search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "PAKvAUS"

    • பாகிஸ்தான் தரப்பில் அலி ராசா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
    • இறுதி போட்டியில் இந்தியா - ஆஸ்திரேலியா வருகிற 11-ந் தேதி மோதுகிறது.

    15-வது ஜூனியர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்கு உட்பட்டோர்) தென்ஆப்பிரிக்காவில் நடந்து வருகிறது. சூப்பர் சிக்ஸ் சுற்று முடிவில் குரூப்1 பிரிவில் இருந்து இந்தியா, பாகிஸ்தானும், குரூப்2 பிரிவில் இருந்து ஆஸ்திரேலியா, தென்ஆப்பிரிக்காவும் முறையே முதல் 2 இடங்களை பிடித்து அரையிறுதிக்கு முன்னேறின.

    இந்த தொடரின் முதலாவது அரையிறுதி இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின. இதில் இந்தியா வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இந்நிலையில் 2-வது அரையிறுதியில் பாகிஸ்தான் - ஆஸ்திரேலியா இன்று மோதி வருகிறது.

    இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்து வீச்சை தேர்வுசெய்தது. அதன்படி களமிறங்கிய பாகிஸ்தான் வீரர்கள் தொடக்க முதலே திணறியது. இதனால் 79 ரன்கள் எடுப்பதற்குள் 5 விக்கெட்டுகளை இழந்தது. இதனையடுத்து அசான் அவாய்ஸ்- அராபத் மின்ஹாஸ் ஜோடி நிதானமாக விளையாடி ரன்களை குவித்தனர். பொறுப்புடன் ஆடிய இருவரும் அரை சதம் அடித்து அசத்தினர்.

    இருவரும் 52 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தனர். மற்ற வீரர்களில் ஷாமில் ஹுசைன்(17) தவிர மற்ற வீரர்கள் இரட்டை இலக்க ரன்களை தாண்டவில்லை. இறுதியில் பாகிஸ்தான் அணி 48.5 ஓவரில் 179 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

    ஆஸ்திரேலியா தரப்பில் டாம் ஸ்ட்ரேக்கர் 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    இதனையடுத்து ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஹாரி டிக்சன்- சாம் கான்ஸ்டாஸ் களமிறங்கினர். களமிறங்கிய 14 ரன்னில் அவுட் ஆனார். அடுத்து வந்த கேப்டன் 4, ஹர்ஜாஸ் சிங் 5, ரியான் ஹிக்ஸ் 0 ரன்களிலும் நடையை கட்டினார்.

    இதனால் 59 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து ஆஸ்திரேலியா தடுமாறியது. இதனையடுத்து ஆலிவர் பீக்- ஹாரி டிக்சன் ஜோடி சிறப்பாக ஆடி அணியை சரிவில் இருந்து மீட்டனர். சிறப்பாக ஆடிய ஹாரி டிக்சன் அரை சதம் விளாசி அவுட் ஆனார். ஆலிவர் பீக் 49 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    இதனையடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்னில் அவுட் ஆகினர். இறுதியில் கைவசம் 1 விக்கெட் மீதி இருந்தது. 16 ரன்கள் தேவைப்பட்டது. உச்சக்கட்ட பரப்பரப்பில் ஆஸ்திரேலியா 1 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு முன்னேறியது.

    பாகிஸ்தான் தரப்பில் அலி ராசா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இறுதிபோட்டியில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் வருகிற 11-ந் தேதி நடக்கிறது.

    • பாகிஸ்தானின் அசான் அவாய்ஸ்- அராபத் மின்ஹாஸ் ஆகியோர் 52 ரன்களில் ஆட்டமிழந்தனர்.
    • ஆஸ்திரேலியா தரப்பில் டாம் ஸ்ட்ரேக்கர் 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    15-வது ஜூனியர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்கு உட்பட்டோர்) தென்ஆப்பிரிக்காவில் நடந்து வருகிறது. சூப்பர் சிக்ஸ் சுற்று முடிவில் குரூப்1 பிரிவில் இருந்து இந்தியா, பாகிஸ்தானும், குரூப்2 பிரிவில் இருந்து ஆஸ்திரேலியா, தென்ஆப்பிரிக்காவும் முறையே முதல் 2 இடங்களை பிடித்து அரையிறுதிக்கு முன்னேறின.

