search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "gujarat giants"

    • முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணியால் 126 ரன்களே அடிக்க முடிந்தது.
    • டெல்லி அணியின் ஷபாலி வர்மா அபாரமாக விளையாடி 37 பந்தில் ஏழு பவுண்டரி, 5 சிக்சருடன் 71 ரன்கள் விளாசினார்.

    பெண்கள் பிரீமியர் லீக் கடைசி லீக் ஆட்டம் நேற்று நடைபெற்றது. டெல்லியில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் குஜராத் ஜெயன்ட்ஸ்- டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதின.

    முதலில் பேட்டிங் செய்த குஜராத் ஜெயன்ட்ஸ் அணி டெல்லி கேப்பிட்டல்ஸ் வீராங்கனைகளின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 126 ரன்கள் மட்டுமே அடித்தது. முதல் மூன்று வீராங்கனைகளான வோல்வார்த் (7), மூனி (0), ஹேமலதா (4) சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தார்.

    6-வது பேட்டராக களம் இறங்கிய பாரதி ஃபுல்மாலி 36 பந்தில் 42 ரன்கள் அடித்தார். டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி சார்பில் மரிஜான்னே காப், ஷிகா பாண்டே, மினு மானி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

    பின்னர் 127 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி வீராங்கனைகள் களம் இறங்கினர். அந்த அணியின் தொடக்க வீராங்கனை மெக் லேனிங் 18 பந்தில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த அலிஸ் கேப்சி ரன்ஏதும் எடுக்காமல் வெளியேறினார்.

    ஆனால் மற்றொரு தொடக்க வீராங்கனையாக ஷபாலி வர்மா அபாரமாக விளையாடி 37 பந்தில் ஏழு பவுண்டரி, 5 சிக்சருடன் 71 ரன்கள் விளாசினார். ரோட்ரிக்ஸ் 28 பந்தில் 38 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருக்க டெல்லி கேப்பிட்டல்ஸ் 13.1 ஓவரில் இலக்கை எட்டி ஏழு விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    லீக் போட்டிகள் முடிவில் டெல்லி கேப்பிட்டல்ஸ் 8 போட்டிகளில் 6-ல் வெற்றி பெற்று புள்ளிகள் பட்டியலில் முதலிடம் பிடித்தது.

    மும்பை இந்தியன்ஸ் 5 வெற்றிகளுடன் 2-வது இடத்தை பிடித்துள்ளது. ஆர்சிபி 3-வது இடத்தை பிடித்தது. முதல் மூன்று இடங்களையும் பிடித்த இந்த மூன்று அணிகளும பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறின.

    டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி நேரடியாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. நாளை நடைபெறும் எலிமினேட்டர் சுற்றில் மும்பை இந்தியன்ஸ்- ஆர்சிபி அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

    இதில் வெற்றி பெறும் அணி 17-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும் இறுதிப் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியுடன் பலப்பரீட்சை நடத்தும்.

    • குஜராத் அணியின் கேப்டனும், விக்கெட் கீப்பருமான மூனி 52 பந்தில் 10 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 74 ரன்கள் விளாசினார்.
    • உ.பி. அணியின் தீப்தி சர்மா ஆட்டமிழக்காமல் 60 பந்தில் 88 ரன்கள் எடுத்தும் அணியை வெற்றி பெற வைக்க முடியவில்லை.

    பெண்கள் பிரீமியர் லீக்கில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் குஜராத் ஜெயன்ட்ஸ்- உ.பி. வாரியர்ஸ் அணிகள் மோதின. முதலில் விளையாடிய குஜராத் ஜெயன்ட்ஸ் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 152 ரன்கள் சேர்த்தது. அந்த அணியின் கேப்டனும், விக்கெட் கீப்பருமான மூனி 52 பந்தில் 10 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 74 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். வோல்வார்த் 30 பந்தில் 43 ரன்கள் சேர்த்தார். உ.பி. வாரியர்ஸ் அணியின் எக்லேஸ்டோன் 3 விக்கெட் வீழ்த்தினார்.

