என் மலர்
நீங்கள் தேடியது "INDvNZ"
- இஷான் கிஷன் 43 பந்தில் 103 ரன்கள் குவித்தார்.
- அதிரடியாக ஆடி சதமடித்து இஷான் கிஷனுக்கு ஆட்ட நாயகன் விருது அளிக்கப்பட்டது.
இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 5வது மற்றும் கடைசி டி20 போட்டி திருவனந்தபுரத்தில் நடந்தது. டாஸ் வென்று முதலில் பேட் செய்த இந்தியா 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 271 ரன்கள் குவித்தது. இஷான் கிஷன் 43 பந்தில் 103 ரன்னும், சூர்யகுமார் யாதவ் 30 பந்தில் 63 ரன்னும் குவித்து ஆட்டமிழந்தனர். ஹர்திக் பாண்ட்யா 17 பந்தில் 42 ரன்கள் சேர்த்தார்.
இதையடுத்து, 272 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து 225 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதனால் 46 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்தியா டி20 தொடரை 4-1 என கைப்பற்றியது. இந்தியா சார்பில் அர்ஷ்தீப் சிங் 5 விக்கெட்டும், அக்சர் பட்டேல் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இந்நிலையில், அதிரடியாக ஆடி சதமடித்து இஷான் கிஷனுக்கு ஆட்ட நாயகன் விருது அளிக்கப்பட்டது. இதன்பின்பு பேசிய இஷான் கிஷன், "சொந்த மைல்கல் சாதனைகளை விட, அணியின் வெற்றியே முக்கியம்; நீங்கள் ஒரு சாதனையை நெருங்கியிருந்தாலும், அது ஒரு பொருட்டல்ல. விளையாடும்போது சிக்சருக்கு அடிக்கக்கூடிய பந்தாக இருந்தால் அடித்துவிட வேண்டும், அப்போது சொந்த சாதனைக்காக சிங்கிள் எடுத்துவிட்டு, பின்னர் வருத்தப்படக்கூடாது" என்று தெரிவித்தார்.
- 272 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து 225 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
- இதனால் 46 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்தியா டி20 தொடரை 4-1 என கைப்பற்றியது.
திருவனந்தபுரம்:
இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 5வது மற்றும் கடைசி டி20 போட்டி திருவனந்தபுரத்தில் நடந்தது. டாஸ் வென்று முதலில் பேட் செய்த இந்தியா 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 271 ரன்கள் குவித்தது. இஷான் கிஷன் 43 பந்தில் 103 ரன்னும், சூர்யகுமார் யாதவ் 30 பந்தில் 63 ரன்னும் குவித்து ஆட்டமிழந்தனர். ஹர்திக் பாண்ட்யா 17 பந்தில் 42 ரன்கள் சேர்த்தார்.
இதையடுத்து, 272 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து 225 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதனால் 46 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்தியா டி20 தொடரை 4-1 என கைப்பற்றியது. இந்தியா சார்பில் அர்ஷ்தீப் சிங் 5 விக்கெட்டும், அக்சர் பட்டேல் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இந்நிலையில், அதிரடியாக ஆடி சதமடித்து இஷான் கிஷனுக்கு ஆட்ட நாயகன் விருது அளிக்கப்பட்டது. இதேபோல், நடப்பு தொடரில் சிறப்பாக செயல்பட்ட சூர்யகுமார் யாதவுக்கு தொடர் நாயகன் விருது வழங்கப்பட்டது.
- முதலில் ஆடிய இந்தியா 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 271 ரன்கள் குவித்தது.
- அடுத்து ஆடிய நியூசிலாந்து 225 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது.
திருவனந்தபுரம்:
இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 5வது மற்றும் கடைசி டி20 போட்டி திருவனந்தபுரத்தில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த இந்தியா நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 271 ரன்கள் குவித்தது. சஞ்சு சாம்சன் 6 ரன்னில் வெளியேறினார். அபிஷேக் சர்மா 30 ரன்னில் அவுட்டானார்.