    இந்த தொடரின் முதலாவது அரையிறுதி இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின. இதில் இந்தியா வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. இந்நிலையில் 2-வது அரையிறுதியில் பாகிஸ்தான் - ஆஸ்திரேலியா இன்று மோதி வருகிறது.

    இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பந்து வீச்சை தேர்வுசெய்தது. அதன்படி களமிறங்கிய பாகிஸ்தான் வீரர்கள் தொடக்க முதலே திணறியது. இதனால் 79 ரன்கள் எடுப்பதற்குள் 5 விக்கெட்டுகளை இழந்தது. இதனையடுத்து அசான் அவாய்ஸ்- அராபத் மின்ஹாஸ் ஜோடி நிதானமாக விளையாடி ரன்களை குவித்தனர். பொறுப்புடன் ஆடிய இருவரும் அரை சதம் அடித்து அசத்தினர்.

    இருவரும் 52 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தனர். மற்ற வீரர்களில் ஷாமில் ஹுசைன்(17) தவிர மற்ற வீரர்கள் இரட்டை இலக்க ரன்களை தாண்டவில்லை. இறுதியில் பாகிஸ்தான் அணி 48.5 ஓவரில் 179 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

    ஆஸ்திரேலியா தரப்பில் டாம் ஸ்ட்ரேக்கர் 6 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    பாகிஸ்தானுக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் 3-வது நடுவர் தெரியாமல் ‘ரெட்’ பட்டனை அழுத்தியிருக்கலாம் என்று ஆஸ்திரேலிய வீரர்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர். #PAKvAUS
    பாகிஸ்தான் - ஆஸ்திரேலியா இடையிலான 2-வது டி20 போட்டி துபாயில் நேற்று நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் 147 ரன்கள் சேர்த்தது. பின்னர் 148 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா களம் இறங்கியது.

    டி'ஆர்கி ஷார்ட், ஆரோன் பிஞ்ச் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். 3-வது ஓவரை இமாத் வாசிம் வீசினார். இந்த ஓவரின் கடைசி பந்தை ஆரோன் பிஞ்ச் சந்தித்தார். அப்போது பிஞ்ச் அடித்த பந்து நேராக பந்து வீச்சாளரை நோக்கி வந்தது. இமாத் வாசிம் பந்தை தனது கையால் தடுத்தார். பந்து கை விரலில் பட்டு எதிர்முனையில் உள்ள ஸ்டம்பை தாக்கியது. அப்போது டி'ஆர்கி ஷார்ட் பேட் க்ரீஸ்க்குள் இருந்தாலும் கிரவுண்டில் உரசியதாக தெரியவில்லை.



    இதனால் 3-வது நடுவர் முடிவிற்கு விடப்பட்டது. அப்போது பலமுறை ரீப்ளே செய்து பார்த்த போதிலும், ஒரு தெளிவான முடிவிற்கு வரமுடியவில்லை. இதனால் ஆஸ்திரேலியா வீரர்கள் தங்களுக்கு சாதகமான முடிவுதான் வரும் என்று எதிர்பார்த்தனர். ஆனால், 3-வது நடுவர் அவுட் கொடுத்துவிட்டார்.

