என் மலர்
நீங்கள் தேடியது "T20 World Cup"
- இந்தத் தொடரில் இந்தியா, ஆஸ்திரேலியா, இலங்கை உள்பட 6 அணிகள் பங்கேற்றன.
- இறுதிப்போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி நேபாளத்தை வீழ்த்தியது.
புதுடெல்லி:
இந்தியா, இலங்கையில், பார்வையற்றோர் பெண்களுக்கான டி20 உலகக் கோப்பை முதல் சீசன் நடைபெற்றது.
இந்தத் தொடரில் இந்தியா, ஆஸ்திரேலியா, இலங்கை உள்பட 6 அணிகள் பங்கேற்றன. இத்தொடரில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. இறுதிப்போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி நேபாளத்தை வீழ்த்தியது.
இந்நிலையில், பார்வையற்றோருக்கான டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய வீராங்கனைகளை பிரதமர் நரேந்திர மோடி நேரில் அழைத்துப் பாராட்டினார். அவர்களுக்கு இனிப்பு வழங்கி வாழ்த்துத் தெரிவித்த அவர், கிரிக்கெட் பேட் பரிசாக வழங்கினார்.
இதுதொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில், பார்வையற்ற பெண்களுக்கான முதல் டி20 உலகக் கோப்பையை வென்று வரலாறு படைத்த இந்திய கிரிக்கெட் அணிக்கு வாழ்த்துக்கள். இது உண்மையிலேயே ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க விளையாட்டு சாதனை, கடின உழைப்பிற்கு ஓர் எடுத்துக்காட்டு. அணியின் எதிர்கால முயற்சிக்கு எனது வாழ்த்துக்கள். இந்த சாதனை வருங்கால சந்ததியினருக்கு ஊக்கம் அளிக்கும் என தெரிவித்துள்ளார்.
- டி20 உலக கோப்பையில் 20 நாடுகள் பங்கேற்கின்றன
- இந்தியாவில் அகமதாபாத், கொல்கத்தா, மும்பை, சென்னை, புதுடெல்லி ஆகிய இடங்களில் போட்டி நடைபெறுகிறது.
10-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு பிப்ரவரி 7-ந் தேதி முதல் மார்ச் 8-ந் தேதி வரை இந்தியா, இலங்கையில் நடைபெறுகிறது.
இந்நிலையில், 20 ஓவர் உலக கோப்பைக்கான போட்டி அட்டவணை மும்பையில் இன்று அறிவிக்கப்பட்டது. .
தரவரிசை அடிப்படையில் நடப்பு சாம்பியன் இந்தியாவும், பாகிஸ்தானும் ஒரே பிரிவில் இடம் பெற்றுள்ளது. இந்த பிரிவில் நெதர்லாந்து, நமீபியா, அமெரிக்கா ஆகிய அணிகளும் இடம் பெற்றுள்ளது.
20 ஓவர் உலக கோப்பை போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் பிப்ரவரி 15-ந்தேதி கொழும்பில் மோதுகின்றன.
இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் அமெரிக்காவை எதிர்கொள்கிறது. பிப்ரவரி 7-ந்தேதி மும்பையில் இந்த ஆட்டம் நடைபெறுகிறது. அதை தொடர்ந்து நமீபியாவுடன் 12-ந்தேதி டெல்லியிலும், கடைசி லீக் ஆட்டத்தில் நெதர்லாந்துடன் 18-ந்தேதி அகமதாபாத்திலும் மோதுகிறது.
இந்நிலையில், 2026 டி20 உலக கோப்பை லீக் போட்டிகள் உட்பட மொத்தம் 7 போட்டிகள் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்க உள்ளன. எனினும் இந்தியா விளையாடும் போட்டி சென்னையில் கிடையாது. அதனால் தமிழக ரசிகர்கள் சோகம் அடைந்துள்ளனர்.
