என் மலர்
நீங்கள் தேடியது "இந்தியா நியூசிலாந்து தொடர்"
- கான்வே 56 ரன்கள் அடித்திருந்த நிலையில் ஹர்ஷித் ராணா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
- சிறப்பாக விளையாடிய டேரில் மிட்செல் 84 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார்.
இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி வதோதராவில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் சுப்மன் கில் பந்து வீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி நியூசிலாந்து அணியின் ஹென்ரி நிக்கோலஸ், டேவன் கான்வே ஆகியோர் தொடகக் வீரர்களாக களம் இறங்கினர். இருவரும் முதலில் நிதானமாக விளையாடினர். அதன்பின் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதனால் நியூசிலாந்து அணியின் ஸ்கேர் சீராக உயர்ந்த வண்ணம் இருந்தது.
இருவரும் நியூசிலாந்து அணி 100 ரன்கள் கடக்கும் வரை விக்கெட் இழக்காமல் பார்த்துக் கொண்டனர். அத்துடன் இருவரும் 60 பந்துகளில் அரைசதம் கடந்தனர். இந்த விக்கெட்டை பிரிக்க முடியாமல் இந்திய பந்து வீச்சாளர்கள் திணறினர்.
நிக்கோலஸ் 4 ரன்னில் இருக்கும்போது ஹர்ஷித் ராணா பந்தில் கொடுத்த கேட்சை குல்தீப் யாதவ் பிடிக்க தவறினார். இந்த வாய்ப்பை பயன்படுத்தி அரைசதம் அடித்தார். தொடர்ந்து விளையாடிய அவர் 69 பந்தில் 62 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான கான்வே 56 ரன்கள் அடித்திருந்த நிலையில் ஹர்ஷித் ராணா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அடுத்ததாக களமிறங்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து நியூசிலாந்து அணி தடுமாறியது.
ஆனால் ஒருமுனையில் நங்கூரமிட்டு சிறப்பாக ஆடிய டேரில் மிட்செல் அரைசதம் அடித்து அசத்தினார். 50 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 300 ரன்கள் அடித்தது. சிறப்பாக விளையாடிய டேரில் மிட்செல் 84 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார்.
இந்திய அணி தரப்பில் ஹர்ஷித் ராணா, சிராஜ், பிரசித் கிருஷ்ணா தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
- 2023ல் சர்வதேச கிரிக்கெட்டில் ஆதித்யா அசோக் அறிமுகமானார்.
- இவர் சுடந்தாண்டு CSK அகாடமியில் பயிற்சி மேற்கொண்டுள்ளார்.
நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகளில் விளையாட உள்ளது.
இந்நிலையில், இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையிலான முதல் ஒரு நாள் போட்டி வதோதராவில் இன்று நடைபெற உள்ளது. போட்டி இந்திய நேரப்படி மதியம் 1.30 மணிக்கு தொடங்கியது.
இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீசுகிறது. நியூஸிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்கிறது.
இந்த போட்டிக்கான நியூசிலாந்து அணியில் இடம் பெற்றுள்ள 23 வயதான சுழற்பந்து வீச்சாளர் ஆதித்யா அசோக் தமிழகத்தை பூர்விகமாக கொண்டவர். வேலூரில் பிறந்த அவருக்கு 4 வயதாக இருக்கும் போது அவரது குடும்பம் நியூசிலாந்துக்கு இடம் பெயர்ந்தது. அவரது உறவினர்கள் வேலூரில் தான் வசித்து வருகிறார்கள்.
2023ல் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான இவர் சுடந்தாண்டு CSK அகாடமியில் பயிற்சி மேற்கொண்டுள்ளார்.
- இரு அணிகளும் தொடரை வெற்றியுடன் தொடங்கும் முனைப்பில் களம் இறங்குகின்றன.
- இந்திய நட்சத்திர கூட்டணியான ரோ-கோ மீது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகளில் விளையாட உள்ளது.
இந்நிலையில், இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையிலான முதல் ஒரு நாள் போட்டி வதோதராவில் இன்று நடைபெற உள்ளது. போட்டி இந்திய நேரப்படி மதியம் 1.30 மணிக்கு தொடங்குகிறது.
இரு அணிகளும் தொடரை வெற்றியுடன் தொடங்கும் முனைப்பில் களம் இறங்குகின்றன. இந்திய நட்சத்திர கூட்டணியான ரோ-கோ மீது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி நியூசிலாந்து அணி முதலில் களமிறங்கவுள்ளது.
