என் மலர்
நீங்கள் தேடியது "டெம்பா பவுமா"
- விரைவில் இந்தியாவுக்கு எதிராக 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுவோம் என்று நம்புகிறேன்.
- இந்தியா போன்ற வலுவான அணிக்கு எதிராக ஆடும் போது குறைந்தது 3 போட்டிகள் கொண்ட தொடராக இருந்தால் இன்னும் நன்றாக இருக்கும்.
தென்ஆப்பிரிக்க கேப்டன் பவுமா நேற்று நிருபர்களிடம் கூறுகையில், 'இன்று (நேற்று) காலை எழுந்ததும், ஆஷஸ் போட்டியை டி.வி.யில் பார்த்தோம். இங்கிலாந்து- ஆஸ்திரேலிய அணிகள் 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடுவதை பார்க்க கொஞ்சம் பொறாமையாக இருக்கிறது.
விரைவில் இந்தியாவுக்கு எதிராக 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடுவோம் என்று நம்புகிறேன். தற்போது நாங்கள் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறோம். இது 1-1 அல்லது 2-0 என்று முடியவே வாய்ப்பிருக்கிறது. ஆனால் இந்தியா போன்ற வலுவான அணிக்கு எதிராக ஆடும் போது குறைந்தது 3 போட்டிகள் கொண்ட தொடராக இருந்தால் இன்னும் நன்றாக இருக்கும். ரசிகர்களுக்கும் சுவாரஸ்யமாக இருக்கும். சமனுக்கு பதிலாக தொடரை வெல்வதற்குரிய வாய்ப்பு உருவாகும்' என்றார்.
- ஆடுகளத்தை குறை சொல்வதற்கு ஒன்றுமில்லை என்ற கம்பீரின் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன்.
- மோசமான பேட்டிங் நுட்பமும், நிலைத்து நின்று போராடும் மனோபலமும் இல்லாததே தோல்விக்கு காரணம்.
கொல்கத்தா:
கொல்கத்தாவில் நடந்த தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணி 124 ரன் இலக்கை கூட எட்ட முடியாமல் 93 ரன்னில் சுருண்டு தோற்றது கடும் விமர்சனத்துக்குள்ளானது. சுழலுக்கு உகந்த வகையில் தயாரிக்கப்பட்ட இந்த ஆடுகளத்தில் சமாளிக்க முடியால் இந்திய பேட்ஸ்மேன்கள் திணறிப்போனார்கள். அதே சமயம் இந்த கடினமான ஆடுகளத்தில் தென்ஆப்பிரிக்க கேப்டன் பவுமா மட்டும் தாக்குப்பிடித்து அரைசதம் அடித்தார்.
இது போன்ற ஆடுகளம் (பிட்ச்) தான் வேண்டும் என்று நாங்கள் கேட்டு பெற்றோம். பேட்ஸ்மேன்கள் சொதப்பியதால் தோல்வி ஏற்பட்டதாக இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் கூறினார். பிட்ச் விவகாரத்தில் கம்பீரின் நிலைப்பாட்டை முன்னாள் வீரர்கள் சவுரவ் கங்குலி, புஜாரா, ஹர்பஜன்சிங் உள்ளிட்டோர் குறை கூறினர்.
இந்த நிலையில் ஆடுகள சர்ச்சையில் இந்திய முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் தனது விவாதத்தை முன் வைத்துள்ளார். அவர் டி.வி. சேனலுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
தென் ஆப்பிரிக்கா கேப்டன் பவுமாவிடம் இருந்து இந்திய வீரர்கள் கற்றுக் கொள்ள வேண்டும். அவர் ஒரு அற்புதமான இன்னிங்சை விளையாடினார். பொறுமையாக மனஉறுதியுடன் போராடுவது எப்படி என்பதை களத்தில் காட்டினார். இது தான் முறையான டெஸ்ட் கிரிக்கெட்டுக்குரிய பேட்டிங். ஒருநாள் கிரிக்கெட்டில் இருந்து டெஸ்ட் போட்டி வித்தியாசமானது என்பதை நமது வீரர்கள் மறந்து விட்டார்கள். டெஸ்ட் கிரிக்கெட்டில் அதற்குரிய ஷாட்டுகளை ஆடும் போது தான் தாக்குப்பிடிக்க முடியும்.
