என் மலர்
கிரிக்கெட் (Cricket)
- பும்ராவின் அபாரமான பந்துவீச்சு இல்லாமல் நான் இந்த இடத்தில் நின்று இருக்க மாட்டேன்.
- வெற்றி பெறும் முயற்சியில் எனது பங்களிப்பு இருந்த மகிழ்ச்சி அளிக்கிறது.
மும்பை:
இந்திய அணி இறுதிப் போட்டிக்கு நுழைவதற்கு காரணமாக இருந்த வீரர்களில் ஒருவர் சஞ்சு சாம்சன். அவர் 42 பந்தில் 8 பவுண்டரி, 7 சிக்சருடன் 89 ரன் எடுத்து இந்திய அணி 253 ரன்களை குவிக்க முக்கிய பங்கு வைத்தார். இதனால் சஞ்சு சாம்சனுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.
விருதைப் பெற்ற பிறகு அவர் கூறிய தாவது:-
கடந்த போட்டியில் இருந்து நான் ஓரளவு நல்ல நிலையில் (பார்ம்) இருக்கிறேன் என்பது தெரியும். இதை அதிகம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று நினைத்தேன். இதற்காக கூடுதல் நேரம் கொடுத்தேன். எந்த ஸ்கோரும் போதுமானது கிடையாது என்பது எங்களுக்கு தெரியும்.
நானும், இஷான் கிஷனும் பேட்டிங் செய்த விதத்தை பார்த்தால் 250 ரன்கள் சாத்தியம் என்பதை உணர்ந்தோம். இங்கிலாந்து அணி நெருங்கி வந்தது. அவர்கள் நன்றாக விளையாடினார்கள். அரை இறுதி ஆட்டம் மிகவும் விறுவிறுப்பாக இருந்தது. நாங்கள் வெற்றி பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது.
அனைத்து பாராட்டுகளும் பும்ராவே சேரும். என்னைவிட அவர்தான் ஆட்டநாயகன் விருதுக்கு தகுதியானவர். அவருக்கு அந்த விருதை வழங்கி இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.
அவர் ஒரு தனித்துவமான பந்து வீச்சாளர். அவரது அபாரமான பந்துவீச்சு இல்லாமல் நான் இந்த இடத்தில் நின்று இருக்க மாட்டேன்.
சதம் ஒரு பொருட்டல்ல. வெற்றி பெறும் முயற்சியில் எனது பங்களிப்பு இருந்த மகிழ்ச்சி அளிக்கிறது.
இவ்வாறு சஞ்சு சாம்சன் கூறியுள்ளார்.
ஆட்டத்தின் 18 வது ஓவ ரில் பும்ரா 6 ரன் மட்டுமே கொடுத்தார். இந்த ஓவர் தான் வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தது.
31 வயதான சஞ்சு சாம்சன் இந்த தொடரில் 4 ஆட்டத்தில் விளையாடி 2 அரை சதத்துடன் 232 ரன்கள் எடுத்துள்ளார். சராசரி 77.73 ஆகவும் , ஸ்டிரைக் ரேட் 201.73 ஆகவும் இருக்கிறது.
- இறுதிப் போட்டிக்கு நுழைந்தது நம்ப முடியாத விஷயமாக இருக்கிறது.
- சொந்த மண்ணில் இந்திய அணியை வழிநடத்தி இறுதிப்போட்டிக்கு கொண்டு செல்வது உண்மையிலேயே மகிழ்ச்சி அளிக்கிறது.
மும்பை:
20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் பரபரப்பான ஆட்டத்தில் இந்திய அணி இங்கிலாந்தை தோற்கடித்து 4-வது முறையாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.
மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் விளையாடிய இந்தியா 7 விக்கெட் இழப்புக்கு 253 ரன் குவித்தது.
254 ரன் இலக்குடன் ஆடிய இங்கிலாந்து கடும் சவால் கொடுத்து கடைசி வரை போராடியது.அந்த அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 246 ரன் எடுத்தது. இதனால் இந்தியா 7 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப் போட்டியில் நுழைந்தது.
