என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "T20 World Cup"

    • நேற்றைய போட்டியில் அபிஷேக் சர்மா 2 கேட்ச்களை தவறவிட்டார்.
    • சூப்பர் 8 சுற்றில் அதிக கேட்ச்களை தவறவிட்டது இந்திய அணிதான்.

    இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி நேற்று கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் வெற்றி பெற்றால்தான் அரையிறுதிக்கு தகுதி பெற முடியும் என்ற நிலை இரு அணிகளுக்கும் இருந்தது.

    வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் முதலில் பேட்டிங் செய்து அற்புதமாக விளையாடினார்கள். அதேவேளையில் இந்திய வீரர்கள் மோசமாக பீல்டிங் செய்தனர். அபிஷேக் சர்மா சுத்த மோசம். இரண்டு கேட்ச்களை தவறவிட்டார். ஷாய் ஹோப் மற்றும் ரோவ்மேன் பொவேல் ஆகியோரது கேட்சை பிடிக்க தவறினார். திலக் வர்மா பவுண்டரி லைனில் கடினமான கேட்சை பிடிக்க தவறினார்.

    இந்த டி20 உலகக் கோப்பையில் இதுவரை இந்தியாவின் பீல்டிங் மிகச் சிறப்பானதாக அமையவில்லை. 13 கேட்ச்களை தவறவிட்டுள்ளது. சூப்பர் 8 சுற்றில் அதிக கேட்ச்களை தவறவிட்டது இந்திய அணிதான்.

    கேட்ச் பிடிப்பதில் இந்திய அணியின் திறன் 72 சதம்வீதம்தான். அரையிறுதியில் இதுபோன்று கேட்ச்களை தவறவிட்டால், வெற்றி தவற விடுவதற்கு சமமாகும்.

    • சஞ்சு சாம்சன் கர்த்தருக்கு நன்றி கூறும் வகையில் சிலுவை பிரார்த்தனை செய்து கொண்டாடினார்.
    • சஞ்சு சாம்சனின் இந்த கொண்டாட்ட வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

    டி20 உலகக் கோப்பை தொடரின் 52வது லீக் ஆட்டத்தில் இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற இந்தியா பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 195 ரன்கள் குவித்தது. ரோஸ்டன் சேஸ் 40 ரன்கள் எடுத்தார். ஹோலட்ர் 37 ரன்னும், பாவெல் 34 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

    அடுத்து களமிறங்கிய இந்தியா 19.2 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 199 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றதுடன், அரையிறுதிக்கும் முன்னேறி அசத்தியது. அதிரடியாக ஆடி 97 ரன்கள் குவித்து இந்திய அணியை வெற்றிபெற வைத்த சஞ்சு சாம்சனுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

    இந்த போட்டியில் அரைசதம் அடித்த சஞ்சு சாம்சன் கர்த்தருக்கு நன்றி கூறும் வகையில் சிலுவை பிரார்த்தனை செய்து கொண்டாடினார். அதே போல வெற்றிக்கான கடைசி ரன்னை அடித்தவுடன் தரையில் அமர்ந்து இறைவனிடம் வேண்டி சிலுவை பிரார்த்தனை செய்து கொண்டாடினார். சஞ்சு சாம்சனின் இந்த கொண்டாட்ட வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

    மகளிர் ஒருநாள் உலகக்கோப்பையில் அரையிறுதி போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான வெற்றிக்கு பின்பு பேசிய ஜெமிமா ரோட்ரிக்ஸ், "நான் இயேசுவுக்கு நன்றி கூறுகிறேன், இதை நான் தனியாகச் செய்திருக்க முடியாது. அவர் என்னைவழி நடத்தினார்" என்று தெரிவித்தார். இதனையடுத்து இணையத்தில் ஜெமிமாவின் மதத்தை குறிவைத்து எண்ணற்ற ட்ரோல்கள் வந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

    • அதிரடியாக ஆடி 97 ரன்கள் குவித்த சஞ்சு சாம்சனுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.
    • இந்திய அணி அரையிறுதிக்கும் முன்னேறி அசத்தியது.

