என் மலர்
நீங்கள் தேடியது "IndvsPak"
- உஸ்மான் தாரிக்கை பற்றி நாம் பேசி வருகிறோம்.
- ஆனால், அவர் பந்து வீச வரும்போது இஷான் கிஷன் ஏற்கனவே டேமேஜ் செய்துவிட்டார்.
டி20 உலகக் கோப்பையில் ரசிகர்கள் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா- பாகிஸ்தான் இடையிலான போட்டி நேற்று கொழும்பில் நடைபெற்றது. இந்த போட்டி விறுவிறுப்பாகவும், யார் வெற்றி பெறுவார்கள் என்ற பரபரப்பும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பாகிஸ்தான் 61 ரன்கள் வித்தியாசத்தில் தொல்வியை சந்தித்தது. இது ஒரு சைடாக முடிந்த போட்டி என்று கூட கூறலாம்.
கொழும்பு மைதானம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமானதாக இருந்தது. இருந்தபோதிலும், இந்திய பேட்ஸ்மேன்கள் பாகிஸ்தான் பந்து வீச்சை சிறப்பாக எதிர் கொண்டு 175 ரன்கள் குவித்துவிட்டது.
இந்த நிலையில், முதல் இன்னிங்சிலேயே பாகிஸ்தான் தோல்வியடைந்து விட்டது என்று அந்நாட்டின் முன்னாள் வேகப்பந்து வீச்சு ஜாம்பவான் வக்கார் யூனிஸ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக வக்கார் யூனிஸ் கூறியதாவது:-
பாகிஸ்தான் முதல் இன்னிங்சிலேயே தோல்வியடைந்து விட்டது. இந்தியா 175 ரன்களை சேர்த்ததும், பாகிஸ்தானிடம் இருந்து போட்டி நழுவி சென்றுவிட்டது. பந்து நன்றாக சுழன்று கொண்டிருக்கும்போது, சூர்யகுமார் யாதவ் தன்னுடைய பந்துவீச்சு மூலம் புத்திசாலித்தனமாக செயல்பட்டார்.
பாகிஸ்தானின் பேட்டிங் சிறப்பானதாக இல்லை என்று ஏற்கனவே நமக்குத் தெரியும். எனினும், இந்தியா 175-க்குப் பதிலாக 140 அல்லது 150 ரன்கள் எடுத்திருந்தால், விசயம் வேறு மாதிரி இருந்திருக்கலாம்.
இந்திய பந்து வீச்சாளர்கள் பந்து நன்றாக டர்ன் செய்தது போன்று, பாகிஸ்தான பந்து வீச்சாளரக்ள் செய்யவில்லை. இந்தியா அதிகமான ரன்களை சேர்த்துவிட்டது.
சூர்யகுமார் யாதவ் முதல் ஓவரை ஹர்திக் பாண்ட்யாவிடம் கொடுத்தார். அடுத்த ஓவரை பும்ராவிடம் கொடுத்தார். அவர் ஸ்விங், சீமிங் மற்றும் ஸ்டம்பிற்கு நேராக பந்து வீசுதல் போன்றவற்றால் அமர்க்களப்படுத்தினார். இது பாகிஸ்தானுக்கு மிகவும் கடினமானதாகிவிட்டது.
உஸ்மான் தாரிக் சிறப்பாக பந்து வீசி ஒரு விக்கெட் வீழ்த்தி 24 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். ஒரு வாரமாக அவரைப் பற்றி நாம் பேசி வருகிறோம். ஆனால், அவரை மிகவும் பின்புதான் கொண்டு வந்தனர். அவர் பந்து வீச வரும்போது இஷான் கிஷன் ஏற்கனவே டேமேஜ் செய்துவிட்டார்.
இவ்வாறு வக்கார் யூனிஸ் தெரிவித்துள்ளார்.
- பாபர் அசாம் 5 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார்.
- உஸ்மான் கான் அதிகபட்சமாக 34 பந்தில் 44 ரன்கள் அடித்தார்.
