என் மலர்
நீங்கள் தேடியது "IndvsPak"
- துபாயில் தொடங்கும் இறுதிப்போட்டியில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
- இந்தியா- பாகிஸ்தானுக்கு இடையேயான இறுதிபோட்டிக்கான டாஸ் போடப்பட்டது.
17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று இரவு 8 மணிக்கு துபாயில் தொடங்கும் இறுதிப்போட்டி யில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
இத்தொடரில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் லீக் மற்றும் சூப்பர்-4 சுற்றில் மோதி இருந்தன. இந்த 2 போட்டியிலும் இந்தியா வெற்றி பெற்றது.
இந்நிலையில், இந்தியா- பாகிஸ்தானுக்கு இடையேயான இறுதிபோட்டிக்கான டாஸ் போடப்பட்டது.
இதில், டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார்.
இதற்கிடையே, ஆசியகோப்பை தொடர் இறுதிப்போட்டியில் காயம் காரணமாக இந்திய அணி வீரர் ஹர்திக் பாண்டியா விளையாடவில்லை.
ஹர்திக் பாண்டியாவிற்கு பதிலாக ரிங்கு சிங் இந்திய அணியில் இடம் பிடித்து உள்ளார்.
- வெற்றி பெற்ற பிறகு பஹல்காம் தாக்குதல் தொடர்பாக சூர்யகுமார் யாதவ் பேசியதாக குற்றச்சாட்டு.
- பாகிஸ்தானின் குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்த போட்டி நடுவருக்கு ஐசிசி உத்தரவு.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. பஹல்காம் தாக்குதல், அதனைத் தொடர்ந்து இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர், பாகிஸ்தானின் அத்துமீறல், இந்தியாவின் பதிலடி என இந்தியா- பாகிஸ்தான் இடையில் சண்டைபெற்று, இன்னும் இருநாட்டு உறவுகள் மேம்படாத நிலையில் இந்த போட்டி தேவையா? என்ற கேள்வி எழும்பியது.
ஆனால், இருநாடுகளுக்கு இடையிலான போட்டியை மத்திய அரசு ஆதரிக்காது. ஆனால் ஆசிய கோப்பை மற்றும் உலகக் கோப்பை போன்ற தொடரில் இந்தியா பங்கேற்பதில் ஆட்சேபனை இல்லை என மத்திய அரசு தெரிவித்தது.
இருந்தபோதிலும் போட்டியின்போது இருநாட்டு வீரர்களும் கைக்குலுக்கவில்லை. சூர்யகுமார் யாதவ் டாஸ் போடும்போதும் கைக்குலுக்கவில்லை. இதனால் சர்ச்சை எழுந்தது.
இதற்கிடையே குரூப் பிரிவு லீக் ஆட்டத்தில் பாகிஸ்தானை வீழ்த்திய பிறகு இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் பேசும்போது "சரியான சந்தர்ப்பம், பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் பலியானவர்களின் குடும்பங்களுக்கு நாங்கள் துணை நிற்கிறோம். நாங்கள் எங்கள் ஒற்றுமையை வெளிப்படுத்துகிறோம். மிகுந்த துணிச்சலை வெளிப்படுத்திய எங்கள் அனைத்து ஆயுதப் படைகளுக்கும் இந்த வெற்றியை அர்ப்பணிக்க விரும்புகிறோம். எங்கள் அரசு, BCCI இன்று இணைந்துள்ளோம். நாங்கள் இங்கு ஜஸ்ட், போட்டியில் விளையாட வந்தோம்" எனத் தெரிவித்திருந்தார்.
கிரிக்கெட் போட்டியின்போது அரசியல் தொடர்பான கருத்துகளை வீரர்கள், கேப்டன்கள் வெளிப்படுத்தக்கூடாது. அப்படி வெளிப்படுத்தினால் அது வீரர்களின் நன்னடத்தை விதியை மீறுவதாகும். சூர்யகுமார் நன்னடத்தை விதியை மீறியதாக, பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு ஐசிசி-யிடம் புகார் அளித்துள்ளது.
இந்த புகாரின் அடிப்படையில் போட்டி நடுவர் ரிச்சி ரிச்சார்ட்சனை விசாரணை நடத்த ஐசிசி உத்தரவிட்டுள்ளது. இதை ரிச்சி ரிச்சார்ட்சன் ஒப்புக்கொண்டுள்ளார்.
