என் மலர்
நீங்கள் தேடியது "WPL 2026"
- ஆர்சிபி அணியின் கேப்டன் ஸ்மிருதி மந்தனா 87 ரன்கள் எடுத்து ஆட்டநாயகி விருதை வென்றார்.
- நடப்பு ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் எடுத்ததற்கான ஆரஞ்சு தொப்பி ஸ்மிருதி மந்தனாவிற்கு வழங்கப்பட்டது.
வதோதரா:
மகளிர் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் போட்டியின் இறுதிப்போட்டி வதோதராவில் நடைபெற்றது. இதில் டெல்லி கேப்பிடல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின.
அதன்படி, முதலில் பேட் செய்த டெல்லி கேப்பிடல்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 203 ரன்கள் குவித்தது. இதையடுத்து, 204 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 19.4 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 204 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
ஆர்சிபி அணியின் கேப்டன் ஸ்மிருதி மந்தனா 87 ரன்கள் எடுத்து ஆட்டநாயகி விருதை வென்றார். மேலும் நடப்பு ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் எடுத்ததற்கான ஆரஞ்சு தொப்பி ஸ்மிருதி மந்தனாவிற்கு வழங்கப்பட்டது.
இந்நிலையில் இறுதிப்போட்டிக்கு முந்தைய இரவு, ஸ்மிருதிக்கு 103 டிகிரி ஃபாரன்ஹீட் காய்ச்சல் இருந்ததாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் பயிற்சியாளர் மாலோலன் ரங்கராஜன் தெரிவித்தார்.
கடுமையான காய்ச்சல் மற்றும் "ஃப்ளூ" (flu) பாதிப்பு இருந்தபோதிலும், அணியின் வெற்றிக்காக அவர் ஓய்வெடுக்காமல் விளையாடத் தீர்மானித்தார்.
உடல்நலக் குறைவையும் மீறி களமிறங்கிய அவர், டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிரான இறுதிப்போட்டியில் 41 பந்துகளில் 87 ரன்கள் குவித்து தனது அணியை சாம்பியன் பட்டத்தை நோக்கி அழைத்துச் சென்றார்.
இவரது இந்த அசாத்தியமான பங்களிப்பிற்காக இறுதிப்போட்டியின் "ஆட்ட நாயகி" (Player of the Match) விருது வழங்கப்பட்டது. அவருக்கு ரசிகர்கள் உள்பட விளையாட்டு வீரர்களும் பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
- டபிள்யூ.பி.எல் வரலாற்றிலேயே மிக உயர்ந்த ரன் சேஸை ஆர்சிபி பதிவு செய்தது.
- ஒரே நேரத்தில் IPL மற்றும் WPL கோப்பைகளை வைத்திருக்கும் முதல் அணியாக ஆர்சிபி புதிய சாதனையை படைத்துள்ளது.
மகளிர் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் போட்டியின் இறுதிப்போட்டி வதோதராவில் நடைபெற்றது. இதில் டெல்லி கேப்பிடல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. டாஸ் வென்ற பெங்களூரு அணி பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த டெல்லி கேப்பிடல்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 203 ரன்கள் குவித்தது. இதையடுத்து, 204 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 19.4 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 204 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் பெங்களூரு அணி, டபிள்யூ.பி.எல் வரலாற்றிலேயே மிக உயர்ந்த ரன் சேஸை பதிவு செய்ததுடன், 2-வது முறையாக சாம்பியன் பட்டத்தையும் கைப்பற்றியது. மேலும், ஒரே நேரத்தில் ஐபிஎல் மற்றும் டபிள்யூ.பி.எல் கோப்பைகளை வைத்திருக்கும் முதல் அணியாக பெங்களூரு புதிய சாதனையை படைத்துள்ளது. தற்போது ஐபிஎல் கோப்பையும் பெங்களூரு அணியிடம் உள்ளது.
இந்நிலையில் 2-வது முறையாக WPL தொடரை வென்ற RCB மகளிர் அணிக்கு இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி வாழ்த்து தெரிவித்து பதிவிட்டுள்ளார். அதில், நீங்கள் ஒவ்வொருவரும் பெருமைபடக்கூடிய மிகப்பெரிய வெற்றி இது. ஆர்சிபி அணியின் வெற்றிக்கு எனது மனமார்ந்த பாராட்டுகள். கேப்டன் ஸ்மிருதி மந்தனா மற்றும் அணியினர் இந்த வெற்றிக்கு மிகவும் தகுதியானவர்கள் என கூறினார்.