டி20 உலகக் கோப்பையில் இந்தியா- பாகிஸ்தான் இடையிலான போட்டி கொழும்பில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களம் இறங்கிய இந்தியா 7 விக்கெட் இழப்பிற்கு 175 ரன்கள் சேர்த்தது. இஷான் கிஷன் 40 பந்தில் 77 ரன்களும், சூர்யகுமார் யாதவ் 29 பந்தில் 32 ரன்களும், ஷிவம் துபே 17 பந்தில் 27 ரன்களும் அடித்தனர். ரிங்கு சிங் 4 பந்தில் 11 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். பாகிஸ்தான் அணியில் சயீம் ஆயுப் 3 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.
பின்னர் 176 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் களம் இறங்கியது. ஹர்திக் பாண்ட்யா முதல் ஓவரை வீசினார். முதல் ஓவரின் 4-வது பந்தில் சஹிப்சதா ஃபர்ஹான் ரிங்கு சிங்குடன் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இந்த ஓவரை ஹர்திக் பாண்ட்யா மெய்டன் ஓவராக வீசினார்
2-வது ஓவரை பும்ரா வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தை ஆயுப் சிக்சருக்கு தூக்கினார். 2-வது பந்தில் எல்.பி.பி.டபிள்யூ ஆனார். 5-வது பந்தில் பவுண்டரி அடித்த சல்மான் ஆகா, கடைசி பந்தில் ஹர்திக் பாண்ட்யாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இதனால் பாகிஸ்தான் 13 ரன்களுக்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது. அடுத்த வந்த பாபர் அசாம் 5 ரன்னில் அக்சர் படேல் பந்தில் வெளியேறினார்.
விக்கெட் கீப்பர் உஸ்மான் கான் சிறப்பாக விளையாடி 34 பந்தில் 44 ரன்கள் எடுத்து அக்சர் படேல் பந்தில் ஸ்டம்பிங் ஆனார்.
அதன்பின் பாகிஸ்தான விக்கெட்டுகள மளமளவென சரிந்தது. இதனால் பாகிஸ்தான் 18 ஓவரில் 114 ரன்களில் ஆல்அவுட் ஆகி 61 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. பும்ரா, அக்சர் படேல், வருண் சக்ரவர்த்தி, ஹர்திக் பாண்ட்யா ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீழ்த்தினர்.
இந்த வெற்றியின் மூலம் இந்தியா 3 போட்டிகளில் வெற்றி பெற்று சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியது.
- ஷாஹீன் அப்ரிடி 2 ஓவரில் 31 ரன்கள் விட்டுக்கொடுத்தார்.
- உஸ்மான் தாரீக் 4 ஓவரில் 24 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட் வீழ்த்தினார்.
டி20 உலகக் கோப்பையில் இந்தியா- பாகிஸ்தான் இடையிலான போட்டி கொழும்பில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்து வீச்சை தெர்வு செய்தது. அதன்படி இந்தியாவின் அபிஷேக் சர்மா மற்றும் இஷான் கிஷன் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.
யாரும் எதிர்பார்க்காத வகையில் சல்மான் ஆகா முதல் ஓவரை வீசினார். இந்த ஓவரின் கடைசி பந்தில் அபிஷேக் சர்மா ரன்ஏதும் எடுக்காமல் டக்அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார்.
அடுத்து இஷான் கிஷன் உடன் திலக் வர்மா ஜோடி சேர்ந்தார். திலக் வர்மா நிதானமாக விளையாட, இஷான் கிஷன் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் இந்தியா பவர்பிளேயில் 1 விக்கெட் இழப்பிற்கு 52 ரன்கள் எடுத்தது.
7-வது ஓவரை அப்ரார் வீசினார். இந்த ஓவரின் முதல் இரண்டு பந்துகளை பவுண்டரிக்கு விரட்டி 27 பந்தில் அரைசதம் விளாசினார் இஷான் கிஷன். அத்துடன் அடுத்த பந்தையும் பவுண்டரி தூக்கினார். அவர் 2 சிக்ஸ், 7 பவுண்டரியுடன் அரைசதம் விளாசினார்.
