என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sri Lanka"

    • இலங்கைக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் பாகிஸ்தான் இமாலய வெற்றி பெற வேண்டும்.
    • பாகிஸ்தான் முதலில் பேட் செய்தால் குறைந்தது 64 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும்

    20 உலகக் கோப்பை கிரிக்கெட்டை நடத்தும் நாடுகளில் ஒன்றான இலங்கை அணி சூப்பர்8 சுற்றில் இங்கிலாந்து, நியூசிலாந்திடம் அடுத்தடுத்து தோற்று அரைஇறுதி வாய்ப்பை பறிகொடுத்தது. இதில் இங்கிலாந்துக்கு எதிராக 147 ரன் இலக்கை கூட நெருங்க முடியாமல் 95 ரன்னில் சுருண்டு போனது. முக்கியமான தருணங்களில் பேட்ஸ்மேன்கள் சொதப்பியதால் சறுக்கலை சந்தித்து இருக்கிறது. இனி உள்ளூர் ரசிகர்கள் முன் ஆறுதல் வெற்றியோடு நிறைவு செய்ய முனைப்பு காட்டுவார்கள்.

    முன்னாள் சாம்பியனான பாகிஸ்தான் அணி ஒரு முடிவில்லை. ஒரு தோல்வி (இங்கிலாந்துக்கு எதிராக) என ஒரு புள்ளியுடன் 3-வது இடத்தில் இருக்கிறது. நியூசிலாந்து அணி, இங்கிலாந்திடம் பணிந்ததன் மூலம் பாகிஸ்தானுக்கு அரைஇறுதிக்கான கதவு திறந்துள்ளது.

    இலங்கைக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் பாகிஸ்தான் இமாலய வெற்றி கண்டு, ரன்ரேட்டிலும் நியூசிலாந்தை முந்தினால் அரைஇறுதி வாய்ப்பை பெற்று விடும். அதாவது முதலில் பேட் செய்தால் குறைந்தது 64 ரன் வித்தியாசத்திலோ அல்லது 2-வது பேட்டிங் செய்தால் 13.1 ஓவருக்குள் இலக்கை விரட்டிப் பிடித்தாலோ அரைஇறுதி அதிர்ஷ்டம் அடிக்கும்.

    எனவே சுழற்பந்து வீச்சில் வலுவாக உள்ள பாகிஸ்தான் பேட்டிங்கிலும் அசத்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.

    • மீனவர்கள் கைது செய்யப்படுவதும், படகுகள் பறிமுதல் செய்யப்படுவதும் தொடர் கதையாக நடந்து வருகிறது.
    • ஒன்றிய அரசின் தமிழக மீனவர் விரோதப்போக்கை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக வன்மையாக கண்டிக்கிறேன்.

    இலங்கை சிறையில் இருக்கும் 116 தமிழ்நாடு மீனவர்களையும், மீன்பிடி படகுகளையும் மீட்டுவர ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை வலியுறுத்தியுள்ளார்.

    இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

    "ராமேஸ்வரம் பாம்பன் பகுதியை சேர்ந்த 12 மீனவர்கள் கைது செய்யப்பட்டதோடு நவீன மீன்பிடி படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ள செய்தி மிகுந்த அதிர்ச்சியையும், வேதனையையும் தருகிறது. கடந்த வாரம் 22 மீனவர்கள் கைது செய்யப்பட்டதோடு 4 நவீன மீன்பிடி படகுகள் பறிமுதல் செய்யப்பட்டது.

    கச்சத்தீவில் உள்ள புனித அந்தோனியார் தேவாலயத்தில் இன்னும் சில நாட்களில் விழா நடத்த வேண்டிய சூழலில் இத்தகைய கைது நடவடிக்கைகள் இரு நாட்டு மக்களிடையே நல்லிணக்கத்தை சீர்குலைத்திருக்கிறது. இந்த கைது சம்பவங்கள் மீனவர்களின் வாழ்வாதாரத்தை பாதிப்பதோடு தங்களது எதிர்காலம் குறித்து மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாக்கப்பட்டிருக்கிறார்கள்.