- ஐபிஎல் தொடரில் அதிக ரன் எடுத்ததற்கான ஆரஞ்சு தொப்பி ஸ்மிருதி மந்தனாவிற்கு அளிக்கப்பட்டது.
- அதிக விக்கெட் எடுத்த சோபியா டிவைனுக்கு பர்பிள் தொப்பியும் வழங்கப்பட்டது.
வதோதரா:
மகளிர் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் போட்டியின் இறுதிப்போட்டி வதோதராவில் நடந்தது. இதில் டெல்லி கேப்பிடல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின.
முதலில் பேட் செய்த டெல்லி கேப்பிடல்ஸ் அணி 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 203 ரன் குவித்தது. கேப்டன் ஜெமிமா ரோட்ரிக்ஸ் 57 ரன் எடுத்தார்.
அடுத்து, களமிறங்கிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 19.4 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 204 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
அத்துடன் 2வது முறையாக சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது. கேப்டன் ஸ்மிருதி மந்தனா 87 ரன்னிலும், ஜார்ஜியா வோல் 79 ரன்னிலும் அவுட்டாகினர்.
இந்நிலையில், ஆட்ட நாயகி விருது ஸ்மிருதி மந்தனாவுக்கும், தொடர் நாயகி விருது சோபி டிவைனுக்கும் அளிக்கப்பட்டது.
நடப்பு ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் எடுத்ததற்கான ஆரஞ்சு தொப்பி ஸ்மிருதி மந்தனாவிற்கும், அதிக விக்கெட் எடுத்த சோபியா டிவைனுக்கு பர்பிள் தொப்பியும் வழங்கப்பட்டது. வளர்ந்து வரும் வீராங்கனைக்கான விருது நந்தினி ஷர்மாவுக்கு அளிக்கப்பட்டது.
- முதலில் ஆடிய டெல்லி அணி 20 ஓவரில் 203 ரன்கள் குவித்தது.
- அடுத்து ஆடிய பெங்களூரு அணி 204 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
வதோதரா:
மகளிர் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் போட்டியின் இறுதிப்போட்டி வதோதராவில் நடைபெற்றது. இதில் டெல்லி கேப்பிடல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. டாஸ் வென்ற பெங்களூரு அணி பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த டெல்லி கேப்பிடல்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 203 ரன்கள் குவித்தது.
கேப்டன் ஜெமிமா ரோட்ரிக்ஸ் 57 ரன்னும், லாரா வோல்வார்ட் 44 ரன்னும், லிஸ்ஸி லீ 37 ரன்னும் எடுத்தனர்.
கடைசி கட்டத்தில் அதிரடியாக ஆடிய சினேலி ஹென்றி 15 பந்தில் 37 ரன்கள் குவித்தார்.
இதையடுத்து, 204 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூரு களமிறங்கியது. கிரேஸ் ஹாரிஸ் 9 ரன்னில் அவுட்டானார்.
கேப்டன் ஸ்மிருதி மந்தனாவுடன் ஜார்ஜியா வோல் இணைந்தார். இந்த ஜோடி அதிரடியில் மிரட்டியது. இருவரும் அரை சதம் கடந்தனர்.
2வது விக்கெட்டுக்கு 165 ரன்கள் சேர்த்த நிலையில் ஜார்ஜியா வோல் 79 ரன்னில் அவுட்டானார். ஸ்மிருதி மந்தனா பொறுப்புடன் ஆடி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்து சென்றார். அவர் 87 ரன்னில் ஆட்டமிழந்தார்.
இறுதியில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 19.4 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 204 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றதுடன், 2வது முறையாக சாம்பியன் பட்டம் வென்று அசத்தியது.
- பெண்கள் பிரீமியர் லீக் தொடரின் இறுதி ஆட்டம் வதோதராவில் இன்று நடக்கிறது.
- இதில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி, டெல்லி கேப்பிட்டல்சை எதிர்கொள்கிறது.
வதோதரா:
4-வது பெண்கள் பிரிமீயர் லீக் டி20 கிரிக்கெட் போட்டி கடந்த மாதம் 9-ம் தேதி தொடங்கியது. லீக் சுற்று முடிவில் 12 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்த பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் நேரடியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
வெளியேற்றுதல் சுற்று ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் ஜெயன்ட்சை விரட்டியடித்து 4-வது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.
