என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Delhi Capitals"

    • கே.எல். ராகுல் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் விளையாடி வருகிறார்.
    • கே.கே.ஆர். அணி அவரை வாங்க விரும்புவதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இந்திய அணியின் முன்னணி பேட்ஸ்மேன் கே.எல். ராகுல். ஐபிஎல் மெகா ஏலத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி பெரும்தொகை கொடுத்து ஏலம் எடுத்தது. டெல்லி அணிக்காக சிறப்பாக விளையாடினார். மேலும், இந்திய அணிக்காக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

    இந்த நிலையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கே.எல். ராகுலை ஒப்பந்தம் செய்ய ஆர்வமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒப்பந்தம் உறுதியானால், கேப்டன் பதவி கூட கொடுக்கப்படலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

    • இவ்விரு அணிகளும் இதுவரை 33 முறை நேருக்கு நேர் சந்தித்து இருக்கின்றன.
    • இதில் 17-ல் பஞ்சாப் அணியும், 16-ல் டெல்லி அணியும் வென்று இருக்கின்றன.

    10 அணிகள் பங்கேற்றுள்ள 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில், குஜராத் டைட்டன்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், பஞ்சாப் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறி உள்ளன.

    சென்னை, ராஜஸ்தான், ஐதராபாத், கொல்கத்தா, லக்னோ, டெல்லி அணிகள் அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து விட்டன. மீதமுள்ள லீக் ஆட்டங்கள் டாப்-2 இடம் யாருக்கு என்பதை முடிவு செய்யும். முதல் இரு இடங்களுக்குள் வரும் அணிக்கு இறுதிப்போட்டிக்குள் நுழைய இரு வாய்ப்பு கிடைக்கும் என்பது கவனிக்கத்தக்கது.

    இந்த நிலையில் ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில் இன்று நடக்கும் 66-வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் - டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மல்லுக்கட்டுகின்றன. இதில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.

    இவ்விரு அணிகளும் இதுவரை 33 முறை நேருக்கு நேர் சந்தித்து இருக்கின்றன. இதில் 17-ல் பஞ்சாப் அணியும், 16-ல் டெல்லி அணியும் வென்று இருக்கின்றன.

    • டெல்லி அணி 13 ஆட்டங்களில் ஆடி 6 வெற்றி, 6 தோல்வி, ஒரு முடிவில்லை என 13 புள்ளிகளுடன் 5-வது இடத்தில் உள்ளது.
    • புள்ளி பட்டியலில் முதல் இரு இடங்களுக்குள் வர பஞ்சாப் அணி முனைப்பு காட்டுகிறது.

    10 அணிகள் பங்கேற்றுள்ள 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில், குஜராத் டைட்டன்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், பஞ்சாப் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறி உள்ளன. சென்னை, ராஜஸ்தான், ஐதராபாத், கொல்கத்தா, லக்னோ, டெல்லி அணிகள் அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து விட்டன. மீதமுள்ள லீக் ஆட்டங்கள் டாப்-2 இடம் யாருக்கு என்பதை முடிவு செய்யும். முதல் இரு இடங்களுக்குள் வரும் அணிக்கு இறுதிப்போட்டிக்குள் நுழைய இரு வாய்ப்பு கிடைக்கும் என்பது கவனிக்கத்தக்கது.

    இந்த நிலையில் ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில் இன்று நடக்கும் 66-வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் - டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மல்லுக்கட்டுகின்றன.

    பஞ்சாப் அணி 12 ஆட்டங்களில் ஆடி 8 வெற்றி, 3 தோல்வி, ஒரு முடிவில்லை (கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டம் மழையால் ரத்து) என 17 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் இருக்கிறது. அந்த அணி தனது கடைசி 3 ஆட்டங்களில் தொடர்ச்சியாக 190 ரன்களுக்கு மேல் குவித்து வெற்றி கண்டுள்ளது. பேட்டிங்கில் பிரப்சிம்ரன் சிங் (458 ரன்), கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் (435), பிரியான்ஷ் ஆர்யா, நேஹல் வதேரா, ஷசாங் சிங்கும், பந்து வீச்சில் அர்ஷ்தீப் சிங், யுஸ்வேந்திர சாஹல், மார்கோ யான்சென், ஹர்பிரீத் பிராரும் கலக்குகிறார்கள்.

