என் மலர்
நீங்கள் தேடியது "ENGvsSL"
- இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி கைப்பற்றியது.
- 2023-க்கு பிறகு அந்நிய மண்ணில் முதல் முறையாக ஒருநாள் தொடரை இங்கிலாந்து அணி கைப்பற்றியது.
கொழும்பு:
இங்கிலாந்து-இலங்கை அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி கொழும்பில் நேற்று நடந்தது. டாஸ் ஜெயித்து முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 50 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 357 ரன்கள் குவித்தது.
ஜேக்கப் பெத்தேல் 65 ரன்னில் அவுட் ஆனார். 20-வது சதம் அடித்த ஜோ ரூட் 111 ரன்களுடனும் (108 பந்து, 9 பவுண்டரி, ஒரு சிக்சர்), 3-வது சதம் விளாசிய கேப்டன் ஹாரி புரூக் 136 ரன்களுடனும் (66 பந்து, 11 பவுண்டரி, 9 சிக்சர்) களத்தில் இருந்தனர்.
அடுத்து ஆடிய இலங்கை அணி 46.4 ஓவர்களில் 304 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. இதனால் இங்கிலாந்து அணி 53 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பவன் ரத்னாயகேவின் (121 ரன்) கன்னி சதம் வீணானது. இங்கிலாந்து தரப்பில் ஜாமி ஓவர்டான், லியாம் டாவ்சன், வில் ஜாக்ஸ், அடில் ரஷித் தலா 2 விக்கெட் கைப்பற்றினர். இங்கிலாந்து கேப்டன் ஹாரி புரூக் ஆட்டநாயகன் விருதும், ஜோ ரூட் தொடர்நாயகன் விருதும் பெற்றனர்.
இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. இதன்மூலம் 2023-க்கு பிறகு அந்நிய மண்ணில் முதல் முறையாக ஒருநாள் தொடரை இங்கிலாந்து அணி கைப்பற்றியது.
மேற்கிந்திய தீவுகள் (1-2), (1-2), இந்தியா (0-3), நியூசிலாந்து (0-3) அணிகளுக்கு எதிராக தொடர்ந்து தோல்வியுற்ற நிலையில், இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரை 2-1 என கைப்பற்றியது.
- முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மான்செஸ்டரில் நடைபெற்றது.
- இலங்கை முதல் இன்னிங்சில் 236 ரன்களில் ஆல்அவுட் ஆனது.
இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகள் மோதிய முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மான்செஸ்டரில் நடைபெற்றது. இந்த போட்டியில் முலில் பேட் செய்த இலங்கை அணி முதல் இன்னிங்சில் 236 ரன்னில் 'ஆல்அவுட்' ஆனது. இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 358 ரன் குவித்தது.
122 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை விளையாடிய இலங்கை 3-வது நாள் ஆட்ட நேர முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 204 ரன்களை எடுத்து இருந்தது. நேற்று 4 ஆம் நாள் ஆட்டம் நடந்தது. தொடர்ந்து விளையாடிய இலங்கை அணி 326 ரன் எடுத்தது. இதனால் இங்கிலாந்துக்கு 205 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
இலங்கை சார்பில் காமிந்து மெண்டீஸ் 113 ரன்னும், தினேஷ் சன்டிமால் 79 ரன்னும், மேத்யூஸ் 65 ரன்னும் எடுத்தனர். கிறிஸ் வோக்ஸ், மார்க் வுட் தலா 3 விக்கெட்டுகளையும், அட்கின்சன் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
205 ரன்கள் எனும் இலக்கை துரத்திய இங்கிலாந்து அணி 57.2 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 205 ரன்களை எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இங்கிலாந்து சார்பில் ஜோ ரூட் 62 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.
இந்த போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இங்கிலாந்து அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலைபெற்றுள்ளது. இரு அணிகள் மோதும் 2-வது டெஸ்ட் போட்டி வருகிற 29 ஆம் தேதி லார்ட்ஸ் மைதானத்தில் தொடங்க இருக்கிறது.
- இரு அணிகள் இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
- ஒல்லி போப் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய சாதனை.
இங்கிலாந்து நாட்டுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான முதல் இரு போட்டிகளில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றதோடு, தொடரையும் கைப்பற்றியுள்ளது.
இந்த நிலையில், இரு அணிகள் இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் முதலில் பேட் செய்து வரும் இங்கிலாந்து அணிக்கு ஒல்லி போப் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
முதல் நாள் ஆட்டநேர முடிவில் 103 ரன்களை அடித்த ஒல்லி போப் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய சாதனை படைத்துள்ளார். இது 147 ஆண்டுகால டெஸ்ட் கிரிக்கெட்டில் இதுவரை யாரும் செய்யாத சாதனை ஆகும்.
இலங்கை அணிக்கு எதிராக ஒல்லி போப் அடித்த சதம், டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் அடித்த ஏழாவது சதம் ஆகும். இந்த ஏழு சதங்களையும் அவர் வெவ்வேறு அணிகளுக்கு எதிராகவே அடித்துள்ளார். சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடர்ச்சியாக ஏழு சதங்களை வெவ்வேறு அணிகளுக்கு எதிராக அடித்த முதல் வீரர் என்ற சாதனையை ஒல்லி போப் படைத்துள்ளார்.






