என் மலர்
நீங்கள் தேடியது "INDvNZ"
- நியூசிலாந்துக்கு எதிரான 3 டெஸ்டிலும் தோற்று இந்திய அணி ஒயிட்வாஷ் ஆனது.
- கவுதம் கம்பீர் மும்பையில் நாளை காலை 9 மணிக்கு செய்தியாளர்களை சந்தித்து பேச இருக்கிறார்.
டி20 உலகக்கோப்பைக்கு பிறகு இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக கவுதம் கம்பீர் நியமிக்கப்பட்டார். அவர் பயிற்சியாளராக பொறுப்பேற்ற பிறகு இந்திய அணி தொடர்ந்து தடுமாற்றங்களை சந்தித்து வருகிறது.
இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய அணி 27 ஆண்டுகளுக்குப் பிறகு தோல்வியை சந்தித்தது. தற்போது நியூசிலாந்துக்கு எதிரான 3 டெஸ்டிலும் தோற்று ஒயிட்வாஷ் ஆனது.
சொந்த மண்ணில் ஏற்பட்ட இந்த படுதோல்வியால் பயிற்சியாளர் கம்பீர் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறார். அவருக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
நியூசிலாந்திடம் முழுமையாக தோற்றதால் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணதில் இந்திய அணி 5 டெஸ்டில் 4-ல் வெல்ல வேண்டும். அப்படி நிகழாவிட்டால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தொடர்ந்து 3-வது முறையாக முன்னேற இயலாது. இதனால் ஆஸ்திரேலிய தொடர் கம்பீரின் தலை விதியை நிர்ணயம் செய்யும் என்று சொல்லப்படுகிறது.
நியூசிலாந்து டெஸ்ட் தொடரின் படுதோல்விக்கு பிறகு பிசிசிஐ தலைமையில் நீண்ட நேரம் ரிவ்யூ மீட்டிங் நடந்தது. இந்த மீட்டிங்கில் கம்பீர் மற்றும் ரோகித்தை தேர்வுக்குழு தலைவர்கள் கடுமையாக விமர்சித்ததாக சொல்லப்படுகிறது.
நியூசிலாந்து அணிக்கு எதிரான 3 ஆவது டெஸ்ட் போட்டியின் தோல்விக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசாத இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் மும்பையில் நாளை காலை 9 மணிக்கு செய்தியாளர்களை சந்தித்து பேச இருக்கிறார்.
ஆஸ்திரேலியாவில் பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடர் விரைவில் தொடங்க இருப்பதால் இச்சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
- நியூசிலாந்து வீரர்கள் அற்புதமான கிரிக்கெட்டை விளையாடினார்கள்.
- இந்தியாவில் 3 -0 என்ற கணக்கில் வெல்வது நம்ப முடியாதது.
நியூசிலாந்துக்கு எதிராக தங்களுடைய சொந்த மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் இந்தியா ஒயிட் வாஸ் தோல்வியை சந்தித்துள்ளது. இதனால் வரலாற்றிலேயே முதல் முறையாக சொந்த மண்ணில் நியூசிலாந்துக்கு எதிராக ஒரு தொடரில் முழுமையான ஒய்ட்வாஷ் தோல்வியை இந்தியா சந்தித்துள்ளது.
சொந்த மண்ணிலேயே தோற்ற இந்தியா சவாலான ஆஸ்திரேலியாவில் வெல்லுமா என்பது கடினமாகவே பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்தியாவின் இந்த தோல்வி தூங்கிக் கொண்டிருக்கும் சிங்கத்தை எழுப்பியது போல் இருக்கும் என்று ஆஸ்திரேலிய வீரர் ஜோஸ் ஹசில்வுட் வீரர் தெரிவித்துள்ளார்.
