search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Bumrah"

    • இந்திய அணியின் மிக முக்கிய வீரராக பும்ரா திகழ்ந்து வருகிறார்.
    • நான் எப்போதும் சந்திக்க விரும்பும் மனிதரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்ததில் மிகவும் மகிழ்ச்சி.

    2007 ஆம் ஆண்டுக்கு பின் 17 வருடங்களுக்கு பிறகு மீண்டும் டி20 உலகக்கோப்பையை இந்திய அணி வென்றுள்ளது.

    இந்த டி20 உலகக்கோப்பையை தொடரில் மொத்தமாக 15 விக்கெட்டுகள் எடுத்த பும்ரா தொடர் நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். குறிப்பாக இறுதிப்போட்டியில் 16, 18-வது ஓவரில் வெறும் 4, 2 ரன் மட்டுமே கொடுத்த அவர் 2 விக்கெட்டுகளை எடுத்து வெற்றிக்கு முக்கிய பங்காக இருந்தார்.

    அவ்வகையில் இந்திய அணியின் மிக முக்கிய வீரராக பும்ரா திகழ்ந்து வருகிறார்.

    அண்மையில் நடந்த முடிந்த ஆனந்த் அம்பானி திருமண விழாவில் கிரிக்கெட் வீரர் பும்ரா தனது மனைவியுடன் கலந்து கொண்டார். அப்போது அவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை சந்தித்து பேசியுள்ளார்.

    இந்நிலையில், ரஜினிகாந்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பும்ரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

    அதில், "நான் எப்போதும் சந்திக்க விரும்பும் மனிதரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்ததில் மிகவும் மகிழ்ச்சி" என்று அவர் பதிவிட்டுள்ளார். 

    • 3-வது 20 ஓவர் போட்டி இன்று நடக்கிறது.
    • வருகிற 14-ந்தேதியுடன் ஜிம்பாப்வே தொடர் முடிவடைகிறது.

    புதுடெல்லி:

    வெஸ்ட் இண்டீசில் சமீபத்தில் நடந்த 20 ஓவர் உலக கோப்பையை ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி கைப்பற்றியது. அதோடு ரோகித் சர்மா, விராட்கோலி மற்றும் ஜடேஜா ஆகியோர் 20 ஓவர் சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதற்காக அறிவித்தனர்.

    தற்போது சுப்மன் கில் தலைமையிலான இளம் இந்திய அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. 5 போட்டிக் கொண்ட 20 ஓவர் தொடரில் முதல் 2 ஆட்டத்தின் முடிவில் 1-1 என்ற சமநிலை காணப்படுகிறது.

    3-வது 20 ஓவர் போட்டி இன்று நடக்கிறது. வருகிற 14-ந்தேதியுடன் ஜிம்பாப்வே தொடர் முடிவடைகிறது.

    இதற்கிடையே இந்திய அணி இந்த மாதம் இறுதியில் இலங்கையில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு மூன்று 20 ஓவர் போட்டி மற்றும் 3 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடுகிறது.

    ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோர் 20 ஓவர் போட்டியில் மட்டுமே ஓய்வு அறிவித்து இருந்தனர். ஒருநாள் போட்டி மற்றும் டெஸ்ட் தொடரில் தொடர்ந்து ஆடுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

    இந்த நிலையில் இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் ரோகித் சர்மா, வீராட் கோலி மற்றும் பும்ரா ஆகியோர் ஆடமாட்டார்கள் என்று தகவல் வெளியாகி உள்ளது. 3 பேருக்கும் ஓய்வு கொடுக்கப்படுகிறது.

    டெஸ்ட் போட்டிக்கு முக்கியத்துவம் கொடுத்து விளையாட உள்ளதால் இலங்கைக்கு எதிரான 3 ஒரு நாள் தொடரில் 3 பேரும் விளையாடவில்லை எனறு கூறப்படுகிறது.

    சாம்பியன்ஸ் டிராபி போட்டிக்கு முன்பு இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் தொடர் அவர்கள் பயிற்சி பெற போதுமானதாக இருக்கும்.

    இந்திய அணி செப்டம்பர்-ஜனவரி இடைவெளியில் 10 டெஸ்ட் போட்டியில் விளையாட இருக்கிறது. வங்காளதேசம் (2 டெஸ்ட்), நியூசிலாந்து (3 டெஸ்ட்) ஆஸ்திரேலியா (5 டெஸ்ட்) ஆகியவற்றுடன் மோத இருக்கிறது.

    இலங்கைக்கு எதிரான ஒரு நாள் தொடரில் ரோகித் சர்மாவுக்கு ஓய்வு கொடுக்கும்பட்சத்தில் ஹர்திக் பாண்ட்யா அல்லது கே.எல்.ராகுல் கேப்டனாக நியமிக்கப்படலாம் என்று தெரிகிறது.

    • கோப்பையுடன் நாடு திரும்பிய இந்திய அணிக்கு நேற்று வான்கடே மைதானத்தில் பாராட்டு விழா நடைபெற்றது.
    • இந்திய அணியின் வெற்றிக்கு பும்ரா தான் முக்கியமான காரணம் என்பதை மீண்டும் மீண்டும் விராட் கோலி தெரிவித்து பாராட்டினார்.

    நடந்து முடிந்த டி20 உலகக் கோப்பை தொடரில் தென்னாப்பிரிக்கா அணியை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அணி பெற்றது. இந்த போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 176 ரன்கள் எடுத்தது. 177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென்னாப்பிரிக்கா வெற்றியை நோக்கி வேகமாக சேசிங் செய்தது. 177 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடிய அந்த அணி 15 ஓவர்களில் 147 ரன்கள் எடுத்திருந்தது. 15-வது ஓவரில் 24 ரன்கள் குவித்த அந்த அணி பெரிய அளவில் தன்னம்பிக்கையை பெற்றது.

