என் மலர்
நீங்கள் தேடியது "Wasim Akram"
- இந்தியா கடந்த 4 - 5 வருடங்களாக ஒவ்வொரு துறைகளிலும் பாகிஸ்தானை விட சிறப்பாக விளையாடுகிறது.
- கிரிக்கெட்டில் வெல்வதும் தோற்பதும் விளையாட்டின் அங்கம் என்பதை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது.
ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்றைய ஆட்டத்தில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதின. இதில் முதலில் விளையாடிய பாகிஸ்தான் 172 ரன்களை இலக்காக நிர்ணயம் செய்தது. இதனையடுத்து விளையாடிய இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதன்மூலம் கடைசியாக பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடிய 7 போட்டிகளில் இந்தியா 7 தொடர் வெற்றிகளை பெற்றுள்ளது. கடைசியாக இதே துபாயில் 2021 டி20 உலகக்கோப்பையில் இந்தியாவை பாகிஸ்தான் அணி வீழ்த்தியது.
அதனை தொடர்ந்து 2022, 2023, 2024, 2025 வருடங்களில் நடைபெற்ற ஐசிசி மற்றும் ஆசியக் கோப்பைகளில் இந்தியா தொடர்ந்து 7-வது முறையாக பாகிஸ்தானை தோற்கடித்துள்ளது.
இந்நிலையில் கடந்த 5 வருடங்களாகவே பாகிஸ்தான் அணி 3 துறைகளிலும் இந்தியாவிடம் அடிவாங்கி படுதோல்விகளை சந்திப்பதாக முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரம் வேதனை தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
நான் என்னுடைய இதயத்தில் இருந்து பேசப்போகிறேன். தற்போதைய பாகிஸ்தான் அணியைப் பார்ப்பது கடினமாக இருக்கிறது. ஒரு முன்னாள் வீரராக கிரிக்கெட்டில் வெல்வதும் தோற்பதும் விளையாட்டின் அங்கம் என்பதை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது.
ஆனால் இந்தியா கடந்த 4 - 5 வருடங்களாக ஒவ்வொரு துறைகளிலும் பாகிஸ்தானை விட சிறப்பாக விளையாடுகிறது. இந்தியாவுக்கு எதிராக நாம் அங்கேயும் இங்கேயும் ஓரிரு போட்டிகளில் மட்டுமே வென்றோம். உண்மையில் இந்தியா அற்புதமாக விளையாடுகிறார்கள். ஒரு போட்டியில் சில கேட்ச்கள் தவற விடப்படுவது பரவாயில்லை. ஆனால் முதல் 10 ஓவரில் 91 ரன்கள் எடுத்த உங்களால் 200 தொட முடியவில்லை என்பதைப் பற்றி சொல்வதற்கு எதுவுமில்லை.
என்று கூறினார்.
- வாசிம் அக்ரம் 104 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 414 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.
- பும்ரா 48 டெஸ்ட் போட்டிகளில் 219 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.
பாகிஸ்தான் நாட்டின் நட்சத்திர வேகபந்து வீச்சாளராக திகழ்ந்தவர்கள் வாசிம் அக்ரம். இடது கை வேகப்பந்து வீச்சாளரான வாசிம் அக்ரம், பந்தை ஸ்விங் செய்வதில் வல்லவர். இவருக்கு இணையான ஸ்விங் பவுலர் இல்லை எனலாம். அதேவேளையில் யார்க்கர் பந்துகளும் வீசுவதில் வல்லவர். இம்ரான் கான், வாசிம் அக்கரம், வக்கார் யூனிஸ் ஆகியோர் பாகிஸ்தான் அணிக்காக விளையாடியபோது, தலைசிறந்த வேகப்பந்து அணியாக திகழ்ந்தது.