9-வது ஓவரை சயீம் ஆயுப் வீசினார். இந்த ஓவரின் 3-வது பந்தில் பவுண்டரி அடித்த இஷான் கிஷன் அடுத்த பந்தில் க்ளீன் போல்டானார். அவர் 40 பந்தில் 77 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அப்போது இந்தியா 8.4 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 88 ரன்கள் எடுத்திருந்தது.
3-வது விக்கெட்டுக்கு திலக் வர்மா உடன் சூர்யகுமார் யாதவ் ஜோடி சேர்ந்தார். 12-வது ஓவரை முகமது நவாஸ் வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தை திலக் வர்மா சிக்சருக்கு தூக்கினார். இதன் மூலம் இந்தியா 11.1 ஓவரில் 100 ரன்களை கடந்தது.
11.1 ஓவரில் 100 ரன்னைக் கடந்த இந்தியா 14 ஓவரில் 125 ரன்னைத் தொட்டது. 15-வது ஓவரை சயீம் ஆயுப் வீசினார். இந்த ஓவரின் 2-வது பந்தில் திலக் வர்மா ஆட்டமிழந்தார். அவர் 24 பந்தில் 25 ரன்கள் எடுத்தார்.
4-வது விக்கெட்டுக்கு சூர்யகுமார் யாதவ் உடன் ஹர்திக் பாண்ட்யா ஜோடி சேர்ந்தார். ஹர்திக் பாண்ட்யா முதல் பந்திலேயே ஆட்டமிழந்தார். இந்தியா அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. இதனால் இந்தியா 14.3 ஓவரில் 126 ரன்கள் எடுப்பதற்குள் 4 விக்கெட்டுக்களை இழந்தது.
5-வது விக்கெட்டுக்கு சூர்யகுமார் யாதவ் உடன் ஷிவம் துபே ஜோடி சேர்ந்தார். 15 ஓவரில் இந்தியா 127 ரன்கள் எடுத்திருந்தது. இந்த ஓவரில் சயீம் ஆயுப் 2 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். 16-வது ஓவரை நவாஸ் வீசினார். இந்த ஓவரில் 9 ரன்கள் விட்டுக்கொடுத்தார். 17-வது ஓவரை உஸ்மான் தாரீக் வீசினார். இந்த ஓவரி் 4 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். இதனால் இந்தியா 17 ஓவரில் 140 ரன்கள் எடுத்திருந்தது.
18-வது ஓவரை அப்ரார் வீசினார். இந்த ஓவரில் இந்தியாவுக்கு தலா ஒரு பவுண்டரி, சிக்சர் கிடைத்தது. இதனால் இந்தியா 154 ரன்கள் எடுத்தது.
19-வது ஓவரை உஸ்மான் தாரீக் வீசினார். இந்த ஓவரின் 5-வது பந்தில் சூர்யகுமார் யாதவ் ஆட்டமிழந்தார். இவர் 29 பந்தில் 32 ரன்கள் எடுத்தார். அப்போது இந்தியா 5 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் எடுத்திருந்தது. 19-வது ஓவரில் தாரீக் 5 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார்.
கடைசி ஓவரை ஷாஹீன் அப்ரிடி வீசினார். முதல் பந்தை ஷிவம் துபே பவுண்டரிக்கு விரட்டினார். 2-வது பந்தில் ஒரு ரன் எடுத்தார். 3-வது பந்தை ரிங்கு சிங் பவுண்டரிக்கு விரட்டினார். 4-வது பந்தை சிக்கருக்கு தூக்கினார். 5-வது பந்தில் 2-வது ரன்னுக்கு ஓட முயன்றபோது ஷிவம் துபே ரன்அவுட் ஆனார். கடைசி பந்தை அக்சர் படேல் சந்தித்தார். அதில் ஆட்டமிழந்தார். இதனால் இந்தியா 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 175 ரன்கள் குவித்துள்ளது.
- அபிஷேக் சர்மா டக்அவுட் ஆனார்.
- இஷான் கிஷன் 77 ரன்கள் விளாசினார்.
டி20 உலகக் கோப்பையில் இந்திய- பாகிஸ்தான் இடையிலான போட்டி கொழும்பில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்து வீச்சை தெர்வு செய்தது. அதன்படி இந்தியாவின் அபிஷேக் சர்மா மற்றும் இஷான் கிஷன் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.