ஆடுகளத்தை குறை சொல்வதற்கு ஒன்றுமில்லை என்ற கம்பீரின் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன். ஆடுகளத்தில் பந்து அளவுக்கு அதிகமாக சுழன்று திரும்பவில்லை. தென்ஆப்பிரிக்க சுழற்பந்து வீச்சாளர் சைமன் ஹார்மரின் பந்து வீச்சை பாருங்கள். நிறைய பந்துகள் பிட்ச் ஆனதும் நேராக ஸ்டம்புக்கு சென்றது. திடீரென ஒன்றிரண்டு பந்துகள் திரும்பின. எனவே 124 ரன் இலக்கை 'சேசிங்' செய்திருக்க வேண்டும்.
மோசமான பேட்டிங் நுட்பமும், நிலைத்து நின்று போராடும் மனோபலமும் இல்லாததே தோல்விக்கு காரணம். நமது அணியில் உள்ள பெரும்பாலான வீரர்கள் உள்ளுர் முதல்தர கிரிக்கெட்டில் விளையாடுவதில்லை. நீங்கள் முதல்தர கிரிக்கெட்டில் விளையாடினால், இத்தகைய சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளங்களில் பேட்டிங் செய்யும் வாய்ப்பு கிடைக்கும். அந்த அனுபவம் சர்வதேச போட்டியில் கைகொடுக்கும்.
ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் தொடரின் போது எந்த அணியும் ஆடுகளங்கள் விஷயத்தில் தலையிடுவதில்லை. இதனால் பிட்ச் பராமரிப்பாளர்கள் எந்த நெருக்கடியும் இன்றி, தாங்கள் நினைத்த மாதிரி ஆடுகளத்தை உருவாக்குகிறார்கள். எத்தகைய ஆடுகளம் சிறந்ததாக இருக்கும் என்பது மற்றவர்களை காட்டிலும் பிட்ச் பராமரிப்பாளர்களுக்கே நன்கு தெரியும். அதனால் அவர்களின் செயல்பாடுகளில் யாரும் தலையிடக்கூடாது. நமக்கு ஏற்ற வகையிலான ஆடுகளத்தை தயார்செய்யும்படி கேட்டால், தோல்விக்கு தான் வித்திடும். அதனால் பிட்ச் பராமரிப்பாளர்களை சுதந்திரமாக விட்டு விடுங்கள்.
இவ்வாறு கவாஸ்கர் கூறியுள்ளார்.
- முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 159 ரன்னில் சுருண்டது.
- அடுத்து ஆடிய இந்தியா முதல் இன்னிங்சில் 189 ரன்னில் ஆல்அவுட் ஆனது.
கொல்கத்தா:
இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டனில் நடந்தது.
முதலில் பேட் செய்த தென் ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 159 ரன்னில் சுருண்டது. அடுத்து ஆடிய இந்தியா முதல் இன்னிங்சில் 189 ரன்னில் ஆல்அவுட் ஆனது.
தொடர்ந்து ஆடிய தென் ஆப்பிரிக்கா 2-வது இன்னிங்சில் 153 ரன்கள் எடுத்து ஆல்அவுட்டானது. இதையடுத்து, 124 என்ற எளிய இலக்கை எடுக்க முடியாமல் இந்திய அணி படுதோல்வி அடைந்தது.
இந்நிலையில், டெஸ்டில் பவுமா தலைமையில் தென் ஆப்பிரிக்க அணி தோற்றதில்லை என்ற பெருமையை தக்க வைத்துக் கொண்டது.
அவரது கேப்டன்ஷிப்பில் தென் ஆப்பிரிக்கா 10-ல் வெற்றியும், ஒன்றில் டிராவும் சந்தித்துள்ளது.
