என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இங்கிலாந்து"

    • முதலில் ஆடிய நியூசிலாந்து அணி 20 ஓவரில் 159 ரன்கள் எடுத்தது.
    • கிளென் பிலிப்ஸ் அதிகபட்சமாக 39 ரன்கள் எடுத்தார்.

    கொழும்பு:

    டி20 உலகக் கோப்பை தொடரின் 49-வது லீக் ஆட்டம் கொழும்புவில் நடந்தது. இதில் நியூசிலாந்து, இங்கிலாந்து அணிகள் மோதின. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 159 ரன்கள் எடுத்தது. கிளென் பிலிப்ஸ் 39 ரன்னும், டிம் சைபர்ட் 35 ரன்னும், பின் ஆலன் 29 ரன்னும் எடுத்தனர்.

    இங்கிலாந்து சார்பில் அடில் ரஷித், வில் ஜாக்ஸ், ரேஹான் அகமது ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து களமிறங்கியது. டாம் பாண்டன் 33 ரன்னும், ஹாரி புரூக் 26 ரன்னும் எடுத்தனர்.

    கடைசி 3 ஓவரில் வெற்றிபெற 43 ரன்கள் தேவைப்பட்டது. ரெஹான் அகமது அதிரடியாக ஆடி சிக்சர், பவுண்டரிகளாக விளாசினார்.

    இங்கிலாந்து 19.3 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 161 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. வில் ஜாக்ஸ் 32 ரன்னும், அகமது 7 பந்தில் 19 ரன்னும் எடுத்து அவுட்டாகாமல் இருந்தனர்.

    நியூசிலாந்து சார்பில் ரச்சின் ரவீந்திரா 3 விக்கெட் வீழ்த்தினார்.

    • நியூசிலாந்து அணி தோற்றால் பாகிஸ்தான் அணிக்கு அரைஇறுதி வாய்ப்புக்கான கதவு திறக்கும்.
    • இந்த ஆட்டத்தில் நியூசிலாந்து வெற்றி பெற்றால் அரைஇறுதியை உறுதி செய்வதோடு, புள்ளி பட்டியலிலும் முதலிடத்தை பிடிக்கும்.

    20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் சூப்பர் சுற்றில் இங்கிலாந்து தனது முதல் இரு ஆட்டங்களில் இலங்கை மற்றும் பாகிஸ்தானை போட்டுத்தாக்கி முதல் அணியாக அரைஇறுதிக்கு முன்னேறியது. முந்தைய பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் 165 ரன் இலக்கை கேப்டன் ஹாரி புரூக்கின் பிரமாதமான சதத்தால் எட்டிப்பிடித்தது. சூப்பர் சுற்றில் 'ஹாட்ரிக்' வெற்றி யோடு புள்ளி பட்டியலில் முதலிடம் பிடிக்கும் ஆவலுடன் உள்ளது.

    நியூசிலாந்து அணி ஒரு வெற்றி, ஒரு முடிவில்லை என 3 புள்ளியுடன் 2-வது இடத்தில் உள்ளது. இலங்கைக்கு எதிரான கடந்த ஆட்டத்தில் 84 ரன்னுக்குள் 6 விக்கெட்டுகளை இழந்த போதிலும் கேப்டன் மிட்செல் சான்ட்னெர் (47 ரன்). கோல் மெக்கோன்சி (31 ரன்) ஆகியோரின் பொறுப்பான ஆட்டத்தால் நியூசிலாந்து 168 ரன் திரட்டியதோடு, இலங்கையை 107 ரன்னில் சுருட்டியது. அதே உத்வேகத்துடன் இன்று இங்கிலாந்தையும் பதம் பார்க்க காத்திருக்கிறார்கள்.

    இந்த ஆட்டத்தில் நியூசிலாந்து வெற்றி பெற்றால் அரைஇறுதியை உறுதி செய்வதோடு, புள்ளி பட்டியலிலும் முதலிடத்தை பிடிக்கும். தோற்றால் பாகிஸ்தான் அணிக்கு அரைஇறுதி வாய்ப்புக்கான கதவு திறக்கும். ஆனால் ரன்ரேட்டில் நியூசிலாந்து திடமாக இருப்பதால் தோற்றாலும் அந்த அணிக்கே அடுத்த சுற்றை எட்டுவதற்கான வாய்ப்பு அதிகம்.

