என் மலர்
கிரிக்கெட் (Cricket)
- கபில்தேவ் 12 முறை 5 விக்கெட்டுகள் கைப்பற்றி இருந்ததே சாதனையாக இருந்தது.
- தற்போது கபில்தேவின் வாழ்நாள் சாதனையை பும்ரா முறியடித்துள்ளார்.
லண்டன்:
இங்கிலாந்து, இந்தியா அணிகள் இடையிலான 3-வது போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 112.3 ஓவரில் 387 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. சிறப்பாக ஆடிய ஜோ ரூட் 104 ரன்கள் எடுத்தார். ஜேமி ஸ்மித், கார்ஸ் அரை சதம் கடந்தனர்.
இந்தியா சார்பில் ஜஸ்பிரித் பும்ரா 5 விக்கெட்டும், சிராஜ், நிதிஷ் ரெட்டி தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இந்நிலையில், இந்த ஆட்டத்தில் கைப்பற்றிய 5 விக்கெட்டையும் சேர்த்து ஜஸ்பிரித் பும்ரா இதுவரை வெளிநாடுகளில் நடைபெறும் டெஸ்ட் போட்டிகளில் 13 முறை 5 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். இதன்மூலம் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் வெளிநாடுகளில் அதிக முறை 5 விக்கெட்டுகள் கைப்பற்றிய இந்திய வீரர் என்ற மாபெரும் சாதனையை படைத்துள்ளார்.
முன்னதாக கபில் தேவ் 12 முறை 5 விக்கெட்டுகள் கைப்பற்றி இருந்ததே சாதனையாக இருந்தது. தற்போது கபில் தேவின் அந்த வாழ்நாள் சாதனையை பும்ரா முறியடித்துள்ளார்.
ஜஸ்பிரித் பும்ரா - 13 முறை 5 விக்கெட், கபில் தேவ் - 12 முறை விக்கெட், அனில் கும்ப்ளே - 10 முறை 5 விக்கெட் எடுத்துள்ளனர்.
- இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 387 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
- இந்தியா சார்பில் பும்ரா 5 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.
லார்ட்ஸ்:
இங்கிலாந்து, இந்தியா அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி லார்ட்சில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, இங்கிலாந்து அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக ஜாக் கிராலே, பென் டக்கெட் ஜோடி நிதானமாக ஆடியது.
ஒல்லி போப் 44 ரன்னில் அவுட்டானார். பென் டக்கெட் 23 ரன்னில் ஆட்டமிழந்தார். ஜாக் கிராலே 18 ரன்னில் வெளியேறினார். ஹாரி புரூக் 11 ரன்னில் ஆட்டமிழந்தார். பொறுப்புடன் ஆடிய ஜோ ரூட் அரை சதம் கடந்தார்.
முதல் நாள் முடிவில் இங்கிலாந்து 4 விக்கெட்டுக்கு 251 ரன்கள் எடுத்திருந்தது. ஜோ ரூட் 99 ரன்னும், பென் ஸ்டோக்ஸ் 39 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
இந்நிலையில், இரண்டாம் நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. பென் ஸ்டோக்ஸ் 44 ரன்னில் வெளியேறினார். சிறப்பாக ஆடிய ஜோ ரூட் சதமடித்து 104 ரன்னில் அவுட்டானார். கிறிஸ் வோக்ஸ் டக் அவுட்டானார். 271 ரன்களுக்கு 7 விக்கெட் இழந்தது.
ஜேமி ஸ்மித்துடன் பிரைடன் கார்ஸ் இணைந்தார். இருவரும் அதிரடியாக ஆடினர். 8வது விக்கெட்டுக்கு 84 ரன்கள் சேர்த்த நிலையில் ஜேமி ஸ்மித் அரை சதம் கடந்தௌ 51 ரன்களில் அவுட்டானார். கார்ஸ் 56 ரன்னில் வெளியேறினார்.
இறுதியில், இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 387 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இந்தியா சார்பில் பும்ரா 5 விக்கெட்டும், சிராஜ், நிதிஷ் குமார் ரெட்டி தலா 2 விக்கெட்டும், ஜடேஜா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, இந்திய அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால் 13 ரன்னில் வெளியேறினார்.