இதன்மூலம் டெஸ்டில் தோல்வியே சந்திக்காமல் அதிவேகமாக 10 வெற்றிகளைத் தேடித்தந்த கேப்டன் என்ற சாதனைக்கு சொந்தக்காரர் ஆனார்.
- தென் ஆப்பிரிக்கா அணி ஜிம்பாப்வேவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளது.
- 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது.
தென் ஆப்பிரிக்கா அணி சமீபத்தியில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதுடன், சாம்பியன் பட்டத்தையும் வென்று சாதித்துள்ளது.
இதனைத்தொடர்ந்து தென் ஆப்பிரிக்க அணி இம்மாத இறுதியில் ஜிம்பாப்வேவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இதில் இரு அணிகளுக்கும் இடையேயான முதல் போட்டி ஜூன் 28-ம் தேதி நடைபெறவுள்ளது.
இத்தொடருக்கான டெம்பா பவுமா தலைமையிலான தென் ஆப்பிரிக்க அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த அணியில் லுவான் ட்ரே பிரிட்டோரியஸ், லெசெகோ செனோக்வானே, கோடி யூசுஃப், டெவால்ட் பிரீவிஸ் மற்றும் ப்ரீனெலன் சுப்ரயன் உள்ளிட்ட அறிமுக வீரர்கள் இடம்பிடித்துள்ள நிலையில், ஐடன் மார்க்ரம், காகிசோ ரபாடா, மார்கோ ஜான்சன் உள்ளிட்ட நட்சத்திர வீரர்களும் இடம்பிடித்தனர்.
இந்நிலையில் ஜிம்பாப்வே டெஸ்ட் தொடரில் இருந்து தென் ஆப்பிரிக்க அணி கேப்டன் டெம்பா பவுமா காயம் காரணமாக விலகியுள்ளார்.
அவர் விலகியுள்ள நிலையில் ஜிம்பாப்வே டெஸ்ட் தொடருக்கான தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டனாக கேசவ் மகாராஜ் செயல்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- பவுமா 2023-ம் ஆண்டு தென் ஆப்பிரிக்க அணியின் டெஸ்ட் கேப்டன் பதவியை ஏற்றார்.
- டெஸ்ட் போட்டியில் தோல்வியே காணாத கேப்டனாக பவுமா ஆதிக்கம் செலுத்தி வருகிறார்.
லண்டன்:
ஐ.சி.சி. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவை 5 விக்கெட் வித்தியாசத்தில வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா சாம்பியன் பட்டம் பெற்றது.
ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 212 ரன்னும், தென் ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 138 ரன்னும் எடுத்தன. ஆஸ்திரேலியா 2-வது இன்னிங்சில் 207 ரன் எடுத்தது.
இதனால் தென் ஆப்பிரிக்காவுக்கு 282 ரன் இலக்காக இருந்தது. தென் ஆப்பிரிக்கா 5 விக்கெட்டை இழந்து இந்த ரன்னை எடுத்தது. தொடக்க வீரர் மர்க்ராம் 136 ரன்கள் குவித்து வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தார். 27 ஆண்டுகளுக்க பிறகு தென் ஆப்பிரிக்காவுக்கு ஐ.சி.சி. கோப்பை கிடைத்துள்ளது. கடைசியாக 1998-ம் ஆண்டு ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபியை வென்று இருந்தது. அதற்கு பிறகு தற்போது தான் அந்த அணி ஐ.சி.சி. பட்டத்தை வென்றுள்ளது.
ஐ.சி.சி. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை வென்றதன் மூலம் தென் ஆப்பிரிக்க கேப்டன் பவுமா புதிய வரலாறு படைத்தார். அதோடு அவர் கேப்டன் பதவியிலும் புதிய சாதனை நிகழ்த்தினார்.
பவுமா 2023-ம் ஆண்டு தென் ஆப்பிரிக்க அணியின் டெஸ்ட் கேப்டன் பதவியை ஏற்றார். அவர் தலைமையில் 10 டெஸ்டில் விளையாடி 9-ல் வெற்றி கிடைத்தது. ஒரு டெஸ்ட் டிரா ஆனது. ஒரு டெஸ்டில் கூட தோற்கவில்லை. இதன் மூலம் டெஸ்ட் போட்டியில் தோல்வியே காணாத கேப்டனாக பவுமா ஆதிக்கம் செலுத்தி வருகிறார்.