    • இலங்கை 2 தோல்வியுடன் வெளியேறியது.
    • ரன் ரேட் அடிப்படையில் ஒரு அணி தகுதி பெறும்.

    20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டில் சூப்பர் 8 சுற்று ஆட்டம் நடைபெற்று வருகிறது. குரூப் 2 பிரிவில் போட்டியை நடத்தும் இலங்கை, இங்கிலாந்து, பாகிஸ்தான், நியூசிலாந்து ஆகிய அணிகள் உள்ளன. ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். இதன் முடிவில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு முன்னேறும்.

    முன்னாள் சாம்பியனான இங்கிலாந்து 2 வெற்றியுடன் 4 புள்ளிகள் பெற்று அரை இறுதிக்கு தகுதி பெற்றது. இலங்கை 2 தோல்வியுடன் வெளியேறியது. 2-வதாக நியூசிலாந்து அல்லது பாகிஸ்தான் அணி அரை இறுதிக்கு நுழையும். நியூசிலாந்து 3 புள்ளியுடனும், பாகிஸ்தான் ஒரு புள்ளியுடனும் உள்ளன.

    கொழும்பில் நாளை இரவு 7 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் இங்கிலாந்து-நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. இதில் நியூசிலாந்து வெற்றி பெற்றால் அரையிறுதிக்கு முன்னேறும். அப்படி நிகழ்ந்தால் பாகிஸ்தான்-இலங்கை இடையே 28-ந்தேதி நடைபெறும் ஆட்டத்தின் முடிவு எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தாது.

    நியூசிலாந்து தோற்றால் பாகிஸ்தான்-இலங்கை இடையேயான போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற்றால் இரண்டு அணிகளும் 3 புள்ளியுடன் சமநிலை பெறும். ரன் ரேட் அடிப்படையில் ஒரு அணி தகுதி பெறும்.

    தற்போதைய நிலவரப்படி பாகிஸ்தானை விட நியூசிலாந்து ரன்ரேட்டில் நல்ல நிலையில் இருக்கிறது. இதனால் அந்த அணிக்கு கூடுதல் வாய்ப்பு உள்ளது. நாளைய போட்டியில் இங்கிலாந்து வெற்றிக்காக பாகிஸ்தான் ரசிகர்கள் பிரார்த்தனை செய்வார்கள்.

    சான்ட்னெர் தலைமையிலான நியூசிலாந்து அணி, ஹாரிக் புரூக் தலைமையிலான இங்கிலாந்தை வீழ்த்தி அரை இறுதிக்கு தகுதி பெறும் ஆர்வத்தில் இருக்கிறது. இங்கிலாந்து ஹாட்ரிக் வெற்றி வேட்கையில் உள்ளது.

    இரு அணிகளும் 30 போட்டியில் மோதியுள்ளன. இதில் இங்கிலாந்து 17-ல், நியூசிலாந்து 10-ல் வெற்றி பெற்றுள்ளன. 3 ஆட்டம் முடிவு இல்லை.

    • ஐபிஎல் உரிமையாளர்களுக்குச் சொந்தமான அணிகள், பாகிஸ்தான் வீரர்களை ஏலத்தில் எடுக்க ஆர்வம் காட்டவில்லை
    • இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் மற்றும் 8 அணிகள் இணைந்து கூட்டறிக்கை வெளியிட்டுள்ளது.

    இங்கிலாந்தில் நடைபெறவுள்ள 'தி ஹன்ட்ரட்' (The Hundred) கிரிக்கெட் தொடருக்கான வீரர்கள் ஏலம் மார்ச் 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது.

    இந்நிலையில், இந்திய ஐபிஎல் (IPL) உரிமையாளர்களுக்குச் சொந்தமான நான்கு அணிகள், பாகிஸ்தான் வீரர்களை ஏலத்தில் எடுக்க ஆர்வம் காட்டவில்லை என்று தகவல்கள் வெளியாகின.