இந்நிலையில் பெண்கள் பிரீமியர் லீக் தொடரின் இறுதி ஆட்டம் குஜராத்தின் வதோதராவில் இன்று நடக்கிறது. இதில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி, டெல்லி கேப்பிட்டல்சை எதிர்கொள்கிறது.
முன்னாள் சாம்பியனான பெங்களூரு அணி லீக் சுற்றில் முதல் 5 ஆட்டங்களில் தொடர்ச்சியாக வென்றது. அந்த அணியில் பேட்டிங்கில் கேப்டன் ஸ்மிருதி மந்தனா (290 ரன்), கிரேஸ் ஹாரிஸ் (228), ரிச்சா கோஷ் (183) எடுத்துள்ளனர்.
பந்து வீச்சில் நடினே டி கிளார்க் (15 விக்கெட்), லாரென் பெல் (12), ஸ்ரேயங்கா பட்டீல் (11), சயாலி சத்கரே சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள்.
இதேபோல், டெல்லி அணியின் பேட்டிங்கில் லிசெல் லீ (283 ரன்), லாரா வோல்வார்ட் (273), ஷபாலி வர்மா (239), கேப்டன் ஜெமிமா ரோட்ரிக்ஸ் (207) சூப்பர் பார்மில் உள்ளனர்.
பந்து வீச்சில் நந்தினி ஷர்மா (16 விக்கெட்), ஸ்ரீசரனி (14), சினெலி ஹென்றி (12) மிரட்டுகிறார்கள்.
நடப்பு சீசனில் இரு அணிகளும் 2 முறை நேருக்கு நேர் மோதியதில் தலா ஒரு ஆட்டங்களில் வெற்றி பெற்றுள்ளன. சம பலத்துடன் மல்லுகட்டுவதால் யாருடைய கை ஓங்கும் என்பதை கணிப்பது கடினம்.
பெங்களூரு அணி 2-வது முறையாக கோப்பையை கையில் ஏந்தும் முனைப்புடன் தயாராகிறது. டெல்லி அணியும் முதல் முறையாக கோப்பையை வெல்ல வரிந்து கட்டுகிறது.
போட்டியில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு ரூ.6 கோடியும், 2-வது இடம் பெறும் அணிக்கு ரூ.3 கோடியும் பரிசாக வழங்கப்படுகிறது.
- டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி தொடர்ந்து 4-வது முறையாக இறுதிசுற்றை எட்ட முனைப்பு காட்டும்.
- அதேநேரத்தில் முதல் முறையாக இறுதிப்போட்டிக்குள் அடியெடுத்து வைக்க குஜராத் தீவிர முனைப்புடன் உள்ளது.
வதோதரா:
5 அணிகள் இடையிலான 4-வது மகளிர் பிரிமீயர் லீக் (டபிள்யூ.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி குஜராத் மாநிலம் வதோதராவில் நடந்து வருகிறது. இதில் லீக் சுற்று முடிவில் 12 புள்ளிகளுடன் முதலிடம் (6 வெற்றி, 2 தோல்வி) பிடித்த ஸ்மிர்தி மந்தனா தலைமையிலான பெங்களுரு ராயல் சேலஞ் சர்ஸ் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
2-வது இடம் பிடித்த குஜராத் ஜெயன்ட்சும் (5 வெற்றி, 3 தோல்வியுடன் 10 புள்ளி), 3-வது இடம் பெற்ற டெல்லி கேப்பிட்டல்சும் (4 வெற்றி, 4 தோல்வியுடன் 8 புள்ளி) இன்று வெளியேற்றுதல் சுற்றில் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதில் வெற்றி காணும் அணி 2-வது அணியாக இறுதிப்போட்டிக்குள் நுழையும்.
லீக்கில் கடைசி 3 ஆட்டங்களில் தொடர்ச்சியாக வெற்றி பெற்று எழுச்சி கண்ட குஜராத் அணியில் பேட்டிங்கில் கேப்டன் ஆஷ்லி கார்ட்னெர் (244 ரன்), பெத் மூனியும் (196), பந்து வீச்சில் ராஜேஸ்வரி கெய்க்வாட், காஷ்வீ கவுதமும் நல்ல நிலையில் உள்ளனர். சோபி டிவைன் (237 ரன், 17 விக்கெட்) ஆல்-ரவுண்டராக அசத்துகிறார். டெல்லிக்கு எதிரான இரண்டு லீக் ஆட்டங்களிலும் வெற்றி பெற்றுள்ளதால் குஜராத் அணி கூடுதல் நம்பிக்கையுடன் களம் இறங்கும்.
