என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விராட் கோலி"

    • சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஜேமிசன் பந்தில் 93 ரன்களில் கோலி ஆட்டமிழந்தார்.
    • நேற்றைய போட்டியில் ஆட்ட நாயகன் விருதை கோலி வென்றார்.

    இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி இன்று வதோதராவில் நடைபெற்றது.

    போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் பந்துவீச்சை தேர்வுசெய்தார். இதன்படி நியூசிலாந்து முதலில் பேட்டிங் செய்தது. 50 ஓவர்களின் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 300 ரன்கள் குவித்து, இந்தியாவிற்கு வெற்றி இலக்காக 301 ரன்களை நிர்ணயித்தது. தொடர்ந்து விளையாடிய இந்திய அணி 49 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 306 ரன்கள் குவித்தது. இதன்மூலம் 4 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றிப் பெற்றது. இதன்மூலம் தொடரில் இந்தியா 1-0 என்ற கணக்கில் உள்ளது.

    இப்போட்டியில் ரோகித் அவுட்டாகி வெளியேறிய சமயத்தில் கோலி களமிறங்கிய போது மைதானத்தில் இருந்த ரசிகர்கள் கூச்சலிட்டு ஆரவாரம் செய்தனர்.

    போட்டி முடிந்த பின்பு இதுகுறித்து பேசிய கோலி, "ஒருவர் அவுட் ஆகி வெளியே செல்லும்போது, களத்திற்குள் வரும் எனக்கு அதிக ஆர்ப்பரிப்பு எழுவது எனக்கு பிடிக்கவில்லைதான். இதே போல தோனிக்கும் அடிக்கடி நடக்கிறது. ரசிகர்களின் உற்சாகத்தை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. அதே நேரத்தில், அவுட்டாகி வெளியேறுபவர் இதை பெரிதும் விரும்ப மாட்டார் என நினைக்கிறேன்" என்று தெரிவித்தார்.

    • முதலில் ஆடிய நியூசிலாந்து 50 ஓவரில் 300 ரன்கள் எடுத்தது.
    • அடுத்து ஆடிய இந்தியா 49 ஓவரில் 306 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

    அகமதாபாத்:

    இந்தியா, நியூசிலாந்து அணிகள் இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி குஜராத் மாநிலம் வதோதராவில் உள்ள கோடாம்பி ஸ்டேடியத்தில் இன்று நடந்தது. டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய நியூசிலாந்து அணி 50 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 300 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய இந்தியா 49 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 306 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.

    இந்நிலையில், இந்தப் போட்டியின்போது இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன்களான ரோகித் சர்மா மற்றும் விராட் கோலிக்கு பரோடா கிரிக்கெட் சங்கம் சார்பில் வித்தியாசமான முறையில் பாராட்டு விழா நடந்தது.

    மைதானத்தின் ஓரம் பீரோ போன்று வைக்கப்பட்டிருந்த பெட்டியில் இருந்து இருவரும் வெளியே வந்ததும் பூச்செண்டு கொடுத்து கவுரவிக்கப்பட்டனர். அவர்கள் அதில் இருந்த தங்களது ஆளுயர புகைப்படத்தில் கையெழுத்திட்டனர். இது ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தது.

    • முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து 300 ரன்கள் குவித்து, இந்தியாவிற்கு 301 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது.
    • அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

    இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல்போட்டி இன்று வதோதராவில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சை தேர்வுசெய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து 300 ரன்கள் குவித்து, இந்தியாவிற்கு 301 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது.

    அதனைத்தொடர்ந்து இந்தியா பேட்டிங் செய்துவருகிறது. இந்நிலையில் 40வது ஓவரில் விராட் கோலி ஆட்டமிழந்தார். சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஜேமிசன் பந்தில் 93 ரன்களில் ஆட்டமிழந்தார். ஆனால் இப்போட்டியின் மூலம் உலக சாதனை படைத்துள்ளார் கோலி. அதாவது சர்வதேச கிரிக்கெட்டில் அதிவேகமாக 28,000 ரன்கள் எடுத்த வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். விராட் கோலி தனது 624வது இன்னிங்ஸில் இந்த சாதனையை அடைந்தார்.

    ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் (644 இன்னிங்ஸ்) மற்றும் இலங்கை வீரர் குமார் சங்கக்காரா (666 இன்னிங்ஸ்) ஆகியோரின் சாதனைகளை முறியடித்துள்ளார். மேலும் சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். இந்த பட்டியலில் சச்சின் முதலிடத்தில் உள்ளார். சச்சின் டெண்டுல்கர், 34,357 ரன்கள் குவித்து, இந்தப் பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார்.


