என் மலர்
கிரிக்கெட் (Cricket)

குள்ளமாக இருப்பதாக கிண்டலடித்த ரிஷப்பண்ட், பும்ரா: மவுனம் கலைத்த பவுமா
- தன்னிடம் பும்ரா, ரிஷப்பண்ட் மன்னிப்பு கேட்டதாக பவுமா கூறியுள்ளார்.
- அதேநேரத்தில் தென்ஆப்பிரிக்க பயிற்சியாளர், இந்தியர்களை அவமதிப்பாக பேசியதையும் கண்டித்துள்ளார்.
கொல்கத்தா:
பவுமா தலைமையிலான தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி சமீபத்தில் இந்தியா வை சொந்த மண்ணில் 2-0 என்ற கணக்கில் வீழ்த்தி டெஸ்ட் தொடரை கைப்பற்றி வரலாறு படைத்தது. டெஸ்ட் தொடரை இழந்தாலும் இந்திய அணி ஒரு நாள் மற்றும் 20 ஓவர் தொடரை கைப்பற்றி இருந்தது.
டெஸ்ட் தொடரின் போது தென்ஆப்பிரிக்க கேப்டன் பவுமாவை குள்ளமாக இருப்பதால் 'பவுனா' என கிண்டல் செய்து வேகப் பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா பேசினார்.
கொல்கத்தா டெஸ்டின் போது ரிஷப்பண்டிடம் எல்.பி.டபிள்யு தொடர்பாக டி.ஆர்.எஸ்.எடுப்பது குறித்து விவாதித்த போது இதை அவர் தெரிவித்தார்.
இது சர்ச்சையான நிலையில் தென்ஆப்பிரிக்க அணியின் பயிற்சியாளர் இந்திய அணியை மண்டியிட செய்வது போன்ற பொருள்படும்படியான 'க்ரோவல்' எனும் வார்த்தையை பயன்படுத்தினார். இது ரசிகர்கள் இடையே மிகுந்த கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் தன்னிடம் பும்ரா, ரிஷப்பண்ட் மன்னிப்பு கேட்டதாக பவுமா கூறியுள்ளார். அதேநேரத்தில் தென்ஆப்பிரிக்க பயிற்சியாளர், இந்தியர்களை அவமதிப்பாக பேசியதையும் கண்டித்துள்ளார்.
இது குறித்து பவுமா கூறியதாவது:-
என்னைப் பற்றி அவர்களது மொழியில் ஏதோ பேசியது எனக்கும் தெரியும். போட்டி முடிந்த பிறகு மூத்த வீரர்களான பும்ரா, ரிஷப்பண்ட் என்னிடம் வந்து மன்னிப்பு கேட்டார்கள்.
அவர்கள் என்னிடம் வந்து மன்னிப்பு கேட்டதும் முதலில் புரிந்து கொள்ள முடியவில்லை. அது என்னவாக இருக்கும் என்று எனது ஊடக மேலாளரிடம் கேட்டேன்.
மைதானத்தில் பேசியது அங்கேயே இருக்கும். ஆனால் நீங்கள் பேசியதை மறந்துவிடாதீர்கள். அதை உத்வேகமாக மாற்றிக் கொள்ளலாம். அதில் வன்மம் வைத்துக்கொள்ள எதுவும் இல்லை. எனது பயிற்சியாளர் தெரிவித்த கருத்தும் கண்டனத்துக்குரியது.
இவ்வாறு பவுமா கூறி உள்ளார்.