தற்போதைய காலத்தில் பும்ரா போன்ற வீரர்கள் அபாரமாக பந்து வீசி வருகிறார்கள். அந்த காலத்து கிரிக்கெட் வீரர்களுடன் தற்போதைய வீரர்களை ரசிகர்கள் ஒப்பிட்டு வருகிறார்கள். குறிப்பாக வாசிம் அக்ரம் உடன், பும்ராவை ஒப்பிட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் 1990-களையும், தற்போதைய காலக்கட்டத்தை ஒப்பீடு செய்வது குறித்து வாசிம் அக்ரம் கூறியதாவது:-
1990 மற்றும் இன்றைய காலக்கட்டத்தை ஒப்பிட்டுப் பார்ப்பது அர்த்தமற்றது. நான் இடது கை பழக்கம் உள்ளவனாக இருந்தபோது, பும்ரா வலது கை பழக்கம் உள்ளவர். சமூக ஊடகங்களில் மக்கள் வாதிடுவதை விரும்புகிறார்கள்.
இவ்வாறு வாசிம் அக்ரம் தெரிவித்துள்ளார்.
வாசிம் அக்ரம் 104 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 414 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். 356 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 502 விக்கெட்டுகள் சாய்த்துள்ளார். வாசிம் அக்ரம் 1985 ஆண்டு முதல் 2002ஆம் அண்டு வரை 17 வருடங்கள் டெஸ்ட் கிரிக்கெட் விளையாடியுள்ளார்.
பும்ரா 48 டெஸ்ட் போட்டிகளில் 219 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். 89 ஒருநாள் போட்டிகளில் 149 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். பும்ரா 2018ஆம் ஆண்டு டெஸ்டில் அறிமுகமாகி விளையாடி வருகிறார்.
- இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் முகமது சிராஜ் 23 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.
- முகமது சிராஜை தற்போதைய இந்தியாவின் சிறந்த வேகப்பந்து வீச்சாளர் என்று அவர் வர்ணித்துள்ளார்.
இந்திய அணி சமீபத்தில் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. இந்த தொடர் 2-2 என்ற கணக்கில் தொடர் சமனில் முடிந்தது. மேலும் இத்தொடரின் கடைசி போட்டியில் முகமது சிராஜ் ஆட்டநாயகன் விருதையும், இந்தியாவின் சுப்மன் கில் மற்றும் இங்கிலாந்தின் ஹாரி புரூக் ஆகியோர் தொடர் நாயகன் விருதுகளையும் வென்றனர்.
இந்த தொடரில் முகமது சிராஜ் 23 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.
இந்நிலையில் இந்த தொடருக்கு பிறகு இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜை பாகிஸ்தான் அணியின் முன்னாள் ஜாம்பவான் வசிம் அக்ரம் பாராட்டியுள்ளார்.
அதிலும் குறிப்பாக பும்ராவைத் தவிர்த்து, முகமது சிராஜை தற்போதைய இந்தியாவின் சிறந்த வேகப்பந்து வீச்சாளர் என்று அவர் வர்ணித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
கடைசி நாளில் நான் மிகவும் ஆர்வமாக இருந்தேன். அது நம்ப முடியாத முயற்சி. 186 ஓவர்கள் பந்து வீசிய பிறகும், கடைசி நாளில் இவ்வளவு கோபத்தை வெளிப்படுத்துவது சிராஜின் உற்சாகம் மற்றும் ஆர்வத்தின் அறிகுறியாகும் என்று பாராட்டியுள்ளார்.
பணிச்சுமை மேலாண்மை காரணமாக இறுதித் தேர்வில் பும்ரா பங்கேற்கவில்லை என்று பல இடங்களில் விமர்சிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
- ஐபிஎல் தொடரில் இளம் வீரர்களுக்கான சம்பளத்தை குறைத்துக் கொடுக்க வேண்டும்.
- முதல் ஐபிஎல் தொடரில் தொடர்ச்சியாக 145 கி.மீ வேகத்தில் வீசிய ஆவேஷ் கானுடைய வேகம் இப்போது 130 - 135 என குறைந்து விட்டது.
டி20 உலகக் கோப்பையில் உலகின் நம்பர் ஒன் கிரிக்கெட் டி20 அணியாக களமிறங்கிய ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா பைனலுக்கு கூட தகுதி பெறாமல் வெளியேறியுள்ளது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்துள்ளது.
