என் மலர்
நீங்கள் தேடியது "T20 World Cup"
- அமெரிக்கா உலக கோப்பை அணியை தேர்வு செய்ய முடியாத நிலையில் உள்ளது.
- இந்த விவகாரத்தால் 8 நாடுகள் பாதிக்கப்படும்.
டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டி பிப்ரவரி 7- ந் தேதி முதல் மார்ச் 8-ந் தேதி வரை இந்தியா மற்றும் இலங்கையில் நடக்கிறது. 20 நாடுகள் இதில் பங்கேற்கின்றன.
இந்தப் போட்டியில் பங்கேற்கும் பெரும்பாலான அணிகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. இதில் விளையாடும் அணிகளில் ஒன்றான அமெரிக்கா இன்னும் வீரர்களை தேர்வு செய்யவில்லை.
இதற்கிடையே அந்த அணியில் உள்ள பாகிஸ்தான் வம்சாவளியை சேர்ந்த 4 வீரர்களுக்கு இந்தியா செல்வதற்கான விசா மறுக்கப்பட்டுள்ளது. வேகப்பந்து வீச்சாளர் அலி கான், ஷயான் ஜஹாங்கிர், முகமது மோஷின், எஹ்சான் அதில் ஆகிய 4 பேருக்கு விசா மறுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
விசா நிராகரிக்கப்பட்ட தகவலை அலிகான் காெணாலி செய்தியில் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக எங்களால் டி20 உலக கோப்பையில் பங்கேற்க முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.
இதனால் அமெரிக்கா உலக கோப்பை அணியை தேர்வு செய்ய முடியாத நிலையில் உள்ளது. இந்த விவகாரத்தால் 8 நாடுகள் பாதிக்கப்படும். அமெரிக்காவை தவிர இங்கிலாந்து, ஜிம்பாப்வே, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஓமன், நேபாளம், கனடா, நெதர்லாந்து ஆகிய நாடு களிலும் பாகிஸ்தான் வம்சாவளியை சேர்ந்த கிரிக்கெட் வீரர்கள் இடம்பெற்றுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
- டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் சுப்மன் கில் இடம்பெறவில்லை.
- தேர்வுக்குழு என்ன முடிவு எடுக்க வேண்டுமோ, இந்திய அணிக்கு எது நன்மையோ, அதனை எடுத்திருக்கிறார்கள்.
மும்பை:
இந்திய அணி நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாட உள்ளது. இரு அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி நாளை நடைபெற உள்ளது.
2026-ம் ஆண்டுக்கான டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் தொடங்க உள்ள நிலையில் அதற்கு முன்பாக நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் இந்திய அணி விளையாடுகிறது. இதனிடையே நியூசிலாந்து மற்றும் டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது. அந்த அணியில் நட்சத்திர வீரர் சுப்மன் கில் சேர்க்கப்படவில்லை.
அவரது இடத்தில் சஞ்சு சாம்சன் விளையாடுவார் என்றும், இஷான் கிஷன் மாற்று வீரராகவும் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார் எனவும் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் என் தலையில் என்ன எழுதப்பட்டுள்ளதோ, அதனை யாராலும் தடுக்க முடியாது என டி20 உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இருந்து நீக்கப்பட்டது குறித்து சுப்மன் கில் கருத்து தெரிவித்தார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
நான் எங்கு இருக்க வேண்டுமோ, அங்கு நிற்கிறேன். என் தலையில் என்ன எழுதப்பட்டுள்ளதோ, அதனை யாராலும் தடுக்க முடியாது. ஒரு கிரிக்கெட் வீரராக இந்திய அணிக்கு என்ன செய்ய முடியும் என்பதை தீவிரமாக முயற்சித்து வருகிறேன். தேர்வுக்குழு என்ன முடிவு எடுக்க வேண்டுமோ, இந்திய அணிக்கு எது நன்மையோ, அதனை எடுத்திருக்கிறார்கள்.