இது அவர் கூறியதாவது:-
அது தூங்கும் ராட்சசனை எழுப்பக்கூடும். 3 -0 என்ற கணக்கில் வெல்வதை விட 3 - 0 என்ற கணக்கில் இந்தியா தோல்வியை பெற்றது நல்லது. அதன் காரணமாக அவர்களுடைய தன்னம்பிக்கை கொஞ்சம் அடிக்கப்பட்டிருக்கலாம். இருப்பினும் அவர்களில் பெரும்பாலான வீரர்கள் இங்கே ஏற்கனவே விளையாடிய அனுபவத்தைக் கொண்டுள்ளனர்.
அதைப்பற்றி நான் அதிகம் படிக்க விரும்பவில்லை. இந்தியா சந்தித்த தோல்வி எங்களுக்கு நல்லது. நியூசிலாந்து அணிக்கு வாழ்த்துக்கள். அவர்கள் அற்புதமான கிரிக்கெட்டை விளையாடினார்கள். இந்தியாவில் 3 -0 என்ற கணக்கில் வெல்வது நம்ப முடியாதது. உண்மையில் அங்கே ஒரு போட்டியில் வெல்வதே மிகவும் கடினமான ஒன்றாகும். ஆனால் அவர்கள் அனைத்து போட்டிகளிலும் வென்றுள்ளனர்.
இந்தியா தோல்வியை சந்தித்து இங்கே வருவதால் எங்களுக்கு எதிரான தொடர் பெரியதாக இருக்கும். இந்தியாவுக்கு எதிராக நாங்கள் விளையாடும் போட்டிகள் ஆஷஸ் தொடருக்கு நிகராக இருக்கும். ரசிகர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். டிவி ரேட்டிங்ஸ் பெரியதாக இருக்கும். எனவே இந்த தொடர் மிகவும் பெரியதாக இருக்கும் என்று கூறினார்.
- வீரர்கள் தேர்வு விஷயத்தில் அவருக்கு அனைத்து சுதந்திரமும் வழங்கப்பட்டு இருக்கிறது.
- ரவி சாஸ்திரி, ராகுல் டிராவிட் ஆகியோருக்கு கொடுக்காத இந்த முன்னுரிமை காம்பீருக்கு மட்டும் வழங்கப்பட்டு இருந்தது.
புதுடெல்லி:
டி20 உலகக்கோப்பைக்கு பிறகு இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக கவுதம் காம்பீர் நியமிக்கப்பட்டார். அவர் பயிற்சியாளராக பொறுப்பேற்ற பிறகு தொடர்ந்து தடுமாற்றங்களை சந்தித்து வருகிறார்.
இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய அணி 27 ஆண்டுகளுக்குப் பிறகு தோல்வியை சந்தித்தது. தற்போது நியூசிலாந்துக்கு எதிரான 3 டெஸ்டிலும் தோற்று ஒயிட்வாஷ் ஆனது.
சொந்த மண்ணில் ஏற்பட்ட இந்த படுதோல்வியால் பயிற்சியாளர் காம்பீர் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறார். அவருக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
நியூசிலாந்திடம் முழுமையாக தோற்றதால் ஆஸ்திரேலிய சுற்றுப்பயணதில் இந்திய அணி 5 டெஸ்டில் 4-ல் வெல்ல வேண்டும். அப்படி நிகழாவிட்டால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தொடர்ந்து 3-வது முறையாக முன்னேற இயலாது. இதனால் ஆஸ்திரேலிய தொடர் காம்பீரின் தலை விதியை நிர்ணயம் செய்யும்.
இதற்கிடையே காம்பீரின் அதிகாரத்தை பறிக்க இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ.) முடிவு செய்துள்ளது. வீரர்கள் தேர்வு விஷயத்தில் அவருக்கு அனைத்து சுதந்திரமும் வழங்கப்பட்டு இருக்கிறது. இதற்கு முன்பு பயிற்சியாளர்கள் பணியாற்றிய ரவி சாஸ்திரி, ராகுல் டிராவிட் ஆகியோருக்கு கொடுக்காத இந்த முன்னுரிமை காம்பீருக்கு மட்டும் வழங்கப்பட்டு இருந்தது.