அடுத்து கே.எல்.ராகுலுடன் கருண் நாயர் இணைந்தார். 2வது விக்கெட்டுக்கு 61 ரன்கள் சேர்த்த நிலையில் கருண் நாயர் 40 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து இறங்கிய கேப்டன் சுப்மன் கில் 16 ரன்னில் வெளியேறினார். பொறுப்புடன் ஆடிய கே.எல்.ராகுல் அரை சதம் கடந்தார்.
இறுதியில், இரண்டாம் நாள் முடிவில் இந்தியா முதல் இன்னிங்சில் 3 விக்கெட்டுக்கு 145 ரன்கள் எடுத்துள்ளது. கே.எல்.ராகுல் 53 ரன்னும், ரிஷப் பண்ட் 19 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.
- ராகுல் டிராவிட் 210 கேட்ச்கள் பிடித்திருந்தார். இதுதான் சாதனையாக இருந்தது.
- ஜெயவர்த்தனே 3ஆவது இடத்தில் உள்ளார்.
இந்தியா- இங்கிலாந்து இடையிலான 3ஆவது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 387 ரன்கள் சேர்த்து ஆல்அவுட் ஆனது.
பின்னர் இந்தியா முதல் இன்னிங்சை தொடங்கியது. ஜெய்ஸ்வால் 13 ரன்கள் எடுத்த நிலையில் ஆர்ச்சர் பந்தில் ப்ரூக்கிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து கே.எல். ராகுல் உடன் கருண் நாயர் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நிலைத்து நின்று விளையாடியது. கே.எல். ராகுல் நிதானமாக விளையாட, கருண் நாயர் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
21ஆவது ஓவரை பென் ஸ்டோக்ஸ் வீசினார். இந்த ஓவரின் 2ஆவது பந்து கருண் நாயரின் பேட்டில் உரசி கீப்பருக்கும், முதல் ஸ்லிப்பிற்கு இடையில் சென்றது. இதை முதல் ஸ்லிப்பில் நின்ற ஜோ ரூட் இடது கையால் அபாரமாக கேட்ச் பிடித்தார்.
இந்த கேட்ச் அவருடைய டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 211ஆவது கேட்ச் ஆகும். இதன்மூலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக கேட்ச் பிடித்த பீல்டர் (கீப்பர் அல்லாத வீரர்) என்ற சாதனையை படைத்துள்ளார்.
ராகுல் டிராவிட் 210 கேட்ச்கள் பிடித்துள்ளார். ஜெயவர்த்தனே 205 கேட்ச்களும், ஸ்டீவ் ஸ்மித் மற்றும் கல்லீஸ் தலா 200 கேட்ச்களும், பாண்டிங் 196 கேட்ச்களும் பிடித்துள்ளனர்.
- ஜோ ரூட் சதம் அடிக்க ஸ்மித் மற்றும் கார்ஸ் அரைசதம் அடித்தனர்.
- பும்ரா 5 விக்கெட் வீ்ழ்த்தினார்.
இந்தியா- இங்கிலாந்து இடையிலான 3ஆவது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்று இங்கிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது. இங்கிலாந்து அணியில் ஆர்ச்சரும், இந்திய அணியில் பும்ராவும் இடம் பிடித்தனர்.
