search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "delhi capitals"

    • சாம்சன் அதிரடி வீண்- 20 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தானை வீழ்த்தியது டெல்லி.
    • தனி ஆளாக போராடிய சாம்சன் 86 ரன்னில் அவுட் ஆனார்.

    புதுடெல்லி:

    ஐ.பி.எல். போட்டியில் இன்று டெல்லியில் நடைபெறும் 56-வது லீக் ஆட்டத்தில் ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ்- சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி களமிறங்கிய டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 221 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக போரல் 65 ரன்கள் எடுத்தார். ராஜஸ்தான் தரப்பில் அஸ்வின் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    இதனையடுத்து ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக ஜெய்ஸ்வால் - பட்லர் களமிறங்கினர். ஜெய்ஸ்வால் 4, பட்லர் 19, 27 என விக்கெட்டுகளை இழந்தது. அந்த சமயத்தில் தனி ஆளாக சாம்சன் போராடி வந்தார்.

    இந்நிலையில் சாம்சன் ஒரு பந்தை சிக்சருக்கு விளாசினார். அப்போது சிக்சர் லைனில் இருந்த ஹோப் பந்தை பிடித்து எல்லை கோட்டிற்கு அருகில் சென்று பின்னர் உள்ளே வருவார். அப்போது அவரது கால் எல்லை கோட்டை தொடுவது போல காட்சி தெரியும். உடனே இதனை பார்த்த சாம்சன் களத்தில் உள்ள நடுவரிடம் ரீவ்யூ கேட்டு முறையிடுவார். ஆனால் 3-வது நடுவர் அதனை அவுட் கொடுத்ததால் ரீவ்யூ எடுக்க முடியாது என கள நடுவர்கள் கூறினர்.

    இறுதியில் ராஜஸ்தான் 20 ஓவரில் 8 விக்கெட்டுகளை இழந்து 201 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் டெல்லி அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்த போட்டியில், ஒரு வேளை சஞ்சு சாமிற்கு அவுட் அளிக்கப்படாமல் இருந்திருந்தால் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு அதிகம் என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    மேலும், டெல்லி அணிக்கு எதிரான போட்டியின்போது தனக்கு அவுட் கொடுத்தது குறித்து களத்தில் உள்ள நடுவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், ஐபிஎல் நடத்தை விதிகளை மீறியதாக ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் சஞ்சு சாம்சனுக்கு போட்டியின் ஊதியத்தில் 30 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

    சஞ்சு சாம்சனுக்கு அபராதம் விதிக்கப்பட்டதற்கு ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் தங்களின் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

    • தனி ஆளாக போராடிய சாம்சன் 86 ரன்னில் அவுட் ஆனார்.
    • டெல்லி அணி தரப்பில் கலீல் அகமது, குல்தீப் யாதவ், முகேஷ் குமார் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

    புதுடெல்லி:

    ஐ.பி.எல். போட்டியில் இன்று டெல்லியில் நடைபெறும் 56-வது லீக் ஆட்டத்தில் ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ்- சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி களமிறங்கிய டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 221 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக போரல் 65 ரன்கள் எடுத்தார். ராஜஸ்தான் தரப்பில் அஸ்வின் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    இதனையடுத்து ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக ஜெய்ஸ்வால் - பட்லர் களமிறங்கினர். ஜெய்ஸ்வால் முதல் பந்தை பவுண்டரி விளாச 2 பந்தில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அடுத்து வந்த சாம்சன் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடினார்.

    மெதுவாக விளையாடிய பட்லர் 17 பந்தில் 19 ரன்கள் எடுத்து வெளியேறினார். அடுத்து வந்த ரியான் பராக் சாம்சனுடன் ஜோடி சேர்ந்து சிறப்பாக ஆடினர். தொடர்ந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய சாம்சன் அரைசதம் விளாசினார். தடுமாற்றத்துடன் விளையாடிய பராக் 22 பந்தில் 27 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.

