என் மலர்
நீங்கள் தேடியது "சஞ்சு சாம்சன்"
- திலக் வர்மா மோசமான ஷாட் விளையாடி அவுட் ஆனார்.
- இந்தியா பெரிய ஸ்கோரை துரத்த தொடர்ந்து போராடுகிறது.
10-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வருகிறது.
சூப்பர்-8 சுற்றில் இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவிடம் 76 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. அரை இறுதிக்கு இந்தியா தகுதி பெற எஞ்சி உள்ள 2 ஆட்டங்களிலும் (ஜிம்பாப்வே, வெஸ்ட் இண்டீஸ்) கண்டிப்பாக வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
இந்நிலையில், இந்திய அணியின் பலவீனங்களை முன்னாள் கேப்டன் ஸ்ரீகாந்த் பட்டியலிட்டார்.
முன்னாள் கேப்டன் ஸ்ரீகாந்த் கூறியதாவது:-
சஞ்சு சாம்சன் இந்திய அணியின் பிளேயிங் 11-க்குள் வர வேண்டும் என்றால், திலக் வர்மாவுக்கு இடம் கிடைக்காது. தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் திலக் வர்மா மோசமான ஷாட் விளையாடி அவுட் ஆனார். அப்படி ஒரு ஷாட்டை விளையாடிய பிறகு அவர் களத்தில் இருக்க தகுதியற்றவராக இருந்தார்.
விராட் கோலி போன்ற ஒரு ரன் இலக்கு துரத்தும் ஒரு வீரர் இல்லாதது அணியில் பெரிய ஓட்டையை தெளிவாக காட்டுகிறது. அவர் இல்லாமல் இந்தியா பெரிய ஸ்கோரை துரத்த தொடர்ந்து போராடுகிறது. இதனால் அனைத்து அணிகளும் முதலில் பேட்டிங் செய்து இந்தியாவுக்கு ரன்களை இலக்குகளாக நிர்ணயிக்கும் என்றார்.
- அபிஷேக் சர்மா இன்றைய போட்டியில் அவர் விளையாடவில்லை
- 3 சிக்ஸர்கள் 1 பவுண்டரி அடித்து 22 ரன்னில் சஞ்சு சாம்சன் ஆட்டமிழந்தார்.
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் நடப்பு சாம்பியனான இந்தியா ஏ பிரிவில் இடம் பெற்றுள்ளது. பாகிஸ்தான், அமெரிக்கா, நமீபியா, நெதர்லாந்து ஆகிய அணிகளும் அந்தப் பிரிவில் உள்ளன.
சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த முதல் போட்டியில் அமெரிக்காவை 29 ரன் வித்தியாசத்தில் தோற்கடித்தது.
இந்நிலையில், இன்று இந்திய அணி 2-வது ஆட்டத்தில் நமீபியாவுடன் மோதுகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
உடல் தகுதி இல்லாமல் அமெரிக்காவுக்கு எதிரான போட்டியில் ஆடிய அதிரடி பேட்ஸ்மேன் அபிஷேக் சர்மா டக் அவுட் ஆனார். இன்றைய போட்டியில் அவர் விளையாடவில்லை. அதனால் இஷான் கிஷனுடன் சஞ்சு சாம்சன் தொடக்க வரிசையில் விளையாடினார்.
இப்போட்டியில் 3 சிக்ஸர்கள் 1 பவுண்டரி அடித்து 22 ரன்னில் சஞ்சு சாம்சன் ஆட்டமிழந்தார். அதிரடியாக தொடங்கிய சஞ்சு சாம்சன் உடனே அவுட்டானது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது.
நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் சரியாக விளையாடாத சஞ்சு சாம்சன் அமெரிக்காவிற்கு எதிரான போட்டியில் விளையாடவில்லை. தற்போது மீண்டும் தனக்கு கிடைத்த சஞ்சு சாம்சன் பயன்படுத்திக்கொள்ளவில்லை .
- அபிஷேக் சர்மா இன்றைய போட்டியில் அவர் விளையாடவில்லை.
