search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sri Lanka"

    • பல்வேறு மாவட்டங்களுக்கு இன்றும், நாளையும் 2 நாட்கள் 'ரெட் அலர்ட்' விடுத்து வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
    • 2 நாட்கள் ரத்து செய்யப்படுவதாக கப்பல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன்துறை இடையே வாரத்தில் 4 நாட்கள் பயணிகள் கப்பல்(சிவகங்கை) போக்குவரத்து நடந்து வருகிறது. இந்த நிலையில் வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கடல் சீற்றம், சூறைக்காற்று வீசும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    இதனால் நாகை, திருவாரூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு இன்றும், நாளையும் 2 நாட்கள் 'ரெட் அலர்ட்' விடுத்து வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் சிவகங்கை பயணிகள் கப்பல் போக்குவரத்து பருவநிலை மற்றும் மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்றும் (செவ்வாய்க்கிழமை) மற்றும் 17-ந் தேதி(வியாழக்கிழமை) ஆகிய 2 நாட்கள் ரத்து செய்யப்படுவதாக கப்பல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

    • அரை இறுதிக்கான வாய்ப்பில் இருக்க வேண்டுமானால் இந்த ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெறுவது அவசியமாகும்.
    • இரு அணிகளும் இதுவரை 25 முறை மோதியுள்ளன. இதில் இந்தியா 19-ல், இலங்கை 5-ல் வெற்றி பெற்றுள்ளன.

    துபாய்:

    9-வது மகளிர் 20 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள துபாய், ஷார்ஜாவில் நடைபெற்று வருகிறது. 10 அணிகள் இதில் பங்கேற்றுள்ளன. அவை 2 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. 'லீக்' முடிவில் இரண்டு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெறும்.

    'ஏ' பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் நியூசிலாந்திடம் 58 ரன்னில் தோற்றது. 2-வது போட்டியில் பாகிஸ்தானை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

    ஹர்மன் பிரீத்சிங் தலைமையிலான இந்திய அணி 3-வது ஆட்டத்தில் இலங்கையை நாளை (புதன்கிழமை) எதிர்கொள்கிறது. இரவு 7.30 மணிக்கு துபாயில் இந்த ஆட்டம் நடக்கிறது.

    அரை இறுதிக்கான வாய்ப்பில் இருக்க வேண்டுமானால் இந்த ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெறுவது அவசியமாகும். இலங்கையை வீழ்த்தி 2-வது வெற்றியை பெறுமா? என்று ஆவலுடன் எதிர் பார்க்கப்படுகிறது. இந்திய அணியில் ஸ்மிருதி மந்தனா, ஷபாலிவர்மா, தீப்திசர்மா, பூஜா வஸ்த்ரகர் ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர்.

    இலங்கை அணி தொடக்க ஆட்டத்தில் பாகிஸ்தானிடம் 31 ரன் வித்தியாசத்திலும், 2-து போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் 6 விக்கெட் வித்தியாசத்திலும் தோற்றது. அந்த அணி ஹாட்ரிக் தோல்வியை தவிர்த்து முதல் வெற்றியை பெறும் ஆர்வத்துடன் இருக்கிறது.

    இரு அணிகளும் இதுவரை 25 முறை மோதியுள்ளன. இதில் இந்தியா 19-ல், இலங்கை 5-ல் வெற்றி பெற்றுள்ளன. ஒரு ஆட்டம் முடிவுஇல்லை.

    முன்னதாக நாளை மாலை 3.30 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா-ஸ்காட்லாந்து அணிகள் மோதுகின்றன. தென் ஆப்பிரிக்கா 2-வது வெற்றிக்காக காத்திருக்கிறது. ஸ்காட்லாந்து 2 ஆட்டத்திலும் தோற்று இருந்தது.

    • முதல் போட்டியில் பாகிஸ்தானிடம் தோல்வியடைந்த இலங்கை அணி இன்று பலமான ஆஸ்திரேலியாவுடன் மோதியது.
    • டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

    பெண்களுக்கான 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் துபாய் மற்றும் சார்ஜாவில் நடைபெற்று வருகிறது.