    அதனை தொடர்ந்து தனி ஆளாக போராடிய சாம்சன் 86 ரன்னில் அவுட் ஆனார். இந்த அவுட் சர்ச்சையை ஏற்படுத்தும் விதமாக இருந்தது. அதற்கு சாம்சன் ரீவ்யூ கேட்டார். ஆனால் 3-வது நடுவர் அதனை அவுட் கொடுத்ததால் ரீவ்யூ எடுக்க முடியாது என கூறினர்.

    இதனை தொடர்ந்து அதிரடி காட்டிய சுபம் துபே 12 பந்தில் 25 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். கடைசி வரை போராடிய பவல் 13 ரன்னில் போல்ட் ஆனார்.

    இறுதியில் ராஜஸ்தான் 20 ஓவரில் 8 விக்கெட்டுகளை இழந்து 201 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் டெல்லி அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டெல்லி அணி தரப்பில் கலீல் அகமது, குல்தீப் யாதவ், முகேஷ் குமார் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். 

    • டெல்லி அணியில் அதிகபட்சமாக போரல் 65 ரன்கள் விளாசினார்.
    • ராஜஸ்தான் தரப்பில் அஸ்வின் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    புதுடெல்லி:

    ஐ.பி.எல். போட்டியில் இன்று டெல்லியில் நடைபெறும் 56-வது லீக் ஆட்டத்தில் ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ்- சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி டெல்லி அணியின் தொடக்க வீரர்களாக போரல் - ஜேக் ஃப்ரேசர்-மெக்குர்க் களமிறங்கினர். தொடக்கம் முதலே அதிரடி காட்டிய ஜேக் ஃப்ரேசர்-மெக்குர்க் 19 பந்தில் அரை சதம் கடந்து அசத்தினார். அரை சதம் அடித்த கையோடு அவர் அஸ்வின் பந்து வீச்சில் அவுட் ஆனார்.

    அடுத்து வந்த சாய் ஹோப் எதிர்பாராத விதமாக ரன் அவுட் ஆனார். அவரை தொடர்ந்து அக்சர் படேல் 15, பண்ட் 15 என வெளியேறினார்.

    ஒரு முனையில் விக்கெட்டுகள் இழந்தாலும் மறுமுனையில் சிறப்பாக விளையாடிய போரல் ஐபிஎல் தொடரில் தனது முதல் அரை சதத்தை பதிவு செய்தார். அவர் 65 ரன்கள் எடுத்த நிலையில் பெவிலியன் திரும்பினார்.

    இதனை தொடர்ந்து ஸ்டப்ஸ் மர்றும் குல்புதின் ஜோடி கடைசி கட்டத்தில் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தனர். இதனால் டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 221 ரன்கள் எடுத்தது. ராஜஸ்தான் தரப்பில் அஸ்வின் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    • டெல்லி அணி 5 வெற்றி, 6 தோல்வியுடன் 10 புள்ளிகள் பெற்று 6-வது இடத்தில் உள்ளது.
    • ராஜஸ்தான் ராயல்ஸ் 8 வெற்றி, 2 தோல்வியுடன் 16 புள்ளிகள் பெற்று 2-வது இடத்தில் உள்ளது.

    புதுடெல்லி:

    ஐ.பி.எல். போட்டியில் இன்று டெல்லியில் நடைபெறும் 56-வது லீக் ஆட்டத்தில் ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ்- சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    டெல்லி அணி 5 வெற்றி, 6 தோல்வியுடன் 10 புள்ளிகள் பெற்று 6-வது இடத்தில் உள்ளது. பிளே ஆப் சுற்று வாய்ப்பில் நீடிக்க இந்த ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டிய கட்டாயம் அந்த அணிக்கு உள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ் 8 வெற்றி, 2 தோல்வியுடன் 16 புள்ளிகள் பெற்று 2-வது இடத்தில் உள்ளது.