இந்திய அணியின் பந்து வீச்சை எதிர்கொண்டு இங்கிலாந்து வீரர்கள் அதிவிரைவாக ரன்கள் குவிக்க திணறினர். ஜோ ரூட் மட்டும் நிலைத்து நின்று விளையாடினார். நேற்றைய முதல் நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து 4 விக்கெட் இழப்பிற்கு 251 ரன்கள் எடுத்திருந்தது. ஜோ ரூட் 99 ரன்களும், ஸ்டோக்ஸ் 39 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
இன்று 2ஆவது நாள் ஆட்டம் தொடங்கியது. ஜோ ரூட் முதல் பந்தை பவுண்டரிக்கு விரட்டி சதம் அடித்தார். இது அவரின் 37ஆவது டெஸ்ட் சதமாகும். மறுமுனையில் விளையாடிய ஸ்டோக்ஸ் 44 பந்தில் பும்ரா பந்தில் க்ளீன் போல்டானார். அடுத்து ஸ்மித் களம் இறங்கினார். இவர் 5 ரன்கள் எடுத்திருக்கும்போது முகமது சிராஜ் பந்தில் ஸ்லிப் திசையில் கேட்ச் கொடுத்தார். ஆனால் கே.எல். ராகுல் எளிதான கேட்சை பிடிக்க தவறினார். இந்த கேட்ச் மிஸ் இந்தியாவுக்கு பின்னர் தலைவலியாக அமைந்தது.
மறுமுனையில் ஜோ ரூட் 104 ரன்கள் எடுத்த நிலையில் பும்ரா பந்தில் ஸ்டம்பை பறிகொடுத்தார். அடுத்து வந்த கிறிஸ் வோக்ஸ் முதல் பந்திலேயே ஆட்டம் இழந்தார். பும்ரா அடுத்தடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
இதனால் இங்கிலாந்து 271 ரன்னுக்குள் 7 விக்கெட்டுகளை இழந்தது. 8ஆவது விக்கெட்டுக்கு ஸ்மித் உடன் கார்ஸ் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நிலைத்து நின்று விளையாடியது. ஸ்மித் உணவு இடைவேளைக்கான கடைசி ஓவரில் அரைசதம் அடித்தார். இருவரின் ஆட்டத்தால் இங்கிலாந்தின் ஸ்கோர் 350 ரன்னைக் கடந்தது.
2ஆவது நாள் மதிய உணவு இடைவேளை வரை இங்கிலாந்து 7 விக்கெட் இழப்பிற்கு 353 ரன்கள் எடுத்திருந்தது. அப்போது ஸ்மித் 51 ரன்களுடனும், கார்ஸ் 33 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
உணவு இடைவேளை முடிந்து ஆட்டம் தொடங்கியது. ஸ்மித் 51 ரன்கள் எடுத்த நிலையில் சிராஜ் பந்தில் ஆட்டமிழந்தார். ஸ்மித்-கார்ஸ் ஜோடி 84 ரன்கள் சேர்த்தது. அடுத்து வந்த ஆர்ச்சரை பும்ரா வீழ்த்தினார். இதன்மூலம் பும்ரா 5 விக்கெட் வீழ்த்தினார்.
கடைசி விக்கெட்டுக்கு பஷீர் களம் இறங்கினார். கார்ஸ் அதிரடியாக விளையாட ஆரம்பித்தார். இதனால் அரைசதம் கடந்தார். இறுதியாக 56 ரன்கள் எடுத்த நிலையில் சிராஜ் பந்தில் ஆட்டமிழக்க இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 387 ரன்களில் ஆல்அவுட் ஆனது.
இந்திய அணியில் சிராஜ், நிதிஷ் ரெட்டி தலா 2 விக்கெட் வீழ்த்தினர். ஜடேஜா 1 விக்கெட் வீழ்த்தினார்.
- நேற்று ஒரு விக்கெட் வீழ்த்தியிருந்தார்.
- இன்றைய 2ஆவது நாளில் 4 விக்கெட் வீழ்த்தினார்.
இந்தியா- இங்கிலாந்து இடையிலான 3ஆவது டெஸ்ட் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. நேற்றைய முதல் நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து 4 விக்கெட் இழப்பிற்கு 251 ரன்கள் எடுத்திருந்தது. பும்ரா 1 விக்கெட் வீழ்த்தியிருந்தார்.
இன்று 2ஆவது நாள் ஆட்டம் தொடங்கியது. பும்ரா அபாரமாக பந்து வீசினார். பென் ஸ்டோக்ஸை 44 ரன்னிலும், ஜோ ரூட்டை 44 ரன்னிலும், கிறிஸ் வோக்ஸை டக்அவுட்டிலும் வெளியேற்றினார்.
