என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "டெல்லி கேப்பிட்டல்ஸ்"

    • கே.எல். ராகுல் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் விளையாடி வருகிறார்.
    • கே.கே.ஆர். அணி அவரை வாங்க விரும்புவதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இந்திய அணியின் முன்னணி பேட்ஸ்மேன் கே.எல். ராகுல். ஐபிஎல் மெகா ஏலத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி பெரும்தொகை கொடுத்து ஏலம் எடுத்தது. டெல்லி அணிக்காக சிறப்பாக விளையாடினார். மேலும், இந்திய அணிக்காக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார்.

    இந்த நிலையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கே.எல். ராகுலை ஒப்பந்தம் செய்ய ஆர்வமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒப்பந்தம் உறுதியானால், கேப்டன் பதவி கூட கொடுக்கப்படலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

    • ஷ்ரேயாஸ் அய்யர் அரைசதம் அடித்தார்.
    • மார்கஸ் ஸ்டோய்னிஸ் 16 பந்தில் 44 ரன்கள் விளாசினார்.

    ஐபிஎல் 2025 சீசனின் 65ஆவது போட்டி ஜெய்ப்பூரில் நடைபெற்று வருகிறது. இதில் பஞ்சாப் கிங்ஸ்- டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. டாஸ் வென்ற டெல்லி அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி பஞ்சாப் கிங்ஸ் அணியின் பிரியான்ஷ் ஆர்யா, பிரப்சிம்ரன் சிங் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். பிரியான்ஷ் ஆர்யா 9 பந்தில் 6 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பிரப்சிம்ரன் சிங் 28 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    அடுத்து வந்த ஜோஷ் இங்கிலிஸ் 12 பந்தில் 32 ரன்கள் விளாசினார். கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் 34 பந்தில் 53 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மார்கஸ் ஸ்டோய்னிஸ் கடைசி நேரத்தில் அதிரடியாக விளையாடி 16 பந்தில் 44 ரன்கள் அடிக்க பஞ்சாப் கிங்ஸ் 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்க 206 ரன்கள் குவித்துள்ளது.

    • இவ்விரு அணிகளும் இதுவரை 33 முறை நேருக்கு நேர் சந்தித்து இருக்கின்றன.
    • இதில் 17-ல் பஞ்சாப் அணியும், 16-ல் டெல்லி அணியும் வென்று இருக்கின்றன.

    10 அணிகள் பங்கேற்றுள்ள 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில், குஜராத் டைட்டன்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், பஞ்சாப் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறி உள்ளன.

    சென்னை, ராஜஸ்தான், ஐதராபாத், கொல்கத்தா, லக்னோ, டெல்லி அணிகள் அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து விட்டன. மீதமுள்ள லீக் ஆட்டங்கள் டாப்-2 இடம் யாருக்கு என்பதை முடிவு செய்யும். முதல் இரு இடங்களுக்குள் வரும் அணிக்கு இறுதிப்போட்டிக்குள் நுழைய இரு வாய்ப்பு கிடைக்கும் என்பது கவனிக்கத்தக்கது.

    இந்த நிலையில் ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில் இன்று நடக்கும் 66-வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் - டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மல்லுக்கட்டுகின்றன. இதில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.

    இவ்விரு அணிகளும் இதுவரை 33 முறை நேருக்கு நேர் சந்தித்து இருக்கின்றன. இதில் 17-ல் பஞ்சாப் அணியும், 16-ல் டெல்லி அணியும் வென்று இருக்கின்றன.

    • டெல்லி அணி 13 ஆட்டங்களில் ஆடி 6 வெற்றி, 6 தோல்வி, ஒரு முடிவில்லை என 13 புள்ளிகளுடன் 5-வது இடத்தில் உள்ளது.
    • புள்ளி பட்டியலில் முதல் இரு இடங்களுக்குள் வர பஞ்சாப் அணி முனைப்பு காட்டுகிறது.

    10 அணிகள் பங்கேற்றுள்ள 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில், குஜராத் டைட்டன்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், பஞ்சாப் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் ஆகிய அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய பிளே-ஆப் சுற்றுக்கு முன்னேறி உள்ளன. சென்னை, ராஜஸ்தான், ஐதராபாத், கொல்கத்தா, லக்னோ, டெல்லி அணிகள் அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து விட்டன. மீதமுள்ள லீக் ஆட்டங்கள் டாப்-2 இடம் யாருக்கு என்பதை முடிவு செய்யும். முதல் இரு இடங்களுக்குள் வரும் அணிக்கு இறுதிப்போட்டிக்குள் நுழைய இரு வாய்ப்பு கிடைக்கும் என்பது கவனிக்கத்தக்கது.

