என் மலர்
கிரிக்கெட் (Cricket)
- சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் முதல் போட்டி ஏப்ரல் 3-ந்தேதி நடக்கிறது.
- ஏப்ரல் 11-ந் தேதி 2-வது ஆட்டம் சேப்பாக்கத்தில் நடக்கிறது.
19-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வருகிற 28-ந்தேதி முதல் மே 31-ந்தேதி வரை நடக்கிறது.
இந்தப்போட்டிக்கான முதல் கட்ட அட்டவணை நேற்று வெளியிடப்பட்டது. ஏப்ரல் 12-ந்தேதி வரை 20 ஆட்டங்களுக்கான விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது.
பெங்களூரில் நடை பெறும் தொடக்க ஆட்டத் தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதுகின்றன. சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்சை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டி கவுகாத்தியில் வருகிற 30-ந்தேதி நடக்கிறது.
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் முதல் போட்டி ஏப்ரல் 3-ந்தேதி நடக்கிறது. இதில் பஞ்சாப் அணியுடன் சி.எஸ்.கே. மோதுகிறது. ஏப்ரல் 11-ந் தேதி 2-வது ஆட்டம் சேப்பாக்கத்தில் நடக்கிறது. இதில் டெல்லி கேப்பிடல்சுடன் மோதுகிறது.
இந்த நிலையில் தோனி இந்த சீசனில் நடைபெறும் அனைத்து ஆட்டத்திலும் விளையாடுவார் என்று சி.எஸ்.கே. அணி தெரிவித்துள்ளது.
இது குறித்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை நிர்வாக அதிகாரி கே.எஸ். விஸ்வநாதன் கூறியதா வது:-
என்னை பொறுத்தவரை தோனி அனைத்து போட்டிகளிலும் விளையாடுவார். இது குறித்து அவர் தான் முடிவு செய்ய வேண்டும். அணி நிர்வாகம் அவரிடம் ஆலோசித்து அவரது பங்கு குறித்து இறுதி முடிவு எடுக்கும்.
தோனி பேட்ஸ்மேனாக ஆடுவாரா அல்லது விக்கெட் கீப்பராக விளையாடுவாரா அல்லது தாக்கத்தை ஏற்படுத்தும் வீரராக இருப்பாரா? என்பது குறித்து பின்னர் முடிவு செய்யப்படும்.
20 ஓவர் உலக கோப்பையை இந்திய அணி கைப்பற்றியது மகிழ்ச்சி அளிக்கிறது. அதுவும் தொடர்ச்சியாக வென்று உள்ளது. சி.எஸ்.கே. வீரர்களான சஞ்சு சாம்சன், ஷிவம் துபே மிகச்சிறப்பாக செயல்பட்டது எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.
இருவரும் ஐ.பி.எல். போட்டியில் சிறப்பாக செயல்படுவார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது. ஐ.பி.எல். போட்டிக்காக சி.எஸ்.கே.வீரர்களின் பயிற்சி நல்ல முறையில் நடைபெற்று வருகிறது.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
- வெஸ்ட் இண்டீஸ் அணி 1975 மற்றும் 1979-ல் உலக கோப்பையை கைப்பற்றியது.
- விவியன் ரிச்சர்ட்சும் இந்திய அணியை புகழ்ந்து உள்ளார்.
சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி சமீபத்தில் 20 ஓவர் உலக கோப்பையை கைப்பற்றியது. 3வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றிய முதல் நாடு என்ற புதிய வரலாற்றை படைத்தது.
இந்திய அணியை முன்னாள் வீரர்கள் மட்டுமின்றி வெளிநாட்டு பிரபலங்களும் வெகுவாக பாராட்டி வருகிறார்கள்.
அந்த வகையில் வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் கேப்டனும், அதிரடி பேட்ஸ்மேனுமான விவியன் ரிச்சர்ட்சும் இந்திய அணியை புகழ்ந்து உள்ளார். இந்தியா தனது கிரிக்கெட்டை வேறு நிலைக்கு எடுத்து சென்று உள்ளது என்று பாராட்டி உள்ளார்.