    டெல்லி அணி 13 ஆட்டங்களில் ஆடி 6 வெற்றி, 6 தோல்வி, ஒரு முடிவில்லை என 13 புள்ளிகளுடன் 5-வது இடத்தில் உள்ளது. தனது முதல் 6 ஆட்டங்களில் 5-ல் வென்று வீறுநடை போட்ட டெல்லி அடுத்த 7 ஆட்டங்களில் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்று சறுக்கியதுடன், பிளே-ஆப் வாய்ப்பையும் பறிகொடுத்தது.

    டெல்லி அணியில் லோகேஷ் ராகுல் (ஒரு சதம், 3 அரைசதம் உள்பட 504 ரன்) தவிர்த்து மற்றவர்களின் பேட்டிங் சீராக இல்லை. தொடக்க ஆட்டக்காரர்கள் இருவரும் ஒருசேர சிறப்பாக ஆடாதது பலவீனமாக உள்ளது. உடல் நலக்குறைவு காரணமாக முந்தைய ஆட்டத்தில் ஆடாத கேப்டன் அக்ஷர் பட்டேல் இன்றைய ஆட்டத்தில் களம் இறங்குவாரா? என்பது உறுதியாகவில்லை. அவர் உடல்தகுதியுடன் இல்லாவிட்டால் பாப் டு பிளிஸ்சிஸ் அணியை வழிநடத்துவார்.

    இவ்விரு அணிகள் கடந்த 8-ந்தேதி தர்மசாலாவில் சந்தித்த போது, இந்தியா -பாகிஸ்தான் சண்டை காரணமாக எல்லையில் தாக்குதல் தீவிரமானதால் ஸ்டேடியத்தில் மின்கோபுர விளக்குகள் அணைக்கப்பட்டு ஆட்டமும் பாதியில் கைவிடப்பட்டது. அந்த ஆட்டம் தான் தற்போது மீண்டும் நடத்தப்படுகிறது.

    தோல்வியால் துவண்டு போயுள்ள டெல்லி அணி, பஞ்சாப்பை பதம் பார்த்து இந்த சீசனை வெற்றியோடு நிறைவு செய்யும் வேட்கையுடன் ஆயத்தமாகிறது. அதே சமயம் புள்ளி பட்டியலில் முதல் இரு இடங்களுக்குள் வர பஞ்சாப் அணி முனைப்பு காட்டுகிறது. இதில் யாருடைய கை ஓங்கும் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

    இவ்விரு அணிகளும் இதுவரை 33 முறை நேருக்கு நேர் சந்தித்து இருக்கின்றன. இதில் 17-ல் பஞ்சாப் அணியும், 16-ல் டெல்லி அணியும் வென்று இருக்கின்றன.

    போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

    பஞ்சாப்: பிரியான்ஷ் ஆர்யா, பிரப்சிம்ரன் சிங், ஜோஷ் இங்லிஸ், நேஹல் வதேரா, ஸ்ரேயாஸ் அய்யர் (கேப்டன்), ஷசாங் சிங், அஸ்மத்துல்லா ஒமர்ஜாய், மார்கோ யான்சென், கைல் ஜாமிசன், அர்ஷ்தீப் சிங், யுஸ்வேந்திர சாஹல், ஹர்பிரித் பிரார்.

    டெல்லி: லோகேஷ் ராகுல், பாப் டு பிளிஸ்சிஸ், அபிஷேக் போரெல், சமீர் ரிஸ்வி, விப்ராஜ் நிகம், டிரிஸ்டான் ஸ்டப்ஸ், அஷூதோஷ் ஷர்மா, அக்ஷர் பட்டேல் (கேப்டன்) அல்லது மாதவ் திவாரி, துஷ்மந்தா சமீரா, குல்தீப் யாதவ், முஸ்தாபிஜூர் ரகுமான், முகேஷ் குமார்.

    இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

    • முதல் நான்கு போட்டிகளில் தொடர்ந்து வெற்றி பெற்றிருந்தது.
    • 8 போட்டிகளில் 6-ல் வெற்றி பெற்ற நிலையிலும், பிளேஆஃப் சுற்றை உறுதி செய்ய முடியவில்லை.

    ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி தொடக்கத்தில் சிறப்பாக விளையாடியது. முதல் 4 போட்டிகளில் தொடர்ந்து வெற்றி பெற்றது. முதல் 8 போட்டிகளில் 6-ல் வெற்றி பெற்றது. அதன்பின் 13 போட்டிகளில் ஒரு போட்டி மழையால் தடைபட்டது. மற்ற போட்டிகளில் தோல்வியடைந்தது. நேற்று வாழ்வா? சாவா? போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிராக 59 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்து தொடரில் இருந்து வெளியேறியது.

    பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேற முடியாததற்கு நிலையான தொடக்க ஜோடி அமையாதது காரணம் என அணியின் தலைமை பயிற்சியாளர் ஹேமங் பதானி தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக ஹேமங் பதானி கூறுகையில் "தொடக்க ஜோடி அணிக்கு நல்ல தொடக்கம் கொடுக்கும்போதுதான், நிலையான தொடக்க ஜோடி என தீர்மானிப்பது சாத்தியமானதாகும். அப்படி தொடக்கம் கிடைக்கவில்லை என்றால், அந்த இடைவெளியை நிரப்ப, அந்த வெற்றிடத்தை நிரப்ப மாற்றங்களைச் செய்ய நீங்கள் கடமைப்பட்டுள்ளீர்கள்.

    மற்ற அணிகளை பார்த்தீர்கள் என்றால், அவர்களுக்கு சிறந்த தொடக்கம் கிடைத்தது. பவர்பிளேயில் சிறப்பான ரன்கள் அடித்தனர். எங்களுக்கு அதுபோன்ற தொடக்கம் கிடைக்காததால், நாங்கள் இதுபோன்ற மாற்றங்களை செய்தோம்.

    சீசன் தொடக்கத்தில் மெக்கர்க்கை தொடக்க வீரராக களம் இறக்கினோம். அவர் சரியாக விளையாடவில்லை. அதன்பின் பொரேல், டு பிளிஸ்சிஸ், கருண் நாயர் என கொண்டு வந்தோம். எங்களுக்கு நல்ல தொடக்கம் கொடுக்கும் யாரும் எங்களிடம் இல்லை என்பதுதான் உண்மை.

    எங்களுடைய ஓபனிங் ஜோடி கவலை அளிக்கும் விதமாக இருந்தது. தொடரில் நாங்கள் முன்னேறி பிளேஆஃப் சுற்றுக்கு செல்ல முடியாததற்கு இது ஒரு முக்கிய காரணம்" என்றார்.

    • 181 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி களமிறங்கியது.
    • டெல்லி அணி 6-வது தோல்வியை பெற்றதுடன், நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறியது.

    நடப்பு ஐ.பி.எல். தொடர் இறுதி கட்டத்தை நெருங்கி வருகிறது. நேற்று இரவு வரை பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் 4-வது அணி யார் என்பது ரசிகர்களிடையே ஆர்வத்தை ஏற்படுத்தி இருந்தது. இதற்கான போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடைபெற்றது.

    இதில் மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 180 ரன்கள் குவித்தது.

    இதையடுத்து, 181 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி களமிறங்கியது. மும்பை அணியின் துல்லியமான பந்து வீச்சால் முன்னணி வீரர்கள் விரைவில் அவுட்டாகினர். அதிகபட்சமாக சமீர் ரிஸ்வி 39 ரன்கள் எடுத்தார். மற்றவர்கள் விரைவில் வெளியேறினர்.

    இறுதியில், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 18.2 ஓவரில் 121 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது. இதன்மூலம் 59 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் வெற்றி பெற்றதுடன், பிளே ஆப் சுற்றுக்கும் முன்னேறியது. டெல்லி அணி 6-வது தோல்வியை பெற்றதுடன், நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறியது.

    இதனிடையே, போட்டி தொடங்குவதற்கு முன்பு இரு அணி வீரர்களும் பங்கேற்ற டாஸ் தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதில் மும்பை அணி கேப்டன் ஹர்திக் பாண்டியா டாஸ் போடுவதற்கான நாணயத்தை வாங்கும் போது டெல்லி அணி கேப்டன் டு பிளெசிஸ் அதனை சரிபார்ப்பது போன்று பார்க்கிறார். அப்போது மற்றொருவர் அந்த நாணயத்தை காண்பித்ததும் டு பிளெசிஸ் தலை ஆட்டியதும் ஹர்திக் பாண்டியா டாஸ் போடுகிறார்.