    இந்த நிலையில் ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில் இன்று நடக்கும் 66-வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் - டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மல்லுக்கட்டுகின்றன.

    பஞ்சாப் அணி 12 ஆட்டங்களில் ஆடி 8 வெற்றி, 3 தோல்வி, ஒரு முடிவில்லை (கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டம் மழையால் ரத்து) என 17 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் இருக்கிறது. அந்த அணி தனது கடைசி 3 ஆட்டங்களில் தொடர்ச்சியாக 190 ரன்களுக்கு மேல் குவித்து வெற்றி கண்டுள்ளது. பேட்டிங்கில் பிரப்சிம்ரன் சிங் (458 ரன்), கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் (435), பிரியான்ஷ் ஆர்யா, நேஹல் வதேரா, ஷசாங் சிங்கும், பந்து வீச்சில் அர்ஷ்தீப் சிங், யுஸ்வேந்திர சாஹல், மார்கோ யான்சென், ஹர்பிரீத் பிராரும் கலக்குகிறார்கள்.

    டெல்லி அணி 13 ஆட்டங்களில் ஆடி 6 வெற்றி, 6 தோல்வி, ஒரு முடிவில்லை என 13 புள்ளிகளுடன் 5-வது இடத்தில் உள்ளது. தனது முதல் 6 ஆட்டங்களில் 5-ல் வென்று வீறுநடை போட்ட டெல்லி அடுத்த 7 ஆட்டங்களில் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்று சறுக்கியதுடன், பிளே-ஆப் வாய்ப்பையும் பறிகொடுத்தது.

    டெல்லி அணியில் லோகேஷ் ராகுல் (ஒரு சதம், 3 அரைசதம் உள்பட 504 ரன்) தவிர்த்து மற்றவர்களின் பேட்டிங் சீராக இல்லை. தொடக்க ஆட்டக்காரர்கள் இருவரும் ஒருசேர சிறப்பாக ஆடாதது பலவீனமாக உள்ளது. உடல் நலக்குறைவு காரணமாக முந்தைய ஆட்டத்தில் ஆடாத கேப்டன் அக்ஷர் பட்டேல் இன்றைய ஆட்டத்தில் களம் இறங்குவாரா? என்பது உறுதியாகவில்லை. அவர் உடல்தகுதியுடன் இல்லாவிட்டால் பாப் டு பிளிஸ்சிஸ் அணியை வழிநடத்துவார்.

    இவ்விரு அணிகள் கடந்த 8-ந்தேதி தர்மசாலாவில் சந்தித்த போது, இந்தியா -பாகிஸ்தான் சண்டை காரணமாக எல்லையில் தாக்குதல் தீவிரமானதால் ஸ்டேடியத்தில் மின்கோபுர விளக்குகள் அணைக்கப்பட்டு ஆட்டமும் பாதியில் கைவிடப்பட்டது. அந்த ஆட்டம் தான் தற்போது மீண்டும் நடத்தப்படுகிறது.

    தோல்வியால் துவண்டு போயுள்ள டெல்லி அணி, பஞ்சாப்பை பதம் பார்த்து இந்த சீசனை வெற்றியோடு நிறைவு செய்யும் வேட்கையுடன் ஆயத்தமாகிறது. அதே சமயம் புள்ளி பட்டியலில் முதல் இரு இடங்களுக்குள் வர பஞ்சாப் அணி முனைப்பு காட்டுகிறது. இதில் யாருடைய கை ஓங்கும் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

    இவ்விரு அணிகளும் இதுவரை 33 முறை நேருக்கு நேர் சந்தித்து இருக்கின்றன. இதில் 17-ல் பஞ்சாப் அணியும், 16-ல் டெல்லி அணியும் வென்று இருக்கின்றன.

    போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல் வருமாறு:-

    பஞ்சாப்: பிரியான்ஷ் ஆர்யா, பிரப்சிம்ரன் சிங், ஜோஷ் இங்லிஸ், நேஹல் வதேரா, ஸ்ரேயாஸ் அய்யர் (கேப்டன்), ஷசாங் சிங், அஸ்மத்துல்லா ஒமர்ஜாய், மார்கோ யான்சென், கைல் ஜாமிசன், அர்ஷ்தீப் சிங், யுஸ்வேந்திர சாஹல், ஹர்பிரித் பிரார்.