    இன்று சார்ஜாவில் ஆஸ்திரேலியா- இலங்கை அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

    ஆஸ்திரேலியா அணியின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்த இலங்கை அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 93 ரன்கள் அடித்தது.

    பின்னர் 94 ரன்கள் என்ற இலக்கோடு களம் இறங்கிய ஆஸ்திரேலியா அணி 14.2 ஓவர்களிலேயே 4 விக்கெட் இழப்பிற்கு 94 ரன்கள் அடித்து எளிதாக வெற்றி பெற்றது.

    தனது முதல் போட்டியிலேயே வெற்றி பெற்று ஆஸ்திரேலியா அணி புள்ளிபட்டியலில் 2 ஆம் இடத்திற்கு முன்னேறியது. முதல் போட்டியில் பாகிஸ்தானிடம் தோல்வி அடைந்த இலங்கை அணி 2-ம் போட்டியில் ஆஸ்திரேலியா அணியிடமும் தோல்வி அடைந்து புல்லிபட்டியலில் 4ம் இடத்தில உள்ளது.

    முதல் போட்டியில் மோசமான தோவலியை தழுவிய இந்திய அணி புள்ளிபட்டியலில் கடைசி இடத்தில உள்ளது.

    • சீனா உள்பட 35 நாட்டினர் விசா இல்லாமல் இலங்கைக்கு செல்லலாம்.
    • 6 மாதங்கள் வரை விசா இல்லாமல் இருக்கலாம்.

    இலங்கையில் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க அந்நாட்டு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

    இந்த நிலையில் இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து, சீனா உள்பட 35 நாட்டினர் விசா இல்லாமல் இலங்கைக்கு செல்ல இலவச விசா திட்டம் அறிவிக்கப்பட்டது. இத்திட்டம் இன்று முதல் அமலுக்கு வந்தது.

    அதன்படி இந்தியா, இங்கிலாந்து உட்பட 35 நாடுகளை சேர்ந்தவர்கள் இலங்கைக்கு வருவதற்கு விசா தேவையில்லை என்று இலங்கை அரசு தெரிவித்துள்ளது. 6 மாதங்கள் வரை விசா இல்லாமல் இலங்கையில் இருக்கலாம் என்றும் அந்நாட்டின் சுற்றுலாத் துறை மந்திரி தெரிவித்துள்ளார்.

    • நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி அபார வெற்றி
    • 2-வது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதல் பேட்டிங் தேர்வு செய்தது.

    இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.

    காலே மைதானத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி அபார வெற்றி பெற்று தொடரில் முன்னிலை பெற்றது.

    இன்று அதே மைதானத்தில் 2 ஆவது டெஸ்ட் போட்டி தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதல் பேட்டிங் தேர்வு செய்தது.

    தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய பதும் நிசாங்கா 1 ரன்னில் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரராக திமுத் கருணாரத்னே 46 ரன்கள் அடித்திருந்தபோது ரன் அவுட்டாகி வெளியேறினார்.

    பின்னர் ஜோடி சேர்ந்த தினேஷ் சண்டிமால் மற்றும் ஏஞ்சலோ மேத்யூஸ் பொறுப்புடன் விளையாடி ரன்களை சேர்த்தனர். நிதானமாக விளையாடிய சண்டிமால் சதமடித்து 116 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    இலங்கை அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 306 ரன்களை எடுத்துள்ளது. ஏஞ்சலோ மேத்யூஸ் 78 ரன்களும் கமிந்து மெண்டிஸ் 51 ரன்களும் அடித்து களத்தில் உள்ளனர்.

    • இனி வரும் காலங்களில் இலங்கையின் சர்வதேச நிலைப்பாடு குறித்து திசநாயக விளக்கம் அளித்துள்ளார்.
    • பிராந்திய பிரச்சனைகள் அதிகரித்து வருகின்றன

    இலங்கை அதிபராகப் பதவியேற்றுள்ள இடதுசாரி தலைவர் அனுர குமார திசநாயக கொள்கை ரீதியாக சீனாவுக்கே அதிக ஆதரவு அளிப்பார் என்று கூறப்பட்டு வந்தது. இந்நிலையில் இனி வரும் காலங்களில் இலங்கையின் சர்வதேச நிலைப்பாடு குறித்து திசநாயக விளக்கம் அளித்துள்ளார்.