ஜாஃப்ரா ஆர்ச்சரை (4) க்ளீன் போல்டானார். இதன்மூலம் பும்ரா 5 விக்கெட் வீழ்த்தினார்.
- ஜோ ரூட் தனது 37ஆவது சதத்தை பூர்த்தி செய்தார்.
- ஸ்மித் 5 ரன்னில் இருக்கும்போது கே.எல். ராகுல் கேட்சை தவறவிட்டார்.
இந்தியா- இங்கிலாந்து இடையிலான 3ஆவது டெஸ்ட் போட்டி லண்டன் லார்ட்ஸில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்று இங்கிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது. இங்கிலாந்து அணியில் ஆர்ச்சரும், இந்திய அணியில் பும்ராவுடம் இடம் பிடித்தனர்.
இந்திய அணியின் பந்து வீச்சை எதிர்கொண்டு இங்கிலாந்து வீரர்கள் அதிவிரைவாக ரன்கள் குவிக்க திணறினர். ஜோ ரூட் மட்டும நிலைத்து நின்று விளையாடினார். நேற்றைய முதல் நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து 4 விக்கெட் இழப்பிற்கு 251 ரன்கள் எடுத்திருந்தது. ஜோ ரூட் 99 ரன்களும், ஸ்டோக்ஸ் 39 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
இன்று 2ஆவது நாள் ஆட்டம் தொடங்கியது. ஜோ ரூட் முதல் பந்தை பவுண்டரிக்கு விரட்டி சதம் அடித்தார். இது அவரின் 37ஆவது டெஸ்ட் சதமாகும். மறுமுனையில் விளையாடிய ஸ்டோக்ஸ் 44 பந்தில் பும்ரா பந்தில் க்ளீன் போல்டானார். அடுத்து ஸ்மித் களம் இறங்கினார். இவர் 5 ரன்கள் எடுத்திருக்கும் போது முகமது சிராஜ் பந்தில் ஸ்லிப் திசையில் கேட்ச் கொடுத்தார். ஆனால் கே.எல். ராகுல் எளிதான கேட்சை பிடிக்க தவறினார். இந்த கேட்ச் மிஸ் இந்தியாவுக்கு பின்னர் தலைவலியாக அமைந்தது.
மறுமுனையில் ஜோ ரூட் 104 ரன்கள் எடுத்த நிலையில் பும்ரா பந்தில் ஸ்டம்பை பறிகொடுத்தார். அடுத்து வந்த கிறிஸ் வோக்ஸ் முதல் பந்திலேயே ஆட்டம் இழந்தார். பும்ரா அடுத்தடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
இதனால் இங்கிலாந்து 271 ரன்னுக்குள் 7 விக்கெட்டுகளை இழந்தது. 8ஆவது விக்கெட்டுக்கு ஸ்மித் உடன் கார்ஸ் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நிலைத்து நின்று விளையாடியது. ஸ்மித் உணவு இடைவேளைக்கான கடைசி ஓவரில் அரைசதம் அடித்தார். இருவரின் ஆட்டத்தால் இங்கிலாந்தின் ஸ்கோர் 350 ரன்னைக் கடந்தது.
2ஆவது நாள் மதிய உணவு இடைவேளை வரை இங்கிலாந்து 7 விக்கெட் இழப்பிற்கு 353 ரன்கள் குவித்துள்ளது. இந்த ஜோடி 17.4 ஓவரில் 82 ரன்கள் சேர்த்துள்ளது. உணவு இடைவேளைக்குப் பிறகு ஆட்டம் தொடங்கியதும் இந்த ஜோடியை பிரித்தால் மட்டுமே இந்தியாவுக்கு சாதகமான நிலை உருவாகும்.
- நிதிஷ் குமார் ரெட்டி லார்ட்ஸ் மைதானத்தில் சிறப்பாக பந்து வீசியதை பார்த்து ஆச்சர்யப் பட்டேன்.
- சரியான பகுதியில் தொடர்ந்து பந்தை பிட்ச் செய்தார்.