    டெல்லி: லோகேஷ் ராகுல், பாப் டு பிளிஸ்சிஸ், அபிஷேக் போரெல், சமீர் ரிஸ்வி, விப்ராஜ் நிகம், டிரிஸ்டான் ஸ்டப்ஸ், அஷூதோஷ் ஷர்மா, அக்ஷர் பட்டேல் (கேப்டன்) அல்லது மாதவ் திவாரி, துஷ்மந்தா சமீரா, குல்தீப் யாதவ், முஸ்தாபிஜூர் ரகுமான், முகேஷ் குமார்.

    இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இந்த ஆட்டத்தை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

    • முதல் நான்கு போட்டிகளில் தொடர்ந்து வெற்றி பெற்றிருந்தது.
    • 8 போட்டிகளில் 6-ல் வெற்றி பெற்ற நிலையிலும், பிளேஆஃப் சுற்றை உறுதி செய்ய முடியவில்லை.

    ஐபிஎல் 2025 கிரிக்கெட் தொடரில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி தொடக்கத்தில் சிறப்பாக விளையாடியது. முதல் 4 போட்டிகளில் தொடர்ந்து வெற்றி பெற்றது. முதல் 8 போட்டிகளில் 6-ல் வெற்றி பெற்றது. அதன்பின் 13 போட்டிகளில் ஒரு போட்டி மழையால் தடைபட்டது. மற்ற போட்டிகளில் தோல்வியடைந்தது. நேற்று வாழ்வா? சாவா? போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கெதிராக 59 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்து தொடரில் இருந்து வெளியேறியது.

    பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேற முடியாததற்கு நிலையான தொடக்க ஜோடி அமையாதது காரணம் என அணியின் தலைமை பயிற்சியாளர் ஹேமங் பதானி தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக ஹேமங் பதானி கூறுகையில் "தொடக்க ஜோடி அணிக்கு நல்ல தொடக்கம் கொடுக்கும்போதுதான், நிலையான தொடக்க ஜோடி என தீர்மானிப்பது சாத்தியமானதாகும். அப்படி தொடக்கம் கிடைக்கவில்லை என்றால், அந்த இடைவெளியை நிரப்ப, அந்த வெற்றிடத்தை நிரப்ப மாற்றங்களைச் செய்ய நீங்கள் கடமைப்பட்டுள்ளீர்கள்.

    மற்ற அணிகளை பார்த்தீர்கள் என்றால், அவர்களுக்கு சிறந்த தொடக்கம் கிடைத்தது. பவர்பிளேயில் சிறப்பான ரன்கள் அடித்தனர். எங்களுக்கு அதுபோன்ற தொடக்கம் கிடைக்காததால், நாங்கள் இதுபோன்ற மாற்றங்களை செய்தோம்.

    சீசன் தொடக்கத்தில் மெக்கர்க்கை தொடக்க வீரராக களம் இறக்கினோம். அவர் சரியாக விளையாடவில்லை. அதன்பின் பொரேல், டு பிளிஸ்சிஸ், கருண் நாயர் என கொண்டு வந்தோம். எங்களுக்கு நல்ல தொடக்கம் கொடுக்கும் யாரும் எங்களிடம் இல்லை என்பதுதான் உண்மை.

    எங்களுடைய ஓபனிங் ஜோடி கவலை அளிக்கும் விதமாக இருந்தது. தொடரில் நாங்கள் முன்னேறி பிளேஆஃப் சுற்றுக்கு செல்ல முடியாததற்கு இது ஒரு முக்கிய காரணம்" என்றார்.

    • டெல்லிக்கு எதிரான போட்டியில் சூரியகுமார் யாதவ் 73 ரன்கள் அடித்து ஆட்டநாயகன் விருதை வென்றார்.
    • மும்பை இந்தியன்ஸ் அணி பிளே ஆப் சுற்றுக்கும் முன்னேறியது.

    ஐ.பி.எல். தொடரின் 63-வது லீக் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இதில் மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 180 ரன்கள் குவித்தது.

    இதையடுத்து, 181 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணி 18.2 ஓவரில் 121 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது. இதன்மூலம் 59 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் வெற்றி பெற்றதுடன், பிளே ஆப் சுற்றுக்கும் முன்னேறியது.

    இப்போட்டியில் சிறப்பாக விளையாடிய சூரியகுமார் யாதவ் 73 ரன்கள் அடித்து ஆட்டநாயகன் விருதை வென்றார்.

    இதன்மூலம் டி20 போட்டிகளில் தொடர்ச்சியாக 25+ ரன்களை எடுத்த தென்னாப்பிரிக்க வீரர் பவுமாவின் (13 முறை) சாதனையை சூர்யகுமார் யாதவ் சமன் செய்தார்.

    நடப்பு ஐபிஎல் தொடரில் 13 போட்டிகளில் விளையாடியுள்ள சூர்யகுமார் யாதவ் 583 ரன்கள் குவித்து ஆரஞ் தொப்பிக்கான பட்டியலில் 3வது இடத்தில் உள்ளார். 