யாரும் எதிர்பார்க்காத வகையில் சல்மான் ஆகா முதல் ஓவரை வீசினார். இந்த ஓவரின் கடைசி பந்தில் அபிஷேக் சர்மா ரன்ஏதும் எடுக்காமல் டக்அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார்.
அடுத்து இஷான் கிஷன் உடன் திலக் வர்மா ஜோடி சேர்ந்தார். திலக் வர்மா நிதானமாக விளையாட, இஷான் கிஷன் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் இந்தியா பவர்பிளேயில் 1 விக்கெட் இழப்பிற்கு 52 ரன்கள் எடுத்தது.
7-வது ஓவரை அப்ரார் வீசினார். இந்த ஓவரின் முதல் இரண்டு பந்துகளை பவுண்டரிக்கு விரட்டி 27 பந்தில் அரைசதம் விளாசினார் இஷான் கிஷன். அத்துடன் அடுத்த பந்தையும் பவுண்டரி தூக்கினார். அவர் 2 சிக்ஸ், 7 பவுண்டரியுடன் அரைசதம் விளாசினார்.
9-வது ஓவரை சயீம் ஆயுப் வீசினார். இந்த ஓவரின் 3-வது பந்தில் பவுண்டரி அடித்த இஷான் கிஷன் அடுத்த பந்தில் க்ளீன் போல்டானார். அவர் 40 பந்தில் 77 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அப்போது இந்தியா 8.4 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 88 ரன்கள் எடுத்திருந்தது.
3-வது விக்கெட்டுக்கு திலக் வர்மா உடன் சூர்யகுமார் யாதவ் ஜோடி சேர்ந்தார். 12-வது ஓவரை முகமது நவாஸ் வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தை திலக் வர்மா சிக்சருக்கு தூக்கினார். இதன் மூலம் இந்தியா 11.1 ஓவரில் 100 ரன்களை கடந்தது.
- இந்தியா பவர் பிளேயில் 52 ரன்கள் எடுத்தது.
- 7-வது ஓவரில் ஹாட்ரிக் பவுண்டரி அடித்தார்.
டி20 உலகக் கோப்பையில் இந்திய- பாகிஸ்தான் இடையிலான போட்டி கொழும்பில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்து வீச்சை தெர்வு செய்தது. அதன்படி இந்தியாவின் அபிஷேக் சர்மா மற்றும் இஷான் கிஷன் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.
யாரும் எதிர்பார்க்காத வகையில் சல்மான் ஆகா முதல் ஓவரை வீசினார். முதல் இரண்டு பந்தில் இஷான் கிஷன் ஒரு ரன் அடித்தார். அடுத்த 3 பந்துகளில் ரன்கள் ஏதும் அடிக்காத அபிஷேக் சர்மா, கடைசி பந்தில் ஆட்டமிழந்தார். அவர் ஒரு ரன் கூட அடிக்காமல் டக்அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார்.
அடுத்து இஷான் கிஷன் உடன் திலக் வர்மா ஜோடி சேர்ந்தார். இஷான் கிஷன் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் இந்தியா பவர்பிளேயில் 1 விக்கெட் இழப்பிற்கு 52 ரன்கள் எடுத்தது.
7-வது ஓவரை அப்ரார் வீசினார். இந்த ஓவரின் முதல் இரண்டு பந்துகளை பவுண்டரிக்கு விரட்டி 27 பந்தில் அரைசதம் விளாசினார். அத்துடன் அடுத்த பந்தையும் பவுண்டரி தூக்கினார். அவர் 2 சிக்ஸ், 7 பவுண்டரியுடன் அரைசதம் விளாசினார்.
- அபிஷேக் சர்மா 4 பந்துகளில் ரன்ஏதும் எடுக்காமல் டக்அவுட் ஆனார்.
- இஷான் கிஷன் 25 பந்தில் 42 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறார்.
டி20 உலகக் கோப்பையில் இந்திய- பாகிஸ்தான் இடையிலான போட்டி கொழும்பில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்து வீச்சை தெர்வு செய்தது. அதன்படி இந்தியாவின் அபிஷேக் சர்மா மற்றும் இஷான் கிஷன் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.
