search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "IndvsPak"

    • டி20 கிரிக்கெட் தொடரில் இந்திய அணி க்ரூப் ஏ-வில் இடம்பெற்றுள்ளது.
    • ஜூன் 29-ம் தேதி இறுதிப்போட்டி நடைபெற இருக்கிறது.

    டி20 உலகக் கோப்பை 2024 கிரிக்கெட் தொடர் ஜூன் 1-ம் தேதி துவங்க இருக்கிறது. இந்த தொடரை அமெரிக்கா மற்றும் கனடா இணைந்து நடத்துகின்றன. இந்த தொடரில் அதிகம் எதிர்பார்க்கப்படும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இடையேயான போட்டி ஜூன் 9-ம் தேதி நியூ யார்க் நகரில் நடைபெற இருக்கிறது.

    2024 உலகக் கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் இந்திய அணி க்ரூப் ஏ-வில் இடம்பெற்றுள்ளது. இந்தியாவுடன் பாகிஸ்தான், அமெரிக்கா, கனடா மற்றும் அயர்லாந்து அணிகளும் இடம்பெற்றுள்ளன.

    க்ரூப் சுற்றில் இந்திய அணி ஜூன் 5-ம் தேதி அயர்லாந்து அணியையும், ஜூன் 9-ம் தேதி பாகிஸ்தான் அணியையும், ஜூன் 12-ம் தேதி அமெரிக்காவுடனும், ஜூன் 15-ம் தேதி கனடாவையும் எதிர்கொள்ள இருக்கிறது.

    டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் அரையிறுதி போட்டி ஜூன் 26-ம் மற்றும் 27-ம் தேதிகளில் நடைபெற இருக்கிறது. பார்படோஸ்-இல் ஜூன் 29-ம் தேதி இறுதிப்போட்டி நடைபெற இருக்கிறது. 

    • பாகிஸ்தான் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அபாரமாக வெற்றிப்பெற்றது.
    • பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் பக்கத்தில் வாழ்த்து பதிவிட்டுள்ளார்.

    உலகக் கோப்பை 2023 தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்றைய போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின. அகமதாபாத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் பாகிஸ்தான் அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அபாரமாக வெற்றிப்பெற்றது.

    இந்நிலையில், இந்திய அணி வீரர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:-

    அகமதாபாத்தில் இன்று இந்திய அணி அனைத்து விதங்களிலும் சிறப்பான ஒரு வெற்றியை பதிவு செய்துள்ளது. இந்திய அணியின் வெற்றிக்கு பாராட்டுகள். இனி வரும் போட்டிகளுக்கும் வாழ்த்துகள்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • இந்தியா தரப்பில் கேப்டன் ரோகித் சர்மா 86 ரன்களை குவித்தார்.
    • ஸ்ரேயாஸ் அய்யர் தன் பங்கிற்கு அரைசதம் அடித்தார்.

    உலகக் கோப்பை 2023 தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்றைய போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின. அகமதாபாத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது.

    அதன்படி முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் அணியின் அப்துல்லா ஷஃபிக் மற்றும் இமாம் உல் ஹக் ஜோடி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. எனினும், இவர்கள் முறையே 20 மற்றும் 36 ரன்களில் ஆட்டமிழந்து நடையை கட்டினர். அடுத்து வந்த கேப்டன் பாபர் அசாம் அசத்தலாக விளையாடி அரைசதம் அடித்தார். எனினும், 50 ரன்களில் ஆடிய போது முகமது சிராஜ் வீசிய பந்தில் போல்ட் ஆகி பெவிலியன் திரும்பினார்.