    • மும்பை இந்தியன்ஸ் அணி பிளே ஆப் சுற்றுக்கும் முன்னேறியது
    • டெல்லி அணி நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறியது.

    ஐ.பி.எல். தொடரின் 63-வது லீக் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இதில் மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 180 ரன்கள் குவித்தது.

    இதையடுத்து, 181 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணி 18.2 ஓவரில் 121 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது. இதன்மூலம் 59 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் வெற்றி பெற்றதுடன், பிளே ஆப் சுற்றுக்கும் முன்னேறியது.

    டெல்லி அணி 6-வது தோல்வியை பெற்றதுடன், நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறியது.

    இப்போட்டியில் கே.எல்.ராகுல் 11 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். இதன்மூலம் ஐபிஎல் வரலாற்றில் 7 முறை ஒரு தொடரில் 500 ரன்களுக்கு மேல் குவித்த 3 ஆவது வீரர் என்ற சாதனையை படைத்தார். நடப்பு ஐபிஎல் தொடரில் கே.எல்.ராகுல் இதுவரை 504 ரன்கள் அடித்துள்ளார்.

    8 முறை ஐபிஎல் தொடரில் 500 ரன்களுக்கு மேல் குவித்து இப்பட்டியலில் விராட் கோலி முதலிடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

    • மும்பை இந்தியன்ஸ் அணி பிளே ஆப் சுற்றுக்கும் முன்னேறியது.
    • டெல்லி அணி நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறியது.

    ஐ.பி.எல். தொடரின் 63-வது லீக் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இதில் மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 180 ரன்கள் குவித்தது.

    இதையடுத்து, 181 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணி 18.2 ஓவரில் 121 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது. இதன்மூலம் 59 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் வெற்றி பெற்றதுடன், பிளே ஆப் சுற்றுக்கும் முன்னேறியது.

    டெல்லி அணி 6-வது தோல்வியை பெற்றதுடன், நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறியது.

    இப்போட்டியில் ரிக்கல்டன் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் ஐபிஎல் கிரிக்கெட்டில் 100 விக்கெட்டுகள் வீழ்த்தி குல்தீப் யாதவ் அசத்தியுள்ளார். 

    • டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தது.
    • முதலில் ஆடிய மும்பை இந்தியன்ஸ் 20 ஓவரில் 180 ரன்கள் எடுத்தது.

    மும்பை:

    ஐ.பி.எல். தொடரின் 63-வது லீக் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இதில் மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 180 ரன்கள் குவித்தது. சூர்யகுமார் யாதவ் அதிரடியாக ஆடி 43 பந்தில் 73 ரன்னும், நமன் திர் 8 பந்தில் 24 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

    திலக் வர்மா 27 ரன்னும், ரிக்கெல்டன் 25 ரன்னும், வில் ஜேக்ஸ் 21 ரன்னும் எடுத்தனர். கடைசி இரு ஓவரில் சூர்யகுமார், நனம் திர் ஜோடி 49 ரன்கள் சேர்த்தது.

    இதையடுத்து, 181 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி களமிறங்கியது. மும்பை அணியின் துல்லியமான பந்து வீச்சால் முன்னணி வீரர்கள் விரைவில் அவுட்டாகினர்.

    அதிகபட்சமாக சமீர் ரிஸ்வி 39 ரன்கள் எடுத்தார். மற்றவர்கள் விரைவில் வெளியேறினர்.

    இறுதியில், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 18.2 ஓவரில் 121 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது. இதன்மூலம் 59 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் வெற்றி பெற்றதுடன், பிளே ஆப் சுற்றுக்கும் முன்னேறியது.

    டெல்லி அணி 6-வது தோல்வியை பெற்றதுடன், நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறியது.

    • ரோகித் சர்மா 5 ரன்னில் ஆட்டமிழந்தார்.
    • சூர்யகுமார் யாதவ் அரைசதம் விளாசினார்.

    ஐபிஎல் தொடரின் 63ஆவது போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் மும்பை இந்தியன்ஸ்- டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி கேப்டன் டு பிளிஸ்சிஸ் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தார். டெல்லி அணியில் அக்சர் படேல் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் இடம் பெறவில்லை.

    மும்பை அணியின் ரியான் ரிக்கெல்டன், ரோகித் சர்மா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். ரோகித் சர்மா 5 ரன் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தா்.