சென்னையில் நடக்கும் போட்டிகள்:
பிப்ரவரி 8: நியூசிலாந்து VS ஆப்கானிஸ்தான்
பிப்ரவரி 10: நியூசிலாந்து VS ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (UAE)
பிப்ரவரி 13: அமெரிக்கா (USA) vs நெதர்லாந்து
பிப்ரவரி 15: அமெரிக்கா (USA) vs நமீபியா
பிப்ரவரி 17: நியூசிலாந்து Vs கனடா
பிப்ரவரி 19: ஆப்கானிஸ்தான் vs கனடா
பிப்ரவரி 26: X1 vs X2 (சூப்பர் 8)
- டி20 உலக கோப்பையில் 20 நாடுகள் பங்கேற்கின்றன
- இந்தியாவில் அகமதாபாத், கொல்கத்தா, மும்பை, சென்னை, புதுடெல்லி ஆகிய இடங்களில் போட்டி நடைபெறுகிறது.
10-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு பிப்ரவரி 7-ந் தேதி முதல் மார்ச் 8-ந் தேதி வரை இந்தியா, இலங்கையில் நடைபெறுகிறது.
இந்நிலையில், 20 ஓவர் உலக கோப்பைக்கான போட்டி அட்டவணை மும்பையில் இன்று அறிவிக்கப்பட்டது. .
தரவரிசை அடிப்படையில் நடப்பு சாம்பியன் இந்தியாவும், பாகிஸ்தானும் ஒரே பிரிவில் இடம் பெற்றுள்ளது. இந்த பிரிவில் நெதர்லாந்து, நமீபியா, அமெரிக்கா ஆகிய அணிகளும் இடம் பெற்றுள்ளது.
20 ஓவர் உலக கோப்பை போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் பிப்ரவரி 15-ந்தேதி கொழும்பில் மோதுகின்றன. இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் அமெரிக்காவை எதிர்கொள்கிறது. பிப்ரவரி 7-ந்தேதி மும்பையில் இந்த ஆட்டம் நடைபெறுகிறது. அதை தொடர்ந்து நமீபியாவுடன் 12-ந்தேதி டெல்லியிலும், கடைசி லீக் ஆட்டத்தில் நெதர்லாந்துடன் 18-ந்தேதி அகமதாபாத்திலும் மோதுகிறது.
இந்நிலையில், 2026 டி20 உலக கோப்பைக்கான அதிகாரபூர்வ விளம்பர தூதராக ரோகித் சர்மா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
- டி20 உலக கோப்பையில் 20 நாடுகள் பங்கேற்கின்றன.
- இந்தியாவில் அகமதாபாத், கொல்கத்தா, மும்பை, சென்னை, புதுடெல்லி ஆகிய இடங்களில் போட்டி நடைபெறுகிறது.
10-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு பிப்ரவரி 7-ந் தேதி முதல் மார்ச் 8-ந் தேதி வரை இந்தியா, இலங்கையில் நடைபெறுகிறது.
இதில் 20 நாடுகள் பங்கேற்கின்றன. இவை 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் 5 நாடுகள் இடம் பெற்றுள்ளன. 'லீக்' முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும். அணிகள் 'சூப்பர்-8' சுற்றுக்கு தகுதி பெறும். இந்த சுற்றில் ஆடும் 8 நாடுகளும் 2 பிரிவாக பிரிக்கப்படும். இரண்டு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு முன்னேறும்.
40 லீக் ஆட்டம், 'சூப்பர் 8' சுற்றில் 12 போட்டி உள்பட மொத்தம் 55 ஆட்டங்கள் நடக்கிறது. இந்தியாவில் அகமதாபாத், கொல்கத்தா, மும்பை, சென்னை, புதுடெல்லி ஆகிய இடங்களிலும் இலங்கையில் கொழும்பு கண்டியிலும் போட்டி நடைபெறுகிறது.
இந்நிலையில், 20 ஓவர் உலக கோப்பைக்கான போட்டி அட்டவணை மும்பையில் இன்று அறிவிக்கப்பட்டது. தரவரிசை அடிப்படையில் நடப்பு சாம்பியன் இந்தியாவும், பாகிஸ்தானும் ஒரே பிரிவில் இடம் பெற்றுள்ளது. இந்த பிரிவில் நெதர்லாந்து, நமீபியா, அமெரிக்கா ஆகிய அணிகளும் இடம் பெற்றுள்ளது.
