search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "newzealand"

    • எங்களுக்கு மூன்றாவதாக பிறந்துள்ள இவ்வுலகின் அழகான பெண்ணை நாங்கள் வரவேற்கிறோம்.
    • இவ்வுலகிற்கு பாதுகாப்பாக வருகை வந்து, நீங்கள் அற்புதமான பயணத்தை மேற்கொள்ள இருக்கிறீர்கள்" என்று அவர் பதிவிட்டுள்ளார்

    நியூசிலாந்து கிரிக்கெட் வீரர் கேன் வில்லியம்சன் சாரா ரஹீம் தம்பதிக்கு மூன்றாவது குழந்தையாக பெண் குழந்தை பிறந்துள்ளது. இவர்களுக்கு ஏற்கனவே 3 வயதில் ஒரு பெண் குழந்தையும் 1 வயதில் ஒரு ஆண் குழந்தையும் உள்ளது.

    இது தொடர்பாக கேன் வில்லியம்சன், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குழந்தையுடன் கூடிய புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.

    அதில், எங்களுக்கு மூன்றாவதாக பிறந்துள்ள இவ்வுலகின் அழகான பெண்ணை நாங்கள் வரவேற்கிறோம். இவ்வுலகிற்கு பாதுகாப்பாக வருகை வந்து, நீங்கள் அற்புதமான பயணத்தை மேற்கொள்ள இருக்கிறீர்கள்" என்று அவர் பதிவிட்டுள்ளார்.

    தனது குழந்தையின் பிறப்பை ஒட்டி, அண்மையில் நடைபெற்ற நியூசிலாந்துக்கும் ஆஸ்திரேலியாவுக்கு இடையேயான டி20 தொடரில் இருந்து அவர் விலகியிருந்தார்.

    ஆனால் அதற்கு முன்பு நடைபெற்ற தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான டெஸ்ட் தொடரில் மிக சிறப்பான ஆட்டத்தை கேன் வில்லியம்சன் வெளிப்படுத்தியிருந்தார். இந்த டெஸ்ட் தொடரில் மட்டும் 3 டெஸ்ட் சதங்களை அவர் அடித்துள்ளார்.

    இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலிக்கும் அனுஷ்கா சர்மாக்கும் அண்மையில் தான் ஆகாய் என்ற ஆண் குழந்தை பிறந்தது குறிப்பிடத்தக்கது

    • நியூசிலாந்து அணி 149 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
    • நியூசிலாந்து அணி அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.

    உலகக் கோப்பை 2023 லீக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. ஒவ்வொரு போட்டியிலும் நம்ப முடியாத சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. லீக் தொடரில் இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் நியூசிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின.

    இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 288 ரன்களை குவித்தது. இதைத் தொடர்ந்து களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி 34.4 ஓவர்களில் வெறும் 139 ரன்களை மட்டுமே எடுத்து, அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் காரணமாக நியூசிலாந்து அணி 149 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

     

    இன்றைய வெற்றியின் மூலம் நியூசிலாந்து அணி உலகக் கோப்பை 2023 புள்ளி பட்டியலில் இந்தியாவை இரண்டாவது இடத்திற்கு தள்ளி முதலிடத்திற்கு முன்னேறி இருக்கிறது. இதுவரை நான்கு போட்டிகளில் விளையாடி இருக்கும் நியூசிலாந்து அணி, இவை அனைத்திலும் வெற்றி பெற்று 8 புள்ளிகளை பெற்றுள்ளது. இதன் காரணமாக நியூசிலாந்து அணி தற்போது முதலிடத்திற்கு முன்னேறி இருக்கிறது. நியூசிலாந்து அணியின் நெட் ரன்ரேட் தற்போது 1.923 ஆக இருக்கிறது.

    மூன்று போட்டிகளில் விளையாடி இருக்கும் இந்திய அணி அனைத்திலும் வெற்றி பெற்று, 6 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்திய அணியின் நெட் ரன் ரேட் 1.821 ஆக இருக்கிறது. இந்தியாவுக்கு அடுத்த இடத்தில் தென் ஆப்பிரிக்கா அணி மூன்றாவது இடத்திலும், பாகிஸ்தான் அணி நான்காவது இடத்திலும் உள்ளன.