    இன்றைய நிலவரப்படி தமிழ்நாட்டைச் சேர்ந்த 116 மீனவர்களும், 259 மீன்பிடி படகுகளும் இலங்கை அரசின் காவலில் இருந்து வருகிறது. இது குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு பலமுறை கடிதம் எழுதியும் கைது செய்யப்பட்ட மீனவர்களும், பறிமுதல் செய்யப்பட்ட படகுகளும் இதுவரை விடுவிக்கப்படவில்லை.

    ஆனால் தொடர்ந்து மீனவர்கள் கைது செய்யப்படுவதும், படகுகள் பறிமுதல் செய்யப்படுவதும் தொடர் கதையாக நடந்து வருகிறது. ஒன்றிய பாஜக அரசின் வெளியுறவுத்துறை, தமிழ்நாடு மீனவர் பிரச்சனையில் அலட்சியப்போக்குடன் நடந்துகொண்டு வருகிறது.

    இத்தகைய ஒன்றிய அரசின் தமிழக மீனவர் விரோதப்போக்கை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக வன்மையாக கண்டிக்கிறேன். கைது செய்யப்பட்ட மீனவர்களும் பறிமுதல் செய்யப்பட படகுகளையும் உடனடியாக இலங்கை கடற்படை விடுவிக்க ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை எனில் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்பதை எச்சரிக்கிறேன்." எனக் குறிப்பிட்டுள்ளார்.  

    • இலங்கை அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிக்கிற 178 ரன்கள் அடித்தது
    • அதிரடியாக விளையாடிய சிக்கந்தர் ராசா 26 பந்துகளில் 45 ரன்கள் அடித்தார்.

    டி20 உலகக் கோப்பை தொடரின் இன்றைய 2 ஆவது ஆட்டத்தில் இலங்கை - ஜிம்பாம்பே அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் களமிறங்கிய இலங்கை அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிக்கிற 178 ரன்கள் அடித்தது. அதிகபட்சமாக பதும் நிசாங்கா 62 ரன்கள் அடித்தார்.

    ஜிம்பாம்பே அணி தரப்பில் பிளெஸ்ஸிங் முசரபானி, ப்ராட் ஏவன்ஸ், க்ரேம் கிரெமர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

    இதையடுத்து 179 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய ஜிம்பாம்பே 19.3 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் அடித்து வெற்றி பெற்றது. அதிரடியாக விளையாடிய சிக்கந்தர் ராசா 26 பந்துகளில் 45 ரன்கள் அடித்து ஜிம்பாம்பே அணியை வெற்றி பெறவைத்தார்.

    • இலங்கை அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிக்கிற 178 ரன்கள் அடித்தது
    • அதிகபட்சமாக பதும் நிசாங்கா 62 ரன்கள் அடித்தார்.

    டி20 உலகக் கோப்பை தொடரின் இன்றைய 2 ஆவது ஆட்டத்தில் இலங்கை - ஜிம்பாம்பே அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் களமிறங்கிய இலங்கை அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிக்கிற 178 ரன்கள் அடித்தது. அதிகபட்சமாக பதும் நிசாங்கா 62 ரன்கள் அடித்தார்.

    ஜிம்பாம்பே அணி தரப்பில் பிளெஸ்ஸிங் முசரபானி, ப்ராட் ஏவன்ஸ், க்ரேம் கிரெமர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

    • பலரும் ஆதரவு மற்றும் எதிர்ப்புக் குரல் எழுப்பினர்.
    • இந்திய அணியின் முன்னாள் வீரர் கருத்து தெரிவித்துள்ளார்.

    டி20 உலகக் கோப்பை 2026 கிரிக்கெட் தொடரை இந்தியா மற்றும் இலங்கை நாடுகள் இணைந்து நடத்துகின்றன. இந்தத் தொடரில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இடையிலான போட்டி இன்று (பிப். 15) இரவு 7.00 மணிக்கு தொடங்குகிறது.