வெற்றி குறித்து கேப்டன் சூர்யகுமார் யாதவ் கூறியதாவது:-
இறுதிப் போட்டிக்கு நுழைந்தது நம்ப முடியாத விஷயமாக இருக்கிறது. சொந்த மண்ணில் இந்திய அணியை வழிநடத்தி இறுதிப்போட்டிக்கு கொண்டு செல்வது உண்மையிலேயே மகிழ்ச்சி அளிக்கிறது.
சஞ்சு சாம்சனின் ஆட்டம் அற்புதமாக இருந்தது. பேட்டிங்கில் என்ன செய்ய வேண்டும் என்று அவருக்கு நன்றாக தெரியும். இது மாதிரியான அதிரடியை தான் தொடக்க வீரர்களிடம் இருந்து நாங்கள் எதிர்பார்க்கிறோம்.
டாஸ் போடும் போது இங்கிலாந்து கேப்டன் ஹாரி புருக்கிடம் உங்கள் அணிக்கு எதிராக நாங்கள் எவ்வளவு ஸ்கோர் இலக்காக நிர்ணயம் செய்ய வேண்டும் என்று கேட்டேன்.ஏனென்றால் அவர்கள் எப்போதுமே இலக்கை எடுக்கக் கூடியவர்கள்.
ஆனால் எங்கள் பந்து வீச்சாளர்கள சிறப்பாக செயல்பட்டு போட்டியை தங்கள் பக்கம் கொண்டு வந்ததை நம்ப முடியவில்லை. பும்ரா எவ்வளவு திறமையானவர் என்பது உங்களுக்கு தெரியும். அவரது பந்துவீச்சு முக்கியத்துவம் பெற்று இருந்தது.
பீல்டிங்கில் வீரர்கள் மிகவும் சிறப்பாக செயல்பட்டார்கள். இதற்கு பீல்டிங் பயிற்சியாளர் திலீப்புக்கு பாராட்டுகளை தெரிவிக்கிறேன். வீரர்களின் பங்களிப்பு கூடுதலாக இருந்தது.
பேட்டிங் வரிசையில் முதல் 3 வீரர்கள் மட்டும் தான் ஒரே மாதிரி இருக்கும். அதன் பிறகு பேட்டிங் வரிசை சூழலுக்கு ஏற்ப மாறும். ஆதில் ரஷீத் பந்து வீச வரும்போது ஷிவம் துபே தான் அதனை எதிர் கொள்ள சரியான நபர் என்று நாங்கள் நினைத்தோம்.
இந்த ஆட்டத்தில் நான் மிகவும் பதற்றத்துடன் இருந்தேன். என்னுடைய இதயத்துடிப்பு அதிகமானது.நிச்சயம் 160 முதல் 175-க்கு சென்று இருக்கும்.
இந்தப் போட்டி தொடங்குவதற்கு முன்பே மைதானத்தில் 80 சதவீதம் ரசிகர்கள் நிரம்பி இருந்தனர்.ரசிகர்களுக்கு நல்ல பொழுது போக்கை கொடுக்க வேண்டும் என்று நினைத்தோம்.
இந்திய மண்ணில் சாம்பியன் பட்டத்துக்காக நாங்கள் இறுதிப் போட்டிக்கு செல்கிறோம். நிச்சயம் கடுமையான அழுத்தம் இருக்கும். ஆனால் இறுதிப் போட்டியில் விளையாட எங்களுடைய வீரர்கள் மற்றும் அணி நிர்வாகிகள் அனைவரும் உற்சாகத்தில் இருக்கிறார்கள்.
இவ்வாறு சூர்யகுமார் யாதவ் கூறினார்.
இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதும் இறுதிப் போட்டி வருகிற 8-ந்தேதி ( ஞாயிற்றுக்கிழமை) இரவு 7 மணிக்கு நடக்கிறது.
- சஞ்சு சாம்சன் அடித்த ஸ்கோரை (89 ரன்) நான் எடுக்க வேண்டும் என்று நினைத்தேன்.
- எங்கள் அணி வீரர்களை நினைத்து நான் மிகவும் பெருமைப்படுகிறேன்.