டெல்லி அணியில் பேட்டிங்கில் லாரா வோல்வார்ட் (241 ரன்), லிசெல் லீ (240), ஷபாலி வர்மாவும் (208), பந்து வீச்சில் நந்தினி ஷர்மா, ஸ்ரீசரனி (தலா 14 விக்கெட்), மரிஜானே காப்பும் வலுசேர்க்கின்றனர். 8 ஆட்டத்தில் ஒரு அரைசதம் மட்டுமே அடித்துள்ள கேப்டன் ஜெமிமா ரோட்ரிக்ஸ் நிலையான பேட்டிங்கை வெளிப்படுத்த வேண்டியது அவசியமானதாகும்.
மொத்தத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி தொடர்ந்து 4-வது முறையாக இறுதிசுற்றை எட்ட வரிந்து கட்டுகிறது. அதேநேரத்தில் முதல் முறையாக இறுதிப்போட்டிக்குள் அடியெடுத்து வைக்க குஜராத் தீவிர முனைப்புடன் உள்ளது. எனவே ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது.
இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.
- முதலில் ஆடிய உ.பி.வாரியர்ஸ் அணி 20 ஓவரில் 122 ரன்கள் எடுத்தது.
- அடுத்து ஆடிய டெல்லி அணி 126 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
வதோதரா:
மகளிர் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் போட்டியின் 20-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ், உ.பி.வாரியர்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற டெல்லி அணி பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த உ.பி.வாரியர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 122 ரன்கள் எடுத்தது. தீப்தி ஷர்மா 24 ரன்னும், ஷிகா பாண்டே 23 ரன்னும், சிம்ரன் ஷேக் 22 ரன்னும் எடுத்தனர்.
இதையடுத்து, 123 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேப்பிடல்ஸ் அணி 18.4 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 126 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இதன்மூலம் 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற டெல்லி அணி எலிமினேட்டர் சுற்றுக்கு முன்னேறியது.
லாரா வால்வோர்ட் 47 ரன்னில் அவுட்டானார். ஷபாலி வர்மா 29 ரன்னில் வெளியேறினார். ஜெமிமா ரோட்ரிக்ஸ் 34 ரன்கள் எடுத்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.
- முதலில் ஆடிய குஜராத் அணி 20 ஓவரில் 167 ரன்கள் எடுத்தது.
- அடுத்து ஆடிய மும்பை அணி 20 ஓவரில் 156 ரன்கள் மட்டுமே எடுத்தது.
வதோதரா:
மகளிர் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் போட்டியின் 19-வது லீக் ஆட்டத்தில் குஜராத் ஜெயண்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற குஜராத் அணி பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த குஜராத் ஜெயண்ட்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 167 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஆஷ்லே கார்ட்னர் 46 ரன்னும், ஜார்ஜியா வேர்ஹாம் 44 ரன்னும் எடுத்தனர்.
இதையடுத்து, 168 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 156 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் அணி 5-வது வெற்றியைப் பதிவுசெய்து எலிமினேட்டர் சுற்றுக்கு முன்னேறியது.
ஹர்மன்பிரீத் கவுர் தனி ஆளாகப் போராடி அரை சதம் கடந்தார். அவர் 48 பந்தில் 82 ரன் குவித்து அவுட்டாகாமல் இருந்தார்.
குஜராத் அணி சார்பில் சோபியா டிவைன், ஜார்ஜியா வேர்ஹாம் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக முதல் வெற்றியை குஜராத் ஜெயண்ட்ஸ் அணி பெற்றுள்ளது.
- முதலில் ஆடிய உ.பி.வாரியர்ஸ் அணி 20 ஓவரில் 143 ரன்கள் எடுத்தது.
- அடுத்து ஆடிய பெங்களூரு அணி 13.2 ஓவரில் 147 ரன்கள் எடுத்து எளிதில் வென்றது.