அவர் 104 ஆண்டுகால சாதனையை முறியடித்தார். ஆஸ்திரேலியாவை சேர்ந்தவர் ஆம்ஸ்ட்ராங். 1920-21 ஆண்டுகளில் தோல்வியை தழுவாமல் 8 டெஸ்டில் வெற்றி பெற்றார். பவுமா தோல்வியை சந்திக்காமல் 9 டெஸ்டில் வெற்றி பெற்று சாதித்துள்ளார்.
- ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை தென் ஆப்பிரிக்கா அணி வென்று அசத்தியுள்ளது.
- தென் ஆப்பிரிக்கா அணியில் 2 பேர் கறுப்பினத்தவர்களாக இருக்க வேண்டும் என இ டஒதுக்கீடு வகுக்கப்பட்டுள்ளது.
தென்ஆப்பிரிக்கா அணி ஐசிசி நடத்தும் தொடர்களில் சாம்பியன் பட்டம் வெல்ல முடியாமல் திணறி வந்தது. இந்நிலையில் 27 வருடத்திற்குப் பிறகு ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை டெம்பா பவுமா தலைமையிலான தென் ஆப்பிரிக்கா அணி வென்று அசத்தியுள்ளது.
இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவை 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, 27 வருடத்திற்குப் பிறகு தென் ஆப்பிரிக்கா ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன் ஆகியுள்ளது.
இதுவரை டெம்பா தலைமையில் தென்ஆப்பிரிக்கா அணி டெஸ்ட் போட்டிகளில் தோல்வியே அடைந்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தென் ஆப்பிரிக்கா அணியில் 2016-ம் ஆண்டு இடஒதுக்கீடு அமல்படுத்தப்பட்டு, அந்த அணியில் 6 வீரர்கள் வெள்ளை இனத்தவர்கள் அல்லாதவர்களாக இருக்க வேண்டும் 2 பேர் கறுப்பினத்தவர்களாக இருக்க வேண்டும் என ஒதுக்கீடு வகுக்கப்பட்டுள்ளது.
இந்த விதிமுறையின்படி தான் ரபடா , கேப்டன் பவுமா, லுங்கி இங்கிடி போன்ற கறுப்பின வீரர்கள் தென் ஆப்பிரிக்கா அணியில் இடம்பிடித்துள்ளனர்.
பவுமா தலைமையில் விளையாடிய தென் ஆப்பிரிக்கா அணி 2023 ஒருநாள் உலகக்கோப்பையில் அரையிறுதியில் தோல்வியடைந்து வெளியேறியது.
இதனையடுத்து, தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் அணியில் இடஒதுக்கீடு இருப்பதால்தான் அந்த அணியால் ஐசிசி கோப்பையை வெற்றி பெற முடியவில்லை என்று பலரும் பவுமாவை விமர்சித்தனர்.
குறிப்பாக நிறம், உயரம் உள்ளிட்டவற்றால் பவுமா இணையத்தில் கடுமையான விமர்சனத்தை எதிர்கொண்டார்.
இந்நிலையில், டெம்பா பவுமாவை விமர்சித்தவர்களுக்கு உலக டெஸ்ட் சாம்பியன் பட்டம் வென்று அவர் பதிலடி கொடுத்துள்ளார் என்று கிரிக்கெட் ரசிகர்கள் இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர்.
முன்னதாக தனது பெயர் குறித்து பேசிய பவுமா, "என்னுடைய பாட்டி எனக்கு டெம்பா என்று பெயர் வைத்தார். அதற்கு நம்பிக்கை என்று அர்த்தம்" என கூறினார். அந்த நம்பிக்கை தான் தென் ஆப்பிரிக்கா அணியின் 27 ஆண்டு கால ஏக்கத்திற்கு முடிவு கட்டியுள்ளது.