- இந்தியா Vs நியூசிலாந்து ஒருநாள் போட்டி தொடர் இன்று தொடங்குகிறது.
- இந்தியா Vs நியூசிலாந்து டி20 தொடர் வரும் 21-ம் தேதி தொடங்க உள்ளது.
நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும், 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் விளையாட உள்ளது.
முதலில் ஒருநாள் போட்டி தொடர் இன்று தொடங்குகிறது. டி20 தொடர் வரும் 21-ம் தேதி தொடங்க உள்ளது. நாக்பூர், ராய்ப்பூர், கவுகாத்தி, விசாகப்பட்டினம் மற்றும் திருவனந்தபுரம் ஆகிய இடங்களில் 5 டி20 போட்டிகள் நடைபெற உள்ளன.
இந்நிலையில், நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து காயம் காரணமாக இந்தியாவின் முன்னணி வீரரான ரிஷப் பண்ட் விலகியுள்ளார். வலைப் பயிற்சியின் போது இடுப்புக்கு மேல் பந்து தாக்கியதில் பண்டுக்கு காயம் ஏற்பட்டது. வலியால் துடித்த அவருக்கு முதலுதவி சிகிச்சை மைதானத்திலேயே அளிக்கப்பட்டது. முதலுதவி சிகிச்சைக்குப் பின், ரிஷப் பண்ட் மைதானத்தில் இருந்து வெளியேறினார்.
இந்நிலையில், ரிஷப் பண்டுக்கு பதிலாக துருவ் ஜூரல் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது.
- முதல் ஒரு நாள் போட்டி வதோதராவில் நடைபெற உள்ளது.
- 2வது போட்டி ராஜ்கோட்டிலும், 3வது போட்டி இந்தூரிலும் நடக்கிறது.
அகமதாபாத்:
நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகளில் விளையாட உள்ளது.
இந்நிலையில், இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையிலான முதல் ஒரு நாள் போட்டி வதோதராவில் இன்று நடைபெற உள்ளது. தொடர்ந்து ராஜ்கோட் (ஜனவரி 14), இந்தூர் (ஜனவரி 18) ஆகிய இடங்களில் நடக்கிறது.
இந்நிலையில், இந்த தொடருக்காக இரு அணி வீரர்களும் தீவிர வலைபயிற்சியில் ஈடுபட்டனர். முதல் ஒருநாள் போட்டி இந்திய நேரப்படி மதியம் 1.30 மணிக்கு தொடங்குகிறது.
இரு அணிகளும் தொடரை வெற்றியுடன் தொடங்கும் முனைப்பில் களம் இறங்குகின்றன. இந்திய நட்சத்திர கூட்டணியான ரோ-கோ மீது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
ஒருநாள் போட்டிகளில் இதுவரை இந்தியா, நியூசிலாந்து அணிகள் 120 போட்டிகளில் நேருக்கு நேர் மோதின. இதில் 62ல் இந்தியாவும், 50ல் நியூசிலாந்தும் வென்றுள்ளன. ஒரு போட்டி சமனில் முடிந்தது. 7 போட்டி கைவிடப்பட்டது.
இந்திய அணி:
சுப்மன் கில் (கேப்டன்), ரோகித் சர்மா, விராட் கோலி, கே.எல்.ராகுல் , ஷ்ரேயாஸ் ஐயர் , வாஷிங்டன் சுந்தர், ரவீந்திர ஜடேஜா, முகமது சிராஜ், ஹர்ஷித் ராணா, பிரசித் கிருஷ்ணா, குல்தீப் யாதவ், ரிஷப் பண்ட், அர்ஷ்தீப் சிங் , நிதிஷ்குமார் ரெட்டி, ஜெய்ஸ்வால்.
நியூசிலாந்து அணி:
மைக்கேல் பிரேஸ்வெல் (கேப்டன்), ஆதி அசோக், கிறிஸ்டியன் கிளார்க், ஜோஷ் கிளார்க்சன், டெவன் கான்வே, ஜாக் போல்க்ஸ், மிட்ச் ஹே, கைல் ஜேமிசன், நிக் கெல்லி, ஜெய்டன் லெனாக்ஸ், டேரில் மிட்செல், ஹென்றி நிக்கோல்ஸ், கிளென் பிலிப்ஸ், மைக்கேல் ரே, வில் யங்.