    ஆனால், 16 வது ஓவர் மற்றும் 18வது ஓவரை வீசிய பும்ரா அந்த இரண்டு ஓவர்களில் மொத்தமே ஆறு ரன்கள் மட்டுமே கொடுத்து ஒரு விக்கெட் வீழ்த்தினார். பும்ராவின் பந்துவீச்சை சந்திக்க தென்னாப்பிரிக்கா அணி திணறியது. அதன் காரணமாக, அந்த அணிக்கு இருந்த அழுத்தம், இந்திய அணியின் வெற்றிக்கு ஒரு முக்கிய காரணமாக அமைந்தது. கடைசியில் இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் இந்த போட்டியில் வெற்றி பெற்று உலகக்கோப்பையை கைப்பற்றியது. 17 ஆண்டுக்குப் பிறகு இந்திய அணி 2-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.

    இதையடுத்து, கோப்பையுடன் நாடு திரும்பிய இந்திய அணிக்கு நேற்று வான்கடே மைதானத்தில் பாராட்டு விழா நடைபெற்றது. முன்னதாக அலைகடலென குவிந்திருந்த ரசிகர்கள் மத்தியில் இந்திய அணி வீரர்கள் பயணித்த பேருந்து ஊர்ந்து வந்தது.

    பாராட்டு விழாவில், பும்ராவை 'உலகின் எட்டாவது அதிசயம்' மற்றும் 'தேசிய பொக்கிஷம்' என்று அழைக்கும் மனுவில் கையெழுத்திடுவீர்களா என்று கேட்டதற்கு, கோலி சிறிதும் தயங்காமல் கையெழுத்திடுவேன் என்று விராட் கோலி கூறினார். மேலும் அவர் கூறியதாவது:- மைதானத்தில் இருந்த அனைவரையும் போலவே ஒரு கட்டத்தில் இந்த உலகக் கோப்பையும் கையை விட்டு நழுவுகிறது என்று நினைத்தோம். ஆனால், கடைசி ஐந்து ஓவரில் என்ன நடந்ததோ அது மிகவும் அற்புதமானது. நாம் அனைவரும் இந்த போட்டியில் நம்மை மீண்டும் வெற்றியை நோக்கி கொண்டு வந்த வீரரை பாராட்ட வேண்டும் என்று விரும்புகிறேன். அவர் இந்த தொடரில் மீண்டும், மீண்டும் அதை செய்தார். அந்த கடைசி ஐந்து ஓவரில் பும்ரா இரண்டு ஓவர்களை வீசினார். அது அற்புதமாக இருந்தது என்றார்.

    இதனிடையே இந்திய அணியின் வெற்றிக்கு பும்ரா தான் முக்கியமான காரணம் என்பதை மீண்டும் மீண்டும் விராட் கோலி தெரிவித்து பாராட்டினார்.

    • பொதுவாக நான் உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி வேலையை முடிப்பவன். ஆனால் இன்று சொல்வதற்கு என்னிடம் வார்த்தைகள் இல்லை.
    • நாங்கள் தோல்வியின் பிடியில் இருந்தோம். ஆனால் அங்கிருந்து வென்றது நிலாவின் மேல் நடப்பது போல் இருக்கிறது.

    டி20 உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியா- தென் ஆப்பிரிக்கா அணிகள் நேற்று மோதின. பரபரப்பான ஆட்டத்தில் இந்தியா 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்த போட்டியில் ஆட்டநாயகனாக விராட் கோலி தேர்வு செய்யப்பட்டார். இந்த தொடரில் மொத்தமாக 15 விக்கெட்டுகள் எடுத்த பும்ரா தொடர் நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். குறிப்பாக இறுதிப்போட்டியில் 16, 18-வது ஓவரில் வெறும் 4, 2 ரன் மட்டுமே கொடுத்த அவர் 2 விக்கெட்டுகளை எடுத்து வெற்றிக்கு முக்கிய பங்காக இருந்தார்.

    பொதுவாக நான் போட்டி முடிந்ததும் அழ மாட்டேன. ஆனால் இன்று உணர்ச்சிகள் என்னை தூண்டியது என இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ரா கூறினார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    பொதுவாக நான் உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி வேலையை முடிப்பவன். ஆனால் இன்று சொல்வதற்கு என்னிடம் வார்த்தைகள் இல்லை. பொதுவாக நான் போட்டி முடிந்ததும் அழ மாட்டேன். ஆனால் இன்று உணர்ச்சிகள் என்னை தூண்டுகிறது. நாங்கள் தோல்வியின் பிடியில் இருந்தோம். ஆனால் அங்கிருந்து வென்றது நிலாவின் மேல் நடப்பது போல் இருக்கிறது. இங்கே என்னுடைய குடும்பமும் இருக்கிறது.

    கடந்த முறை நெருங்கியும் எங்களுக்கு வெற்றி கிடைக்கவில்லை. ஆனால் இன்று எங்களுடைய வேலை முடிந்துள்ளது. இது போன்ற போட்டியில் உங்களுடைய அணியை வெற்றி கோட்டை தாண்ட வைப்பதை விட வேறு சிறந்த உணர்வு இருக்க முடியாது. இது போன்ற பெரிய நாட்கள் வரும் போது நீங்கள் சிறப்பாக செயல்பட வேண்டும். இந்த தொடர் முழுவதுமே நான் தெளிவாக உணர்ந்தேன்.

    எப்போதும் நான் ஒரு நேரத்தில் ஒரு பந்தை பற்றி மட்டுமே சிந்திப்பேன். அதைத் தவிர்த்து அதிகமாக சிந்திப்பதில்லை. ஆனாலும் அங்கே உங்களை உணர்ச்சிகள் மேலே தூக்கும். இருப்பினும் நீங்கள் போட்டியை முடிந்த பின் உணர்ச்சியை வெளிப்படுத்தலாம். 16-வது ஓவரில் பந்தில் கொஞ்சம் கசடு இருந்தது போல் தெரிந்தது. அதை என்னால் ரிவர்ஸ் செய்ய முடியும். அதை செய்யும் போது எந்த பேட்ஸ்மேனுக்கும் அடிப்பது மிகவும் கடினமாக இருக்கும்.