    மான்செஸ்டர் சூப்பர் ஜெயண்ட்ஸ், எம்ஐ லண்டன், சதர்ன் பிரேவ் மற்றும் சன்ரைசர்ஸ் லீட்ஸ் ஆகிய நான்கு அணிகளும் இந்திய உரிமையாளர்களால் நிர்வகிக்கப்படுகின்றன. இந்த அணிகள் பாகிஸ்தான் வீரர்களைத் தவிர்க்க முடிவு செய்துள்ளதாக பிரிட்டிஷ் ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

    இந்நிலையில், THE HUNDRED கிரிக்கெட் தொடரில் இந்திய நிறுவனங்களை உரிமையாளர்களாகக் கொண்ட அணிகளில் பாகிஸ்தான் வீரர்கள் இடம்பெற மாட்டார்கள் என்பதற்கு இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இந்நிலையில், The Hundred தொடர் அனைத்து வீரர்களை உள்ளடக்கியதாக இருக்கும் எனவும், வீரர்கள் தேசத்தின் அடிப்படையில் விலக்கப்பட மாட்டார்கள் எனவும் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் மற்றும் 8 அணிகள் இணைந்து கூட்டறிக்கை வெளியிட்டுள்ளது.

    இந்த தொடரில் இந்திய நிறுவனங்களை உரிமையாளர்களாக கொண்ட அணிகளில் பாகிஸ்தான் வீரர்கள் இடம்பெற மாட்டார்கள் என செய்தி பரவிய நிலையில், அதற்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

    • டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங் தேர்வு செய்தது.
    • முதலில் ஆடிய பாகிஸ்தான் 20 ஓவரில் 164 ரன்கள் சேர்த்தது.

    பல்லேகலே:

    டி20 உலகக் கோப்பை தொடரின் 45-வது லீக் ஆட்டம் இலங்கையின் பல்லேகலே மைதானத்தில் நேற்று நடந்தது. இதில் இங்கிலாந்து, பாகிஸ்தான் அணிகள் மோதின.

    டாஸ் வென்று பேட்டிங் செய்த பாகிஸ்தான் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 164 ரன்கள் சேர்த்தது. ஷாகிப்ஜாதா பர்ஹான் அரை சதம் கடந்து 63 ரன்கள் எடுத்தார்.

    அடுத்து ஆடிய இங்கிலாந்து 19.1 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 166 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. ஹாரி புரூக் தனி ஆளாகப் போராடி அதிரடியாக ஆடி சதமடித்து 100 ரன்னில் அவுட்டானார்.

    இந்நிலையில், டி20 உலகக் கோப்பையில் சதம் அடித்த முதல் கேப்டன் என்ற சாதனையை ஹாரி புரூக் படைத்தார். இதற்கு முன் கிறிஸ் கெயில் 98 ரன்கள் எடுத்ததே அதிகபட்சமாக இருந்தது.

    • முதலில் ஆடிய பாகிஸ்தான் அணி 20 ஓவரில் 164 ரன்கள் எடுத்தது.
    • இங்கிலாந்தின் லியம் டாசன் 3 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.

    பல்லேகலே:

    டி20 உலகக் கோப்பை தொடரின் 45-வது லீக் ஆட்டம் இலங்கையின் பல்லேகலே மைதானத்தில் நடந்தது. இதில் இங்கிலாந்து, பாகிஸ்தான் அணிகள் மோதின. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய பாகிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 164 ரன்கள் சேர்த்தது. ஷாகிப்ஜாதா பர்ஹான் அரை சதம் கடந்து 63 ரன்கள் எடுத்தார்.

    இங்கிலாந்து சார்பில் லியாம் டாசன் 3 விக்கெட்டும், ஜோப்ர ஆர்ச்சர், ஓவர்டன் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 165 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து 19.1 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 166 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. ஹாரி புரூக் அதிரடியாக ஆடி சதமடித்து 100 ரன்னில் அவுட்டானார். இதன்மூலம் 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அரையிறுதிக்குள் நுழைந்தது.

    35 ரன்களுக்குள் 3 விக்கெட்களை இழந்து தவித்த இங்கிலாந்து அணிக்கு தனி ஆளாகப் போராடி சதமடித்து கேப்டன் இன்னிங்ஸ் ஆடினார் ஹாரி புரூக்.

    பாகிஸ்தான் சார்பில் ஷாஹீன் அப்ரிடி 4 விக்கெட்டும், உஸ்மான் தாரிக் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    • ஐபிஎல் உரிமையாளர்களுக்குச் சொந்தமான அணிகள், பாகிஸ்தான் வீரர்களை ஏலத்தில் எடுக்க ஆர்வம் காட்டவில்லை
    • இங்கிலாந்தில் இந்த பாகுபாட்டை அனுமதிக்கக் கூடாது.

    இங்கிலாந்தில் நடைபெறவுள்ள 'தி ஹன்ட்ரட்' (The Hundred) கிரிக்கெட் தொடருக்கான வீரர்கள் ஏலம் மார்ச் 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது.

