என் மலர்
நீங்கள் தேடியது "பவுமா"
- தனி ஒருவனாக போராடிய கேப்டன் பவுமா மட்டும் 55 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
- 2 ஆவது இன்னிங்சில் தென் ஆப்பிரிக்கா 153 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இந்தியா-தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது.
முதலில் விளையாடிய தென்ஆப்பிரிக்கா இந்திய வீரர்களின் அபாரமான பந்துவீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் திணறியது.அந்த அணி 55 ஓவர்களில் 159 ரன்னில் சுருண்டது. ஜஸ்பிரித் பும்ரா 27 ரன் கொடுத்து 5 விக்கெட் வீழ்த்தினார். முகமது சிராஜ், குல்தீப் யாதவுக்கு தலா 2 விக்கெட் டும், அக்ஷர் படேலுக்கு தலா 1 விக்கெட்டும் கிடைத்தன.
பின்னர் முதல் இன்னிங்சை ஆடிய இந்தியா முதல் இன்னிங்சில் இந்திய அணி 189 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்திய அணியில் அதிகபட்சமாக கே.எல்.ராகுல் 39 ரன்கள் எடுத்தார். தென் ஆப்பிரிக்கா தரப்பில் ஹார்மர் 4 விக்கெட்டும் யான்சன் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதனையடுத்து 30 ரன்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸில் களமிறங்கிய தென்னாப்பிரிக்கா அணி, இந்திய அணியின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
தனி ஒருவனாக போராடிய கேப்டன் பவுமா மட்டும் 55 ரன்கள் அடித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். மற்ற பேட்ஸ்மேன்கள் அனைவரும் சொற்ப ரன்னில் ஆட்டமிழக்க 153 ரன்களுக்கு தென் ஆப்பிரிக்கா அணி ஆல் அவுட்டானது.
இந்திய அணி தரப்பில் ஜடேஜா 4 விக்கெட்டுகளும் குல்தீப் யாதவ், முகத்து சிராஜ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும் அக்சர் படேல் பும்ரா ஆகியோர் தலா 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.
124 ரன்கள் என்ற இலக்குடன் 2 ஆவது இன்னிங்சில் இந்திய அணி களமிறங்கவுள்ளது.
- இந்திய அணி 189 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
- 30 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சில் தென் ஆப்பிரிக்கா அணி தொடங்கி உள்ளது.
இந்தியா-தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று தொடங்கியது.
முதலில் விளையாடிய தென்ஆப்பிரிக்கா இந்திய வீரர்களின் அபாரமான பந்துவீச்சை தாக்கு பிடிக்க முடியாமல் திணறியது.அந்த அணி 55 ஓவர்களில் 159 ரன்னில் சுருண்டது. ஜஸ்பிரித் பும்ரா 27 ரன் கொடுத்து 5 விக்கெட் வீழ்த்தினார். முகமது சிராஜ், குல்தீப் யாதவுக்கு தலா 2 விக்கெட் டும், அக்ஷர் படேலுக்கு தலா 1 விக்கெட்டும் கிடைத்தன.
பின்னர் முதல் இன்னிங்சை ஆடிய இந்தியா முதல் இன்னிங்சில் இந்திய அணி 189 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இந்திய அணியில் அதிகபட்சமாக கே.எல்.ராகுல் 39 ரன்கள் எடுத்தார். தென் ஆப்பிரிக்கா தரப்பில் ஹார்மர் 4 விக்கெட்டும் யான்சன் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதனையடுத்து 30 ரன்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸில் களமிறங்கிய தென்னாப்பிரிக்கா அணி, இந்திய அணியின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
2 ஆம் நாள் ஆட்டநேர முடிவில் தென்னாப்பிரிக்கா அணி 7 விக்கெட்டுகளை இழந்து 93 ரன்கள் எடுத்துள்ளது. இதன்மூலம் தென் ஆப்பிரிக்க அணி 63 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. கேப்டன் பவுமா மட்டும் ஆட்டமிழ்க்காமல் 29 ரன்கள் அடித்து தனி ஒருவராக போராடி வருகிறார்.
இந்திய அணி தரப்பில் ஜடேஜா 4 விக்கெட்டுகளும் குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுகளும் அக்சர் படேல் 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.
- ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை தென் ஆப்பிரிக்கா அணி வென்று அசத்தியுள்ளது.