    தென் ஆப்பிரிக்கா மற்றும் பாகிஸ்தான் அணிகள் தலா 4 புள்ளிகளை பெற்றுள்ளன. இவைகளின் நெட் ரன் ரேட் முறையே 1.385 மற்றும் -0.137 ஆக இருக்கிறது. புள்ளி பட்டியலில் இங்கிலாந்து அணி 5-வது இடத்தில் உள்ளது. வங்காளதேசம், ஆஸ்திரேலியா, நெதர்லாந்து, ஆப்கானிஸ்தான் மற்றும் இலங்கை போன்ற அணிகள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.

    • சிறப்பாக ஆடிய வில் யங் அரை சதம் விளாசினார்.
    • நவீன் உல் ஹக், அஸ்மத்துல்லா உமர்சாய் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

    உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 16-வது லீக் போட்டியில் நியூசிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி நியூசிலாந்து அணி தொடக்க ஆட்டக்காரர்களாக கான்வே -வில் யங் களமிறங்கினர். கான்வே 20 ரன்னில் அவுட் ஆனார். அடுத்து வந்த ரச்சின் ரவீந்திரா மற்றும் வில் யங் ஜோடி நிதானமாக விளையாடி அணியின் ஸ்கோரை கணிசமாக உயர்த்தினர். சிறப்பாக ஆடிய வில் யங் அரை சதம் விளாசினார்.

    நிதானமாக விளையாடிய ரச்சின் 32 ரன்னில் ஆட்டமிழந்தார். அவர் அவுட் ஆன சிறிது நேரத்திலேயே வில் யங் வெளியேறினார். அதே ஓவரில் மிட்செல் 1 ரன்னில் ஆட்டமிழந்தார். அப்போது அணியின் ஸ்கோர் 4 விக்கெட்டுகளை இழந்து 110 ரன்கள் சேர்த்திருந்தது.

    போட்டி முடிவில் நியூசிலாந்து அணி 50 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 288 ரன்கள் குவித்தது. ஆப்கானிஸ்தான் தரப்பில் நவீன் உல் ஹக், அஸ்மத்துல்லா உமர்சாய் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

    இதைத் தொடர்ந்து களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணிக்கு சுமாரான துவக்கமே கிடைத்தது. அந்த அணியின் குர்பாஸ் மற்றும் இப்ராஹிம் முறையே 11 மற்றும் 14 ரன்களில் பெவிலியன் திரும்பினர். அடுத்து வந்த ரகமத் ஷா பொறுமையான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இவர் 62 பந்துகளில் 36 ரன்களை எடுத்த போது ஆட்டமிழந்தார்.

    கேப்டன் ஹஷ்மதுள்ளா 8 ரன்களில் ஆட்டமிழந்தார். இவரை தொடர்ந்து வந்த வீரர்களும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதன் காரணமாக ஆப்கானிஸ்தான் அணி 34.4 ஓவர்கள் முடிவில் 139 ரன்களை எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதன் காரணமாக நியூசிலாந்து அணி 149 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    நியூசிலாந்து அணி சார்பில் சிறப்பாக பந்துவீசிய சான்ட்னர் மற்றும் ஃபெர்குசன் தலா மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார். டிரெண்ட் போல்ட் இரண்டு விக்கெட்டுகளையும், மேட் ஹென்ரி, ரச்சின் ரவீந்திரா தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

    உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான நேற்றைய பயிற்சி ஆட்டத்தில் நியூசிலாந்தை 91 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது வெஸ்ட் இண்டீஸ்.
    லண்டன்:

    உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான கடைசி பயிற்சி போட்டி வெஸ்ட் இண்டீஸ் - நியூசிலாந்து அணிகளுக்கு இடையே பிரிஸ்டோலில் நேற்று நடைபெற்றுது.

    டாஸ் வென்ற நியூசிலாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி வெஸ்ட் இண்டீஸ் அணியின் கிறிஸ் கெய்ல் 36 ரன்னும், லிவிஸ் 50 ரன்னும் சேர்த்து ஆட்டமிழந்தனர்.

    பொறுப்பாக ஆடிய ஷாய் ஹோப் சதமடித்தார். அவர் 86 பந்தில் 9 பவுண்டரி, 4 சிக்சருடன் 101 ரன்கள் குவித்தார். ஜேசன் ஹோல்டர் 47 ரன்னும், அந்த்ரே ரசல் 25 பந்தில் 54 ரன்களும் விளாச வெஸ்ட் இண்டீஸ் 49.2 ஓவரில் 421 ரன்கள் குவித்து ஆல்அவுட் ஆனது.