    டி20 உலகக் கோப்பை தொடரின் 52வது லீக் ஆட்டத்தில் இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற இந்தியா பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 195 ரன்கள் குவித்தது. ரோஸ்டன் சேஸ் 40 ரன்கள் எடுத்தார். ஹோலட்ர் 37 ரன்னும், பாவெல் 34 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

    அடுத்து களமிறங்கிய இந்தியா 19.2 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 199 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றதுடன், அரையிறுதிக்கும் முன்னேறி அசத்தியது. அதிரடியாக ஆடி 97 ரன்கள் குவித்து இந்திய அணியை வெற்றிபெற வைத்த சஞ்சு சாம்சனுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

    சஞ்சு சாம்சனின் இந்த அபார ஆட்டத்தின் மூலம் டி20 உலக கோப்பை தொடரில் ஒரு இன்னிங்ஸில் அதிக ரன்கள் அடித்த இந்திய வீரர்கள் பட்டியலில் 2வது இடத்திற்கு அவர் முன்னேறினார்.

    2010 ஆண்டு தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான போட்டியில் 101 ரன்கள் குவித்த சுரேஷ் ரெய்னா ஒரு இன்னிங்ஸில் அதிக ரன்கள் அடித்த இந்திய வீரர்கள் பட்டியலில் முதல் இடத்தில உள்ளார். தற்போது 97* ரன்கள் அடித்து 2வது இடத்திற்கு சஞ்சு சாம்சன் முன்னேறினார். 92 ரன்களுடன் ரோகித் 3 ஆம் இடத்திலும் 89 ரன்களுடன் கோலி 4 ஆம் இடத்திலும் உள்ளனர்.

    • சஞ்சு சாம்சன் அதிரடியாக ஆடி 97 ரன்கள் குவித்து இந்திய அணியை வெற்றிபெற வைத்தார்.
    • சஞ்சு சாசனின் இந்த வாழ்நாள் ஆட்டத்தை மலையாள முன்னணி நடிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

    டி20 உலகக் கோப்பை தொடரின் 52வது லீக் ஆட்டத்தில் இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின. முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 195 ரன்கள் குவித்தது. ரோஸ்டன் சேஸ் 40 ரன்னும், ஹோல்டர் 37 ரன்னும், பாவெல் 34 ரன்னும் எடுத்தனர்.

    அடுத்து களமிறங்கிய இந்தியா 19.2 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 199 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றதுடன், அரையிறுதிக்கும் முன்னேறி அசத்தியது. அதிரடியாக ஆடி 97 ரன்கள் குவித்து இந்திய அணியை வெற்றிபெற வைத்த சஞ்சு சாம்சனுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

    கேரளாவில் இருந்து தற்போது இந்திய அணிக்காக விளையாடும் ஒரே கிரிக்கெட் வீரரான சஞ்சு சாசனின் இந்த வாழ்நாள் ஆட்டத்தை மலையாள முன்னணி நடிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

    மோகன்லால், மம்முட்டி, பசில் ஜோசப் ஆகியோர் சஞ்சு சாம்சனை பாராட்டி பதிவிட்டுள்ளனர். அதே போல், சச்சின், யுவராஜ் சிங் ஆகியோரும் சாம்சனை பாராட்டி பதிவிட்டுள்ளனர்.

    • இந்திய அணி 19.2 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 199 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
    • முதல் அரையிறுதியில் தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.

    கொல்கத்தா:

    டி20 உலகக் கோப்பை தொடரில் சூப்பர் 8 சுற்றின் கடைசி போட்டி கொல்கத்தாவில் நேற்று நடந்தது. இதில் இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின.

    முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் தொடக்க ஆட்டக்காரர் ரோஸ்டன் சேஸ் 40 ரன்னிலும், ஷாய் ஹோப் 32 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். ஹெட்மயர் 27 ரன்னில் அவுட்டானார்.

    5வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ரோமேன் பாவல் (34 ரன்), ஜேசன் ஹோல்டர் (37 ரன்) சிறப்பாக ஆடி 35 பந்துகளில் 76 ரன் குவித்தது. வெஸ்ட் இண்டீஸ் 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 195 ரன் எடுத்தது. இதையடுத்து, களம் இறங்கிய இந்திய அணி 19.2 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 199 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    இந்நிலையில், அரையிறுதியில் நுழைந்துள்ள இந்திய அணி, வரும் 5-ம் தேதி நடைபெறும் 2வது அரையிறுதியில் இங்கிலாந்து அணியுடன் மோத உள்ளது.