எப்போது கடந்த விஷயங்களை பற்றியோ, எதிர்காலத்தைப் பற்றியோ யோசிக்கும் பழக்கம் இல்லை. வாழ்க்கையின் அந்தந்த நேரத்தில் என்ன செய்ய வேண்டும் என்பதை மட்டுமே நினைப்பேன். இந்திய அணிக்காக விளையாடும் போது, ஒவ்வொரு வடிவமும் சவால் நிறைந்தது தான். ஏனென்றால் இந்திய அணி கடைசியாக 2011ல் உலகக்கோப்பையை வென்றது. அதன்பின் வெல்ல முடியவில்லை. ஒருநாள் வடிவம் எளிதானது என்று சொல்லிவிடலாம். ஆனால் கிரிக்கெட்டில் எந்த வடிவமும் எளிதாக இருக்காது. அதற்கான முயற்சியும், பயிற்சியும் அவசியம். மனதளவில் தயாராக வேண்டியதும் முக்கியம்.
என்று கில் கூறினார்.
- அயர்லாந்து அணிக்கு பால் ஸ்டிர்லிங் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
- பால் ஸ்டிர்லிங் தான் 20 ஓவர் போட்டியில் அதிக ரன் எடுத்த அயர்லாந்து வீரர்.
20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி பிப்ரவரி 7-ந்தேதி முதல் மார்ச் 8-ந்தேதி வரை இந்தியா, இலங்கையில் நடைபெறு கிறது. இதில் 20 நாடுகள் பங்கேற்கின்றன.
இந்தப் போட்டிக்கான இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென்ஆப் பிரிக்கா, நியூசிலாந்து, வங்காள தேசம், ஆப்கானிஸ்தான், ஜிம்பாப்வே, நமீபியா, ஓமன், நேபாளம் ஆகிய அணிகள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டன.
இந்த நிலையில் 20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கான 15 பேர் கொண்ட அயர்லாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
அயர்லாந்து அணிக்கு பால் ஸ்டிர்லிங் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் தான் 20 ஓவர் போட்டியில் அதிக ரன் எடுத்த அயர்லாந்து வீரர் ஆவார். லார்கன் டக்கட் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டு உள்ளார். கடந்த உலக கோப்பையில் இடம்பெற்ற வீரர்களில் 12 பேர் இந்த முறையும் தேர்வாகியுள்ளனர்.
20 ஓவர் உலக கோப்பையில் இடம்பெற்றுள்ள அயர்லாந்து அணி வருமாறு:-
பால் ஸ்டீர்லிங் (கேப்டன்) மார்க் ஆதிர், பென்கால்ட்ஸ், கேம்பெர், டெலனி, ஜார்ஜ் டாக்ரெல், மேத்யூ ஹம்ப் ரேஸ், ஜோஷ் லிட்டில், பேரி மெக்கர்த்தி, ஹாரி டக்கர், லார்கன் டக்கெட், பென் ஒயிட், கிரேக் யங்.
- இந்தியாவில் நடைபெறும் டி20 உலக கோப்பையில் விளையாட வங்கதேசம் மறுத்து உள்ளது.
- பாதுகாப்பு கருதி தங்கள் அணி மோதும் ஆட்டங்களை இலங்கைக்கு மாற்ற வேண்டும் என்று ஐ.சி.சி.யிடம் வலியுறுத்தியுள்ளது.
துபாய்:
வங்கதேசத்தில் நடைபெற்ற இந்துக்கள் மீதான தாக்குதல் சம்பவம் கிரிக்கெட்டில் எதிரொலித்து வருகிறது. ஐ.பி.எல். போட்டியில் விளையாட வங்கதேச வீரர் முஸ்டாபிசுர் ரகுமானுக்கு பா.ஜனதா மற்றும் இந்து அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.
இதைத்தொடர்ந்து கிரிக்கெட் வாரியத்தின் உத்தரவின் பேரில் அவரை கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி நீக்கியது.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியாவில் நடைபெறும் டி20 உலக கோப்பையில் விளையாட வங்கதேசம் மறுத்து உள்ளது. பாதுகாப்பு கருதி தங்கள் அணி மோதும் ஆட்டங்களை இலங்கைக்கு மாற்ற வேண்டும் என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் (ஐ.சி.சி.) வலியுறுத்தியுள்ளது.