    பின்னர் 153 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் உ.பி. வாரியர்ஸ் அணி களம் இறங்கியது. தொடக்க வீராங்கனை அலிசா ஹீலி 4 ரன்னிலும், கிரண் நவ்கிர், சமரி அட்டப்பட்டு ஆகியோர் ரன்ஏதும் எடுக்காமலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தார்.

    அதன்பின் வந்த தீப்தி சர்மா ஒருபுறம் நிற்க அதன்பின் வந்த கிரேஷ் ஹாரிஸ் 1 ரன்னிலும், ஷ்வேதா ஷெராவத் 8 ரன்னிலும் ஆட்டமிழந்தார். இதனால் 4 ரன்களுக்குள் 3 விக்கெட்டை இழந்த உ.பி. வாரியர்ஸ் 35 ரன்கள் எடுப்பதற்குள் 5 விககெட்டுகளை இழந்தது.

    6-வது விக்கெட்டுக்கு தீப்தி சர்மா உடன் பூனம் கெமர் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்டது. தீப்தி சர்மா 60 பந்தில் 88 ரன்களும், பூனம் கெமர் 36 பந்தில் 36 ரன்களும் ஆட்டம் இழக்காமல் எடுத்த போதிலும் அணியை வெற்றி பெற வைக்க முடியவில்லை.

    அந்த அணிக்கு கடைசி ஓவரில் 26 ரன்கள் தேவைப்பட்டது. இரண்டு சிக்சருடன் 17 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்ததால் 8 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்துள்ளது.

    டெல்லி, மும்பை அணிகள் ஏற்கனவே பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. ஆர்சிபி, உ.பி. வார்யர்ஸ், குஜராத் ஜெயன்ட்ஸ் ஆகிய மூன்று அணிகளில் இரண்டு அணிகள் பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேற வாய்ப்புள்ளது.

    ஆர்சிபி இன்று மும்பையை எதிர்கொள்கிறது. இதில் ஆர்சிபி வெற்றி பெற்றால் பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறும். நாளை டெல்லி- குஜராத் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதுகின்றன. இதில் குஜராத் அணி வெற்றி பெற்று, ஆர்சி இன்று தோல்வியடைந்தால் ரன்ரேட் அடிப்படையில் இரண்டு அணிகள் முன்னேறும்.

    இன்று ஆர்சிபி வெற்றி பெற்று, நாளை குஜராத் ஜெயன்ட்ஸ் வெற்றி பெற்றால் உ.பி. வாரியர்ஸ் மற்றும் குஜராத் ஜெயன்ட்ஸ ஆகிய இரண்டு அணிகள் ஒன்று பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறும்.

    குஜராத் ஜெயன்ட்ஸ் அணி தோல்வியடைந்தால் ஆர்சிபி மற்றும் உ.பி. வாரியர்ஸ் அணிகள் பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறும்.

    • மகளிர் பிரீமியர் லீக் ஏலம் மும்பையில் இன்று நடைபெற்றது.
    • இதில் இந்திய, ஆஸ்திரேலிய வீராங்கனைகள் ரூ.2 கோடிக்கு ஏலம் போயினர்.

    மும்பை:

    மகளிர் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. இதில் மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ், உ.பி. வாரியர்ஸ், குஜராத் ஜெயன்ட்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் ஆகிய 5 அணிகள் பங்கேற்றன.

    முதல் தொடரில் ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி சாம்பியன் கோப்பையை வென்று அசத்தியது.

    இதற்கிடையே, 2-வது மகளிர் பிரீமியர் லீக் தொடர் அடுத்த ஆண்டு பிப்ரவரி-மார்ச்சில் நடத்தப்படுகிறது. இதையொட்டி வீராங்கனைகளின் மினி ஏலம் மும்பையில் இன்று நடைபெற்றது.