    தொடர்ந்து ஆடிய நியூசிலாந்து அணியில் கேப்டன் கேன் வில்லியம்சன் மற்றும் டாம் பிளெண்டல் மட்டுமே ஓரளவு தாக்குப்பிடித்து ஆடினர். பிளெண்டல் 106 ரன்னும், கேன் வில்லியம்சன் 85 ரன்னும் எடுத்தனர். மற்றவர்கள் நிலைத்து நிற்கவில்லை.

    இறுதியில், நியூசிலாந்து அணி 47.2 ஓவரில் 330 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. இதையடுத்து, வெஸ்ட் இண்டீஸ் அணி 91 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
    உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான பயிற்சி ஆட்டத்தில் பேட்ஸ்மேன்களின் சொதப்பலால் இந்திய அணி நியூசிலாந்திடம் தோல்வி அடைந்தது.
    லண்டன்:

    10 அணிகள் பங்கேற்கும் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி வரும் 30-ம் தேதி தொடங்குகிறது. தற்போது பயிற்சி ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

    இந்நிலையில், லண்டனில் நேற்று நடைபெற்ற பயிற்சி ஆட்டத்தில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் மோதின. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.

    நியூசிலாந்து அணியினரின் அசத்தலான பந்து வீச்சால் ரோகித் சர்மா 2 ரன்னிலும், ஷிகர் தவான் 2 ரன்னிலும், லோகேஷ் ராகுல் 6 ரன்னில்லும் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தனர். தொடர்ந்து இறங்கிய கேப்டன் விராட் கோலி 18 ரன்னில் அவுட்டானார்.

    ஹர்திக் பாண்ட்யா 30 ரன்னும், டோனி 17 ரன்னும், தினேஷ் கார்த்திக் 4 ரன்னும் எடுத்து வெளியேறினர். இந்திய அணி 115 ரன்னுக்குள் 8 விக்கெட்டுகளை பறிகொடுத்து தத்தளித்தது.

    இறுதிக்கட்டத்தில் களமிறங்கிய ஆல்- ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவும், குல்தீப் யாதவும் இணைந்து அணியை சற்றே உயர்த்தினர். இந்த ஜோடி 9வது விக்கெட்டுக்கு 62 ரன்கள் சேர்த்தது. ஜடேஜா அரை சதமடித்தார். அவர் 54 ரன்னிலும், குல்தீப் யாதவ் 19 ரன்னிலும் ஆட்டமிழந்தனர் இறுதியில் இந்தியா 179 ரன்னில் ஆல் அவுட்டானது.



    நியூசிலாந்து சார்பில் டிரென்ட் பவுல்ட் 4 விக்கெட்டுகளும், ஜேம்ஸ் நீஷம் 3 விக்கெட்டுகளும் சாய்த்தனர்.

    தொடர்ந்து ஆடிய நியூசிலாந்து அணி 37.1 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 180 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் எளிதில் வெற்றி பெற்றது. ராஸ் டெய்லர் 71 ரன்னும், கேப்டன் வில்லியம்சன் 67 ரன்னும் எடுத்து அசத்தினர். 

    இந்திய அணி தனது அடுத்த பயிற்சி ஆட்டத்தில் வங்காளதேசத்தை நாளை மறுதினம் எதிர்கொள்கிறது.

    நேற்றைய ஆட்டத்தில் டோனிக்கு பதிலாக இந்திய அணி விக்கெட் கீப்பராக தினேஷ் கார்த்திக் செயல்பட்டார்.
    நியூசிலாந்து மசூதியில் நடந்த துப்பாக்கி சூட்டுக்கு கண்டனம் தெரிவித்து அந்நாட்டு பிரதமருக்கு நரேந்திர மோடி கடிதம் எழுதியுள்ளார். #MosqueShooting #NewZealandShooting #PMModi
    புதுடெல்லி:

    நியூசிலாந்தின் கிறிஸ்ட்சர்ச் நகரில் உள்ள இரண்டு மசூதிகளில் மர்ம நபர்கள் புகுந்து துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தியதில் 49 பேர் பலியாகி உள்ளனர். மேலும் பலர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த தாக்குதலுக்கு நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆடர்ன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். 

