என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "semi final"
- பரபரப்பாக நடைபெற்று வரும் அரையிறுதி போட்டியை காண ஏராளமான பிரபலங்கள் குவிந்துள்ளனர்.
- நடிகர் ரஜினிகாந்த் தனது குடும்பத்தினருடன் அரையிறுதி போட்டியை கண்டுகளித்து வருகிறார்.
உலகக்கோப்பை 2023 கிரிக்கெட் தொடரின் இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான அரையிறுதி ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்ததை அடுத்து 50 ஓவர் முடிவில் 397 ரன்களை குவித்தது.
தொடர்ந்து 398 ரன்கள் வெற்றி இலக்குடன் நியூசிலாந்து அணி விளையாடி வருகிறது.
பரபரப்பாக நடைபெற்று வரும் அரையிறுதி போட்டியை காண ஏராளமான பிரபலங்கள் மும்பை வான்கடே மைதானத்தில் குவிந்துள்ளனர்.
அதன்படி, நடிகர் ரஜினிகாந்த் தனது குடும்பத்தினருடன் அரையிறுதி போட்டியை கண்டுகளித்து வருகிறார்.
ரஜினியுடன் அவரது மனைவி லதா ரஜினிகாந்த் மற்றும் குடும்பத்தினர் உள்ளனர். மேலும், ரஜினி ஷிகர் தவானுடன் போட்டியை காணும் புகைப்படம் வரைலாகி வருகிறது.
- நியூசிலாந்து அணி 5 வெற்றிகளுடன் 10 புள்ளிகள் பெற்று, +0.743 ரன்ரேட்டுடன் புள்ளிபட்டியலில் 4-வது இடத்தில் உள்ளது.
- பாகிஸ்தான் அணி 8 புள்ளிகளுடன் +0.036 ரன்ரேட்டுடன் புள்ளிப்பட்டியலில் 5-வது இடத்தில் உள்ளது.
50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இதுவரை நடந்து முடிந்துள்ள லீக் ஆட்டங்களின் முடிவில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா அணிகள் அரையிறுதிக்கு முன்னேறி உள்ளன.மீதமுள்ள ஒரு அரையிறுதி இடத்திற்கு நியூசிலாந்து, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், அணிகளுக்கு இடையே போட்டி நிலவுகிறது.
இந்நிலையில் இன்று நியூசிலாந்து அணி அரையிறுதிக்கு வாய்ப்பை தக்கவைத்து கொள்ள இலங்கையுடன் மோதியது. இதில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 171 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனையடுத்து களமிறங்கிய நியூசிலாந்து அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அரையிறுதி வாய்ப்பை கிட்டத்தட்ட உறுதிப்படுத்தி விட்டது என்றே சொல்லலாம்.
நியூசிலாந்து அணி 5 வெற்றிகளுடன் 10 புள்ளிகள் பெற்று, +0.743 ரன்ரேட்டுடன் புள்ளிபட்டியலில் 4-வது இடத்தில் உள்ளது. இதனால் மீதமுள்ள ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு முன்னேறுவது மிகவும் கஷ்டமாகி உள்ளது.
பாகிஸ்தான் அணி 8 புள்ளிகள் பெற்று +0.036 ரன்ரேட்டுடன் புள்ளிப்பட்டியலில் 5-வது இடத்தில் உள்ளது. இந்த அணி தனது கடைசி லீக் ஆட்டத்தில் இங்கிலாந்துடன் வரும் சனிக்கிழமை மோதவுள்ளது. பாகிஸ்தான் அரையிறுதிக்கு தகுதி பெற வேண்டும் என்றால் இங்கிலாந்தை 273 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும். அல்லது இங்கிலாந்து அணி கொடுக்கும் இலக்கை 2.3 ஓவர்களில் அடித்து வெற்றி பெற வேண்டும்.
2.3 ஓவர்களில் இலக்கை எட்டுவது நடக்காத விஷயம். வேண்டும் என்றால் முதலில் பேட்டிங் செய்து 400 ரன்களுக்கு மேல் குவித்து இங்கிலாந்தை 112 ரன்களுக்கு ஆல் அவுட் செய்ய வேண்டும். இப்படி நடந்தால் மட்டுமே பாகிஸ்தான் அணி அரையிறுதிக்கு தகுதி பெறும்.