யாரும் எதிர்பார்க்காத வகையில் சல்மான் ஆகா முதல் ஓவரை வீசினார். முதல் இரண்டு பந்தில் இஷான் கிஷன் ஒரு ரன் அடித்தார். அடுத்த 3 பந்துகளில் ரன்கள் ஏதும் அடிக்காத அபிஷேக் சர்மா, கடைசி பந்தில் ஆட்டமிழந்தார். அவர் ஒரு ரன் கூட அடிக்காமல் டக்அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார்.
அடுத்து இஷான் கிஷன் உடன் திலக் வர்மா ஜோடி சேர்ந்தார். இஷான் கிஷன் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் இந்தியா பவர்பிளேயில் 1 விக்கெட் இழப்பிற்கு 52 ரன்கள் எடுத்துள்ளது. இஷான் கிஷன் 25 பந்தில் 42 ரன்களுடனும், திலக் வர்மா 7 பந்தில் 10 ரன்களுடனும் விளையாடி வருகின்றனர்.
- இந்திய அணியில் குல்தீப் யாதவ், அபிஷேக் சர்மா சேர்க்கப்பட்டுள்ளனர்.
- இந்திய வீரர்கள் பாகிஸ்தான் வீரர்களுடன் கைக்குலுக்க மாட்டார்கள் எனத் தகவல்
டி20 உலகக் கோப்பையில் கிரிக்கெட் ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்த இந்தியா- பாகிஸ்தான் இடையிலான போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் பாகிஸ்தான் கேப்டன் சல்மான் ஆகா டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார்.
இந்திய அணியில் குல்தீப் யாதவ், அபிஷேக் சர்மா ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். அர்ஷ்தீச் சிங், சஞ்சு சாம்சன் நீக்கப்பட்டுள்ளனர்.
இந்திய வீரர்கள் பாகிஸ்தான் வீரர்களுடன் கைக்குலுக்க மாட்டார்கள் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
- இந்திய அணியுடன் விளையாட முடியாது என பாகிஸ்தான் தெரிவித்து இருந்தது.
- இந்தியா - பாகிஸ்தான் அணிகள் இடையிலான போட்டி இன்று இரவு நடைபெறுகிறது.
டி20 உலகக் கோப்பை 2026 கிரிக்கெட் தொடரை இந்தியா மற்றும் இலங்கை நாடுகள் இணைந்து நடத்துகின்றன. இந்தத் தொடரில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இடையிலான போட்டி இன்று (பிப். 15) இரவு 7.00 மணிக்கு தொடங்குகிறது.
முன்னதாக டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியுடன் விளையாட முடியாது என பாகிஸ்தான் தெரிவித்து இருந்தது. எனினும், பின்னர் தனது முடிவை மாற்றிக் கொண்ட நிலையில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இடையிலான போட்டி இன்று இரவு நடைபெறுகிறது.
வழக்கமாக இந்தியா - பாகிஸ்தான் அணிகள் இடையிலான போட்டியில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. இந்த நிலையில், இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டியை சென்னை மெரினா கடற்கரையில் ஒளிபரப்பு செய்ய சென்னை மாநகராட்சி சார்பில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
- பலரும் ஆதரவு மற்றும் எதிர்ப்புக் குரல் எழுப்பினர்.
- இந்திய அணியின் முன்னாள் வீரர் கருத்து தெரிவித்துள்ளார்.
டி20 உலகக் கோப்பை 2026 கிரிக்கெட் தொடரை இந்தியா மற்றும் இலங்கை நாடுகள் இணைந்து நடத்துகின்றன. இந்தத் தொடரில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இடையிலான போட்டி இன்று (பிப். 15) இரவு 7.00 மணிக்கு தொடங்குகிறது.