- ஒருநாள் போட்டி தொடர் இன்று தொடங்குகிறது.
- டி20 தொடர் வரும் 21-ம் தேதி தொடங்க உள்ளது.
அகமதாபாத்:
நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும், 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும் விளையாட உள்ளது.
முதலில் ஒருநாள் போட்டி தொடர் இன்று தொடங்குகிறது. டி20 தொடர் வரும் 21-ம் தேதி தொடங்க உள்ளது. நாக்பூர், ராய்ப்பூர், கவுகாத்தி, விசாகப்பட்டினம் மற்றும் திருவனந்தபுரம் ஆகிய இடங்களில் 5 டி20 போட்டிகள் நடைபெற உள்ளன.
இந்நிலையில், நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் இருந்து இந்தியாவின் முன்னணி வீரரான ரிஷப் பண்ட் விளையாட மாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது.
வதோதராவில் இந்தியா-நியூசிலாந்து இடையிலான முதல் ஓடிஐ போட்டி இன்று தொடங்க உள்ளது. இதனால் இரு அணிகளின் வீரர்களும் நேற்று தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர்.
இந்திய அணியின் ரிஷப் பண்டும் தீவிர வலைப் பயிற்சியில் ஈடுபட்டார். அப்போது இடுப்புக்கு மேல் பந்து தாக்கியதில் அவருக்கு காயம் ஏற்பட்டது. வலியால் துடித்த அவருக்கு முதலுதவி சிகிச்சை மைதானத்திலேயே அளிக்கப்பட்டது. முதலுதவி சிகிச்சைக்குப் பின், ரிஷப் பண்ட் மைதானத்தில் இருந்து வெளியேறினார்.
- இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி நாளை நடக்கவுள்ளது.
- இந்த போட்டிக்காக இந்திய வீரர்கள் இன்று தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர்.
புதுடெல்லி:
நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒரு நாள் மற்றும் ஐந்து டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. இதில் இந்தியா- நியூசிலாந்து அணிகள் இடையிலான முதல் ஒருநாள் போட்டி வதோதராவில் நாளை நடைபெற உள்ளது.
அதனை தொடர்ந்து ராஜ்கோட் (ஜன.14), இந்தூர் (ஜன.18) ஆகிய இடங்களில் நடக்கிறது. ஒருநாள் போட்டி இந்திய நேரப்படி மதியம் 1.30 மணிக்கு தொடங்குகிறது.
இந்த நிலையில், இந்த தொடருக்காக இந்திய அணி வீரர்கள் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். அது தொடர்பான புகைப்படம் மற்றும் வீடியோவை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.
மேலும் பயிற்சி முடிந்த பிறகு சிறுவர்களுடன் சீனியர் இந்திய வீரர்களான ரோகித் சர்மா, விராட் கோலி புகைப்படம் எடுத்துக் கொண்டனர். குறிப்பாக அதில் ஒரு சிறுவன் சிறுவயது விராட் கோலி போல் இருப்பதால் அந்த புகைப்படத்தை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.
- நிச்சயமாக, இந்த இரண்டு பேரும் உங்கள் அணியில் இருப்பது உங்கள் வேலையை மிகவும் எளிதாக்குகிறது.
- நீங்கள் எப்போதாவது ஒரு சவாலான சூழ்நிலையில் இருக்கும்போது, அவர்களிடம் ஆலோசனை கேட்கலாம்.
இந்தியா- நியூசிலாந்து அணிகள் ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாட உள்ளது. இரு அணிகள் மோதும் முதல் ஒருநாள் நாளை நடக்கவிருக்கிறது. இதற்கான பயிற்சியில் இந்திய வீரர்கள் தீவிர வலை பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்திய அணியின் சீனியர் வீரர்களான ரோகித் மற்றும் கோலி குறித்து இந்திய அணியின் புதிய கேப்டனான சுப்மன் கில்லிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு சுப்மன் கில் கூறியதாவது:-
நீங்கள் குறிப்பிட்ட இரண்டு வீரர்களில், ஒருவர் ஒருநாள் போட்டிகளில் எல்லா காலத்திலும் சிறந்த தொடக்க ஆட்டக்காரர்களில் ஒருவர் (ரோஹித்), விராட் பாய் எல்லா காலத்திலும் சிறந்த ஒருநாள் பேட்ஸ்மேன்களில் ஒருவர். எனவே, நிச்சயமாக, இந்த இரண்டு பேரும் உங்கள் அணியில் இருப்பது உங்கள் வேலையை மிகவும் எளிதாக்குகிறது.