இந்த நிலையில் ரிச்சி ரிச்சார்ட்சன் முன் சூர்யகுமார் யாதவ் விசாரணைக்கு ஆஜராகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவருடன் பிசிசிஐ சிஓஓ ஹெமங் அமின் மற்றும் கிரிக்கெட் செயல்பாடுகளுக்கு மானேஜர் சம்மேர் மலாபுர்கர் ஆகியோரும் கலந்து கொண்டதாக தெரிகிறது.
சூர்யகுமார் யாதவுக்கு அபராதம் அல்லது போட்டி தடைக்கான புள்ளிகள் வழங்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
- இந்திய வீரர்கள் கை குலுக்க மறுத்து விட்டனர்.
- இந்த விவகாரத்தை ஐ.சி.சி. யிடம் பாகிஸ்தான் முறையிட்டது.
பாகிஸ்தானுக்கு எதிரான ஆசிய கோப்பை போட்டியை இந்தியா புறக்கணிக்க வேண்டும் என்ற கடும் எதிர்ப்பையும் மீறி பாகிஸ்தானுடன் விளையாடி இந்திய அணி எளிதில் வெற்றி பெற்றது.
டாசின்போது இரு அணி கேப்டன்களும் கை கொடுத்துக் கொள்ளவில்லை. போட்டி முடிந்த பிறகு இரு அணி வீரர்களும் கை குலுக்கிக் கொள்வது வழக்கம். அந்த நிகழ்வும் நடைபெறவில்லை. இந்திய வீரர்கள் கை குலுக்க மறுத்து விட்டனர். கை குலுக்காமல் சென்றதால் பாகிஸ்தான் அணி கடும் அதிருப்தி அடைந்தது.
இந்த விவகாரம் சா்ச்சையாகி இருக்கும் நிலையில் இதற்கு பொறுப்பாக போட்டி நடுவா் ஆண்டி பைகிராப்டை (ஜிம்பாப்வே) நீக்க வேண்டும் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வலியுறுத்தியது. மேலும் இந்த விவகாரத்தை ஐ.சி.சி. யிடமும் (சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்) முறையிட்டது.
இந்நிலையில் ஆட்ட நடுவர் ஆண்டி பைகிராஃப்டை நடப்பு ஆசியக் கோப்பை தொடரில் இருந்து நீக்க வேண்டும் என்ற பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் கோரிக்கையை ஐசிசி நிராகரித்தது.
இந்நிலையில், பாகிஸ்தானின் கோரிக்கைக்கு செவிசாய்த்து ஐசிசி ஒரு நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது UAE உடனான கட்டாயம் வெற்றி பெற வேண்டிய போட்டியில் ஆண்டி பைகிராஃப் நடுவராக இருக்க மாட்டார் என்றும் அவருக்கு பதிலாக ரிச்சி ரிச்சர்ட்சன் நடுவராக செயல்படுவார் என்று ஐசிசி பாகிஸ்தானுக்கு உறுதி அளித்துள்ளது.
UAE உடனான போட்டியில் வெற்றி பெற்றால் தான் சூப்பர் 4 சுற்றுக்கு பாகிஸ்தான் அணியால் தகுதி பெறமுடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
- இந்திய வீரர்கள் கை குலுக்க மறுத்து விட்டனர்.
- கை குலுக்காமல் சென்றதால் பாகிஸ்தான் அணி கடும் அதிருப்தி அடைந்தது.
பாகிஸ்தானுக்கு எதிரான ஆசிய கோப்பை போட்டியை இந்தியா புறக்கணிக்க வேண்டும் என்ற கடும் எதிர்ப்பையும் மீறி பாகிஸ்தானுடன் விளையாடி இந்திய அணி எளிதில் வெற்றி பெற்றது.
டாசின்போது இரு அணி கேப்டன்களும் கை கொடுத்துக் கொள்ளவில்லை. போட்டி முடிந்த பிறகு இரு அணி வீரர்களும் கை குலுக்கிக் கொள்வது வழக்கம். அந்த நிகழ்வும் நடைபெறவில்லை. இந்திய வீரர்கள் கை குலுக்க மறுத்து விட்டனர். கை குலுக்காமல் சென்றதால் பாகிஸ்தான் அணி கடும் அதிருப்தி அடைந்தது.