    கடந்தாண்டு மும்பை அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் போடப்பட்டபோது பெங்களூரு அணி கேப்டன் டு பிளெசிஸ் ஏமாற்றப்பட்டார் என்று அந்த வீடியோ இணையத்தில் வைரலானது.

    அதனால் கடந்தாண்டு ஏமாந்தது போல இந்தாண்டு ஏமாற கூடாது என்று டாஸ் நாணயத்தை டு பிளெசிஸ் சரிபார்த்தார் என்று நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர். 



    • ரோகித் சர்மா 5 ரன்னில் ஆட்டமிழந்தார்.
    • சூர்யகுமார் யாதவ் அரைசதம் விளாசினார்.

    ஐபிஎல் தொடரின் 63ஆவது போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் மும்பை இந்தியன்ஸ்- டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி கேப்டன் டு பிளிஸ்சிஸ் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தார். டெல்லி அணியில் அக்சர் படேல் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் இடம் பெறவில்லை.

    மும்பை அணியின் ரியான் ரிக்கெல்டன், ரோகித் சர்மா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். ரோகித் சர்மா 5 ரன் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தா்.

    அடுத்து வந்த வில் ஜேக்ஸ் 21 ரன்னிலும், மறுமுனையில் விளையாடிய ரிக்கெல்டன் 25 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால் மும்பை இந்தியன்ஸ் 6.4 ஓவரில் 58 ரன்கள் எடுத்து 3 விக்கெட்டுகளை இழந்தது.

    4ஆவது விக்கெட்டுக்கு சூர்யகுமார் யாதவ் உடன் திலக் வர்மா ஜோடி சேர்ந்தார். திலக் வர்மா 27 பந்தில் 27 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஹர்திக் பாண்ட்யா 3 ரன்னில் வெளியேறினார்.

    ஹர்திக் பாண்ட்யா ஆட்டமிழக்கும்போது மும்பை இந்தியன்ஸ் 16.3 ஓவரில் 123 ரன்கள் எடுத்திருந்தது. 6ஆவது விக்கெட்டுக்கு சூர்யகுமார் யாதவ் உடன் நமன் திர் ஜோடி சேர்ந்தார்.

    மும்பை இந்தியன்ஸ் 18 ஓவர் முடிவில் 132 ரன்கள் எடுத்திருந்தது. 19ஆவது ஓவரை முகேஷ் குமார் வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தை சிக்சருக்கு தூக்கி சூர்யகுமார் யாதவ் 36 பந்தில் அரைசதம் அடித்தார். இந்த ஓவரில் முகேஷ் குமார் 3 சிக்ஸ், 2 பவுண்டரியுடன் 27 ரன்கள் விட்டுக்கொடுக்க மும்பை இந்தியன்ஸ் 159 ரன்கள் சேர்த்தது.

    கடைசி ஓவரை சமீரா வீசினார். இந்த ஓவரில் 21 ரன்கள் விட்டுக்கொடுக்க மும்பை இந்தியன்ஸ் 5 விக்கெட் இழப்பிற்கு 180 ரன்கள் குவித்தது. சூர்யகுமார் யாதவ் 43 பந்தில் 73 ரன்களும், நமன் திர் 8 பந்தில் 24 ரன்கள் எடுத்தும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

    • புள்ளிகள் பட்டியலில் மும்பை இந்தியன்ஸ் 4ஆவது இடத்தில் உள்ளது.
    • டெல்லி கேப்பிட்டல்ஸ் 5ஆவது இடத்தில் உள்ளது.

    ஐபிஎல் தொடரின் 63ஆவது போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடக்கிறது. இதில் மும்பை இந்தியன்ஸ்- டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி கேப்டன் அக்சர் படேல் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.

    மும்பை இந்தியன்ஸ் அணி:-

    ரிக்கெல்டன், ரோகித் சர்மா, வில் ஜேக்ஸ், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, ஹர்திக் பாண்ட்யா, நமன் திர், மிட்செல் சான்ட்னெர், தீபக் சாஹர், டிரென்ட் போல்ட், பும்ரா.

    டெல்லி கேப்பிட்டல்ஸ்:-

    டு பிளிஸ்சிஸ், அபிஷேக் பொரேல், சமீர் ரிஸ்வி, ஸ்டப்ஸ், அஷுடோஸ் சர்மா, விப்ராஜ் நிகம், மாதவ் திவாரி, குல்தீப் யாதவ், சமீரா, முஷ்டாபிஜுர் ரஹ்மான், முகேஷ் குமார்.