20 ஓவர் உலக கோப்பை போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் பிப்ரவரி 15-ந்தேதி கொழும்பில் மோதுகின்றன.
இரு அணிகளும் சமீபத்தில் ஆசிய கோப்பை போட்டியில் மோதின. துபாயில் 3 முறை மோதிய ஆட்டத்திலும் இந்தியாவே வெற்றி பெற்றது. இந்த தொடரின் போது பகல்காம் சம்பவம் எதிரொலித்தது. இந்திய அணி பாகிஸ்தான் வீரர்களுடன் கை குலுக்க மறுத்தது. பாகிஸ்தான் மந்திரியிடம் இருந்து ஆசிய கோப்பையை வாங்க மறுத்தது போன்றவற்றால் சர்ச்சை வெடித்தது.
அமெரிக்காவில் கடந்த 2024-ம் ஆண்டு நடந்த 20 ஓவர் உலக கோப்பையிலும் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் ஒரே பிரிவில் இடம்பெற்று இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய அணி தொடக்க ஆட்டத்தில் அமெரிக்காவை எதிர்கொள்கிறது. பிப்ரவரி 7-ந்தேதி மும்பையில் இந்த ஆட்டம் நடைபெறுகிறது. அதை தொடர்ந்து நமீபியாவுடன் 12-ந்தேதி டெல்லியிலும், கடைசி லீக் ஆட்டத்தில் நெதர்லாந்துடன் 18-ந்தேதி அகமதாபாத்திலும் மோதுகிறது.
இலங்கை, ஆஸ்திரேலியா, ஜிம்பாப்வே, அயர்லாந்து, ஓமன் அணிகள் மற்றொரு பிரிவிலும், இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், வங்க தேசம், நேபாளம், இத்தாலி இன்னொரு பிரிவிலும் இடம் பெறுகின்றன. தென்ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, ஆப்கானிஸ் தான் ஐக்கிய அரபு எமிரேட்ஸ், கனடா ஆகிய அணிகள் இன்னொரு பிரிவிலும் இடம்பெறுகின்றன.
இந்திய அணி சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றால் அகமதாபாத், சென்னை, கொல்கத்தா ஆகிய நகரங்களில் போட்டி நடைபெறும். அரை இறுதிக்கு முன்னேறினால் மும்பையில் நடைபெறும். மற்றொரு அரை இறுதி கொழும்பு அல்லது கொல்கத்தாவில் நடைபெறும்.
இலங்கை, பாகிஸ்தான் அணிகளின் தகுதியை பொறுத்து இடங்கள் முடிவாகும். இறுதி போட்டி அகமதாபாத்தில் நடத்தப்படுகிறது. ஒரு வேளை பாகிஸ்தான் தகுதி பெற்றால் கொழும்பில் போட்டி நடைபெறும்.
- முதலில் விளையாடிய நேபாளம் அணி 114 ரன்கள் மட்டுமே அடித்தது.
- இந்தியா 12 ஓவரில் இலக்கை எட்டி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
பார்வையற்றோர் பெண்கள் டி20 உலக கோப்பை கிரிக்கெட் இலங்கையில் நடைபெற்றது. இறுதிப் போட்டியில் இந்தியா- நேபாளம் அணிகள் மோதின. இதில் இந்திய அணி வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது.
முதலில் விளையாடிய நேபாளம் அணி 5 வி்க்கெட் இழப்பிற்கு 114 ரன்கள் மட்டுமே அடித்தது. நேபாளம் அணியால் ஒரேயொரு பவுண்டரி மட்டுமே அடிக்க முடிந்தது. பின்னர் இந்திய அணி 12 ஓவரில் இலக்கை எட்டி 7 விக்கெட் வித்தியாசத்தில வெற்றி பெற்றது. புலா சரேன் இந்திய அணி சார்பில் 44 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
உலக கோப்பையை வாங்கிய பார்வையற்றோருக்கான இந்திய மகளிர் அணி கேப்டன் ரோகித் சர்மா ஸ்டைலில் கொண்டாடியது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
- மகேந்திர சிங் தோனி தலைமையில் இந்திய அணி 2007-ல் டி20 உலகக்கோப்பை வென்றது.