    ஏலப்பட்டியலில் 104 இந்தியர்கள், 61 வெளிநாட்டினர் என்று மொத்தம் 165 வீராங்கனைகள் இடம் பிடித்துள்ளனர். இவர்களில் 109 பேர் உள்ளூர் போட்டிகளில் மட்டும் ஆடியவர்கள்.

    5 அணிகளுக்கும் சேர்த்து மொத்தம் 30 இடம் காலியாக உள்ளது. இதில் வெளிநாட்டினருக்கான 9 இடங்களும் அடங்கும்.

    இந்நிலையில், இந்திய வீராங்கனை காஷ்வீ கவுதமை குஜராத் ஜெயன்ட்ஸ் அணி 2 கோடிக்கு ஏலம் எடுத்துள்ளது.

    இதேபோல், ஆஸ்திரேலிய வீராங்கனை அன்னபெல் சதர்லேண்டை டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி ரூ. 2 கோடிக்கு ஏலத்தில் வாங்கியது.

    மற்றொரு இந்திய வீராங்கனை விருந்தா தினேஷை உ.பி. வாரியர்ஸ் அணி 1.3 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளது.

    தென் ஆப்பிரிக்கா வீராங்கனை ஷப்னிம் இஸ்மாயிலை ரூ.1.2 கோடிக்கு மும்பை இந்தியன்ஸ் அணி வாங்கியுள்ளது.

    • 4 புள்ளியுடன் உள்ள குஜராத் ஜெயன்ட்சை பொறுத்தவரை தனது இறுதி லீக்கில் உ.பி. வாரியர்சுக்கு எதிராக இமாலய வெற்றி பெற்று ரன்ரேட்டை உயர்த்த வேண்டும்.
    • இரவு 7.30 மணிக்கு ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான மும்பை அணியுடன் மெக் லானிங் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியுடன் மோதுகிறது.

    மும்பை:

    முதலாவது மகளிர் பிரீமியர் லீக்(டபிள்யூ.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மும்பையில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 5 அணிகளும் தங்களுக்குள் தலா 2 முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் டாப்-3 இடங்களை பிடிக்கும் அணிகள் அடுத்த சுற்றுக்கு (பிளே-ஆப்) முன்னேறும். அதாவது புள்ளி பட்டியலில் முதலிடத்தை பிடிக்கும் அணி நேரடியாக இறுதிப்போட்டியில் விளையாடும். 2-வது மற்றும் 3-வது இடத்தை பிடிக்கும் அணிகள் வெளியேற்றுதல் சுற்றில் மோதி அதில் வெற்றி பெறும் அணி 2-வது அணியாக இறுதிசுற்றை எட்டும்.

    இதுவரை 16 லீக் ஆட்டங்கள் முடிந்துள்ள நிலையில் மும்பை இந்தியன்சும் (10 புள்ளி), டெல்லி கேப்பிட்டல்சும் (8 புள்ளி) பிளே-ஆப் சுற்றை எட்டி இருக்கின்றன. மீதமுள்ள ஒரு இடத்துக்கு உ.பி. வாரியர்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், குஜராத் ஜெயன்ட்ஸ் அணிகள் மல்லுகட்டுகின்றன.

    3 வெற்றி, 3 தோல்வியுடன் உள்ள உ.பி. வாரியர்ஸ் அணி எஞ்சிய இரு லீக்கில் (குஜராத் மற்றும் டெல்லிக்கு எதிராக) ஒன்றில் வெற்றி பெற்றால் போதும். அடுத்த சுற்றை எட்டி விடலாம். சொல்லப்போனால் இன்றைய ஆட்டத்தில் குஜராத்தை வீழ்த்தி விட்டால் மற்ற இரு அணிக்குரிய வாய்ப்பு தகர்ந்து விடும்.

