என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பெண்கள் பிரீமியர் லீக்"

    • முதலில் ஆடிய குஜராத் அணி 20 ஓவரில் 192 ரன்கள் குவித்தது.
    • அடுத்து ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணி 193 ரன்கள் எடுத்து வென்றது.

    நவி மும்பை:

    மகளிர் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் போட்டியின் 6-வது லீக் ஆட்டத்தில் குஜராத்-மும்பை அணிகள் மோதின. டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 192 ரன்கள் குவித்தது.

    கனிகா அஜா 35 ரன்னும், பெத் மூனி 33 ரன்னும் எடுத்தனர். ஜார்ஜியா வேரம் 43 ரன்னும், பார்தி புல்மாலி 36 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

    இதையடுத்து, 193 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை அணி களமிறங்கியது. அமன்ஜோத் கவுர் அதிரடியாக ஆடி 26 பந்தில் 40 ரன்கள் எடுத்து அவுட்டானார்.

    4வது விக்கெட்டுக்கு ஹர்மன்பிரீத் கவுருடன் நிகோலா கேரி இணைந்து பொறுப்புடன் ஆடி ரன்களைக் குவித்தார். கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் சிறப்பாக ஆடி அரை சதம் கடந்தார்.

    இறுதியில், மும்பை அணி 19.3 ஓவரில் 193 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் 7 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை அணி 2வது வெற்றியைப் பதிவு செய்தது. ஹர்மன்பிரீத் கவுர் 71 ரன்னும், நிகோலா கேரி 38 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

    • முதலில் ஆடிய குஜராத் அணி 20 ஓவரில் 209 ரன்கள் குவித்தது.
    • அடுத்து ஆடிய டெல்லி கேப்பிடல்ஸ் அணி 205 ரன்கள் மட்டுமே எடுத்து தோற்றது.

    நவி மும்பை:

    மகளிர் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் போட்டியின் 4-வது லீக் ஆட்டத்தில் குஜராத்-டெல்லி அணிகள் மோதின. டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 209 ரன்கள் குவித்து ஆல் அவுட்டானது. சோபி டிவைன் 95 ரன்னும், அஷ்லே கார்ட்னர் 49 ரன்னும் எடுத்தனர்.

    டெல்லி அணி சார்பில் நந்தனி ஷர்மா 5 விக்கெட்டும், சினேலி ஹென்றி, ஸ்ரீ சரணி தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 210 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி களமிறங்கியது. தொடக்க வீராங்கனை லீசெல் லீ 54 பந்தில் 86 ரன்கள் எடுத்தார். லாரா வோல்வார்ட் 38 பந்தில் 77 ரன்கள் குவித்து கடைசி வரை போராடி அவுட்டானார்.

    இறுதியில், டெல்லி அணி 20 ஓவரில் 205 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 4 ரன் வித்தியாசத்தில் குஜராத் அணி 2வது வெற்றியைப் பதிவு செய்தது.

    • முதலில் ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவரில் 195 ரன்கள் குவித்தது.
    • அடுத்து ஆடிய டெல்லி கேப்பிடல்ஸ் அணி 145 ரன்கள் மட்டுமே எடுத்து தோற்றது.

    நவி மும்பை:

    மகளிர் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் போட்டியின் 3-வது லீக் ஆட்டத்தில் மும்பை - டெல்லி அணிகள் மோதின. டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 195 ரன்கள் குவித்தது. நாட் ஸ்கீவர் பிரண்ட் 70 ரன்னில் அவுட்டானார்.

    கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் அதிரடியாக ஆடி 42 பந்தில் 74 ரன்கள் குவித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    இதையடுத்து, 196 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி களமிறங்கியது. தொடக்கம் முதலே சீரான இடைவெளியில் விக்கெட்கள் வீழ்ந்தன.

    சினேலி ஹென்றி தனி ஆளாகப் போராடி அரை சதம் கடந்தார். மற்றவர்கள் நிலைத்து நிற்கவில்லை.

    இறுதியில், டெல்லி அணி 19 ஓவரில் 145 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 50 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணி தனது முதல் வெற்றியைப் பதிவு செய்தது.

    மும்பை அணி சார்பில் அமீலியா கெர், நிகோலா கேரி தலா 3 விக்கெட்டும், நாட் ஸ்கீவர் பிரண்ட் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    • முதலில் ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவரில் 154 ரன்கள் எடுத்தது.
    • அடுத்து ஆடிய ஆர்.சி.பி. அணி கடைசி பந்தில் வெற்றியை ருசித்தது.