டி20 உலகக் கோப்பை தொடரின் 2-வது அரையிறுதி போட்டியில் இந்தியா- இங்கிலாந்து அணிகள் நேற்று மோதின. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் விளையாடிய இந்தியா 7 விக்கெட் இழப்புக்கு 253 ரன் குவித்தது.
தொடக்க வீரர் சஞ்சு சாம்சன் 42 பந்தில் 89 ரன்னும் ( 8 பவுண்டரி, 7 சிக்சர்) , ஷிவம் துபே 25 பந்தில் 43 ரன்னும் ( 1 பவுண்டரி, 4 சிக்சர்) , இஷான் கிஷன் 18 பந்தில் 39 ரன்னும் ( 4 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்தனர்.
254 ரன் இலக்குடன் ஆடிய இங்கிலாந்து கடும் சவால் கொடுத்து கடைசி வரை போராடியது. அந்த அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 246 ரன் எடுத்தது. இதனால் இந்தியா 7 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப் போட்டியில் நுழைந்தது.
தோல்விக்கு பிறகு இங்கிலாந்து அணி கேப்டன் ஹாரி புரூக் நிருபர்களிடம் கூறியதாவது:-
சஞ்ச சாம்சன் 15 ரன்னில் இருந்த போது அவரது கேட்சை தவற விட்டேன். இது மிகப்பெரிய தவறாகிவிட்டது. அவர் அடித்த ஸ்கோரை (89 ரன்) நான் எடுக்க வேண்டும் என்று நினைத்தேன். கேட்ச்களை தவற விடுவது போட்டியை பாதிக்கும்.
இந்திய வீரர்கள் பீல்டிங்கில் மிகவும் சிறப்பாக செயல்பட்டனர். எங்கள் அணி வீரர்களை நினைத்து நான் மிகவும் பெருமைப்படுகிறேன். பெத்தெல் கடைசி வரை போராடினார். இந்த அரைஇறுதி ஆட்டம் மிகவும் சிறப்பாக இருந்தது.
இவ்வாறு அவர் கூறினார்.
- டி20 உலகக் கோப்பை தொடரின் 2-வது அரையிறுதி போட்டியில் இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதின.
- இந்த போட்டியை தோனி, அவரது மனைவி நேரில் கண்டு களித்தனர்.
மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டி20 உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டி நடைபெற்றது. பரபரப்பாக சென்ற இந்த போட்டியில் இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, 2026 டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது.
இந்த போட்டியின் போது, தோனியின் மனைவி சாக்ஷி செய்த ஒரு செயல் இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதன்படி போட்டியின் 18-வது ஓவரில் ஜஸ்பிரித் பும்ரா வீசிய பந்தை இங்கிலாந்து வீரர் சாம் கர்ரன் நேராக அவரிடமே அடித்தார். பந்து தரையில் பட்டு பும்ராவிடம் சென்றது. ஆனால், விஐபி கேலரியில் அமர்ந்து போட்டியைப் பார்த்துக் கொண்டிருந்த சாக்ஷி தோனி, அது 'கேட்ச்' என்று தவறாக நினைத்து இருக்கையில் இருந்து குதித்து உற்சாகமாகக் கொண்டாடத் தொடங்கினார்.
சாக்ஷி தவறுதலாகக் கொண்டாடுவதைக் கண்ட எம்.எஸ். தோனி, உடனடியாக அவரை அமைதிப்படுத்தினார். பந்து தரையில் பட்டு வந்ததைச் சைகை மூலம் சுட்டிக்காட்டிய தோனி, சிரித்துக்கொண்டே சாக்ஷியை "உட்காரு" என்று கூறினார்.
தோனியின் இந்த ரியாக்ஷனும், சாக்ஷியின் குழந்தைத்தனமான கொண்டாட்டமும் சமூக வலைதளங்களில் வைரலாகி, ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது.
- அரையிறுதி போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணி 253 ரன்கள் குவித்தது.
- தொடர்ந்து விளையாடிய இங்கிலாந்து அணி 246 ரன்கள் எடுத்து தோல்வியடைந்தது.