    2 வெற்றி, 5 தோல்வியுடன் உள்ள பெங்களூரு அணி தனது கடைசி லீக்கில் நாளை பலம் வாய்ந்த மும்பையை அதிக வித்தியாசத்தில் வீழ்த்த வேண்டும். அதே சமயம் உ.பி. வாரியர்ஸ் தனது கடைசி இரு லீக்கிலும் தோற்க வேண்டும். இவ்வாறு நிகழ்ந்தால் உ.பி., குஜராத், பெங்களூரு மூன்று அணிகளும் தலா 6 புள்ளிகளுடன் சமநிலையில் இருக்கும். அப்போது ரன்ரேட்டில் பெங்களூரு முன்னிலையில் இருந்தால் வாய்ப்பு கிட்டும்.

    4 புள்ளியுடன் உள்ள குஜராத் ஜெயன்ட்சை பொறுத்தவரை தனது இறுதி லீக்கில் உ.பி. வாரியர்சுக்கு எதிராக இமாலய வெற்றி பெற்று ரன்ரேட்டை உயர்த்த வேண்டும். மற்ற ஆட்டங்களின் முடிவும் சாதகமாக அமைந்து, உ.பி. வாரியர்சை விட ரன்ரேட்டில் முந்தினால் ஒரு வேளை குஜராத்துக்கு அதிர்ஷ்டம் அடிக்கலாம். இன்று (திங்கட்கிழமை) இரண்டு லீக் ஆட்டங்கள் நடக்கின்றன. சினே ராணா தலைமையிலான குஜராத் ஜெயன்ட்ஸ் அணி, அலிசா ஹீலே தலைமையிலான உ.பி. வாரியர்சை பிரபோர்ன்ஸ் ஸ்டேடியத்தில் மாலை 3.30 மணிக்கு சந்திக்கின்றன.

    இரவு 7.30 மணிக்கு டி.ஒய். பட்டீல் ஸ்டேடியத்தில் நடக்கும் மற்றொரு ஆட்டத்தில் ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான மும்பை அணி முதலிடத்தை உறுதி செய்யும் முனைப்புடன் மெக் லானிங் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்சுடன் மோதுகிறது.

    • முதலில் ஆடிய மும்பை இந்தியன்ஸ் 207 ரன்கள் எடுத்தது.
    • அதிரடியாக ஆடிய கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 65 ரன்கள் குவித்தார்.

    மும்பை:

    முதலாவது மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் இன்று வண்ணமயமான கலைநிகழ்ச்சிகளுடன் தொடங்கியது. தொடக்க ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ், குஜராத் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுக்கு 207 ரன்கள் குவித்தது. அதிரடியாக ஆடிய கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 30 பந்துகளில் 14 பவுண்டரிகளுடன் 65 ரன்கள் விளாசினார்.

    இதையடுத்து, 208 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய குஜராத் அணி ஆரம்பம் முதலே மும்பை இந்தியன்ஸ்

    பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது. எந்த வீராங்கனையும் ஒற்றை இலக்கை ரன்னை தாண்டவில்லை. 4 பேர் டக் அவுட் ஆனார்கள். 23 ரன்கள் எடுப்பதற்குள் 7 விக்கெட்டுகளை இழந்த குஜராத் ஜெயண்ட்ஸ் அணி திணறியது.

    அந்த அணியின் தயாளன் ஹேமலதா மட்டும் ஓரளவு தாக்குப் பிடித்தார். கடைசி கட்டத்தில் இறங்கிய மோனிகா படேலும் இரட்டை இலக்கை எட்டினார்.

    இறுதியில், குஜராத் அணி 64 ரன்கள் மட்டுமே எடுத்து பரிதாபமாக தோற்றது. ஹேமலதா 29 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    மும்பை இந்தியன்ஸ் சார்பில் சைகா இஷாக் 4 விக்கெட்டும், நட் சிவர் பிரண்ட், அமீலியா கெர் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதன்மூலம், மகளிர் பிரீமியர் லீக் தொடரின் முதல் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி முத்திரை பதித்து 143 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

    • கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 30 பந்துகளில் 14 பவுண்டரிகளுடன் 65 ரன்கள் விளாசினார்.
    • குஜராத் ஜெயண்ட்ஸ் தரப்பில் ஸ்னே ரானா 2 விக்கெட் கைப்பற்றினார்.