கொழும்புவில் நடைபெறும் இந்தப் போட்டி குறித்து இந்தியா, பாகிஸ்தான் அணிகளின் முன்னாள் வீரர்கள், இந்திய அரசியல் தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும், இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையில் உள்ள அரசியல் பிரச்சனைகள் காரணமாக கடந்த போட்டியில் இந்திய அணி வீரர்கள், பாகிஸ்தான் வீரர்களுடன் கை குலுக்க மறுத்தனர். இந்த விவகாரத்திற்கு பலரும் ஆதரவு மற்றும் எதிர்ப்புக் குரல் எழுப்பினர்.

இன்றைய இந்தியா - பாகிஸ்தான் போட்டியில் இரு அணி வீரர்கள் கை குலுக்குவார்களா என்ற கேள்விக்கு இதுவரை கேள்விக்குறி மட்டுமே பதிலாக உள்ளது. இந்த நிலையில், இந்தியா - பாகிஸ்தான் அணிகள் இன்றைய போட்டியின் போது கை குலுக்குவது பற்றி இந்திய அணியின் முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ரேக்கர் கருத்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள X தளப் பதிவில், "இந்த 'கை குலுக்கக் கூடாது' என்பது இந்தியா தொடங்கிய ஒரு சிறுபிள்ளைத்தனமான விஷயம். இது நம்மைப் போன்ற ஒரு நாட்டிற்கு தகுதியற்றது. விளையாட்டின் உணர்விற்குள் சரியாக விளையாடுங்கள் அல்லது விளையாடவே வேண்டாம்," என குறிப்பிட்டுள்ளார்.
- இந்திய அணி நன்றாக விளையாடும் என்று நம்புகிறோம்.
- அபிஷேக் சர்மா உடற்தகுதியுடன் இருக்கிறார்.
டி20 உலகக் கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக இந்தியா விளையாடும் போட்டி குறித்து, முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சவுரவ் கங்குலி கருத்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர், "போட்டி அதிக அழுத்தமாக இருக்க வேண்டும். கடந்த சில ஆண்டுகளாக அதிக அழுத்தம் இல்லை. போட்டியின் தரம் நன்றாக இருக்க வேண்டும். இன்று அது நடக்கும் என்று நம்புகிறேன். இந்தியா ஒரு நல்ல அணி, மிகவும் சக்திவாய்ந்த அணி, இந்திய அணி நன்றாக விளையாடும் என்று நம்புகிறோம். இன்று மட்டுமல்ல, முழு உலகக் கோப்பையிலும்."
இந்தியாவுக்கு எதிரான போட்டியில் விளையாடுவதில்லை என்ற பாகிஸ்தான் அரசாங்கத்தின் முந்தைய முடிவு குறித்து, "அது ஒரு தவறான முடிவு. கிரிக்கெட் விளையாட வேண்டும், உலகக் கோப்பையை எப்படித் தவறவிட முடியும்? அவர்கள் விளையாடியது நல்லது. புள்ளிகளை இழப்பது சரியல்ல என்பதால் அது அவர்களுக்கும் நல்லது" என்றார்.
"இரு அணிகளும் சமநிலையில் உள்ளன, ஆனால் இந்தியா மிகவும் வலுவான அணி. இந்திய பேட்ஸ்மேன் அபிஷேக் சர்மா உடற்தகுதியுடன் இருக்கிறார், அது இந்தியாவுக்கு மிகவும் நல்ல செய்தி," என்று அவர் தெரிவித்துள்ளார்.
- அபிஷேக் சர்மா இடம்பெறுவாரா? என்பது போட்டிக்கு சற்று முன்பு தான் தெரிய வரும்.
- கூடுதலாக ஒரு சுழற்பந்து வீரரை கொண்டு வர அணி நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாக தகவல்
20 நாடுகள் பங்கேற்கும் 10-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வருகிறது.
உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கும் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி கொழும்பு பிரேமதாசா ஸ்டேடியத்தில் இன்று இரவு 7 மணிக்கு நடக்கிறது.
ஏ பிரிவில் உள்ள இரு அணிகளும் தாங்கள் மோதிய 2 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றன. இதனால் ஹாட்ரிக் வெற்றியை பெறப்போவது இந்தியாவா? பாகிஸ்தானா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.
சமீபகாலமாகவே பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. இதனால் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான அணி மிகுந்த நம்பிக்கையுடன் விளையாடும்.