- 27 வருடத்திற்குப் பிறகு தென் ஆப்பிரிக்கா ஐசிசி சாம்பியன் ஆகியுள்ளது.
தென்ஆப்பிரிக்கா அணி ஐசிசி நடத்தும் தொடர்களில் சாம்பியன் பட்டம் வெல்ல முடியாமல் திணறி வந்தது. இந்நிலையில் 27 வருடத்திற்குப் பிறகு ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை டெம்பா பவுமா தலைமையிலான தென் ஆப்பிரிக்கா அணி வென்று அசத்தியுள்ளது.
இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவை 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, 27 வருடத்திற்குப் பிறகு தென் ஆப்பிரிக்கா ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன் ஆகியுள்ளது.
இந்நிலையில், தென்னாப்ரிக்க அணிக்கு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பதிவில், " மகத்தான வெற்றி பெற்ற தென்னாப்ரிக்காவுக்கு வாழ்த்துகள். அனைத்து சவால்களையும் எதிர்த்த கேப்டன் பவுமாவுக்கு சிறப்பு பாராட்டு. அற்புதமான ஆட்டத்தால், விமர்சனம் செய்த வாய்களை அடைத்துவிட்டீர்கள்.
எய்டன் மார்க்ரமின் பங்களிப்பை பாராட்டியே ஆகவேண்டும். லார்ட்ஸ் மைதானத்தில் நீங்கள் பெற்ற வெற்றி, சென்னை வரை எதிரொலிக்கிறது" என்று பதிவிட்டுள்ளார்.
- டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ரபடா 9 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்
- ககிசோ ரபாடா அசாத்தியமான வீரர்
தென்ஆப்பிரிக்கா அணி ஐசிசி நடத்தும் தொடர்களில் சாம்பியன் பட்டம் வெல்ல முடியாமல் திணறி வந்தது. இந்நிலையில் 27 வருடத்திற்குப் பிறகு ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை டெம்பா பவுமா தலைமையிலான தென் ஆப்பிரிக்கா அணி வென்று அசத்தியுள்ளது.
இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவை 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, 27 வருடத்திற்குப் பிறகு தென் ஆப்பிரிக்கா ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன் ஆகியுள்ளது.
சாம்பியன் பட்டம் வென்ற பின்பு பேசிய கேப்டன் பவுமா, "ககிசோ ரபாடா அசாத்தியமான வீரர். சில நாட்களுக்கு முன்பு, நான் ICC HALL OF FAME அறிமுக விழாவில் கலந்து கொண்டேன். இன்னும் சில ஆண்டுகளில் ரபடா அதில் இணைந்துவிடுவார்" என்று புகாலாராம் சூட்டினார்.
டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ரபடா 9 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
- ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை தென் ஆப்பிரிக்கா அணி வென்று அசத்தியுள்ளது.
- தென் ஆப்பிரிக்கா அணியில் 2 பேர் கறுப்பினத்தவர்களாக இருக்க வேண்டும் என இ டஒதுக்கீடு வகுக்கப்பட்டுள்ளது.
தென்ஆப்பிரிக்கா அணி ஐசிசி நடத்தும் தொடர்களில் சாம்பியன் பட்டம் வெல்ல முடியாமல் திணறி வந்தது. இந்நிலையில் 27 வருடத்திற்குப் பிறகு ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை டெம்பா பவுமா தலைமையிலான தென் ஆப்பிரிக்கா அணி வென்று அசத்தியுள்ளது.
இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவை 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, 27 வருடத்திற்குப் பிறகு தென் ஆப்பிரிக்கா ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன் ஆகியுள்ளது.
இதுவரை டெம்பா தலைமையில் தென்ஆப்பிரிக்கா அணி டெஸ்ட் போட்டிகளில் தோல்வியே அடைந்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தென் ஆப்பிரிக்கா அணியில் 2016-ம் ஆண்டு இடஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டு, அந்த அணியில் 6 வீரர்கள் வெள்ளை இனத்தவர்கள் அல்லாதவர்களாக இருக்க வேண்டும் 2 பேர் கறுப்பினத்தவர்களாக இருக்க வேண்டும் என ஒதுக்கீடு வகுக்கப்பட்டுள்ளது.
இந்த விதிமுறையின்படி தான் ரபடா , கேப்டன் பவுமா, லுங்கி இங்கிடி போன்ற கறுப்பின வீரர்கள் தென் ஆப்பிரிக்கா அணியில் இடம்பிடித்துள்ளனர்.