    இவ்வாறு பும்ரா கூறினார். 

    • பும்ரா 2 விக்கெட் வீழ்த்தினார்.
    • பாண்ட்யா கடைசி ஓவரில் 2 விக்கெட் வீழ்த்தினார்.

    டி20 உலகக் கோப்பை போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா விராட் கோலி (76), அக்சர் பட்டேல் (47) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் 7 விக்கெட் இழப்பிற்கு 176 ரன்கள் குவித்தது.

    பின்னர் 177 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் தென்ஆப்பிரிக்காவின் டி காக், ஹென்ரிக்ஸ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். அர்ஷ்தீப் சிங் வீசிய முதல் ஓவரில் தென்ஆப்பிரிக்கா ஒரு பவுண்டரியுடன் 6 ரன்கள் அடித்தது.

    2-வது ஓவரை பும்ரா வீசினார். இந்த ஓவரின் 2-வது பந்தில் ஹென்ரிக்ஸ் க்ளீன் போல்டானார். ஹென்ரிக்ஸ் 5 பந்தில் 4 ரன் எடுத்து வெளியேறினார். அடுத்து மார்கிராம் களம் இறங்கினார். இவர் அர்ஷ்தீப் சிங் வீசிய 3-வது ஓவரின் 3வது பந்தில் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட்-யிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். மார்கிராம் 5 பந்தில் 4 ரன்கள் எடுத்தார். அடுத்து ஸ்டப்ஸ் களம் இறங்கினார். 3 ஓவர் முடிவில் தென்ஆப்பிரிக்கா 14 ரன்கள் எடுப்பதற்குள் 2 விக்கெட்டுகளை இழந்தது.

    4-வது ஓவரை பும்ரா வீசினார். இந்த ஓவரில் டி காக் ஒரு பவுண்டரி அடித்தார். பும்ரா இந்த ஓவரில் 8 ரன்கள் விட்டுக்கொடுத்தார். இதனால் தென்ஆப்பிரிக்கா 4 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 22 ரன்கள் எடுத்திருந்தது.

    5-வது ஓவரை அக்சர் பட்டேல் வீசினார். இந்த ஓவரில் அக்சர் பட்டேல் இரண்டு பவுண்டரியுடன் 10 ரன்கள் விட்டுக்கொடுத்தார். இதனால் தென்ஆப்பிரிக்கா 5 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 32 ரன்கள் எடுத்தது.

    6-வது ஓவரை குல்தீப் யாதவ் வீசினார். இந்த ஓவரில் ஒரு பவுண்டரியுடன் 10 ரன்கள் விட்டுக்கொடுக்க தென்ஆப்பிரிக்கா பவர்பிளேயான முதல் 6 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 42 ரன்கள் எடுத்துள்ளது. டி காக் 20 ரன்னும், ஸ்டப்ஸ் 12 ரன்னும் எடுத்திருந்தனர்.

    7-வது ஓவரை அக்சார் பட்டேல் வீசினார். இந்த ஓவரில் ஒரு பவுண்டரியுடன் 7 ரன்கள் விட்டுக்கொடுத்தார். 8-வது ஓவரை குல்தீப் யாதவ் வீசினார். இந்த ஓவரில் ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸ் உடன் 13 ரன்கள் விட்டுக்கொடுத்தார். தென்ஆப்பிரிக்கா 8 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 62 ரன்கள் எடுத்து.

    9-வது ஓவரை அக்சர் பட்டேல் வீசினார். இந்த ஓவரில் ஒரு சிக்ஸ் அடித்த ஸ்டப்ஸ் 5-வது பந்தில் போல்டானார். அவர் 21 பந்தில் 3 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 31 ரன்கள் எடுத்தார். அடுத்து கிளாசன் களம் இறங்கினார். தென்ஆப்பிரிக்கா 9 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 71 ரன்கள் எடுத்தது.

    10-வது ஓவரை ஹர்திக் பாண்ட்யா வீசினார். இந்த ஓவரில் ஒரு சிக்ஸ் உடன் 10 ரன்கள் விட்டுக்கொடுத்தார். இதனால் தென்ஆப்பிரிக்கா 10 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 81 ரன்கள் எடுத்தது.

    தென்ஆப்பிரிக்காவுக்கு கடைசி 10 ஓவரில் அதாவது 60 பந்தில் 96 ரன்கள் தேவைப்பட்டது. கைவசம் 7 விக்கெட் இருந்தது. 11-வது ஓவரை ஜடேஜா வீசினார். இந்த ஓவரில் கிளாசன் ஒரு சிக்ஸ் அடித்தார். இந்த ஓவரில் 12 ரன்கள் விட்டுக்கொடுத்தார்.

    12-வது ஓவரை குல்தீப் யாதவ் வீசினார். இந்த ஓவரில் கிளாசன் ஒரு சிக்ஸ் அடித்தார். அத்துடன் 11.3 ஓவரில் தெனஆப்பிரிக்கா 100 ரன்னைத் தொட்டது. இந்த ஓவரில் தென்ஆப்பிரிக்கா 8 ரன்கள் அடித்தது.

    13-வது ஓவரை அர்ஷ்தீப் சிங் வீசினார். இந்த ஓவரின் 2-வது பந்தை பவுண்டரிக்கு விரட்டிய டி காக், அடுத்த பந்தில் கேட்ச் ஆனார். அவர் 31 பந்தில் 39 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அப்போது தென்ஆப்பிரிக்கா 12.3 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 106 ரன்கள் எடுத்திருந்தது. 5-வது விக்கெட்டுக்கு கிளாசன் உடன் மில்லர் ஜோடி சேர்ந்தார். அப்போது 41 பந்தில் 70 ரன்கள் தேவைப்பட்டது.

    14-வது ஓவரை குல்தீப் யாதவ் வீசினார். அப்போது 42 பந்தில் 68 ரன்கள் தேவைப்பட்டது. இந்த ஓவரின் 5-வது பந்தில் பவுண்டரி அடித்த மில்லர், 6-வது பந்தை சிக்சருக்கு தூக்கினார். இந்த ஓவரில் 14 ரன்கள் விட்டுக்கொடுக்க தென்ஆப்பிரிக்கா 14 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 123 ரன்கள் அடித்தது.