    வரும் 4-ம் தேதி நடைபெற உள்ள முதல் அரையிறுதிப் போட்டியில் தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.

    • வெஸ்ட் இண்டீஸ் 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 195 ரன்கள் குவித்தது.
    • இந்தியா 19.2 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 199 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

    கொல்கத்தா:

    டி20 உலகக் கோப்பை தொடரின் 52வது லீக் ஆட்டத்தில் இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின. முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 195 ரன்கள் குவித்தது. ரோஸ்டன் சேஸ் 40 ரன்னும், ஹோல்டர் 37 ரன்னும், பாவெல் 34 ரன்னும் எடுத்தனர்.

    அடுத்து களமிறங்கிய இந்தியா 19.2 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 199 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றதுடன், அரையிறுதிக்கும் முன்னேறி அசத்தியது. சஞ்சு சாம்சன் அதிரடியாக ஆடி 97 ரன்கள் குவித்து இந்திய அணியை வெற்றிபெற வைத்தார்.

    இந்நிலையில், ஆட்ட நாயகன் விருது வென்ற சஞ்சு சாம்சன் கூறியதாவது:

    கிரிக்கெட் விளையாடத் தொடங்கிய நாளிலிருந்தே இந்திய அணிக்காக விளையாட வேண்டும் என்ற கனவோடுதான் இருந்தேன். அந்தக் கனவுக்காக காத்திருந்த நாள் இதுதான்.

    உண்மையிலேயே இந்த இன்னிங்ஸ் மூலம் அணியை வெற்றி பெற வைத்தது மகிழ்ச்சி அளிக்கிறது. இது என் வாழ்க்கையிலேயே மிகச் சிறந்த நாட்களில் ஒன்று.

    என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கை மிகவும் ஸ்பெஷல் ஆனது. என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையில் நான் பல உச்சங்களையும், சரிவுகளையும் சந்தித்து இருக்கின்றேன். இதன் மூலம் என் திறமை மீது எனக்கே பலமுறை சந்தேகம் வந்திருக்கிறது. என்னால் கிரிக்கெட்டில் வெற்றி பெற முடியுமா என்றெல்லாம் தோன்றுகிறது. ஆனால் இன்று கடவுள் எனக்கு ஆசீர்வாதம் தந்திருக்கின்றார்.

    அதற்காக நான் நன்றி தெரிவித்துக் கொள்கின்றேன். நான் இந்த டி20 கிரிக்கெட் போட்டியில் பல ஆண்டுகளாக விளையாடி வருகின்றேன்.

    கடந்த 12 ஆண்டுகளாக ஐபிஎல் போட்டிகளிலும், 10 ஆண்டுகளாக இந்திய அணிக்கும் விளையாடுகின்றேன். ஆனால் நான் வெறும் 60 போட்டிகளில் தான் விளையாடி இருப்பேன். ட்ரெஸ்ஸிங் ரூமில் இருந்து 100 போட்டிகளுக்கு மேல் பார்த்திருக்கின்றேன்.

    அதில் ரோகித் சர்மா, தோனி, விராட் கோலி போன்ற ஜாம்பவான்கள் எல்லாம் எப்படி விளையாடுவார்கள் என்பதைப் பார்த்து கற்றுக் கொண்டிருக்கின்றேன்.

    கூடுதலாக, என்னுடைய அனுபவத்தையும் சேர்த்து சூழலுக்கு ஏற்ப விளையாட வேண்டும் என்பதைப் புரிந்துகொண்டு இன்று நான் ரன்கள் சேர்த்தேன். ஆனால் இவ்வளவு பெரிய இன்னிங்ஸ் ஆடுவேன் என்று நான் நினைக்கவில்லை. ஒரு தருணத்தில் ஒரு பந்து என்ற கவனம் செலுத்தி, பந்துக்கு ஏற்ற வகையில் விளையாடினேன்.