இதற்கிடையே வங்கதேசத்தின் கோரிக்கையை ஐ.சி.சி. நிராகரித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் விளையாட வேண்டும் இல்லையென்றால் புள்ளிகளை இழக்க நேரிடும் என்று வங்கதேச கிரிக்கெட் வாரியத்தை ஐ.சி.சி. எச்சரித்ததாக கூறப்படுகிறது. காணொலி அழைப்பின் மூலம் இதை தெரிவித்ததாக கூறப்படுகிறது.
அதேநேரத்தில் ஐ.சி.சி.யி டம் இருந்து தங்களுக்கு இறுதி எச்சரிக்கை எதுவும் தெரிவிக்கப்படவில்லை என்று வங்கதேச கிரிக்கெட் வாரியம் தெரிவித்து உள்ளது.
20 ஓவர் உலக கோப்பையில் 20 நாடுகள் பங்கேற்கின்றன. வங்கதேசம் 'சி' பிரிவில் இடம்பெற்றுள்ளது. அந்த அணி வெஸ்ட் இண்டீசுடன் பிப்ரவரி 7-ந்தேதியும், இத்தாலியுடன் 9-ந் தேதியும், இங்கிலாந்துடன் 14-ந்தேதியும், நேபாளத்துடன் 17-ந்தேதியும் மோதுகிறது. கொல்கத்தா, மும்பையில் இந்த ஆட்டங்கள் நடைபெறுகிறது.
- டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறுகிறது.
- நேபாளம் அணி தனது டி20 உலக கோப்பை போட்டிக்கான ஜெர்சியை அறிமுகப்படுத்தியுள்ளது.
20 அணிகள் இடையிலான 10-வது ஐ.சி.சி. டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் பிப்ரவரி 7-ந்தேதி முதல் மார்ச் 8-ந்தேதி வரை இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறுகிறது. இதில் பங்கேற்கும் 20 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. இதில் நடப்பு சாம்பியனான இந்திய அணி 'ஏ' பிரிவில் பாகிஸ்தான், நமீபியா, நெதர்லாந்து மற்றும் அமெரிக்காவுடன் இடம் பெற்றுள்ளது.
இந்நிலையில், 'சி' பிரிவில் இடம்பெற்றுள்ள நேபாளம் அணி தனது டி20 உலக கோப்பை போட்டிக்கான ஜெர்சியை அறிமுகப்படுத்தியுள்ளது.
நேபாளம் இடம்பெற்றுள்ள 'சி' பிரிவில் , இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், வங்கதேசம், இத்தாலி ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன.
- 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறுகிறது.
- 20 ஓவர் உலக கோப்பை போட்டியை நடத்திய எந்த நாடும் இதுவரை வென்றதில்லை.
20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த மாதம் (பிப்ரவரி) 7-ந்தேதி முதல் மார்ச் 8-ந்தேதி வரை இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறுகிறது.
இந்த போட்டிக்கான இந்திய அணி கடந்த 20-ந்தேதி அறிவிக்கப்பட்டது. நடப்பு சாம்பியனான இந்திய அணி கோப்பையை தக்க வைத்துக் கொள்ளுமா என்று ஆவலுடன் எதிர் பார்க்கப்படுகிறது.
20 ஓவர் உலக கோப்பை போட்டியை நடத்திய எந்த நாடும் இதுவரை வென்றதில்லை. அதை சூர்யகுமார் யாதவ் தலைமையிலான அணி மாற்றி புதிய வரலாறு படைக்குமா? என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது.
இதற்கிடையே 20 ஓவர் உலக கோப்பையில் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா இந்திய அணிக்கு முக்கிய வீரராக இருப்பார் என்று தென் ஆப்பிரிக்க முன்னாள் அதிரடி வீரர் டி.வில்லியர்ஸ் கணித்துள்ளார்.