- அதற்கு பிறகு 16 ஆண்டுகளாக கோப்பை வெல்லவில்லை.
இந்தியாவின் பிரபல டயர் உற்பத்தி நிறுவனமான சிஏட் நிறுவனத்தால் சிஏட் விருதுகள் ஆண்டு தோறும் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2025 CEAT கிரிக்கெட் விருதுகள் வழங்கப்பட்டது. அந்த வகையில் இந்த விழாவில் சஞ்சு சாம்சனுக்கு சிறந்த டி20 பேட்டர் விருது வழங்கப்பட்டது.
அப்போது "டி20 உலகக்கோப்பையை வெல்லும் வெற்றி பார்முலாவை கண்டறிய இந்திய அணிக்கு 16 ஆண்டுகள் ஆனது. அதற்கு ரோகித் பையாவிற்கு நன்றி" என தெரிவித்தார்.
அவர் கூறுவது போல, மகேந்திர சிங் தோனி தலைமையில் 2007 டி20 உலகக்கோப்பை வென்ற இந்திய அணி, அதற்கு பிறகு 16 ஆண்டுகளாக கோப்பை வெல்லவில்லை. அதுமட்டுமில்லாமல் 2013 சாம்பியன்ஸ் டிராபி வென்ற பிறகு 11 ஆண்டுகளாக எந்தவிதமான ஐசிசி கோப்பையையும் இந்திய அணியால் வெல்ல முடியவில்லை.
இந்தசூழலில் 11 ஆண்டுகளாக கோப்பைக்காக காத்திருந்த இந்திய அணிக்கு 2024 டி20 உலகக்கோப்பை மற்றும் 2025 சாம்பியன்ஸ் டிராபி கோப்பை இரண்டையும் கேப்டனாக ரோகித் சர்மா வென்றுகொடுத்தார். இந்த 2 கோப்பைகளையும் வெறும் 8 மாத இடைவெளியில் இந்திய அணி தட்டிச்சென்றது குறிப்பிடத்தக்கது.
- சுழற்பந்து வீச்சாளராக ஹர்பஜன் சிங், குல்தீப் யாதவ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
- வேகப்பந்து வீச்சாளராக பும்ரா, அர்ஷ்தீப் சிங் உள்ளனர்.
தமிழக கிரிக்கெட் வீரரும் இந்திய அணியின் முன்னாள் வீரருமான தினேஷ் கார்த்திக். ஒட்டுமொத்த கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார். அவர் தற்போது கிரிக்கெட் வர்ணனையாளராக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் இந்திய அணியின் டி20 உலக கோப்பைக்கான ஆல் டைம் லெவன் அணியை தினேஷ் கார்த்திக் அறிவித்துள்ளார்.
அதில் தற்போதைய இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளரான கவுதம் கம்பீருக்கு இடம் அளிக்கவில்லை.
இந்த அணியின் கேப்டனாகவும் விக்கெட் கீப்பராகவும் எம் எஸ் தோனியை அவர் தேர்வு செய்துள்ளார்.
தொடக்க வீரர்களாக ரோகித் மற்றும் விராட் கோலி இடம் பெற்றுள்ளனர். அதனை தொடர்ந்து சூர்யகுமார் உள்ளார். ஆல் ரவுண்டர்கள் வரிசையில் யுவராஜ், ஹர்திக் பாண்ட்யா, ஜடேஜா ஆகியோருக்கு இடம் வழங்கியுள்ளார்.
மேலும் சுழற்பந்து வீச்சாளராக ஹர்பஜன் சிங், குல்தீப் யாதவ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். வேகப்பந்து வீச்சாளராக பும்ரா, அர்ஷ்தீப் சிங் உள்ளனர்.