    • இந்தியா- நியூசிலாந்து இடையிலான முதல் போட்டி வதோதராவில் நடைபெற்று வருகிறது.
    • இந்த போட்டிக்காக விராட் கோலி தீவிர வலைப்பயிற்சி மேற்கொண்டு வந்தார்.

    இந்திய அணி நியூசிலாந்துக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் வதோதராவில் இன்று தொடங்கியது. இந்த போட்டிக்கு முன்னதாக இந்தியாவின் முன்னணி பேட்ஸ்மேனான விராட் கோலி தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டார். அப்போது வதோதராவைச் சேர்ந்த இளம் பந்து வீச்சாளர்கள் நெட் பவுலர்களாக பயன்படுத்தப்பட்டனர். அவர்கள் விராட் கோலிக்கு நன்றாக பந்து வீசினர். அவர்கள் பந்து வீச்சில் விராட் கோலி சிறப்பாக பயிற்சி மேற்கொண்டார்.

    தனக்கு பந்து வீசிய இளைஞர்களுக்கு கையெழுத்திட்ட பந்துகளை வழங்கினார். அத்துடன் உத்வேகம் அளிக்கும் வகையில் டிப்ஸ் வழங்கினார்.

    நெட் பவுலர்களுடன் உரையாடிய விராட் கோலி "ஒரு பந்து வீச்சாளராக எனக்கு எதிராக ஒரு பேட்ஸ்மேன் தானாகவே எதையும் செய்யாமல், நான் தவறு செய்வதற்காகவோ அல்லது பந்து தானாகவே அடிக்கும் வகையில் வருவதற்காக காத்திருந்தால், அப்போது பந்து வீச்சாளருக்கு எல்லாம் முடிந்துவிட்டது. அதனால், ரன்கள் விட்டுக் கொடுத்தால் அது ஒரு பிரச்சனையல்ல. ஆனால், அதை தன்னம்பிக்கையுடன் செய்யுங்கள். நான் வீச விரும்பும் பந்தைத்தான் நான் வீசுவேன். ஒரு பேட்ஸ்மேன் விரும்பும் பந்தை நான் வீசப் போவதில்லை" எனத் தெரிவித்தார்.

    • சர்வதேச கிரிக்கெட்டில் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் மட்டுமே விராட் கோலி விளையாடி வருகிறார்.
    • சமீபத்தில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில், அடுத்தடுத்து சதமடித்து அசத்தினார்.

    அகமதாபாத்:

    சர்வதேச கிரிக்கெட்டில் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் மட்டுமே விராட் கோலி விளையாடி வருகிறார். ஒருநாள் கிரிக்கெட்டிலும் தொடர்ச்சியாக ரன்களைக் குவித்து வருகிறார்.

    சமீபத்தில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில், அடுத்தடுத்து சதமடித்து அசத்தினார்.

    இந்நிலையில், நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் விராட் கோலி சாதனை ஒன்றை படைக்க உள்ளார்.

    விராட் கோலி இதுவரை சர்வதேச கிரிக்கெட்டில் 27,975 ரன்களை எடுத்துள்ளார். இன்னமும் 25 ரன்களை எடுக்கும் பட்சத்தில் சர்வதேச கிரிக்கெட்டில் அதிவிரைவாக 28,000 ரன்களை எடுத்த வீரர் என்ற சாதனையை விராட் கோலி படைத்து விடுவார்.

    சச்சின் டெண்டுல்கர் மற்றும் குமார் சங்ககரா ஆகியோர் 28,000 ரன்களைக் கடந்துள்ளனர்.

    சச்சின் 664 போட்டிகளில் 782 இன்னிங்ஸ்களில் 34,357 ரன்களை எடுத்தார். 1989 முதல் 2013 வரை இவர் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடினார். சராசரி, 48.52ஆக இருக்கிறது. 100 சதம், 164 அரை சதங்களை சச்சின் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி நாளை நடக்கவுள்ளது.
    • இந்த போட்டிக்காக இந்திய வீரர்கள் இன்று தீவிர பயிற்சியில் ஈடுபட்டனர்.

    புதுடெல்லி:

    நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒரு நாள் மற்றும் ஐந்து டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. இதில் இந்தியா- நியூசிலாந்து அணிகள் இடையிலான முதல் ஒருநாள் போட்டி வதோதராவில் நாளை நடைபெற உள்ளது.

    அதனை தொடர்ந்து ராஜ்கோட் (ஜன.14), இந்தூர் (ஜன.18) ஆகிய இடங்களில் நடக்கிறது. ஒருநாள் போட்டி இந்திய நேரப்படி மதியம் 1.30 மணிக்கு தொடங்குகிறது.