இந்த விவகாரம் குறித்து தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஷாஹித் அப்ரிடி, "ஆசிய கோப்பை தொடங்கும்போதே இந்தியா - பாகிஸ்தான் போட்டிக்கு எதிரான புறக்கணிப்பு பிரசாரங்கள் இணையத்தில் அதிகரித்தன. அது வீரர்களுக்கு அழுத்தத்தை ஏற்படுத்தியிருக்கலாம். அதனால் பாகிஸ்தான் வீரர்களிடம் இந்திய வீரர்கள் கைகுலுக்க வேண்டாம் என்று பிசிசிஐ கூறியதில் ஆச்சரியமில்லை.
இதற்காக இந்திய வீரர்களை நான் குறைகூறவில்லை. அவர்களுக்கு கொடுக்கப்பட்ட உத்தரவு படி அவர்கள் நடந்துகொண்டார்கள்.
செய்தியாளர் சந்திப்பின்போது பாகிஸ்தான் கேப்டன் சல்மான் ஆகா மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவரிடம் சூர்யகுமார் யாதவ் கைகுலுக்கினார்.
ஆனால் இந்திய அரசாங்கத்தால் சமூக ஊடக அழுத்தத்தைக் கையாள முடியாததால் மைதானத்தில் மக்களின் முன்பு அவரால் கைகுலுக்க முடியவில்லை. இதனால் இந்திய வீரர்கள் உலகத்தின் முன் அவமானமடைந்தனர்" என்று தெரிவித்தார்.
- உலகிலேயே இதுபோல் 50 கைக்கடிகாரங்கள் மட்டுமே உள்ளன.
- பிரபல நட்சத்திர டென்னிஸ் வீரர் ரபேல் நடாலும் இதே வாட்ச் ஒன்றை வைத்துள்ளார்.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா- பாகிஸ்தான் இடையிலான போட்டி வருகிற நாளை துபாயில் நடைபெற இருக்கிறது.
இந்நிலையில், ஆசியக் கோப்பைக்கான பயிற்சியின்போது இந்திய வீரர் ஹர்திக் பாண்ட்யா அணிந்திருந்த வாட்ச் இணையத்தில் வைரலானது. இந்த கைக்கடிகாரத்தின் விலை ரூ.18 கோடி மதிப்புடையது என தகவல் வெளியாகியுள்ளது.
உலகிலேயே இதுபோல் 50 கைக்கடிகாரங்கள் மட்டுமே உள்ளன. பிரபல நட்சத்திர டென்னிஸ் வீரர் ரபேல் நடாலும் இதே வாட்ச் ஒன்றை வைத்துள்ளார்.
ஹர்திக் பாண்ட்யா வைத்துள்ள கைக்கடிகாரத்தின் விலை ஆசியக் கோப்பையை வெல்லும் அணிக்கு வழங்கப்படும் பணத்தை விட (ரூ.2.6 கோடி) பல மடங்கு அதிகம் என்பது இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது.
- INDVsPAK கிரிக்கெட் போட்டி நடத்த வேண்டுமா? என்ற கேள்வி எழுந்த வண்ணம் உள்ளது.
- போட்டிக்கு தடைவிதிக்கக் கோரி நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா- பாகிஸ்தான் இடையிலான போட்டி வருகிற நாளை துபாயில் நடைபெற இருக்கிறது. இந்தியா- பாகிஸ்தான் இடையிலான போர் நடைபெற்ற நிலையில் இரு நாடுகளும் பரஸ்பர தடைகளை விதித்துள்ளது.
இந்த நிலையில் கிரிக்கெட் போட்டி நடத்த வேண்டுமா? என்ற கேள்வி எழுந்த வண்ணம் உள்ளது. போட்டிக்கு தடைவிதிக்கக் கோரி நீதிமன்றத்தில் பொதுநல மனுவும் தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் போட்டி நடக்கட்டும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.
இந்நிலையில், பாகிஸ்தானுடன் கிரிக்கெட் விளையாடுவதற்கு எழுந்துள்ள எதிர்ப்பு குறித்து முதமுறையாக இந்தியா அணி மனம் திறந்து பேசியுள்ளது.
இதுகுறித்து பேசிய இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியாளர் சிதான்ஷு கோடக், "இந்திய அரசு என்ன முடிவு செய்கிறதோ அதற்கு பி.சி.சி.ஐ ஒத்துழைக்கிறது. எங்கள் கவனம் எப்போதும் போட்டியில்தான் இருக்கும். இந்தியா vs பாகிஸ்தான் போட்டி ஒரு சுவாரஸ்யமான ஆட்டமாக இருக்கும்" என்று தெரிவித்தார்.