- இஷான் கிஷனுடன் சஞ்சு சாம்சன் தொடக்க வரிசையில் ஆடுகிறார்.
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் நடப்பு சாம்பியனான இந்தியா ஏ பிரிவில் இடம் பெற்றுள்ளது. பாகிஸ்தான், அமெரிக்கா, நமீபியா, நெதர்லாந்து ஆகிய அணிகளும் அந்தப் பிரிவில் உள்ளன.
சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த முதல் போட்டியில் அமெரிக்காவை 29 ரன் வித்தியாசத்தில் தோற்கடித்தது.
இந்நிலையில், இன்று இந்திய அணி 2-வது ஆட்டத்தில் நமீபியாவுடன் மோதுகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
உடல் தகுதி இல்லாமல் அமெரிக்காவுக்கு எதிரான போட்டியில் ஆடிய அதிரடி பேட்ஸ்மேன் அபிஷேக் சர்மா டக் அவுட் ஆனார். இன்றைய போட்டியில் அவர் விளையாடவில்லை. அதனால் இஷான் கிஷனுடன் சஞ்சு சாம்சன் தொடக்க வரிசையில் ஆடுகிறார்.
நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் சரியாக விளையாடாத சஞ்சு சாம்சன் அமெரிக்காவிற்கு எதிரான போட்டியில் விளையாடவில்லை. தற்போது மீண்டும் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த வாய்ப்பை அவர் பயன்படுத்தி கொள்ளுவரா என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துள்ளனர்.
- சொந்த மாநிலத்தில் விளையாடிய சஞ்சு சாம்சன் 6 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றமளித்தார்
- சிறப்பாக விளையாடிய இஷான் கிஷன் சதமடித்து அசத்தினார்.
இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதுவரை நடந்த 4 போட்டிகளில் இந்தியா 3-ல் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியுள்ளது.
இந்த நிலையில் 5-வது மற்றும் கடைசி போட்டி இன்று கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடந்து வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய சஞ்சு சாம்சன் 6 ரன்னிலும் அபிஷேக் சர்மா 30 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
தனது சொந்த மாநிலத்தில் முதல்முறையாக சர்வதேச போட்டியில் விளையாடிய சஞ்சு சாம்சன் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்தது ரசிகர்களுக்கு ஏமாற்றமளித்தது.
இதையடுத்து ஜோடி சேர்ந்த இஷான் கிஷன் - சூரியகுமார் அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தனர். சூரியகுமார் 63 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். மறுமுனையில் சிறப்பாக விளையாடிய இஷான் கிஷன் சதமடித்து அசத்தினார். 103 ரன்னில் அவர் ஆட்டமிழந்தார். இதையடுத்து களமிறங்கிய ஹர்திக் பாண்ட்யா 17 பந்துகளில் 42 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார்.
20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 271 ரன்கள் குவித்தது.
- 5-வது மற்றும் கடைசி போட்டி இன்று கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடந்து வருகிறது. .
- சொந்த மாநிலத்தில் விளையாடிய சஞ்சு சாம்சன் 6 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றமளித்தார்.
இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதுவரை நடந்த 4 போட்டிகளில் இந்தியா 3-ல் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியுள்ளது.
இந்த நிலையில் 5-வது மற்றும் கடைசி போட்டி இன்று கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடந்து வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சை தேர்வு செய்தது.
தனது சொந்த மாநிலத்தில் முதல்முறையாக சர்வதேச போட்டியில் விளையாடிய சஞ்சு சாம்சன் 6 ரன்னில் அவுட்டாகி ஏமாற்றமளித்தார்.
கடந்த 4 டி20 போட்டிகளில் போதிய ரன்களை குவிக்காத சாம்சன் சொந்த ஊரில் நடைபெற்ற போட்டியிலும் சொற்ப ரன்னில் அவுட்டானதால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
- 5-வது மற்றும் கடைசி போட்டி இன்று கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடக்கிறது.
- சஞ்சு சாம்சன் தனது சொந்த மாநிலத்தில் முதல்முறையாக சர்வதேச போட்டியில் விளையாடுகிறார்.
இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதுவரை நடந்த 4 போட்டிகளில் இந்தியா 3-ல் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியுள்ளது.
இந்த நிலையில் 5-வது மற்றும் கடைசி போட்டி இன்று கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடக்கிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.
இந்த போட்டியின் மூலம் சஞ்சு சாம்சன் தனது சொந்த மாநிலத்தில் முதல்முறையாக சர்வதேச போட்டியில் விளையாடுகிறார். டி20 உலகக் கோப்பைக்கு முன்னதாக இந்தியா விளையாடும் கடைசி டி20 போட்டி இதுவாகும். இதனால் கடந்த 4 டி20 போட்டிகளில் போதிய ரன்களை குவிக்காத சாம்சன் சொந்த ஊரில் பார்முக்கு திரும்புவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துள்ளனர்.
- 5-வது மற்றும் கடைசி போட்டி இன்று கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடக்கிறது.
- சஞ்சு சாம்சன் தனது சொந்த மாநிலத்தில் முதல்முறையாக சர்வதேச போட்டியில் விளையாடுகிறார்.
இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதுவரை நடந்த 4 போட்டிகளில் இந்தியா 3-ல் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியுள்ளது.
இந்த நிலையில் 5-வது மற்றும் கடைசி போட்டி இன்று கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடக்கிறது. இதன்மூலம் சஞ்சு சாம்சன் தனது சொந்த மாநிலத்தில் முதல்முறையாக சர்வதேச போட்டியில் விளையாடுகிறார்.
டி20 உலகக் கோப்பைக்கு முன்னதாக இந்தியா விளையாடும் கடைசி டி20 போட்டி இதுவாகும். இதனால் கடந்த 4 டி20 போட்டிகளில் போதிய ரன்களை குவிக்காத சாம்சன் சொந்த ஊரில் பார்முக்கு திரும்புவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துள்ளனர்.
இந்நிலையில், திருவனந்தபுரத்தில் போட்டி நடைபெறுவதால் மைதானத்தில் சஞ்சு சாம்சனுக்கு அவரது ரசிகர்கள். பிரமாண்ட கட் அவுட் வைத்துள்ளனர்.
- முதல் 4 போட்டிகள் முடிவில் இந்திய அணி 3-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி விட்டது.
- நியூசிலாந்துக்கு எதிரான 5-வது டி20 போட்டியில் விளையாட இந்திய அணி திருவனந்தபுரம் வந்தடைந்தது.
இந்தியா- நியூசிலாந்து அணிகள் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. முதல் 4 போட்டிகள் முடிவில் இந்திய அணி 3-1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி விட்டது. இரு அணிகள் மோதும் 5-வது மற்றும் கடைசி டி20 போட்டி நாளை திருவனந்தபுரத்தில் நடைபெற உள்ளது.
இந்நிலையில் நியூசிலாந்துக்கு எதிரான 5-வது டி20 போட்டியில் விளையாட இந்திய அணி திருவனந்தபுரம் வந்தடைந்தது. அப்போது விமான நிலையத்தில் சஞ்சுவை இந்திய அணியின் கேப்டன் சூர்ய குமார் கலாய்த்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில் வழி விடுங்க.. சேட்டான தொந்தரவு பண்ணாதீங்க என சூர்யகுமார் யாதவ் கூறியபடியே சஞ்சுவை வரவேற்று செல்வார். இதனை சஞ்சு சாம்சன் சிரித்தப்படியே நடந்து செல்வார்.
கேரளா சஞ்சு சாம்சனின் சொந்த மாநிலம் என்பது குறிப்பிடத்தக்கது.
- முதல் 3 போட்டிகளில் வெறும் 16 ரன்கள் மட்டுமே அடித்திருந்தார்.
- இன்று 15 பந்தில் 24 ரன்கள் எடுத்து ஏமாற்றம் அடைந்தார்.
இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 4-வது டி20 போட்டி விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வருகிறது. முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து 7 விக்கெட் இழப்பிற்கு 215 ரன்கள் குவித்தது. பின்னர் 216 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா பேட்டிங் செய்து வருகிறது.
தொடக்க வீரரான அபிஷேக் சர்மா முதல் பந்திலேயே ஆட்டமிழந்தார். அடுத்து வந்த சூர்யகுமார் யாதவ் 8 ரன்னில் ஏமாற்றம் அடைந்தார.
3-வது விக்கெட்டுக்கு சஞ்சு சாம்சன் உடன் ரிங்கு சிங் ஜோடி சேர்ந்தார். முதல் மூன்று போட்டிகளிலும் சரியாக விளையாடாத சஞ்சு சாம்சன் இந்த போட்டியில் முத்திரை பதிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், 15 பந்தில் 24 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். முதல் 3 போட்டிகளில் வெறும் 16 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார்.
- நியூசிலாந்து தொடரில் 3 போட்டிகளில் வெறும் 16 ரன்கள் மட்டுமே அடித்துள்ளார்.
- உலகக் கோப்பைக்கான அணியின் தொடக்க வீரராக சஞ்சு சாம்சன் உள்ளார்.
இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் முடிவடைந்துள்ள முதல் மூன்று போட்டிகளிலும் இந்தியா வெற்றி பெற்று 3-0 எனத் தொடரை கைப்பற்றி முன்னிலை வகிக்கிறது.
அபிஷேக் சர்மா, இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ் ஆகியோர் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். ஆனால், சஞ்சு சாம்சன் பெரிய அளவில் ஜொலிக்கவில்லை. 3 போட்டிகளில் வெறும் 16 ரன்கள் மட்டுமே அடித்துள்ளார். அவரது ஃபார்ம் அணிக்கு கவலை அளிக்கும் விதமாக உள்ளது. என்றாலும், இந்திய அணி நிர்வாகம் அவர் மீது நம்பிக்கை வைத்துள்ளது.
நம்பிக்கை, மீண்டும் ஃபார்முக்கு வர சஞ்சு சாம்சனுக்கு ஒரு ஆட்டம் போதும் என பந்து வீச்சு பயிற்சியாளர் மோர்னே மோர்கல் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மோர்னே மோர்கல் கூறியதாவது:-
நம்பிக்கை மற்றும் மீண்டும் ஃபார்முக்கு வருவதற்கு சஞ்சு சாம்சனுக்கு ஒரு போட்டியில் அதிரடி ஆட்டம் அமைந்தால் போதும். எங்களுக்கு, உலகக் கோப்பைக்கான அணியை கட்டமைக்க வேண்டும். போட்டி நடைபெறும் நேரத்தில் வீரர்கள் அவர்களுடைய உயர்ந்த ஆட்டத்தை வைத்திருக்க வேண்டும். அவர் சிறப்பாக பயிற்சி மேற்கொண்டு வருகிறார். பந்தை சிறப்பாக ஹிட் செய்கிறார்.
அவருடைய ஃபார்மை கொஞ்ச காலத்திற்கும் பெற்றுவிடுவார். ஆனால், முக்கிய கவனம் அணி வெற்றி பெற வேண்டும் என்பதுதான். தற்போது நாங்கள் 3-0 என இருக்கிறோம். வீரர்கள் சிறப்பாக விளையாடி வருகின்றனர். உலகக் கோப்பைக்கு முன்னதாக இரண்டு போட்டிகள் உள்ளன. சஞ்சு சாம்சன் அவரது ஃபார்மை பெற்றுவிடுவார் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை.
இவ்வாறு சஞ்சு சாம்சன் தெரிவித்துள்ளார்.
- சூர்யகுமார் யாதவ் ஆகியோர் சஞ்சு சாம்சனுக்குத் துணையாக இருக்க வேண்டும்.
- களத்தில் சிறிது நேரம் செலவிட்டு, பந்துவீச்சை கணித்த பிறகு தனது அதிரடியைத் தொடங்கலாம்.