    இந்த நிலையில், இந்த தொடருக்காக இந்திய அணி வீரர்கள் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். அது தொடர்பான புகைப்படம் மற்றும் வீடியோவை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.

    மேலும் பயிற்சி முடிந்த பிறகு சிறுவர்களுடன் சீனியர் இந்திய வீரர்களான ரோகித் சர்மா, விராட் கோலி புகைப்படம் எடுத்துக் கொண்டனர். குறிப்பாக அதில் ஒரு சிறுவன் சிறுவயது விராட் கோலி போல் இருப்பதால் அந்த புகைப்படத்தை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர். 

    • நிச்சயமாக, இந்த இரண்டு பேரும் உங்கள் அணியில் இருப்பது உங்கள் வேலையை மிகவும் எளிதாக்குகிறது.
    • நீங்கள் எப்போதாவது ஒரு சவாலான சூழ்நிலையில் இருக்கும்போது, ​​அவர்களிடம் ஆலோசனை கேட்கலாம்.

    இந்தியா- நியூசிலாந்து அணிகள் ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாட உள்ளது. இரு அணிகள் மோதும் முதல் ஒருநாள் நாளை நடக்கவிருக்கிறது. இதற்கான பயிற்சியில் இந்திய வீரர்கள் தீவிர வலை பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்திய அணியின் சீனியர் வீரர்களான ரோகித் மற்றும் கோலி குறித்து இந்திய அணியின் புதிய கேப்டனான சுப்மன் கில்லிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

    அதற்கு சுப்மன் கில் கூறியதாவது:-

    நீங்கள் குறிப்பிட்ட இரண்டு வீரர்களில், ஒருவர் ஒருநாள் போட்டிகளில் எல்லா காலத்திலும் சிறந்த தொடக்க ஆட்டக்காரர்களில் ஒருவர் (ரோஹித்), விராட் பாய் எல்லா காலத்திலும் சிறந்த ஒருநாள் பேட்ஸ்மேன்களில் ஒருவர். எனவே, நிச்சயமாக, இந்த இரண்டு பேரும் உங்கள் அணியில் இருப்பது உங்கள் வேலையை மிகவும் எளிதாக்குகிறது.

    மேலும் நீங்கள் எப்போதாவது ஒரு சவாலான சூழ்நிலையில் இருக்கும்போது, அவர்களிடம் ஆலோசனை கேட்கலாம். ஏனெனில் அவர்கள் பெரும்பாலும் அத்தகைய சூழ்நிலைகளில் இருந்திருக்கிறார்கள். அவர்கள் எப்படி சிந்திக்கிறார்கள் அல்லது என்ன செய்வார்கள் என்பதை அறிய நீங்கள் அவர்களிடம் செல்லலாம். அந்தத் தகவல் எந்த ஒரு கேப்டனுக்கும் மிகவும் மதிப்பு வாய்ந்தது.

    என சுப்மன் கில் கூறினார்.

    • முதல் ஒருநாள் போட்டி வருகிற 11-ந் தேதி நடைபெற உள்ளது.
    • ஒருநாள் இந்திய அணியில் சீனியர் வீரர்களான ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.

    நியூசிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் மற்றும் டி20 தொடரில் விளையாடுவதற்காக இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. இந்த தொடருக்கான டி20 அணி முன்னரே அறிவிக்கப்பட்ட நிலையில் ஒருநாள் தொடருக்கான அணி சிலதினங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது.

    இந்த ஒருநாள் அணியில் சீனியர் வீரர்களான ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோர் இடம் பிடித்துள்ளனர். இரு அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி வருகிற 11-ந் தேதி நடைபெற உள்ளது.

    இந்நிலையில் ஒருநாள் தொடரில் விளையாடுவதற்காக இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி இன்று லண்டனில் இருந்த மும்பை வந்தடைந்தார். இது தொடர்பான புகைப்படம் மற்றும் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    • விஜய் ஹசாரே டிராபியில் ரோகித், விராட் மீண்டும் வந்தபோது மக்கள் நேரில் வந்து பார்த்தனர்.
    • கிரிக்கெட் வீரரை விட விளையாட்டு பெரியது என எப்போதும் கூறுவேன் என்றார் அஸ்வின்.

    புதுடெல்லி:

    முன்னாள் கிரிக்கெட் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் தனது யூடியூப் சேனலில் பேசியதாவது:

    2027 ஒருநாள் உலகக் கோப்பைக்குப் பிறகு ஒருநாள் போட்டி வடிவம் குறித்து உறுதியாக எதுவும் சொல்ல முடியாது. அதைப் பற்றி நான் கவலைப்படுகிறேன்.