பவுமா தலைமையில் விளையாடிய தென் ஆப்பிரிக்கா அணி 2023 ஒருநாள் உலகக்கோப்பையில் அரையிறுதியில் தோல்வியடைந்து வெளியேறியது.
இதனையடுத்து, தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணியில் இடஒதுக்கீடு இருப்பதால்தான் அந்த அணியால் ஐசிசி கோப்பையை வெற்றி பெற முடியவில்லை என்று பலரும் பவுமாவை விமர்சித்தனர்.
குறிப்பாக நிறம், உயரம் உள்ளிட்டவற்றால் பவுமா இணையத்தில் கடுமையான விமர்சனத்தை எதிர்கொண்டார்.
இந்நிலையில், டெம்பா பவுமாவை விமர்சித்தவர்களுக்கு உலக டெஸ்ட் சாம்பியன் பட்டம் வென்று அவர் பதிலடி கொடுத்துள்ளார் என்று கிரிக்கெட் ரசிகர்கள் இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர்.
முன்னதாக தனது பெயர் குறித்து பேசிய பவுமா, "என்னுடைய பாட்டி எனக்கு டெம்பா என்று பெயர் வைத்தார். அதற்கு நம்பிக்கை என்று அர்த்தம்" என கூறினார். அந்த நம்பிக்கை தான் தென் ஆப்பிரிக்கா அணியின் 27 ஆண்டு கால ஏக்கத்திற்கு முடிவு கட்டியுள்ளது.
- டெல்லிக்கு எதிரான போட்டியில் சூரியகுமார் யாதவ் 73 ரன்கள் அடித்து ஆட்டநாயகன் விருதை வென்றார்.
- மும்பை இந்தியன்ஸ் அணி பிளே ஆப் சுற்றுக்கும் முன்னேறியது.
ஐ.பி.எல். தொடரின் 63-வது லீக் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இதில் மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 180 ரன்கள் குவித்தது.
இதையடுத்து, 181 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணி 18.2 ஓவரில் 121 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது. இதன்மூலம் 59 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் வெற்றி பெற்றதுடன், பிளே ஆப் சுற்றுக்கும் முன்னேறியது.
இப்போட்டியில் சிறப்பாக விளையாடிய சூரியகுமார் யாதவ் 73 ரன்கள் அடித்து ஆட்டநாயகன் விருதை வென்றார்.
இதன்மூலம் டி20 போட்டிகளில் தொடர்ச்சியாக 25+ ரன்களை எடுத்த தென்னாப்பிரிக்க வீரர் பவுமாவின் (13 முறை) சாதனையை சூர்யகுமார் யாதவ் சமன் செய்தார்.
நடப்பு ஐபிஎல் தொடரில் 13 போட்டிகளில் விளையாடியுள்ள சூர்யகுமார் யாதவ் 583 ரன்கள் குவித்து ஆரஞ் தொப்பிக்கான பட்டியலில் 3வது இடத்தில் உள்ளார்.
- மைதானத்தின் வித்தியாசமான சுற்றளவில் எங்களை விட நெதர்லாந்து பீல்டிங்கில் சிறப்பாக செயல்பட்டது
- கேப்டன் பதவி குறித்து எந்த முடிவும் எடுக்கமாட்டேன்.
அடிலெய்டு:
20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டில் அடிலெய்டில் நேற்று காலை நடந்த ஆட்டத்தில் (குரூப்2) தென்ஆப்பிரிக்கா, குட்டி அணியான நெதர்லாந்தை எதிர்கொண்டது. 'வெற்றி பெற்றால் அரைஇறுதி, தோற்றால் வெளியேற்றம்' என்ற வாழ்வா-சாவா? சூழலில் 'டாஸ்' ஜெயித்த தென்ஆப்பிரிக்க கேப்டன் பவுமா பந்து வீச்சை தேர்வு செய்தார்.
இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த நெதர்லாந்து அணியில் தொடக்க ஆட்டக்காரர்கள் ஸ்டீபன் மைபர்க் (37 ரன்), மேக்ஸ் டி டாவ்ட் (29 ரன்) நல்ல தொடக்கம் தந்தனர். அடுத்து வந்த டாம் கூப்பர் (35 ரன்), காலின் அகெர்மான் (41 ரன், 26 பந்து, 3 பவுண்டரி, 2 சிக்சர்) ஆகியோரும் கணிசமான பங்களிப்பு அளிக்க, அந்த அணி 150 ரன்களை கடந்து சவாலான நிலையை அடைந்தது. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் நெதர்லாந்து 4 விக்கெட்டுக்கு 158 ரன்கள் சேர்த்தது.