    இரு அணிகள் மோதிய ஆட்டத்தில் ராஜஸ்தான் 15-ல், டெல்லி 13-ல் வெற்றி பெற்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

    • 4 இடங்களை வகிக்கும் அணிகள் பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெறும்.
    • ராஜஸ்தான் ராயல்சும், டெல்லி கேப்பிட்டல்சும் இன்று மல்லுகட்டுகின்றன.

    புதுடெல்லி, மே 7-

    ஐ.பி.எல். போட்டியில் இன்று இரவு 7.30 மணிக்கு டெல்லியில் நடைபெறும் 56-வது லீக் ஆட்டத்தில் ரிஷப் பண்ட் தலைமையி லான டெல்லி கேப்பிடல்ஸ்- சஞ்சு சாம்சன் தலைமை யிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன.

    டெல்லி அணி 5 வெற்றி, 6 தோல்வியுடன் 10 புள்ளி கள் பெற்று 6-வது இடத்தில் உள்ளது. பிளே ஆப் சுற்று வாய்ப்பில் நீடிக்க இந்த ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டிய கட்டாயம் அந்த அணிக்கு உள்ளது.

    ஜெய்ப்பூரில் நடந்த ஆட்டத்தில் டெல்லி அணி 12 ரன்னில் ராஜஸ்தானிடம் தோற்று இருந்தது. அதற்கு டெல்லி கேப்பிடல்ஸ் பதிலடி கொடுத்து 6-வது வெற்றியை பெறுமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

    ராஜஸ்தான் ராயல்ஸ் 8 வெற்றி, 2 தோல்வியுடன் 16 புள்ளிகள் பெற்று 2-வது இடத்தில் உள்ளது.

    அந்த அணி டெல்லியை மீண்டும் வீழ்த்தி 9-வது வெற்றியுடன் பிளே ஆப் சுற்று ஆர்வத்தில் உள்ளது.இந்த ஆட்டத்தில் ராஜஸ் தான் வெற்றி பெற்றால் பிளே ஆப் சுற்றுக்கு நுழையும் முதல் அணியாக இருக்கும். இரு அணிகள் மோதிய ஆட்டத்தில் ராஜஸ்தான் 15-ல், டெல்லி 13-ல் வெற்றி பெற்றுள்ளன.

    இரு அணிகளும் வெற்றிக் காக கடுமையாக போராடு வார்கள் என்பதால் இந்த போட்டி மிகவும் விறுவிறுப் பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • டெல்லி கேப்பிட்டல்ஸ் 4 வெற்றிகளுடன் புள்ளிகள் பட்டியலில் 6-வது இடத்தில் உள்ளது.
    • மும்பை இந்தியன்ஸ் 3 வெற்றிகளுடன் புள்ளிகள் படடியலில் 9-வது இடத்தில் உள்ளது.

    ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 43-வது லீக் ஆட்டம் டெல்லியில் இன்று மதியம் 3.30 மணிக்கு நடக்கிறது. இதில் டெல்லி கேப்பிட்டல்ஸ்- மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி கேப்டன் ஹர்திப் பாண்ட்யா டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார்.

    டெல்லி கேப்பிட்டல்ஸ் 4 வெற்றிகளுடன் புள்ளிகள் பட்டியலில் 6-வது இடத்தில் உள்ளது. மும்பை இந்தியன்ஸ் 3 வெற்றிகளுடன் புள்ளிகள் படடியலில் 9-வது இடத்தில் உள்ளது.

    டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி விவரம்:-

    1. ஜேக் பிரேசர்-மெக்கர்க், 2. குமார் குஷாக்ரா, 3. ஷாய் ஹோப், 4. ரிஷப் பண்ட், 5. ஸ்டப்ஸ், 6. அபிஷேக் பொரேல், 7. அக்சார் பட்டேல், 8. குல்தீப் யாதவ், 9. லிசாட் வில்லியம்ஸ், 10. முகுஷ் குமார், 11. கலீல் அகமது.

    இம்பேக்ட் மாற்று வீரர்கள்:- ரிசிக் தர் சலாம், பிரவீன் துபே, விக்கி ஆஸ்ட்வால், ரிக்கி புய், சுமித் குமார்.