    ரசிகர்கள் என்ன விரும்புகிறார்கள் என்பதை அறிந்து கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது.

    டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு இன்னும் ஒரு இடம் இருக்கிறது என்று நான் நினைக்கிறேன், ஆனால் ஒருநாள் போட்டிகளுக்கு இடமில்லை என்று நினைக்கிறேன்.

    விஜய் ஹசாரே டிராபியில் ரோகித் மற்றும் விராட் மீண்டும் வந்தபோது மக்கள் நேரில் வந்து பார்த்தார்.

    கிரிக்கெட் வீரரை விட விளையாட்டு பெரியது என எப்போதும் கூறுவேன். இவர்கள் ஓய்வு பெறும்போது என்ன நடக்கும்?

    ஐ.சி.சி. பிபாவிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும். கால்பந்தில் பல லீக்குகள் உள்ளன. ஆனால் பிபா 4 ஆண்டுக்கு ஒருமுறை உலகக் கோப்பையை நடத்துகிறது. உலகக் கோப்பைக்கு மதிப்பு உண்டு.

    ஒருநாள் போட்டியை முக்கியமானதாக மாற்ற விரும்பினால், உலகக் கோப்பையை 4 ஆண்டுக்கு ஒருமுறை நடத்தப்பட வேண்டும்.

    ஒருநாள் தொடருக்குப் பதிலாக, டி20 தொடர்களை விளையாட வேண்டும். இது உள்நாட்டுப் போட்டியில் சிறப்பாகச் செயல்படும் வீரர்களைத் தேர்ந்தெடுக்க வாரியத்திற்கு உதவும் என தெரிவித்தார்.

    • விராட் கோலி டெல்லி அணிக்காக விளையாடி வருகிறார்
    • 3-வது போட்டியில் இன்று நடக்கும் ஆட்டத்தில் சவுராஷ்டிரா அணிக்கு எதிராக விராட் கோலி விளையாடவில்லை.

    33-வது விஜய் ஹசாரே கோப்பைக்கான ஒரு நாள் கிரிக்கெட் போட்டி தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் 38 அணிகள் பங்கேற்றுள்ளன. இந்த தொடரில் முன்னணி வீரர்கள் விளையாடுவதால் ரசிகர்கள் கூட்டம் அலை மோதுகிறது. குறிப்பாக விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா போட்டிகளில் ரசிகர்கள் குவிந்து வருகின்றனர்.

    இந்த தொடரில் விராட் கோலி டெல்லி அணிக்காக விளையாடி வருகிறார். 2 போட்டிகளில் விளையாடிய அவர் இன்று நடக்கும் 3-வது போட்டியில் சவுராஷ்டிரா அணிக்கு எதிராக விளையாடவில்லை.

    இந்நிலையில் விராட் கோலி அடுத்த போட்டியில் எப்போது விளையாடுவார் என தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி ஜனவரி 6-ம் தேதி ஆலூரில் நடைபெறும் ரெயில்வேஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் விராட் கோலி விளையாடுவார் என்று டிடிசிஏ உயர் அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளார்.

    இந்த தொடரில் முதல் 2 போட்டியில் விளையாடிய விராட் கோலி ஒரு அரை சதம் மற்றும் ஒரு சதம் விளாசினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • முதல் போட்டியில் ரோகித் 94 பந்தில் 155 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

    இந்திய உள்ளூர் ஒருநாள் (50 ஓவர்) கிரிக்கெட் தொடரான விஜய் ஹசாரே கோப்பையின் 33-வது சீசன் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் மொத்தம் 38 அணிகள் பங்கேற்கின்றன.

    இந்திய கிரிக்கெட் அணிக்காக விளையாடும் வீரர்கள் அனைவரும் உள்ளூர் போட்டிகளில் விளையாட வேண்டும் என்று பி.சி.சி.ஐ. அறிவுறுத்தி உள்ளது. இதனால் இந்த தொடரில் விராட், ரோகித், பண்ட் உள்ளிட்ட பல முன்னணி வீரர்கள் விளையாடுகின்றனர்.

    இந்த தொடரில் ரோகித் சர்மா மும்பை அணிக்காகவும் விராட் கோலி டெல்லி அணிக்காகவும் விளையாடி வருகின்றனர். முதல் போட்டியில் ரோகித் 94 பந்தில் 155 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அதில் 18 பவுண்டரிகளும் 9 சிக்சர்களும் அடங்கும்.