- அதிகபட்சமாக ஒரு டிக்கெட் விலை 257,815 ரூபாய் ஆகும்.
- குறைந்தபட்ச விலை 10 ஆயிரம் ரூபாய் ஆகும்.
கிரிக்கெட் மிகவும் எதிர்பார்க்கப்படும் போட்டிகளில் முதன்மையாக இருப்பது இந்தியா- பாகிஸ்தான் இடையிலான போட்டியாகும். இரு நாடுகளுக்கு இடையிலான தொடரில் விளையாடாமல் உள்ளதால் ஆசிய கோப்பை, உலகக் கோப்பை போன்ற தொடர்களில் மட்டுமே விளையாடுகின்றனர். இதனால் இந்தியா- பாகிஸ்தான் இடையிலான போட்டி எங்கு நடைபெற்றாலும், அதற்கான அட்டவணை வெளியிடப்பட்டு டிக்கெட் விற்பனை தொடங்கிய உடன், அனைத்து டிக்கெட்டுகளும் மளமளவென விற்று தீர்ந்து விடும்.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா- பாகிஸ்தான் இடையிலான போட்டி வருகிற 14ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை துபாய் மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இந்த போட்டிக்கான டிக்கெட்டுகள் அனைத்தும் விற்பனையாகியிருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், தற்போது வரை இந்தியா- பாகிஸ்தான் போட்டிக்கான டிக்கெட் அனைத்தும் முழுமையாக விற்பனையாகவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. டிக்கெட் விலை அதிரடியாக உயர்த்தப்பட்டது இதற்கு முக்கிய காரணம் எனக் கூறப்படுகிறது.
VIP Suites East பகுதிக்கான டிக்கெட் (இரண்டு) விலை 257,815 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த டிக்கெட்டிற்கு அளவில்லா உணவு மற்றும் டிரிங்ஸ், ஓய்வறை வசதி, தனி நுழைவாயில், பிரத்யேக கழிப்பறைகள் போன்ற வசதிகள் உண்டு.
அடுத்து Royal Box பகுதிக்கு இரண்டு டிக்கெட் விலை 2,30,700 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டள்ளது.
Sky Box East பகுதிக்கு இரண்டு டிக்கெட் விலை 167,851 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Platinum டிக்கெட் 75,659 ரூபாயாகவும், Grand Lounge டிக்கெட் 41,153 ரூபாயாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. General East-க்கான டிக்கெட்தான் மிகவும் குறைந்த விலையாகும். இதன் விலை 10 ஆயிரம் ரூபாயாகும். இது விற்று தீரும் நிலையில் உள்ளது.
டிக்கெட் விலை மிகவும் அதிகமாக உள்ளதாக, தேவை குறைந்துள்ளதாக கூறப்படுகிறது.
- பாகிஸ்தானுடன் இந்தியா நேரடி கிரிக்கெட் விளையாடுவதில்லை.
- பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து ஐசிசி தொடர்களில் விளையாட வேண்டாம் என பிசிசிஐ முடிவு எடுத்துள்ளதாக தகவல் வெளியானது.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானுடனான அனைத்து உறவுகளையும் இந்தியா துண்டித்துள்ளது.
எல்லைத் தாண்டிய பயங்கரவாதத்தை நிறுத்தும் வரை பாகிஸ்தானுடன் நேரடி கிரிக்கெட் போட்டி கிடையாது என்ற முடிவை பிசிசிஐ எடுத்துள்ளது. இதனால் ஐசிசி தொடர்களில் மட்டும் விளையாடி வருகிறது. இந்த வருட தொடக்கத்தில் பாகிஸ்தானில் நடைபெற்ற ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில், இந்தியா பாகிஸ்தான் சென்று விளையாட மறுத்துவிட்டது. இதனால் இந்திய போட்டிகள் அனைத்தும் துபாயில் நடத்தப்பட்டது.
இந்த நிலையில் ஐசிசி தொடர்களில் இந்தியா- பாகிஸ்தான் ஒரே குரூப்பில் இடம்பெறக் கூடாது என ஐசிசி-க்கு பிசிசிஐ கடிதம் எழுதியாக செய்திகள் வெளியானது.