3வது விக்கெட்டுக்கு இஷான் கிஷனுடன் சூர்யகுமார் இணைந்தார். இந்த ஜோடி பந்துகளை சிக்சர், பவுண்டரிகளாக விளாசினர்.
சூர்யகுமார் யாதவ் 30 பந்தில் 63 ரன் குவித்து ஆட்டமிழந்தார். இஷான் கிஷன் 43 பந்தில் 103 ரன் குவித்து அவுட்டானார்.
இந்த ஜோடி 3வது விக்கெட்டுக்கு 137 ரன்கள் சேர்த்தது. பாண்ட்யா 17 பந்தில் 42 ரன்கள் சேர்த்தார்.
இதையடுத்து, 272 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் நியூசிலாந்து களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் பின் ஆலன் அதிரடியில் மிரட்டினார். அவர் 38 பந்தில் 80 ரன் குவித்து ஆட்டமிழந்தார். ரச்சின் ரவீந்திரா 30 ரன்னும், டேரில் மிட்செல் 26 ரன்னும் எடுத்தனர்.
இறுதியில், நியூசிலாந்து அணி 20 ஓவரில் 225 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 46 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இந்தியா, டி20 தொடரை 4-1 என கைப்பற்றி அசத்தியது.
இந்தியா சார்பில் அர்ஷ்தீப் சிங் 5 விக்கெட்டும், அக்சர் பட்டேல் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.
- நியூசிலாந்து அணி நிர்ணயித்த 154 ரன்கள் என்ற இலக்கை இந்திய அணி வெறும் 10 ஓவர்களிலேயே எட்டிப்பிடித்தது.
- எதிரணி வீரர்களின் மனதில் அச்சத்தையும் விதைத்து வருகிறது.
இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 3-வது டி20 போட்டி நேற்று நடைபெற்றது. இதில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் 5 போட்டிகள் கொண்ட தொடரை 3-0 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியது.
இந்நிலையில் இந்திய அணி எதிரணி வீரர்களின் மனதில் அச்சத்தை விதைத்து வருவதாக முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
இந்திய அணி ஒரு சாம்பியன் அணி. அவர்கள் பந்துவீச்சு, பீல்டிங் மற்றும் பேட்டிங் என அனைத்திலும் மிகச் சிறப்பாகச் செயல்படுகிறார்கள். இந்திய அணி தற்போது போட்டிகளில் வெற்றி பெறுவதுடன் மட்டுமல்லாமல், எதிரணி வீரர்களின் மனதில் அச்சத்தையும் விதைத்து வருகிறது.
வரவிருக்கும் டி20 உலகக் கோப்பையை இந்திய அணி சாதாரணமாக எடுத்துக்கொள்ளவில்லை. வீரர்கள் தீவிரமாகப் பயிற்சி செய்து வருகிறது. இந்தத் தொடர் ஒரு ஆரம்பம்'மட்டுமே என்றும் கூறியுள்ளார்.
ரிங்கு சிங் மற்றும் ஹர்திக் பாண்ட்யா போன்ற வீரர்கள் இன்னும் பேட் செய்ய வாய்ப்பு கிடைக்காமலேயே இந்தியா எளிதாக வெல்வது அணியின் திறமையைக் காட்டுகிறது. உலகின் சிறந்த பந்துவீச்சாளர் பும்ரா என கவாஸ்கர் கூறினார்.
மேலும் போட்டி முடிந்த பிறகு இது குறித்துப் பேசிய நியூசிலாந்து முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சைமன் டல், வரவிருக்கும் டி20 உலகக்கோப்பைத் தொடரில் இந்தியா நினைத்தால் இரண்டு அணிகளைக் களமிறக்கலாம். அப்படி இரண்டு அணிகள் விளையாடினாலும், அந்த இரண்டு அணிகளுமே நிச்சயம் முதல் நான்கு இடங்களைப் பிடித்து அரையிறுதிக்குத் தகுதி பெறும். அந்த அளவிற்கு அவர்களிடம் திறமையான வீரர்கள் உள்ளனர்" என்று புகழ்ந்தார்.