    மும்பை:

    முதலாவது மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் இன்று தொடங்கியது. 5 அணிகள் பங்கேற்றுள்ள இந்த சீசனின் துவக்க ஆட்டம் நவி மும்பை டிஒய் பாட்டீல் மைதானத்தில் நடைபெறுகிறது. இப்போட்டியில் மும்பை இந்தியன்ஸ், குஜராத் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதுகின்றன. டாஸ் வென்ற குஜராத் ஜெயண்ட்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    முதலில் ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணி, 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 207 ரன்கள் குவித்தது. அதிரடியாக ஆடிய கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர் 30 பந்துகளில் 14 பவுண்டரிகளுடன் 65 ரன்கள் விளாசினார். ஹெய்லி மேத்யூஸ் 47 ரன்களும், நாட் ஷிவர் பிரன்ட் 23 ரன்களும், அமெலியா கெர் ஆட்டமிழக்காமல் 45 ரன்களும் அடித்தனர்.

    குஜராத் தரப்பில் ஸ்னே ரானா 2 விக்கெட் கைப்பற்றினார். ஜார்ஜியா, தனுஜா, ஆஷ்லெய் தலா ஒரு விக்கெட் எடுத்தனர். இதையடுத்து 208 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் அணி களமிறங்குகிறது. 

    • மகளிர் பிரீமியர் லீக் கோப்பையை 5 அணிகளின் கேப்டன்கள் அறிமுகம் செய்தனர்.
    • பாலிவுட் நட்சத்திரங்களான கியாரா அத்வானி, கிருத்தி சனோன் உள்ளிட்டோரின் கலைநிகழ்ச்சிகள் இடம்பெற்றன

    மும்பை:

    முதலாவது மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டி மும்பையில் இன்று தொடங்கி வருகிற 26-ந் தேதி வரை நடக்கிறது. மும்பை பிரபோர்ன் ஸ்டேடியம் மற்றும் நவி மும்பையில் உள்ள டி.ஒய்.பட்டீல் ஸ்டேடியம் ஆகிய இரு மைதானங்களில் இந்த போட்டி அரங்கேறுகிறது.

    டெல்லி கேப்பிட்டல்ஸ், குஜராத் ஜெயண்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், உ.பி.வாரியர்ஸ் ஆகிய 5 அணிகள் இதில் கலந்துகொள்கின்றன.

    போட்டி தொடங்குவதற்கு முன்பாக, இன்று மாலை டி.ஒய்.பட்டீல் ஸ்டேடியத்தில் பிரமாண்டமான துவக்க விழா நடைபெற்றது. வரலாற்று சிறப்பு மிக்க மகளிர் பிரீமியர் லீக் குறித்து மந்த்ரா பேடி அறிமுக உரையாற்றி விழாவை தொடங்கி வைத்தார். விழாவில் கண்கவர் கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. பாலிவுட் நட்சத்திரங்களான கியாரா அத்வானி, கிருத்தி சனோன் மற்றும் பஞ்சாபி பாடகர் ஏ.பி. தில்லான் ஆகியோரின் ஆடல் பாடல் கலைநிகழ்ச்சிகள் இடம்பெற்றன.

    பிசிசிஐ தலைவர் ரோஜர் பின்னி, செயலாளர் ஜெய் ஷா மற்றும் மூத்த நிர்வாகிகள் மேடையில் ஏறி, அனைவரையும் வரவேற்றனர். போட்டியில் பங்குபெறும் ஐந்து அணிகளின் கேப்டன்களையும் மேடைக்கு அழைத்தனர். அவர்கள் மகளிர் பிரீமியர் லீக் கோப்பையை அறிமுகம் செய்தனர்.