    • எஞ்சிய ஒரு பிளே-ஆப் இடத்துக்கு டெல்லி, மும்பை அணிகள் இடையே நேரடி போட்டி நிலவுகிறது.
    • இன்று நடைபெறும் 63-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி, டெல்லி கேப்பிட்டல்சை சந்திக்கிறது.

    10 அணிகள் இடையிலான 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இறுதி கட்டத்தை எட்டி விட்டது. இதுவரை குஜராத் டைட்டன்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், பஞ்சாப் கிங்ஸ் ஆகிய 3 அணிகள் அடுத்த சுற்றுக்கு (பிளே-ஆப்) தகுதி பெற்றுள்ளன.

    எஞ்சிய ஒரு பிளே-ஆப் இடத்துக்கு டெல்லி, மும்பை அணிகள் இடையே நேரடி போட்டி நிலவுகிறது. இரு அணிகளுக்கும் 2 ஆட்டங்கள் எஞ்சி இருக்கின்றன.

    இந்நிலையில் மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் இன்று நடைபெறும் 63-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி, டெல்லி கேப்பிட்டல்சை சந்திக்கிறது. இன்றைய ஆட்டம் இரு அணிகளுக்கும் மிகவும் முக்கியமானதாகும். இதில் வெற்றி பெற்றால் மும்பை அணி 16 புள்ளிகளுடன் அடுத்த சுற்றுக்கு முன்னேறி விடும். மாறாக தோற்றால் அடுத்த ஆட்டத்தில் (பஞ்சாப்புக்கு எதிராக) வெற்றி பெறுவதுடன், கடைசி ஆட்டத்தில் டெல்லி அணி (பஞ்சாப்புக்கு எதிராக) தோல்வியை சந்திக்க வேண்டும்.

    டெல்லி அணியை பொறுத்தமட்டில் எஞ்சிய இரு போட்டிகளிலும் வென்றாக வேண்டும். இன்றைய ஆட்டத்தில் தோற்றால் அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து விடும்.

    இந்நிலையில், மும்பையில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் இன்று வான்கடே மைதானத்தில் நடைபெறவுள்ள மும்பை - டெல்லி போட்டியை வேறு மைதானத்திற்கு மாற்ற வேண்டும் என டெல்லி கேபிடல்ஸ் அணியின் உரிமையாளர் பார்த் ஜிண்டால், ஐபிஎல் நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

    முன்னதாக, பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் வருகிற 23-ந் தேதி ஆர்சிபி- சன்ரைசர்ஸ் அணிகள் மோத இருந்தனர். ஆனால்

    முன்னதாக, பெங்களூருவில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டதை தொடர்ந்து வருகிற 23-ந் தேதி பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நடைபெற இருந்த பெங்களூரு - ஐதாராபாத் போட்டி லக்னோவிற்கு மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    • இன்றைய ஆட்டம் இரு அணிகளுக்கும் மிகவும் முக்கியமானதாகும்.
    • மும்பை அணி 12 ஆட்டங்களில் ஆடி 7 வெற்றி, 5 தோல்வியுடன் 14 புள்ளிகள் பெற்று 4-வது இடத்தில் இருக்கிறது.

    10 அணிகள் இடையிலான 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இறுதி கட்டத்தை எட்டி விட்டது. இதுவரை குஜராத் டைட்டன்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், பஞ்சாப் கிங்ஸ் ஆகிய 3 அணிகள் அடுத்த சுற்றுக்கு (பிளே-ஆப்) தகுதி பெற்றுள்ளன. எஞ்சிய ஒரு பிளே-ஆப் இடத்துக்கு டெல்லி, மும்பை அணிகள் இடையே நேரடி போட்டி நிலவுகிறது. இரு அணிகளுக்கும் 2 ஆட்டங்கள் எஞ்சி இருக்கின்றன. சென்னை, ராஜஸ்தான், ஐதராபாத், கொல்கத்தா, லக்னோ அணிகள் ஏற்கனவே அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து விட்டன.

    இந்த நிலையில் மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் இன்று நடைபெறும் 63-வது லீக் ஆட்டத்தில் 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி, டெல்லி கேப்பிட்டல்சை சந்திக்கிறது.