    கடைசி 6 ஓவரில் அதாவது கடைசி 36 பந்தில் 54 ரன்கள் தேவைப்பட்டது. கிளாசன் மற்றும் மில்லர் இந்திய பந்து வீச்சை மிரட்டினர். 15-வது ஓவரை அக்சர் பட்டேல் வீசினார். இந்த ஓவரில் இரண்டு பவுண்டரி, இரண்டு சிக்சருடன் 24 ரன்கள் விட்டுக்கொடுக்க தென்ஆப்பிரிக்கா 15 ஓவரில் 147 ரன்கள் எடுத்தது.

    கடைசி 5 ஓவரில் அதாவது 30 பந்தில் 30 ரன்கள் தேவைப்பட்டது. பும்ரா 16-வது ஓவரை வீசினார். இந்த ஓவரின் 2-வது பந்தில் இரண்டு ரன் எடுத்து கிளாசன் 2 பவுண்டரி, 5 சிக்சருடன் 23 பந்தில் அரைசதம் அடித்தார். பும்ரா இந்த ஓவரில் 4 ரன்கள் மட்டும் விட்டுக்கொடுத்தார். இதனால் தென்ஆப்பிரிக்காவின் வெற்றிக்கு 24 பந்தில் 26 ரன்கள் தேவைப்பட்டது.

    17-வது ஓவரை ஹர்திக் பாண்ட்யா வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தில் கிளாசன் ஆட்டமிழந்தார். அவர் 27 பந்தில் 52 ரன்கள் எடுத்தார். அடுத்து மில்லர் உடன் யான்சன் ஜோடி சேர்ந்தார். இந்த ஓவரில் ஹர்திக் பாண்ட்யா 4 ரன்கள் விட்டுக்கொடுக்க தென்ஆப்பிரிக்காவுக்கு கடைசி 18 பந்தில் 22 ரன்கள் தேவைப்பட்டது.

    18-வது ஓவரை பும்ரா வீசினார். இந்த ஓவரின் 4-வது பந்தில் யான்சனை க்ளீன் போல்டாக்கினார். அடுத்து மகாராஜ் களம் இறங்கினார். இந்த ஓவரில் பும்ரா 2 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். இதனால் கடைசி 12 பந்தில் 20 ரன்கள் தேவைப்பட்டது.

    19-வது ஓவரை அர்ஷ்தீப் சிங் வீசினார். இந்த ஓவரில் 4 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார்.

    இதனால் கடைசி ஓவரில் 16 ரன்கள் தேவைப்பட்டது. ஹர்திக் பாண்ட்யா வீசினார். மில்லர் எதிர்கொண்டார். முதல் பந்தை சிக்சருக்கு அடிக்க முயன்றார். ஆனால் சூர்யகுமார் யாதவ் சூப்பராக சிக்ஸ் லைனில் பிடித்தார். இதனால் மில்லர் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ரபடா 5-வது பந்தில் ஆட்டழிந்தார். இந்த ஓவரில் ஹர்திக் பாண்ட்யா 8 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுக்க இந்தியா 7 ரன் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 13 வருடங்களுக்குப் பின் ஐசிசி கோப்பையை வென்றுள்ளது.

    • கிளாசன் 23 பந்தில் அரைசதம் அடித்தார்.
    • மில்லர் 8 பந்தில் 15 ரன்கள் எடுத்து களத்தில் உள்ளார்.

    டி20 உலகக் கோப்பை போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா விராட் கோலி (76), அக்சர் பட்டேல் (47) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் 7 விக்கெட் இழப்பிற்கு 176 ரன்கள் குவித்தது.

    பின்னர் 177 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் தென்ஆப்பிரிக்காவின் டி காக், ஹென்ரிக்ஸ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். அர்ஷ்தீப் சிங் வீசிய முதல் ஓவரில் தென்ஆப்பிரிக்கா ஒரு பவுண்டரியுடன் 6 ரன்கள் அடித்தது.

    2-வது ஓவரை பும்ரா வீசினார். இந்த ஓவரின் 2-வது பந்தில் ஹென்ரிக்ஸ் க்ளீன் போல்டானார். ஹென்ரிக்ஸ் 5 பந்தில் 4 ரன் எடுத்து வெளியேறினார். அடுத்து மார்கிராம் களம் இறங்கினார். இவர் அர்ஷ்தீப் சிங் வீசிய 3-வது ஓவரின் 3வது பந்தில் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட்-யிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். மார்கிராம் 5 பந்தில் 4 ரன்கள் எடுத்தார். அடுத்து ஸ்டப்ஸ் களம் இறங்கினார். 3 ஓவர் முடிவில் தென்ஆப்பிரிக்கா 14 ரன்கள் எடுப்பதற்குள் 2 விக்கெட்டுகளை இழந்தது.

    4-வது ஓவரை பும்ரா வீசினார். இந்த ஓவரில் டி காக் ஒரு பவுண்டரி அடித்தார். பும்ரா இந்த ஓவரில் 8 ரன்கள் விட்டுக்கொடுத்தார். இதனால் தென்ஆப்பிரிக்கா 4 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 22 ரன்கள் எடுத்திருந்தது.

    5-வது ஓவரை அக்சர் பட்டேல் வீசினார். இந்த ஓவரில் அக்சர் பட்டேல் இரண்டு பவுண்டரியுடன் 10 ரன்கள் விட்டுக்கொடுத்தார். இதனால் தென்ஆப்பிரிக்கா 5 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 32 ரன்கள் எடுத்தது.

    6-வது ஓவரை குல்தீப் யாதவ் வீசினார். இந்த ஓவரில் ஒரு பவுண்டரியுடன் 10 ரன்கள் விட்டுக்கொடுக்க தென்ஆப்பிரிக்கா பவர்பிளேயான முதல் 6 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 42 ரன்கள் எடுத்துள்ளது. டி காக் 20 ரன்னும், ஸ்டப்ஸ் 12 ரன்னும் எடுத்திருந்தனர்.