பின்னர் 159 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய தென்ஆப்பிரிக்காவுக்கு திருப்திகரமான தொடக்கம் கிடைக்கவில்லை. துல்லியமாக பந்து வீசி குடைச்சல் கொடுத்த நெதர்லாந்து பவுலர்கள், குயின்டான் டி காக் (13 ரன்). கேப்டன் பவுமா (20 ரன்), ரோசவ் (25 ரன்) ஆகியோரை சீக்கிரம் காலி செய்தனர். இதன் பின்னர் மார்க்ராமும், டேவிட் மில்லரும் கைகோர்த்து அணியை கரைசேர்க்க சிறிது நேரம் போராடினர்.
இவர்கள் நின்றது வரை தென்ஆப்பிரிக்கா பக்கம் சற்று உற்சாகம் தென்பட்டது. ஆனால் இந்த கூட்டணி உடைந்ததும் ஆட்டத்தின் போக்கு தலைகீழானது. ஸ்கோர் 90-ஐ (12.3 ஓவர்) எட்டிய போது மார்க்ராம் 17 ரன்களில் (13 பந்து, 2 பவுண்டரி) கேட்ச் ஆனார். தொடர்ந்து டேவிட் மில்லரும் (17 ரன்) நடையை கட்ட நெதர்லாந்தின் கை ஓங்கியது. அடுத்து வந்த வீரர்களால் எதிரணியின் பந்து வீச்சை அடித்து நொறுக்க இயலவில்லை.
கடைசி ஓவரில் வெற்றிக்கு 26 ரன்கள் தேவைப்பட்ட போது தென்ஆப்பிரிக்க பேட்ஸ்மேன்களால் அந்த ஓவரில் 12 ரன்களே எடுக்க முடிந்தது. 20 ஓவர் முழுமையாக ஆடிய தென்ஆப்பிரிக்கா 8 விக்கெட்டுக்கு 145 ரன்னில் அடங்கியது. இதன் மூலம் நெதர்லாந்து 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது. சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் நெதர்லாந்து அணி தென்ஆப்பிரிக்காவை வீழ்த்துவது இதுவே முதல் முறையாகும்.
இதற்கு முன்பு தென்ஆப்பிரிக்காவுடன் மோதிய 4 ஒரு நாள் போட்டிகளிலும், ஒரு 20 ஓவர் போட்டியிலும் தோற்றிருந்தது.இந்த தோல்வியால் 5 புள்ளிகளுடன் பட்டியலில் 3-வது இடத்துக்கு தள்ளப்பட்ட தென்ஆப்பிரிக்கா அரைஇறுதி வாய்ப்பை இழந்து வெளியேறியது.
தோல்வியால் விரக்தி அடைந்த தென்ஆப்பிரிக்க கேப்டன் பவுமா கூறியதாவது:-
தோல்வியை ஏற்றுக்கொள்ளவே கடினமாக இருக்கிறது. நிச்சயம் அரைஇறுதிக்கு முன்னேறி விடுவோம் என்று நம்பினோம். துரதிர்ஷ்டவசமாக அது நடக்காமல் போய் விட்டது. முக்கியமான தருணங்களில் விக்கெட்டுகளை இழந்தது பின்னடைவாகிப் போனது.
மைதானத்தின் வித்தியாசமான சுற்றளவில் எங்களை விட நெதர்லாந்து பீல்டிங்கில் சிறப்பாக செயல்பட்டது' என்றார். உணர்ச்சிபூர்வமான இந்த நிலைமையில் இப்போது கேப்டன் பதவி குறித்து எந்த முடிவும் எடுக்கமாட்டேன், சம்பந்தப்பட்டவர்களிடம் அது குறித்து பேசுவேன் என்றும் பவுமா குறிப்பிட்டார்.
- 2-வது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்தை 5 விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா வென்றது.
- இந்த வெற்றியின் மூலம் ஒருநாள் தொடரை தென் ஆப்பிரிக்கா 2-0 என கைப்பற்றியது.