அதற்குச் சிரித்துக்கொண்டே சுனில் கவாஸ்கர், "உண்மையில் என்னைக் கேட்டால், அரையிறுதி மட்டுமல்ல, அந்த இரண்டு இந்திய அணிகளுமே இறுதிப்போட்டிக்கு முன்னேறி, கோப்பைக்காகத் தங்களுக்குள் மோதிக்கொள்ளும் என்று சொல்வேன்" என்று அதிரடியாகக் கூறினார். அதாவது இந்திய அணியின் முதல் தர அணியும், இரண்டாம் தர அணியும் மோதினாலே அது உலகக்கோப்பை இறுதிப்போட்டி போலத் தான் இருக்கும் என்று கவாஸ்கர் குறிப்பிட்டுள்ளார்.
- டி20 தொடரின் முதல் 3 போட்டிகளில் வெற்றி பெற்று டி20 தொடரை இந்தியா கைப்பற்றியது.
- 3 ஆவது டி20 போட்டியில் 14 பந்துகளில் அரை சதம் அடித்து அபிஷேக் சர்மா அசத்தினார்
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 ஒருநாள் , 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.
முதலில் நடைபெற்ற ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் நியூசிலாந்து கைப்பற்றியது. இதையடுத்து நடைபெற்ற டி20 தொடரின் முதல் 3 போட்டிகளில் வெற்றி பெற்று டி20 தொடரை இந்தியா கைப்பற்றியது.
நேற்று நடைபெற்ற 3 ஆவது டி20 போட்டியில் 14 பந்துகளில் அரை சதம் அடித்து அபிஷேக் சர்மா அசத்தினார். இதன்மூலம் யுவராஜ் சிங்கிற்கு அடுத்த படியாக அதிவேகமாக அரைசதம் அடித்த இந்தியர் என்ற சாதனையை அவர் படைத்தார்.
இதையடுத்து பேசிய அபிஷேக் ஷர்மா, "12 பந்துகளில் அரை சதம் என்ற யுவராஜின் சாதனையை முறியடிப்பது சாத்தியமற்றது" என்று தெரிவித்தார்.
டி20 போட்டிகளில் யுவராஜ் சிங் 12 பந்துகளில் அரைசதம் அடித்ததே தற்போது வரை சாதனையாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
- டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சை தேர்வு செய்தது
- 14 பந்துகளில் அரைசதம் அடித்து அபிஷேக் சர்மா சாதனை படைத்தார்
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 ஒருநாள் , 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.
முதலில் நடைபெற்ற ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் நியூசிலாந்து கைப்பற்றியது. இதையடுத்து நடைபெற்ற முதல் 2 டி20 போட்டிகளில் இந்தியா வென்று 2-0 என முன்னிலை பெற்றுள்ளது.
இந்நிலையில், இந்தியா-நியூசிலாந்து இடையிலான 3வது டி20 போட்டி இன்று கவுகாத்தியில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 153 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக பிலிப்ஸ் 48 ரன்கள் அடித்தார். இந்திய அணி தரப்பில் பும்ரா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி அதிரடியாக விளையாடி ரன்களை குவித்து வருகிறது. சரவெடியாய் வெடித்த அபிஷேக் சர்மா 14 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தினார். யுவராஜ் சிங்கிற்கு அடுத்த படியாக அதிவேகமாக அரைசதம் அடித்த இந்தியர் என்ற சாதனையை அவர் படைத்தார். மறுமுனையில் அதிரடியாக விளையாடிய சூரியகுமார் யாதவ் அரைசதம் அடித்தார்.
10 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 155 ரன்கள் அடித்து இந்தியா எளிதில் வெற்றி பெற்று டி20 தொடரை 3 -0 என்ற கணக்கில் கைப்பற்றியது.
- 3வது டி20 போட்டியில் இந்தியாவுக்கு 154 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது நியூசிலாந்து
- பிஷேக் சர்மா 14 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தினார்.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 ஒருநாள் , 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.