நியூசிலாந்து தொடரில் ஆடுகளம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் அவரது முடிவு ஏமாற்றத்தை அளித்தது. மும்பை டெஸ்டில் முகமது சிராஜ், சர்பராஸ் கான் ஆகியோரை பேட்டிங் செய்ய அனுப்பிய முடிவு பல்வேறு கேள்விகளை எழுப்பியது.
கிரிக்கெட் வாரிய விதிப்படி தேர்வு விஷயங்களில் பயிற்சியாளர் எந்த கருத்தும் தெரிவிக்க முடியாது. ஆஸ்திரேலிய சுற்றுப்பயணம் முக்கியமானது என்பதால் தேர்வு குழு கூட்டத்தில் அவரை பங்கேற்க கிரிக்கெட் வாரியம் அனுமதித்து இருந்தது.
நியூசிலாந்திடம் ஏற்பட்ட மோசமான தோல்வியால் வீரர்கள் தேர்வு விஷயத்தில் தலையிடும் காம்பீரின் அதிகாரம் பறிக்கப்படும் என்று தெரிகிறது.
இதேபோல கேப்டன் ரோகித்சர்மா, விராட்கோலி, அஸ்வின், ஜடேஜா ஆகிய சீனியர் வீரர்கள் மீதும் நட வடிக்கை எடுக்க கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது. ஆஸ்திரேலிய தொடருக்கு பிறகு அவர்களின் எதிர்காலம் குறித்த முடிவு நிர்ணயிக்கப்படும்.
- தோல்விக்கு பொறுப்பேற்றுக் கொள்வதாக இந்திய கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்து இருந்தார்.
- விராட் கோலி மோசமான சாதனையை படைத்துள்ளார்.
இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்ட நியூசிலாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 3-0 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. இந்திய மண்ணில் இந்திய அணியை ஒயிட்வாஷ் செய்யப்பட்டது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது.
மூன்று போட்டிகளிலும் இந்திய அணியின் மூத்த வீரர்கள் சொதப்பியது, தோல்விக்கு மிக முக்கிய காரணமாக அமைந்தது. இந்திய அணி தோல்விக்கு பொறுப்பேற்றுக் கொள்வதாக இந்திய கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில், டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் விராட் கோலி மோசமான சாதனையை படைத்துள்ளார். சொந்த மண்ணில் நடந்த டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் முதல் முறையாக விராட் கோலி இரண்டு இன்னிங்ஸிலும் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்துள்ளார்.
நியூசிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் டக் அவுட் ஆன விராட் கோலி, இரண்டாவது இன்னிங்ஸில் 70 ரன்களை அடித்தார். இரண்டாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 1 ரன்னும், இரண்டாவது இன்னிங்ஸில் 17 ரன்களை அடித்தார். மூன்றாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 4 ரன்கள், இரண்டாவது இன்னிங்ஸில் 1 ரன் எடுத்து அவுட் ஆனார்.
- இந்தியாவுக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் நியூசிலாந்து பங்கேற்றது.
- நியூசிலாந்து 3 போட்டிகளிலும் வென்று இந்தியாவை ஒயிட் வாஷ் செய்து அசத்தியது.
மும்பை:
நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. முதல் இரு போட்டிகளில் நியூசிலாந்து வென்று தொடரை கைப்பற்றியது.
இதற்கிடையே, இரு அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் கடந்த 1-ம் தேதி தொடங்கியது. 3-வது நாள் முடிவதற்குள் இந்தப் போட்டியில் நியூசிலாந்து 25 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இதன்மூலம் இந்தியாவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை நியூசிலாந்து 3-0 என முழுமையாக கைப்பற்றி அசத்தியது.
ஆட்டநாயகன் விருது அஜாஸ் படேலுக்கும், தொடர் நாயகன் விருது வில் யங்குக்கும் வழங்கப்பட்டது.