புளோம்பாண்டீன்:
இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 2-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி புளோம்பாண்டீன் நகரில் நேற்று நடந்தது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 7 விக்கெட்டுக்கு 342 ரன்கள் குவித்தது. ஹாரி புரூக் 80 ரன்னும், கேப்டன் ஜோஸ் பட்லர் 94 ரன்னும் மொயீன் அலி 51 ரன்னும் விளாசினர்.
343 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி தென் ஆப்பிரிக்கா களமிறங்கியது. கேப்டன் பவுமா பொறுப்புடன் ஆடி சதமடித்தார். அவர் 109 ரன்கள் எடுத்து அவுட்டானார்.
கடைசி கட்டத்தில் அதிரடியாக ஆடிய டேவிட் மில்லர் 58 ரன்னும், மார்கோ ஜேன்சன் 32 ரன்னும் எடுத்து வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர்.
இறுதியில், தென் ஆப்பிரிக்கா 49.1 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 347 ரன்கள் குவித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆட்ட நாயகன் விருது பவுமாக்கு வழங்கப்பட்டது.
இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை தென் ஆப்பிரிக்கா அணி 2-0 என கைப்பற்றியது.
இவ்விரு அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி வரும் 1-ம் தேதி நடக்கிறது.
- முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 335 ரன்கள் குவித்தது.
- அடுத்து ஆடிய தென் ஆப்பிரிக்கா 287 ரன்களில் ஆல் அவுட்டானது.
கேப் டவுன்:
வெஸ்ட் இண்டீஸ் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.
முதலில் நடைபெற்ற டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் தென் ஆப்பிரிக்கா கைப்பற்றியது. இதையடுத்து நடந்த முதல் ஒருநாள் போட்டி மழையால் கைவிடப்பட்டது.
இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 2வது ஒருநாள் போட்டி கிழக்கு லண்டனில் நடைபெற்றது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 335 ரன்கள் குவித்தது. அந்த அணியின் கேப்டன் ஷாய் ஹோப் பொறுப்புடன் ஆடி சதமடித்தார். அவர் 128 ரன்னில் அவுட்டானார். ரோமன் பாவெல் 46 ரன்னில் ஆட்டமிழந்தார்.
இதையடுத்து, 336 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் தென் ஆப்பிரிக்கா அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்கள் பொறுப்பாக ஆடினர். குயிண்டன் டி காக் 48 ரன்னில் அவுட்டானார். அடுத்து வந்த வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை.
ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் கேப்டன் பவுமா சிறப்பாக ஆடினார். அதிரடியாக ஆடிய பவுமா 118 பந்தில் 144 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
இறுதியில், தென் ஆப்பிரிக்கா 41.4 ஓவரில் 287 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் வெஸ்ட் இண்டீஸ் 48 ரன்களில் வெற்றி பெற்றது. ஆட்ட நாயகன் விருது ஷாய் ஹோப்புக்கு அளிக்கப்பட்டது.
- கிளாசன் இறுதி வரை விளையாட முடியாமல் போனது பின்னடைவை ஏற்படுத்தியது.
- குயின்டன் டி காக் போன்ற ஒரு வீரர் அணியில் இருந்து விலகுவது கடினமாக இருக்கிறது.
உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் முன்னேற முடியாத, தென் ஆப்பிரிக்காவின் சோகம் தற்போதும் தொடருகிறது. தோல்வி குறித்து தென் ஆப்பிரிக்கா கேப்டன் பவுமா கூறியதாவது:-
தோல்வியை வார்த்தைகளால் விவரிப்பது கடினமானது. இறுதிப் போட்டிக்கு செல்லும் ஆஸ்திரேலியா அணிக்கு வாழ்த்துக்கள். ஆட்டத்தின் பெரும் பகுதியில் அவர்கள் சிறப்பாக விளையாடினர். அவர்கள் வெற்றிக்கு தகுதியானவர்கள் பேட்டிங், பந்து வீச்சில் சிறப்பான தொடக்கத்தை நாங்கள் பெறாததால் தோல்வியை சந்தித்தோம்.
மில்லர் கிளாசன் சிறப்பாக விளையாடினார். ஆனல் கிளாசன் இறுதி வரை விளையாட முடியாமல் போனது பின்னடைவை ஏற்படுத்தியது. வெற்றிக்காக நாங்கள் கடுமையாக போராடினோம். குயின்டன் டி காக் போன்ற ஒரு வீரர் அணியில் இருந்து விலகுவது கடினமாக இருக்கிறது. அவர் தென் ஆப்பிரிக்கா அணியின் சகாப்தமாக இருந்து வெளியேறுகிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.
