத்தில் நான் என்ன உணர்ந்தேன் என்பதை என்னால் வெளிப்படுத்தக்கூட முடியவில்லை. நான் அழுது கொண்டே இருந்தேன் , அலறி அழுது கொண்டே இருந்தேன் என்பது எனக்கு நினைவிருக்கிறது . நிச்சயமாக! அதெல்லாம் நடந்தது, அவர் (சாஹல்) முதலில் வெளியேறினார்.

    என்று தனஸ்ரீ வர்மா அந்த பேட்டியில் கூறியுள்ளார்.

    Next Story
    ×