    போட்டியின் பிற்பகுதியில் மேக்ஸ்வெல் அரைசதம் அடிக்க 11 ரன் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது ஆஸ்திரேலியா. இந்நிலையில் நடுவர் தெரியாமல் ரெட் பட்டனை அழுத்தியிருக்கலாம் என தங்களை ஆதங்கத்தை தெரிவித்துள்ளனர்.
    துபாயில் நடைபெற்ற 2-வது டி20 போட்டியில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி 2-0 என தொடரை கைப்பற்றியது பாகிஸ்தான். #PAKvAUS
    பாகிஸ்தான் - ஆஸ்திரேலியா இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. அபு தாபியில் கடந்த 24-ந்தேதி நடைபெற்ற முதல் ஆட்டத்தில் பாகிஸ்தான் 66 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    2-வது ஆட்டம் நேற்று துபாயில் நடைபெற்றது. டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது. தொடக்க வீரர் பாபர் ஆசம் (45), முகமகது ஹபீஷ் (40) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் பாகிஸ்தான் 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 147 ரன்கள் குவித்தது.

    பின்னர் 148 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா களம் இறங்கியது, டிஆர்கி ஷார்ட் (2), ஆரோன் பிஞ்ச் (3), கிறிஸ் லின் (7) ஆகியோர் சொற்ப ரன்களில் வெளியேறினார்கள்.



    இதனால் ஆஸ்திரேலியா ரன் குவிக்க திணறியது. மேக்ஸ்வெல் மட்டும் தாக்குப்பிடித்து 37 பந்தில் 52 ரன்கள் சேர்த்தார். மிட்செல் மார்ஷ் 21 ரன்னும், கவுல்டர்-நைல் 27 ரன்களும் அடிக்க ஆஸ்திரேலியாவால் 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 136 ரன்கள் மட்டுமே எடுத்தது.

    இதனால் பாகிஸ்தான் 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் பாகிஸ்தான் டி20 தொடர 2-0 என கைப்பற்றியது. 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி துபாயில் நாளை நடக்கிறது.
    பாகிஸ்தானுக்கு எதிரான அபு தாபி டெஸ்ட் போட்டியில் நான்கு விக்கெட்டுக்கள் வீழ்த்தி, அதிக விக்கெட் வீழ்த்திய பட்டியலில் மிட்செல் ஜான்சனை முந்தினார் நாதன் லயன். #PAKvAUS
    பாகிஸ்தான் - ஆஸ்திரேலியா இடையிலான 2-வது டெஸ்ட் அபு தாபியில் நடைபெற்று வருகிறது. நேற்றைய முதல் நாள் ஆட்டத்தில் பாகிஸ்தான் 282 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. ஆஸ்திரேலியாவின் சுழற்பந்து வீச்சாளரான நாதன் லயன் 6 பந்தில் நான்கு விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.

    இதன்மூலம் டெஸ்ட் போட்டியில் 80 ஆட்டங்களில் 314 விக்கெட்டுக்கள் வீழ்த்தி, அதிக விக்கெட்டுக்கள் வீழ்த்திய ஆஸ்திரேலிய வீரர்கள் பட்டியலில் மிட்செல் ஜான்சனை பின்னுக்குத் தள்ளியுள்ளார்.

    மிட்செல் ஜான்சன் 73 போட்டிகளில் விளையாடி 313 விக்கெட்டுக்கள் வீழ்த்தி ஐந்தாவது இடத்தில் உள்ளார். நாதன் லயன் 314 விக்கெட்டுக்களுடன் 4-வது இடத்தை பிடித்துள்ளார்.

    ஷேன் வார்னே 145 போட்டியில் 708 விக்கெட்டுக்களுடன் முதல் இடத்திலும், மெக்ராத் 124 போட்டியில் 563 விக்கெட்டுக்களுடன் 2-வது இடத்திலும், லில்லீ 355 விக்கெட்டுக்களுடன் 3-வது இடத்திலும் உள்ளனர்.
    அபு தாபி டெஸ்டில் ஆஸ்திரேலியா சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயன் ஐந்து பந்தில் நான்கு விக்கெட்டுக்கள் வீழ்த்தி பாகிஸ்தானை நிலைகுலையச் செய்தார். #PAKvAUS
    பாகிஸ்தான் - ஆஸ்திரேலியா இடையிலான 2-வது டெஸ்ட் அபு தாபியில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற பாகிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது. பாகிஸ்தான் அணியில் பகர் சமான், மிர் ஹம்சா ஆகியோர் அறிமுகம் ஆனார்கள். ஆஸ்திரேலியா அணியில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை.