வதோதரா:
மகளிர் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் போட்டியின் 18-வது லீக் ஆட்டத்தில் உ.பி.வாரியர்ஸ்- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட்டிங் செய்த உ.பி.வாரியர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 143 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக தீப்தி சர்மா அரை சதம் கடந்து 55 ரன்னும், மெக் லேனிங் 41 ரன்னும் எடுத்தனர்.
ஆர்சிபி தரப்பில் நாடின் டி கிளார்க் 4 விக்கெட்டும், கிரேஸ் ஹாரிஸ் 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.
இதையடுத்து, 144 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பெங்களூரு 13.2 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 147 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் 8 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரு அணி 6வது வெற்றியைப் பதிவுசெய்தது.
அதிரடியாக ஆடிய கிரேஸ் ஹாரிஸ் 37 பந்தில் 75 ரன்னும், ஸ்மிருதி மந்தனா 27 பந்தில் 54 ரன்னும் குவித்து வெற்றிக்கு வழிவகுத்தனர்.
- தீப்தி சர்மா 55 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
- ஆர்சிபி தரப்பில் நாடின் டி கிளார்க் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
5 அணிகள் பங்கேற்றுள்ள 4-வது மகளிர் பிரிமீயர் லீக் (டபிள்யூ.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி குஜராத் மாநிலம் வதோதராவில் நடந்து வருகிறது.
இதில் இன்று நடக்கும் 18-வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், கடைசி இடத்தில் உள்ள உ.பி.வாரியர்ஸ் அணிகள் மோதி வருகிறது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி உபி அணியின் தொடக்க வீராங்கனைகளாக கேப்டன் மெக் லெனிங் மற்றும் தீப்தி சர்மா களமிறங்கினர். இருவரும் சிறப்பாக விளையாடிய ரன்களை குவித்தனர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 74 ரன்கள் சேர்த்தது. லெனிங் 41 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
அடுத்து வந்த வீராங்கனைகள் பெரிதாக ரன்கள் எடுக்கவில்லை. ஒருமுனையில் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய தீப்தி அரை சதம் அடித்து அசத்தினார். அவர் 55 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.
அடுத்த வந்தவர்கள் சொற்ப ரன்னில் வெளியேற உபி அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 143 ரன்கள் எடுத்தது. ஆர்சிபி தரப்பில் நாடின் டி கிளார்க் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
- முதலில் ஆடிய பெங்களூரு அணி 20 ஓவரில் 109 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
- அடுத்து ஆடிய டெல்லி அணி 15.4 ஓவரில் 113 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
வதோதரா:
மகளிர் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் போட்டியின் 15-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ்- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 109 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக ஸ்மிருதி மந்தனா 38 ரன்கள் எடுத்தார்.
டெல்லி அணி சார்பில் நந்தின் ஷர்மா 3 விக்கெட்டும், ஸ்ரீ சரணி, சினேலி ஹென்றி, மரிஜானே காப் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 110 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணி 15.4 ஓவரில் 113 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் 7 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி அணி 3வது வெற்றியைப் பதிவுசெய்தது. லாரா வோல்வார்ட் 42 ரன்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு உதவினார்.
நடப்பு தொடரில் பெங்களூரு அணி பெற்ற முதல் தோல்வி இதுவாகும்.
- முதலில் ஆடிய குஜராத் அணி 20 ஓவரில் 153 ரன்கள் எடுத்தது.
- அடுத்து ஆடிய உ.பி.வாரியர்ஸ் அணி 108 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
வதோதரா:
மகளிர் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் போட்டியின் 14-வது லீக் ஆட்டத்தில் குஜராத் ஜெயண்ட்ஸ்- உ.பி.வாரியர்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற உ.பி.வாரியர்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட்டிங் செய்த குஜராத் ஜெயண்ட்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 153 ரன்கள் எடுத்தது. அந்த அணியின் சோபி டிவைன் 50 ரன்னில் வெளியேறினார். பெத் மூனி 38 ரன்கள் எடுத்தார்.
இதையடுத்து, 154 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் உ.பி.வாரியர்ஸ் அணி களமிறங்கியது. ஆரம்பம் முதலே விக்கெட்கள் சீராக விழுந்தன.
இறுதியில், உ.பி.வாரியர்ஸ் அணி 17.3 ஓவரில் 108 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 8 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் அணி 3வது வெற்றியைப் பதிவுசெய்தது.