இந்திய அணி முதல் ஆட்டத்தில் அமெரிக்காவை 29 ரன் வித்தியாசத்திலும், 2-வது போட்டியில் நமீபியாவை 93 ரன் வித்தியாசத்திலும் வீழ்த்தியது. இதே உத்வேகத்துடன் பாகிஸ்தானையும் தோற்கடிக்கும் வேட்கையில் சூர்யகுமார் யாதவ் அணி இருக்கிறது.
அதிரடி தொடக்க வீரரான அபிஷேக் சர்மா இடம்பெறுவாரா? என்பது போட்டிக்கு சற்று முன்பு தான் தெரிய வரும். கூடுதலாக ஒரு சுழற்பந்து வீரரை கொண்டு வர அணி நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் இடத்தில் குல்தீப் யாதவுக்கு வாய்ப்பு வழங்கப்படுமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஆசிய கோப்பை போட்டியின் போது இந்திய அணி பாகிஸ்தானுக்கு எதிராக 2 வேகப்பந்து வீரர்கள், 3 சுழற்பந்து வீச்சாளர்களுடன் களம் இறங்கியது. அதே கலவையுடன் இன்றைய ஆட்டத்தில் அணியின் தேர்வு இருக்கும் என்று கருதப்படுகிறது. வருண் சக்கரவர்த்தி, அக்ஷர் படேலுடன் குல்தீப் யாதவும் இடம்பெறலாம் என்று கருதப்படுகிறது.
பாகிஸ்தான் அணியின் சுழற்பந்து வீரர் உஸ்மான் தாரிக் இந்திய பேட்ஸ்மேன்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பார் என்று பாகிஸ்தான் நம்பிக்கையுடன் உள்ளது.
இந்தியா-பாகிஸ்தான் அணிகள் இடையேயான இன்றைய ஆட்டம் மழையால் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது. மழையால் ஆட்டம் கை விடப்பட்டால் இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்படும்.
- இந்தியா- பாகிஸ்தான் போட்டி இன்று கொழும்பில் நடக்கிறது
- இன்று மழை பெய்ய வாய்ப்ப இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
டி20 உலகக் கோப்பையில் ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் இந்தியா- பாகிஸ்தான் இடையிலான போட்டி கொழும்பில் இன்று இரவு நடக்கிறது.
இந்த போட்டியை முதலில் பாகிஸ்தான் புறக்கணிப்பதாக தெரிவித்தது. பின்னர் ஐசிசி முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தியது. இறுதியாக பாகிஸ்தான் அரசு, அந்நாட்டு கிரிக்கெட் அணியை இந்தியாவுக்கு எதிராக விளையாட அனுமதித்தது.
இன்றைய போட்டியில் பாகிஸ்தான் வீரர் உஸ்மான் தாரிக்கின் பந்துவீச்சு இந்தியாவுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் என்று கூறப்படுகிறது. உஸ்மான் தாரிக் பந்துவீசும் போது சில நொடிகள் நின்றுவிட்டு வீசுவது இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது.
இந்நிலையில், உஸ்மான் தாரிக் குறித்து பேசிய பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அலி ஆகா, "பாகிஸ்தான் அணியில் உள்ள 15 வீரர்களில் உஸ்மான் தாரிக்கும் ஒருவர். நாங்கள் அவரை அப்படித்தான் நடத்துகிறோம். தொடர்ந்து கடந்த சில மாதங்களாக அவர் சிறப்பாக பந்துவீசி வருகிறார்.
அவரது பந்துவீச்சு குறித்து பல்வேறு விவாதங்கள் நடந்து வருவதை நாங்கள் கவனத்தில் கொள்ளவில்லை. எங்கள் அணியின் முக்கிய துருப்புச் சீட்டு என அவரை கூறலாம்.
ஐசிசியின் விதிமுறைக்கு உட்பட்டே அவரது பந்து வீச்சு இருக்கிறது. இருப்பினும் அவரைப் பற்றி மக்கள் ஏன் இவ்வளவு அதிகம் பேசுகிறார்கள் என்பது எனக்கு தெரியவில்லை" என்று தெரிவித்தார்.