    பாகிஸ்தான் அணி 42.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 191 ரன்களை சேர்த்தது. இந்தியா சார்பில் பும்ரா, சிராஜ், ஹர்திக் பாண்டியா, குல்தீப் யாதவ் மற்றும் ரவீந்திர ஜடேஜா தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

    இதையடுத்து களமிறங்கிய இந்திய அணிக்கு கேப்டன் ரோகித் சர்மா சிறப்பான துவக்கத்தை கொடுத்தார். அதிரடியாக விளையாடிய இவர் 63 பந்துகளில் 86 ரன்களை குவித்து அசத்தினார். இவருடன் ஆடிய சுப்மன் கில் 16 ரன்களிலும், அடுத்து வந்த விராட் கோலி 16 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இறுதியில் ஸ்ரேயாஸ் அய்யர் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

    இதன் மூலம் இந்திய அணி 30.3 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 192 ரன்களை குவித்து எளிதாக வெற்றி பெற்றது. போட்டி முடிவில் ஸ்ரேயாஸ் அய்யர் 53 ரன்களிலும், கே.எல். ராகுல் 19 ரன்களிலும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.

    • பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் அரைசதம் அடித்து ஆட்டமிழந்தார்.
    • இந்தியா தரப்பில் விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    உலகக் கோப்பை 2023 தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்றைய போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின. அகமதாபாத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது.

    அதன்படி முதலில் களமிறங்கிய பாகிஸ்தான் அணியின் அப்துல்லா ஷஃபிக் மற்றும் இமாம் உல் ஹக் ஜோடி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. எனினும், இவர்கள் முறையே 20 மற்றும் 36 ரன்களில் ஆட்டமிழந்து நடையை கட்டினர். அடுத்து வந்த கேப்டன் பாபர் அசாம் அசத்தலாக விளையாடி அரைசதம் அடித்தார். எனினும், 50 ரன்களில் ஆடிய போது முகமது சிராஜ் வீசிய பந்தில் போல்ட் ஆகி பெவிலியன் திரும்பினார்.

     

    இவருடன் ஆடிய முகமது ரிஸ்வான் தன் பங்கிற்கு 49 ரன்களை எடுத்த போது, பும்ரா வீசிய பந்தில் போல்ட் ஆகி நடையை கட்டினார். இவர்களை தொடர்ந்து களமிறங்கிய வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதன் காரணமாக பாகிஸ்தான் அணி 42.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 191 ரன்களை சேர்த்தது.

    இந்தியா சார்பில் பும்ரா, சிராஜ், ஹர்திக் பாண்டியா, குல்தீப் யாதவ் மற்றும் ரவீந்திர ஜடேஜா தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர். 

    • இந்த விளம்பரத்திற்கு கடும் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டு வருகிறது.
    • மேக்மைட்ரிப் சேவையில் அதிகபட்சம் 50 சதவீதம் வரையிலான தள்ளுபடி.

    உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய பாகிஸ்தான் அணிகள் இடையேயான போட்டியை கருத்தில் கொண்டு மேக்மைட்ரிப் நிறுவனம் வெளியிட்ட விளம்பரம் சர்ச்சையாகி இருக்கிறது. மேலும், இந்த போட்டியை காண இந்தியா வந்துள்ள பாகிஸ்தான் ரசிகர்கள் மத்தியில் இந்த விளம்பரத்திற்கு கடும் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

    மேக்மைட்ரிப் வெளியிட்ட விளம்பர பதிவில், பாகிஸ்தான் அணி தோல்வியுற்றால், பயனர்கள் கீழ்கண்ட வார்த்தைகளை தெரிவித்து மேக்மைட்ரிப் சேவையில் அதிகபட்சம் 50 சதவீதம் வரையிலான தள்ளுபடி பெறலாம் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

    அதன்படி பாகிஸ்தான் அணி பத்து விக்கெட்டுகள் அல்லது 200 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியுற்றால் 50 சதவீதமும், 6 விக்கெட்டுகள் அல்லது 100 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியுற்றால் 30 சதவீதமும், 3 விக்கெட்டுகள் அல்லது 50 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியுற்றால் 10 சதவீதமும் தள்ளுபடி பெறலாம் என்று மேக்மைட்ரிப் தெரிவித்து இருந்தது. இத்துடன் ரசிகர்கள், BoysPlayedWell, EkShaheenHaar அல்லது NoMaukaMauka போன்ற குறியீடுகளை பயன்படுத்தலாம் என்று மேக்மைட்ரிப் தெரிவித்து இருந்தது.