    இந்நிலையில், இந்திய ஐபிஎல் (IPL) உரிமையாளர்களுக்குச் சொந்தமான நான்கு அணிகள், பாகிஸ்தான் வீரர்களை ஏலத்தில் எடுக்க ஆர்வம் காட்டவில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

    மான்செஸ்டர் சூப்பர் ஜெயண்ட்ஸ், எம்ஐ லண்டன், சதர்ன் பிரேவ் மற்றும் சன்ரைசர்ஸ் லீட்ஸ் ஆகிய நான்கு அணிகளும் இந்திய உரிமையாளர்களால் நிர்வகிக்கப்படுகின்றன. இந்த அணிகள் பாகிஸ்தான் வீரர்களைத் தவிர்க்க முடிவு செய்துள்ளதாக பிரிட்டிஷ் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

    இந்நிலையில், THE HUNDRED கிரிக்கெட் தொடரில் இந்திய நிறுவனங்களை உரிமையாளர்களாகக் கொண்ட அணிகளில் பாகிஸ்தான் வீரர்கள் இடம்பெற மாட்டார்கள் என்பதற்கு இங்கிலாந்து முன்னாள் வீரர் மொயீன் அலி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து பேசிய மொயீன் அலி, "இங்கிலாந்தில் இந்த பாகுபாட்டை அனுமதிக்கக் கூடாது. வீரர்கள் அனைவரும் இதற்கு எதிராகப் பேச வேண்டும். இங்கிலாந்து கிரிக்கெட் வாரியமும் கவனம் செலுத்தி, இத்தகைய செயல் நடைபெறாமல் இருப்பதை தடுக்கும் என நம்புகிறேன்" என்று தெரிவித்தார்.

    • சூப்பர் 8 சுற்றின் 2 ஆவது ஆட்டத்தில் இங்கிலாந்து - இலங்கை அணிகள் மோதின
    • 20 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து அணி 8 விக்கெட் இழப்பிக்கிற 146 ரன்கள் அடித்தது

    டி20 உலகக் கோப்பை தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் சூப்பர் 8 சுற்று நேற்று தொடங்கியது.

    முதல் போட்டியில் நியூசிலாந்து-பாகிஸ்தான் அணிகள் மோத இருந்த நிலையில் ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது.

    சூப்பர் 8 சுற்றின் 2 ஆவது ஆட்டத்தில் இங்கிலாந்து - இலங்கை அணிகள் மோதுகின்றன. கண்டியில் இன்று நடைபெற்று வரும் இப்போட்டியில் டாஸ் வென்ற அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது

    அதன்படி முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி இலங்கை அணியின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து ரன் குவிக்க முடியாமல் தடுமாறியது. மற்ற அனைத்து வீரர்களும் ரன் குவிக்க முடியாமல் திணற மறுமுனையில் சிறப்பாக விளையாடிய பில் சால்ட் 62 ரன்கள் அடித்து அவுட்டானார்.

    20 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து அணி 8 விக்கெட் இழப்பிக்கிற 146 ரன்கள் அடித்தது. இலங்கை தரப்பில் துனித் வெல்லாலகே 3 விக்கெட்டுகளும் தீக்சனா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

    இதையடுத்து 147 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி இங்கிலாந்தின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

    16.4 ஓவர்கள் முடிவில் இலங்கை அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 95 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 51 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி அபார வெற்றி பெற்றது.

    • சூப்பர் 8 சுற்றின் 2 ஆவது ஆட்டத்தில் இங்கிலாந்து - இலங்கை அணிகள் மோதி வருகின்றன.
    • சிறப்பாக விளையாடிய பில் சால்ட் 62 ரன்கள் அடித்து அவுட்டானார்.

    டி20 உலகக் கோப்பை தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் சூப்பர் 8 சுற்று நேற்று தொடங்கியது.

    முதல் போட்டியில் நியூசிலாந்து-பாகிஸ்தான் அணிகள் மோத இருந்த நிலையில் ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது.

    சூப்பர் 8 சுற்றின் 2 ஆவது ஆட்டத்தில் இங்கிலாந்து - இலங்கை அணிகள் மோதுகின்றன. கண்டியில் இன்று நடைபெற்று வரும் இப்போட்டியில் டாஸ் வென்ற அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது

    அதன்படி முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி இலங்கை அணியின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து ரன் குவிக்க முடியாமல் தடுமாறியது. மற்ற அனைத்து வீரர்களும் ரன் குவிக்க முடியாமல் திணற மறுமுனையில் சிறப்பாக விளையாடிய பில் சால்ட் 62 ரன்கள் அடித்து அவுட்டானார்.