இந்நிலையில், இந்திய அணியை அதன் சொந்த மண்ணில் 3 அல்லது அதற்கு மேற்பட்ட போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஒயிட் வாஷ் செய்த முதல் அணி என்ற மகத்தான சாதனையை நியூசிலாந்து படைத்தது.
- இந்தியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து வெற்றி பெற்றது.
- அத்துடன் டெஸ்ட் தொடரை 3-0 என முழுமையாக கைப்பற்றியது.
மும்பை:
இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 3வது டெஸ்ட் போட்டி மும்பையில் நடந்தது. இதில் நியூசிலாந்து அணி 25 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அத்துடன் டெஸ்ட் தொடரை 3-0 என முழுமையாக கைப்பற்றியது.
இந்நிலையில், தோல்வி குறித்து இந்திய கேப்டன் ரோகித் சர்மா கூறியதாவது:
சொந்த மண்ணில் டெஸ்ட் தொடரில் தோல்வி அடைவது சாதாரண விஷயமல்ல. இந்தத் தோல்வியை எங்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
இந்த தொடரில் சரிவர அணியை வழிநடத்தவில்லை. பேட்டிங்கிலும் நான் சரியாக விளையாடவில்லை. இந்த தோல்வியை தம்மால் ஜீரணிக்க முடியவில்லை. ஒரு அணியாக நாங்கள் தோற்று விட்டோம்.
இந்த டெஸ்ட் தொடரில் சிறந்த கிரிக்கெட்டை நாங்கள் விளையாடவில்லை. அதேபோல் நியூசிலாந்து அணி எங்களை விடவும் மிக சிறந்த கிரிக்கெட்டை விளையாடினார்கள்.
தொடர்ச்சியாக நிறைய தவறுகளை செய்தோம். முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் முதல் இன்னிங்சில் போதுமான ரன்களை நாங்கள் சேர்க்கவில்லை. ஆனால் இந்தப் போட்டியில் 28 ரன்கள் முன்னிலை பெற்றோம்.
அதேபோல் 2வது இன்னிங்சிலும் எங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட இலக்கு எளிதாக சேஸ் செய்யப்படக் கூடியதுதான். ஆனால் ஒரு அணியாகவே நாங்கள் தோல்வி அடைந்திருக்கிறோம். இதுபோன்ற இலக்கை சேஸ் செய்யும்போது, விரைவாக ரன்கள் சேர்க்க வேண்டும் என நினைத்தோம்.
அதுதான் எங்களின் மனநிலையாக இருந்தது. ஆனால் அதனை சரியாக செயல்படுத்த முடியவில்லை.
இந்த டெஸ்ட் தொடரில் எனக்காக ஒரு திட்டம் வகுத்து விளையாடினேன். அதுவும் எனக்கு கைகொடுக்கவில்லை.
இந்த பிட்சில் மிகச்சிறந்த கிரிக்கெட்டை விளையாடவில்லை. அதற்கான பலனை இப்போது அனுபவித்து வருகிறோம்.
இந்த டெஸ்ட் தொடரில் சீனியர் வீரர்களை விடவும் ரிஷப் பண்ட், சுப்மன் கில், வாஷிங்டன் சுந்தர் உள்ளிட்டோர் சிறப்பாக பேட்டிங் செய்தனர்.
சீனியர்கள் கூடுதல் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். ஏனென்றால் 3 அல்லது 4 ஆண்டுக்கு ஒருமுறை தான் ஒவ்வொரு மைதானத்தில் விளையாடுகிறோம்.
இந்த டெஸ்ட் தொடரில் நாங்கள் முயற்சித்த எந்த விஷயமும் கைகூடவில்லை. கேப்டனாகவும், பேட்ஸ்மேனாகவும் நான் சிறப்பாக செயல்படவில்லை. மொத்தம் ஒரு அணியாகவும் சிறப்பாக செயல்பட தவறிவிட்டோம் என தெரிவித்தார்.