    அடுத்து வந்த வில் ஜேக்ஸ் 21 ரன்னிலும், மறுமுனையில் விளையாடிய ரிக்கெல்டன் 25 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால் மும்பை இந்தியன்ஸ் 6.4 ஓவரில் 58 ரன்கள் எடுத்து 3 விக்கெட்டுகளை இழந்தது.

    4ஆவது விக்கெட்டுக்கு சூர்யகுமார் யாதவ் உடன் திலக் வர்மா ஜோடி சேர்ந்தார். திலக் வர்மா 27 பந்தில் 27 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஹர்திக் பாண்ட்யா 3 ரன்னில் வெளியேறினார்.

    ஹர்திக் பாண்ட்யா ஆட்டமிழக்கும்போது மும்பை இந்தியன்ஸ் 16.3 ஓவரில் 123 ரன்கள் எடுத்திருந்தது. 6ஆவது விக்கெட்டுக்கு சூர்யகுமார் யாதவ் உடன் நமன் திர் ஜோடி சேர்ந்தார்.

    மும்பை இந்தியன்ஸ் 18 ஓவர் முடிவில் 132 ரன்கள் எடுத்திருந்தது. 19ஆவது ஓவரை முகேஷ் குமார் வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தை சிக்சருக்கு தூக்கி சூர்யகுமார் யாதவ் 36 பந்தில் அரைசதம் அடித்தார். இந்த ஓவரில் முகேஷ் குமார் 3 சிக்ஸ், 2 பவுண்டரியுடன் 27 ரன்கள் விட்டுக்கொடுக்க மும்பை இந்தியன்ஸ் 159 ரன்கள் சேர்த்தது.

    கடைசி ஓவரை சமீரா வீசினார். இந்த ஓவரில் 21 ரன்கள் விட்டுக்கொடுக்க மும்பை இந்தியன்ஸ் 5 விக்கெட் இழப்பிற்கு 180 ரன்கள் குவித்தது. சூர்யகுமார் யாதவ் 43 பந்தில் 73 ரன்களும், நமன் திர் 8 பந்தில் 24 ரன்கள் எடுத்தும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

    • புள்ளிகள் பட்டியலில் மும்பை இந்தியன்ஸ் 4ஆவது இடத்தில் உள்ளது.
    • டெல்லி கேப்பிட்டல்ஸ் 5ஆவது இடத்தில் உள்ளது.

    ஐபிஎல் தொடரின் 63ஆவது போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடக்கிறது. இதில் மும்பை இந்தியன்ஸ்- டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி கேப்டன் அக்சர் படேல் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.

    மும்பை இந்தியன்ஸ் அணி:-

    ரிக்கெல்டன், ரோகித் சர்மா, வில் ஜேக்ஸ், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, ஹர்திக் பாண்ட்யா, நமன் திர், மிட்செல் சான்ட்னெர், தீபக் சாஹர், டிரென்ட் போல்ட், பும்ரா.

    டெல்லி கேப்பிட்டல்ஸ்:-

    டு பிளிஸ்சிஸ், அபிஷேக் பொரேல், சமீர் ரிஸ்வி, ஸ்டப்ஸ், அஷுடோஸ் சர்மா, விப்ராஜ் நிகம், மாதவ் திவாரி, குல்தீப் யாதவ், சமீரா, முஷ்டாபிஜுர் ரஹ்மான், முகேஷ் குமார்.

    • போட்டியில் குஜராத் கேப்டன் ஜூப்மன் கில் டாஸ் வென்று பவுலிங் தேர்வு செய்தார்.
    • டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி பேட்டிங் செய்ய முதலில் களம் இறங்கியது.

    10 அணிகள் இடையிலான 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி தொடரில் இன்று இரவு டெல்லி அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் நடைபெறும் 60-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி, முன்னாள் சாம்பியனான குஜராத் டைட்டன்சை எதிர்கொண்டுள்ளது.

    ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது.

    டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியில் குஜராத் கேப்டன் ஜூப்மன் கில் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தார்.

    அதன்படி, டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி பேட்டிங் செய்ய முதலில் களம் இறங்கியது.

    இந்நிலையில், 20 ஓவர் முடிவில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி 3 விக்கெட் இழப்பிற்கு 199 ரன்கள் எடுத்துள்ளது.

    இதில், அதிகபட்சமாக கே.எல்.ராகுல் 65 பந்துகளில் 112 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் அசத்தியுள்ளார். மேலும், அபிஷேக் போரல் 30, அக்சர் படேல் 25, த்ரிஷ்டன் ஸ்டப்ஸ் 21 ரன்களை எடுத்தனர்.

    இதைத் தொடர்ந்து, 200 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் டைட்டன்ஸ் அணி களமிறங்கியுள்ளது.

    ×