    அதிகரித்து வரும் பிராந்திய பிரச்சனைகளுக்கு இடையே இலங்கையின் வெளியுறவுக் கொள்கை நாட்டின் இறையாண்மையைப் பேணுவதையே பிரதானமாக கொண்டு அமையும். புவிசார் அரசியல் சண்டைகளில் நாங்கள் பங்குபெறப் போவதில்லை. எந்த பக்கமும் நாங்கள் சாயமாட்டோம்.

     

    குறிப்பாக இந்தியா சீனா இடையில் நாங்கள் சிக்கிக்கொள்ள விரும்பவில்லை. இரண்டு நாடுகளின் நடப்பையும் நாங்கள் போற்றுகிறோம். எங்கள் அரசின் கீழ் இனி வரும் காலங்களில் இரு நாடுகளுடனும் நெருக்கத்தை அதிகரிக்க முயற்சிப்போம். மேலும், ஐரோப்பிய யூனியன், மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்க நாடுகளுடனும் நட்புறவு ஏற்படுத்த விழைகிறோம் என்று தெரிவித்துள்ளார்.

    • இலங்கையின் புதிய அதிபராக அனுர குமார திசநாயக பதவி ஏற்றுக் கொண்டார்.
    • இலங்கை பிரதமராக இருந்த தினேஷ் குணவர்தனே தனது பதவியை ராஜினாமா செய்தார்.

    இலங்கையில் நடந்த அதிபர் தேர்தலில் தேசிய மக்கள் கட்சி தலைவர் அனுர குமார திசநாயக வெற்றி பெற்றார். அவர் நேற்று அதிபராக பதவி ஏற்றுக் கொண்டார்.

    இதற்கிடையே பிரதமராக இருந்த தினேஷ் குணவர்தனே தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனையடுத்து அவரது தலைமையிலான அமைச்சரவையும் பதவி விலகியது.

    இந்நிலையில், இலங்கையின் புதிய பிரதமராக தேசிய மக்கள் சக்தி கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹரிணி அமரசூரிய பதவியேற்று கொண்டார். இவர் இலங்கை வரலாற்றில் மூன்றாவது பெண் பிரதமர் ஆவார்.

    கொழும்பில் உள்ள அதிபர் அலுவலகத்தில் அதிபர் அனுர குமார திசநாயக முன்னிலையில் அவர் பதவிப்பிரமாணம் செய்து கொண்டார்.

    • அனுர குமார திசநாயக நேற்று அதிபராக பதவி ஏற்றுக் கொண்டார்.
    • பாராளுமன்றத்தை கலைத்து உத்தரவு பிறப்பிக்க உள்ளதாக தகவல்.

    கொழும்பு:

    இலங்கையில் நடந்த அதிபர் தேர்தலில் தேசிய மக்கள் கட்சி தலைவர் அனுர குமார திசநாயக வெற்றி பெற்றார். அவர் நேற்று அதிபராக பதவி ஏற்றுக் கொண்டார்.

    இதற்கிடையே பிரதமராக இருந்த தினேஷ் குணவர்தனே தனது பதவியை ராஜினாமா செய்தார். புதிய அதிபர் தலைமையில் புதிய அரசு அமைவதற்கு வசதியாக பதவியை ராஜினாமா செய்ததாக தினேஷ் குணவர்தனே தெரிவித்தார். இதனையடுத்து அவரது தலைமையிலான அமைச்சரவையும் பதவி விலகியது.

    இந்த நிலையில் அதிபர் அனுர குமார திசநாயக தலைமையில் 4 இடைக்கால அமைச்சர்கள் பதவியேற்க உள்ளனர்.


    மேலும் இன்று இரவு இலங்கை பாராளுமன்றத்தை கலைத்து அதிபர் அனுர குமார திசநாயக உத்தரவை பிறப்பிக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

    இலங்கையில் பாராளுமன்றம் கலைக்கப்பட்டால் 55 முதல் 66 நாட்களுக்கு தேர்தல் நடத்தப்பட வேண் டும். இதனால் இலங்கை பாராளுமன்றத்துக்கு வருகிற நவம்பர் அல்லது டிசம்பர் மாதம் பொதுத் தேர்தல் நடைபெறும் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

    • முதல் முறையாக இரண்டாம் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.
    • அனுர குமார திசநாயகவுக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகினர்.