    7-வது ஓவரை அக்சார் பட்டேல் வீசினார். இந்த ஓவரில் ஒரு பவுண்டரியுடன் 7 ரன்கள் விட்டுக்கொடுத்தார். 8-வது ஓவரை குல்தீப் யாதவ் வீசினார். இந்த ஓவரில் ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸ் உடன் 13 ரன்கள் விட்டுக்கொடுத்தார். தென்ஆப்பிரிக்கா 8 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 62 ரன்கள் எடுத்து.

    9-வது ஓவரை அக்சர் பட்டேல் வீசினார். இந்த ஓவரில் ஒரு சிக்ஸ் அடித்த ஸ்டப்ஸ் 5-வது பந்தில் போல்டானார். அவர் 21 பந்தில் 3 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 31 ரன்கள் எடுத்தார். அடுத்து கிளாசன் களம் இறங்கினார். தென்ஆப்பிரிக்கா 9 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 71 ரன்கள் எடுத்தது.

    10-வது ஓவரை ஹர்திக் பாண்ட்யா வீசினார். இந்த ஓவரில் ஒரு சிக்ஸ் உடன் 10 ரன்கள் விட்டுக்கொடுத்தார். இதனால் தென்ஆப்பிரிக்கா 10 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 81 ரன்கள் எடுத்தது.

    தென்ஆப்பிரிக்காவுக்கு கடைசி 10 ஓவரில் அதாவது 60 பந்தில் 96 ரன்கள் தேவைப்பட்டது. கைவசம் 7 விக்கெட் இருந்தது. 11-வது ஓவரை ஜடேஜா வீசினார். இந்த ஓவரில் கிளாசன் ஒரு சிக்ஸ் அடித்தார். இந்த ஓவரில் 12 ரன்கள் விட்டுக்கொடுத்தார்.

    12-வது ஓவரை குல்தீப் யாதவ் வீசினார். இந்த ஓவரில் கிளாசன் ஒரு சிக்ஸ் அடித்தார். அத்துடன் 11.3 ஓவரில் தெனஆப்பிரிக்கா 100 ரன்னைத் தொட்டது. இந்த ஓவரில் தென்ஆப்பிரிக்கா 8 ரன்கள் அடித்தது.

    13-வது ஓவரை அர்ஷ்தீப் சிங் வீசினார். இந்த ஓவரின் 2-வது பந்தை பவுண்டரிக்கு விரட்டிய டி காக், அடுத்த பந்தில் கேட்ச் ஆனார். அவர் 31 பந்தில் 39 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அப்போது தென்ஆப்பிரிக்கா 12.3 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 106 ரன்கள் எடுத்திருந்தது. 5-வது விக்கெட்டுக்கு கிளாசன் உடன் மில்லர் ஜோடி சேர்ந்தார். அப்போது 41 பந்தில் 70 ரன்கள் தேவைப்பட்டது.

    14-வது ஓவரை குல்தீப் யாதவ் வீசினார். அப்போது 42 பந்தில் 68 ரன்கள் தேவைப்பட்டது. இந்த ஓவரின் 5-வது பந்தில் பவுண்டரி அடித்த மில்லர், 6-வது பந்தை சிக்சருக்கு தூக்கினார். இந்த ஓவரில் 14 ரன்கள் விட்டுக்கொடுக்க தென்ஆப்பிரிக்கா 14 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 123 ரன்கள் அடித்தது.

    கடைசி 6 ஓவரில் அதாவது கடைசி 36 பந்தில் 54 ரன்கள் தேவைப்பட்டது. கிளாசன் மற்றும் மில்லர் இந்திய பந்து வீச்சை மிரட்டினர். 15-வது ஓவரை அக்சர் பட்டேல் வீசினார். இந்த ஓவரில் இரண்டு பவுண்டரி, இரண்டு சிக்சருடன் 24 ரன்கள் விட்டுக்கொடுக்க தென்ஆப்பிரிக்கா 15 ஓவரில் 147 ரன்கள் எடுத்தது.

    கடைசி 5 ஓவரில் அதாவது 30 பந்தில் 30 ரன்கள் தேவைப்பட்டது. பும்ரா 16-வது ஓவரை வீசினார். இந்த ஓவரின் 2-வது பந்தில் இரண்டு ரன் எடுத்து கிளாசன் 2 பவுண்டரி, 5 சிக்சருடன் 23 பந்தில் அரைசதம் அடித்தார். பும்ரா இந்த ஓவரில் 4 ரன்கள் மட்டும் விட்டுக்கொடுத்தார். இதனால் தென்ஆப்பிரிக்காவின் வெற்றிக்கு 24 பந்தில் 26 ரன்கள் தேவைப்பட்டது.

    17-வது ஓவரை ஹர்திக் பாண்ட்யா வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தில் கிளாசன் ஆட்டமிழந்தார். அவர் 27 பந்தில் 52 ரன்கள் எடுத்தார். இந்த ஓவரில் ஹர்திக் பாண்ட்யா 4 ரன்கள் விட்டுக்கொடுக்க தென்ஆப்பிரிக்காவுக்கு கடைசி 18 பந்தில் 22 ரன்கள் தேவை.

    • அக்சார் பட்டேல் 3 ஓவரில் 25 ரன்கள் விட்டுக்கொடுத்து 1 விக்கெட் வீழ்த்தினார்.
    • குல்தீப் யாதவ் 2 ஓவரில் 23 ரன்கள் விட்டுக் கொடுத்துள்ளார்.

    டி20 உலகக் கோப்பை போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா விராட் கோலி (76), அக்சர் பட்டேல் (47) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் 7 விக்கெட் இழப்பிற்கு 176 ரன்கள் குவித்தது.

    பின்னர் 177 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் தென்ஆப்பிரிக்காவின் டி காக், ஹென்ரிக்ஸ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். அர்ஷ்தீப் சிங் வீசிய முதல் ஓவரில் தென்ஆப்பிரிக்கா ஒரு பவுண்டரியுடன் 6 ரன்கள் அடித்தது.