ஆனால் இந்த செய்தியில் உண்மையில்லை என தற்போது தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக பிசிசிஐ துணை தலைவர் ராஜிவ் சுக்லாவிடம் கேட்டபோது, "இந்த சூழ்நிலையில் அரசின் ஆலோசனைகளை பிசிசிஐ ஏற்றுக்கொள்ளும்" எனத் தெரிவித்துள்ளார்.
மற்றொரு பிசிசிஐ அதிகாரி, இதுபோன்ற சூழ்நிலை தனக்கு புதிது. தற்போதைய பொது மனநிலையை பிசிசிஐ அதிகாரிகள் உணர்ந்துள்ளனர். பரவி வரும் செய்திகளுக்கு எந்த மதிப்பும் இல்லை எனத் தெரிவித்தார்.
- பாகிஸ்தான் தலைமை பயிற்சியாளர் ஷாஜாத் அன்வரும் தனது கோபத்தை வெளிப்படுத்தினார்.
- ஸ்டிமாக்கிற்கு ரெட் கார்டும், பாகிஸ்தானின் மேலாளர் ஷாஜாத் அன்வாருக்கு மஞ்சள் அட்டையும் வழங்கப்பட்டது.
பெங்களூருவில் இன்று தெற்காசிய கால்பந்து கூட்டமைப்பு சாம்பியன்ஷிப் தொடர் தொடங்கியது. இந்த போட்டியை இந்தியா தலைமையில் நடைபெறுகிறது. இதில், இந்தியா உள்பட 8 அணிகள் கலந்துகொள்கின்றன.
இவை இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. 'ஏ' பிரிவில் இந்தியா, குவைத், நேபாளம், பாகிஸ்தான் ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன. 'பி' பிரிவில் வங்கதேசம், பூடான், லெபனான், மாலத்தீவுகள் ஆகிய அணிகள் உள்ளன.
இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தில் இன்று பெங்களூருவில் உள்ள ஸ்ரீ கண்டீரவா மைதானத்தில் நடந்த ஆட்டத்தில் பாகிஸ்தானை சந்தித்தது.
ஆட்டம் தொடங்கியது முதல் இந்திய அணி ஆதிக்கம் செலுத்தியது. ஆட்டத்தின் 10வது நிமிடத்தில் இந்திய அணியின் கேப்டன் சுனில் சேத்ரி கோல் அடித்து அசத்தினார். இதனால் இந்திய அணி முன்னிலை பெற்றது.
இதற்கிடையே, போட்டியின் முதல்பாதியின் இறுதி நிமிடங்களில் இந்தியா- பாகிஸ்தான் வீரர்களுக்கு இடையே சண்டை ஏற்பட்டது.
ஆடுகளத்தில், இந்திய தலைமை பயிற்சியாளர் இகோர் ஸ்டிமாக், இக்பாலை த்ரோ-இன் எடுக்க விடாமல் தடுத்து, அவரது கையிலிருந்து பந்தை தட்டிச் சென்றார். இது இரு தரப்பு வீரர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
அப்போது இரு அணிகளின் வீரர்களுக்கு இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பாகிஸ்தான் தலைமை பயிற்சியாளர் ஷாஜாத் அன்வரும் தனது கோபத்தை வெளிப்படுத்தினார்.
பின்னர், போட்டியின் நிர்வாகிகள் தலையிட்டு வீரர்களை அமைதிப்படுத்தி மீண்டும் ஆட்டத்தை தொடங்கினர்.
இதைதொடர்ந்து, ஸ்டிமாக்கிற்கு ரெட் கார்டும், பாகிஸ்தானின் மேலாளர் ஷாஜாத் அன்வாருக்கு மஞ்சள் அட்டையும் வழங்கப்பட்டது.
இந்த ஆட்டத்தின் முடிவில் 4-0 என பாகிஸ்தானை வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
- முதலில் ஆடிய பாகிஸ்தான் 205 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
- இந்திய அணியின் துவக்க வீரர் சாய் சுதர்சன் அதிரடியாக ஆடி 104 ரன்கள் விளாசினார்.
கொழும்பு:
வளர்ந்து வரும் கிரிக்கெட் அணிகளுக்கான ஆசிய கோப்பை தொடரில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா ஏ- பாகிஸ்தான் ஏ அணிகளுக்கிடையிலான போட்டி இன்று கொழும்பில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
அந்த அணி 48 ஓவர்களில் 205 ரன்கள் சேர்த்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அதிகபட்சமாக காசிம் அக்ரம் 48 ரன்கள் சேர்த்தார். சாகிப்சதா பர்கான் 35 ரன்கள், முபாசிர் கான் 28 ரன்கள், ஹசீபுல்லா கான் 27 ரன்கள் எடுத்தனர்.