இது தொடர்பாக ரிச்சர்ட்ஸ் கூறியதாவது:-
ஒரு நாள் ஆட்டம் மற்றும் 20 ஓவர் போட்டிகளில் இந்திய அணி கிரிக்கெட்டை வேறு நிலைக்கு எடுத்து சென்றுள்ளதாக நான் கருதுகிறேன். ரசிகர்களுக்கு இது சிறந்த பரிசாகும். ஏனென்றால் அவர்கள் இந்த விளையாட்டின் மீது காட்டும் அன்பும், ஆர்வமும்தான் இதற்கு காரணம். இந்த அன்பும், ஆதரவும் விளையாடப்படும் நாட்டுக்கும் கிடைத்த சரியான வெற்றியாக இருந்து உள்ளது.
வெஸ்ட் இண்டீஸ் அணி 1975 மற்றும் 1979-ல் உலக கோப்பையை கைப்பற்றியது. எனவே நாங்கள் கிரிக் கெட்டில் பெரிய பங்கு வகிக்கிறோம். கடந்த காலங்களில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு ரசிகர்களாக இருந்தவர்கள் தங்களுக்கு கிடைத்த சில சிறந்த தருணங்களை நிச்சயமாக நினைவில் வைத்திருப்பார்கள்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
1975, 1979-ல் வெஸ்ட் இண்டீஸ் உலக கோப் பையை வெல்ல ரிச்சர்ட்ஸ் பங்களிப்பு முக்கியத்துவம் பெற்றதாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
- மூன்றாவது முறையாக டி20 உலகக் கோப்பையை இந்தியா வென்றது.
- காவல் துறை அதிகாரி உறுதிப்படுத்தி இருக்கிறார்.
ஐ.சி.சி. நடத்திய டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. மூன்றாவது முறையாக டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணி வரலாற்று சாதனை படைத்தது.
கோப்பையை வென்ற நிலையில், இந்திய அணி வெற்றியை கொண்டாடி தீர்த்தது. வெற்றிக் கொண்டாட்டத்தின் போது, இந்திய வீரர் ஹர்திக் பாண்ட்யா தேசிய கொடியை அவமதித்து விட்டதாக வழக்கறிஞர் ஒருவர் பூனே காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் இந்திய வீரர் ஹர்திக் பாண்ட்யாவுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்திய வீரர் ஹர்திக் பாண்ட்யா தேசிய கொடியை அவமதித்ததை எதிர்த்து வழக்கறிஞர் வஜித் கான், சிவாஜி நகர் காவல் நிலையத்தில் புகார் பெறப்பட்டதாக காவல் துறை அதிகாரி உறுதிப்படுத்தி இருக்கிறார். தனது புகாரில் அவர், பாண்ட்யா வெற்றிக் கொண்டாட்டத்தின் போது தேசிய கொடியை தன் மீது போர்த்திக் கொண்டு ஆபாச நடத்தையில் ஈடுபட்டதாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இந்த செயல் தொடர்புடைய சட்டத்தின் கீழ் குற்றமாகும், மேலும் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். தேசிய கொடியின் கண்ணியத்தை மதிப்பது ஒவ்வொரு குடிமகனின் கடமையாகும், என்று அவர் தனது புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
- பரிசுத் தொகை விவரங்களை வெளியிட்டுள்ளது.
- பி.சி.சி.ஐ. ரூ. 131 கோடி பரிசுத்தொகை அறிவித்தது.