    பகர் சமான், முகமது ஹபீஸ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். 3-வது ஓவரை ஸ்டார்க் வீசினார். இந்த ஓவரில் ஹபீஸ் 4 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து பகர் சமான் உடன் அசார் அலி ஜோடி சேர்ந்தார்.

    இந்த ஜோடி மிகவும் பொறுமையான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இதனால் ஸ்கோர் மந்த நிலையில் உயர்ந்தது. 18.2 ஓவரில் பாகிஸ்தான் 50 ரன்னைத் தொட்டது. 20-வது ஓவரை சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயன் வீசினார். இந்த ஓவரில் பாகிஸ்தானுக்கு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது.

    ஓவரின் ஐந்தாவது பந்தில் அசார் அலி 15 ரன்கள் எடுத்த நிலையில் லயனிடமே கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அடுத்த பந்தில் ஹரிஸ் சோஹைல் ரன்ஏதும் எடுக்காமல் முதல் பந்திலேயே வெளியேறினார்.

    அதோடு மட்டுமல்லாமல் 22-வது ஓவரின் 2-வது பந்தில் ஆசாத் ஷபிக் ரன்ஏதும் எடுக்காமலும், 4-வது பந்தில் பாபர் ஆசம் ரன்ஏதும் எடுக்காமலும் ஆட்டமிழந்தார். நாதன் லயன் 6 பந்தில் நான்கு விக்கெட்டுக்கள் வீழ்த்த பாகிஸ்தான் 57 ரன்களுக்குள் ஐந்து விக்கெட்டுக்களை இழந்தது.

    6-வது விக்கெட்டுக்கு பகர் சமான் உடன் சர்பிராஸ் அஹமது ஜோடி சேர்ந்தார். பகர் சமான் அதன்பின் மூன்று பவுண்டரிகள் விளாசினார். இருவரும் மதிய உணவு இடைவேளை வரை மேலும் விக்கெட் இழக்காமல் பார்த்துக் கொண்டனர். பாகிஸ்தான் முதல்நாள் மதிய உணவு இடைவேளை வரை 27 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 77 ரன்கள் எடுத்துள்ளது. பகர் சமான் 49 ரன்களுடனும், சர்பிராஸ் அஹமது 4 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
    ஆஸ்திரேலியாவிற்கு எதிரான அபு தாபி டெஸ்டில் பாகிஸ்தான் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளது. இரண்டு வீரர்கள் அறிமுகம் ஆகிறார்கள். #PAKvAUS
    பாகிஸ்தான் - ஆஸ்திரேலியா இடையில் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. துபாயில் நடைபெற்ற முதல் டெஸ்ட் வெற்றி தோல்வியின்றி டிரா ஆனது. பாகிஸ்தான் அணி 400 ரன்களுக்கு மேல் இலக்கு நிர்ணயித்த நிலையில் கவாஜா, டிம் பெய்ன் ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் ஆஸ்திரேலியா சுமார் 130 ஓவர்கள் சமாளித்து அசத்தலாக டிரா செய்தது.