இது தொடர்பாக பேசிய அவர், "ஹர்திக் பாண்ட்யாவால் எந்த சூழ்நிலையிலும் பந்து வீச முடியும். பேட்டிங்கில் எந்த வரிசையிலும் களம் இறங்கி அதிரடியாக ஆடக் கூடியவர். பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய அவர் மிகவும் முக்கிய வீரராக இருப்பார். ஹர்திக் பாண்ட்யா 3 அல்லது அதற்கு மேற்பட்ட ஓவர்கள் பேட்டிங் செய்தால் எதிரணிக்கு தோல்விதான் ஏற்படும். இதனால் அவரை வெளி யேற்ற வேண்டும் என்ற உணர்வுடன் எதிர் அணி வீரர்கள் இருப்பார்கள்" என்று கூறினார்.
20 ஓவர் உலக கோப்பையில் இந்திய அணி 'ஏ' பிரிவில் இடம் பெற்றது. பாகிஸ்தான், நெதர்லாந்து, நமீபியா, அமெரிக்கா ஆகிய அணிகளும் அந்த பிரிவில் உள்ளன.
- டி20 உலகக் கோப்பைக்கான அணியை ஒவ்வொரு நாடுகளும் அறிவித்து வருகின்றன.
- வங்கதேச அணிக்கு லிட்டன் தாஸ் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
டாக்கா:
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி பிப்ரவரி 7-ம் தேதி முதல் மார்ச் 8-ம் தேதி வரை இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற உள்ளது.
இந்தப் போட்டியில் பங்கேற்கும் 20 அணிகளும் 4 பிரிவாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இந்தத் தொடருக்கான அணியை ஒவ்வொரு நாடுகளும் அறிவித்து வருகின்றன.
இந்நிலையில், டி20 உலகக் கோப்பை தொடருக்கான வங்கதேச அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த அணிக்கு லிட்டன் தாஸ் கேப்டனாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
15 பேர் கொண்ட வங்கதேச அணி விவரம் வருமாறு:
லிட்டன் தாஸ் (கேப்டன்), தன்சித் ஹசன், பர்வேஸ் ஹொசைன் , சைப் ஹசன், தவ்ஹித் ஹிரிடோய், ஷமிம் ஹொசைன், குவாஸி நூருல் ஹசன், ஷக் மஹேதி ஹசன், ரிஷாத் ஹொசைன், நசும் அகமது, முஸ்தபிசுர் ரஹ்மான், டன்சிம் ஹசன், தஸ்கின் அகமது, ஷயிப் உதின், ஷோரிபுல் இஸ்லாம்.
- முஸ்தபிசுர் ரகுமானை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி விடுவித்துள்ளது.
- ஐ.பி.எல். போட்டியில் முஷ்தபிசுர் விளையாட இந்து அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தது
ஐ.பி.எல். போட்டிக்கான ஏலத்தில் 7 வங்கதேச வீரர்கள் இடம்பெற்று இருந்தனர். இதில் வேகப்பந்து வீரர் முஷ்தபிசுர் ரகுமானை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ரூ.9.2 கோடிக்கு ஒப்பந்தம் செய்தது.
வங்கதேசத்தில் இந்துக்களுக்கு எதிராக தாக்குதல் சம்பவம் நடைபெற்று வருவதால் ஐ.பி.எல். போட்டியில் முஷ்தபிசுர் ரகுமான் விளையாட கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. பல்வேறு இந்து அமைப்புகள் வங்கதேச வீரர் ஐ.பி.எல்.லில் விளையாட கூடாது என்று தங்கள் எதிர்ப்பை தெரிவித்தன.
வங்கதேச கிரிக்கெட் வீரரை ஒப்பந்தம் செய்த அந்த அணியின் உரிமையாளர் ஷாருக்கானை தேச துரோகி என்று பா.ஜ.க, இந்து அமைப்புகள் கண்டனம் தெரிவித்தன. அவரை அணியில் இருந்து விலக்க வேண்டும் என்று வற்புறுத்தி வருகின்றன.
இந்நிலையில், வங்கதேச வேகப்பந்து வீச்சாளர் முஸ்தபிசுர் ரகுமானை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கேகேஆர்) அணியில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று பிசிசிஐ கோரியது.
இந்த நிலையில் பிசிசிஐ-யின் உத்தரவை ஏற்று, முஸ்தபிசுர் ரகுமானை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி விடுவித்துள்ளது.