    இதையடுத்து, நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவில் பயங்கரவாத தடுப்பு படை போலீசார் உஷார் நிலையில் உள்ளனர். நியூசிலாந்தில் கைது செய்யப்பட்ட 4 பேரில் ஒருவன் ஆஸ்திரேலியாவை சேர்ந்த வலதுசாரி பயங்கரவாதி என அந்நாட்டின் பிரதமர் ஸ்காட் மாரிசனும் உறுதி செய்துள்ளார்.

    இந்நிலையில், நியூசிலாந்து மசூதியில் நடந்த துப்பாக்கி சூட்டுக்கு கண்டனம் தெரிவித்து அந்நாட்டு பிரதமர் ஜெசிந்தா ஆடர்னுக்கு பிரதமர் நரேந்திர மோடி கடிதம் எழுதியுள்ளார்.

    இதுதொடர்பாக வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், கிறிஸ்ட்சர்ச்சில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலுக்கு அப்பாவி மக்கள் பலியானது அறிந்து அதிர்ச்சியும், வேதனையும் அடைந்துள்ளார். பலியானோர் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். இந்த தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள பிரதமர், நியூசிலாந்துக்கு தேவைப்படும் உதவிகளை அளிக்க தயாராக உள்ளோம் என குறிப்பிட்டுள்ளது. #MosqueShooting #NewZealandShooting #PMModi
    ஹேமில்டனில் நடைபெற்று வரும் 3-வது டி20 போட்டியில் இந்தியாவின் வெற்றிக்கு 213 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது நியூசிலாந்து. #NZvIND
    நியூசிலாந்து - இந்தியா இடையிலான 3-வது டி20 கிரிக்கெட் போட்டி ஹேமில்டனில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார்.

    இதையடுத்து, நியூசிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக டிம் செய்பெர்ட், காலின் முன்ரோ களமிறங்கினர். இருவரும் முதலில் இருந்தே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதனால் அணியின் ரன் விகிதம் ஒரு ஓவருக்கு 10 ரன்களுக்கு குறையாமல் வந்தது.



    அணியின் எண்ணிக்கை 80 ஆக இருக்கும்போது குல்தீப் யாதவ் இந்த ஜோடியை பிரித்தார். செய்பெர்ட் 25 பந்தில் 43 ரன் எடுத்து அவுட்டானார்.

    அதிரடியாக ஆடிய முன்ரோ 40 பந்துகளில் 72 ரன்கள் சேர்த்து குல்தீப் பந்தில் வெளியேறினார். அடுத்து இறங்கிய கேப்டன் வில்லியம்சன் 27 ரன்னில் ஆட்டமிழந்தார். கிராண்ட்ஹோம் 30 ரன்னில் அவுட்டானார்.

    இறுதியில், நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 212 ரன்கள் குவித்துள்ளது. மிச்செல் 19 ரன்னுடனும், டெய்லர் 14 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.

    இதனால் இந்தியாவிற்கு 213 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது. குல்தீப் யாதவ் 2 விக்கெட்டும், கலீல் அகமது, புவனேஷ்வர் குமார் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். #NZvIND
    நியூசிலாந்துக்கு எதிரான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், இந்தியா அணி வெற்றி பெற 244 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. #NZvIND #TeamIndia
    மவுன்ட்மவுக்னி:

    இந்தியா- நியூசிலாந்து அணிகள் மோதும் 3-வது ஒரு நாள் போட்டி இந்திய நேரப்படி இன்று காலை 7.30 மணிக்கு தொடங்கியது.

    இந்திய அணியில் 2 மாற்றம் செய்யப்பட்டு இருந்தது. காயம் காரணமாக டோனி ஆடவில்லை. அவருக்கு பதிலாக தினேஷ்கார்த்திக் இடம் பெற்றார். இதேபோல விஜய்சங்கர் இடத்தில் ஹர்த்திக் பாண்ட்யாவுக்கு வாய்ப்பு கிடைத்தது. பெண்கள் குறித்து சர்ச்சையான கருத்துக்களை தெரிவித்ததால் அவர் சஸ்பெண்டு செய்யப்பட்டார். இந்த சஸ்பெண்டு நீக்கப்பட்டதால் ஹர்த்திக் பாண்ட்யாவுக்கு விளையாட வாய்ப்பு வழங்கப்பட்டது.

    இதேபோல நியூசிலாந்து அணியில் ஒரே ஒரு மாற்றம் செய்யப்பட்டு இருந்தது. கிராண்ட் ஹோமுக்கு பதிலாக சான்ட்னெர் இடம் பெற்றார்.

    நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் ‘டாஸ்’ வென்று தனது அணி முதலில் பேட்டிங் செய்யும் என்று அறிவித்தார். இந்திய வீரர்களின் அபாரமான பந்து வீச்சால் நியூசிலாந்து அணி திணறியது.



    59 ரன் எடுப்பதற்குள் அந்த அணி 3 விக்கெட்டை இழந்தது. தொடக்க வீரர் முன்ரோ 7 ரன்னில் முகமது ‌ஷமி பந்திலும், மற்றொரு தொடக்க வீரர் குப்தில் 13 ரன்னில் புவனேஷ்குமார் பந்திலும் ஆட்டம் இழந்தனர். நியூசிலாந்து கேப்டனும், உலகின் முன்னணி பேட்ஸ் மேன்களில் ஒருவருமான வில்லியம்சன் 28 ரன்னில் யசுவேந்திரசாஹல் பந்தில்‘அவுட்’ ஆனார்.

    4-வது விக்கெட்டான டெய்லர்- டாம்லாதம் ஜோடி விக்கெட் சரிவை தடுத்து பொறுமையுடன் விளையாடியது. அந்த அணி 25.5 ஓவரில் 100 ரன்னை தொட்டது.

    இருவரும் சிறப்பாக விளையாடி அரை சதத்தை எடுத்தனர். டெய்லர் 71 பந்தில் 4 பவுண்டரியுடன் 50 ரன்னும், லாதம் 68 பந்தில் 1 பவுண்டரி, 1 சிக்சருடன் 50 ரன்னும் எடுத்தனர்.

    இந்த ஜோடியை சாஹல் பிரித்தார். டாம் லாதம் 51 ரன்னில் ஆட்டம் இழந்தார். அப்போது ஸ்கோர் 178 ஆக இருந்தது. 4-வது விக்கெட் ஜோடி 118 ரன் எடுத்தது. அடுத்து வந்த நிக்கோலசை 6 ரன்னில் பாண்ட்யா வெளியேற்றினார். அடுத்து வந்த சான்ட்னெர் 3 ரன்னில் ஆட்டம் இழந்தார்.

    ஒரு முனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் இருந்த ரோஸ் டெய்லர் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

    அபாரமாக விளையாடி வந்த டெய்லர் சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் 93 ரன்னில் முகமது‌ஷமி பந்தில் 7-வது விக்கெட்டாக ஆட்டம் இழந்தார். 106 பந்தில் 9 பவுண்டரியுடன் அவர் இந்த ரன்னை எடுத்தார். அப்போது ஸ்கோர் 222 ஆக (45.1 ஓவர்) இருந்தது.

    நியூசிலாந்து அணியின் எஞ்சிய 3 விக்கெட்டுகளும் எளிதில் விழுந்தன. அந்த அணி 49 ஓவர்களில் 243 ரன்னில் ‘ஆல் அவுட்’ ஆனது. இதனால் இந்தியாவுக்கு 244 ரன் இலக்காக இருந்தது. முகமது ‌ஷமி 3 விக்கெட்டும், புவனேஷ்வர்குமார், யசுவேந்திர சாஹல், ஹர்த்திக் பாண்ட்யா தலா 2 விக்கெட்டும் எடுத்தனர்.

    244 ரன் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் இந்தியா விளையாடியது. ரோகித்சர்மா, தவானின் தொடக்கம் சிறப்பாக இருந்தது. தவான் அதிரடியான ஆட்டத்தில் ஈடுபட்டார்.

    அவர் 27 பந்தில் 28 ரன்னுடன் (6 பவுண்டரி) ஆட்டம் இழந்தார். அவரது விக்கெட்டை போல்ட் கைப்பற்றினார். அப்போது ஸ்கோர் 39 ரன்னாக (8.2 ஓவர்) இருந்தது.

    2-வது விக்கெட்டுக்கு ரோகித்சர்மாவுடன் கேப்டன் வீராட்கோலி ஜோடி சேர்ந்தார். #NZvIND #TeamIndia
    மவுண்ட் மவுங்கானுவில் நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் இலங்கையை 21 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய நியூசிலாந்து தொடரையும் கைப்பற்றி அசத்தியது. #NZvSL #ThisaraPerera
    மவுண்ட் மவுங்கானுய்:

    நியூசிலாந்து - இலங்கை இடையிலான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி மவுண்ட் மவுங்கானுயில் இன்று நடைபெற்றது.