    இன்றைய ஆட்டம் இரு அணிகளுக்கும் மிகவும் முக்கியமானதாகும். இதில் வெற்றி பெற்றால் மும்பை அணி 16 புள்ளிகளுடன் அடுத்த சுற்றுக்கு முன்னேறி விடும். மாறாக தோற்றால் அடுத்த ஆட்டத்தில் (பஞ்சாப்புக்கு எதிராக) வெற்றி பெறுவதுடன், கடைசி ஆட்டத்தில் டெல்லி அணி (பஞ்சாப்புக்கு எதிராக) தோல்வியை சந்திக்க வேண்டும்.

    டெல்லி அணியை பொறுத்தமட்டில் எஞ்சிய இரு லீக்கிலும் வென்றாக வேண்டும். இன்றைய ஆட்டத்தில் தோற்றால் அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து விடும். அதன் பிறகு அந்த அணி தனது கடைசி ஆட்டத்தில் பஞ்சாப்பை வீழ்த்தினாலும் 15 புள்ளியை தான் தொட முடியும்.

    மும்பை அணி 12 ஆட்டங்களில் ஆடி 7 வெற்றி, 5 தோல்வியுடன் 14 புள்ளிகள் பெற்று 4-வது இடத்தில் இருக்கிறது. தனது முதல் 5 ஆட்டங்களில் ஒரு வெற்றி மட்டுமே பெற்ற அந்த அணி அதன் பிறகு எழுச்சி பெற்று தொடர்ச்சியாக 6 வெற்றிகளை குவித்தது. முந்தைய ஆட்டத்தில் குஜராத்திடம் வீழ்ந்தது.

    மும்பை அணியில் பேட்டிங்கில் சூர்யகுமார் யாதவ் (510 ரன்), ரையான் ரிக்கெல்டன், ரோகித் சர்மா, திலக் வர்மாவும், பந்து வீச்சில் டிரென்ட் பவுல்ட், ஜஸ்பிரித் பும்ரா, கேப்டன் ஹர்திக் பாண்ட்யா, கரண் ஷர்மாவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள்.

    டெல்லி அணி 12 ஆட்டங்களில் ஆடி 6 வெற்றி, 5 தோல்வி, ஒரு முடிவில்லை என 13 புள்ளிகளுடன் 5-வது இடத்தில் உள்ளது. அந்த அணி முதல் 6 ஆட்டங்களில் 5-ல் வெற்றி கண்டு கம்பீரமாக பயணித்தது. அதன் பிறகு அடுத்த 6 ஆட்டங்களில் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்று தள்ளாடுகிறது.

    டெல்லி அணியில் பேட்டிங்கில் லோகேஷ் ராகுல் (493 ரன்) நல்ல நிலையில் உள்ளார். அபிஷேக் போரெல், அஷூதோஷ் ஷர்மா, டிரிஸ்டான் ஸ்டப்ஸ், பாப் டுபிளிஸ்சிஸ் அவ்வப்போது பங்களிப்பு அளிக்கின்றனர். பந்து வீச்சில் குல்தீப் யாதவ், விப்ராஜ் நிகம், கேப்டன் அக்ஷர் பட்டேல் வலு சேர்க்கிறார்கள். முக்கிய வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் (ஆஸ்திரேலியா) விலகியது அந்த அணிக்கு பின்னடைவாகும்.

    இந்த சீசனில் உள்ளூரில் கடைசி ஆட்டத்தில் ஆடும் மும்பை அணி வெற்றிகரமாக நிறைவு செய்து ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்துவதுடன், பிளே-ஆப் சுற்றையும் உறுதி செய்ய தீவிரம் காட்டும். டெல்லிக்கு எதிரான முந்தைய லீக் ஆட்டத்தில் 12 ரன் வித்தியாசத்தில் வென்று இருப்பதால் அந்த அணி கூடுதல் நம்பிக்கையுடன் களம் இறங்கும். அதேநேரத்தில் வாழ்வா - சாவா? நிலையில் களம் காணும் டெல்லி அணி பதிலடி கொடுக்க வரிந்து கட்டி நிற்கும். எனவே ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.

    இவ்விரு அணிகளும் இதுவரை 36 முறை நேருக்கு நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் மும்பை 20 ஆட்டங்களிலும், டெல்லி 16 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. நடப்பு தொடரில் வான்கடேவில் மும்பை அணி 6 ஆட்டங்களில் ஆடி 4-ல் வாகை சூடியிருக்கிறது.