இத்தொடரில் சூப்பர் 12 சுற்றில் தேவையான வெற்றிகளுடன் அரையிறுதிக்கு தகுதி பெற்ற இந்தியா அழுத்தமான நாக் அவுட் போட்டியில் வழக்கம் போல சொதப்பி படுதோல்வியை சந்தித்து வெளியேறியது.
ஐபிஎல் தொடரில் பணம் சம்பாதிக்கும் இந்திய வீரர்கள் நாட்டுக்காக விளையாடும் போது முழுமூச்சுடன் போராடுவதில்லை என்று ரசிகர்கள் குற்றம் சாட்டுகிறார்கள். இந்நிலையில் தரமான அடுத்த தலைமுறை வீரர்களை உருவாக்கும் நோக்கத்தில் 2008-ல் ஐபிஎல் தொடர் உருவாக்கப்பட்ட பின் இந்தியா இதுவரை ஒரு டி20 உலக கோப்பையை கூட வெல்லவில்லை என்று முன்னாள் பாகிஸ்தான் வீரர் வாசிம் அக்ரம் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது பற்றி அவர் கூறியதாவது:-
இந்தியா ஐபிஎல் தொடரால் பயனடையும் என்று அனைவரும் நினைத்தார்கள். இந்தியா 2007இல் டி20 உலக கோப்பையை வென்றது. ஆனால் ஐபிஎல் தொடங்கப்பட்ட பின் அவர்கள் இன்னும் டி20 உலக கோப்பையை வெல்லவில்லை. 2011இல் அதுவும் சொந்த மண்ணில் 50 ஓவர் கோப்பையை வென்றார்கள்.
எனவே இந்த இடத்தில் கேள்வி எழுகிறது. இதனால் வெளிநாட்டு தொடர்களில் தங்களது வீரர்களை அனுமதிக்கும் வகையில் இந்தியா தனது அணுகுமுறையை மாற்றுமா? மேலும் ஆசிய கோப்பையிலேயே இந்திய பவுலர்களிடம் ஒரு மாற்றத்தை கண்டேன்.
அதாவது ஐபிஎல் தொடருக்கு பின் அவர்களது வேகம் குறைந்து விட்டது. எடுத்துக்காட்டாக முதல் ஐபிஎல் தொடரில் தொடர்ச்சியாக 145 கி.மீ வேகத்தில் வீசிய ஆவேஷ் கானுடைய வேகம் இப்போது 130 - 135 என குறைந்து விட்டது. எனவே அவர் ஐபிஎல் தொடரில் 12 – 13 கோடி ரூபாய்களை சம்பாதித்து விட்டதால் இந்த வேகம் குறைந்து விட்டதா என்பதை பிசிசிஐ ஆராய வேண்டும்.
மேலும் ஐபிஎல் தொடரில் இளம் வீரர்களுக்கான சம்பளத்தை குறைத்துக் கொடுக்க வேண்டும். அப்போது தான் அவர்கள் பசியுடன் சிறப்பாக செயல்படுவார்கள். ஏனெனில் பாகிஸ்தானில் ஒரு மாதத்தில் நான் 24 கோடிகளை சம்பாதித்தால் எனது வேலை முடிந்து விட்டதாக நினைத்து நாட்டுக்காக முழு மூச்சுடன் விளையாட மாட்டேன்.
என்று கூறினார்.
- வாசிம் அக்ரம் சலீம் மாலிக் கேப்டனாக இருந்தபோது சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகம் ஆனார்
- நான் சுயநலவாதியாக இருந்திருந்தால், எனது தலைமையின் கீழ் அவர் எப்படி அறிமுகம் ஆகியிருக்க முடியும்?.
பாகிஸ்தான் அணியின் தலைசிறந்த வேகப்பந்து வீச்சாளரான திகழ்ந்தவர் வாசிம் அக்ரம். 104 டெஸ்ட் போட்டிகளில் 414 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். 356 ஒருநாள் போட்டிகளில் 502 விக்கெட்டுகள் சாய்த்துள்ளார்.