    மும்பை:

    பெண்கள் பிரீமியர் லீக் தொடரின் 4-வது சீசன் இன்று நவி மும்பையில் தொடங்கியது.

    முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ்- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற ஆர்.சி.பி. பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு154 ரன்கள் எடுத்தது. சஜீவன் சஜனா 45 ரன்கள் எடுத்தார். நிகோலா கேரி ஆட்டமிழக்காமல் 28 பந்தில் 40 ரன்கள் அடித்தார்.

    ஆர்.சி.பி. அணி சார்பில் நடின் டி கிளார்க் 4 விக்கெட் வீழ்த்தினார்.

    இதையடுத்து, 155 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆர்.சி.பி. களமிறங்கியது. சீரான இடைவெளியில் விக்கெட்கள் வீழ்ந்தன.

    ஒருபுறம் விக்கெட்கள் வீழ்ந்தாலும் நடின் டி கிளார்க் தனி ஆளாக போராடி அரை சதம் கடந்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார்.

    இறுதியில், ஆர்சிபி அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 157 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. நடின் டி கிளார்க் 63 ரன் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    • நிகோலா கேரி ஆட்டமிழக்காமல் 28 பந்தில் 40 ரன்கள் சேர்த்தார்.
    • ஆர்.சி.பி. அணியின் நடின் டி கிளார்க் 4 விக்கெட் வீழ்த்தினார்.

    பெண்கள் பிரீமியர் லீக் தொடரின் 4-வது சீசன் இன்று நவி மும்பையில் தொடங்கியது. இதில் மும்பை இந்தியன்ஸ்- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

    டாஸ் வென்ற ஆர்.சி.பி. பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீராங்கனை அமெலியா கெர் 4 ரன்னில் ஆட்டமிழந்தார். ஜி. கமாலினி 28 பந்தில் 32 ரன்கள் சேர்த்தார்.

    சஜீவன் சஜனா 25 பந்தில் 45 ரன்கள் அடித்தார். நிகோலா கேரி ஆட்டமிழக்காமல் 28 பந்தில் 40 ரன்கள் அடிக்க மும்பை இந்தியன்ஸ் 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 154 ரன்கள் எடுத்துள்ளது. ஆர்.சி.பி. அணியின் நடின் டி கிளார்க் 4 விக்கெட் வீழ்த்தினார்.

    பின்னர் 155 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆர்.சி.பி. பேட்டிங் செய்து வருகிறது.

    • தொடக்க ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ்- முன்னாள் சாம்பியனான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதுகின்றன.
    • கடந்த ஆண்டில் பட்டம் வென்ற அணிக்கு ரூ.6 கோடியும், 2-வது இடம் பிடித்த அணிக்கு ரூ.3 கோடியும் வழங்கப்பட்டது.

    நவிமும்பை:

    இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் பெண்கள் பிரீமியர் லீக் (டபிள்யூ.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் 2023-ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. அறிமுக ஆண்டில் மும்பை இந்தியன்சும், அடுத்த ஆண்டில் (2024) பெங்களூரு ராயல் சேலஞ்சர்சும், கடந்த ஆண்டு 2-வது முறையாக மும்பை இந்தியன்சும் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றின.

    இந்த நிலையில் 4-வது பெண்கள் பிரீமியர் லீக் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மும்பையின் புறநகர் பகுதியான நவிமும்பையில் உள்ள டி.ஒய்.பட்டீல் ஸ்டேடியத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது.

    பிப்ரவரி 5-ந் தேதி வரை நடைபெறும் இந்த கிரிக்கெட் திருவிழாவில், முதல் 11 லீக் ஆட்டங்கள் நவிமும்பையிலும், இதைத்தொடர்ந்து அடுத்த 9 லீக் ஆட்டங்கள், வெளியேற்றுதல் சுற்று, இறுதிப்போட்டி ஆகியவை குஜராத் மாநிலம் வதோதராவிலும் அரங்கேறுகிறது. சமீபத்தில் நடந்த 50 ஓவர் உலகக் கோப்பையை இந்திய பெண்கள் அணி வென்ற பிறகு நடக்கும் பெரிய போட்டி இது என்பதால் மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

    இந்த போட்டியில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ், குஜராத் ஜெயன்ட்ஸ், உ.பி. வாரியர்ஸ் ஆகிய 5 அணிகள் கலந்து கொள்கின்றன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா இரு முறை மோத வேண்டும்.

    லீக் சுற்று முடிவில் முதலிடம் பிடிக்கும் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறும். 2-வது, 3-வது இடத்தை பிடிக்கும் அணிகள் வெளியேற்றுதல் சுற்று ஆட்டத்தில் சந்திக்கும். இதில் வெற்றி பெறும் அணி 2-வது அணியாக இறுதிப்போட்டிக்குள் நுழையும்.