    இந்த ஆட்டம் மழையால் பாதிக்கப்பட அதிக வாய்ப்புள்ளது. மும்பையில் நேற்று மழை செய்தது. அங்கு அடுத்த 4 நாட்களுக்கு இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

    போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

    மும்பை: ரோகித் சர்மா, ரையான் ரிக்கெல்டன், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, ஹர்திக் பாண்ட்யா (கேப்டன்), நமன் திர், வில் ஜாக்ஸ், மிட்செல் சான்ட்னெர், தீபக் சாஹர், டிரென்ட் பவுல்ட், ஜஸ்பிரித் பும்ரா, கரண் ஷர்மா.

    டெல்லி: லோகேஷ் ராகுல், பாப் டு பிளிஸ்சிஸ், அபிஷேக் போரெல், அக்ஷர் பட்டேல் (கேப்டன்), டிரிஸ்டான் ஸ்டப்ஸ், சமீர் ரிஸ்வி, அஷூதோஷ் ஷர்மா, விப்ராஜ் நிகம், டி.நடராஜன், குல்தீப் யாதவ், முஸ்தாபிஜூர் ரகுமான், துஷ்மந்தா சமீரா.

    இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

    • போட்டியில் குஜராத் கேப்டன் ஜூப்மன் கில் டாஸ் வென்று பவுலிங் தேர்வு செய்தார்.
    • டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி பேட்டிங் செய்ய முதலில் களம் இறங்கியது.

    10 அணிகள் இடையிலான 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி தொடரில் இன்று இரவு டெல்லி அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் நடைபெறும் 60-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி, முன்னாள் சாம்பியனான குஜராத் டைட்டன்சை எதிர்கொண்டுள்ளது.

    ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது.

    டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் குஜராத் கேப்டன் ஜூப்மன் கில் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தார்.

    அதன்படி, டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி பேட்டிங் செய்ய முதலில் களம் இறங்கியது.

    இந்நிலையில், 20 ஓவர் முடிவில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி 3 விக்கெட் இழப்பிற்கு 199 ரன்கள் எடுத்துள்ளது.

    இதில், அதிகபட்சமாக கே.எல்.ராகுல் 65 பந்துகளில் 112 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் அசத்தியுள்ளார். மேலும், அபிஷேக் போரல் 30, அக்சர் படேல் 25, த்ரிஷ்டன் ஸ்டப்ஸ் 21 ரன்களை எடுத்தனர்.

    இதைத் தொடர்ந்து, 200 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் டைட்டன்ஸ் அணி களமிறங்கியுள்ளது.

    • இப்போட்டியில் குஜராத் கேப்டன் ஜூப்மன் கில் டாஸ் வென்று பவுலிங் தேர்வு செய்தார்.
    • டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி பேட்டிங் செய்ய முதலில் களம் இறங்குகிறது.

    10 அணிகள் இடையிலான 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி தொடரில் இன்று இரவு டெல்லி அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் நடைபெறும் 60-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி, முன்னாள் சாம்பியனான குஜராத் டைட்டன்சை எதிர்கொள்கிறது.

    டெல்லி அணி 11 ஆட்டங்களில் ஆடி 6 வெற்றி, 4 தோல்வி, ஒரு முடிவில்லை (ஐதராபாத்துக்கு எதிரான ஆட்டம் மழையால் ரத்து) என 13 புள்ளிகள் பெற்றுள்ளது.

    குஜராத் அணி 11 ஆட்டங்களில் ஆடி 8 வெற்றி, 3 தோல்வியுடன் 16 புள்ளிகள் பெற்றுள்ளது. அந்த அணி எஞ்சியுள்ள 3 ஆட்டங்களில் ஒன்றில் வெற்றி பெற்றாலே அடுத்த சுற்றுக்குள் நுழைந்து விடும்.

    இந்நிலையில், ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.

    டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் குஜராத் கேப்டன் ஜூப்மன் கில் டாஸ் வென்று பவுலிங் தேர்வு செய்தார்.

    அதன்படி, டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி பேட்டிங் செய்ய முதலில் களம் இறங்குகிறது.