    இலங்கையின் 9 ஆவது அதிபராக அனுர குமார திசநாயக இன்று காலை பதவியேற்றார். கடந்த சில தினங்களுக்கு முன் நடைபெற்ற அதிபர் தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதன் காரணமாக அந்நாட்டு அதிபர் தேர்தல் வரலாற்றில் முதல் முறையாக இரண்டாம் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.

    இதில் வெற்றி பெற்ற அனுர குமார திசநாயகவுக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். அந்த வரிசையில், தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி இலங்கை அதிபராக பொறுப்பேற்றுள்ள அனுர குமார திசநாயகவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பான எக்ஸ் தள பதிவில் அவர், "நமது அண்டை நாடான இலங்கையின் 9வது அதிபராக பதவியேற்ற திரு. அனுரா குமார திசநாயகே அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்."

    "கடந்த காலங்களைப் போல் இல்லாமல் இலங்கை தமிழர்களின் நலனுக்காகவும், தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினரின் பிடியிலிருந்து விடுவிக்கவும் புதிய இலங்கை அதிபர் அவர்கள் செயல்பட வேண்டுமென்று அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்," என குறிப்பிட்டுள்ளார்.

    • படிக்கும் காலத்தில் ஆயுதமேந்திய இடதுசாரி கிளர்ச்சி இயக்கமான ஜேவிபி[JVP] அமைப்பில் சேர்ந்துள்ளார்.
    • 2014 ஜனவரியில் ஜேவிபியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்

    இலங்கை அதிபர் தேர்தல்

    இலங்கையில் நடைபெற்று முடிந்துள்ள அதிபர் தேர்தலில் ஜனதா விம்முக்தி பெரமுனா (JVP) - (NPP) கூட்டணி ஆட்சியை கைப்பற்றியுள்ளது. இதன்படி ஜெவிபி தலைவர் அனுர குமார திசாநாயக [55 வயது] இலங்கை அதிபராகிறார். இலங்கையில் நடந்த பொருளாதார நிலையின்மை பிரச்சனைக்குப் பிறகு நடக்கும் முதல் அதிபர் தேர்தல் இது. இந்த தேர்தலில் 23 சதவீத வாக்குகள் பெற்ற எதிர்க்கட்சி வேட்பாளர் சஜித் ப்ரேமதாசாவை 42 சதவீத வாக்குகளைப் பெற்று திசாநாயக வெற்றி பெற்றுள்ளார். தற்போதைய அதிபர் ரணில் விக்ரமசிங்கே வெறும் 16 சதவீத வாக்குகளுடன் படுதோல்வியைச் சந்தித்துள்ளார்.

     ஜேவிபி

    இலங்கை தலைநகர் கொழும்பில் இருந்து 170 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் அனுராதபுரம் மாவட்டத்தில் உள்ள தம்புட்டேகம [Thambuttegama] கிராமத்தில் நடுத்தர குடும்பத்தில் 1968 ஆம் ஆண்டு நவம்பர் 24 ஆம் தேதி பிறந்தார் அனுர குமார திசாநாயக. இவரது தந்தை தினக் கூலியாக வேலை பார்த்தவர் ஆவார். களனி பல்கலைக்கழகத்தில் [university of Kelaniya] அறிவியலில் பட்டம் பெற்ற திசாநாயக படித்துவந்த சமயத்திலேயே ஏகாதிபத்திய முதலாளித்துவ போக்கை கடைப்பிடித்த அப்போதைய அரசுக்கு எதிராக 1987 -89 காலகட்டத்தில் எழுச்சி பெற்ற ஆயுதமேந்திய கிளர்ச்சி இயக்கமான மார்க்சிய லெனினிய  இடதுசாரி ஜேவிபி[JVP] அமைப்பில் சேர்ந்துள்ளார்.