ஆல்-ரவுண்டரான நிதிஷ் குமார் ரெட்டியை, இந்தியா தொடர்ந்து அணியில் இடம் பெறச் செய்ய வேண்டும் என முன்னாள் வீரர் அனில் கும்ப்ளே வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அனில் கும்ப்ளே கூறியதாவது:-
நிதிஷ் குமார் ரெட்டி லார்ட்ஸ் மைதானத்தில் சிறப்பாக பந்து வீசியதை பார்த்து ஆச்சர்யப் பட்டேன். சரியான பகுதியில் தொடர்ந்து பந்தை பிட்ச் செய்தார். லெக் சைடு ஷார்ட் பால் மூலம் விக்கெட் கிடைத்தது கிஃப்ட். மாற்றாக அவர் ஒழுக்கமாக பந்து வீசினார்.
ஆஸ்திரேலியாவில் விக்கெட் அதிக அளவில் வீழ்த்தவில்லை என்றாலும், நன்றாக பேட்டிங் செய்தார். சதமும் அடித்தார். இதுபோன்ற வீரர் பார்ட்னர்ஷிப்பை உடைக்க அணிக்கு தேவை. வேகப்பந்து வீச்சாளர்களுக்கு ஓய்வு கொடுத்து, அதே நேரத்தில் கட்டுப்பாட்டை நிலைநிறுத்த இதுபோன்ற வீரர் அவசியம்.
ஒரே ஸ்பெல்லில் ஏறக்குறைய 14 ஓவர்கள் வீசினார். இது அவருடைய உடற்தகுதி மற்றும் கட்டுப்பாட்டை வெளிப்படுத்துகிறது. சிறந்த பீல்டர், இளமையானவர். சதம் அடிக்கக் கூடியவர். அடிக்கடி நீக்குவது மற்றும் மாற்றுவது ஆகியவற்றை விட்டுவிட்டு, அவரை தொடர்ந்து அணியில் வைத்திருக்க வேண்டும்.
இவ்வாறு அனில் கும்ப்ளே தெரிவித்துள்ளார்.
லார்ட்ஸ் போட்டியில் இங்கிலாந்தின் தொடக்க வீரர்களை நிதிஷ் குமார் அவுட்டாக்கி, அணிக்கு உத்வேகம் அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- ஜிம்பாப்வே அணிக்கெதிராக 367 ரன்கள் எடுத்திருக்கும்போது முல்டர் டிக்ளேர் அறிவித்தார்.
- லாரா சாதனையை முறியடிக்க வாய்ப்பு இருந்தும், அதை தவறவிட்டார்.
டெஸ்ட் போட்டியில் ஜிம்பாப்வே அணிக்கெதிராக தென்ஆப்பிரிக்கா அணி கேப்டனாக செயல்பட்ட வியான் முல்டர் 367 ரன்கள் எடுத்திருக்கும்போது, முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்வதாக அறிவித்திருந்தார். இது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. அவர் நினைத்திருந்தால் எளிதாக 400 ரன்களை கடந்து லாராவின் சாதனையை முறியடித்திருக்கலாம். ஆனால் அவ்வாறு செய்யவில்லை.
இது தொடர்பாக முல்டர் கூறுகையில் "பிரையன் லாரா ஒரு லெஜண்ட், அந்த அந்தஸ்துள்ள ஒருவர் அந்த சாதனையை தக்க வைத்துக் கொள்வது மிகவும் சிறப்பு வாய்ந்ததாக இருக்கும்.
எனக்கு மீண்டும் அந்த சாதனையை முறியடிக்க வாய்ப்பு கிடைத்தால், நான் இப்போது செய்ததைதான் அப்போதும் செய்வேன். நான் டிக்ளேர் செய்வது குறித்து பயிற்சியாளரிடமும் பேசினேன். சில சாதனைகள் லெஜண்டுகளுடன் இருக்க வேண்டும். அப்படிப்பட்ட லெஜண்டுகளில் ஒருவர் லாரா அவர் தெரிவித்தார்" எனக் கூறியிருந்தார்.