மும்பை:
டி20 உலகக் கோப்பை தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வந்த நிலையில், தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. முதலாவது அரையிறுதி ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி நியூசிலாந்து அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இந்த நிலையில், நேற்று நடைபெற்ற 2-வது அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா இங்கிலாந்து அணிகள் விளையாடின.
இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 253 ரன்கள் எடுத்தது.
அதனை தொடர்ந்து விளையாடிய இங்கிலாந்து அணியில் ஜேக்கப் பெத்தேல் அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்தார். கடைசி வரை போராடிய அவர் 105 ரன்களில் (ரன் அவுட் ) ஆட்டமிழந்தார். இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு இங்கிலாந்து அணி 246 ரன்கள் எடுத்தது. இதனால் இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
முன்னதாக இந்த ஆட்டத்தில் இந்தியா தரப்பில் 19 சிக்சர் அடிக்கப்பட்டன. டி20 உலகக் கோப்பையில் ஒரு இன்னிங்சில் அடிக்கப்பட்ட அதிகபட்ச சிக்சர் சாதனையை இந்தியா சமன் செய்தது. ஏற்கனவே நெதர்லாந்து (2014-ம் ஆண்டு அயர்லாந்துக்கு எதிராக), வெஸ்ட் இண்டீஸ் (நடப்பு உலகக் கோப்பையில் ஜிம்பாப்வேக்கு எதிராக) அணிகள் தலா 19 சிக்சர் அடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
- ஒருநாள் அணியின் கேப்டனாக ஹஷ்மத்துலா ஷகிடி தொடருகிறார்.
- ஆப்கானிஸ்தான் அணி விரைவில் இலங்கைக்கு எதிராக மூன்று 20 ஓவர் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் ஆடுகிறது.
காபூல்:
20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் ரஷித் கான் தலைமையிலான ஆப்கானிஸ்தான் அணி லீக் சுற்றுடன் வெளியேறியது. இதில் தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் இரண்டு முறை சூப்பர் ஓவரில் போராடி தோற்றது கவனிக்கத்தக்க ஒரு ஆட்டமாக இருந்தது.
இந்த நிலையில் தோல்வி எதிரொலியாக ரஷித் கானை கேப்டன் பதவியில் இருந்து ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நேற்று அதிரடியாக நீக்கியது. அவருக்கு பதிலாக தொடக்க வரிசை பேட்ஸ்மேன் இப்ராகிம் ஜட்ரன் 20 ஓவர் அணியின் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ஆனால் ஒரு வீரராக ரஷித் கான் அணியில் நீடிக்கிறார். ஒருநாள் அணியின் கேப்டனாக ஹஷ்மத்துலா ஷகிடி தொடருகிறார்.
ஆப்கானிஸ்தான் அணி விரைவில் இலங்கைக்கு எதிராக மூன்று 20 ஓவர் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் ஆடுகிறது. ஆப்கானிஸ்தான்- இலங்கை இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி வருகிற 13-ந்தேதி ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள சார்ஜாவில் நடக்கிறது. ஆனால் வளைகுடா நாடுகளில் போர் பதற்றம் நிலவுவதால் இந்த தொடர் தள்ளிவைக்கப்பட வாய்ப்புள்ளது.
- இந்தியா 7 ரன் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி வெற்றி பெற்றது.
- ஆட்ட நாயகன் விருது சஞ்சு சாம்சனுக்கு அளிக்கப்பட்டது.
மும்பை:
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 2வது அரையிறுதி மும்பையில் நடந்தது. இதில் இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதின. முதலில் ஆடிய இந்திய அணி 20 ஓவரில் 253 ரன்கள் குவித்தது. சஞ்சு சாம்சன் 89 ரன்கள் குவித்தார்.
அடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 246 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் இந்தியா 7 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஆட்ட நாயகன் விருது சஞ்சு சாம்சனுக்கு அளிக்கப்பட்டது.
இந்நிலையில், டி20 உலகக் கோப்பை அரையிறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து சுழற்பந்து வீச்சாளர் ஆதில் ரஷித் வீசிய பந்துகளில் இந்திய அணி வீரர்கள் 4 சிக்சர்களைப் பறக்கவிட்டிருந்தனர்.