தினேஷ் கார்த்திக் தேர்வு செய்த ஆல் டைம் டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி:-
ரோகித் சர்மா, விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், யுவராஜ் சிங், எம்எஸ் தோனி, ஹர்திக் பாண்ட்யா, ஜடேஜா, ஹர்பஜன் சிங், குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங், பும்ரா.
- இந்தியா, இலங்கையில் அடுத்த ஆண்டு டி20 உலகக் கோப்பை தொடர் நடைபெறுகிறது.
- கடந்த 2021 டி20 உலகக் கோப்பையிலும் தோனி இந்திய அணி ஆலோசகராக செயல்பட்டிருந்தார்.
மும்பை:
இந்தியா மற்றும் இலங்கையில் அடுத்த ஆண்டு டி20 உலகக் கோப்பை தொடர் நடைபெறுகிறது. இதில் மொத்தம் 20 அணிகள் விளையாடுகின்றன. தொடரை நடத்தும் அடிப்படையில் நடப்பு சாம்பியன் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் தானாகவே தகுதி பெற்றன.
இந்த தொடரில் வெற்றி பெற்று கோப்பையை தக்கவைக்கும் நோக்கில் இந்திய அணி பல்வேறு முக்கிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. முதல் கட்டமாக சுப்மன் கில்லை இந்திய டி20 அணியின் புதிய துணை கேப்டனாக நியமித்துள்ளது.
இந்நிலையில், டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியின் ஆலோசகராக முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனியை நியமிக்க பி.சி.சி.ஐ. முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியானது. இதுதொடர்பாக தோனியை பி.சி.சி.ஐ. நிர்வாகம் அணுகியுள்ளதாகக் கூறப்படுகிறது.
ஆனாலும், இதற்கு தோனி என்ன முடிவெடுத்துள்ளார் என்பது குறித்து எந்த தகவலும் இல்லை.
ஏற்கனவே, எம்.எஸ்.தோனி 2021-ல் நடந்த டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணியின் ஆலோசகராக செயல்பட்டார். ஆனால் அந்த தொடரில் இந்திய அணி லீக் சுற்றோடு நடையை கட்டியது.
- இந்தியா மற்றும் இலங்கையில் அடுத்தாண்டு டி20 உலகக் கோப்பை நடக்கிறது
- டி20 உலககோப்பைக்கு கனடா கடந்த மாதம் தகுதி பெற்றது.
10-வது 20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு இந்தியா மற்றும் இலங்கையில் நடக்கிறது. இதில் 20 நாடுகள் பங்கேற்கின்றன.
போட்டியை நடத்தும் இந்தியா, இலங்கை மற்றும் ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், பாகிஸ்தான், நியூசிலாந்து, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான், அமெரிக்கா, அயர்லாந்து ஆகிய 12 நாடுகள் நேரடியாக விளையாடுகின்றன.
மீதியுள்ள 8 நாடுகள் தகுதி சுற்று மூலம் தேர்வாகும். அதன்படி கனடா கடந்த மாதம் தகுதி பெற்றது. தற்போது இத்தாலி, நெதர்லாந்து அணிகள் 20 ஓவர் உலக கோப்பைக்கு தகுதி பெற்றுள்ளன. இத்தாலி முதல் முறையாக உலக கோப்பை போட்டிக்கு தகுதி பெற்று வரலாறு படைத்தது. இன்னும் 5 நாடுகள் தகுதி பெறுவதற்கான தகுதிச்சுற்று போட்டிகள் நடைபெறவுள்ளது.
- 10-வது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு இந்தியா மற்றும் இலங்கையில் நடக்கிறது.
- இந்த தொடரில் 20 அணிகள் பங்கேற்கிறது.