2026 டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த வாரம் முடிந்தது. இந்தத் தொடரில் இந்திய அணி சாம்பியன் பட்டம் பெற்று சாதனை படைத்தது. சாம்பியன் பட்டம் வென்ற இந்திய அணிக்கு பாராட்டுக்கள் ஒருபக்கமும், பரிசு அறிவிப்புகள் மறுப்பக்கமும் வெளியாகி வருகிறது. இந்த வரிசையில், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) ஒவ்வொரு அணிக்கும் வழங்கப்படும் பரிசுத் தொகை விவரங்களை வெளியிட்டுள்ளது.
இதில் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு அதிகபட்சமாக ரூ. 24.25 கோடியும், நியூசிலாந்து அணிக்கு ரூ. 13.08 கோடியும், தென் ஆப்பிரிக்கா அணிக்கு ரூ. 9.24 கோடியும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் இங்கிலாந்து அணிக்கு ரூ. 8.96 கோடியும், பாகிஸ்தான் அணிக்கு ரூ. 4.80 கோடியம் வழங்கப்படுகிறது.
முன்னதாக கோப்பையை வென்ற இந்திய அணிக்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பி.சி.சி.ஐ. ரூ. 131 கோடி பரிசுத்தொகை அறிவித்தது. இந்தத் தொகை அணியில் இடம்பெற்ற வீரர்கள், பயிற்சியாளர் மற்றும் பணியாளர் குழுவினருக்கு பகிர்ந்து அளிக்கப்பட உள்ளது.
பரிசுத் தொகை மொத்த பட்டியல்:
இந்தியா - $2,639,423 (இந்திய மதிப்பில் 24.25 கோடி)
நியூசிலாந்து - $1,422,692 (இந்திய மதிப்பில் 13.08 கோடி)
தென்னாப்பிரிக்கா - $1,005,577 (இந்திய மதிப்பில் 9.24 கோடி)
இங்கிலாந்து - $974,423 (இந்திய மதிப்பில் 8.96 கோடி)
வெஸ்ட் இண்டீஸ் - $538,269 (இந்திய மதிப்பில் 4.96 கோடி)
பாகிஸ்தான் - $522,692 (இந்திய மதிப்பில் 4.80 கோடி)
ஜிம்பாப்வே - $491,538 (இந்திய மதிப்பில் 4.53 கோடி)
இலங்கை - $475,962 (இந்திய மதிப்பில் 4.39 கோடி)
ஆப்கானிஸ்தான் - $309,808 (இந்திய மதிப்பில் 2.86 கோடி)
ஆஸ்திரேலியா - $309,808 (இந்திய மதிப்பில் 2.86 கோடி)
அமெரிக்கா - $309,808 (இந்திய மதிப்பில் 2.86 கோடி)
ஸ்காட்லாந்து - $278,654 (இந்திய மதிப்பில் 2.57 கோடி)
அயர்லாந்து - $271,731 (இந்திய மதிப்பில் 2.50 கோடி)
இத்தாலி - $256,154 (இந்திய மதிப்பில் 2.36 கோடி)
நெதர்லாந்து - $256,154 (இந்திய மதிப்பில் 2.36 கோடி)
யுஏஇ - $256,154 (இந்திய மதிப்பில் 2.36 கோடி)
நேபாளம் - $256,154 (இந்திய மதிப்பில் 2.36 கோடி)
கனடா - $225,000 (இந்திய மதிப்பில் 2.07 கோடி)
நமீபியா - $225,000 (இந்திய மதிப்பில் 2.07 கோடி)
ஓமன் - $225,000 (இந்திய மதிப்பில் 2.07 கோடி)
- வளைகுடா நாடுகளில் போர் வெடித்துள்ளது.
- இதனால் இந்தப் போட்டிகளை நடத்த முடியாத சூழல் ஏற்பட்டது.
துபாய்:
ஆப்கானிஸ்தான், இலங்கை அணிகளுக்கு இடையே துபாயில் கிரிக்கெட் போட்டி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. முதலில் டி20 தொடரும், அதைத் தொடர்ந்து ஒருநாள் போட்டிகளும் நடத்த முடிவானது.