மேலும் நீங்கள் எப்போதாவது ஒரு சவாலான சூழ்நிலையில் இருக்கும்போது, அவர்களிடம் ஆலோசனை கேட்கலாம். ஏனெனில் அவர்கள் பெரும்பாலும் அத்தகைய சூழ்நிலைகளில் இருந்திருக்கிறார்கள். அவர்கள் எப்படி சிந்திக்கிறார்கள் அல்லது என்ன செய்வார்கள் என்பதை அறிய நீங்கள் அவர்களிடம் செல்லலாம். அந்தத் தகவல் எந்த ஒரு கேப்டனுக்கும் மிகவும் மதிப்பு வாய்ந்தது.
என சுப்மன் கில் கூறினார்.
- இந்தியா- நியூசிலாந்து இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி பரோடாவில் நாளை மறுதினம் நடக்கிறது.
- 23 வயதான ஆதித்யா அசோக் இதுவரை 2 ஒரு நாள் மற்றும் ஒரு 20 ஓவர் போட்டியில் ஆடியுள்ளார்.
புதுடெல்லி:
இந்தியாவுக்கு வந்துள்ள நியூசிலாந்து கிரிக்கெட் அணி 3 ஒரு நாள் மற்றும் ஐந்து 20 ஓவர் போட்டிகளில் விளையாடுகிறது. இந்தியா- நியூசிலாந்து இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி பரோடாவில் நாளை மறுதினம் நடக்கிறது.
இந்த போட்டிக்கான நியூசிலாந்து அணியில் இடம் பெற்றுள்ள சுழற்பந்து வீச்சாளர் ஆதித்யா அசோக் தமிழகத்தை பூர்விகமாக கொண்டவர். வேலூரில் பிறந்த அவருக்கு 4 வயதாக இருக்கும் போது அவரது குடும்பம் நியூசிலாந்துக்கு இடம் பெயர்ந்தது. அவரது உறவினர்கள் வேலூரில் தான் வசித்து வருகிறார்கள்.
கடந்த ஆண்டு சென்னைக்கு வந்து சி.எஸ்.கே. அகாடமியில் சில வாரங்கள் பயிற்சியில் ஈடுபட்ட அவர் ஒரு நாள் தொடரில் சாதிக்க ஆர்வமுடன் உள்ளார். நேற்று நிருபர்களிடம் பேசிய ஆதித்யா அசோக் கூறுகையில், 'அதிர்ஷ்டவசமாக சென்னைக்கு வந்து பயிற்சி எடுக்க வாய்ப்பு கிடைத்தது. அதற்காக நியூசிலாந்து கிரிக்கெட் வாரியத்துக்கு நன்றி கடன்பட்டுள்ளேன். இந்த பயிற்சியின் மூலம் நிறைய விஷயங்களை கற்றுக்கொண்டேன். குறிப்பாக இங்குள்ள கரிசல் மண், செம்மண் போன்ற ஆடுகளங்களில் எப்படி பந்து வீசுவது என்பதை அறிந்து கொண்டேன். அந்த அனுபவம் ஒரு நாள் தொடரில் மிகவும் உதவிகரமாக இருக்கும் என்று நம்புகிறேன்' என்றார். 23 வயதான ஆதித்யா அசோக் இதுவரை 2 ஒரு நாள் மற்றும் ஒரு 20 ஓவர் போட்டியில் ஆடியுள்ளார். அவர் தமிழ் சினிமாவில் பிரபலமான 'என் வழி, தனி வழி' என்ற வசனத்தை கையில் பச்சை குத்தியிருப்பது கவனிக்கத்தக்கது.
- முதல் ஒருநாள் போட்டி வருகிற 11-ந் தேதி நடைபெற உள்ளது.
- ஒருநாள் இந்திய அணியில் சீனியர் வீரர்களான ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.
நியூசிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் டி20 தொடரில் விளையாடுவதற்காக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. இந்த தொடருக்கான டி20 அணி முன்னரே அறிவிக்கப்பட்ட நிலையில் ஒருநாள் தொடருக்கான அணி சிலதினங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது.