+0.036 ரன்ரேட்டுடன் உள்ள பாகிஸ்தானுக்கே இந்த நிலைமை என்றால் நாளை ஆப்கானிஸ்தான் மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதவுள்ளது. ஆப்கானிஸ்தான் -0.338 ரன்ரேட்டில் இருப்பதால் அந்த அணி வெற்றி பெற்றால் கூட அரையிறுதிக்கு முன்னேறுவது மிகவும் கடினமாகும்.
- 2011 உலக கோப்பையில் சென்னையில் 4 லீக் ஆட்டம் நடைபெற்றது. நாக்அவுட் போட்டிகள் நடைபெறவில்லை.
- 2016-ம் ஆண்டு நடந்த 20 ஓவர் உலக கோப்பையில் சென்னையில் ஒரு ஆட்டம் கூட ஒதுக்கப்படவில்லை.
சென்னை:
உலக கோப்பை கிரிக்கெட் போட்டி (50 ஓவர்) கடைசியாக 2011-ம் ஆண்டு இந்தியாவில் நடந்தது. இலங்கை, வங்காளதேசம் ஆகியவை இணைந்து நடத்தியது.
12 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவில் உலக கோப்பை போட்டி நடைபெறுகிறது. 13-வது உலக கோப்பை போட்டியான இதை அக்டோபர், நவம்பர் மாதங்களில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான போட்டி அட்டவணை அதிகாரபூர்வமாக இன்னும் அறிவிக்கப்படவில்லை.
இதற்கிடையே 10 நாடுகள் கலந்து கொள்ளும் இந்த உலக கோப்பை போட்டிக்கான வரைவு அட்டவணை வெளியாகி உள்ளது. இந்த வரைவு அட்டவணையை ஐ.சி.சி.க்கு (சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்) இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ.) அனுப்பியுள்ளது.
அதன்படி அக்டோபர் 5-ந் தேதி அகமதாபாத்தில் நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான இங்கிலாந்து-நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.
இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை சந்திக்கிறது. இந்த ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் அக்டோபர் 8-ந்தேதி நடைபெறும் என்று உத்தேச அட்டவணையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்தியா-பாகிஸ்தான் மோதும் போட்டியை அகமதாபாத்தில் அக்டோபர் 15-ந் தேதி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் அணி மோதும் 2 ஆட்டங்களும் சென்னையில் நடக்கிறது. ஆப்கானிஸ்தானுடன் அக்டோபர் 23-ந்தேதியும், தென்ஆப்பிரிக்காவுடன் அக்டோபர் 27-ந்தேதியும் அந்த அணி மோதுகிறது.
உலக கோப்பை இறுதி ஆட்டம் நவம்பர் 19-ந்தேதி அகமதாபாத்தில் நடைபெறுகிறது. அரைஇறுதி ஆட்டங்கள் நவம்பர் 15 மற்றும் 16-ந்தேதிகளில் நடக்கிறது. ஆனால் இதற்கான இடங்கள் இன்னும் முடிவாகவில்லை.
இந்த நிலையில் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் ஒரு அரைஇறுதி ஆட்டம் சென்னையில் நடைபெறலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. நவம்பர் 15-ந்தேதி முதல் அரை இறுதியாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
2011 உலக கோப்பையில் சென்னையில் 4 லீக் ஆட்டம் நடைபெற்றது. நாக்அவுட் போட்டிகள் நடைபெறவில்லை. மேலும் 2016-ம் ஆண்டு நடந்த 20 ஓவர் உலக கோப்பையில் சென்னையில் ஒரு ஆட்டம் கூட ஒதுக்கப்படவில்லை. இதன் காரணமாக இந்த உலக கோப்பையின் ஒரு அரைஇறுதியை சென்னையில் நடத்த இந்திய கிரிக்கெட் வாரியம் விரும்புகிறது.
2-வது அரைஇறுதி ஆட்டத்தை மும்பை வான்கடே மைதானத்தில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
வெற்றிபெற ஒரு ரன் தேவை என்ற நிலையில், 18-வது ஓவரின் முதல் பந்தில் பவுண்டரி அடித்து வெற்றியை உறுதி செய்தார் ஜோனஸ். ஜோனஸ் 53 ரன்களுடனும், சிவர் 52 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். இதன்மூலம் இங்கிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இப்போட்டியின் சிறந்த வீராங்கனையாக ஜோனஸ் தேர்வு செய்யப்பட்டார்.