    இந்நிலையில் 2-வது டெஸ்ட் இன்று அபு தாபியில் நடக்கிறது. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் பாகிஸ்தான் கேப்டன் சர்பிராஸ் அகமது டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளார். முதல் போட்டியின்போது காயம் அடைந்த தொடக்க பேட்ஸ்மேன் இமாம்-உல்-ஹக் அணியில் இடம்பெறவில்லை. அவருக்குப் பதிலாக பகர் சமான் டெஸ்டில் அறிமுகம் ஆகியுள்ளார்

    அதேபோல் வேகப்பந்து வீச்சாளர் ரியாஸ் வஹாப் நீக்கப்பட்டு மிர் ஹம்சா அறிமுகம் ஆகியுள்ளார். ஆஸ்திரேலியா அணியில் மாற்றம் ஏதும் செய்யப்படவில்லை.
    சதம் அடித்து 300 பந்துகளை சந்தித்து பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்டை டிரா செய்ய உதவிய கவாஜாவை டிம் பெய்ன் பெரிய அளவில் புகழாரம் சூட்டியுள்ளார். #PAKvAUS
    ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகள் மோதிய முதல் டெஸ்ட் போட்டி துபாயில் நடந்தது. இதில் பாகிஸ்தான் நிர்ணயித்த 462 ரன் இலக்கை நோக்கி விளையாடிய ஆஸ்திரேலியா போராடி டிரா செய்தது. அந்த அணி 8 விக்கெட்டுக்கு 362 ரன் எடுத்தது.



    தொடக்க வீரர் கவாஜா (141 ரன்) சதம் அடித்து தோல்வியில் இருந்து காப்பாற்றினார். அவரை ஆஸ்திரேலிய கேப்டன் டிம் பெய்ன் பாராட்டி உள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    அணி வீரர்களை நினைத்து உண்மையிலேயே பெருமைப்படுகிறேன். கவாஜாவின் ஆட்டம் சிறந்த டெஸ்ட் இன்னிங்சில் ஒன்றாகும். அடுத்த டெஸ்டில் இன்னும் சிறப்பாக விளையாடுவோம் என்றார். கவாஜா கூறும்போது, “ஆசிய கண்டத்தில் நீண்ட நேரம் களத்தில் நின்று விளையாடுவது என்பது சற்று வித்தியாசமானது. அதற்கு நிறைய மன தைரியம் வேண்டும்” என்றார்.
    கவாஜா மற்றும் டிம் பெய்ன் ஆகியோரின் அபார ஆட்டத்தில் பரபரப்பாக சென்ற துபாய் டெஸ்டை ஆஸ்திரேலியா டிரா செய்தது. #PAKvAUS
    பாகிஸ்தான் - ஆஸ்திரேலியா இடையிலான முதல் டெஸ்ட் துபாயில் நடைபெற்றது. டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த பாகிஸ்தான் முதல் இன்னிங்சில் 482 ரன்கள் குவித்தது. பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலியா 202 ரன்னில் சுருண்டது.

    280 முன்னிலையுடன் பாகிஸ்தான் 2-வது இன்னிங்சை தொடங்கியது. 57.5 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 181 எடுத்திருந்த நிலையில் பாகிஸ்தான் 2-வது இன்னிங்சை டிக்ளேர் செய்தது. ஒட்டு மொத்தமாக பாகிஸ்தான் 461 ரன்கள் முன்னிலைப் பெற்றது. இதனால் ஆஸ்திரேலியாவின் வெற்றிக்கு 462 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது.

    462 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் ஆஸ்திரேலியா களம் இறங்கியது. தொடக்க வீரர்கள் ஆரோன் பிஞ்ச், உஸ்மான் கவாஜா ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். பிஞ்ச் 49 ரன்கள் எடுத்த நிலையில் முகமது அப்பாஸ் பந்திலவ் எல்பிடபிள்யூ ஆனார். அப்போது ஆஸ்திரேலியா 87 ரன்கள் எடுத்திருந்தது. அதன்பின் வந்த மிட்செல் மார்ஷ், ஷேன் மார்ஷ் ஆகியோரை அப்பாஸ் அடுத்தடுத்து டக்அவுட்டில் வெளியேற்றினார்.