    கொழும்புவில் நடைபெறும் இந்தப் போட்டி குறித்து இந்தியா, பாகிஸ்தான் அணிகளின் முன்னாள் வீரர்கள், இந்திய அரசியல் தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும், இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையில் உள்ள அரசியல் பிரச்சனைகள் காரணமாக கடந்த போட்டியில் இந்திய அணி வீரர்கள், பாகிஸ்தான் வீரர்களுடன் கை குலுக்க மறுத்தனர். இந்த விவகாரத்திற்கு பலரும் ஆதரவு மற்றும் எதிர்ப்புக் குரல் எழுப்பினர்.

    இன்றைய இந்தியா - பாகிஸ்தான் போட்டியில் இரு அணி வீரர்கள் கை குலுக்குவார்களா என்ற கேள்விக்கு இதுவரை கேள்விக்குறி மட்டுமே பதிலாக உள்ளது. இந்த நிலையில், இந்தியா - பாகிஸ்தான் அணிகள் இன்றைய போட்டியின் போது கை குலுக்குவது பற்றி இந்திய அணியின் முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ரேக்கர் கருத்து தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள X தளப் பதிவில், "இந்த 'கை குலுக்கக் கூடாது' என்பது இந்தியா தொடங்கிய ஒரு சிறுபிள்ளைத்தனமான விஷயம். இது நம்மைப் போன்ற ஒரு நாட்டிற்கு தகுதியற்றது. விளையாட்டின் உணர்விற்குள் சரியாக விளையாடுங்கள் அல்லது விளையாடவே வேண்டாம்," என குறிப்பிட்டுள்ளார்.

    • இந்திய அணி நன்றாக விளையாடும் என்று நம்புகிறோம்.
    • அபிஷேக் சர்மா உடற்தகுதியுடன் இருக்கிறார்.

    டி20 உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக இந்தியா விளையாடும் போட்டி குறித்து, முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சவுரவ் கங்குலி கருத்து தெரிவித்துள்ளார்.

    இது குறித்து பேசிய அவர், "போட்டி அதிக அழுத்தமாக இருக்க வேண்டும். கடந்த சில ஆண்டுகளாக அதிக அழுத்தம் இல்லை. போட்டியின் தரம் நன்றாக இருக்க வேண்டும். இன்று அது நடக்கும் என்று நம்புகிறேன். இந்தியா ஒரு நல்ல அணி, மிகவும் சக்திவாய்ந்த அணி, இந்திய அணி நன்றாக விளையாடும் என்று நம்புகிறோம். இன்று மட்டுமல்ல, முழு உலகக் கோப்பையிலும்."

    இந்தியாவுக்கு எதிரான போட்டியில் விளையாடுவதில்லை என்ற பாகிஸ்தான் அரசாங்கத்தின் முந்தைய முடிவு குறித்து, "அது ஒரு தவறான முடிவு. கிரிக்கெட் விளையாட வேண்டும், உலகக் கோப்பையை எப்படித் தவறவிட முடியும்? அவர்கள் விளையாடியது நல்லது. புள்ளிகளை இழப்பது சரியல்ல என்பதால் அது அவர்களுக்கும் நல்லது" என்றார்.

    "இரு அணிகளும் சமநிலையில் உள்ளன, ஆனால் இந்தியா மிகவும் வலுவான அணி. இந்திய பேட்ஸ்மேன் அபிஷேக் சர்மா உடற்தகுதியுடன் இருக்கிறார், அது இந்தியாவுக்கு மிகவும் நல்ல செய்தி," என்று அவர் தெரிவித்துள்ளார்.

    • இந்தியா- பாகிஸ்தான் போட்டி இன்று கொழும்பில் நடக்கிறது
    • மழை பெய்ய வாய்ப்ப இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

    டி20 உலகக் கோப்பையில் ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் இந்தியா- பாகிஸ்தான் இடையிலான போட்டி கொழும்பில் இன்று இரவு நடக்கிறது.