இரு அணிகள் இடையிலான டி20 போட்டிகள் மார்ச் 13, 15, 17 ஆகிய தேதிகளில் ஷார்ஜாவிலும், தொடர்ந்து, மார்ச் 20, 22, 25 ஆகிய தேதிகளில் துபாய் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் ஒருநாள் போட்டிகளை நடத்தவும் முடிவுசெய்யப்பட்டது.
இந்நிலையில், வளைகுடா நாடுகளில் போர் வெடித்துள்ளதால், ஆப்கன், இலங்கை அணிகளுக்கு இடையிலான போட்டிகளை நடத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து போட்டிகளை தள்ளிவைப்பது என முடிவானது.
- முதல் 20 போட்டிகளுக்கான அட்டவணையில் CSK அணி 4 போட்டிகளில் விளையாடுகிறது.
- CSK அணி விளையாடும் 2 போட்டிகள் சென்னையில் நடைபெறுகிறது.
19-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வருகிற 28-ந் தேதி முதல் மே 31-ந் தேதி வரை பல்வேறு நகரங்களில் நடைபெறுகிறது.
தமிழ்நாடு, மேற்கு வங்காளம், கேரளா, அசாம், புதுச்சேரி ஆகிய 5 மாநிலங்களில் சட்டசபை சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளதால் ஐ.பி.எல். அட்டவணை வெளியிடுவதில் தாமதம் நிலவி வந்தது.
இந்நிலையில் 2026 ஐபிஎல் தொடரின் முதல் 20 போட்டிகளுக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் மார்ச் 28ம் தேதி நடைபெறவுள்ள 2026 ஐ.பி.எல். தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் பெங்களூரு அணியுடன் ஐதராபாத் அணி மோதுகிறது.
முதல் 20 போட்டிகளுக்கான அட்டவணையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4 போட்டிகளில் விளையாடுகிறது. இதில் 2 போட்டிகள் சென்னையில் நடைபெறுகிறது.
மார்ச் 30 ஆம் தேதி இரவு கவுகாத்தியில் நடைபெறும் போட்டியில் ராஜஸ்தான் அணியை சென்னை அணி எதிர்கொள்கிறது. ஏப்ரல் 3 ஆம் தேதி இரவு சென்னையில் நடைபெறும் போட்டியில் பஞ்சாப் அணியை சென்னை அணி எதிர்கொள்கிறது.
ஏப்ரல் 5 ஆம் தேதி இரவு பெங்களூரில் நடைபெறும் போட்டியில் பெங்களூரு அணியை சென்னை அணி எதிர்கொள்கிறது. ஏப்ரல் 11 ஆம் தேதி இரவு சென்னையில் நடைபெறும் போட்டியில் டெல்லி அணியை சென்னை அணி எதிர்கொள்கிறது.
- முதல் போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெறுகிறது
- ஐ.பி.எல். தொடர் வருகிற 28-ந் தேதி முதல் மே 31-ந் தேதி வரை நடைபெறுகிறது.
19-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வருகிற 28-ந் தேதி முதல் மே 31-ந் தேதி வரை பல்வேறு நகரங்களில் நடைபெறுகிறது.
தமிழ்நாடு, மேற்கு வங்காளம், கேரளா, அசாம், புதுச்சேரி ஆகிய 5 மாநிலங்களில் சட்டசபை சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளதால் ஐ.பி.எல். அட்டவணை வெளியிடுவதில் தாமதம் நிலவி வந்தது.
இந்நிலையில் 2026 ஐபிஎல் தொடரின் முதல் 20 போட்டிகளுக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் மார்ச் 28ம் தேதி நடைபெறவுள்ள 2026 ஐ.பி.எல். தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் பெங்களூரு அணியுடன் ஐதராபாத் அணி மோதுகிறது.
5 மாநில தேர்தல் தேதி அறிவிப்புக்கு பிறகு மீதமுள்ள அட்டவணை வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
- முதல் போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெறுகிறது
- ஐ.பி.எல். தொடர் வருகிற 28-ந் தேதி முதல் மே 31-ந் தேதி வரை நடைபெறுகிறது.