    டாஸ் வென்ற நியூசிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி அந்த அணியின் மார்ட்டின் கப்தில், கொலின் முன்றோ ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள்.
     
    கொலின் முன்றோ சிறப்பாக ஆடி 87 ரன்னில் வெளியேறினார். ராஸ் டெய்லர் 90 ரன்னில் அவுட்டானார். கடைசி வரிசையில் இறங்கிய ஜேம்ஸ் நீசம் அதிரடியாக ஆடி 37 பந்துகளில் 3 சிக்சர், 5 பவுண்டரி உள்பட 67 ரன்கள் எடுத்து ரன் அவுட்டானார்.
     
    இறுதியில், நியூசிலாந்து அணி 50 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 319 ரன்கள் குவித்தது. நியூசிலாந்து அணியின் 4 வீரர்கள் ரன் அவுட்டாகினர்.



    அதன்பின், 320 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி களம் இறங்கியது. தொடக்க வீரர்களான டிக்வெல்லா, குணதிலகா ஆகியோர் களமிறங்கினர். குணதிலகா பொறுப்புடன் ஆடி 71 ரன்கள் எடுத்தார். அதன்பின் வந்த வீரர்கள் யாரும் நிலைத்து நிற்கவில்லை.

    ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும், மறுபுறம் திசாரா பெரேரா வெற்றிக்காக போராடினார். அவர் அதிரடியாக ஆடி 74 பந்துகளில் 13 சிக்சர்கள், 8 பவுண்டரிகள் உள்பட 140 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    இறுதியில் இலங்கை 46.2 ஓவரில் 298 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது. இதனால் நியூசிலாந்து 21 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின்மூலம் ஒருநாள் தொடரை கைப்பற்றி அசத்தியது. ஆட்ட நாயகனாக இலங்கை வீரர் திசாரா பெரேரா தேர்வானார். #NZvSL #ThisaraPerera
    கிறிஸ்ட்சர்ச்சில் நடைபெற்ற இலங்கைக்கு எதிரான 2-வது டெஸ்டில் 423 ரன் வித்தியாசத்தில் வென்றதுடன், தொடரையும் கைப்பற்றி அசத்தியது நியூசிலாந்து. #NZvSL
    நியூசிலாந்து - இலங்கை அணிகள் மோதும் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிறிஸ்ட்சர்ச்சில் நடைபெற்று வருகிறது.

    நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 178 ரன்கள் எடுத்தது. இலங்கை அணி முதல் இன்னிங்சில் 104 ரன்களில் சுருண்டது. போல்ட் 15 பந்துகளில் 6 விக்கெட்டை வீழ்த்தி முத்திரை பதித்தார்.

    74 ரன்கள் முன்னிலை பெற்ற நியூசிலாந்து, 2-வது இன்னிங்சில் 4 விக்கெட் இழப்புக்கு 585 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. டாம் லாதம் 176 ரன்னில் அவுட்டானார். நிக்கோல்ஸ் 162 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இதையடுத்து, இலங்கை அணிக்கு 660 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

    இலங்கை அணியின் 2வது இன்னிங்சில் முன்னணி வீரர்கள் விரைவில் அவுட்டாகினர். தினேஷ் சண்டிமால், குசால் மெண்டிஸ் ஆகியோர் பொறுப்புடன் விளையாடினர். சண்டிமால் 56 ரன்னிலும், மெண்டிஸ் 67 ரன்னிலும் அவுட்டாகினர். ஏஞ்சலோ மேத்யூஸ் 22 ரன்னில் காயமடைந்து வெளியேறினார். அதன்பின், ரோஷன் சில்வா 18 ரன்னிலும், நிரோஷன் டிக்வெலா 19 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். 4வது நாள் ஆட்ட நேர முடிவில் இலங்கை அணி 6 விக்கெட்டுக்கு 231 ரன்கள் எடுத்தது. தில்ருவான் பெராரா 22 ரன்னும், சுரங்க லக்மால் 16 ரன்னும் எடுத்து அவுட்டாகாமல் இருந்தனர்.