    2-வது ஓவரை பும்ரா வீசினார். இந்த ஓவரின் 2-வது பந்தில் ஹென்ரிக்ஸ் க்ளீன் போல்டானார். ஹென்ரிக்ஸ் 5 பந்தில் 4 ரன் எடுத்து வெளியேறினார். அடுத்து மார்கிராம் களம் இறங்கினார். இவர் அர்ஷ்தீப் சிங் வீசிய 3-வது ஓவரின் 3வது பந்தில் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட்-யிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். மார்கிராம் 5 பந்தில் 4 ரன்கள் எடுத்தார். அடுத்து ஸ்டப்ஸ் களம் இறங்கினார். 3 ஓவர் முடிவில் தென்ஆப்பிரிக்கா 14 ரன்கள் எடுப்பதற்குள் 2 விக்கெட்டுகளை இழந்தது.

    4-வது ஓவரை பும்ரா வீசினார். இந்த ஓவரில் டி காக் ஒரு பவுண்டரி அடித்தார். பும்ரா இந்த ஓவரில் 8 ரன்கள் விட்டுக்கொடுத்தார். இதனால் தென்ஆப்பிரிக்கா 4 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 22 ரன்கள் எடுத்திருந்தது.

    5-வது ஓவரை அக்சர் பட்டேல் வீசினார். இந்த ஓவரில் அக்சர் பட்டேல் இரண்டு பவுண்டரியுடன் 10 ரன்கள் விட்டுக்கொடுத்தார். இதனால் தென்ஆப்பிரிக்கா 5 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 32 ரன்கள் எடுத்தது.

    6-வது ஓவரை குல்தீப் யாதவ் வீசினார். இந்த ஓவரில் ஒரு பவுண்டரியுடன் 10 ரன்கள் விட்டுக்கொடுக்க தென்ஆப்பிரிக்கா பவர்பிளேயான முதல் 6 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 42 ரன்கள் எடுத்துள்ளது. டி காக் 20 ரன்னும், ஸ்டப்ஸ் 12 ரன்னும் எடுத்திருந்தனர்.

    7-வது ஓவரை அக்சார் பட்டேல் வீசினார். இந்த ஓவரில் ஒரு பவுண்டரியுடன் 7 ரன்கள் விட்டுக்கொடுத்தார். 8-வது ஓவரை குல்தீப் யாதவ் வீசினார். இந்த ஓவரில் ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸ் உடன் 13 ரன்கள் விட்டுக்கொடுத்தார். தென்ஆப்பிரிக்கா 8 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 62 ரன்கள் எடுத்து.

    9-வது ஓவரை அக்சர் பட்டேல் வீசினார். இந்த ஓவரில் ஒரு சிக்ஸ் அடித்த ஸ்டப்ஸ் 5-வது பந்தில் போல்டானார். அவர் 21 பந்தில் 3 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 31 ரன்கள் எடுத்தார். அடுத்து கிளாசன் களம் இறங்கினார். தென்ஆப்பிரிக்கா 9 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 71 ரன்கள் எடுத்தது.

    10-வது ஓவரை ஹர்திக் பாண்ட்யா வீசினார். இந்த ஓவரில் ஒரு சிக்ஸ் உடன் 10 ரன்கள் விட்டுக்கொடுத்தார். இதனால் தென்ஆப்பிரிக்கா 10 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 81 ரன்கள் எடுத்துள்ளது. டி காக் 23 பந்தில் 30 ரன்னுடனும், கிளாசன் 7 பந்தில் 8 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

    • டி காக் 29 ரன்கள் அடித்து களத்தில் உள்ளார்.
    • ஸ்டப்ஸ் 21 பந்தில் 31 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

    டி20 உலகக் கோப்பை போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா விராட் கோலி (76), அக்சர் பட்டேல் (47) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் 7 விக்கெட் இழப்பிற்கு 176 ரன்கள் குவித்தது.

    பின்னர் 177 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் தென்ஆப்பிரிக்காவின் டி காக், ஹென்ரிக்ஸ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். அர்ஷ்தீப் சிங் வீசிய முதல் ஓவரில் தென்ஆப்பிரிக்கா ஒரு பவுண்டரியுடன் 6 ரன்கள் அடித்தது.

    2-வது ஓவரை பும்ரா வீசினார். இந்த ஓவரின் 2-வது பந்தில் ஹென்ரிக்ஸ் க்ளீன் போல்டானார். ஹென்ரிக்ஸ் 5 பந்தில் 4 ரன் எடுத்து வெளியேறினார். அடுத்து மார்கிராம் களம் இறங்கினார். இவர் அர்ஷ்தீப் சிங் வீசிய 3-வது ஓவரின் 3வது பந்தில் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட்-யிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். மார்கிராம் 5 பந்தில் 4 ரன்கள் எடுத்தார். அடுத்து ஸ்டப்ஸ் களம் இறங்கினார். 3 ஓவர் முடிவில் தென்ஆப்பிரிக்கா 14 ரன்கள் எடுப்பதற்குள் 2 விக்கெட்டுகளை இழந்தது.

    4-வது ஓவரை பும்ரா வீசினார். இந்த ஓவரில் டி காக் ஒரு பவுண்டரி அடித்தார். பும்ரா இந்த ஓவரில் 8 ரன்கள் விட்டுக்கொடுத்தார். இதனால் தென்ஆப்பிரிக்கா 4 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 22 ரன்கள் எடுத்திருந்தது.

    5-வது ஓவரை அக்சர் பட்டேல் வீசினார். இந்த ஓவரில் அக்சர் பட்டேல் இரண்டு பவுண்டரியுடன் 10 ரன்கள் விட்டுக்கொடுத்தார். இதனால் தென்ஆப்பிரிக்கா 5 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 32 ரன்கள் எடுத்தது.