    கடந்த 3 சீசன்களிலும் டெல்லி அணிக்கு தலைமை தாங்கி அந்த அணியை இறுதிப்போட்டி வரை அழைத்து சென்ற மெக் லானிங் (ஆஸ்திரேலியா) உ.பி.வாரியர்ஸ் அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டதுடன் அந்த அணியின் கேப்டன் பொறுப்பையும் ஏற்றுள்ளார். 50 ஓவர் உலகக் கோப்பையில் கலக்கிய ஜெமிமா ரோட்ரிக்ஸ் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டு இருக்கிறார். மற்றபடி எல்லா அணிகளும் ஒரு சில வீராங்கனைகள் மாற்றத்துடன் தங்களது படை பலத்தை அதிகரித்து களம் காணுகின்றன.

    ஒவ்வொரு அணியிலும் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு நட்சத்திர பட்டாளங்கள் அதிகம் இடம் பிடித்துள்ளனர். இதனால் எந்த அணி வாகை சூடும் என்று கணிப்பது கடினமான காரியமாகும். இருப்பினும் மும்பை இந்தியன்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் இடையே கோப்பையை வெல்வதில் கடும் போட்டி நிலவும் என கிரிக்கெட் நிபுணர்கள் கணித்துள்ளனர்.

    போட்டிக்கான பரிசுத் தொகை விவரம் அறிவிக்கப்படவில்லை என்றாலும், கடந்த ஆண்டில் பட்டம் வென்ற அணிக்கு ரூ.6 கோடியும், 2-வது இடம் பிடித்த அணிக்கு ரூ.3 கோடியும் வழங்கப்பட்டது. அதே பரிசுத் தொகையே இந்த முறையும் அளிக்கப்படும் என்று தெரிகிறது.

    நவிமும்பையில் உள்ள டி.ஒய். பட்டீல் ஸ்டேடியத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ்- முன்னாள் சாம்பியனான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோதுகின்றன.

    ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான மும்பை அணியில் நாட் சிவெர், ஹெய்லி மேத்யூஸ், அமெலியா கெர், இல்லிங்வொர்த், அமன்ஜோத் கவுர், ஷப்னிம் இஸ்மாயில், சைகா இஷாக், தமிழக விக்கெட் கீப்பர் கமலினி உள்ளிட்ட சிறந்த வீராங்கனைகள் அங்கம் வகிக்கின்றனர்.

    இதேப ோல் ஸ்மிர்தி மந்தனா தலைமையிலான பெங்களூரு அணியில் ஜார்ஜியா வோல், கிரேஸ் ஹாரிஸ் நடினே டி கிளார்க், அருந்ததி ரெட்டி, பூஜா வஸ்ட்ராகர், லாரென் பெல், ராதா யாதவ், ஸ்ரேயங்கா பட்டீல், ரிச்சா கோஷ் உள்ளிட்ட முன்னணி வீராங்கனைகள் இடம் பெற்றுள்ளனர். தனிப்பட்ட காரணத்தால் ஆல்-ரவுண்டரான எலிசி பெர்ரி (ஆஸ்திரேலியா) விலகி இருப்பது அந்த அணிக்கு சற்று பின்னடைவாகும்.

    உலகக் கோப்பையில் ஒன்றாக கலக்கிய ஹர்மன்பிரீத், மந்தனா இருவரும் எதிரும், புதிருமாக கோதாவில் குதிப்பதால் களத்தில் அனல் பறக்கும் என்று நம்பலாம்

    இருவரும் நேற்று நிருபர்களிடம் பேசும் போது, 'நாங்கள் (இந்தியா) உலகின் தலைச்சிறந்த அணியாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறோம். இன்னும் சில பகுதிகளில் முன்னேற்றம் காண வேண்டி உள்ளது. அதற்கு டபிள்யூ.பி.எல். போட்டி உதவிகரமாக இருக்கும்' என்றனர்.

    இவ்விரு அணிகளும் இதுவரை 7 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் மும்பை 4 ஆட்டத்திலும், பெங்களூரு 3 ஆட்டத்திலும் வெற்றி பெற்று இருக்கின்றன. போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது. ஜியோ ஹாட் ஸ்டார் செயலியிலும் பார்க்கலாம்.

    • பெண்கள் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் நவி மும்பை மற்றும் வதோதராவில் ஜனவரி 9-ந்தேதி முதல் பிப்ரவரி 5-ந்தேதி வரை நடைபெற இருக்கிறது.
    • இந்த தொடரின் தொடக்க ஆட்டத்தில் மும்பை மற்றும் ஆர்சிபி அணிகள் மோதுகிறது.

