என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    டி20 உலகக் கோப்பை 2026: இந்தியா-பாக். மோதல்... போட்டி தொடங்கும் முன் Ex. இந்திய வீரரின் அதிரடி கருத்து
    X

    டி20 உலகக் கோப்பை 2026: இந்தியா-பாக். மோதல்... போட்டி தொடங்கும் முன் Ex. இந்திய வீரரின் அதிரடி கருத்து

    • பலரும் ஆதரவு மற்றும் எதிர்ப்புக் குரல் எழுப்பினர்.
    • இந்திய அணியின் முன்னாள் வீரர் கருத்து தெரிவித்துள்ளார்.

    டி20 உலகக் கோப்பை 2026 கிரிக்கெட் தொடரை இந்தியா மற்றும் இலங்கை நாடுகள் இணைந்து நடத்துகின்றன. இந்தத் தொடரில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இடையிலான போட்டி இன்று (பிப். 15) இரவு 7.00 மணிக்கு தொடங்குகிறது.

    கொழும்புவில் நடைபெறும் இந்தப் போட்டி குறித்து இந்தியா, பாகிஸ்தான் அணிகளின் முன்னாள் வீரர்கள், இந்திய அரசியல் தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும், இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையில் உள்ள அரசியல் பிரச்சனைகள் காரணமாக கடந்த போட்டியில் இந்திய அணி வீரர்கள், பாகிஸ்தான் வீரர்களுடன் கை குலுக்க மறுத்தனர். இந்த விவகாரத்திற்கு பலரும் ஆதரவு மற்றும் எதிர்ப்புக் குரல் எழுப்பினர்.

    இன்றைய இந்தியா - பாகிஸ்தான் போட்டியில் இரு அணி வீரர்கள் கை குலுக்குவார்களா என்ற கேள்விக்கு இதுவரை கேள்விக்குறி மட்டுமே பதிலாக உள்ளது. இந்த நிலையில், இந்தியா - பாகிஸ்தான் அணிகள் இன்றைய போட்டியின் போது கை குலுக்குவது பற்றி இந்திய அணியின் முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ரேக்கர் கருத்து தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள X தளப் பதிவில், "இந்த 'கை குலுக்கக் கூடாது' என்பது இந்தியா தொடங்கிய ஒரு சிறுபிள்ளைத்தனமான விஷயம். இது நம்மைப் போன்ற ஒரு நாட்டிற்கு தகுதியற்றது. விளையாட்டின் உணர்விற்குள் சரியாக விளையாடுங்கள் அல்லது விளையாடவே வேண்டாம்," என குறிப்பிட்டுள்ளார்.

    Next Story
    ×