    இது தொடர்பான பதிவு வெளியான சில மணி நேரங்களில், அதிக வைரல் ஆனது. பலர், இத்தகைய விளம்பரம் வெளியிட்ட நிறுவனத்திற்கு எதிராக கருத்து பதிவிட்டனர். சிலர், நாம் தான் போட்டியை நடத்துகிறோம், நாமே விருந்தினர்களை கிண்டல் செய்யக் கூடாது என்ற வகையில் கருத்து பதிவிட்டனர். மேலும் சிலர், இது உண்மையான கிரிக்கெட்-க்கு அர்த்தம் கிடையாது என்று பதிவிட்டனர்.

    மேக்மைட்ரிப் வெளியிட்ட விளம்பரத்திற்கு கருத்து தெரிவித்த முன்னாள் இந்திய வீரர் விரேந்திர சேவாக், "அன்பு மற்றும் காதலில் கிடைக்காத சந்தோஷம், பாகிஸ்தான் தோற்றால் கிடைத்துவிடுகிறது. இப்படி யார் அழைப்பார்கள். இது மேக்மைட்ரிப்-இன் சரியான விளையாட்டு," என்று குறிப்பிட்டுள்ளார்.

    • பதற்றமின்றி சூழலை நேர்த்தியாக கையாளும் அணிக்கே வெற்றிக்கனி கிட்டும்.
    • பனிப்பொழிவில் பேட் செய்வது எளிது என்பதால் 'டாஸ்' ஜெயிக்கும் அணி 2-வது பேட்டிங்குக்கே முன்னுரிமை அளிக்கும்.

    13-வது உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் இந்தியா, நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென்ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, பாகிஸ்தான், இலங்கை, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து ஆகிய 10 அணிகள் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் டாப்-4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறும். அரைஇறுதி சுற்றை எட்ட குறைந்தது 6 வெற்றி அவசியமாகும்.

    இந்த நிலையில் நடப்பு உலக கோப்பையில் மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கி இருக்கும் இந்தியா- பாகிஸ்தான் இடையிலான லீக் ஆட்டம் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று நடைபெறுகிறது. இதையொட்டி இரு அணியினரும் நேற்று தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர்.

    இரு நாடுகள் இடையே சீரற்ற உறவு, பகைமை உணர்வு காரணமாக இந்தியா - பாகிஸ்தான் போட்டி என்றாலே வீரர்கள் மட்டுமின்றி ரசிகர்களும் உணர்வுபூர்வமாகி விடுவார்கள். ஏதோ தாங்களே விளையாடுவது போல் அவர்களின் ஆர்ப்பரிப்பும், சீற்றமும், ஆக்ரோஷமும் களத்தையே சூடாக்கி விடும். அதனால் தான் பரமஎதிரிகள் மல்லுக்கட்டும் இந்த ஆட்டம் கிரிக்கெட் ரசிகர்களை இப்போதே உசுப்பேற்றி இருக்கிறது.

    ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி நடப்பு தொடரில் ஆஸ்திரேலியாவை 6 விக்கெட் வித்தியாசத்திலும், ஆப்கானிஸ்தானை 8 விக்கெட் வித்தியாசத்திலும் ஊதித்தள்ளிய உற்சாகத்தோடு அகமதாபாத்துக்கு வந்திருக்கிறது. முதல் இரு ஆட்டங்களில் ரோகித் சர்மா, விராட் கோலி, லோகேஷ் ராகுல் ஆகியோரின் பேட்டிங் சூப்பர். பந்துவீச்சில் பும்ரா, ஜடேஜா, குல்தீப் யாதவ் கலக்கினர். இப்போது 'ஹாட்ரிக்' வெற்றிக்கு குறிவைத்து இருக்கிறார்கள். ஆனால் முந்தைய இரு ஆட்டம் போன்று இது எளிதாக இருக்காது.