56 வயதான வாசிம் அக்ரம் தனது சுயசரிதை புத்தகத்தில் பல்வேறு விசயங்களை பகிர்ந்துள்ளார். தான் முதன்முதலாக பாகிஸ்தான் அணியில் அறிமுகம் ஆனபோது, அப்போதைய கேப்டன் சலீம் மாலிக் தன்னை வேலைக்காரன் போன்று நடத்தினார். துணிகள் மற்றும் காலணிகளை சுத்தம் செய்ய சொன்னார் எனக் குறிப்பிட்டிருந்தார்.
வாசிம் அக்ரமின் இந்த குற்றச்சாட்டு கிரிக்கெட் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் வாசிம் அக்ரமின் குற்றச்சாட்டிற்கு சலீம் மாலிக் பதில் அளித்துள்ளார்.
சலீம் மாலிக் அளித்துள்ள விளக்கத்தில் கூறியிருப்பதாவது:-
அவருடைய கருத்துகள் மற்றும் எந்த அர்த்தத்தில் அவர் அதை எழுதினார் என்பதைப் பற்றிய அவரது பார்வையை நான் அவரிடம் கேட்க விரும்புகிறேன். பாகிஸ்தான் அணி தொடர்களில் விளையாட செல்லும்போது அங்கு சலவை மெசின் பயன்படுத்தப்படும். நாங்கள் யாரும் கைகளால் துணிகளை துவைப்பது கிடையாது.
நான் அவரிடம் இதுகுறித்து இன்றும் பேசவில்லை. அந்த புத்தகத்தையும் படிக்கவில்லை. அதனால் அதுகுறித்து முழுமையாக கருத்து கூற விரும்பவில்லை. நாங்கள் ஒரு சகாக்கள். இணைந்து நேரத்தை செலவழித்துள்ளோம். ஆகவே, நான் எந்தவிதமாக சர்ச்சையையும் ஏற்படுத்த விரும்பவில்லை.
நான் சுயநலவாதியாக இருந்திருந்தால், எனது தலைமையின் கீழ் அவர் எப்படி அறிமுகம் ஆகியிருக்க முடியும்?. நான் ஏன் அவரை பந்து வீச அனுமதிக்க வேண்டும்.
துணி துவைப்பு, மசாஜ் செய்வது குறித்து அவரை பேசியது, அவர் அவரையே அவமதித்துள்ளார். இதுவரை அவரிடம் பேசவில்லை. எந்த அர்த்தத்தில் அவர் அப்படி எழுதினார் என்பது எனக்குத் தெரியவில்லை.
இவ்வாறு சலீம் மாலிக் தெரிவித்துள்ளார்.
- கிரிக்கெட் வாரியம் மாறினால் ஒப்பந்தமும் முடிந்து விடும் என்று எல்லோரும் பயப்படுகிறார்கள்.
- வெளிநாட்டு பயிற்சியாளர் கிடைக்கவில்லை என்றால் பாகிஸ்தான் பயிற்சியாளர் சேவையை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவராக நஜிம் சேத்தி பொறுப்பேற்ற பிறகு பல மாற்றங்கள் செய்யப்பட்டது. பல நிர்வாகிகள் நீக்கப்பட்டனர்.
அப்ரிடி தலைமையில் புதிய தேர்வு குழு அமைக்கப்பட்டது.
பாகிஸ்தான் அணியின் தலைமை பயிற்சியாளராக தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த மிக்கி ஆர்தரை நியமிக்க பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் விரும்பியது. ஆனால் அவர் பாகிஸ்தான் பயிற்சியாளராக இருக்க விரும்பவில்லை.
நம்பகத் தன்மையற்ற சூழல் காரணமாக ஆர்தர் பாகிஸ்தான் செல்ல மறுக்கிறார். கடந்த கால சம்பவமும் ஒரு காரணமாகும்.
வெளிநாட்டு பயற்சியாளர்கள் பாகிஸ்தான் வரமறுப்பது குறித்து பாகிஸ்தான் முன்னாள் கேப்டனும், முன்னாள் வேகப்பந்து வீரருமான வாசிம் அக்ரம் கூறியதாவது:-
என்னை கேட்டால் வெளிநாட்டு பயிற்சியாளர்கள் வரமாட்டார்கள் என்று சொல்லி இருப்பேன். கிரிக்கெட் வாரியம் மாறினால் ஒப்பந்தமும் முடிந்து விடும் என்று எல்லோரும் பயப்படுகிறார்கள்.