19-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வருகிற 28-ந் தேதி முதல் மே 31-ந் தேதி வரை பல்வேறு நகரங்களில் நடைபெறுகிறது.
தமிழ்நாடு, மேற்கு வங்காளம், கேரளா, அசாம், புதுச்சேரி ஆகிய 5 மாநிலங்களில் சட்டசபை சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளதால் ஐ.பி.எல். அட்டவணை வெளியிடுவதில் தாமதம் நிலவி வந்தது.
இந்தநிலையில் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் மார்ச் 28ம் தேதி நடைபெறவுள்ள 2026 ஐ.பி.எல். தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் பெங்களூரு அணியுடன் ஐதராபாத் அணி மோதவுள்ளது என்று ஐபிஎல் நிர்வாகம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
- உலகக்கோப்பை தோல்வி எதிரொலியாக பாகிஸ்தான் அணியில் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
- முன்னாள் கேப்டன் பாபர் அசாம், பஹர் ஜமான், சைம் அயூப், நசீம் ஷா உள்ளிட்டோர் கழற்றி விடப்பட்டனர்.
20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் சூப்பர் 8 சுற்றோடு வெளியேறிய பாகிஸ்தான் அணி அடுத்ததாக வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது.
உலகக்கோப்பை தோல்வி எதிரொலியாக பாகிஸ்தான் அணியில் அதிரடி மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. மாஸ் சதாகத், ஷமில் ஹூசைன், காஜி கோரி, சாத் மசூத், அப்துல் சமாத் ஆகிய புதுமுக வீரர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.
வேகப்பந்து வீச்சாளர் ஹாரிஸ் ரவுப் மீண்டும் அழைக்கப்பட்டுள்ளார். முன்னாள் கேப்டன் பாபர் அசாம், பஹர் ஜமான், சைம் அயூப், நசீம் ஷா உள்ளிட்டோர் கழற்றி விடப்பட்டனர்.
இன்று டாக்காவில் முதல் ஒருநாள் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற வங்கதேசம் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் அணி வங்கதேசத்தின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. 41 ரன்கள் அடித்திருந்த பொது முதல் விக்கெட்டை இழந்த பாகிஸ்தான் 82 ரன்கள் அடித்திருந்த போது 9 விக்கெட்டுகளை இழந்தது. அதன்பிறகு பகீம் அஷ்ரப் 37 ரன்கள் அடித்ததால் பாகிஸ்தான் அணி 114 ரன்களுக்கு சுருண்டது.
இதையடுத்து 115 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வங்கதேச அணி 15.1 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 115 ரன்கள் எடுத்து எளிதாக வெற்றி பெற்றது.
- மதீஷா பத்திரனாவை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ரூ.18 கோடிக்கு ஏலம் எடுத்தது.
- நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் இருந்து பத்திரனா விலகினார்ர்.
19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்கள் மினி ஏலத்தில் இலங்கையைச் சேர்ந்த மதீஷா பத்திரனாவை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ரூ.18 கோடிக்கு ஒப்பந்தம் செய்தது.
இதனுடையே இலங்கை அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் பத்திரனா காலில் ஏற்பட்ட தசைப்பிடிப்பு காரணமாக நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் இருந்து விலகினார்ர்.
இந்நிலையில், காயத்தில் இருந்து முழுமையாக குணமடையாத கொல்கத்தா வீரர் மதீஷா பத்திரனா நடப்பு ஐபிஎல் தொடரில் பங்கேற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
டி20 உலக கோப்பை தொடரில் காயமடைந்த அவர் தற்போது மருத்துவ குழுவின் தீவிர கண்காணிப்பில் உள்ளார்.
- ஐ.பி.எல். தொடர் வருகிற 28-ந் தேதி முதல் மே 31-ந் தேதி வரை நடைபெறுகிறது.