    மும்பை இந்தியன்ஸ் அணி விவரம்:-

    1. ரோகித் சர்மா, 2. இஷான் கிஷன், 3. திலக் வர்மா, 4. நேஹால் வதேரா, 5. ஹர்திக் பாண்ட்யா, 6. டிம் டேவிட், 7. முகமது நபி, 8. பியூஷ் சாவ்லா, 9. லுக் வுட், 10. பும்ரா, 11. நுவான் துஷாரா.

    இம்பேக்ட் மாற்று வீரர்கள்:- சூர்யகுமார் யாதவ், நமன் திர், ஷாம்ஸ் முலானி, தெவால்ட் பிரேவிஸ், குமார் கார்த்திகேயா

    • மிட்செல் மார்ஷ் மூன்று போட்டிகளில் விளையாடி 61 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார்.
    • கடந்த முறையில் இதுபோன்று தொடரின் பாதிலேயே வெளியேறினார்.

    டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஆல்-ரவுண்டர் மிட்செல் மார்ஷ் இடம் பெற்றிருந்தார். காயம் காரணமாக கடந்த 12-ந்தேதி ஆஸ்திரேலியா புறப்பட்டுச் சென்றார். சுமார் 10 நாட்கள் கழித்து காயம் காரணமாக மிட்செல் மார்ஷ் ஐபிஎல் தொடரின் மீதமுள்ள போட்டிகளில் இருந்து விலகியுள்ளார் என ரிக்கி பாண்டிங் தெரிவித்திருந்தார்.

    இந்த நிலையில் மிட்செல் மார்ஷ்க்குப் பதிலாக ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த குல்பதீன் நயிப்பை டெல்லி அணி ஒப்பந்தம் செய்துள்ளது. அவருடைய அடிப்படை விலையான 50 லட்சம் ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்துள்ளது.

    இதன்காரணமாக முதன்முறையாக ஐபிஎல் கிரிக்கெட்டில் களம் காண்கிறார் குல்பதீன் நயிப்.

    ஐபிஎல் கிரிக்கெட்டில் ரஷித் கான், நூர் முகமது, ஓமர்ஜாய், நவீன் உல் ஹக் உள்ளிட்ட பல வீரர்கள் விளையாடி வருகின்றனர். தற்போது அவர்கள் வரிசையில் குல்பதீன் நயிப்பும் இணைந்துள்ளார்.

    இந்த சீசனில் மிட்செல் மார்ஷ் மூன்று போட்டிகளில் விளையாடி 61 ரன்கள் மட்டுமே அடித்துள்ளார். ஒரு விக்கெட் மட்டும் எடுத்துள்ளார். கடந்த வருடமும் போட்டியில் மத்தியில் இருந்து விலகினார். தற்போது இந்த சீசனிலும் போட்டியின் மத்தியில் இருந்து விலகியுள்ளார். டெல்லி அணி இவரை 6.5 கோடி ரூபாய் கொடுத்து ஏலம் எடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

    • அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய மில்லர் 23 பந்தில் 55 குவித்து ஆட்டமிழந்தார்.
    • டெல்லி அணி தரப்பில் ராசிக் தார் சலாம் 3 விக்கெட்டும் குல்தீப் யாதவ் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    ஐபிஎல் கிரிக்கெட்டில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ்- குஜராத் டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி டெல்லி அணியின் பிரித்வி ஷா, மெக்கர்க் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். மெக்கர்க் வழக்கும்போல் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். என்றாலும் 14 பந்தில் 23 ரன்கள் எடுத்த நிலையில் சந்தீப் வாரியர் பந்தில் ஆட்டமிழந்தார்.

    அடுத்த சிறிது நேரத்தில் பிரித்வி ஷா 11 ரன்னிலும் ஷாய் ஹோப் 5 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.இதனையடுத்து ஜோடி சேர்ந்த அக்சர் பட்டேல் -ரிஷப் பண்ட் ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இருவரும் அரை சதம் விளாசினர்.