    இந்தப் போட்டி கொஞ்சம் வித்தியாசமானது. நான் எப்போதெல்லாம் அதிரடி காட்ட முயற்சி செய்தனோ, அப்போதெல்லாம் விக்கெட்டுகள் விழுந்தது. எனவே இன்று கொஞ்சம் அமைதி காத்து பின் அதிரடி காட்ட வேண்டும் என நினைத்தேன். உண்மையில் என்னுடைய வாழ்க்கையில் மிகச் சிறந்த நாள் என தெரிவித்தார்.

    • டாஸ் வென்ற இந்தியா பவுலிங் தேர்வு செய்தது.
    • முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் 20 ஓவரில் 195 ரன்கள் குவித்தது.

    கொல்கத்தா:

    டி20 உலகக் கோப்பை தொடரின் 52வது லீக் ஆட்டத்தில் இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற இந்தியா பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 195 ரன்கள் குவித்தது. ரோஸ்டன் சேஸ் 40 ரன்கள் எடுத்தார். ஹோலட்ர் 37 ரன்னும், பாவெல் 34 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

    இதையடுத்து களமிறங்கிய இந்தியா 19.2 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 199 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றதுடன், அரையிறுதிக்கும் முன்னேறி அசத்தியது.

    இந்நிலையில், டி20 உலகக் கோப்பையில் இந்திய அணி அதிகபட்ச ஸ்கோரை சேசிங் செய்து சாதனை படைத்துள்ளது.

    முன்னதாக, கடந்த 2014 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி சேசிங்கில் 171 ரன்களை எடுத்து வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

    • அபிஷேக் சர்மா 11 பந்தில் 10 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
    • இஷான் கிஷன் 6 பந்தில் 10 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

    கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்று வரும் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக 196 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா விளையாடி வருகிறது.

    அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். முதல் ஓவரை சுழற்பந்து வீச்சு மூலம் வெஸ்ட் இண்டீஸ் தொடங்கியது. இந்த ஓவரில் அபிஷேக் சர்மா ஒரு பவுண்டரி அடித்தார்.

    2-வது ஓவரில் அபிஷேக் சர்மா ஒரு பவுண்டரி அடித்தார். 3-வது ஓவரை ஹொசைன் வீசினார். இந்த ஓவரில் சஞ்சு சாம்சன் 2 சிக்ஸ், ஒரு பவுண்டரி அடித்தார். ஆனால் கடைசி பந்தில் அபிஷேக் சர்மா ஆட்டமிழந்தார். அவர் 11 பந்தில் 10 ரன்கள் எடுத்தார்.

    அடுத்து வந்த இஷான் கிஷ் 4-வது ஓவரில் ஒரு பவுண்டரி அடித்தார். 5-வது ஓவரில் ஒரு பவுண்டரி அடித்து, அடுத்த பந்தில் ஆட்டமிழந்தார். இவர் 6 பந்தில் 2 பவுண்டரியுடன் 10 ரன்கள் எடுத்து வெளியேறினார்.

    3-வது விக்கெட்டுக்கு சஞ்சு சாம்சன் உடன் சூர்யகுமார் யாதவ் ஜோடி சேர்ந்தார். இந்தியா பவர்பிளேயான முதல் 6 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 53 ரன்கள் எடுத்துள்ளது.

    • முதல் அரையிறுதி போட்டி மார்ச் 4-ந்தேதி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடக்கிறது.
    • 2-வது அரையிறுதி 5-ந்தேதி மும்பை வான்கடே மைதானத்தில் நடக்கிறது.

    இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பையின் சூப்பர் 8 சுற்று போட்டிகள் இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் போட்டியுடன் நிறைவடைகிறது. அதன்பின் அரையிறுதி போட்டிகள் நடைபெற இருக்கின்றன.

    அரையிறுதி போட்டிகள் கொல்கத்தா ஈடன் கார்டன் மற்றும் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் அரையிறுதி மார்ச் 4-ந்தேதி ஈடன் கார்டன் மைதானத்தில் இரவு 7 மணிக்கு நடைபெற இருக்கிறது.

    2-வது அரையிறுதி போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் மார்ச் 5-ந்தேதி இரவு 7 மணிக்கு நடைபெற இருக்கிறது.