- சுப்மன்கில், விராட் கோலி தலா ஒரு ரன்னில் அஜாஸ் படேல் பந்தில் ஆட்டம் இழந்தனர்.
- அதிரடியாக விளையாடிய ரிஷப் பண்ட் 64 ரன்கள் அடித்து அவுட்டானார்.
மும்பை:
இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 235 ரன் எடுத்தது. இந்தியா முதல் இன்னிங்சில் 263 ரன்னில் ஆல்அவுட் ஆனது. 28 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை ஆடிய நியூசிலாந்து அணி 174 ரன்னில் ஆல் அவுட் ஆனது. இதனால் இந்தியாவுக்கு 147 ரன் இலக்காக இருந்தது.
இதனையடுத்து இந்திய அணியின் தொடக்க வீரர்களாக கேப்டன் ரோகித் சர்மாவும், ஜெய்ஷ்வாலும் களம் இறங்கினார்கள்.
ரோகித் சர்மா 11 ரன்னில் ஹென்றி பந்தில் வெளியேறினார். அடுத்து வந்த சுப்மன்கில், விராட் கோலி தலா ஒரு ரன்னில் அஜாஸ் படேல் பந்தில் ஆட்டம் இழந்தனர். அதனை தொடர்ந்து ஜெய்ஸ்வால் 5, சர்பராஸ் கான் 1 என அடுத்தடுத்து வெளியேறினர்.
அதிரடியாக விளையாடிய ரிஷப் பண்ட் 64 ரன்கள் அடித்து அவுட்டானார். அடுத்து வந்த வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க 121 ரன்களுக்கு இந்திய அணி ஆல் அவுட்டானது.
இதன்மூலம் 25 ரன்கள் வித்தியாசத்தில் இந்த டெஸ்ட் போட்டியை வென்ற நியூசிலாந்து 3 - 0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றி அசத்தியுள்ளது.
12 ஆண்டுகளுக்கு பிறகு முதன்முறையாக இந்தியாவில் நடைபெற்ற டெஸ்ட் தொடரை இந்தியா இழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
- கபில்தேவ், இர்பான் பதானை முந்தி 4-வது இடத்தை பிடித்தார்.
- கும்ப்ளே, அஸ்வின் தலா 8 முறை 10 விக்கெட்டை எடுத்துள்ளார்கள்.
மும்பை டெஸ்ட் போட்டியில் ஜடேஜா 10 விக்கெட் கைப்பற்றினார். முதல் இன்னிசில் 65 ரன் கொடுத்து 5 விக்கெட்டும், 2-வது இன்னிங்சில் 55 ரன் கொடுத்து 5 விக்கெட்டும் வீழ்த்தினார். 120 ரன் கொடுத்து மொத்தம் 10 விக்கெட் எடுத்தார்.
ஜடேஜா 3-வது முறையாக (77-வது போட்டி) டெஸ்டில் 10 விக்கெட் எடுத்துள்ளார். இதன்மூலம் கபில்தேவ், இர்பான் பதானை முந்தி 4-வது இடத்தை பிடித்தார். கும்ப்ளே, அஸ்வின் தலா 8 தடவையும், ஹர்பஜன்சிங 5 முறையும் 10 விக்கெட்டை எடுத்துள்ளார். அவர்களுக்கு அடுத்த இடத்தில் ஜடேஜா உள்ளார்.
- சுப்மன்கில், விராட் கோலி தலா ஒரு ரன்னில் அஜாஸ் படேல் பந்தில் ஆட்டம் இழந்தனர்.
- ஜெய்ஸ்வால் 5, சர்பராஸ் கான் 1 என அடுத்தடுத்து வெளியேறினர்.