    இந்த போட்டியை முதலில் பாகிஸ்தான் புறக்கணிப்பதாக தெரிவித்தது. பின்னர் ஐசிசி முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தியது. இறுதியாக பாகிஸ்தான் அரசு, அந்நாட்டு கிரிக்கெட் அணியை இந்தியாவுக்கு எதிராக விளையாட அனுமதித்தது.

    கொழும்பில் இன்று மழை பெய்ய வாய்ப்ப இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் ஆடுகளம் மூடப்பட்ட நிலையிலேயே இருக்கிறது.

    இந்நிலையில், இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதும் உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் போட்டி இன்று நடைபெற உள்ள நிலையில் கொழும்பில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

    பாதுகாப்பு சோதனைகள் தீவிரமாக நடைபெறும் என்பதால் ரசிகர்கள் 4 மணி நேரத்திற்கு முன்பே மைதானத்திற்கு வர அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

    • இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே பிப்ரவரி 15ம் தேதி நடைபெறவுள்ளது.
    • இலங்கை செல்வதற்கான விமான டிக்கெட் கட்டணம் பல மடங்கு உயர்ந்துள்ளது.

    10-வது டி20 உலகக் கோப்பை தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் கடந்த 7-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், பிப்ரவரி 15-ம் தேதி இந்தியாவுக்கு எதிரான போட்டியை புறக்கணிப்பு செய்வதாக முதலில் அறிவித்த பாகிஸ்தான், தற்போது ஐசிசியிடம் நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பிறகு சம்மதம் தெரிவித்தது.

    இதையடுத்து இரு அணிகளும் திட்டமிட்டப்படி விளையாடுவது உறுதியாகி உள்ளது. இந்த போட்டியை ரசிகர்கள் முதல் முன்னாள் வீரர்கள் வரை பலரும் எதிர் நோக்கி உள்ளனர்.

    இந்நிலையில், இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே பிப்ரவரி 15ம் தேதி நடைபெறவுள்ள டி20 கிரிக்கெட் போட்டியைக் காண ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருவதால், இலங்கை செல்வதற்கான விமான டிக்கெட் கட்டணம் பல மடங்கு உயர்ந்துள்ளது.

    டெல்லியில் இருந்து கொழும்பு செல்ல வழக்கமாக ரூ.30,000 செலவாகும் இருவழிக் கட்டணம், தற்போது ரூ. 1 லட்சம் வரை உயர்வு. சென்னையில் இருந்து ரூ.50,000, மும்பையில் இருந்து ரூ.70,000ஆகவும் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 

    • இந்திய அணியுடனான லீக் ஆட்டத்தை புறக்கணிக்க பாகிஸ்தான் அணி முடிவு செய்துள்ளது.
    • பாகிஸ்தான் அணியின் இந்த முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று இலங்கை கிரிக்கெட் வாரியம் வலியுறுத்தியுள்ளது.

    20 அணிகள் பங்கேற்கும் 10-வது 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியா மற்றும் இலங்கையில் நாளை (சனிக்கிழமை) தொடங்குகிறது. இந்த தொடரில் இந்திய அணியுடனான லீக் ஆட்டத்தை புறக்கணிக்க பாகிஸ்தான் அணி முடிவு செய்துள்ளது. பாகிஸ்தான் அணியின் இந்த முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று இலங்கை கிரிக்கெட் வாரியம் வலியுறுத்தியுள்ளது.

    இது தொடர்பாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துக்கு இலங்கை கிரிக்கெட் வாரியம் கடிதம் எழுதியுள்ளது. அதில், பிப்ரவரி 15-ம் தேதி திட்டமிடப்பட்டுள்ள இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் நடைபெறவில்லை என்றால் நிதி இழப்பு, பொருளாதார வீழ்ச்சி உள்ளிட்ட பல்வேறு இழப்புகளை இலங்கை எதிர்கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும், இந்த இழப்புகள் இலங்கைக்கு மட்டுமல்லாது தொடரில் பங்கேற்றுள்ள பலருக்கும் பாதிப்புகளை ஏற்படுத்தும். இந்த தொடரை வெற்றிகரமாக நடத்துவதில் சிக்கலை ஏற்படுத்தும் என எச்சரித்துள்ளது. மேலும், 2009-ம் ஆண்டு பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகு சர்வதேச நாடுகளைச் சேர்ந்த கிரிக்கெட் அணிகள் பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள தயங்கிய போது, தங்கள் அணி பல்வேறு முறை அங்கு பயணித்து கிரிக்கெட் விளையாடியதாகவும் இலங்கை கிரிக்கெட் வாரியம் கூறியுள்ளது.