     

    அரசியல் 

    1995 ஆம் ஆண்டில் சோஷலிஸ்ட் மாணவர்கள் அசோசியசனுக்கு தேசிய ஒருங்கிணைப்பாளராக செயல்பட்ட திசநாயக அதன்பின்னர் ஜேவிபி அமைப்பின் மத்திய செயற்குழுவில் உறுப்பினராக நியமிக்கப்பட்டார். 1998 இல் ஜேவிபி அமைப்பின் அரசியல் முடிவுகளை எடுக்கும் பொலிட்டிகள் பீரோ குழுவில் சேர்க்கப்பட்டார்.

    2000 ஆம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில் போட்டியிட்ட திசநாயக பாராளுமன்ற உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார். அப்போதைய அதிபர் குமாரதுங்கா ஆட்சிக்கு ஆதரவு அளித்துவந்த ஜேவிபி அமைப்பினர் 2002 ஆம் ஆண்டு அவருடைய அரசு தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்புடன் அமைதி பேச்சுவரத்தை மேற்கொள்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து தங்களது ஆதரவை விளக்கிக்கொண்டனர்.

    CHEASEFIRE - LTTE

    தொடர்ந்து 2004 ஆம் ஆண்டு மகிந்த ராஜபக்சேவின் UPFA கட்சியுடன் கூட்டு வைத்த ஜேவிபி விடுதலைப் புலிகளுடன் தாக்குதல் நடத்தாமல் இருப்பதற்கான சீஸ் ஃபயர்[ceasefire] ஒப்பந்தத்தை எதிரித்து தீவிரமாகப் பிரச்சாரம் செய்தது. அந்த தேர்தலில் இவர்களின் கூட்டணி வெற்றி சந்திரிகா பண்டார நாயக குமாரதுங்க அதிபரானார். கூட்டணியில் இருந்த ஜேவிபி யை சேர்ந்த அனுர திசநாயகவுக்கு அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. ஆனால் ஒரு வருடம் கழிந்து திசநாயாக அந்த பதவியை ராஜினாமா செய்தார்.

    தலைவர் 

    தொடர்ந்து அரசியலில் தீவிரத்துடன் இயங்கி வந்த அவர் கடந்த 2014 ஜனவரியில் ஜேவிபியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன்பின் 2015 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்டு வென்ற அனுர குமார திசநாயக பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவரானார். கடந்த 2021 ஆம் ஆண்டு இலங்கையில் பொருளாதார நிலைத்தன்மை சிதைந்ததால் மக்கள் போராட்டம் வெடித்தது. தொடர்ந்து அதன்பின் நடக்கும் தற்போதைய தேர்தலில் அனுர குமார வென்றுள்ளார்.

    பொருளாதார நிலையின்மை 

    இலங்கை அரசில் புரையோடியுள்ள ஊழல் மற்றும் முறையற்ற நிர்வாக அமைப்பை முற்றிலுமாக மாற்றுவதாகத் தனது தேர்தல் பிரச்சாரத்தை முன்னெடுத்த திசநாயக முந்தைய அரசுகள் பொருளாதாரத்தைக் காப்பாற்றத் தவறியதை சுட்டிக்காட்டி தங்களுக்கு வாய்ப்பு வழங்கும்படி மக்களிடம் ஆதரவு கேட்டார். ஜேவிபியின் தேர்தல் அறிக்கையில் இலங்கையின் கல்வி, பொது சேவைகள் மற்றும் மக்கள் வாசிப்பதற்கான குடியிருப்பு தட்டுப்பாடுகள் உள்ளிட்டவற்றை பிரதானமாக முன்னிறுத்தி வாக்குறுதிகள் அமைந்திருந்தது.

     

    வரும் -காலம் 

    இந்தியாவுக்கு கச்சத்தீவை வழங்க எதிர்ப்பு உள்ளிட்டவற்றில் நிலையாக உள்ள ஜேவிபி இடதுசாரி அமைப்பாக இருந்தாலும் தமிழர்கள் பிரச்சனையில் சிங்கள ஆதிக்கத்தின் பக்கம் சார்ந்து ஒரு தலை பட்சமாகவே செயல்பட்டு வருவது ஆகும். எனவே வரும் காலங்களிலும் அனுர திசநாயகவின் முடிவுகளில் அது பிரதிபலிக்கும் என்றே எதிரிபார்க்கப்படுகிறது. ஆனால் தங்களுக்கு தமிழர்கள் மற்றும் முஸ்லிம்கள் ஆதரவாக இருப்பதாக அவர் தெரிவித்திருந்ததும் குறிப்பிடத்க்கது.