இந்த நிலையில் "லாரா தன்னிடம் பேசினார். அப்போது 400-ஐ நோக்கி சென்றிருக்க வேண்டும். சாதனைகளை முறியடிக்க வேண்டும் என்று அவர் கூறினார். எனக்கு மீண்டும் வாய்ப்பு வந்தால், அவருடைய ஸ்கோரை விட அதிக ஸ்கோர் அடிக்க வேண்டும் அவர் விரும்புகிறார்" என முல்டர் தெரிவித்துள்ளார்.
- முதல் நாள் முடிவில் இங்கிலாந்து 251 ரன்கள் எடுத்துள்ளது.
- அந்த அணியின் ஜோ ரூட் 99 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.
லண்டன்:
இங்கிலாந்து, இந்தியா அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி லார்ட்சில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது. இங்கிலாந்து அணி முதலில் களமிறங்கி நிதானமாக ஆடியது.
பென் டக்கெட் 23 ரன்னிலும், ஜாக் கிராலே 18 ரன்னிலும் அவுட்டாகினர். ஒல்லி போப் 44 ரன்னிலும், ஹாரி புரூக் 11 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். பொறுப்புடன் ஆடிய ஜோ ரூட் அரை சதம் கடந்தார்.
முதல் நாள் முடிவில் இங்கிலாந்து 83 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 251 ரன்கள் எடுத்துள்ளது. ஜோ ரூட் 99 ரன்னும், பென் ஸ்டோக்ஸ் 39 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.
இந்தியா சார்பில் நிதிஷ்குமார் 2 விக்கெட்டும், பும்ரா, ஜடேஜா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
இந்நிலையில், முதல் நாள் ஆட்டத்தின் இறுதிக் கட்டத்தில் பென் ஸ்டோக்ஸ் 39 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தார். ஜோ ரூட் 99 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அவர் ஒரு ரன் ஓட முயற்சி செய்தார். அப்போது பந்தை பிடித்த ஜடேஜா அங்கிருந்து ஜோ ரூட்டை பார்த்து, எங்கே ஓடிப் பாரேன் என சைகையில் செய்தார்.
அதைப் பார்த்து ஜோ ரூட் சிரித்தார். உடனே ஜடேஜா பந்தை கீழே வைத்து, இப்போதாவது ஓடு என கூறினார். ஜோ ரூட் ஓடாததால் பந்தை எடுத்து ஜடேஜா மீண்டும் எறிந்தார். இதை அடுத்து மைதானத்தில் சிரிப்பலை ஏற்பட்டது.
- முதலில் பேட் செய்த மன்ஸ்டர் ரெட்ஸ் அணி 20 ஓவரில் 188 ரன்கள் குவித்தது.
- அதிகபட்சமாக கேப்டன் கர்டிஸ் காம்பெர் 44 ரன்கள் எடுத்தார்.
டப்ளின்:
அயர்லாந்தில் உள்ளூர் டி20 தொடர் நடந்து வருகிறது. இதில் மன்ஸ்டர் ரெட்ஸ், நார்த்-வெஸ்ட் வாரியர்ஸ் அணிகள் மோதிய லீக் போட்டி டப்ளினில் நடந்தது.
முதலில் பேட் செய்த மன்ஸ்டர் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 188 ரன்கள் குவித்தது. கேப்டன் கர்டிஸ் காம்பெர் 44 ரன்னும், பீட்டர் மூர் 35 ரன்னும் எடுத்தனர்.
தொடர்ந்து ஆடிய நார்த்-வெஸ்ட் வாரியர்ஸ் அணி ஒரு கட்டத்தில் 11 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 78 ரன்கள் எடுத்திருந்தது.12வது ஓவரை கர்டிஸ் காம்பெர் வீசினார். இதன் கடைசி 2 பந்தில் வில்சன், கிரஹாம் ஆகியோரை அவுட்டாகினர். மீண்டும் 14வது ஓவரை வீசிய கர்டிஸ், முதல் பந்தில் மெக்பிரைனை (29) அவுட்டாக்கி ஹாட்ரிக் சாதனை படைத்தார். தொடர்ந்து 2 மற்றும் 3-வது பந்தில் மில்லர், ஜோஸ் ஆகியோரை அவுட்டாக்கினார்.