    4-வது பெண்கள் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் நவி மும்பை மற்றும் வதோதராவில் ஜனவரி 9-ந்தேதி முதல் பிப்ரவரி 5-ந்தேதி வரை நடைபெற இருக்கிறது. முதல் மூன்று சீசன்கள் முறையே மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் கோப்பையை வென்றுள்ளது.

    இந்த தொடரில் டெல்லி கேப்பிடல்ஸ், குஜராத் ஜயண்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, யூ.பி. வாரியர்ஸ் ஆகிய அணிகள் தங்களுக்கு தலா 2 முறை மோத வேண்டும். இதில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறும். இந்த தொடரின் தொடக்க ஆட்டத்தில் மும்பை மற்றும் ஆர்சிபி அணிகள் மோதுகிறது.

    இந்நிலையில் இந்த தொடருக்கான புதிய ஜெர்சியை ஆர்சிபி அணி வெளியிட்டுள்ளது. இந்த ஜெர்சியை அந்த அணியின் வீராங்கனை ஷ்ரேயங்கா பாட்டீல் அறிமுகப்படுத்தினார். இது தொடர்பான புகைப்படங்களை ஆர்சிபி அணியின் அதிகாரப்பூர்வமான சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளது. 

    • எலிஸ் பெர்ரி ஆர்சிபி அணியில் இடம் பிடித்திருந்தார்.
    • சதர்லேண்டு டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் இடம் பிடித்திருந்தார்.

    4-வது பெண்கள் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் நவி மும்பை மற்றும் வதோதராவில் ஜனவரி 9-ந்தேதி முதல் பிப்ரவரி 5-ந்தேதி வரை நடைபெற இருக்கிறது.

    இத்தொடர் தொடங்க இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் இடம் பிடித்திருந்த ஆஸ்திரேலியா வீராங்கனை எலிஸ் பெர்ரி, டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் இடம் பிடித்திரந்த மற்றொரு ஆஸ்திரேலிய வீராங்கனை அன்னாபெல் சதர்லெண்டு ஆகியோர் சொந்த வேலை காரணமாக விலகியுள்ளனர்.

    எலிஸ் பெர்ரிக்குப் பதிலாக இந்திய வீராங்கனை சயாலி சத்காரே ஆர்.சி.பி. அணியில் இணைவார் என்றும், சதர்லேண்டுக்குப் பதிலாக ஆஸ்திரேலியா லெக் ஸ்பினனர் அலானா கிங் டெல்லி அணியில் இணைவார் என்று பெண்கள் பிரீமியர் லீக் அறிவித்துள்ளது.

    ஆர்.சி.பி. அணி ரூ. 30 லட்சத்திற்கு சயாலி சத்காரேவையும், டெல்லி அணி ரூ. 60 லட்சத்திற்கு அலானா கிங்கையும் ஒப்பந்தம் செய்துள்ளன.

    உ.பி. வாரியார்ஸ் அணியில் சார்லி நாட்டிற்குப் பதிலாக இடது கை வேகப்பந்து வீச்சாளர் தாரா நோரிஸ் சேர்க்கப்பட்டுள்ளார்.

    இவர் அடுத்த வருடம் நடைபெற இருக்கும் டி20 உலகக் கோப்பை குவாலிபையருக்கான ஆஸ்திரேலியா அணியில் இடம் பிடித்துள்ளார்.

    • ஆர்சிபி அணி முதல் 2 போட்டிகள் விளையாடி இரண்டிலும் தோல்வியை சந்தித்துள்ளது.
    • பெர்ரி இரண்டு போட்டிகளில் முறையே 31 மற்றும் 13 ரன்களை எடுத்துள்ளார்.

    பெண்கள் பிரீமியர் லீக் 2023 சீசன் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த சீசனில் இடம் பெற்றுள்ள ஆர்சிபி அணி முதல் 2 போட்டிகள் விளையாடி இரண்டிலும் தோல்வியை சந்தித்துள்ளது.

    இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியின் ஆல் ரவுண்டரும் ஆர்சிபி அணி வீரருமான பெர்ரியிடம், உங்களுடன் தொடக்க ஆட்டக்காரராக விராட் கோலி மற்றும் எம்எஸ் டோனி ஆகியோரில் யாரை தேர்வு செய்யவீர்கள் என கேள்வி கேட்கப்பட்டது.