    குரூப் 8 சுற்றில் 8 அணிகள் இரண்டு குரூப்களாக பிரிக்கப்பட்டன. குரூப் 1-ல் இந்தியா, வெஸ்ட் இண்டீஸ், இந்தியா, ஜிம்பாப்வே அணிகள் இடம் பிடித்திருந்தது. இதில் தென்ஆப்பிரிக்கா 3 போட்டிகளிலும் வெற்றி பெற்று 6 புள்ளிகளுடன் முதல் இடத்தை பிடித்துள்ளது. ஈடன்கார்டனில் தற்போது நடைபெற்று வரும் இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான போட்டியில் வெற்றி பெறும் அணி 2-வது இடத்தை பிடிக்கும்.

    குரூப் 2-ல் இங்கிலாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான், இலங்கை அணிகள் இடம் பிடித்திருந்தன. இங்கிலாந்து 3 போட்டிகளிலும் வெற்றி பெற்று முதல் இடத்தை பிடித்துள்ளது. நியூசிலாந்து ஒரு வெற்றி, ஒரு முடிவு இல்லை மூலம் 3 புள்ளிகள் பெற்று ரன்ரேட் அடிப்படையில் பாகிஸ்தானை பின்னுக்குத் தள்ளி 2-வது இடம் பிடித்துள்ளது.

    குரூப் 1-ல் முதல் இடம் பிடித்த அணியும், குரூப் 2-ல் 2-வது இடம் பிடித்த அணியும் முதல் அரையிறுதியில் மோதும்.

    குரூப் 2-ல் முதல் இடம் பிடித்த அணியும், குரூப் 1-ல் 2-வது இடம் பிடித்த அணியும் 2-வது அரையிறுதியில் மோதும்.

    அதன்படி மார்ச் 4-ந்தேதி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறும் முதல் அரையிறுதியில் குரூப் 1-ல் முதல் இடம் பிடிததுள்ள தென்ஆப்பிரிக்காவும், குரூப் 2-ல் 2-வது இடம் பிடித்துள்ள நியூசிலாந்து அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன.

    மார்ச் 5-ந்தேதி மும்பை வான்கடே மைதானத்தில் குரூப் 2-ல் முதலிடம் பிடித்த இங்கிலாந்தும், இன்றைய போட்டியில் வெற்றி பெற்று குரூப் 1-ல் 2-வது இடம் பிடிக்கும் இந்தியா அல்லது வெஸ்ட் இண்டீஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தும்.

    மார்ச் 8-ந்தேதி அகமதாபாத்தில் இறுதிப் போட்டி நடைபெற இருக்கிறது.

    • 17.5 ஓவரில் தென்ஆப்பிரிக்கா இலக்கை எட்டியது.
    • ஜார்ஜ் லிண்டே ஆட்டமிழக்காமல் 21 பந்தில் 30 ரன்கள் விளாசினார்.

    டி20 உலகக் கோப்பை சூப்பர் 8 சுற்றில் தென்ஆப்பிரிக்கா தனது கடைசி லீக்கில் இன்று ஜிம்பாப்வே அணியை எதிர்கொண்டது. டெல்லியில் நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே 7 விக்கெட் இழப்பிற்கு 153 ரன்கள் சேர்த்தது. சிகந்தர் ரசா அதிகபட்சமாக 73 ரன்கள் அடித்தார்.

    பின்னர் 154 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் தென்ஆப்பிரிக்கா களம் இறங்கியது. மார்க்கிராம் 4 ரன்களிலும், டி காக் டக்அவுட்டிலும் ஆட்டமிழந்தனர். அதன்பின் வந்த ரியான் ரிக்கெல்டன் 22 பந்தில் 31 ரன்களும், டெவால்டு பிரேவிஸ் 18 பந்தில் 42 ரன்களும் எடுத்து அணிக்கு வலு சேர்த்தனர்.

    மில்லர் 16 பந்தில் 22 ரன்கள் எடுத்தார். டிரிஸ்டியன் ஸ்டப்ஸ் 24 பந்தில் 21 ரன்களும், ஜார்ஜ் லிண்டே 21 பந்தில் 30 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருக்க தென்ஆப்பிரிக்கா 17.5 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 154 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்த வெற்றியின் மூலம் எந்த போட்டியிலும் தோல்வியடையாமல் தென்ஆப்பிரிக்கா அரையிறுதியில் விளையாட உள்ளது.