    இதனால் ஆஸ்திரேலியா 87 ரன்னுக்குள் 3 விக்கெட்டை இழந்து தடுமாறியது. 4-வது விக்கெட்டுக்கு உஸ்மான் கவாஜா உடன் டிராவிஸ் ஹெட் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நேற்றைய 4-வது நாள் ஆட்டம் முடியும் வரை மேலும் விக்கெட் இழக்காமல் பார்த்துக் கொண்டனர்.

    நேற்றைய 4-வது நாள் ஆட்ட முடிவில் ஆஸ்திரேலியா 3 விக்கெட் இழப்பிற்கு 136 ரன்கள் எடுத்திருந்தது. கவாஜா 50 ரன்னுடனும், டிராவிஸ் ஹெட் 34 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.


    டிராவிஸ் ஹெட்

    இன்று 5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் தொடங்கியது. ஆஸ்திரேலியாவின் கைவசம் 7 விக்கெட் இருந்தது. 326 ரன்கள் தேவைப்பட்டது. பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர்கள் எளிதாக 7 விக்கெட்டை கைப்பற்றி விடுவார்கள் என்ற எதிர்பார்க்கப்பட்டது.

    ஆனால் கவாஜா, டிராவிஸ் ஹெட் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். முக்கியமாக ஓவர்களை கடத்துவதில் கவனம் செலுத்தினார்கள். மதிய உணவு இடைவேளை வரை விக்கெட் இழக்காமல் பார்த்துக் கொண்டனர்.

    மதிய உணவு இடைவேளை முடிந்து ஆட்டம் தொடங்கியதும் டிராவிஸ் ஹெட் 72 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த லபுஸ்சேக்னே 13 ரன்னில் வெளியேறினார். இதனால் ஆட்டத்தில் பரபரப்பு தொற்றிக் கொண்டது.

    6-வது விக்கெட்டுக்கு உஸ்மான் கவாஜா உடன் கேப்டன் டிம் பெய்ன் ஜோடி சேர்ந்தார். இருவரும் நங்கூரம் பாய்ச்சி நின்ற மாதிரி நிலைத்து நின்று விளையாடினார்கள். கவாஜா சிறப்பாக விளையாடி 224 பந்தில் 10 பவுண்டரியுடன் சதம் அடித்தார்.

    இருவரும் நிலைத்து நிற்க ரசிகர்களிடையே பரபரப்பு தொற்றிக்கொண்டது. கடைசி 15 ஓவர் இருக்கும்வரை இந்த ஜோடி நிலைத்து நின்றது. 126-வது ஓவரை யாசிர் ஷா வீசினார். இந்த ஓவரில் உஸ்மான் கவாஜா 141 ரன்கள் எடுத்த நிலையில் எல்பிடபிள்யூ ஆனார். கவாஜா 302 பந்துகள் சந்தித்தார்.

    கவாஜா ஆட்டமிழந்ததும் பாகிஸ்தான் பக்கம் ஆட்டம் சற்று சரிந்தது. இதை மேலும் வலுவூட்டும் வகையில் மிட்செல் ஸ்டார்க் (1), பீட்டர் சிடில் (0) ஆகியோரை அடுத்த ஓவரில் யாசிர் ஷா வெளியேற்றினார். இதனால் 12 ஓவரில் பாகிஸ்தானுக்கு இரண்டு விக்கெட்டுக்கள் தேவைப்பட்டது.


    யாசிர் ஷா

    அப்போது கேப்டன் டிம் பெய்ன் உடன் சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயன் ஜோடி சேர்ந்தார். இருவரும் பந்தை தடுத்தாடுவதில் மிகவும் கவனமாக செயல்பட்டனர். ஒவ்வொரு ஓவராக குறைந்து இறுதியில் கடைசி ஓவரை எட்டியது. கடைசி ஓவரில் பாகிஸ்தானுக்கு இரண்டு விக்கெட்டுக்கள் தேவைப்பட்டது. ரசிகர்கள் அனைவரும் சீட் நுனியில் அமர்ந்தனர். யாசிர் ஷா கடைசி ஓவரை வீசினார்.

