என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    டி20 உலகக் கோப்பை: வெற்றிக்கு பிறகு சஞ்சு சாம்சன் கூறியது என்ன?
    X

    டி20 உலகக் கோப்பை: வெற்றிக்கு பிறகு சஞ்சு சாம்சன் கூறியது என்ன?

    • வெஸ்ட் இண்டீஸ் 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 195 ரன்கள் குவித்தது.
    • இந்தியா 19.2 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 199 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

    கொல்கத்தா:

    டி20 உலகக் கோப்பை தொடரின் 52வது லீக் ஆட்டத்தில் இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின. முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 195 ரன்கள் குவித்தது. ரோஸ்டன் சேஸ் 40 ரன்னும், ஹோல்டர் 37 ரன்னும், பாவெல் 34 ரன்னும் எடுத்தனர்.

    அடுத்து களமிறங்கிய இந்தியா 19.2 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 199 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றதுடன், அரையிறுதிக்கும் முன்னேறி அசத்தியது. சஞ்சு சாம்சன் அதிரடியாக ஆடை 97 ரன்கள் குவித்து இந்திய அணியை வெற்றிபெற வைத்தார்.

    இந்நிலையில், ஆட்ட நாயகன் விருது வென்ற சஞ்சு சாம்சன் கூறியதாவது:

    கிரிக்கெட் விளையாடத் தொடங்கிய நாளிலிருந்தே இந்திய அணிக்காக விளையாட வேண்டும் என்ற கனவோடுதான் இருந்தேன். அந்தக் கனவுக்காக காத்திருந்த நாள் இதுதான்.

    உண்மையிலேயே இந்த இன்னிங்ஸ் மூலம் அணியை வெற்றி பெற வைத்தது மகிழ்ச்சி அளிக்கிறது. இது என் வாழ்க்கையிலேயே மிகச் சிறந்த நாட்களில் ஒன்று.

    என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கை மிகவும் ஸ்பெஷல் ஆனது. என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையில் நான் பல உச்சங்களையும், சரிவுகளையும் சந்தித்து இருக்கின்றேன். இதன் மூலம் என் திறமை மீது எனக்கே பலமுறை சந்தேகம் வந்திருக்கிறது. என்னால் கிரிக்கெட்டில் வெற்றி பெற முடியுமா என்றெல்லாம் தோன்றுகிறது. ஆனால் இன்று கடவுள் எனக்கு ஆசீர்வாதம் தந்திருக்கின்றார்.

    அதற்காக நான் நன்றி தெரிவித்துக் கொள்கின்றேன். நான் இந்த டி20 கிரிக்கெட் போட்டியில் பல ஆண்டுகளாக விளையாடி வருகின்றேன்.

    கடந்த 12 ஆண்டுகளாக ஐபிஎல் போட்டிகளிலும், 10 ஆண்டுகளாக இந்திய அணிக்கும் விளையாடுகின்றேன். ஆனால் நான் வெறும் 60 போட்டிகளில் தான் விளையாடி இருப்பேன். ட்ரெஸ்ஸிங் ரூமில் இருந்து 100 போட்டிகளுக்கு மேல் பார்த்திருக்கின்றேன்.

    அதில் ரோகித் சர்மா, தோனி, விராட் கோலி போன்ற ஜாம்பவான்கள் எல்லாம் எப்படி விளையாடுவார்கள் என்பதைப் பார்த்து கற்றுக் கொண்டிருக்கின்றேன்.

    கூடுதலாக, என்னுடைய அனுபவத்தையும் சேர்த்து சூழலுக்கு ஏற்ப விளையாட வேண்டும் என்பதைப் புரிந்துகொண்டு இன்று நான் ரன்கள் சேர்த்தேன். ஆனால் இவ்வளவு பெரிய இன்னிங்ஸ் ஆடுவேன் என்று நான் நினைக்கவில்லை. ஒரு தருணத்தில் ஒரு பந்து என்ற கவனம் செலுத்தி, பந்துக்கு ஏற்ற வகையில் விளையாடினேன்.

    இந்தப் போட்டி கொஞ்சம் வித்தியாசமானது. நான் எப்போதெல்லாம் அதிரடி காட்ட முயற்சி செய்தனோ, அப்போதெல்லாம் விக்கெட்டுகள் விழுந்தது. எனவே இன்று கொஞ்சம் அமைதி காத்து பின் அதிரடி காட்ட வேண்டும் என நினைத்தேன். உண்மையில் என்னுடைய வாழ்க்கையில் மிகச் சிறந்த நாள் என தெரிவித்தார்.

    Next Story
    ×