    இந்த ஜோடி 4-வது விக்கெட்டுக்கு 100 ரன்களுக்கு மேல் பார்ட்னர்ஷிப் அமைத்து கொடுத்தது. அக்சர் பட்டேல் 66 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து ஸ்டப்ஸ் மற்றும் ரிஷப் பண்ட் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தனர்.

    ரிஷப் பண்ட் 43 பந்தில் 88 ரன்கள் எடுத்தும், ஸ்டப்ஸ் 7 பந்தில் 26 ரன்கள் எடுத்தும் ஆட்டமிழக்காமல் இருந்தார். இதனால் டெல்லி கேப்பிட்டல்ஸ் 20 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 224 ரன்கள் குவித்தது. குஜராத் அணி தரப்பில் மோகித் சர்மா 4 ஓவரில் 73 ரன்கள் விட்டுக்கொடுத்தார்.

    இதனையடுத்து குஜராத் அணியின் தொடக்க வீரர்களாக சுப்மன் கில்- சஹா களமிறங்கினர். சுப்மன் கில் 6 ரன்னில் ஆட்டமிழந்தார். இதனை தொடர்ந்து சஹா- சுதர்சன் ஜோடி பொறுப்புடன் ஆடி ரன்களை சேர்த்தனர். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சுதர்சன் அரை சதம் விளாசினார்.

    39 ரன்களில் இருந்த போது சஹா அவுட் ஆனார். உடனே சாய் சுதர்சனும் 65 ரன்னிலும் வெளியேறினார். அடுத்து வந்த உமர்சாய் 1, ஷாருக்கான் 8, தெவாடியா 4 என வெளியேறினார். இதனையடுத்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய மில்லர் (55) அரை சதம் விளாசி அவுட் ஆனார்.

    இதனால் கடைசி ஓவரில் குஜராத் அணிக்கு 19 ரன்கள் தேவைப்பட்டது. முதல் 2 பந்துகளை பவுண்டரிக்கு விரட்டிய ரஷித்கான் 3,4-வது பந்தை டாட் செய்தார். 5-வது பந்தை சிக்சர் பறக்கவிட்டார். இதனால் கடைசி பந்தில் 5 ரன்கள் தேவைப்பட்டது. அந்த பந்தை ரன் ஏதும் விட்டுக் கொடுக்கவில்லை.

    இதனால் டெல்லி அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது. டெல்லி அணி தரப்பில் ராசிக் தார் சலாம் 3 விக்கெட்டும் குல்தீப் யாதவ் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    • ஐ.பி.எல். போட்டியில் ஐதராபாத் அணி டெல்லியை வீழ்த்தி 5வது வெற்றி பெற்றது.
    • இதன்மூலம் அந்த அணி 10 புள்ளிகளுடன் 2-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

    புதுடெல்லி:

    டெல்லியில் நேற்று நடந்த ஆட்டத்தில் முதலில் ஆடிய சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 266 ரன் குவித்தது.

    டிராவிஸ் ஹெட் 32 பந்தில் 89 ரன்னும் (11 பவுண்டரி, 6 சிக்சர்), ஷாபாஸ் அகமது 29 பந்தில் 59 ரன்னும் (2 பவுண்டரி, 5 சிக்சர்), அபிஷேக் சர்மா 12 பந்தில் 46 ரன்னும் (2 பவுண்டரி, 6 சிக்சர்) எடுத்தனர். குல்தீப் யாதவ் 4 விக்கெட்டும், முகேஷ்குமார், அக்ஷர் படேல் தலா 1 விக்கெட்டும் கைப்பற்றினர்.

    ஐதராபாத் அணியின் தொடக்க வீரரான டிரெவிஸ் ஹெட்-அபிஷேக் சர்மா ஜோடி பவர் பிளேயில் 125 ரன் விளாசி சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.