இதையடுத்து 206 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய ஏ அணி அதிரடியாக ஆடி பாகிஸ்தான் பந்துவீச்சாளர்களை நிலைகுலையச் செய்தது. துவக்க வீரர் சாய் சுதர்சன் பந்துகளை பவுண்டரிகளாக விளாசி சதம் கடந்தார். அபிஷேக் சர்மா 20 ரன்களில் ஆட்டமிழந்தார். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிகின் ஜோஸ் 53 ரன்கள் சேர்த்தார்.
இதனால் இந்தியா 36.4 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 210 ரன்கள் எடுத்து இலக்கை எட்டியது. இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சாய் சுதர்சன் 104 ரன்களுடனும், கேப்டன் யஷ் துல் 21 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
இந்த வெற்றியின் மூலம் இந்தியா ஏ அணி, குரூப்- பி பிரிவில் தான் மோதிய 3 போட்டிகளிலும் வென்றுள்ளது. புள்ளி பட்டியலில் 6 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. இதுவரை 2 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ள பாகிஸ்தான் 4 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தில் உள்ளது.
- ஆசிய கோப்பை 2023 தொடர் கடந்த சில நாட்களுக்கு முன்பு துவங்கியது.
- ஆசிய கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி ஏற்கனவே ஒரு வெற்றியை பெற்று விட்டது.
ஆசிய கோப்பை 2023 தொடரில் இன்றைய ஆட்டத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ஆசிய கோப்பை தொடரின் குரூப் ஏ பிரிவில் இந்தியா மற்றம் பாகிஸ்தான் அணிகள் இடம்பெற்றுள்ள. இன்றைய போட்டி இலங்கையில் உள்ள கண்டியில் நடைபெறுகிறது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து இருக்கிறது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இடையிலான போட்டி என்பதால், ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் வல்லுனர்கள் இடைய இந்த போட்டி மீதான எதிர்பார்ப்பு பலமடங்கு அதிகரித்து இருக்கிறது.
ஆசிய கோப்பை 2023 தொடர் துவங்கும் முன்பு தான் பாகிஸ்தான் அணி, சர்வதேச ஒருநாள் அணிகளுக்கான தரவரிசை பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறி இருக்கிறது. ஐ.சி.சி. ஒருநாள் அணிகளுக்கான தரவரிசை பட்டியலில் இந்திய அணி மூன்றாவது இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
- பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் விராட் கோலி 4 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
- ஆசிய கோப்பை தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்தியா 266 குவித்து ஆல் அவுட்.
ஆசிய கோப்பை 2023 தொடரில் இன்றைய ஆட்டத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ஆசிய கோப்பை தொடரின் குரூப் ஏ பிரிவில் இந்தியா மற்றம் பாகிஸ்தான் அணிகள் இடம்பெற்றுள்ளன. இன்றைய போட்டி இலங்கையில் உள்ள கண்டியில் நடைபெற்றது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. இந்தியா அணி 48.5 ஓவர்களில் 266 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. போட்டியின் முதல் பாதி இடைவேளையின் போது மழை பெய்ய துவங்கியது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் போட்டி துவங்குவதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது.
தொடர்ந்து மழை நீடிக்கும் பட்சத்தில் போட்டியை நடத்துவதில் மூன்று ஆப்ஷன்கள் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி போட்டியை நடத்துவதற்கு மீதமுள்ள நேரத்திற்கு ஏற்றார்போல் 40 ஓவர் விளையாடும் பட்சத்தில் பாகிஸ்தான் அணி 239 ரன்களையும், 30 ஓவர்கள் ஆடும் பட்சத்தில் 203 ரன்களையும், 20 ஓவர்கள் விளையாட நேரும் பட்சத்தில் பாகிஸ்தான் அணி 155 ரன்களை குவித்தால் வெற்றி பெற முடியும்.
தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களின் படி போட்டி 20 ஓவர்களாக குறைக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. இது உண்மையாகும் பட்சத்தில் பாகிஸ்தான் அணியின் வெற்றி இலக்கு 155 ரன்களாக மாற்றப்படும்.