வெளிநாட்டு பயிற்சியாளர் கிடைக்கவில்லை என்றால் பாகிஸ்தான் பயிற்சியாளர் சேவையை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்தியா - ஆஸ்திரேலியா மோத உள்ளன.
- கூடுதல் பவுன்சை தான் ஆஸ்திரேலிய அணி வீரர்கள் விரும்புவார்கள்.
லண்டன்:
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நாளை தொடங்க உள்ளது. இறுதிப்போட்டியில் இந்தியா - ஆஸ்திரேலியா மோத உள்ளன.
இந்நிலையில் இந்திய வேகப்பந்து வீச்சாளர்களுக்கு பாகிஸ்தான் முன்னாள் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் வாசிம் அக்ரம் சில டிப்ஸ்களை வழங்கியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-

இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் அனுபவம் வாய்ந்தவர்கள். புதிய பந்தை அப்படியே கொண்டு செல்லக்கூடாது. முதல் 10 முதல் 15 ஓவர்களுக்கு பந்து அதிகளவில் ஸ்விங் ஆகும். அந்த குறிப்பிட்ட ஓவர்களில் கூடுதல் ரன்களை கொடுக்க வேண்டாம். அதேபோன்று பந்து கூடுதலாக பவுன்ஸ் ஆனால் மகிழ்ச்சி அடைய வேண்டாம். அமைதியாக இருங்கள்.
ஏனெனில் கூடுதல் பவுன்சை தான் ஆஸ்திரேலிய அணி வீரர்கள் விரும்புவார்கள். இந்த மைதானத்தின் தன்மை எப்போதுமே ஆசிய நாடுகளுக்கு சாதகமாகவே இருக்கும். ஆனால் இந்த மைதானத்தில் ஆகஸ்ட் மாதம் அல்லது செப்டம்பர் மாதம் தான் அந்த சூழல் ஏற்படும். ஆனால் நாம் ஜூன் மாதத்திலேயே இங்கு வந்துள்ளதால் மைதானத்தின் தட்பவெட்பமும் சரி, சூழலும் சரி வித்தியாசமாக இருக்கும்.
எனவே பந்து ஸ்விங் மற்றும் பவுன்ஸ் ஆனால் மகிழ்ச்சி அடையாமல் விக்கெட்டை எடுக்கும் கட்டுக்கோப்புடன் தொடர்ச்சியாக பந்துவீச வேண்டும். எந்த ஒரு இடத்திலும் கவனக் குறைவு ஏற்படாமல் வெற்றி முனைப்புடன் பந்துவீச வேண்டும்.
என வாசிம் அக்ரம் கூறினார்.
- சொந்த மண்ணில் விளையாடுவது அவர்களுக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தும்.
- 2011-ல் இந்தியா வென்றது. ஆனால் அதன் காரணமாகவே அவர்களுக்கு மற்ற அணிகளை காட்டிலும் எப்போதுமே அதிகப்படியான அழுத்தம் இருக்கும்.
ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் அக்டோபர் முதல் இந்தியாவில் நடைபெற உள்ளது. உலக கோப்பையை வெல்லும் முனைப்பில் இந்திய அணி திவிரம் காட்டி உள்ளது. ஏனெனில் இந்தியா 2013-க்குப்பின் தொடர்ந்து 10 வருடங்களாக ஐசிசி கோப்பைகளை வாங்க முடியாமல் இந்தியா திணறி வருகிறது. அதனால் இம்முறை சொந்த மண்ணில் அந்த தொடர் தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து கோப்பையை வென்று விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்க ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா களமிறங்க உள்ளது.