    • இலங்கை அணி தொடர்ச்சியாக 13 ஒருநாள் போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.
    • இலங்கையை பின்னுக்கு தள்ளி ஆஸ்திரேலியா 14 ஒருநாள் போட்டிகளில் வெற்றி.

    இங்கிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது.

    முதல் 2 ஒருநாள் போட்டிகளில் வெற்றி பெற்று 2 - 0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா இத்தொடரில் முன்னிலை வகித்துள்ளது.

    இந்நிலையில், தொடர்ச்சியாக 14 ஒருநாள் போட்டிகளில் வெற்றி பெற்று ஆஸ்திரேலியா அணி புதிய சாதனை படைத்துள்ளது.

    ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் தொடர்ச்சியாக அதிக வெற்றிகள் பெற்ற 2 ஆவது அணி என்ற சாதனையை இதன்மூலம் ஆஸ்திரேலியா பெற்றுள்ளது.

    இதற்கு முன்னதாக ஜூன் 2023 முதல் அக்டோபர் 2023 வரை இலங்கை அணி தொடர்ச்சியாக 13 ஒருநாள் போட்டிகளில் வெற்றி பெற்றிருந்தது.

    2003 ஆம் ஆண்டு தொடர்ச்சியாக 21 ஒருநாள் போட்டிகளில் வெற்றி பெற்று ஆஸ்திரேலியா அணி முதலிடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • 1 கோடியே 70 லட்சம் பேர் வாக்களிக்க உள்ளனர்.
    • தேர்தலுக்காக மொத்தம் 13,400 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

    இலங்கையில் கடந்த 2022-ம் ஆண்டு கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதால் பொதுமக்கள் அரசுக்கு எதிராக போராட்டத்தில் குதித்தனர். இதையடுத்து அப்போது அதிபராக இருந்த கோத்தபய ராஜபக்சே பதவியை விட்டு விலகி நாட்டை விட்டே ஓடினார்.

    அதன் பிறகு இலங்கை அதிபராக ரணில் விக்ரமசிங்கே பொறுப்பேற்றுக்கொண்டார். இந்தியா உள்ளிட்ட நாடுகள் உதவிக்கரம் நீட்டியதால் இலங்கை மெல்ல மெல்ல பொருளாதார நெருக்கடியில் இருந்து மீண்டு வருகிறது.

    அதிபர் ரணில் விக்ரமசிங்கேவின் பதவி காலம் வருகிற நவம்பர் மாதம் 17-ந்தேதி முடிவடைகிறது. இதையடுத்து புதிய அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. மாலை 58 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். அதனைத் தொடர்ந்து உடனடியாக வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

    தேர்தலுக்காக மொத்தம் 13,400 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த தேர்தலில் தற்போதைய அதிபர் ரணில் விக்ரமசிங்கே சுயேட்சையாக போட்டியிடுகிறார். 1 கோடியே 70 லட்சம் பேர் வாக்களிக்க உள்ளனர்.

    தேர்தலையொட்டி அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நிகழாமல் இருப்பதற்காகவும், அமைதியான முறையில் வாக்குப்பதிவு நடத்தும் வகையிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த தேர்தலில் தற்போதைய அதிபர் ரணில் விக்ரமசிங்கே சுயேட்சையாக போட்டியிடுகிறார்.

    இவரை எதிர்த்து எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசா களம் இறங்கி உள்ளார். இலங்கை முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவின் மகன் நாமல் ராஜபக்சே உள்பட 38 பேர் களத்தில் உள்ளனர்.

    இருந்த போதிலும் ரணில் விக்ரமசிங்கே, அனுர குமார திச நாயகே, சஜித் பிரேமதாசா ஆகிய 3 பேர் இடையேதான் மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது.

    ×