IPL-ல் இருந்து முஸ்தபிசுர் நீக்கப்பட்ட நிலையில், ஆவேசமாக பேசிய வங்கதேச விளையாட்டு அமைச்சக ஆலோசகர் ஆசிப் நஸ்ருல், "டி20 உலக கோப்பையில் வங்கதேசத்தின் போட்டிகள் அனைத்தையும் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு மாற்ற வேண்டும். IPLல் ஒப்பந்தம் போட்ட பிறகும், வங்கதேச வீரர் இந்தியாவில் விளையாட முடியாதென்றால், எப்படி வங்கதேச வீரர்களால் பாதுகாப்பாக உணர முடியும்?
IPL போட்டிகளை வங்கதேசத்தில் ஒளிபரப்ப தடை செய்ய வேண்டும் என ஆலோசனை கூறியுள்ளேன். மேலும் எந்த சூழ்நிலையிலும் வங்கதேசத்தையோ எங்கள் வீரர்களையோ அவமதிப்பதை பொறுத்துக் கொள்ள மாட்டோம். அடிமை மனநிலையில் இருந்து எப்போதோ விடுபட்டு விட்டோம்" என்று தெரிவித்தார்.
- டெவால்டு பிரேவிஸ், ஜேசன் ஸ்மித் ஆகியோர் அணியில் இடம் பிடித்துள்ளனர்.
- டி காக், ரபாடா, யான்சன், நோர்ஜே, டேவிட் மில்லர், மகாராஜ் ஆகியோருக்கும் இடம்.
டி20 உலகக் கோப்பைக்கான மார்க்கிராம் தலைமையிலான தென்ஆப்பிரிக்கா அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 2024 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியாவிடம் தோல்வியடைந்த தென்ஆப்பிரிக்கா அணியில் இடம் பிடித்திருந்த 7 பேர் தற்போது இடம் பிடித்துள்ளனர்.
மார்க்கிராமை தவிர்த்து டி காக், ரபாடா, யான்சன், நோர்ஜே, டேவிட் மில்லர், மகாராஜ் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.
ஆனால் டிரிஸ்டியன் ஸ்டப்ஸ் அணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
டெவால்டு பிரேவிஸ், க்வெனா மபாகா, கார்பின் போஸ்ச், டோனி டி ஜோர்சி, ஜேசன் ஸ்மித், டொனோவன் பெரைரா, ஜார்ஜ் லிண்டே ஆகியோர் புதிதாக இடம் பிடித்துள்ளனர்.
தென்ஆப்பிரிக்கா அணி:-
மார்க்கிராம், போஸ்ச், டெவால்டு பிரேவிஸ், டி காக், டோனி டி ஜோர்சி, டொனோவன் பெரைரா, மார்கோ யான்சன், ஜார்ஜ் லிண்டே, மகாராஜ், க்வெனா மபாகா, டேவிட் மில்லர், லுங்கி நிகிடி, அன்ரிச் நோர்ஜே, ரபாடா, ஜேசன் ஸ்மித்.
- ஐ.சி.சி. டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் பிப்ரவரி 7-ந்தேதி தொடங்குகிறது.
- இதில் பங்கேற்கும் 20 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.
20 அணிகள் இடையிலான 10-வது ஐ.சி.சி. டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் பிப்ரவரி 7-ந்தேதி முதல் மார்ச் 8-ந்தேதி வரை இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறுகிறது. இதில் பங்கேற்கும் 20 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.
இதில் நடப்பு சாம்பியனான இந்திய அணி 'ஏ' பிரிவில் பாகிஸ்தான், நமீபியா, நெதர்லாந்து மற்றும் அமெரிக்காவுடன் இடம் பெற்றுள்ளது.
இந்த தொடருக்கான அணியை ஒவ்வொரு நாடும் அறிவித்து வருகின்றனர். இதில் இந்தியா, இங்கிலாந்து, ஆப்கானிஸ்தான், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் அறிவித்து விட்டனர். மற்ற நாடுகள் இன்னும் அறிவிக்கபடாமல் உள்ளது.