மும்பை:
இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 235 ரன் எடுத்தது. இந்தியா முதல் இன்னிங்சில் 263 ரன்னில் ஆல்அவுட் ஆனது. 28 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை ஆடிய நியூசிலாந்து அணி 174 ரன்னில் ஆல் அவுட் ஆனது. இதனால் இந்தியாவுக்கு 147 ரன் இலக்காக இருந்தது.
இதனையடுத்து இந்திய அணியின் தொடக்க வீரர்களாக கேப்டன் ரோகித் சர்மாவும், ஜெய்ஷ்வாலும் களம் இறங்கினார்கள்.
ரோகித் சர்மா 11 ரன்னில் ஹென்றி பந்தில் வெளியேறினார். அடுத்து வந்த சுப்மன்கில், விராட் கோலி தலா ஒரு ரன்னில் அஜாஸ் படேல் பந்தில் ஆட்டம் இழந்தனர். அதனை தொடர்ந்து ஜெய்ஸ்வால் 5, சர்பராஸ் கான் 1 என அடுத்தடுத்து வெளியேறினர்.
இந்நிலையில் ரிஷப்பண்ட்டுடன் ஜடேஜா ஜோடி சேர்ந்து விளையாடி வருகின்றனர். ரிஷப் பண்ட் அதிரடி ஆட்டத்தையும் ஜடேஜா தடுமாற்றத்துடனும் விளையாடி வருகின்றனர். தற்போது வரை இந்திய அணி 47 ரன்களுக்கு 5 விக்கெட்டுடன் விளையாடி வருகிறது.
- நியூசிலாந்து அணி 2-வது இன்னிங்சில் 174 ரன்னில் சுருண்டது.
- இந்திய தரப்பில் ஜடேஜா 5 விக்கெட்டும் அஸ்வின் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மும்பையில் உள்ள வான்கடே ஸ்டேடியத்தில் தொடங்கியது.
முதலில் விளையாடிய நியூசிலாந்து அணி, வில் யங் (71 ரன்), டேரில் மிட்செல் (82 ரன்) ஆகியோரின் அரைசதத்தின் உதவியுடன் முதல் இன்னிங்சில் 235 ரன்கள் எடுத்து ஆல்-அவுட் ஆனது. இந்தியா தரப்பில் ரவீந்திர ஜடேஜா 5 விக்கெட்டும், வாஷிங்டன் சுந்தர் 4 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதனையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி சுப்மன் கில், ரிஷப் பண்ட்டின் அரை சதத்தால் 263 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. நியூசிலாந்து அணி தரப்பில் சுழற்பந்து வீச்சாளர் அஜாஸ் பட்டேல் 5 விக்கெட்டும், மேட் ஹென்றி, கிளென் பிலிப்ஸ், இஷ் சோதி தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.
28 ரன் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்து இருந்தது. முதல் ஓவரிலேயே டாம் லாதம் (1 ரன்) ஆகாஷ் தீப் பந்து வீச்சில் போல்டு ஆனார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் டிவான் கான்வே 22 ரன்னிலும், ரச்சின் ரவீந்திரா 4 ரன்னிலும் விக்கெட்டை பறிகொடுத்தனர்.
4-வது விக்கெட்டுக்கு டேரில் மிட்செல், வில் யங்குடன் கைகோர்த்தார். முதல் இன்னிங்சில் நிலைத்து நின்று ஆடிய டேரில் மிட்செல் (21 ரன்) தாக்குப்பிடிக்கவில்லை. அடுத்து வந்த டாம் பிளன்டெல் (4 ரன்), கிளென் பிலிப்ஸ் (26 ரன்), சோதி (8 ரன்) வந்த வேகத்திலேயே நடையை கட்டினர். தாக்குப்பிடித்து நின்று 9-வது அரைசதம் அடித்த வில் யங் 51 ரன்னில் (100 பந்து, 2 பவுண்டரி, ஒரு சிக்சர்) அஸ்வின் பந்து வீச்சில் அவரிடமே கேட்ச் கொடுத்து வெளியேறினார். மேட் ஹென்றி 10 ரன்னில் ரவீந்திர ஜடேஜா பந்து வீச்சில் போல்டு ஆனார்.