முதலில் நடைபெற்ற ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் நியூசிலாந்து கைப்பற்றியது.
இதையடுத்து நடைபெற்ற முதல் 2 டி20 போட்டிகளில் இந்தியா வென்று 2-0 என முன்னிலை பெற்றுள்ளது. கடந்த 21-ம் தேதி நடந்த முதல் டி20 போட்டியில் 48 ரன்கள் வித்தியாசத்திலும், 23-ம் தேதி நடந்த 2வது டி20 போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்திலும் இந்தியா அபார வெற்றிபெற்றது.
இந்நிலையில், இந்தியா-நியூசிலாந்து இடையிலான 3வது டி20 போட்டி இன்று கவுகாத்தியில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 160 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக பிலிப்ஸ் 48 ரன்கள் அடித்தார். இந்திய அணி தரப்பில் பும்ரா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி அதிரடியாக விளையாடி ரன்களை குவித்து வருகிறது. சரவெடியாய் வெடித்த அபிஷேக் சர்மா 14 பந்துகளில் அரைசதம் அடித்து அசத்தினார். யுவராஜ் சிங்கிற்கு அடுத்த படியாக அதிவேகமாக அரைசதம் அடித்த இந்தியர் என்ற சாதனையை அவர் படைத்தார்.
யுவராஜ் சிங் 12 பந்துகளில் அரைசதம் அடித்ததே தற்போது வரை சாதனையாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
- சஞ்சு சாம்சன் தொடக்க ஆட்டக்காரராக நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் விளையாடி வருகிறார்.
- முதல் 2 டி20 போட்டிகளில் சொற்ப ரன்களில் சஞ்சு சாம்சன் ஆட்டமிழந்தார்.
டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம் பிடித்த சஞ்சு சாம்சன் மீண்டும் தொடக்க ஆட்டக்காரராக நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் விளையாடி வருகிறார்.
முதல் 2 டி20 போட்டிகளில் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்த சஞ்சு சாம்சன் 3 ஆவது டி20 போட்டியில் கோல்டன் டக் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார்.
இதனால் காயத்தில் இருந்து மீண்டு திலக் வர்மா மீண்டும் அணிக்குள் வந்தால் சஞ்சு சாம்சனின் இடம் கேள்விக்குறியாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
- டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சை தேர்வு செய்தது.
- அதிகபட்சமாக பிலிப்ஸ் 48 ரன்கள் அடித்தார்.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 ஒருநாள் , 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.
முதலில் நடைபெற்ற ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் நியூசிலாந்து கைப்பற்றியது.
இதையடுத்து நடைபெற்ற முதல் 2 டி20 போட்டிகளில் இந்தியா வென்று 2-0 என முன்னிலை பெற்றுள்ளது. கடந்த 21-ம் தேதி நடந்த முதல் டி20 போட்டியில் 48 ரன்கள் வித்தியாசத்திலும், 23-ம் தேதி நடந்த 2வது டி20 போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்திலும் இந்தியா அபார வெற்றிபெற்றது.
இந்நிலையில், இந்தியா-நியூசிலாந்து இடையிலான 3வது டி20 போட்டி இன்று கவுகாத்தியில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 153 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக பிலிப்ஸ் 48 ரன்கள் அடித்தார். இந்திய அணி தரப்பில் பும்ரா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
- முதலில் நடந்த ஒருநாள் தொடரை 2-1 என நியூசிலாந்து கைப்பற்றியது.
- டி20 தொடரில் 2-0 என்ற கணக்கில் இந்தியா முன்னிலை வகிக்கிறது.
கவுகாத்தி:
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 ஒருநாள் , 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.
முதலில் நடைபெற்ற ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் நியூசிலாந்து கைப்பற்றியது.
இதையடுத்து நடைபெற்ற முதல் 2 டி20 போட்டிகளில் இந்தியா வென்று 2-0 என முன்னிலை பெற்றுள்ளது. கடந்த 21-ம் தேதி நடந்த முதல் டி20 போட்டியில் 48 ரன்கள் வித்தியாசத்திலும், 23-ம் தேதி நடந்த 2வது டி20 போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்திலும் இந்தியா அபார வெற்றிபெற்றது.