    இலங்கையின் இந்த கோரிக்கையை பாகிஸ்தான் ஏற்குமா என்ற எதிர்பார்ப்பு கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

    • 254 மீன்பிடிப் படகுகளும் தற்போதைய சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர்கள் உட்பட 90 மீனவர்களும் இலங்கை காவலில் உள்ளனர்
    • இத்தகைய சம்பவங்கள், கடலோரப் பகுதிகளின் சமூக மற்றும் பொருளாதாரக் கட்டமைப்பை ஆழமாக சீர்குலைத்துள்ளது

    மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த 7 மீனவர்கள் இன்று இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மீனவர்கள் தொடர்ந்து இதுபோன்று கைது செய்யப்படுவதைத் தடுத்திடவும், இலங்கைக் காவலில் உள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த அனைத்து மீனவர்களையும், அவர்களது மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிப்பதற்கும் உரிய தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார். 

    அக்கடிதத்தில், மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த 7 மீனவர்கள், இரண்டு மீன்பிடிப் படகுகளில் வழக்கமான மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தபோது, இலங்கைக் கடற்படையினரால் இன்று சிறைபிடிக்கப்பட்டுள்ள மற்றொரு சம்பவத்தை ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சரின் கவனத்திற்குக் கொண்டு வருவதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

    தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் மீண்டும் மீண்டும் இதுபோன்று கைது செய்யப்படுவதும், அவர்களின் மீன்பிடிப் படகுகள் இலங்கை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்படுவதும் தடையின்றித் தொடர்வது மிகுந்த கவலைக்குரியதாக உள்ளது என்று குறிப்பிட்டுள்ள முதலமைச்சர், இன்றுவரை தமிழ்நாட்டைச் சேர்ந்த மொத்தம் 254 மீன்பிடிப் படகுகளும் தற்போதைய சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர்கள் உட்பட 90 மீனவர்களும் இலங்கை காவலில் உள்ளதாகக் தனது கடிதத்தில் கோடிட்டுக் காட்டியுள்ளார். 

    தொடர்ச்சியாக நிகழும் இத்தகைய கைது நடவடிக்கைகள் தமிழ்நாட்டின் கடலோர சமூகத்தினருக்கு கடுமையான இன்னல்களை ஏற்படுத்தியுள்ளதாகச் கட்டிக்காட்டியுள்ள முதலமைச்சர், தமிழக மீனவர்கள் இலங்கையில் நீண்ட காலம் தடுப்புக் காவலில் வைக்கப்படுவதும், அவர்களின் படகுகள் பறிமுதல் செய்யப்படுவதும். அவர்களது குடும்பத்தினருக்கு கடுமையான பொருளாதார நெருக்கடிகளையும் தொடர்ச்சியான மன உளைச்சலையும், பதட்டத்தையும் ஏற்படுத்தியுள்ளதாகவும், இத்தகைய சம்பவங்கள், கடலோரப் பகுதிகளின் சமூக மற்றும் பொருளாதாரக் கட்டமைப்பை ஆழமாகச் சீர்குலைத்துள்ளது என்றும் தனது கடிதத்தில் கவலையோடு குறிப்பிட்டுள்ளார்.

    எனவே, கைது செய்யப்பட்டுள்ள அனைத்து மீனவர்களையும் அவர்களது மீன்பிடிப் படகுகளையும் இலங்கை அரசு உடனடியாக விடுவித்திடவும், இதுபோன்ற கைது நடவடிக்கைகள் தொடர்ந்து நடை பெறுவதைத் தடுக்கவும், ஒன்றிய அரசு உரிய தூதரக நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வேண்டுமென்று ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் வழியுறுத்திக் கேட்டுக் கொண்டுள்ளார். 