    20 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து அணி 9 விக்கெட் இழப்பிக்கிற 146 ரன்கள் அடித்தது. இலங்கை தரப்பில் துனித் வெல்லாலகே 3 விக்கெட்டுகளும் தீக்சனா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.

    • சூப்பர் 8 சுற்றின் 2 ஆவது ஆட்டத்தில் இங்கிலாந்து - இலங்கை அணிகள் மோதுகின்றன.
    • கண்டியில் இன்று மதியம் 3 மணிக்கு இந்த போட்டி தொடங்குகிறது.

    டி20 உலகக் கோப்பை தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் சூப்பர் 8 சுற்று நேற்று தொடங்கியது.

    முதல் போட்டியில் நியூசிலாந்து-பாகிஸ்தான் அணிகள் மோத இருந்த நிலையில் ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது.

    சூப்பர் 8 சுற்றின் 2 ஆவது ஆட்டத்தில் இங்கிலாந்து - இலங்கை அணிகள் மோதுகின்றன. கண்டியில் இன்று மதியம் 3 மணிக்கு இந்த போட்டி தொடங்குகிறது.

    இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்யவுள்ளது.

    • சிறுவர்கள் சமூக வலைதளம் பயன்படுத்த ஆஸ்திரேலிய அரசு தடை விதித்தது.
    • இந்தத் தடையானது கடந்த ஆண்டு டிசம்பர் முதல் அமலுக்கு வந்தது.

    லண்டன்:

    இன்றைய காலகட்டங்களில் சிறுவர் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சமூக வலைதளங்களைப் பயன்படுத்துகின்றனர். ஆனால் சிறுவர்கள் பலரும் இதில் மூழ்கிக் கிடப்பதால் கவனக்குறைவு, தூக்கமின்மை உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் அவர்களுக்கு ஏற்படுகின்றன.

    எனவே 16 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் சமூக வலைதளங்களைப் பயன்படுத்துவதற்கு ஆஸ்திரேலிய அரசாங்கம் தடை விதித்தது. இந்தத் தடையானது கடந்த ஆண்டு டிசம்பர் முதல் அமலுக்கு வந்தது. ஸ்பெயின், பிரான்சிலும் சிறுவர்கள் சமூக வலைதளங்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், இங்கிலாந்திலும் 16 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் சமூக வலைதளங்கள் பயன்படுத்த தடை விதிக்கும் சட்டம் விரைவில் கொண்டு வரப்படும் என அந்நாட்டு பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் தெரிவித்துள்ளார். சமூக ஊடக தடை சட்டத்திற்கான ஆலோசனை கடந்த மாதம் தொடங்கப்பட்டது. விரைவில் இதற்கான சட்டம் கொண்டு வரப்படும் என தெரிவித்தார்.

    • டாஸ் வென்ற இங்கிலாந்து பவுலிங் தேர்வு செய்தது.
    • முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் 20 ஓவரில் 196 ரன்கள் குவித்தது.

    மும்பை:

    டி20 உலகக் கோப்பை தொடரின் 15-வது லீக் போட்டியில் இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற இங்கிலாந்து பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 196 ரன்கள் குவித்தது. ரூதர்போர்டு அதிரடியாக ஆடி 42 பந்தில் 76 ரன்கள் குவித்தார். ரோஸ்டன் சேஸ் 34 ரன்னும், ஹோல்டர் 33 ரன்னும் எடுத்தனர்.

    இங்கிலாந்தின் அடில் ரஷித், ஓவர்டன் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    197 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் இங்கிலாந்து களமிறங்கியது. ஜேக்கப் பெத்தேல் 33 ரன்னும், பிலிப் சால்ட் 31 ரன்னும் எடுத்தனர். கடைசி வரை போராடிய சாம் கர்ரன் 43 ரன்கள் எடுத்தார்.

    இறுதியில், இங்கிலாந்து 19 ஓவரில் 166 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 30 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற்றது.

    வெஸ்ட் இண்டீஸ் சார்பில் குடகேஷ் மோடே 3 விக்கெட்டும், ரோஸ்டன் சேஸ் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    ×