    'ஸ்விங்' செய்வதில் வல்லவரான பாகிஸ்தான் இடக்கை வேகப்பந்து வீச்சாளர் ஷகீன் ஷா அப்ரிடி மற்றும் ஹசன் அலியை தொடக்க கட்ட ஓவர்களில் சமாளிப்பது மிகவும் முக்கியம். அதை சாதுர்யமாக செய்து விட்டால் இந்திய அணி பெரிய ஸ்கோரை அடைவதற்கு வழிபிறக்கும். அத்துடன் யாராவது ஒருவர் செஞ்சுரி அடித்தால் 300-ஐ எளிதில் கடந்து விடலாம்.

    டெங்கு காய்ச்சலால் முதல் இரு ஆட்டங்களை தவற விட்ட தொடக்க ஆட்டக்காரர் சுப்மன் கில் குணமாகி விட்டார். அவர் 99 சதவீதம் போட்டியில் விளையாடுவதற்கு தயாராக இருப்பதாக கேப்டன் ரோகித்சர்மா கூறியுள்ளார். இதன் மூலம் கில் இறங்குவது கிட்டத்தட்ட உறுதியாகி விட்டது. அவரது வருகை இந்தியாவின் பேட்டிங்கை மேலும் பலப்படுத்தும்.

    கடந்த மாதம் ஆசியக் கோப்பை கிரிக்கெட்டின் சூப்பர்4 சுற்றில் இந்திய அணி பாகிஸ்தானை 128 ரன்னில் சுருட்டி 228 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது. இது நிச்சயம் இந்திய வீரர்களின் நம்பிக்கைக்கு ஊக்கமளிக்கும். மேலும், உலக கோப்பை வரலாற்றில் இந்திய அணி பாகிஸ்தானிடம் ஒரு போதும் தோற்றதில்லை. 7 முறை போட்டுத் தாக்கிய இந்தியா அந்த எண்ணிக்கையை 8 ஆக உயர்த்தி ரசிகர்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்துவார்களா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

    பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி தனது முதல் இரு ஆட்டங்களில் நெதர்லாந்தை 81 ரன்கள் வித்தியாசத்திலும், இலங்கையை 6 விக்கெட் வித்தியாசத்திலும் தோற்கடித்தது. இதில் இலங்கைக்கு எதிராக 345 ரன் இலக்கை பாகிஸ்தான் அணி அப்துல்லா ஷபிக், முகமது ரிஸ்வான் சதத்தோடு 10 பந்து மீதம் வைத்து எட்டிப்பிடித்து வரலாறு படைத்தது. உலக கோப்பையில் துரத்திப்பிடிக்கப்பட்ட அதிகபட்ச இலக்கு இது தான். இந்த வெற்றியால் பாகிஸ்தான் வீரர்கள் கூடுதல் உத்வேகத்துடன் களம் காணுவார்கள்.

    அந்த அணியின் கேப்டன் பாபர் அசாம் கடந்த 5 ஆட்டங்களில் ஒன்றில் கூட 30-ஐ தாண்டவில்லை. முக்கியமான இந்த ஆட்டத்தில் ரன்மழை பொழியும் வேட்கையில் உள்ளார். பந்து வீச்சில் ஷகீன் ஷா அப்ரிடி, ஹசன் அலி, ஷதப் கான் வலுசேர்க்கிறார்கள். 50 ஓவர் உலக கோப்பையில் இந்தியாவிடம் தொடர்ச்சியாக தோல்வியை சந்தித்துள்ள பாகிஸ்தான் அந்த நீண்ட சோகத்துக்கு எப்படியாவது முட்டுக்கட்டை போட்டுவிட வேண்டும் என்ற துடிப்புடன் காத்திருக்கிறது.

    சரிசம பலத்துடன் இரு அணிகளும் கோதாவில் குதிப்பதால் யாருடைய கை ஓங்கும் என்பதை கணிப்பது கடினம்.


    உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியத்தில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் முன்னிலையில் விளையாட இருப்பதால் நெருக்கடி முன்பை விட எகிறி நிற்கும். பதற்றமின்றி சூழலை நேர்த்தியாக கையாளும் அணிக்கே வெற்றிக்கனி கிட்டும். அகமதாபாத் மைதானம் பேட்டிங்குக்கு சாதகமானது. இங்கு தொடக்க ஆட்டத்தில் இங்கிலாந்து நிர்ணயித்த 283 ரன் இலக்கை நியூசிலாந்து அணி 36.2 ஓவர்களிலேயே எட்டிப்பிடித்தது.