இதன்மூலம் சர்வதேச டி20 அரங்கில் 200க்கும் அதிகமான சிக்சர்களை விட்டுக் கொடுத்த முதல் பந்துவீச்சாளர் என்ற மோசமான சாதனையை ஆதில் ரஷித் படைத்துள்ளார்.
- இங்கிலாந்து அணி 20 ஓவரில் 246 ரன்கள் மட்டுமே எடுத்தது.
- இதனால் இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
மும்பை:
டி20 உலகக் கோப்பை தொடரின் 2வது அரையிறுதி மும்பையில் நேற்று நடந்தது. இதில் இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதின.
முதலில் ஆடிய இந்திய அணி 20 ஓவரில் 253 ரன்கள் குவித்தது. தொடக்க ஆட்டக்காரர் சஞ்சு சாம்சன் 89 ரன்கள் குவித்தார்.
அடுத்து, களம் இறங்கிய இங்கிலாந்து அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 246 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் இந்தியா 7 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்நிலையில், வரும் ஞாயிற்றுக்கிழமை அகமதாபாத்தில் உள்ள நடைபெற உள்ள இறுதிப்போட்டியில் இந்திய அணி நியூசிலாந்து அணியை எதிர்கொள்கிறது.
- டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பவுலிங் தேர்வு செய்தது.
- முதலில் ஆடிய இந்திய அணி 20 ஓவரில் 253 ரன்கள் குவித்தது.
மும்பை:
டி20 உலகக் கோப்பை தொடரின் இரண்டாவது அரையிறுதிப் போட்டி மும்பையின் வான்கடே மைதானத்தில் இன்று நடைபெற்றது. இதில் இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதின. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் களமிறங்கிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 253 ரன்கள் குவித்தது.
தொடக்க ஆட்டக்காரர் சஞ்சு சாம்சன் இன்றும் அதிரடியில் மிரட்டினார். அவர் 42 பந்தில் 7 சிக்சர், 8 பவுண்டரி உள்பட 89 ரன்கள் குவித்தார். ஷிவம் துபே 43 ரன்னும், இஷான் கிஷன் 39 ரன்னும் எடுத்தனர்.
இங்கிலாந்து சார்பில் வில் ஜாக்ஸ், ஆதில் ரஷித் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து, 254 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் இங்கிலாந்து களமிறங்கியது. ஆரம்பம் முதலே பெத்தேல் சிக்சர், பவுண்டரிகளாக விளாசினார். அவர் தனி ஆளாகப் போராடினார். வில் ஜாக்ஸ் 35 ரன்னும், ஜாஸ் பட்லர் 25 ரன்னும் எடுத்தனர்.
பெத்தேல் சதமடித்து 105 ரன்னில் ஆட்டமிழந்தார்.
இறுதியில், இங்கிலாந்து 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 246 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன் இந்தியா இறுதிப்போட்டிக்கும் முன்னேறி அசத்தியது.
- டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
- தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய சஞ்சு சாம்சன் 89 ரன்கள் விளாசி அவுட்டானார்
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. லீக் சுற்று ஆட்டங்கள் முடிந்து தற்போது அரையிறுதி ஆட்டங்கள் நடந்து வருகின்றன.
கொல்கத்தாவில் நேற்று நடந்த முதல் அரையிறுதி ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து அணிகள் மோதின. இதில் நியூசிலாந்து அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறி அசத்தியது.
இந்நிலையில், மும்பை வான்கடே மைதானத்தில் இரண்டாவது அரையிறுதி போட்டி இன்று இரவு 7 மணிக்கு நடக்கிறது. இதில் இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதின.
இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய அபிஷேக் சர்மா 9 ரன்னில் அவுட்டானார். சஞ்சு சாம்சன் 15 ரன்கள் அடித்திருந்தபோது கொடுத்த கேட்சை இங்கிலாந்து கேப்டன் ஹாரி புரூக் தவறவிட்டார்
இதையடுத்து சிறப்பாக விளையாடிய மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான சஞ்சு சாம்சன் அரைசதம் அடித்து அசத்தினார். மறுமுனையில் சிறப்பாக விளையாடிய இஷான் கிஷன் 18 பந்துகளில் 39 ரன்கள் அடித்து அவுட்டானார்.