இந்த ஒருநாள் அணியில் சீனியர் வீரர்களான ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோர் இடம் பிடித்துள்ளனர். இரு அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி வருகிற 11-ந் தேதி நடைபெற உள்ளது.
இந்நிலையில் ஒருநாள் தொடரில் விளையாடுவதற்காக இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி இன்று லண்டனில் இருந்த மும்பை வந்தடைந்தார். இது தொடர்பான புகைப்படம் மற்றும் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
- ஒருநாள் தொடருக்கு சுப்மன் கில் தலைமையில் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
- இந்த தொடரில் ஹர்திக் பாண்ட்யா இடம்பெறாதது ஏன் என்று ரசிகர்கள் மத்தியில் கேள்வி எழுந்தது.
நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து மூன்று ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் மற்றும் 5 டி20 ஓவர் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க இருக்கிறது.
இதில் முதலில் ஒருநாள் தொடரும் அதனை தொடர்ந்து டி20 தொடரும் நடைபெற உள்ளது. இதற்கான முதல் ஒருநாள் போட்டி வரும் ஜனவரி 11-ம் தேதி தொடங்க உள்ளது. ஜனவரி 14 மற்றும் 18 ஆம் தேதிகளில் முறையே 2-வது மற்றும் மூன்றாவது ஒருநாள் போட்டி நடைபெறுகிறது.
இந்நிலையில், நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கு சுப்மன் கில் தலைமையில் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
துணை கேப்டன் ஷ்ரேயஸ் விளையாடுவாரா? இல்லையா? என அவரது உடற்தகுதியை பொறுத்து பின்னர் உறுதி செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தொடரில் ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா இடம்பெறாதது ஏன் என்று ரசிகர்கள் மத்தியில் கேள்வி எழுந்தது. இந்நிலையில், ஒருநாள் போட்டிகளில் 10 ஓவர்கள் பந்து வீசுவதற்கான உடற் தகுதிச் சான்றை இன்னும் ஹர்திக் பாண்ட்யா பெறாததால், அவரை நியூசிலாந்துக்கு எதிரான ODI தொடரில் தேர்வு செய்யவில்லை என பிசிசிஐ இதற்கு விளக்கம் அளித்துள்ளது.
மேலும் டி20 உலக கோப்பை அணியிலும் அவர் உள்ளதால் வேலைப் பளு அதிகரித்து விடக் கூடாது என்ற நோக்கத்திலும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- இந்தியா- நியூசிலாந்து அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி வரும் ஜனவரி 11-ம் தேதி நடக்கவுள்ளது.
- ஜனவரி 14 மற்றும் 18 ஆம் தேதிகளில் முறையே 2-வது மற்றும் மூன்றாவது ஒருநாள் போட்டி நடைபெறுகிறது.
நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து மூன்று ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் மற்றும் 5 டி20 ஓவர் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க இருக்கிறது.
இதில் முதலில் ஒருநாள் தொடரும் அதனை தொடர்ந்து டி20 தொடரும் நடைபெற உள்ளது. இதற்கான முதல் ஒருநாள் போட்டி வரும் ஜனவரி 11-ம் தேதி தொடங்க உள்ளது. ஜனவரி 14 மற்றும் 18 ஆம் தேதிகளில் முறையே 2-வது மற்றும் மூன்றாவது ஒருநாள் போட்டி நடைபெறுகிறது.
இந்நிலையில், நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கு சுப்மன் கில் தலைமையில் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
துணை கேப்டன் ஷ்ரேயஸ் விளையாடுவாரா? இல்லையா? என அவரது உடற்தகுதியை பொறுத்து பின்னர் உறுதி செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வீரர்கள் விவரம்:-
சுப்மன் கில் (C), ரோகித் ஷர்மா, விராட் கோலி, கே.எல்.ராகுல் , ஷ்ரேயாஸ் ஐயர், வாஷிங்டன் சுந்தர், ரவீந்திர ஜடேஜா, முகமது சிராஜ், ஹர்ஷித் ராணா, பிரசித் கிருஷ்ணா, குல்தீப் யாதவ், ரிஷப் பண்ட் , நிதிஷ் குமார் ரெட்டி, அர்ஷ்தீப் சிங், யஷஸ்வி ஜெய்ஸ்வால்