    இரவில் பனிப்பொழிவில் பேட் செய்வது எளிது என்பதால் 'டாஸ்' ஜெயிக்கும் அணி 2-வது பேட்டிங்குக்கே முன்னுரிமை அளிக்கும். வானிலையை பொறுத்தவரை மாலைவேளையில் லேசாக மழை குறுக்கிடலாம்.

    இந்நிலையில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் இடையேயான போட்டி தொடர்பாக ஐ.சி.சி. வெளியிட்ட போஸ்டர் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    போட்டிக்கான இரு அணிகளின் பட்டியல் வருமாறு:-

    இந்தியா: ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில் அல்லது இஷான் கிஷன், விராட் கோலி, ஸ்ரேயாஸ் அய்யர், லோகேஷ் ராகுல், ஹர்திக் பாண்ட்யா, ரவீந்திர ஜடேஜா, அஸ்வின் அல்லது முகமது ஷமி, குல்தீப் யாதவ், முகமது சிராஜ், ஜஸ்பிரித் பும்ரா.

    பாகிஸ்தான்: அப்துல்லா ஷபிக், இமாம் உல்-ஹக், பாபர் அசாம் (கேப்டன்), முகமது ரிஸ்வான், சாத் ஷகீல், இப்திகர் அகமது, ஷதப் கான், முகமது நவாஸ், ஹசன் அலி, ஷகீன் ஷா அப்ரிடி, ஹசன் அலி.

    • ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் அதிரடியான சாதனை சதம் மூலம் கேப்டன் ரோகித் சர்மா நல்ல நிலைக்கு திரும்பியுள்ளார்.
    • பாகிஸ்தான் அணியின் பேட்டிங்கில் முகமது ரிஸ்வான் மிகவும் நல்ல நிலையில் உள்ளார்.

    10 நாடுகள் பங்கேற்றுள்ள 13-வது ஐ.சி.சி. உலக கோப்பை கிரிக்கெட் போட்டி (50 ஓவர்) இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது.

    ஒவ்வொரு அணியும் நேற்றுடன் தலா 2 ஆட்டத்தில் விளையாடிவிட்டன. இன்று முதல் 3-வது போட்டியில் ஆடுகின்றன.

    உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதும் ஆட்டம் நாளை (சனிக்கிழமை) நடக்கிறது. அகமதாபாத்தில் உள்ள உலகின் மிகப்பெரிய மைதானமான பிரதமர் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் பிற்பகல் 2 மணிக்கு இந்த போட்டி தொடங்குகிறது.

    இந்தியா-பாகிஸ்தான் போட்டி என்றாலே விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது. உலக கோப்பை என்பதால் மிக கூடுதலான எதிர்பார்ப்பு காணப்படுகிறது.

    இந்த தொடரில் இரு அணிகளுமே தங்களது முதல் 2 ஆட்டங்களில் வெற்றி பெற்று இருந்தன. இதனால் ஹாட்ரிக் வெற்றியை பெறப்போவது இந்தியாவா? பாகிஸ்தானா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த தொடக்க ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை 6 விக்கெட் வித்தியாசத்திலும், டெல்லியில் நடைபெற்ற 2-வது போட்டியில் ஆப்கானிஸ்தானை 8 விக்கெட் வித்தியாசத்திலும் வென்றது.

    பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்திலும் இந்தியாவின் அதிரடி நீடிக்குமா? என்று ஆவலுடன் எதிர்நோக்கப்படுகிறது.

    உலக கோப்பை வரலாற்றில் இந்திய அணி இதுவரை பாகிஸ்தானிடம் தோற்றது இல்லை. 7 தடவையும் வெற்றி பெற்றுள்ளது. இதனால் நாளைய ஆட்டத்தில் நம்பிக்கையுடன் விளையாடும்.

    கடந்த மாதம் மோதிய ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்றில் இந்தியா 228 ரன் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி இருந்தது. கடைசியாக ஆடிய 5 ஆட்டத்தில் (2018 முதல் கடந்த மாதம் வரை) இந்தியா 4-ல் வெற்றி பெற்றது. ஒரு போட்டி முடிவு இல்லை.

    ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் அதிரடியான சாதனை சதம் மூலம் கேப்டன் ரோகித் சர்மா நல்ல நிலைக்கு திரும்பியுள்ளார். இதே போல விராட் கோலி தொடர்ச்சியாக 2-வது அரைசதத்தை அடித்து தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளார்.

    மேலும் கே.எல். ராகுலும் நல்ல நிலையில் உள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார். இஷான் கிஷனும், ஸ்ரேயாஸ் அய்யரும் ஆப்கானிஸ்தானுடன் நேர்த்தியாக ஆடினார்கள்.

    டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சுப்மன்கில் முதல் 2 ஆட்டத்தில் விளையாடவில்லை. அகமதாபாத்தில் அவர் நேற்று பயிற்சியில் ஈடுபட்டார். ஆனாலும் அவர் இடம் பெறுவாரா? என்பது உறுதியில்லை. இந்திய அணியின் பேட்டிங் வரிசையில் மாற்றம் இருக்காது என்றே கருதப்படுகிறது.

    ஜஸ்பிரீத் பும்ரா மிகவும் அபாரமாக பந்து வீசி வருகிறார். அவர் 6 விக்கெட் கைப்பற்றி முதல் இடத்தில் உள்ளார். ஹர்திக் பாண்ட்யா, ஜடேஜா, குல்தீப் யாதவ் ஆகியோரும் பந்து வீச்சில் நல்ல நிலையில் இருக்கிறார்கள்.

    ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அபாரமாக பந்து வீசிய இந்திய வீரர்கள் ஆப்கானிஸ்தானிடம் ரன்களை வாரி கொடுத்தனர். இதனால் பாகிஸ்தானுக்கு எதிராக மிகவும் கவனமுடன் பந்து வீசுவது அவசியமாகும்.

    பாபர் ஆசம் தலைமையிலான பாகிஸ்தான் அணி முதல் போட்டியில் நெதர்லாந்தை 81 ரன் வித்தியாசத்திலும், 2-வது ஆட்டத்தில் இலங்கையை 6 விக்கெட் வித்தியாசத்திலும் வென்றது. இலங்கைக்கு எதிராக 345 ரன் இலக்கை சேஸ் செய்து உலக கோப்பையில் சாதனை படைத்தது.

    இதனால் அந்த அணி இந்தியாவுக்கு எல்லா வகையிலும் சவாலாக திகழும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பாகிஸ்தான் அணி கடைசியாக லண்டன் ஓவல் மைதானத்தில் 2017-ம் ஆண்டு ஜூனில் நடந்த ஐ.சி.சி. சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்தியாவை 180 ரன்னில் தோற்கடித்து இருந்தது. 6 ஆண்டுகளுக்கு பிறகு ஒருநாள் போட்டியில் இந்தியாவை வெல்லும் வேட்கையில் உள்ளது.

    பாகிஸ்தான் அணியின் பேட்டிங்கில் முகமது ரிஸ்வான் மிகவும் நல்ல நிலையில் உள்ளார். சதம், அரை சதத்துடன் 199 ரன்கள் குவித்துள்ளார். அப்துல்லா ஷபீக் தனது முதல் உலக கோப்பை ஆட்டத்திலேயே சதம் அடித்து முத்திரை பதித்தார். இது தவிர சவுத் ஷகீல், இப்திகார் அகமது போன்ற சிறந்த பேட்ஸ்மேன்களும் இருக்கிறார்கள்.

    கேப்டனும், உலகின் சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவருமான பாபர் ஆசம் முதல் 2 ஆட்டத்திலும் மோசமாக ஆடினார்.

    பந்துவீச்சை பொறுத்தவரை ஹசன் அலி 6 விக்கெட் கைப்பற்றியுள்ளார். அவருக்கு அடுத்தபடியாக ஹாரிஸ் ரவூப் 5 விக்கெட் எடுத்துள்ளார். ஷகீன் ஷா அப்ரிடி உள்ளிட்ட சிறந்த பவுலர்களும் உள்ளனர்.