நேற்றைய ஆட்டம் முடிவில் நியூசிலாந்து அணி 43.3 ஓவர்களில் 9 விக்கெட்டுக்கு 171 ரன்கள் எடுத்திருந்தது. அஜாஸ் பட்டேல் 7 ரன்னுடன் களத்தில் இருக்கிறார். இந்திய அணி தரப்பில் சுழற்பந்து வீச்சாளர்கள் ரவீந்திர ஜடேஜா 4 விக்கெட்டும், அஸ்வின் 3 விக்கெட்டும் சாய்த்தனர்.
#TeamIndia needs 1️⃣4️⃣7️⃣ runs to win.Jadeja wraps up the innings with yet another fifer ?️Watch the chase unfold LIVE on #JioCinema #Sports18 & #ColorsCineplex?#INDvNZ #IDFCFirstBankTestTrophy #JioCinemaSports pic.twitter.com/KO89LwpuI4
— JioCinema (@JioCinema) November 3, 2024
இன்று 3-வது நாள் ஆட்டம் தொடங்கியது. ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்தில் அஜாஸ் படேல் 8 ரன்னில் அவுட் ஆனார். இதனால் நியூசிலாந்து அணி 2-வது இன்னிங்சில் 174 ரன்னில் சுருண்டது. இந்திய தரப்பில் ஜடேஜா 5 விக்கெட்டும் அஸ்வின் 3 விக்கெட்டும் வீழ்த்தினர். இந்திய அணி 147 எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடி வருகிறது.
- இந்தியா முதல் இன்னிங்சில் 263 ரன்களுக்கு ஆல்அவுட்டானது.
- சுப்மன் கில், ரிஷப் பண்ட் அரை சதம் கடந்தனர்.
மும்பை:
இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடந்து வருகிறது.
டாஸ் வென்று முதலில் பேட் செய்த நியூசிலாந்து 235 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது. டேரில் மிட்செல் 82 ரன்னும், வில் யங் 71 ரன்னும் அடித்தனர்.
இந்தியா சார்பில் ஜடேஜா 5 விக்கெட்டும், வாஷிங்டன் சுந்தர் 4 விக்கெட்டும் வீழ்த்தினர்.
அடுத்து ஆடிய இந்தியா முதல் இன்னிங்சில் 263 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. சுப்மன் கில் 90 ரன்னும், ரிஷப் பண்ட் 60 ரன்னும் எடுத்தனர். வாஷிங்டன் சுந்தர் அதிரடியாக ஆடி 38 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார்.
நியூசிலாந்து சார்பில் அஜாஸ் பட்டேல் 5 விக்கெட் வீழ்த்தினார்.
இதையடுத்து, 28 ரன்கள் பின்தங்கிய நிலையில் நியூசிலாந்து 2-வது இன்னிங்சில் களமிறங்கியது. சீரான இடைவெளியில் இந்திய வீரர்கள் விக்கெட்டுகளை வீழ்த்தினர். வில் யங் ஓரளவு தாக்குப்பிடித்து அரை சதமடித்து 51 ரன்னில் ஆட்டமிழந்தார்.
இறுதியில், இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் நியூசிலாந்து 9 விக்கெட்டுக்கு 171 ரன்கள் எடுத்துள்ளது. இதன்மூலம் 143 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
இந்தியா சார்பில் ஜடேஜா 4 விக்கெட்டும், அஸ்வின் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இன்னும் 3 நாள் மீதமுள்ள நிலையில் இந்தியாவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.
- சுப்மன் கில் 90 ரன்களில் ஆட்டமிழந்தார்.
- நியூசிலாந்து ஸ்பின்னர் அஜாஸ் பட்டேல் 6 விக்கெட் சாய்த்தார்.
இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
நேற்று தொடங்கிய இந்த போட்டியில் நியூசிலாந்து டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து ஜடேஜா மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோரின் சிறந்த பந்து வீச்சால் 235 ரன்னில் ஆல்அவுட் ஆனது. ஜடேஜா 5 விக்கெட்டும், வாஷிங்டன் சுந்தர் 4 விக்கெட்டும் வீழ்த்தினர். நியூசிலாந்து அணியில் வில் யங் 71 ரன்னும், டேரில் மிட்செல் 82 ரன்னும் அடித்தனர்.
பின்னர் இந்தியா முதல் இன்னிங்சை தொடங்கியது. ஜெய்ஸ்வால் 30 ரன்னிலும், ரோகித் சர்மா 18 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். விராட் கோலி 4 ரன்னில் ரன்அவுட் ஆனார். இதனால் 84 ரன்கள் எடுப்பதற்குள் இந்தியா 4 விக்கெட்டுகளை இழந்து திணறியது.
5-வது விக்கெட்டுக்கு சுப்மன் கில் உடன் ரிஷப் பண்ட் ஜோடி சேர்ந்தார். கில் 31 ரன்னுடனும், ரஷப் பண்ட் 1 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.
இன்று 2-வது நாள் ஆட்டம் தொடங்கியது. கில் நிதானமாக விளையாட ரிஷப் பண்ட் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். சுப்மன் கில் 66 பந்தில் அரைசதம் அடித்தார். மறுமுனையில் ரிஷப் பண்ட் 36 பந்தில் அரைசதம் விளாசினார்.
தொடர்ந்து விளையாடிய ரிஷப் பண்ட் 60 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து சுப்மன் கில் உடன் ஜடேஜா ஜோடி சேர்ந்தார். இந்தியா 5 விக்கெட் இழப்பிற்கு 195 ரன்கள் எடுத்திருக்கும்போது உணவு இடைவேளை விடப்பட்டது. அப்போது சுப்மன் கில் 70 ரன்னுடனும், ஜடேஜா 10 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.
உணவு இடைவேளை முடிந்து ஆட்டம் தொடங்கியதும் ஜடேஜா மேலும் 4 ரன்கள் அடித்து 14 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த சர்பராஸ் கான் ரன்ஏதும் எடுக்காமல் டக்அவுட் ஆனார். இதனால் இந்தியா அடுத்தடுத்து 2 விக்கெட்டுகளை இழந்தது.
8-வது விக்கெட்டுக்கு சுப்மன் கில் உடன் வாஷிங்டன் சுந்தர் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நிதானமாக விளையாடியது. சுப்மன் கில் சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 90 ரன்னில் ஆட்டமிழந்தார்.
அப்போது இந்தியா 227 ரன்கள் எடுப்பதற்குள் 8 விக்கெட்டுகளை இழந்தது. ஒரு பக்கம் விக்கெட் வீழ்ந்த போதிலும் மறுமுனையில் வாஷிங்டன் சுந்தர் ரன்கள் அடித்த வண்ணம் இருந்தார். அடுத்து வந்த அஸ்வின் 6 ரன்னில் ஏமாற்றம் அடைந்தார். கடைசி விக்கெட்டாக ஆகாஷ் தீப் களம் இறங்கினார். இந்தியா 250 ரன்களை கடந்தது.
263 ரன்கள் எடுத்திருக்கும்போது 2 ரன்கள் எடுக்க ஓடியபோது ஆகாஷ் திப் ரன்அவுட் ஆனார். இதனால் இந்தியா 263 ரன்னில் ஆல்அவுட் ஆனது வாஷிங்டன் சுந்தர் 38 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். நியூசிலாந்து அணி சார்பில் அஜாஸ் பட்டேல் 5 விக்கெட் வீழ்த்தினார்.
பின்னர் முதல் இன்னிங்சில் 28 ரன்கள் பின்தங்கிய நிலையில் நியூசிலாந்து 2-வது இன்னிங்சில் பேட்டிங் செய்து வருகிறது.