- ஆஸ்திரேலியா 2வது இன்னிங்சில் 207 ரன்னுக்கு ஆல் அவுட்டானது.
- தென் ஆப்பிரிக்கா சார்பில் ரபாடா 4 விக்கெட் வீழ்த்தினார்.
லண்டன்:
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற தென்ஆப்பிரிக்கா பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 212 ரன்னில் ஆல் அவுட்டானது.
தென் ஆப்பிரிக்காவின் ரபாடா 5 விக்கெட்டும், மார்கோ யான்சென் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.
தொடர்ந்து ஆடிய தென்ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் ஆரம்பம் முதலே திணறியது. இதனால் தென் ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 138 ரன்னில் சுருண்டது. இதன்மூலம் ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 74 ரன்கள் முன்னிலை பெற்றது.
ஆஸ்திரேலியா சார்பில் பாட் கம்மின்ஸ் 6 விக்கெட்டும், மிட்செல் ஸ்டார்க் 2 விக்கெட்டும், ஹேசில்வுட் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, ஆஸ்திரேலிய அணி 2வது இன்னிங்சை தொடங்கியது. ரபாடா, நிகிடியின் துல்லியமான பந்துவீச்சில் விரைவில் விக்கெட்கள் வீழ்ந்தன.
ஒரு கட்டத்தில் 75 ரன்கள் எடுப்பதற்குள் 7 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது ஆஸ்திரேலியா. 8வது விக்கெட்டுக்கு இணைந்த அலெக்ஸ் கேரி- மிட்செல் ஸ்டார்க் ஜோடி பொறுப்புடன் ஆடியது. இந்த ஜோடி 61 ரன்கள் சேர்த்த நிலையில் அலெக்ஸ் கேரி 43 ரன்னில் அவுட்டானார். இரண்டாம் நாள் முடிவில் ஆஸ்திரேலியா 8 விக்கெட்டுக்கு 144 ரன்கள் எடுத்து, 218 ரன்கள் முன்னிலை பெற்றது.
இந்நிலையில், மூன்றாம் நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலியா 2வது இன்னிங்சில் 207 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. மிட்செல் ஸ்டார்க் 58 ரன் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இதையடுத்து, 282 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்கா 2வது இன்னிங்சை தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர் ரிக்கல்டன் 6 ரன்னிலும், வியான் முல்டர் 27 ரன்னிலும் அவுட்டாகினர்.
மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் மார்கிரம் பொறுப்புடன் ஆடி சதமடித்து அசத்தினார். அவருக்கு கேப்டன் பவுமா நன்கு ஒத்துழைப்பு கொடுத்து அரை சதம் கடந்தார்.
3வது விக்கெட்டுக்கு மார்கிரம்-பவுமா ஜோடி 143 ரன்கள் சேர்த்துள்ளது.
மூன்றாம் நாள் முடிவில் தென் ஆப்பிரிக்கா 2 விக்கெட்டுக்கு 213 ரன்கள் எடுத்துள்ளது. மார்கிரம் 102 ரன்னும், பவுமா 65 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.
இன்னும் 2 நாள் மீதமுள்ள நிலையில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற 69 ரன்கள் தேவை. ஆஸ்திரேலியா வெற்றி 8 விக்கெட் தேவை என்பதால் ஆட்டத்தின் முடிவை ரசிகர்கள் எதிர்பார்த்து இருக்கின்றனர்.
- லார்ட்ஸ் மைதானம் இந்த மெகா போட்டிக்கு ஒரு பொருத்தமான இடம்.
- ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நாங்கள் அனைவரும் எங்கள் சிறந்ததை வழங்க முயற்சிப்போம்.
ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியான்ஷிப் தொடரின் இறுதிப்போட்டி ஜூன் 11-ம் தேதி முதல் லண்டனில் உள்ள புகழ்பெற்ற லார்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில் ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் மோதுகிறது.