இந்தியா- நியூசிலாந்து அணிகள் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்று வருகிறது. முதல் 3 போட்டிகள் முடிவில் இந்தியா 3-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.
டி20 தொடரை இந்திய அணி கைப்பற்றியிருந்தாலும், துவக்க வீரர் சஞ்சு சாம்சனின் மோசமான ஆட்டம் தற்போது கவலையை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், சஞ்சு சாம்சன் தனது இயல்பான ஆட்டத்தை விளையாட வேண்டும் என்றும், அபிஷேக் சர்மாவைப் பார்த்து அதே வேகத்தில் ஆட முயற்சிக்கக் கூடாது என்றும் மூத்த வீரர் ரகானே கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
எதிர்முனையில் அபிஷேக் சர்மா அதிரடியாக விளையாடுவதைப் பார்த்து, சஞ்சு சாம்சன் தானும் அவரைப் போலவே வேகமாக ரன் குவிக்க வேண்டும் என்ற நெருக்கடிக்கு ஆளாகிறார். தயவு செய்து அபிஷேக் சர்மா செய்வதை நீங்களும் செய்ய முயற்சிக்காதீர்கள். சஞ்சு சாம்சனுக்கு என்று தனித்திறமை உள்ளது.
அவர் தனது இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலே போதும். சையத் முஷ்டாக் அலி கோப்பை தொடரில் அவர் தனது பாணியில் விளையாடி ரன்களைக் குவித்தார். அதைத் தான் இங்கேயும் செய்ய வேண்டும். அபிஷேக் சர்மாவுடன் தன்னை ஒப்பிட்டுக் கொள்ளாமல், தன் மீது நம்பிக்கை வைத்து விளையாட வேண்டும்.
இந்த நேரத்தில் அணி நிர்வாகம் மற்றும் கேப்டன் சூர்யகுமார் யாதவ் ஆகியோர் சஞ்சு சாம்சனுக்குத் துணையாக இருக்க வேண்டும். இந்தத் தொடர் முழுவதும் மற்றும் உலகக்கோப்பையிலும் நீங்கள்தான் துவக்க வீரர், உங்கள் இடத்திற்கு ஆபத்து இல்லை என்ற நம்பிக்கையை அவருக்குக் கொடுக்க வேண்டும்.
இஷான் கிஷன் போன்ற வீரர்கள் சிறப்பாக விளையாடி வருவதால், சஞ்சு சாம்சனுக்குப் பயம் ஏற்படுவது இயல்பு. ஆனால் அவருக்கு முழு சுதந்திரம் கொடுத்து, அவரது பாணியில் விளையாட அனுமதித்தால் அவர் நிச்சயம் ஒரு மேட்ச் வின்னராக மாறுவார்.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக அவர் எப்படி ஆடுவார் என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும். எடுத்த உடனே அதிரடியாக ஆடாமல், முதல் ஒன்று அல்லது இரண்டு ஓவர்கள் களத்தில் நிலைத்து நிற்க வேண்டும். களத்தில் சிறிது நேரம் செலவிட்டு, பந்துவீச்சை கணித்த பிறகு தனது அதிரடியைத் தொடங்கலாம்.
என்று ரகானே கூறினார்.
- சஞ்சு சாம்சன் தொடக்க ஆட்டக்காரராக நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் விளையாடி வருகிறார்.
- முதல் 2 டி20 போட்டிகளில் சொற்ப ரன்களில் சஞ்சு சாம்சன் ஆட்டமிழந்தார்.
டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம் பிடித்த சஞ்சு சாம்சன் மீண்டும் தொடக்க ஆட்டக்காரராக நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் விளையாடி வருகிறார்.
முதல் 2 டி20 போட்டிகளில் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்த சஞ்சு சாம்சன் 3 ஆவது டி20 போட்டியில் கோல்டன் டக் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார்.
இதனால் காயத்தில் இருந்து மீண்டு திலக் வர்மா மீண்டும் அணிக்குள் வந்தால் சஞ்சு சாம்சனின் இடம் கேள்விக்குறியாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.