ஞாயிற்றுக்கிழமை நடைபெற உள்ள இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியா-இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. #WomensWorldT20 #WomenInBlue #WWT20 #EngvIND
5-வது ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி போட்டி ஓமன் தலைநகர் மஸ்கட்டில் நடைபெற்று வருகிறது.
இந்த போட்டியில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், ஜப்பான், தென் கொரியா, மலேசியா, ஓமன் ஆகிய 6 நாடுகள் பங்கேற்று உள்ளன.
ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். ‘லீக்’ முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெறும்.
இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் 11-0 என்ற கணக்கில் ஓமனையும், 2-வது ஆட்டத்தில் பாகிஸ்தானை 3-1 என்ற கணக்கிலும், 3-வது போட்டியில் ஜப்பானை 9-0 என்ற கணக்கிலும் வென்றது.
4-வது ஆட்டத்தில் மலேசியாவை நேற்று எதிர் கொண்டது. இந்த ஆட்டம் கோல் எதுவுமின்றி ’டிரா’ ஆனது.
இதன் மூலம் 3 வெற்றி, 1 டிராவுடன் 10 புள்ளிகளை பெற்று இந்தியா அரை இறுதிக்கு முன்னேறியது. இதேபோல மலேசியாவும் இதே நிலையில் அரை இறுதிக்கு தகுதி பெற்றது.
இந்திய அணி கடைசி ‘லீக்’ ஆட்டத்தில் தென் கொரியாவை இன்று சந்திக்கிறது. நேற்று நடந்த மற்றொரு ஆட்டத்தில் தென் கொரியா 4-2 என்ற கோல் கணக்கில் ஓமனை வீழ்த்தி முதல் வெற்றியை பெற்றது. #AsianChampionsTrophy2018
92-வது எம்.சி.சி.-முருகப்பா தங்க கோப்பைக்கான அகில இந்திய ஆக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. 6-வது நாளான நேற்று நடந்த லீக் ஆட்டம் ஒன்றில் இந்திய ராணுவம்-நடப்பு சாம்பியன் ஓ.என்.ஜி.சி. (ஏ பிரிவு) அணிகள் மோதின. பரபரப்பாக அரங்கேறிய இந்த ஆட்டத்தில் முதல் பாதியில் 2-1 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்த ராணுவ அணி ஆட்ட நேரம் முடிவில் 3-2 என்ற கோல் கணக்கில் ஓ.என்.ஜி.சி. அணிக்கு அதிர்ச்சி அளித்தது. 3 வெற்றி, ஒரு தோல்வி கண்ட ராணுவ அணி அரைஇறுதிக்கு முன்னேறியது.
சென்னை ஆக்கி சங்கம்-பெங்களூரு ஆக்கி சங்க அணிகள் மோதிய ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது. முதல் பாதியில் பெங்களூரு அணி 2-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்தது. ஆனால் அந்த அணியால் கடைசி வரை தனது முன்னிலையை தக்க வைத்து கொள்ள முடியவில்லை. சென்னை அணி சரிவில் இருந்து மீண்டு வந்து ஆட்டத்தை சமன் செய்தது. மற்றொரு ஆட்டத்தில் மத்திய அமைச்சக அணி 2-0 என்ற கோல் கணக்கில் மும்பை ஆக்கி சங்க அணியை தோற்கடித்து 2-வது வெற்றியை தனதாக்கியது.
இன்று நடைபெறும் லீக் ஆட்டங்களில் இந்தியன் ரெயில்வே-மத்திய அமைச்சகம் (பிற்பகல் 2.30 மணி), பஞ்சாப் சிந்து வங்கி-இந்தியன் ஆயில் (மாலை 4.15 மணி) அணிகள் மோதுகின்றன. #tamilnews
கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றான அமெரிக்க ஒபன் டென்னிஸ் போட்டி நியூயார்க் நகரில் நடைபெற்று வருகிறது.