இதில் நடப்பு சாம்பியனாக களமிறங்கும் ஆஸ்திரேலியா, பட்டத்தை தக்க வைக்கும் முயற்சியில் இப்போட்டியை எதிர்கொள்ளவுள்ளது. அதேசமயம் இதுநாள் வரை ஐசிசி தொடர்களில் சாம்பியன் பட்டத்தை வெல்ல முடியாமல் தடுமாறி வரும் தென் ஆப்பிரிக்க அணியானது, இம்முறை இந்த போட்டியில் வெற்றிபெறுவதுடன் வரலாற்றை மாற்றி எழுதும் முனைப்பிலும் இப்போட்டியை எதிர்கொள்ளவுள்ளது.
இந்நிலையில் ஐசிசி பட்டத்தை வெல்ல இது எங்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பாகும் என தென் ஆப்பிரிக்கா வீரர் டெம்பா பவுமா கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்னேறியதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம், இது ஐசிசி பட்டத்தை வெல்ல எங்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பாகும். டெஸ்ட் கிரிக்கெட்டின் முக்கியத்துவத்தை அனைவரும் புரிந்துகொள்கிறார்கள். மேலும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இந்த முக்கியமான விளையாட்டு வடிவத்திற்கு சூழலை வழங்குகிறது.
லார்ட்ஸ் மைதானம் இந்த மெகா போட்டிக்கு ஒரு பொருத்தமான இடம். மேலும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நாங்கள் அனைவரும் எங்கள் சிறந்ததை வழங்க முயற்சிப்போம். ஜூன் 11 ஆம் தேதி இரு அணிகளின் அதிர்ஷ்டத்தையும் உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் பின்பற்றுவார்கள் என்று நான் நம்புகிறேன்.
என்று பவுமா தெரிவித்துள்ளார்.
- அபராதத்துடன் கூடுதலாக, அவரது ஒழுங்குமுறை பதிவில் ஒரு குறைபாடு புள்ளி சேர்க்கப்பட்டுள்ளது.
- ஒரு வீரர் 24 மாத காலத்திற்குள் நான்கு குறைபாடு புள்ளிகளைப் பெற்றால், அவர்கள் தடையைப் பெறுவார்கள்.
இங்கிலாந்து அணி 3 ஒருநாள் போட்டியில் விளையாடுவதற்காக தென் ஆப்பிரிக்கா சென்றுள்ளது. இரு அணிகளுக்கு இடையேயான முதல் 2 ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.
இரு அணிகளுக்கும் இடையேயான 2-வது ஒருநாள் போட்டி இன்று மாலை 4.30 மணிக்கு தொடங்குகிறது. இந்நிலையில் 2-வது ஒருநாள் போட்டியின் போது பவுமா விக்கெட்டை கொண்டாடியதற்காக சாம் கரணுக்கு அபராதம் விதிக்கப்பட்டது
28-வது ஓவரில் தென்னாப்பிரிக்கா கேப்டனை போல்ட் முறையில் அவுட் செய்த பிறகு டெம்பா பவுமாவின் அருகில் சென்று சாம் கரண் ரொம்ப ஆக்ரோஷமாக கொண்டாடினார்.
இதனால் ஐசிசியின் நடத்தை விதிகளை மீறியதற்காக சாம் கரணுக்கு அவரது போட்டி கட்டணத்தில் 15 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
அபராதத்துடன் கூடுதலாக, அவரது ஒழுங்குமுறை பதிவில் ஒரு குறைபாடு புள்ளி சேர்க்கப்பட்டுள்ளது. 24 மாத காலத்தில் கரணின் முதல் குற்றம் இதுவாகும்.
கள நடுவர்கள் மரைஸ் எராஸ்மஸ் மற்றும் அட்ரியன் ஹோல்ட்ஸ்டாக், மூன்றாவது நடுவர் பொங்கனி ஜெலே மற்றும் நான்காவது நடுவர் அல்லாஹுதின் பலேகர் ஆகியோரால் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.
ஒரு வீரர் 24 மாத காலத்திற்குள் நான்கு குறைபாடு புள்ளிகளைப் பெற்றால், அவர்கள் தடையைப் பெறுவார்கள்.