    முதல் ஐந்து பந்துகளை டிம் பெய்ன் சிறப்பாக எதிர்கொண்டார். கடைசி ஒரு பந்தில் இரண்டு விக்கெட்டுக்கள் வீழ்த்த முடியாது என்பதால் அத்துடன் போட்டி முடித்துக்கொள்ளப்பட்டது. இதனால் போட்டி வெற்றி தோல்வியின்றி டிரா ஆனது.

    டிம் பெய்ன் 194 பந்துகளில் 61 ரன்கள் எடுத்தும், நாதன் லயன் 34 பந்தில் 5 ரன்கள் எடுத்தும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் டிராவிற்கு முக்கிய காரணமாக இருந்தார்.
    பீல்டிங் செய்யும்போது கைவிரலில் முறிவு ஏற்பட்டதால் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 2-வது டெஸ்டில் இருந்து இமாம்-உல்-ஹக் விலகியுள்ளார். #PAKvAUS
    பாகிஸ்தான் - ஆஸ்திரேலியா இடையிலான முதல் டெஸ்ட் துபாயில் நடைபெற்றது. இன்றைய கடைசி நாளில் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா பேட்டிங் செய்து கொண்டிருந்தது. அப்போது பீல்டிங் செய்த இடது கை பேட்ஸ்மேன் ஆன இமாம்-உல்-ஹக்கின் இடது கை சுண்டு வரலில் முறிவு ஏற்பட்டது.

    இதனால் அக்டோபர் 16-ந்தேதி தொடங்கும் அபுதாபி டெஸ்டில் இமாம்-உல்-ஹக் விளையாட மாட்டார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. துபாய் டெஸ்டில் முதல் இன்னிங்சில் 76 ரன்களும், 2-வது இன்னிங்சில் 48 ரன்களும் குவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இமாம்-உல்-ஹக்கிற்குப் பதிலாக ஒருநாள் போட்டியில் சிறப்பாக விளையாடி வரும் பகர் சமான் இடம்பிடிக்க அதிக வாய்ப்புள்ளது.
    துபாயில் நடைபெற்று வரும் டெஸ்டில் ஆஸ்திரேலியாவின் வெற்றிக்கு 462 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது பாகிஸ்தான். #PAKvAUS
    பாகிஸ்தான் - ஆஸ்திரேலியா இடையிலான முதல் டெஸ்ட் துபாயில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த பாகிஸ்தான் முதல் இன்னிங்சில் 482 ரன்கள் குவித்தது. பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலியா 202 ரன்னில் சுருண்டது.

    280 முன்னிலையுடன் பாகிஸ்தான் 2-வது இன்னிங்சை தொடங்கியது. நேற்றைய 3-வது நாள் ஆட்ட முடிவில் பாகிஸ்தான் 3 விக்கெட் இழப்பிற்கு 45 ரன்கள் சேர்த்திருந்தது. இமாம்-உல்-ஹக் 23 ரன்னுடன் களத்தில் இருந்தார்.

    இன்று 4-வது நாள் ஆட்டம் தொடங்கியது. இமாம்-உல்-ஹக் உடன் ஹரிஸ் சோஹைல் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி சிறப்பாக விளையாடியது. இமாம்-உல்-ஹக் 48 ரன்களும், ஹரிஸ் சோஹைல் 39 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.