- முதல் போட்டியில் பெங்களூரு அணியுடன் சென்னை அணி மோதவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
19-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வருகிற 28-ந் தேதி முதல் மே 31-ந் தேதி வரை பல்வேறு நகரங்களில் நடைபெறுகிறது. இதற்கான அட்டவணை இன்னும் வெளியாகவில்லை.
தமிழ்நாடு, மேற்கு வங்காளம், கேரளா, அசாம், புதுச்சேரி ஆகிய 5 மாநிலங்களில் சட்டசபை சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளதால் ஐ.பி.எல். அட்டவணை வெளியிடுவதில் தாமதம் நிலவி வருகிறது.
இந்தநிலையில் ஐ.பி.எல். போட்டிக்கான முதல்கட்ட அட்டவணை இன்று இரவுக்குள் அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் மார்ச் 28ம் தேதி நடைபெறவுள்ள 2026 ஐ.பி.எல். தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் பெங்களூரு அணியுடன் சென்னை அணி மோதவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இதனிடையே சிஎஸ்கேவின் ஃபீல்டிங் பயிற்சியாளராக சுரேஷ் ரெய்னா நியமிக்கப்படவுள்ளார் என இணையத்தில் தகவல் பரவியது.
இதுகுறித்து பேசிய சிஎஸ்கே அணியின் CEO காசி விஸ்வநாதன், "சிஎஸ்கேவின் ஃபீல்டிங் பயிற்சியாளராக சுரேஷ் ரெய்னா நியமிக்கப்படவுள்ளார் என பரவும் தகவலில் உண்மையில்லை. எங்களது பயிற்சியாளர்கள் குழுவில் எந்த மாற்றமும் இல்லை" என்று தெரிவித்தார்.
- அபிஷேக் சர்மா 875 புள்ளிகள் பெற்று முதல் இடத்தில் நீடிக்கிறார்.
- இஷான் கிஷன் 4-வது இடத்தில் இருந்து 2-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
டி20 உலகக் கோப்பை முடிவடைந்த நிலையில் ஐசிசி, டி20 பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசையை வெளியிட்டுள்ளது. நியூசிலாந்துக்கு எதிராக இறுதிப் போட்டியில் 21 பந்தில் 52 ரன்கள் விளாசிய அபிஷேக் சர்மா 875 புள்ளிகளுடன் முதல் இடத்தை தக்கவைத்துள்ளார்.
அரையிறுதியில் இங்கிலாந்துக்கு எதிராக 18 பந்தில் 39 ரன்கள், இறுதிப் போட்டியில் நியூசிலாந்துக்கு எதிராக 25 பந்தில் 52 ரன்கள் விளாசிய இஷான் கிஷன் 4-வது இடத்தில் இருந்து 2-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். இவர் 871 புள்ளிகள் பெற்றுள்ளார். அபிஷேக் சர்மாவை தொட இன்னும் 4 புள்ளிகள் மட்டுமே தேவை.
பாகிஸ்தானின் சஹிப்சதா ஃபர்ஹான் 2-வது இடத்தில் இருந்து 3-வது இடத்திற்க சரிந்துள்ளார். திலக் வர்மா 6-வது இடத்தில் இருந்து 7-வது இடத்திற்கு சரிந்துள்ளார்.
நியூசிலாந்தின் டிம் செய்பெர்ட் 4 இடங்களில் முன்னேறி 6-வது இடத்தை பிடித்துள்ளார். சஞ்சு சாம்சன் 18 இடங்களில் முன்னேறி 22-வது இடத்தை பிடித்துள்ளார்.
பந்து வீச்சு தரவரிசையில் வருண் சக்ரவர்த்தி முதல இடத்தில் இருநது 2-வது இடத்திற்கு பின் தங்கியுள்ளார். பும்ரா 7-வது இடத்தில் இருந்து 6-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.