    தொடர்ந்து ஆடிய டெல்லி கேப்பிடல்ஸ் அணி 19.1 ஓவரில் 199 ரன்னில் சுருண்டது. இதனால் ஐதராபாத் அணி 67 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. பிரேசர் 18 பந்தில் 65 ரன்னும் (5 பவுண்டரி, 7 சிக்சர்), கேப்டன் ரிஷப் பண்ட் 35 பந்தில் 44 ரன்னும் (5 பவுண்டரி, 1 சிக்சர்) அபிஷேக் போரல் 22 பந்தில் 42 ரன்னும் (7 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்தனர்.

    தமிழக வீரர் டி.நடராஜன் 4 விக்கெட்டும். மார்கண்டே, நிதிஷ்குமார் ரெட்டி தலா 2 விக்கெட்டும் வாஷிங்டன் சுந்தர், புவனேஷ்வர் குமார் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    ஐதராபாத் அணி 5-வது வெற்றியை பதிவுசெய்தது. இதன்மூலம் அந்த அணி 10 புள்ளிகளுடன் 2-வது இடத்துக்கு முன்னேறி யுள்ளது.

    டெல்லி அணி 5-வது தோல்வியை தழுவியது.

    இந்நிலையில், தோல்வி குறித்து டெல்லி அணி கேப்டன் ரிஷப் பண்ட் கூறுகையில், முதலில் நாங்கள் பந்து வீசும்போது பனி இருக்கும் என நினைத்தோம். ஆனால் பனித்துளி ஏற்படவில்லை. ஐதராபாத்தை 220 முதல் 230 ரன்களுக்கு கட்டுப்படுத்தினால் எங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும் என நினைத்தேன். முதல் 6 ஓவர், அதாவது பவர்பிளே தான் 2 அணிகளுக்கும் உள்ள வித்தியாசம். இதுதான் ஆட்டத்தை மாற்றிவிட்டது. நாங்கள் மீண்டும் நல்ல நிலைக்கு திரும்புவோம். ஜேக் பிரேசர் பேட்டிங் அற்புதமாக இருந்தது. அடுத்த ஆட்டத்தில் எங்களை மேம்படுத்திக் கொள்வோம் என தெரிவித்தார்.

    • ஐதரபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஜேக் பிரேசர் மெக்குர்க் 15 பந்தில் அரைசதம் அடித்தார்.
    • டெல்லி அணிக்காக அதிவேக அரைசதம் அடித்த வீரராக மெக்குர்க் சாதனை படைத்துள்ளார்.

    புதுடெல்லி:

    ஐ.பி.எல் தொடரில் டெல்லியில் உள்ள அருண் ஜேட்லி மைதானத்தில் நேற்று நடந்த ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின.

    முதலில் பேட் செய்த ஐதராபாத் 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 266 ரன்கள் குவித்தது. டிராவிஸ் ஹெட் 89 ரன்கள் அடித்தார். தொடர்ந்து ஆடிய டெல்லி அணி 19.1 ஓவரில் 199 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இதன்மூலம் ஐதராபாத் அணி 67 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. டெல்லி சார்பில் ஜேக் பிரேசர்-மெக்குர்க் 18 பந்தில் 65 ரன்கள் குவித்தார்.

    இந்நிலையில், ஜேக் பிரேசர் மெக்குர்க் இந்த ஆட்டத்தில் 15 பந்தில் அரைசதமடித்து அசத்தினார். இதன்மூலம் ஐ.பி.எல். வரலாற்றில் டெல்லி அணிக்காக (பந்துகள் அடிப்படையில்) அதிவேக அரைசதம் அடித்த வீரராக மெக்குர்க் சாதனை படைத்துள்ளார். நடப்பு ஐ.பி.எல் தொடரில் அதிவேக அரைசதம் அடித்த வீரராகவும் அவர் சாதனை படைத்துள்ளார்.

    • ஜேக் ஃபிரேசர் 18 பந்துகளில் 65 ரன்களை குவித்தார்.
    • நடராஜன் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

    ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்றைய போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. டெல்லியில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது.