    • டெல்லி அணியில் பேட்டிங்கில் லோகேஷ் ராகுல் நல்ல நிலையில் உள்ளார்.
    • குஜராத் அணி 11 ஆட்டங்களில் ஆடி 8 வெற்றி, 3 தோல்வியுடன் 16 புள்ளிகள் பெற்றுள்ளது.

    10 அணிகள் இடையிலான 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி தொடரில் இன்று இரவு டெல்லி அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் நடைபெறும் 60-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி, முன்னாள் சாம்பியனான குஜராத் டைட்டன்சை எதிர்கொள்கிறது.

    டெல்லி அணி 11 ஆட்டங்களில் ஆடி 6 வெற்றி, 4 தோல்வி, ஒரு முடிவில்லை (ஐதராபாத்துக்கு எதிரான ஆட்டம் மழையால் ரத்து) என 13 புள்ளிகள் பெற்றுள்ளது. முதல் 4 ஆட்டங்களில் தொடர்ச்சியாக வெற்றி பெற்று கம்பீரமாக தொடங்கிய டெல்லி அணி கடைசி 5 ஆட்டங்களில் 3 தோல்வி, ஒரு முடிவில்லையுடன் தடுமாறி வருகிறது. பஞ்சாப்புக்கு எதிரான அந்த அணியின் முந்தைய ஆட்டம் போர் பதற்றம் காரணமாக பாதியில் கைவிடப்பட்டது. டெல்லி அணி எஞ்சிய 3 ஆட்டத்திலும் வெற்றி வாகை சூடினால் தான் அடுத்த சுற்றுக்குள் சிக்கலின்றி அடியெடுத்து வைக்க முடியும். மாறாக இரண்டில் வெற்றி பெற்றால் அடுத்த அணிகளின் முடிவுக்காக காத்து இருக்க வேண்டியது வரும்.

    டெல்லி அணியில் பேட்டிங்கில் லோகேஷ் ராகுல் நல்ல நிலையில் உள்ளார். அபிஷேக் போரெல், டிரிஸ்டான் ஸ்டப்ஸ், பாப் டுபிளிஸ்சிஸ், அஷூதோஷ் ஷர்மா, கருண் நாயர் அவ்வப்போது பங்களிக்கின்றனர். பந்து வீச்சில் குல்தீப் யாதவ், விப்ராஜ் நிகம், முகேஷ் குமார், கேப்டன் அக்ஷர் பட்டேல் பலம் சேர்க்கின்றனர். போட்டி ஒத்திவைக்கப்பட்டதால் தாயகம் சென்ற ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் திரும்பாதது அந்த அணிக்கு பெரிய பின்னடைவாகும். அவர் 14 விக்கெட்டுகள் (11 ஆட்டங்கள்) வீழ்த்தி இருந்தார்.

    குஜராத் அணி 11 ஆட்டங்களில் ஆடி 8 வெற்றி, 3 தோல்வியுடன் 16 புள்ளிகள் பெற்றுள்ளது. அந்த அணி எஞ்சியுள்ள 3 ஆட்டங்களில் ஒன்றில் வெற்றி பெற்றாலே அடுத்த சுற்றுக்குள் நுழைந்து விடும்.

    குஜராத் அணி பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் வலுவாக உள்ளது. பேட்டிங்கில் சாய் சுதர்சன் (509 ரன்), கேப்டன் சுப்மன் கில் (508), ஜோஸ் பட்லர் (500 ரன்) அசத்தி வருகின்றனர். பந்து வீச்சில் பிரசித் கிருஷ்ணா (20 விக்கெட்), முகமது சிராஜ் (15), சாய் கிஷோர் (14), ரஷித் கான் மிரட்டக்கூடியவர்கள்.

    டெல்லிக்கு எதிரான முந்தைய ஆட்டத்தில் 204 ரன்கள் இலக்கை எட்டிப்பிடித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற குஜராத் அணி கூடுதல் நம்பிக்கையும் களம் காண்பதுடன், அடுத்த சுற்று வாய்ப்பை உறுதி செய்ய முனைப்பு காட்டும். கடைசி 2 ஆட்டங்களில் பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் தடுமாறிய டெல்லி அணி எழுச்சி பெற்று எல்லா வகையிலும் சிறப்பாக செயல்பட்டால் தான் குஜராத் அணியின் சவாலை சமாளிக்க முடியும்.

    ×