இந்நிலையில், இந்தியா-நியூசிலாந்து இடையிலான 3வது டி20 போட்டி இன்று கவுகாத்தியில் நடைபெற உள்ளது. இந்தப் போட்டியில் வென்று டி20 தொடரை கைப்பற்ற இந்தியா முனைப்பு காட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால், டி20 தொடரில் முதல் வெற்றியைப் பதிவுசெய்ய நியூசிலாந்தும் முனைப்பு காட்டும் என்பதால் இன்றைய போட்டியில் பரபரப்பிற்கு பஞ்சம் இருக்காது.
- முதலில் ஆடிய நியூசிலாந்து 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 208 ரன்கள் குவித்தது.
- அடுத்து ஆடிய இந்தியா இஷான் கிஷன், சூர்யகுமார் அதிரடியில் எளிதில் வென்றது.
ராய்ப்பூர்:
இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி நாக்பூரில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற இந்தியா பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய நியூசிலாந்து நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 208 ரன்கள் குவித்தது. மிட்செல் சாண்ட்னர் 47 ரன்னும், ரச்சின் ரவீந்திரா 44 ரன்னும் எடுத்தனர்.
இதையடுத்து, 209 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்கியது. அபிஷேக் சர்மா டக் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். சஞ்சு சாம்சன் 6 ரன்னில் வெளியேறினார்.
அடுத்து களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் இஷான் கிஷனுடன் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நியூசிலாந்து பந்து வீச்சை பதம் பார்த்தது. குறிப்பாக, இஷான் கிஷன் ருத்ர தாண்டவமாடி அரை சதம் கடந்தார்.
3வது விக்கெட்டுக்கு 122 ரன்கள் சேர்த்த நிலையில் இஷான் கிஷன் 32 பந்துகளில் 76 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து சூர்யகுமார் யாதவும் அரை சதம் கடந்தார்.
இறுதியில், இந்திய அணி 15.2 ஓவரில் 209 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றதுடன், டி20 தொடரில் 2-0 என முன்னிலை வகிக்கிறது. சூர்யகுமார் யாதவ் 82 ரன்னும், ஷிவம் துபே 36 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.
- நியூசிலாந்து 20 ஓவரில் 190 ரன்கள் மட்டுமே எடுத்தது.
- இதன்மூலம் 48 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது.
நாக்பூர்:
இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி நாக்பூரில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற நியூசிலாந்து பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய இந்தியா நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 238 ரன்கள் குவித்தது. ஆரம்பம் முதலே அதிரடியில் இறங்கிய அபிஷேக் சர்மா சிக்சர், பவுண்டரிகளாக விளாசினார். அவர் 35 பந்தில் 8 சிக்சர், 5 பவுண்டரி உள்பட 84 ரன்கள் குவித்தார்.
அடுத்து களமிறங்கிய நியூசிலாந்து 20 ஓவரில் 190 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 48 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றதுடன், டி20 தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.
இந்நிலையில், இந்திய தொடக்க வீரர் அபிஷேக் சர்மா ஒட்டுமொத்த டி20 கிரிக்கெட்டில் (சர்வதேசம், லீக் மற்றும் உள்ளூர் போட்டி சேர்த்து) இதுவரை 169 ஆட்டங்களில் ஆடி 5,002 ரன்கள் சேர்த்துள்ளார். அவர் 2,898 பந்துகளில் இந்த மைல்கல்லை எட்டியுள்ளார்.
இதன்மூலம் குறைந்த பந்தில் 5,000 ரன்களைக் கடந்த வீரர் என்ற சாதனையை வெஸ்ட் இண்டீசின் ஆந்த்ரே ரஸலிடம் இருந்து (2,942 பந்தில்) தட்டிப் பறித்தார்.