    இரு அணிகளும் சம பலத்துடன் மோதுவதால் இந்த போட்டி பரபரப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல்களில் இந்த போட்டி நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

    இந்தியா-பாகிஸ்தான் போட்டிக்காக அகமதாபாத் ஸ்டேடியத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

    1.30 லட்சம் பேர் அமரும் இந்த ஸ்டேடியத்தில் 11 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். 7 ஆயிரம் போலீசாரும், 4 ஆயிரம் ஊர்காவல்ப்படையினரும் பாதுகாப்பில் ஈடுபடுகின்றனர். ஸ்டேடியத்துக்கு உள்ளேயும், வெளியேயும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

    அக்டோபர் 15-ந்தேதி தான் இந்த போட்டியை முதலில் நடத்த முடிவு செய்யப்பட்டது. நவராத்திரி விழாவையொட்டி பாதுகாப்பு காரணங்களுக்காக ஒருநாள் முன்னதாக மாற்றப்பட்டது.

    • போட்டியை நேரில் காண பிரபலங்கள் வருகை தர உள்ளனர்.
    • தேசிய பாதுகாப்பு படையினர் மற்றும் டிரோன் குழுவினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள்.

    உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்க்கும், இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி வருகிற 14-ந்தேதி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடக்கிறது.

    இப்போட்டிக்கான டிக்கெட்டுகள் அனைத்தும் விற்று தீர்ந்து விட்டன. போட்டி அன்று அகமதாபாத்தில் ஏராளமான ரசிகர்கள் குவிவார்கள். போட்டியை நேரில் காண பிரபலங்கள் வருகை தர உள்ளனர்.

    இந்த நிலையில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டிக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்படுகிறது. 7 ஆயிரம் போலீசார் மற்றும் 4 ஆயிரம் ஊர்க்காவல் படையினர் மைதானத்தின் பாதுகாப்புக்காக ஈடுபடுத்தப்பட உள்ளனர். மேலும் தேசிய பாதுகாப்பு படையினர் மற்றும் டிரோன் குழுவினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள்.

    • உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது.
    • உலகக் கோப்பை தொடரில் இந்தியா தனது முதல் போட்டியில் அபார வெற்றி பெற்றது.

    உலகக் கோப்பை 2023 கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. தொடரின் லீக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இடையேயான போட்டி வரும் சனிக்கிழமை (அக்டோபர் 14) நடைபெற இருக்கிறது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணி போட்டிக்காக பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

    இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இடையேயான போட்டி அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற இருக்கிறது. அகமதாபாத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக நகரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு வருவதாக அகதாபாத் காவல் துறை ஆணையர் தெரிவித்து உள்ளார்.

    போட்டியின் போது, 7 ஆயிரம் காவலர்கள், 4 ஆயிரம் ஹோம் கார்டுகள் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். நகரின் மிகமுக்கிய பகுதிகள் மற்றும் பதற்றம் அதிகமுள்ள பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட இருக்கிறது. நான்கு மூத்த ஐ.பி.எஸ். அதிகாரிகள், காவல் துறை தலைவர் என காவல் துறையை சேர்ந்த உயரதிகாரிகள் பாதுகாப்பு பணிகளை மேற்பார்வை செய்ய உள்ளனர். 

    • இந்திய அணியின் விராட் கோலி, கே.எல். ராகுல் சதம் அடித்து அசத்தல்.
    • பாகிஸ்தான் தரப்பில் ஷகீன் அஃப்ரிடி மற்றும் ஷதாப் கான் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

    16-வது ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் தற்போது சூப்பர்4 சுற்று ஆட்டங்கள் இலங்கை தலைநகர் கொழும்பில் நடந்து வருகிறது. சூப்பர்4 சுற்றின் 3-வது ஆட்டத்தில் இந்தியாவும், பாகிஸ்தானும் நேற்று பலப்பரீட்சையில் நடத்தின. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி ரோகித் சர்மாவும், சுப்மன் கில்லும் இந்தியாவின் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் புகுந்தனர்.