    6-வது ஓவரை குல்தீப் யாதவ் வீசினார். இந்த ஓவரில் ஒரு பவுண்டரியுடன் 10 ரன்கள் விட்டுக்கொடுக்க தென்ஆப்பிரிக்கா பவர்பிளேயான முதல் 6 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 42 ரன்கள் எடுத்துள்ளது. டி காக் 20 ரன்னும், ஸ்டப்ஸ் 12 ரன்னும் எடுத்திருந்தனர்.

    7-வது ஓவரை அக்சார் பட்டேல் வீசினார். இந்த ஓவரில் ஒரு பவுண்டரியுடன் 7 ரன்கள் விட்டுக்கொடுத்தார். 8-வது ஓவரை குல்தீப் யாதவ் வீசினார். இந்த ஓவரில் ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸ் உடன் 13 ரன்கள் விட்டுக்கொடுத்தார். தென்ஆப்பிரிக்கா 8 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 62 ரன்கள் எடுத்து.

    9-வது ஓவரை அக்சர் பட்டேல் வீசினார். இந்த ஓவரில் ஒரு சிக்ஸ் அடித்த ஸ்டப்ஸ் 5-வது பந்தில் போல்டானார். அவர் 21 பந்தில் 3 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 31 ரன்கள் எடுத்தார். அடுத்து கிளாசன் களம் இறங்கினார்.

    தென்ஆப்பிரிக்கா 9 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 71 ரன்கள் எடுத்துள்ளது. டி காக் 22 பந்தில் 29 ரன்கள் எடுத்து களத்தில் உள்ளார்.

    • பும்ரா பந்தில் ஹென்ரிக்ஸ் க்ளீன் போல்டானார்.
    • மார்கிராம் அர்ஷ்தீப் சிங் பந்தில் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

    டி20 உலகக் கோப்பை போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா விராட் கோலி (76), அக்சர் பட்டேல் (47) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் 7 விக்கெட் இழப்பிற்கு 176 ரன்கள் குவித்தது.

    பின்னர் 177 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் தென்ஆப்பிரிக்காவின் டி காக், ஹென்ரிக்ஸ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். அர்ஷ்தீப் சிங் வீசிய முதல் ஓவரில் தென்ஆப்பிரிக்கா ஒரு பவுண்டரியுடன் 6 ரன்கள் அடித்தது.

    2-வது ஓவரை பும்ரா வீசினார். இந்த ஓவரின் 2-வது பந்தில் ஹென்ரிக்ஸ் க்ளீன் போல்டானார். ஹென்ரிக்ஸ் 5 பந்தில் 4 ரன் எடுத்து வெளியேறினார். அடுத்து மார்கிராம் களம் இறங்கினார். இவர் அர்ஷ்தீப் சிங் வீசிய 3-வது ஓவரின் 3வது பந்தில் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட்-யிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். மார்கிராம் 5 பந்தில் 4 ரன்கள் எடுத்தார். அடுத்து ஸ்டப்ஸ் களம் இறங்கினார். 3 ஓவர் முடிவில் தென்ஆப்பிரிக்கா 14 ரன்கள் எடுப்பதற்குள் 2 விக்கெட்டுகளை இழந்தது.

    4-வது ஓவரை பும்ரா வீசினார். இந்த ஓவரில் டி காக் ஒரு பவுண்டரி அடித்தார். பும்ரா இந்த ஓவரில் 8 ரன்கள் விட்டுக்கொடுத்தார். இதனால் தென்ஆப்பிரிக்கா 4 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 22 ரன்கள் எடுத்திருந்தது.

    5-வது ஓவரை அக்சர் பட்டேல் வீசினார். இந்த ஓவரில் அக்சர் பட்டேல் இரண்டு பவுண்டரியுடன் 10 ரன்கள் விட்டுக்கொடுத்தார். இதனால் தென்ஆப்பிரிக்கா 5 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 32 ரன்கள் எடுத்தது.

    6-வது ஓவரை குல்தீப் யாதவ் வீசினார். இந்த ஓவரில் ஒரு பவுண்டரியுடன் 10 ரன்கள் விட்டுக்கொடுக்க தென்ஆப்பிரிக்கா பவர்பிளேயான முதல் 6 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 42 ரன்கள் எடுத்துள்ளது. டி காக் 20 ரன்னுடனும், ஸ்டப்ஸ் 12 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

    • 23 ஓவர்களில் சராசரியாக 4.08 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 11 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
    • தற்போதைய இந்திய அணியின் வீரர்களையும், ஒட்டுமொத்த உடற்தகுதி நிலைகளையும் பாராட்டியுள்ளார்.

    இந்தியாவுக்கு முதன்முறையாக உலகக் கோப்பையை வாங்கி கொடுத்த கேப்டன் கபில் தேவ், ஜஸ்பிரித் பும்ரா எனது காலத்தில் இருந்ததைவிட 1000 மடங்கு சிறந்த பந்து வீச்சாளராக திகழ்கிறார் என புகழாரம் சூட்டியுள்ளார்.

    தற்போது நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பையில் சிறப்பாக செயல்பட்டு வரும் பும்ரா, இதுவரை வீசிய 23 ஓவர்களில் சராசரியாக 4.08 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 11 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

    "என்னை விட பும்ரா 1000 மடங்கு சிறந்தவர். தற்போது இளம் பையன்கள் எங்களை விட மிகவும் சிறந்தவர்கள். எங்களுக்கு அதிக அனுபவம் இருந்தது. அவர்கள் சிறந்தவர்கள்" என்று கபில் பிரபல செய்தி நிறுவன பேட்டியில் தெரிவித்துள்ளார்.

    சர்வதேச கிரிக்கெட்டில் இப்போது சிறந்த வேகப்பந்து வீச்சாளராக கருதப்படும் பும்ரா, இந்தியாவுக்காக 26 டெஸ்ட் போட்டிகளில் ஒரு ஓவருக்கு மூன்று ரன்களுக்கு குறைவாகவே விட்டுக்கொடுத்து 159 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 89 ஒருநாள் போட்டிகளில் 149 விக்கெட்டுகளையும், டி20 போட்டிகளில் 68 போட்டிகளில் 85 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார்.