    இந்நிலையில், இன்று தொடர்ந்து ஆடிய இலங்கை அணி மேலும் 5 ரன்கள் சேர்த்த நிலையில் 236 ரன்னுக்கு ஆல்-அவுட் ஆனது. இதனால் நியூசிலாந்து 423 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    நியூசிலாந்து சார்பில் நீல் வாக்னர் 4 விக்கெட்டும், டிரெண்ட் போல்ட் 3 விக்கெட்டும், டிம் சவுத்தி 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இந்த வெற்றியின் மூலம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை நியூசிலாந்து 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. முதல் டெஸ்ட் போட்டி டிரா ஆனது குறிப்பிடத்தக்கது. #NZvSL
    கிறிஸ்ட்சர்ச்சில் நடைபெற்று வரும் இலங்கைக்கு எதிரான 2-வது டெஸ்டில் நியூசிலாந்து அணி வெற்றிபெற இன்னும் 4 விக்கெட்டுகள் தேவைப்படுகிறது. #NZvSL
    நியூசிலாந்து - இலங்கை அணிகள் மோதும் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிறிஸ்ட்சர்ச்சில் நடைபெற்று வருகிறது.

    நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 178 ரன்கள் எடுத்தது. இலங்கை அணி முதல் இன்னிங்சில் 104 ரன்களில் சுருண்டது. போல்ட் 15 பந்துகளில் 6 விக்கெட்டை வீழ்த்தி முத்திரை பதித்தார்.

    74 ரன்கள் முன்னிலை பெற்ற நியூசிலாந்து, 2-வது இன்னிங்சில் 4 விக்கெட் இழப்புக்கு 585 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. டாம் லாதம் 176 ரன்னில் அவுட்டானார். நிக்கோல்ஸ் 162 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இதையடுத்து, இலங்கை அணிக்கு 660 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. 3-வதுநாள் ஆட்ட முடிவில் இலங்கை அணி 2 விக்கெட்டுக்கு 24 ரன்கள் எடுத்திருந்தது.



    இந்நிலையில், 4வது நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. தினேஷ் சண்டிமால், குசால் மெண்டிஸ் ஆகியோர் அரை சதமடித்தனர். இருவரும் சேர்ந்து 117 ரன்கள் சேர்த்தனர். சண்டிமால் 56 ரன்னிலும், மெண்டிஸ் 67 ரன்னிலும் அவுட்டாகினர். 

    அடுத்து இறங்கிய ஏஞ்சலோ மேத்யூஸ் 22 ரன்னில் காயமடைந்து வெளியேறினார். அதன்பின், ரோஷன் சில்வா 18 ரன்னிலும், நிரோஷன் டிக்வெலா 19 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். 

    4வது நாள் ஆட்ட நேர முடிவில் இலங்கை அணி 6 விக்கெட்டுக்கு 231 ரன்கள் எடுத்துள்ளது. தில்ருவான் பெராரா 22 ரன்னும், சுரங்க லக்மால் 16 ரன்னும் எடுத்து அவுட்டாகாமல் உள்ளனர்.

    இன்னும் ஒருநாள் மீதமிருக்கும் நிலையில், 4 விக்கெட்டுகளை எடுப்பதன் மூலம் நியூசிலாந்து அணி வெற்றியை நெருங்கியுள்ளது. #NZvSL
    நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டின் முதல் நாளில் இலங்கை அணி 9 விக்கெட் இழப்புக்கு 275 ரன்கள் எடுத்துள்ளது. #SLvNZ
    வெல்லிங்டன்:

    இலங்கை அணி நியூசிலாந்தில் பயணம் செய்து 3 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டி மற்றும் ஒரே ஒரு டி 20 போட்டியில் விளையாட உள்ளது.

    இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி வெல்லிங்டனில் இன்று தொடங்கியது.

    டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இலங்கை அணியின் தனுஷ்கா குணதிலகா, திமுத் கருணரத்னே ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.



    கருணரத்னே சிறப்பாக ஆடி அரை சதமடித்த அவர் 79 ரன்னில் வெளியேறினார். அவரை தொடர்ந்து ஆடிய ஏஞ்சலோ மேத்யூஸ் 83 ரன்னிலும் அவுட்டானார். மற்ற வீரர்கள் நிலைத்து நின்று ஆடவில்லை.

    இறுதியில், முதல் நாள் ஆட்ட நேர முடிவில் இலங்கை அணி 87 ஓவர்களில் 9 விக்கெட்டுக்கு 275 ரன்கள் எடுத்துள்ளது. நிரோஷன் டிக்வெலா 73 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    நியூசிலாந்து அணி சார்பில் டிம் சவுத்தி 5 விக்கெட்டும், நீல் வாக்னர் 2 விக்கெட்டும் வீழ்த்தினர். #SLvNZ
    ×