இந்நிலையில் உலகக் கோப்பைக்கான அனைத்து அணிகளும் ஜனவரி 31-ம் தேதி வரை தங்கள் அணியில் மாற்றங்களைச் செய்யலாம் என ஐசிசி அறிவித்துள்ளது.
- தற்போது உள்ளூர் போட்டியில் தனது செயல் திறனை வெளிப்படுத்தி உள்ளார்.
- இந்தியாவுக்காக டி.ஆர்.எஸ். முடிவை எடுப்பதில் டோனிக்கு பிறகு ஜிதேஷ்தான் சிறந்த விக்கெட் கீப்பராக இருந்தார்.
10-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி பிப்ரவரி 7-ந்தேதி முதல் மார்ச் 8-ந்தேதி வரை இந்தியா, இலங்கையில் நடைபெறுகிறது.
இதற்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. டெஸ்ட், ஒரு நாள் போட்டியில் கேப்டனாக இருக்கும் சுப்மன்கில் அணியில் இருந்து நீக்கப்பட்டு உள்ளார்.
20 ஓவர் அணியில் துணை கேப்டனாக இருக்கும் அவர் தொடர்ந்து மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் தேர்வுக் குழு துணிச்சலான முடிவு எடுத்து அவரை நீக்கி உள்ளது. உள்ளூர் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் இஷான் கிஷன் தேர்வு செய்யப்பட்டார். இதேப் போல ரிங்குசிங்குக்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் 20 ஓவர் போட்டிக்கான இந்திய அணியின் தேர்வில் எந்த தவறும் இல்லை என்று முன்னாள் கேப்டனும், டெலிவிஷன் வர்ணனையாளருமான கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
இஷான்கிஷன் மீண்டும் இந்திய அணியில் இடம் பிடித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. ஒருவர் சிறப்பாக செயல்படுவதை பார்த்தால் அவரை தேர்ந்து எடுக்க வேண்டும். இஷான் கிஷன் ஏற்கனவே அணியில் தன்னால் சிறப்பாக செயல்பட முடியும் என்பதை நிரூபித்து உள்ளார்.
தற்போது உள்ளூர் போட்டியில் தனது செயல் திறனை வெளிப்படுத்தி உள்ளார். அவருக்காக நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். அவர் 2 ஆண்டுகளாக அணிக்கு வெளியே இருந்தார். சையத் முஸ்தாக் அலி கோப்பையை ஜார்க்கண்ட் அணி கைப்பற்ற இஷான் கிஷன் முக்கிய பங்கு வகித்தார்.
ஜிதேஷ்சர்மா அணியில் இருந்து நீக்கப்படுவதற்கு அவர் எந்த தவறும் செய்யவில்லை. இந்தியாவுக்காக டி.ஆர்.எஸ். முடிவை எடுப்பதில் டோனிக்கு பிறகு ஜிதேஷ்தான் சிறந்த விக்கெட் கீப்பராக இருந்தார். அவருக்காக நான் வருத்தப்படுகிறேன். இளம் வீரரான அவர் மீண்டும் உள்ளூர் போட்டியில் தொடர்ந்து சிறப்பாக செயல்பட வேண்டும் என்றார்.
- டி20 உலகக் கோப்பை போட்டி பிப்ரவரி 7 முதல் மார்ச் 8 வரை இந்தியா, இலங்கையில் நடைபெறுகிறது.
- டி20 உலகக் கோப்பை தொடருக்கான 15 பேர் அடங்கிய இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது.
புதுடெல்லி:
10-வது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி பிப்ரவரி 7-ந்தேதி முதல் மார்ச் 8-ந்தேதி வரை இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறுகிறது.
இந்நிலையில், டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது.
சூர்யகுமார் யாதவ் தலைமையிலான அந்த அணியில் 15 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். துணை கேப்டன் சுப்மன் கில் அணியில் இடம்பெறவில்லை. அவருக்கு பதிலாக அக்சர் படேல் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும், சஞ்சு சாம்சன் முதன்மை விக்கெட் கீப்பராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில், டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டது குறித்து சஞ்சு சாம்சன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், நிறங்கள் நிச்சயம் மங்காது என பதிவிட்டது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.