    விராட் கோலி 101 பந்தில் 133 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதில் 14 பவுண்டரிகளும் 3 சிக்சர்களும் அடங்கும்.

    இந்நிலையில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் மும்பை - உத்தரகாண்ட் அணிகள் விளையாடி வருகின்றனர். முதலில் பேட்டிங் செய்த மும்பையில் தொடக்க வீரர் ரோகித் சர்மா தான் சந்தித்த முதல் பந்திலேயே அவுட் ஆகி வெளியேறினார். இது ரோகித் ரசிகர்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.

    மற்றொரு போட்டியில் டெல்லி- குஜராத் அணிகள் மோதி வருகின்றனர். இதில் முதலில் பேட்டிங் செய்து வரும் டெல்லி அணியின் வீரர் விராட் கோலி 77 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். கடைசி 6 போட்டிகளில் விராட் கோலி 3 சதம் 3 அரைசதம் விளாசி செம பார்மில் உள்ளார். 

    • 2027-ம் ஆண்டு நடைபெறும் ஒருநாள் உலக கோப்பை தொடரில் விளையாட விராட் கோலி ஆவலாக உள்ளார்.
    • கோலி விளையாடிய கடைசி 5 போட்டிகளில் 3 சதம், 2 அரைசதம் விளாசியுள்ளார்.

    இந்திய அணியின் நட்சத்திர பேட்டர் விராட் கோலி. இவர் 2008-ம் ஆண்டு ஒருநாள் போட்டிகளில் அறிமுகமானதிலிருந்து, சுமார் 17 ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய அணிக்காக விளையாடி வருகிறார்.

    3 வடிவத்திலும் பல சாதனைகளை விராட் கோலி படைத்துள்ளார். சச்சின் டெண்டுல்கருக்கு அடுத்தபடியாக, சர்வதேச கிரிக்கெட்டில் 84 சதங்களுடன் கோலி இரண்டாவது இடத்தில் உள்ளார். (டெஸ்டில் 30, ஒருநாள் போட்டிகளில் 53, டி20யில் 1).

    இவர் டெஸ்ட் மற்றும் டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு அறிவித்த நிலையில் ஒருநாள் போட்டியில் மட்டும் விளையாடி வருகிறார். 2027-ம் ஆண்டு நடைபெறும் ஒருநாள் உலக கோப்பை தொடரில் விளையாட விராட் கோலி ஆவலாக உள்ளார்.

    37 வயதிலும் அவர் மிக உயர்ந்த உடல் தகுதியுடன் உள்ளார். இது இன்னும் சில ஆண்டுகள் அவர் விளையாட உதவும். அவர் தற்போது மிகச் சிறந்த ஃபார்மில் உள்ளார். சமீபத்திய ஒருநாள் தொடர்களில் அவர் தொடர்ந்து சதங்கள் அடித்து வருகிறார்.

    மேலும் விஜய் ஹசாரே தொடரிலும் அவர் சதம் அடித்து அசத்தி உள்ளார். இதன் மூலம் விராட் கோலி விளையாடிய கடைசி 5 போட்டிகளில் 3 சதம், 2 அரை சதம் விளாசியுள்ளார்.

    இந்நிலையில் 2027 உலகக் கோப்பைக்கு விராட் கோலி முழுமையாகத் தயாராக உள்ளார் என அவரது சிறுவயது பயிற்சியாளர் ராஜ்குமார் சர்மா கூறியுள்ளார். 

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    விராட், இந்தியாவுக்காக பல போட்டிகளில் வெற்றி பெற்ற விதம் எனக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது. வேறு யாரும் அவரைப் போல இந்தியாவுக்காக இவ்வளவு போட்டிகளில் வெற்றி பெற்றதில்லை என்று நினைக்கிறேன். அவர் என் மாணவர் என்பதில் எனக்கு மிகுந்த பெருமையாக இருக்கிறது. இதை விட பெரிய பெருமை என்ன இருக்க முடியும்.

    விராட் கோலி அற்புதமான ஃபார்மில் இருக்கிறார். அவர் மிகச் சிறப்பாக பேட்டிங் செய்து டெல்லியின் வெற்றியை உறுதி செய்தார். நீண்ட காலத்திற்குப் பிறகு உள்ளூர் கிரிக்கெட்டில் விளையாடினார், ஆனால் இன்னும் விதிவிலக்காக சிறப்பாக செயல்பட்டார். அவர் இந்திய அணியில் மிகவும் நிலையான வீரர் மற்றும் 2027 உலகக் கோப்பைக்கு முழுமையாக தயாராக உள்ளார். 

    என ராஜ்குமார் சர்மா கூறினார்.

    ×