    • ஐசிசி தொடரில் ஒவ்வொரு போட்டியும் முக்கியமானவை.
    • ஏனென்றால் ஒரு போட்டியில் தோல்வியடைந்தால், தொடரில் இருந்து வெளியேறியதாக உணர வேண்டியிருக்கும்.

    டி20 உலகக் கோப்பையில் பாகிஸ்தான் அணி தனது போட்டிகள் அனைத்தையும் இலங்கையிலேயே விளையாடியது. இது அந்த அணிக்கு சாதகம் என பார்க்கப்பட்டது. ஆனாலும், அந்த அணியால் அரையிறுதிக்கு முன்னேற முடியவில்லை. நேற்றைய போட்டியில் இலங்கையை 147 ரன்னுக்குள் கட்டுப்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் அரையிறுதி வாய்ப்பை இழந்தது.

    தொடர்ந்து 4-வது முறையாக ஐசிசி தொடரில் அரையிறுதிக்கு முன்னேற முடியாமல் பாகிஸ்தான் ஏமாற்றம் அடைந்துள்ளது. இந்த நிலையில் நெருக்கடியான நிலையில் சரியான முடிவு எடுக்கவில்லை என பாகிஸ்தான் கேப்டன் சல்மான் ஆகா தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக சல்மான் ஆகா கூறியதாவது:-

    ஐசிசி தொடரில் ஒவ்வொரு போட்டியும் முக்கியமானவை. ஏனென்றால் ஒரு போட்டியில் தோல்வியடைந்தால், தொடரில் இருந்து வெளியேறியதாக உணர வேண்டியிருக்கும். ஆகவே, நெருக்கடிக்கு உள்ளாகும்போது, சரியான முடிவு எடுக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.

    கடந்த 4 ஐசிசி தொடர்களில் நாங்கள் அரையிறுதிக்கு முன்னேறவில்லை. இதற்கு முக்கிய காரணம் நெருக்கடியான நேரத்தில் எங்களுடைய பேட்டர்கள் தங்களுடைய ஆட்டத்தை மேம்படுத்த வேண்டும் என்பதுதான். நெருக்கடி அதிகரிக்கும்போது, முடிவு எடுக்கும் விசயத்தில் வளர்ச்சி அடைய வேண்டும். இது மிகவும் முக்கியம்.

    ஏனென்றால், நெருக்கடி இருக்கும் போதெல்லாம், எங்களுடைய முடிவு அவ்வளவு சிறப்பாக இருக்கவில்லை. உலகக் கோப்பை அல்லது ஐசிசி தொடர் என்று வரும்பொது, அங்கே நெருக்கடி இருக்கும். நீங்கள் எடுக்கும் முடிவு சரியானதாக இல்லை என்றால், இதுபோன்றுதான் நடக்கும்.

    இவ்வாறு சல்மான் ஆகா தெரிவித்தார்.

    • சிகந்தர் ரசா 43 பந்தில் 73 ரன்கள் விளாசினார்.
    • மடாண்டே 20 பந்தில் 26 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    டி20 உலகக் கோப்பை சூப்பர் 8 சுற்றில் தென்ஆப்பிரிக்கா- ஜிம்பாப்வே இடையிலான போட்டி டெல்லியில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற ஜிம்பாப்வே பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி ஜிம்பாப்வே அணியின் மருமணி, பிரையன் பென்னெட் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். பென்னெட் 15 ரன்னிலும், மருமணி 7 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.

    அதன்பின் வந்த தியோன் மையர்ஸ் 11 ரன்னில் ஏமாற்றம் அடைந்தார். ஆனால் கேப்டன் சிகந்தர் ரசா அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 43 பந்தில 73 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார். மடாண்டே 20 பந்தில் 26 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருக்க ஜிம்பாப்வே அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 153 ரன்கள் எடுத்துள்ளது.

    தென்ஆப்பிரிக்கா அணி சார்பில் மபாகா மற்றும் போஸ் தலா 2 விக்கெட்டும் லிண்டே, லுங்கி நிகிடி, நோர்ஜே ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

    ×