இதையடுத்து அதிரடியாக விளையாடிய சஞ்சு சாம்சன் 42 பந்துகளில் 89 ரன்கள் குவித்து அவுட்டானார். கடந்த போட்டியில் 97 ரன்கள் அடித்து அவுட்டாகாமல் இருந்த சஞ்சு சாம்சன் இந்த போட்டியிலும் சதம் அடிக்காததது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது.
சிறப்பாக விளையாடிய சிவம் துபே 25 பந்துகளில் 43 ரன்கள் விளாசினார். கடைசி நேரத்தில் சிக்ஸர்களை பறக்கவிட்ட திலக் வர்மா 7 பந்துகளில் 21 ரன்கள் அடித்து அவுட்டானார்.
கடைசி ஓவரில் சிக்ஸர்களை பறக்கவிட்ட ஹர்திக் பாண்ட்யா 11 பந்துகளில் 26 ரன்கள் விளாசி அவுட்டானார். 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு இந்திய அணி 253 ரன்களை குவித்தது.
- சஞ்சு சாம்சன் 15 ரன்கள் அடித்திருந்தபோது கொடுத்த கேட்சை ஹாரி புரூக் தவறவிட்டார்
- தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய அபிஷேக் சர்மா 9 ரன்னில் அவுட்டானார்
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. லீக் சுற்று ஆட்டங்கள் முடிந்து தற்போது அரையிறுதி ஆட்டங்கள் நடந்து வருகின்றன.
கொல்கத்தாவில் நேற்று நடந்த முதல் அரையிறுதி ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து அணிகள் மோதின. இதில் நியூசிலாந்து அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறி அசத்தியது.
இந்நிலையில், மும்பை வான்கடே மைதானத்தில் இரண்டாவது அரையிறுதி போட்டி இன்று இரவு 7 மணிக்கு நடக்கிறது. இதில் இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதின.
இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய அபிஷேக் சர்மா 9 ரன்னில் அவுட்டானார். சஞ்சு சாம்சன் 15 ரன்கள் அடித்திருந்தபோது கொடுத்த கேட்சை இங்கிலாந்து கேப்டன் ஹாரி புரூக் தவறவிட்டார்
இதையடுத்து சிறப்பாக விளையாடிய மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான சஞ்சு சாம்சன் அரைசதம் அடித்து அசத்தினார். மறுமுனையில் சிறப்பாக விளையாடிய இஷான் கிஷன் 18 பந்துகளில் 39 ரன்கள் அடித்து அவுட்டானார்.
இதையடுத்து அதிரடியாக விளையாடிய சஞ்சு சாம்சன் 42 பந்துகளில் 89 ரன்கள் குவித்து அவுட்டானார். கடந்த போட்டியில் 97 ரன்கள் அடித்து அவுட்டாகாமல் இருந்த சஞ்சு சாம்சன் இந்த போட்டியிலும் சதம் அடிக்காததது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது.
- டி20 உலகக் கோப்பை தொடரில் ஆப்கானிஸ்தான் அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து வெளியேறியது.
- ஆப்கானிஸ்தானின் டி20 கேப்டன் பதவியில் இருந்து ரஷித் கான் நீக்கபட்டுள்ளார்.
டி20 உலகக் கோப்பை தொடரில் டி குரூப்பில் இடம் பெற்ற ஆப்கானிஸ்தான் அணி 4 போட்டிகளில் 2 வெற்றி 2 தோல்வியுடன் அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து வெளியேறியது.
இதனால் ஆப்கானிஸ்தானின் டி20 கேப்டன் பதவியில் இருந்து ரஷித் கான் நீக்கபட்டுள்ளார்.
இலங்கைக்கு எதிரான டி20 தொடரில் அவருக்கு பதிலாக இப்ராஹிம் சர்ட்ரான் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.