    • இலங்கை தமிழ்ச் சமூகத்திற்கு பாதிப்புகள் ஏற்படுவதால் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தல்
    • இலங்கைத் தமிழர்களுக்கான ஒரு தனித்துவமான தேசத்தை அங்கீகரிக்க வலியுறுத்தல்

    இலங்கையில் தற்போது நடைபெற்றுவரும் அரசியலமைப்புச் சீர்திருத்தங்களால் இலங்கைத் தமிழ்ச் சமூகத்திற்கு ஏற்படும் கடுமையான பாதிப்புகளை களைந்திட வேண்டுமென்றும், தமிழ் மக்களின் குறைகளை நிவர்த்தி செய்யும் வகையிலான ஒரு அரசியலமைப்புச் செயல்முறையினைக் கொண்டுவருவதற்கு, இந்திய அரசு இலங்கை அதிகாரிகளுடன் உயர்மட்ட அளவில் தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டுமென்று கோரி, பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களுக்கு, தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் கடிதம் எழுதியுள்ளார்.

    அக்கடிதத்தில், இலங்கையில் உள்ள தமிழ்ச் சமூகத்தின் நலன் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான ஆழ்ந்த கவலைக்குரிய ஒரு விஷயம் குறித்து மாண்புமிகு இந்தியப் பிரதமர் அவர்களின் கவனத்திற்குக் கொண்டுவருவதாக அவர் தெரிவித்துள்ளார். ஆழமான வரலாற்று, கலாச்சார மற்றும் உணர்வுப் பூர்வமான பிணைப்புகளின் காரணமாக, இலங்கையில் உள்ள தமிழர்களின் உரிமைகளையும், எண்ணங்களையும் நிலைநிறுத்துவதில் தமிழ்நாடு முன்னணியில் இருந்து வருகிறது என்றும், தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்ற முறையில், இந்தியா மற்றும் இலங்கையில் உள்ள மரியாதைக்குரிய தமிழ்த் தலைவர்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கைகளின் அடிப்படையில், இலங்கையில் முன்மொழியப்பட்ட புதிய அரசியலமைப்பு தொடர்பான பிரச்சினை குறித்து மாண்புமிகு இந்தியப் பிரதமர் அவர்களின் மேலான கவனத்திற்குக் கொண்டுவருவது தனது கடமை என்றும் அவர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

    இலங்கையில் தற்போது நடைபெற்றுவரும் அரசியலமைப்புச் சீர்திருத்தங்களால் இலங்கைத் தமிழ்ச்சமூகத்திற்கு ஏற்படும் கடுமையான பாதிப்புகளை எடுத்துரைக்கும் விரிவான கோரிக்கைகளை தாம் பெற்றுள்ளதாக மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தனது கடிதத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

    இலங்கைத் தமிழர்கள் 77 ஆண்டுகளுக்கும் மேலாக, திட்டமிட்ட பாகுபாடு, வன்முறை மற்றும் அவர்களின் உண்மையான உரிமைகளைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளைச் சகித்து வந்துள்ளனர் என்றும், பலர், இதனைதங்கள் சமூகத்திற்கு எதிரான இனப்படுகொலை என்று விவரிக்கும் ஒரு நிலைக்கு வழிவகுத்துள்ளது என்றும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் வருத்தத்தோடு சுட்டிக்காட்டியுள்ளார். சுதந்திரத்திற்குப் பிந்தைய இலங்கையின் அரசியலமைப்புகள் (1947, 1972, மற்றும் 1978 ஆம் ஆண்டுகளின் அரசியலமைப்புகள்) அனைத்தும் ஒரு ஒற்றையாட்சி அரசுக் கட்டமைப்பில் வேரூன்றியிருந்தன என்றும், இது திட்டமிட்ட இன வன்முறை, கட்டமைப்பு ரீதியான ஒடுக்குமுறை மற்றும் தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகளை மறுப்பதற்கு வழிவகுத்தது என்றும் தெரிவித்துள்ள அவர், உள்நாட்டுப் போர் முடிவடைந்த கடந்த 16 ஆண்டுகளாக, இந்த ஒற்றையாட்சிக் கட்டமைப்பு, பாரம்பரியமாக தமிழர்கள் வாழ்ந்து வந்த பகுதிகளில் மக்கள்தொகை மாற்றங்கள், நில அபகரிப்புகள் மற்றும் தமிழ் அடையாளத்தின் சிதைவு ஆகியவற்றிற்கு தொடர்ந்து வழிவகுத்து வருவதாக வருத்தத்துடன் குறிப்பிட்டுள்ளார்.

    ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையிலான, பாராளுமன்றத்தில் முழுப்பெரும்பான்மையைக் கொண்ட தற்போதைய இலங்கை அரசாங்கம், இனப்பிரச்சினைகளைத் தீர்க்கும் போர்வையில் ஒரு புதிய அரசியலமைப்பை அறிமுகப்படுத்தும் முயற்சிகளைத் துரிதப்படுத்தி வருகிறது என்று தெரிவித்துள்ள மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. .க.ஸ்டாலின் அவர்கள், இந்த முன்மொழியப்பட்ட கட்டமைப்பு மீண்டும் ஒரு ஒற்றையாட்சி "எக்கியராஜ்ய" (ஒற்றையாட்சி அரசு) மாதிரியை வலுப்படுத்துவதாகத் தெரிகிறது என்றும், இது அரசியல் சுயாட்சிக்கான தமிழர்களின் நியாயமான எண்ணங்களைப் புறக்கணித்து, அதன்மூலம் அவர்களை மேலும் ஓரங்கட்டி, அச்சுறுத்தும் வகையில் அமைந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

    இந்தச் சூழலில், இந்திய அரசால் பூட்டானில் ஏற்பாடு செய்யப்பட்ட 1985 அமைதிப் பேச்சுவார்த்தைகளின் போது, தமிழ் பிரதிநிதிகளால் முன்வைக்கப்பட்ட திம்பு கோட்பாடுகளில் (Thimpu Principles) குறிப்பிடப்பட்ட கோட்பாடுகளையே, தற்போது பெறப்பட்டுள்ள கோரிக்கைகளில் வலியுறுத்தப்பட்டுள்ளதாகவும், அந்த வகையில்,

    * இலங்கைத் தமிழர்களுக்கான ஒரு தனித்துவமான தேசத்தை அங்கீகரித்தல் (தமிழர் தேசியம்);

    * வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைத் தமிழ் மக்களின் பாரம்பரிய தாயகமாக ஏற்றுக்கொள்வது(தமிழர் தாயகம்);

    * தமிழ் தேசத்திற்கான தன்னாட்சி உரிமையை உறுதிப்படுத்துதல் (தமிழர் தன்னாட்சி உரிமை); மற்றும்

    * மலையகத் தமிழர்களுக்கான முழு குடியுரிமை உரிமைகள் உட்பட, அனைத்து குடிமக்களுக்கும் சமத்துவத்தையும், பாகுபாடின்மையையும் உறுதிசெய்யும் ஒரு கூட்டாட்சி ஆட்சி முறையை நிறுவுதல்;

    போன்றவற்றையே இந்தக் கோட்பாடுகள் வலியுறுத்துகின்றன என்றும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தனது கடிதத்தில் கோடிட்டுக் காட்டியுள்ளார்.