- தென் ஆப்பிரிக்கா டி20 அணியின் கேப்டன் பதவியில் இருந்து பவுமா நீக்கம் செய்யப்பட்டார்.
- டி20 அணிக்கு எய்டன் மார்க்ரம் கேப்டனாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
கேப் டவுன்:
தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் வெஸ்ட் இண்டீஸ் அணி அங்கு 2 டெஸ்ட், 3 ஒருநாள், 3 டி 20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலாவதாக நடைபெற்று வரும் டெஸ்ட் தொடரில் தென் ஆப்பிரிக்கா அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
இரு அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி நாளை தொடங்க உள்ளது. டெஸ்ட் தொடர் நிறைவடைந்த பின்னர் ஒருநாள் மற்றும் டி20 தொடர்கள் நடைபெற உள்ளன.
இந்நிலையில், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 அணிகளை தென் ஆப்பிரிக்கா கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. ஒருநாள் மற்றும் டி20 அணியின் கேப்டனாக இருந்த பவுமா வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான தொடரில் ஒருநாள் அணிக்கு மட்டும் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். டி 20 அணிக்கு எய்டன் மார்க்ரம் கேப்டனாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். சமீபத்தில் நடைபெற்ற தென் ஆப்பிரிக்கா டி20 லீக்கில் எய்டன் மார்க்ரம் தலையிலான சன்ரைசர்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது. இதனால் தென் ஆப்பிரிக்கா டி20 அணிக்கு இனிமேல் மார்க்ரமே கேப்டனாக செயல்படலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
முதல் 2 ஒருநாள் போட்டிகளுக்கான தென் ஆப்பிரிக்கா அணி:
தெம்பா பவுமா (கேப்டன்), ஜெரால்ட் கோட்ஸி, குயின்டன் டி காக், டோனி டி ஜோர்ஜி, ஜார்ன் போர்டுயின், ரீசா ஹென்ட்ரிக்ஸ், சிசண்டா மாகலா, கேசவ் மஹாராஜ், வியான் முல்டர், லுங்கி என்கிடி, ரியான் ரிக்கல்டன், ஆண்டிலே ஸ்டுக்வேப்ஸ், பெஹ்லுக்வே, லிசாட் வில்லியம்ஸ், ராஸ்ஸி வான் டெர் டஸ்ஸன்.
3-வது ஒருநாள் போட்டிக்கான தென் ஆப்பிரிக்கா அணி:
தெம்பா பவுமா (கேப்டன்), ஜெரால்ட் கோட்ஸி, குயின்டன் டி காக், டோனி டி ஜோர்ஜி, ஜார்ன் போர்டுயின், ரீசா ஹென்ட்ரிக்ஸ், மார்கோ ஜான்சன், ஹென்ரிச் கிளாசென், சிசண்டா மகலா, கேசவ் மகாராஜ், எய்டன் மார்க்ரம், வைடன் மில்லர், டேவிட் மில்லர், , லுங்கி என்கிடி, ரியான் ரிக்கெல்டன், வெய்ன் பார்னெல், அண்டில் பெஹ்லுக்வாயோ, டிரிஸ்டன் ஸ்டப்ஸ், லிசாட் வில்லியம்ஸ், ரஸ்ஸி வான் டெர் டுசென்.
3 டி20 போட்டிகளுக்கான தென் ஆப்பிரிக்கா அணி:
எய்டன் மார்க்ரம் (கேப்டன்), குயின்டன் டி காக், ஜார்ன் போர்டுயின், ரீசா ஹென்ட்ரிக்ஸ், மார்கோ ஜான்சன், ஹென்ரிச் கிளாசென், சிசாண்டா மகலா, டேவிட் மில்லர், லுங்கி என்கிடி, அன்ரிச் நார்ட்ஜே, வெய்ன் பார்னெல், ககிசோ ரபாடா, ரிலீ ரோசோவ், தப்ரைஸ் ஷம்சி, டிரிஸ்டன் ஸ்டப்ஸ்.
- இலங்கை தென் ஆப்பிரிக்காவில் பயணம்செய்து 2 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.