இதனால் நார்த்-வெஸ்ட் வாரியர்ஸ் அணி 88 ரன்களில் சுருண்டு பரிதாபமாக தோற்றது. மன்ஸ்டெர் ரெட்ஸ் அணி 100 ரன்னில் வெற்றி அபார பெற்றது.
இந்நிலையில், அயர்லாந்தின் கர்டிஸ் காம்பெர் 5 பந்தில் 5 விக்கெட் சாய்த்த முதல் வீரர் என்ற வரலாற்று சாதனை படைத்தார்.
ஏற்கனவே, கர்டிஸ் காம்பெர் கடந்த 2021ல் நெதர்லாந்துக்கு எதிரான டி20 போட்டியில் 4 பந்தில் 4 விக்கெட் எடுத்து அசத்தினார்.
- டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது.
- முதலில் களமிறங்கிய இங்கிலாந்து நிதானமாக ஆடி வருகிறது.
லார்ட்ஸ்:
இங்கிலாந்து, இந்தியா அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி லார்ட்சில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, இங்கிலாந்து அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக ஜாக் கிராலே, பென் டக்கெட் ஜோடி நிதானமாக ஆடியது.
முதல் விக்கெட்டுக்கு 44 ரன்கள் சேர்த்த நிலையில் பென் டக்கெட் 23 ரன்னில் ஆட்டமிழந்தார். ஜாக் கிராலே 18 ரன்னில் வெளியேறினார்.
3வது விக்கெட்டுக்கு ஒல்லி போப்புடன் ஜோ ரூட் இணைந்தார். இந்த ஜோடி 109 ரன் சேர்த்த நிலையில் ஒல்லி போப் 44 ரன்ப்னில் அவுட்டானார். அடுத்து இறங்கிய ஹாரி புரூக் 11 ரன்னில் ஆட்டமிழந்தார்.
அடுத்து ஜோ ரூட்டுடன் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் இணைந்தார். இந்த ஜோடி கடைசிவரை விக்கெட் விழாமல் நிதானமாக ஆடியது.
பொறுப்புடன் ஆடிய ஜோ ரூட் அரை சதம் கடந்தார்.
இறுதியில், முதல் நாள் முடிவில் இங்கிலாந்து 4 விக்கெட் இழப்பிற்கு 251 ரன்கள் எடுத்துள்ளது. ஜோ ரூட் 99 ரன்னும், பென் ஸ்டோக்ஸ் 39 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.
இந்தியா சார்பில் நிதிஷ் குமார் ரெட்டி 2 விக்கெட்டும், பும்ரா, ஜடேஜா தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
- முதலில் பேட் செய்த வங்காளதேசம் 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 154 ரன்கள் எடுத்தது.
- அடுத்து ஆடிய இலங்கை 19 ஓவரில் 159 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
பல்லேகலே:
வங்காளதேசம் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. டெஸ்ட் தொடரில் 1-0 எனவும், ஒரு நாள் தொடரில் 2-1 எனவும் இலங்கை அணி கைப்பற்றியது.
இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி பல்லேகலேவில் நடைபெற்றது. டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட்டிங் செய்த வங்காளதேசம் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 154 ரன்கள் எடுத்தது. தொடக்க ஆட்டக்காரர் பர்வேஸ் ஹொசைன் 38 ரன்னும், மொகமது நயீம் 32 ரன்னும், மெஹிதி ஹசன் மிராஸ் 29 ரன்னும் எடுத்தனர்.
இதையடுத்து, 155 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி களமிறங்கியது. முதல் விக்கெட்டுக்கு 78 ரன்கள் சேர்த்த நிலையில் பதும் நிசங்கா 42 ரன்னில் அவுட்டானார்.
சிறப்பாக ஆடி அரை சதம் கடந்த குசால் மெண்டிஸ்73 ரன்னில் ஆட்டமிழந்தார்.
இறுதியில், இலங்கை அணி 19 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 159 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றதுடன், டி20 தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது. ஆட்ட நாயகன் விருது குசால் மெண்டிசுக்கு அளிக்கப்பட்டது.