உலகின் 6-ம் நிலை வீரரும், அமெரிக்க ஓபன் பட்டத்தை 2 முறை வென்றவருமான ஜோகோவிச் (குரோஷியா) கால்இறுதியில் ஆஸ்திரேலியாவை சேர்ந்த மில்மேனை எதிர்கொண்டார்.
இதில் ஜோகோவிச் 6-3, 6-4, 6-4 என்ற நேர்செட் கணக்கில் எளிதில் வென்று அரைஇறுதிக்கு தகுதி பெற்றார். அவர் தொடர்ந்து 11-வது முறையாக அரை இறுதிக்கு முன்னேறினார்.
மில்மேன் 4-வது சுற்றில் ரோஜர் பெடரரை அதிர்ச்சிகரமாக வீழ்த்தி இருந்தார். கால் இறுதியில் அவரது ஆட்டம் ஜோகோவிச் முன்பு எடுபடவில்லை.
உலகின் 7-ம் நிலை வீரரும், 2014-ம் ஆண்டு சாம்பியனுமான சிலிச் (குரோஷியா) கால் இறுதியில் அதிர்ச்சிகரமாக தோற்றார். 21-ம் நிலை வீரரான நிஷி கோரி (ஜப்பான்) 2-6, 6-4, 7-6, (7-5), 4-6, 6-4 என்ற செட் கணக்கில் கடுமையாக போராடி சிலிச்சை வீழ்த்தி அரை இறுதிக்கு தகுதி பெற்றார்.
24 வயதான நிஷிகோரி 2014-ம் ஆண்டு அமெரிக்க ஒபன் இறுதிப் போட்டியில் சிலிச்சிடம் தோற்றதற்கு தற்போது பழி தீர்த்துக் கொண்டார். நிஷிகோரி அரை இறுதியில் ஜோகோவிச்சை சந்திக்கிறார்.
பெண்கள் ஒற்றையர் பிரிவில் 14-வது வரிசையில் இருக்கும் மேடிசன் கெய்ஸ் (அமெரிக்கா) கால் இறுதியில் ஸ்பெயினைச் சேர்ந்த கர்லா சுராஸ் நவரோவை எதிர்கொண்டார். இதில் கெய்ஸ் 6-4, 6-3 என்ற நேர்செட் கணக்கில் எளிதில் வென்று அரை இறுதிக்கு முன்னேறினார்.
மற்றொரு கால் இறுதியில் 20-வது இடத்தில் உள்ள நவோமி ஒசாகா (ஜப்பான்) 6-1, 6-1 என்ற நேர்செட் கணக்கில் லெசியாவை வீழ்த்தி முதல் முறையாக அரை இறுதிக்கு தகுதி பெற்றார். ஒசாகா அரை இறுதியில் மேடிசன் கெய்சை சந்திக்கிறார்.
ஜப்பான் டென்னிஸ் வரலாற்றில் இவை முக்கியமான நாள். அந்நாட்டை சேர்ந்த இருவர் அரைஇறுதிக்கு முன்னேறி உள்ளனர். #USOpen2018
18-வது ஆசிய விளையாட்டு போட்டி இந்தோனேஷியாவின் ஜகார்தா மற்றும் பாலெம்யெங் நகரங்களில் நடந்து வருகிறது.
10-ம் நாளான இன்று காலை பெண்களுக்கான 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தின் தகுதி சுற்று நடந்தது. இதில் இந்திய வீராங்கனைகள் டூட்டி சந்த், ஹிமா தாஸ் பங்கேற்றனர்.
இதில் 4-வது தகுதி சுற்றில் ஓடிய டூட்டி சந்த் 23.37 வினாடியில் கடந்து முதல் இடத்தை பிடித்தார். ஒட்டுமொத்தமாக அவர் 2-வது இடத்தை பிடித்து அரை இறுதிக்கு தகுதி பெற்றார்.
2-வது தகுதி சுற்றில் ஓடிய ஹிமாதாஸ் 23.47 வினாடியில் கடந்து 4-வது இடத்தை பிடித்தார். ஆனால் அவர் நேரத்தின் அடிப்படை யில் 7-வது இடத்தை பிடித்து அரைஇறுதிக்கு முன்னேறினார்.