    இந்தக் கூறுகளை உள்ளடக்காமல் கொண்டுவரப்படும்எந்தவொரு புதிய அரசியலமைப்பும், அநீதி மற்றும் நிலையற்ற தன்மை தொடர வழிவகுக்கும் என்றும், இது மீண்டும் மோதல்களுக்கும், மனிதாபிமான நெருக்கடிகளுக்கும் வழிவகுக்கும் அபாயத்தை ஏற்படுத்தும் என்று சுட்டிக்காட்டியுள்ள மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், 1987 ஆம் ஆண்டு இந்திய-இலங்கை ஒப்பந்தம் உட்பட, வரலாற்று ரீதியாக இலங்கையுடன் கொண்டுள்ள நட்புறவின் காரணமாக இலங்கையில் அமைதி மற்றும் நீதிக்காக நீண்டகாலமாக அர்ப்பணிப்புடன் செயல்படவேண்டிய தார்மீகக் கடமையை இந்தியா கொண்டுள்ளது என்று தெரிவித்துள்ளார். இலங்கைத் தமிழர்களின் அவல நிலை, தமிழ்நாட்டில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்றும், இலட்சக்கணக்கான மக்கள், அங்குள்ளவர்களைத் தங்கள் உறவினர்களாகக் கருதுகின்றனர் என்றும் தெரிவித்துள்ள மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், இலங்கையில் வாழும் தமிழர்களின் நிலைமையில் ஏற்படும் எந்தவொரு சரிவும் இருதரப்பு உறவுகளுக்கும், இரு நாடுகளுக்கிடையேயான உறுதிப்பாட்டிற்கும் பெரிய அளவில் தாக்கங்களை ஏற்படுத்தும் என்றும் கவலையோடு குறிப்பிட்டுள்ளார்.

    இந்தச் சூழ்நிலையில், தமிழ் மக்களின் குறைகளை உண்மையாக நிவர்த்தி செய்யும் ஒரு அரசியலமைப்புச் செயல்முறையினைக் கொண்டுவருவதற்கு, இந்திய அரசாங்கம் இலங்கை அதிகாரிகளுடன் உயர்மட்ட அளவில் தூதரக நடவடிக்கைகள மேற்கொள்ள வேண்டுமென்று கேட்டுக்கொண்டுள்ள மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், குறிப்பாக, மாகாணங்களுக்கு அதிகாரப் பரவலாக்கம் செய்யும்; இனச் சிறுபான்மையினரின் உரிமைகளைப் பாதுகாக்கும்; மற்றும் பன்முகத்தன்மை, சமத்துவக் கோட்பாடுகளை நிலைநிறுத்தும் கூட்டாட்சி முறையை உருவாக்குவதற்கு இந்தியா அழுத்தம் கொடுக்க வேண்டும் என்றும் தனது கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார். இத்தகைய அணுகுமுறை, பிராந்திய அமைதிக்கு உத்தரவாதம் அளிக்கும் இந்தியாவின் பங்கை மதிப்பது மட்டுமல்லாமல், கூட்டாட்சி மற்றும் மொழி மற்றும் இனச் சிறுபான்மையினரைப் பாதுகாப்பது குறித்த நமது அரசியலமைப்பு விழுமியங்களுடனும் ஒத்துப்போகும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

    அந்த வகையில், மாண்புமிகு இந்தியப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களின் தலைமையின் கீழ், இலங்கைத் தமிழர்களின் உரிமைகளைப் பாதுகாக்க இந்தியா முனைப்பான நடவடிக்கைகளை எடுக்கும் என்றும், ஒரு நியாயமான மற்றும் நீடித்த தீர்வுக்கு அது பங்களிக்கும் என உறுதியாக தான் நம்புவதாகவும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தான் எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

    • காயமடைந்த விமானி மற்றும் துணை விமானி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
    • இந்த விபத்து குறித்த இலங்கை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    இலங்கையின் நுவரெலியாவில் உள்ள கிரிகரி ஏரியில், கடல் விமானம் ஒன்று சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச்செல்வதற்காக ஏரியில் இறங்க முயன்றபோது பலத்த காற்று காரணமாக தடுமாறி விபத்துக்குள்ளானது.

    இந்த விபத்தில் காயமடைந்த விமானி மற்றும் துணை விமானி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சுற்றுலா பயணிகள் விமானத்தில் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

    இந்த விபத்து குறித்த இலங்கை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விபத்து தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. 

    ×