    434 டெஸ்ட் விக்கெட்டுகள் என்ற உலக சாதனையுடன் ஓய்வு பெற்ற கபில் தேவ், கிரிக்கெட் வரலாற்றில் மிகச்சிறந்த ஆல்ரவுண்டர்களில் ஒருவராக கருதப்படுகிறார். அவர் ஒருநாள் கிரிக்கெட்டிலும் வெற்றியைப் பெற்றார். அவரது 253 விக்கெட்டுகளைப் பெற்றார்.

    1983-ல் இந்தியாவை முதல் உலகக் கோப்பை பட்டத்திற்கு அழைத்துச் சென்ற 65 வயதான கபில் தேவ், தற்போதைய இந்திய அணியின் வீரர்களையும், ஒட்டுமொத்த உடற்தகுதி நிலைகளையும் பாராட்டியுள்ளார்.

    தற்போதைய இந்திய அணியினரை "அவர்கள் மிகவும் சிறந்தவர்கள். அவர்கள் உடற்தகுதி உடையவர்கள். அவர்கள் மிகவும் கடின உழைப்பாளிகள். அவர்கள் அற்புதமானவர்கள்" என்று கபில்தேவ் கூறியுள்ளார்.

    • சூப்பர் 8 சுற்றில் இந்திய அணி ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது.
    • நாளை நடக்கும் அரையிறுதியில் இந்திய அணி இங்கிலாந்துடன் மோதுகிறது.

    செயின்ட் வின்சென்ட்:

    செயின்ட் வின்சென்ட் நகரில் நடந்த சூப்பர் 8 போட்டியில் இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதின. முதலில் ஆடிய இந்தியா 205 ரன்களைக் குவித்தது. கேப்டன் ரோகித் சர்மா 92 ரன்கள் குவித்தார்.

    அடுத்து ஆடிய ஆஸ்திரேலியா 7 விக்கெட்டுக்கு 181 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்து டி20 உலகக் கோப்பையில் இருந்து வெளியேறியது. டிராவிஸ் ஹெட் 76 ரன்கள் எடுத்தார்.

    இந்தியா சார்பில் அதிகபட்சமாக அர்ஷ்தீப் சிங் 3 விக்கெட் எடுத்தார்.

    நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் ஜஸ்ப்ரித் பும்ராவுக்கு நிகராக இடதுகை வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். இதுவரை 6 போட்டிகளில் விளையாடி 15 விக்கெட்டுகள் எடுத்துள்ள அவர், டி20 உலகக் கோப்பையில் அதிக விக்கெட்டுகள் எடுத்த இந்திய வீரராக சாதனை படைத்துள்ளார்.

    இந்நிலையில், தான் விக்கெட்டுகள் வீழ்த்தியது குறித்து அர்ஷ்தீப் சிங் கூறியதாவது:

    அனைத்து பாராட்டுகளும் ஜஸ்பிரீத் பும்ராவுக்கு செல்லவேண்டும் என நினைக்கிறேன். ஏனெனில் அவர் பேட்ஸ்மேன்கள் மீது அதிகப்படியான அழுத்தத்தை போடுகிறார்.

    அவர் தன்னுடைய ஓவரில் 3 அல்லது 4 ரன்கள் மட்டுமே கொடுக்கிறார். எனவே எதிரணி பேட்ஸ்மேன்கள் என்னுடைய ஓவரில் ரன்கள் அடிக்க வருகிறார்கள். அப்போது நான் என்னுடைய சிறந்த பந்தை வீச முயற்சிக்கிறேன். அதனால் எனக்கு விக்கெட் விழுவதற்கான வாய்ப்பு நிறைய கிடைக்கிறது.

    ஏனெனில் எதிர்ப்புறம் ரன்கள் வருவதில்லை. அதனால் ரன் ரேட் அதிகமாக உயர்கிறது. எனவே எதிரணியினர் எனக்கு எதிராக அதிக ரிஸ்க் எடுத்து விளையாட முயற்சிக்கின்றனர். அதனால் எனக்கு அங்கே விக்கெட்டுகள் கிடைப்பதற்கான வாய்ப்பு எப்போதும் இருக்கிறது. எனவே நான் எடுத்துள்ள விக்கெட்டுகளுக்கான அனைத்து பாராட்டுக்களும் பும்ராவை சேரும் என தெரிவித்தார்.

    • டெஸ்ட், ஒருநாள், 20 ஓவர் போட்டிகள் என மூன்று வடிவிலான கிரிக்கெட்டிலும் பும்ரா அசத்தி வருகிறார்.
    • ஐசிசி-யின் டெஸ்ட் போட்டியின் பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் பும்ரா முதல் இடத்தை பிடித்தார்.

    இந்திய கிரிக்கெட்டின் தலைசிறந்த வீரராக பும்ரா திகழ்ந்து வருகிறார். டெஸ்ட், ஒருநாள், 20 ஓவர் போட்டிகள் என மூன்று வடிவிலான கிரிக்கெட்டிலும் அசத்தி வருகிறார்.

    கடந்த பிப்ரவரி மாதம் ஐசிசி-யின் டெஸ்ட் போட்டியின் பந்து வீச்சாளர்கள் தரவரிசையில் பும்ரா முதல் இடத்தை பிடித்தார். முதன்முறையாக பும்ரா முதல் இடத்திற்கு முன்னேறினார்.

    டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் இதுவரை முதல் இடத்தை பிடித்தது கிடையாது. தற்போது பும்ரா முதல் இடத்தை பிடித்து வரலாற்று சாதனையை பதிவு செய்தார்.

    தற்போது நடந்து வரும் 20 ஓவர் உலகக்கோப்பையில் இந்திய அணியின் தொடர் வெற்றிகளுக்கு பும்ரா காரணமாக இருக்கிறார்.

    இந்நிலையில், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) தனது பேஸ்புக் மற்றும் எக்ஸ் பக்கத்தில் கவர் போட்டோவாக பும்ராவின் புகைப்படத்தை வைத்து பும்ராவுக்கு பெருமை சேர்ந்துள்ளது.

    ×