- தென் ஆப்பிரிக்க அணிக்கு டெம்பா பவுமா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார் .
கேப்டவுன்:
இலங்கை கிரிக்கெட் அணி தற்போது நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஆடி வருகிறது. இந்த தொடர் நிறைவடைந்ததும் இலங்கை அணி தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆட உள்ளது.
இந்த தொடர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு உட்பட்ட தொடர் என்பதால், இரு அணிகளுக்கும் இந்த தொடர் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. இந்த தொடர் வரும் 27ம் தேதி தொடங்குகிறது.
இந்நிலையில், இந்த தொடருக்கான தென் ஆப்பிரிக்க அணி அறிவிக்கப்பட்டுள்ளது. தென் ஆப்பிரிக்க அணிக்கு டெம்பா பவுமா கேப்டனாக நியமனம் செய்யப்பட்டுள்ளார் .
தென் ஆப்பிரிக்க அணி விவரம் வருமாறு:
டெம்பா பவுமா (கேப்டன்), டேவிட் பெடிங்ஹாம், ஜெரால்ட் கோட்சி, டி ஜோர்ஜி, மார்கோ ஜான்சன், கேசவ் மகராஜ், மார்க்ரம், வியான் முல்டர், செனுரன் முத்துசாமி, டேன் பீட்டர்சன், ககிசோ ரபாடா, டிரிஸ்டன் ஸ்டப்ஸ், ரியான் ரிக்கெல்டன், கைல் வேரின் .
- இலங்கை அணி முதல் இன்னிங்சில் 42 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தது.
- 516 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி விளையாடி வருகிறது.
டர்பன்:
இலங்கை அணி 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்காக தென் ஆப்பிரிக்கா சென்றுள்ளது.
இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி கடந்த 27-ம் தேதி தொடங்கியது. டாஸ் வென்ற இலங்கை பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்கா அணி முதல் இன்னிங்சில் 191 ரன்னில் ஆல் அவுட் ஆனது.
இலங்கை சார்பில் அசிதா பெர்னாண்டோ, லஹிரு குமாரா தலா 3 விக்கெட்டும், விஷ்வா பெர்னாண்டோ, பிரபாத் ஜெயசூர்யா தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
தொடர்ந்து ஆடிய இலங்கை அணி முதல் இன்னிங்சில் 42 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தது.
தென் ஆப்பிரிக்கா சார்பில் மார்கோ யான்சென் 7 விக்கெட்டும், கோட்சி 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
149 ரன்கள் முன்னிலை பெற்ற தென் ஆப்பிரிக்கா 2-வது இன்னிங்சை தொடங்கியது. இரண்டாம் நாள் முடிவில் தென் ஆப்பிரிக்கா அணி 3 விக்கெட்டுக்கு 132 ரன்கள் எடுத்திருந்தது.
இந்நிலையில், மூன்றாம் நாள் ஆட்டம் நேற்று நடைபெற்றது. 4வது விக்கெட்டுக்கு ஸ்டப்ஸ், பவுமா ஜோடி இணைந்து பொறுப்புடன் ஆடியது. இருவரும் சதமடித்து அசத்தினர்.
4வது விக்கெட்டுக்கு 249 ரன்கள் சேர்த்த நிலையில் ஸ்டப்ஸ் 122 ரன்னில் அவுட்டானார். பவுமா 113 ரன்னில் வெளியேறினார்.
இறுதியில், தென் ஆப்பிரிக்க அணி 2வது இன்னிங்சில் 5 விக்கெட்டுக்கு 366 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.
இதையடுத்து, 516 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் இலங்கை அணி இரண்டாவது இன்னிங்சை தொடங்கியது.
மூன்றாம் நாள் முடிவில் இலங்கை 5 விக்கெட்டுக்கு 103 ரன்கள் எடுத்துள்ளது.
இன்னும் இரு தினங்கள் மீதமுள்ள நிலையில் தென் ஆப்பிரிக்கா எஞ்சியுள்ள 5 விக்கெட்களை வீழ்த்தி வெற்றி பெறும் என ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.