     

    துவக்க விழா முடிந்ததும் போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டது. டாஸ் வென்ற குஜராத் ஜெயண்ட்ஸ் அணியின் கேப்டன் பெர்த் மூனே பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனால் மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்கிறது.

    • தொடக்க ஆட்டம் மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது.
    • போட்டிக்கான தொடக்க விழா மாலை 6.25 மணிக்கு தொடங்கும்.

    மும்பை:

    முதலாவது பெண்கள் பிரிமீயர் லீக் கிரிக்கெட் போட்டி மும்பையில் இன்று தொடங்கி வருகிற 26-ந் தேதி வரை நடக்கிறது. மும்பை பிரபோர்ன் ஸ்டேடியம் மற்றும் நவி மும்பையில் உள்ள டி.ஒய்.பட்டீல் ஸ்டேடியம் ஆகிய இரு மைதானங்களில் இந்த போட்டி அரங்கேறுகிறது.

    இந்த பெண்கள் கிரிக்கெட் திருவிழாவில் டெல்லி கேப்பிட்டல்ஸ், குஜராத் ஜெயன்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், உ.பி.வாரியர்ஸ் ஆகிய 5 அணிகள் கலந்து கொள்கின்றன.

    ஐ.பி.எல். போன்று ஒவ்வொரு அணியிலும் அதிகபட்சமாக 4 வெளிநாட்டு வீராங்கனைகள் ஆடும் லெவனில் இடம் பெற முடியும். இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோத வேண்டும்.

    இந்நிலையில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் ஜெயண்ட்ஸ் இடையேயான தொடக்க ஆட்டம் மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) தெரிவித்துள்ளது. டாஸ் இரவு 7.30 மணிக்கு போட்டப்படும். இரவு 8 மணிக்கு போட்டி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    போட்டிக்கான தொடக்க விழா மாலை 6.25 மணிக்கு தொடங்கும். தொடக்க விழாவையொட்டி கண்கவர் கலைநிகழ்ச்சி நடக்கிறது. இப்போதைக்கு இந்த போட்டியை காண பெண்களுக்கு இலவச அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

    • முதல் பெண்கள் பிரிமீயர் லீக் டி20 கிரிக்கெட் போட்டி வரும் 4-ம் தேதி தொடங்குகிறது.
    • குஜராத் ஜெயன்ட்ஸ் அணி கேப்டனாக பெத் மூனி நியமிக்கப்பட்டுள்ளார்.

    அகமதாபாத்:

    முதலாவது பெண்கள் பிரிமீயர் லீக் டி20 கிரிக்கெட் போட்டி வரும் 4-ம் தேதி முதல் 26-ம் தேதி வரை மும்பையில் நடக்கிறது. இந்தப் போட்டிகளில் பங்கேற்கும் 5 அணிகளில் ஒன்றான குஜராத் ஜெயன்ட்ஸ் நிர்வாகம், தங்கள் அணியின் கேப்டன் யார் என்ற விவரத்தை அறிவித்தது.

    பெண்கள் டி20 உலக கோப்பை கிரிக்கெட்டின் இறுதி ஆட்டத்தில் 74 ரன்கள் விளாசி ஆட்டநாயகியாக ஜொலித்த ஆஸ்திரேலியாவின் பெத் மூனி குஜராத் அணி கேப்டனாக செயல்படுவார் என தெரிவித்துள்ளது.

    ஏலத்தில் ரூ.2 கோடிக்கு வாங்கப்பட்ட 29 வயதான பெத் மூனி வெளிநாட்டு லீக் போட்டியில் ஒரு அணியை வழிநடத்த இருப்பது இதுவே முதல் முறையாகும். இந்திய ஆல் ரவுண்டர் சினே ராணா துணை கேப்டனாக பணியாற்ற இருக்கிறார்.

    டபிள்யூ.பி.எல். லீக்கில் 4-ம் தேதி நடக்கும் தொடக்க ஆட்டத்தில் குஜராத் அணி மும்பை இந்தியன்சை சந்திக்கிறது

    ×