இதன் அரைஇறுதி போட்டி மாலை 5.20 மணிக்கு நடக்கிறது. ஹமாதாஸ் 400 மீட்டர் ஓட்டத்திலும், டூட்டி சந்த் 100 மீட்டர் ஓட்டத்திலும் வெள்ளிப்பதக்கம் வென்று இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தடகளத்தில் இன்று மாலை நடக்கும் பெண்களுக்கான 5ஆயிரம் மீட்டர் ஓட்டத்தில் இந்தியாவின் சூர்யா பங்கேற்கிறார். பெண் களுக்கான ஈட்டி எறிதலில் போட்டியில் அன்னுராணியும் கலந்து கொள்கிறார்.
இரவு 7.15 மணிக்கு நடக்கும் கலப்பு 400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் முகமது, ஆரோக்ய ராஜீவ், ஹிமாதாஸ், பூவம்மா ஆகியோரை கொண்ட இந்திய அணி பங்கேற்கிறது. இப்போட்டியில் இந்திய அணி மீது அதிக எதிர்பார்ப்பு இருக்கிறது.
ஸ்குவாஷ் போட்டியில் இந்திய பெண்கள் அணி இன்று ‘லீக்’ போட்டியில் தாய்லாந்துடன் மோதியது. ஜோஷ்னா சின்னப்பா, தீபிகா பல்லிக்கல், குருவில்லா, தன்விகன்னா ஆகிய கொண்ட இந்திய அணி 3-0 என்ற தளத்தில் வெற்றி பெற்றது. #AsianGames2018
கிராண்ட்ஸ்லாம் போட்டியான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டன் நகரில் நடந்து வருகிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரை இறுதி ஆட்டங்கள் இன்று நடக்கிறது.
மாலை 5.30 மணிக்கு நடக்கும் முதல் அரை இறுதியில் 8-ம் நிலை வீரர் கெவின் ஆண்டர்சனும், (தென்ஆப்பிரிக்கா)- 9-ம் நிலை வீரர் ஜான் இஸ்னர் (அமெரிக்கா) மோதுகிறார்கள்.
இவர்கள் இருவரும் கிராண்ட்சிலாம் பட்டத்தை வென்றதில்லை. இதில் ஆண்டர்சன் கடந்த ஆண்டு அமெரிக்க ஒபனில் இறுதிப் போட்டி வரை முன்னேறி இருந்தார்.
நம்பர் ஒன் வீரர் ரோஜர் பெடரரை கால் இறுதியில் வீழ்த்திய ஆண்டர்சன் நம்பிக்கையுடன் உள்ளார்.
இரவு 7.30மணிக்கு மற்றொரு அரை இறுதியில் 2-ம் நிலை வீரர் ரபேல் நடால் (ஸ்பெயின்)- ஜோகோவிச் (செர்பியா) பலப்பரீட்சை நடத்துகின்றனர்.
17 கிராண்ட்சிலாம் பட்டம் வென்றுள்ள நடால் விம்பிள்டன் டென்னிஸ் இறுதிப் போட்டிக்கு 6-வது முறையாக தகுதி பெறும் ஆர்வத்தில் உள்ளார்.
அவர் விம்பிள்டன் பட்டத்தை (2008, 2010) 2 முறை கைப்பற்றி உள்ளார். சமீபகாலமாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் நடால் மிகுந்த நம்பிக்கையுடன் உள்ளார். ஆனாலும் அவருக்கு ஜோகோவிச் கடும் சவால் அளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
12 கிராண்ட்ஸ்லாம் வென்றுள்ள ஜோகோவிச் விம்பிள்டன் இறுதிப் போட்டிக்கு இதுவரை 4 முறை தகுதி பெற்று உள்ளார். அதில் 2011, 2014, 2015-ம் ஆண்டுகளில் பட்டம் வென்றார்.
முன்னாள் நம்பர் ஒன் வீரரான அவர் கடந்த ஆண்டு கடும் சறுக்கலை சந்தித்தார். அதில் இருந்து மீண்டும் தற்போது விம்பிள்டன் அரை இறுதியை எட்டி உள்ளார். இருவரும் இதுவரை 51 முறை மோதி உள்ளனர். இதில் ஜோகோவிச் 26 தடவையும், நடால் 25 தடவையும் வெற்றி பெற்றனர். #RafaelNadal #NovakDjokovic #wimbledon
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்