    இந்த ஜோடி முறையே 56 மற்றும் 58 ரன்களை குவித்து அசத்தினர். அடுத்த வந்த விராட் கோலி மற்றும் கே.எல். ராகுல் ஜோடி நிலைத்து நின்று ஆடியது. இடையில் மழை காரணமாக போட்டி நிறுத்தப்பட்டு, பிறகு இன்று மதியம் துவங்கியது. இன்றைய ஆட்டத்திலும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய விராட் கோலி மற்றும் கே.எல். ராகுல் ஜோடி சதம் அடித்து அசத்தியது.

    இதன் காரணமாக இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 356 ரன்களை குவித்தது. இந்திய சார்பில் விராட் கோலி 122 ரன்களையும், கே.எல். ராகுல் 111 ரன்களையும் குவித்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர். பாகிஸ்தான் தரப்பில் ஷகீன் அஃப்ரிடி மற்றும் ஷதாப் கான் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். 

    • பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் விராட் கோலி 4 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
    • ஆசிய கோப்பை தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்தியா 266 குவித்து ஆல் அவுட்.

    ஆசிய கோப்பை 2023 தொடரில் இன்றைய ஆட்டத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ஆசிய கோப்பை தொடரின் குரூப் ஏ பிரிவில் இந்தியா மற்றம் பாகிஸ்தான் அணிகள் இடம்பெற்றுள்ளன. இன்றைய போட்டி இலங்கையில் உள்ள கண்டியில் நடைபெற்றது.

    இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. இந்தியா அணி 48.5 ஓவர்களில் 266 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. போட்டியின் முதல் பாதி இடைவேளையின் போது மழை பெய்ய துவங்கியது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் போட்டி துவங்குவதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது.

    தொடர்ந்து மழை நீடிக்கும் பட்சத்தில் போட்டியை நடத்துவதில் மூன்று ஆப்ஷன்கள் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி போட்டியை நடத்துவதற்கு மீதமுள்ள நேரத்திற்கு ஏற்றார்போல் 40 ஓவர் விளையாடும் பட்சத்தில் பாகிஸ்தான் அணி 239 ரன்களையும், 30 ஓவர்கள் ஆடும் பட்சத்தில் 203 ரன்களையும், 20 ஓவர்கள் விளையாட நேரும் பட்சத்தில் பாகிஸ்தான் அணி 155 ரன்களை குவித்தால் வெற்றி பெற முடியும்.

    தற்போது வெளியாகி இருக்கும் தகவல்களின் படி போட்டி 20 ஓவர்களாக குறைக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. இது உண்மையாகும் பட்சத்தில் பாகிஸ்தான் அணியின் வெற்றி இலக்கு 155 ரன்களாக மாற்றப்படும். 

    • ஆசிய கோப்பை 2023 தொடர் கடந்த சில நாட்களுக்கு முன்பு துவங்கியது.
    • ஆசிய கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி ஏற்கனவே ஒரு வெற்றியை பெற்று விட்டது.

    ஆசிய கோப்பை 2023 தொடரில் இன்றைய ஆட்டத்தில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ஆசிய கோப்பை தொடரின் குரூப் ஏ பிரிவில் இந்தியா மற்றம் பாகிஸ்தான் அணிகள் இடம்பெற்றுள்ள. இன்றைய போட்டி இலங்கையில் உள்ள கண்டியில் நடைபெறுகிறது.

    இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து இருக்கிறது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இடையிலான போட்டி என்பதால், ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் வல்லுனர்கள் இடைய இந்த போட்டி மீதான எதிர்பார்ப்பு பலமடங்கு அதிகரித்து இருக்கிறது.

    ஆசிய கோப்பை 2023 தொடர் துவங்கும் முன்பு தான் பாகிஸ்தான் அணி, சர்வதேச ஒருநாள் அணிகளுக்கான தரவரிசை பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறி இருக்கிறது. ஐ.சி.சி. ஒருநாள் அணிகளுக்கான தரவரிசை பட்டியலில் இந்திய அணி மூன்றாவது இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது. 

    ×