- 19-ந் தேதி கராச்சியில் நடைபெறும் தொடக்க லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான்- நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.
- லுங்கி நிகிடி மற்றும் அன்ரிச் நோர்ட்ஜே நீண்ட நாட்கள் கழித்து இடம் பெற்றுள்ளனர்.
9-வது சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி அடுத்த மாதம் (பிப்ரவரி) 19-ந்தேதி முதல் மார்ச் 9-ந் தேதி வரை பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கிறது. 19-ந் தேதி கராச்சியில் நடைபெறும் தொடக்க லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான்- நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன.
இந்த தொடருக்கான அணிகளை ஒவ்வொரு கிரிக்கெட் வாரியங்களும் அறிவித்து வருகின்றன. அந்த வரிசையில் தற்போது பவுமா தலைமையிலான தென் ஆப்பிரிக்கா அறிவிக்கப்பட்டது.
அந்த அணியில் வேகப்பந்து வீச்சாளர்களான லுங்கி நிகிடி மற்றும் அன்ரிச் நோர்ட்ஜே நீண்ட நாட்கள் கழித்து இடம் பெற்றுள்ளனர்.
தென் ஆப்பிரிக்க அணி விவரம் பின்வருமாறு:-
பவுமா (கேப்டன்), டோனி டி சார்சி, மார்கோ ஜான்சன், கிளாசென், கேஷவ் மகராஜ், மார்க்ரம், மில்லர், வியான் முல்டர், லுங்கி நிகிடி, அன்ரிச் நோர்ட்ஜே, ரபடா, ரையன் ரிக்கெல்டான், ஷம்சி, ஸ்டப்ஸ் மற்றும் ரஸ்ஸி வான் டெர் டஸ்ஸன்.
- 82 ரன்கள் அடித்து சிறப்பாக விளையாடி வந்த பவுமாவை சவுத் ஷகீல் ரன் அவுட் செய்தார்.
- பாகிஸ்தான் வீரர்களின் இந்த செயல் இணையத்தில் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது.
நியூசிலாந்து, பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகள் பங்கேற்றுள்ள முத்தரப்பு ஒருநாள் கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் நடந்து வருகிறது.
நியூசிலாந்து தனது முதல் 2 ஆட்டங்களில் முறையே பாகிஸ்தான் மற்றும் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தி முதல் அணியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறிவிட்டது.
இறுதிப்போட்டிக்கு முன்னேறும் 2வது அணி எது என்பதை தீர்மானிக்கும் கடைசி லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா அணிகள் நேற்று மோதின.
இப்போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய தென் ஆப்பிரிக்கா அணி 50 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 352 ரன்கள் குவித்தது. கிளாசன் அதிரடியாக ஆடி 87 ரன்னும், பிரீட்ஸ்கே 83 ரன்னும், பவுமா 82 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர்.பாகிஸ்தான் சார்பில் ஷாகின் அப்ரிடி 2 விக்கெட் வீழ்த்தினார்.
இதையடுத்து, 353 ரன் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் 49 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 355 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கும் முன்னேறியது. நாளை மறுதினம் நடைபெறும் இறுதிப்போட்டியில் பாகிஸ்தான், நியூசிலாந்துடன் மோதுகிறது.
இப்போட்டியில் 82 ரன்கள் அடித்து சிறப்பாக விளையாடி வந்த பவுமாவை சவுத் ஷகீல் ரன் அவுட் செய்தார். அப்போது சவுத் ஷகீல், கம்ரான் குலாம் ஆகியோர் பவுமா பக்கத்தில் சென்று கொண்டாட்டத்தில் ஈடுபட்டார்கள். இதனால் பவுமா சிறிது நேரம் அதே இடத்தில் நின்றார். உடனே அங்கு வந்த ஆகா சல்மான் இருவரையும் அங்கிருந்து வேறு இடத்திற்கு தள்ளி சென்றார்.
இதனையடுத்து பாகிஸ்தான் வீரர்களின் இந்த செயலுக்கு கேப்டன் ரிஸ்வானுக்கு கள நடுவர்கள் எச்சரிக்கை விடுத்தனர். பாகிஸ்தான் வீரர்களின் இந்த செயல் இணையத்தில் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது.