ஆன்டாரியோ:
20 அணிகள் பங்கேற்கும் 10-வது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு (2026) பிப்ரவரி, மார்ச் மாதங்களில் இந்தியா மற்றும் இலங்கையில் நடக்கிறது. இதற்கான தகுதி சுற்று போட்டிகள் தற்போது நடந்து வருகிறது. இதில் 4 அணிகள் இடையிலான அமெரிக்க மண்டலத்துக்கான தகுதி சுற்று கனடாவின் ஆன்டாரியோ நகரில் நடக்கிறது.
இதில் நடந்த ஒரு ஆட்டத்தில் கனடா அணி, பஹாமாசை 57 ரன்னில் சுருட்டியதுடன், அந்த இலக்கை 5.3 ஓவர்களிலேயே எட்டிப்பிடித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
தொடர்ந்து 5-வது வெற்றியை ருசித்த கனடா அணி புள்ளி பட்டியலில் முதலிடத்தை உறுதி செய்ததுடன், டி20 உலகக் கோப்பை போட்டிக்கு 13-வது அணியாக தகுதி பெற்றது.
- வான்கடே மைதானத்தில் மும்பை - குஜராத் அணி வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
- சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் சிராஜ் இடம்பெறவில்லை.
ஐபிஎல் தொடரில் இன்றிரவு மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடைபெறும் 56-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ்-குஜராத் டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
இதற்காக வான்கடே மைதானத்தில் மும்பை - குஜராத் அணி வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், ஐசிசி டி20 உலக கோப்பை தொடரில் சிறப்பாக விளையாடிய குஜராத் வீரர் முகமது சிராஜ்க்கு பிசிசிஐ சார்பில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா மோதிரத்தை அணிவித்தார்.
இது தொடர்பான வீடியோவை பிசிசிஐ தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
டி20 உலக கோப்பையில் சிறப்பாக செயல்பட்ட சிராஜ், சாம்பியன்ஸ் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம்பெறவில்லை.
அப்போது, சிராஜின் நீக்கம் குறித்து பேசிய இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா, "சிராஜ் புதிய பந்தில் மட்டும் சிறந்த செயல்திறனைக் கொண்டுள்ளார். இதனால் முகமது சிராஜின் திறன் சற்று குறைவதாக நாங்கள் உணர்கிறோம். அவர் தனது வாய்ப்பை தவறவிட்டது முற்றிலும் துரதிர்ஷ்டவசமானது. என்று தெரிவித்திருந்தார்.
- முதல் ஆட்டத்தில் டக் வொர்த் லீவிஸ் முறைப்படி அயர்லாந்து வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
- நியூசிலாந்து-ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு தலா ஒரு புள்ளி பகிர்ந்து அளிக்கப்பட்டது
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர்-12 சுற்று ஆட்டங்கள் நடைபெறுகின்றன. இன்று மெல்போர்னில் நடைபெற்ற முதல் போட்டியில் இங்கிலாந்து-அயர்லாந்து அணிகள் மோதின. மழையால் தாமதமாக தொடங்கிய இந்த போட்டியில், முதலில் ஆடிய அயர்லாந்து அணி 157 ரன்னில் 'ஆல் அவுட்' ஆனது. அடுத்து ஆடிய இங்கிலாந்து அணி 14.3 ஓவரில் 5 விக்கெட்டுகளை இழந்து 105 ரன்கள் எடுத்திருந்தபோது மீண்டும் மழை பெய்ததால் ஆட்டம் பாதிக்கப்பட்டது. இதனால் டக் வொர்த் லீவிஸ் முறைப்படி அயர்லாந்து 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
இரண்டாவது ஆட்டத்தில் குரூப்-1ல் உள்ள நியூசிலாந்து-ஆப்கானிஸ்தான் அணிகள் விளையாடுவதாக இருந்தது. டாஸ் போடுவதற்கு முன்பே மழை பெய்யத் தொடங்கியது. மழை விட்டதும் போட்டி தாமதமாக தொடங்கும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் இடைவிடாது மழை பெய்தது. எனவே, டாஸ் கூட போடப்படாமல் ஆட்டம் ரத்து செய்யப்பட்டது. இதையடுத்து இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளி பகிர்ந்தளிக்கப்பட்டது.