    கோலிக்கும் டோனிக்கும் இடையே ஒருவரைத் தேர்ந்தெடுப்பது என்பது உலகம் முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களுக்கு கடினமான பணிகளில் ஒன்றாக இருக்கும். இதற்கு அவர் தந்திரமான ஒரு பதிலை அளித்துள்ளார்.

    இருவரையும் தேர்வு செய்து, அவர்கள் விளையாடுவதை வெளியில் இருந்து பார்ப்பேன் என கூறினார்.

    கேள்வி: தொடக்க ஆட்டக்காரராக கோலி அல்லது டோனி யாரைத் தேர்ந்தெடுப்பீர்கள்?

    பெர்ரி: நான் இருவரையும் தேர்ந்தேடுத்துகிறேன்.

    டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு எதிரான ஆட்டங்களில் தோல்வியடைந்த ராயல் சேலஞ்சர்ஸ் அணி இன்று குஜராத் ஜெயன்ட்ஸை எதிர்கொள்கிறது.

    பெர்ரி இரண்டு போட்டிகளில் முறையே 31 மற்றும் 13 ரன்களை எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

    • முதலில் ஆடிய பெங்களூரு 157 ரன்கள் எடுத்தது.
    • அடுத்து ஆடிய உ.பி. வாரியர்ஸ் 155 ரன்கள் மட்டுமே எடுத்து தோற்றது.

    பெங்களூரு:

    மகளிர் பிரீமியர் லீக் தொடரின் 2-வது ஆட்டம் பெங்களூருவில் நேற்று நடைபெற்றது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, உ.பி. வாரியர்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற உ.பி. வாரியர்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த பெங்களூரு 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 157 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் ரிச்சா கோஷ் 62 ரன்னும், மேகனா 53 ரன்னும் எடுத்தனர்.

    தொடர்ந்து களமிறங்கிய உ.பி. வாரியர்ஸ் 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 155 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் 2 ரன் வித்தியாசத்தில் பெங்களூரு அணி திரில் வெற்றிபெற்றது.

    5 விக்கெட்டுகளை வீழ்த்திய பெங்களூரு வீராங்கனை சோபனா ஆஷாவுக்கு ஆட்ட நாயகி விருது வழங்கப்பட்டது.

    • முதலில் ஆடிய குஜராத் அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 126 ரன்கள் எடுத்தது.
    • குஜராத்தை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி மும்பை அபார வெற்றிபெற்றது.

    பெங்களூரு:

    மகளிர் பிரீமியர் லீக் தொடரின் 2-வது சீசன் கடந்த 23-ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது.

    பெங்களூருவில் நேற்று நடந்த 3-வது லீக் போட்டியில் குஜராத் ஜெயன்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற மும்பை பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த குஜராத் ஜெயன்ட்ஸ் 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 126 ரன்கள் எடுத்தது.

    மும்பை சார்பில் அமெலியா கெர் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    127 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை இந்தியன்ஸ் அணி களமிறங்கியது. மும்பை அணி 18.1 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 129 ரன்கள் எடுத்து, 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 46 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். மும்பை அணி பெறும் 2வது வெற்றி இதுவாகும்.

    4 விக்கெட் வீழ்த்திய அமெலியா கெர் ஆட்ட நாயகியாக தேர்வு செய்யப்பட்டார்.

    • முதலில் ஆடிய உ.பி. வாரியர்ஸ் 119 ரன்கள் மட்டுமே எடுத்தது.
    • டெல்லி அணியின் ராதா யாதவ் 4 விக்கெட்டும், மேரிஜான் காப் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    பெங்களூரு:

    மகளிர் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் பெங்களூருவில் நடந்துவருகிறது. இதில் மும்பை, டெல்லி, பெங்களூரு, குஜராத், உ.பி. வாரியர்ஸ் உள்ளிட்ட 5 அணிகள் பங்கேற்றுள்ளன.

    இந்நிலையில், நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் உ.பி. வாரியர்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற டெல்லி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய உ.பி. வாரியர்ஸ் அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 119 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஸ்வேதா ஷிவ்ராட் 45 ரன்கள் எடுத்தார்.

    இதையடுத்து, 120 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணி 14.3 ஓவரில் 1 விக்கெட்டுக்கு 123 ரன்கள் எடுத்து, அபார வெற்றிபெற்றது. ஷிபாலி வர்மா 64 ரன்னும், மேக் லேனிங் 51 ரன்னும் குவித்தனர்.

    சிறப்பாக பந்துவீசிய டெல்லி அணியின் மேரிஜான் காப் ஆட்ட நாயகி விருது பெற்றார்.

    ×