    அதன்படி ஐதராபாத் அணிக்கு துவக்க வீரர்களாக களமிறங்கிய டிராவிஸ் ஹெட் மற்றும் அபிஷேக் ஷர்மா அதிரடியான துவக்கம் கொடுத்தனர். அபிஷேக் ஷர்மா 46 ரன்களுக்கும், டிராவிஸ் ஹெட் 89 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர்.

    இதைத் தொடர்ந்து ஐதராபாத் அணியின் ஸ்கோர் மெல்ல சரிய துவங்கியது. அடுத்து வந்த மார்க்ரம் மற்றும் கிளாசன் முறையே 1 மற்றும் 15 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தனர். பிறகு களமிறங்கிய நிதிஷ் குமார் மற்றும் ஷாபாஸ் அகமது சிறப்பாக ஆடினர்.

    போட்டி முடிவில் ஐதராபாத் அணி 7 விக்கெட்டுகளை இழந்து 266 ரன்களை குவித்தது. டெல்லி சார்பில் குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அக்சர் பட்டேல், முகேஷ் குமார் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

    கடின இலக்கை துரத்திய டெல்லி அணிக்கு சுமாரான துவக்கமே கிடைத்தது. அந்த அணியின் துவக்க வீரர்களான பிரித்வி ஷா 16 ரன்களிலும், டேவிட் வார்னர் 1 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த ஜேக் ஃபிரேசர் சிறப்பாக ஆடி 18 பந்துகளில் 65 ரன்களை குவித்தார். இவருடன் ஆடிய அபிஷேக் பொவெல் 22 பந்துகளில் 42 ரன்களை குவித்தார்.

    ஒரு பக்கம் விக்கெட்டுகள் சரிந்த நிலையிலும், கேப்டன் ரிஷப் பந்த் நிதானமா ஆடி 44 ரன்களை குவித்தார். இவரும் கடைசி ஓவரின் முதல் பந்தில் அவுட் ஆனார். இதனால் டெல்லி அணி 19.1 ஓவர்களில் 199 ரன்களை குவித்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 67 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

    ஐதராபாத் சார்பில் சிறப்பாக பந்துவீசிய நசராஜன் 4 விக்கெட்டுகளையும், மயன்க் மார்கண்டே மற்றும் நிதிஷ் குமார் தலா 2 விக்கெட்டுகளையும், புவனேஷ்வர் குமார், வாஷிங்டன் சுந்தர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். 

    • டிராவிஸ் ஹெட், அபிஷேக் ஷர்மா அதிரடி துவக்கம் கொடுத்தனர்.
    • டெல்லி சார்பில் குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

    ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்றைய போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதுகின்றன. டெல்லியில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது.

    அதன்படி ஐதராபாத் அணிக்கு துவக்க வீரர்களாக களமிறங்கிய டிராவிஸ் ஹெட் மற்றும் அபிஷேக் ஷர்மா அதிரடியான துவக்கம் கொடுத்தனர். இதன் மூலம் ஐதராபாத் அணி 6 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 125 ரன்களை குவித்தது.

    பவர்பிளே முடிந்த கையொடு அபிஷேக் ஷர்மா 46 ரன்களுக்கும், டிராவிஸ் ஹெட் 89 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். இதன் மூலம் ஐதராபாத் அணியின் ஸ்கோர் மெல்ல சரிய துவங்கியது. அடுத்து வந்த மார்க்ரம் மற்றும் கிளாசன் முறையே 1 மற்றும் 15 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தனர். பிறகு களமிறங்கிய நிதிஷ் குமார் மற்றும் ஷாபாஸ் அகமது சிறப்பாக ஆடினர்.

    போட்டி முடிவில் ஐதராபாத் அணி 7 விக்கெட்டுகளை இழந்து 266 ரன்களை குவித்தது. டெல்லி சார்பில் குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அக்சர் பட்டேல், முகேஷ் குமார் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். 

    ×