    அதன்பின் வந்த ஆசாத் ஷபிக் 41 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். அப்போது பாகிஸ்தான் 57.5 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 181 ரன்கள் சேர்த்தது. அத்துடன் 2-வது இன்னிங்சை டிக்ளேர் செய்தது. பாபர் ஆசம் 28 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். ஆஸ்திரேலியா அணி சார்பில் ஹோலண்ட் 3 விக்கெட்டும், நாதன் லயன் 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

    ஒட்டு மொத்தமாக பாகிஸ்தான் 461 ரன்கள் முன்னிலைப் பெற்றது. இதனால் ஆஸ்திரேலியாவின் வெற்றிக்கு 462 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது. 
    துபாய் டெஸ்டில் 142 ரன்கள் வரை விக்கெட் இழக்காத ஆஸ்திரேலியா 60 ரன்னுக்குள் 10 விக்கெட்டை இழந்து 202 ரன்னில் சுருண்டது. #PAKvAUS
    பாகிஸ்தான் - ஆஸ்திரேலியா இடையிலான முதல் டெஸ்ட் துபாயில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த பாகிஸ்தான் முதல் இன்னிங்சில் 482 ரன்கள் குவித்தது. முகமது ஹபீஸ் (126), ஹரிஸ் சோஹைல் (110) சதம் அடித்தனர்.

    பின்னர் ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சை தொடங்கியது. நேற்றைய 2-வது நாள் ஆட்ட முடிவில் ஆஸ்திரேலியா விக்கெட் இழப்பின்றி 13 ஓவரில் 30 ரன்கள் எடுத்திருந்தது. கவாஜா 17 ரன்னுடனும், ஆரோன் பிஞ்ச் 13 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

    இன்று 3-வது நாள் ஆட்டம் தொடங்கியது. இருவரும் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். ஆரோன் பிஞ்ச் 95 பந்தில் 5 பவுண்டரி, 1 சிக்சருடன் அரைசதம் அடித்தார். ஆரோன் பிஞ்சிற்கு இதுதான் அறிமுக டெஸ்ட் ஆகும். அறிமுக டெஸ்டிலேயே அரைசதம் அடித்து அசத்தினார். மறுமுனையில் விளையாடிய கவாஜாவும் அரைசதம் அடித்தார்.

    ஆஸ்திரேலியா 3-வது நாள் மதிய உணவு இடைவேளை வரை 46 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 137 ரன்கள் சேர்த்தது. ஆரோன் பிஞ்ச் 59 ரன்களுடனும், கவாஜா 68 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.



    மதிய உணவு இடைவேளை முடிந்து மீண்டும் ஆட்டம் தொடங்கியது. 142 ரன்கள் எடுத்திருக்கும்போது ஆரோன் பிஞ்ச் 62 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து ஷேன் மார்ஷ் களம் இறங்கினார். இவர் 7 ரன்னிலும், மற்றொரு தொடக்க வீரர் கவாஜா 85 ரன்னிலும் ஆட்டமிழந்தார். கவாஜா ஆட்டமிழக்கும்போது ஆஸ்திரேலியா 3 விக்கெட் இழப்பிற்கு 167 ரன்கள் எடுத்திருந்தது.

    அதன்பின் பிலால் ஆசிப் சுழலில் சிக்கி ஆஸ்திரேலியா பேட்ஸ்மேன்கள் திக்குமுக்காடினார்கள். அறிமுக வீரர்களான டிராவிஸ் ஹெட், லபுஸ்சேன்னே டக்அவுட்டில் வெளியேறினார்கள். பீட்டில் சிடில் (10), மிட்செல் மார்ஷ் (12) மட்டுமே இரட்டை இலக்க ரன்கள் அடித்தனர்.



    அறிமுக வீரரான பிலால் ஆசிப் 6 விக்கெட் வீழ்த்தி ஆஸ்திரேலியா 202 ரன்னில் சுருண்டது. 142 ரன்னுக்கு விக்கெட் ஏதும் இழக்காத ஆஸ்திரேலியா கடைசி 62 ரன்னுக்குள் 10 விக்கெட்டுக்களை இழந்து பாலோ-ஆன் ஆனது.

    ஆனால் பாகிஸ்தான் பாலோ-ஆன் கொடுக்காமல் 280 ரன்கள் முன்னிலையுடன் தொடர்ந்து 2-வது இன்னிங்சை தொடங்கியுள்ளது.
    ×