இந்நிலையில் இந்த தொடரில் இதர அணிகளை காட்டிலும் சொந்த மண்ணில் சொந்த ரசிகர்களுக்கு முன்னிலையில் விளையாடுவதால் கோப்பையை வென்றே தீர வேண்டும் என்பது இந்தியாவுக்கு மிகப்பெரிய அழுத்தத்தை கொடுக்கும் என்று முன்னாள் பாகிஸ்தான் கேப்டன் வாசிம் அக்ரம் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
நிச்சயமாக இந்தியாவுக்கு வெற்றிக்கான வாய்ப்பு இருக்கிறது. குறிப்பாக மிகவும் கவரும் வகையில் கனவில் வீசுவது போல அசத்தும் முகமது ஷமி அவர்களுக்கு பலத்தை சேர்க்கிறார். பும்ரா குணமடைந்து விளையாடுவது இந்தியாவுக்கு பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தும். அதுபோக அவர்களிடம் அஸ்வின், ஜடேஜா போன்ற நல்ல சுழல் பந்து வீச்சு ஆல் ரவுண்டர்கள் இருக்கின்றனர்.
அதில் யார் விளையாடுவார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். மேலும் இந்திய அணியில் நிறைய நல்ல வீரர்கள் இருக்கின்றனர். ஆனாலும் சொந்த மண்ணில் விளையாடுவது அவர்களுக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தும்.
2011-ல் இந்தியா வென்றது. ஆனால் அதன் காரணமாகவே அவர்களுக்கு மற்ற அணிகளை காட்டிலும் எப்போதுமே அதிகப்படியான அழுத்தம் இருக்கும். பாகிஸ்தானுக்கும் அதே நிலைமை தான். ஒருவேளை சொந்த மண்ணில் விளையாடினாலும் பாகிஸ்தான் மீதும் நிச்சயமாக அழுத்தம் இருக்கும்.
என்று கூறினார்.
- உலகக் கோப்பைக்கு முன்பு சோர்வு ஏற்படும்.
- இதனால் இந்த தொடரில் இந்திய அணி பங்கேற்பது சிறந்ததாக இருக்காது.
புதுடெல்லி:
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு முன்பு இந்திய அணி ஆஸ்திரேலியாவுடன் விளையாடும் முடிவை பாகிஸ்தான் முன்னாள் கேப்டனும், டெலிவிஷன் வர்ணனையாளருமான வாசிம் அக்ரம் விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
உலகக்கோப்பைக்கு முன்பு இந்திய அணி ஆஸ்திரேலிய தொடரில் விளையாடுவது தேவையற்றது. ஏனென்றால் இது இந்திய வீரர்களுக்கு கூடுதல் சோர்வை ஏற்படுத்தி விடும். ஆகஸ்டு மாதத்தில் இருந்து இந்திய அணி தொடர்ந்து விளையாடி வருகிறது.
உலகக்கோப்பை மற்றும் ஆஸ்திரேலிய தொடர் இடையே இந்திய வீரர்களுக்கு ஓய்வு எடுக்க சிறிது நேரமே இருக்கிறது. இதனால் இந்த தொடரில் இந்திய அணி பங்கேற்பது சிறந்ததாக இருக்காது.
உலகக்கோப்பையில் இந்திய அணி வெவ்வேறு இடங்களுக்கு பயணம் மேற்கொள்ள வேண்டி இருக்கும். பயணம் செய்யவே ஒருநாள் ஆகிவிடும். இதனால் உலகக்கோப்பையில் ஆற்றலுடன் இருப்பது முக்கியம். இந்த நேரம் ஆஸ்திரேலியாவுடன் 3 ஒருநாள் போட்டியில் விளையாடுவது ஏன்? என தெரியவில்லை.
இவ்வாறு வாசிம் அக்ரம் கூறியுள்ளார்.
- இந்தப் போட்டியை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) நடத்தியது போல இல்லை.
- இந்திய கிரிக்கெட் கட்டுப்பாடு வாரியம் (பி.சி.சி.ஐ.) நடத்தியது போல் இருந்தது.
புதுடெல்லி:
உலக கோப்பை போட்டியில் அகமதாபாத்தில் நேற்று முன்தினம் நடந்த ஆட்டத்தில் இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது.
பாகிஸ்தான் போராடாமலே இந்தியாவிடம் எளிதில் சரண் அடைந்தது. இதனால் இந்த ஆட்டம் ஒரு பக்கமாகவே இருந்தது.
பாகிஸ்தான் அணியின் இயக்குனரும், தென்ஆப்பிக்காவை சேர்ந்தவருமான மிக்கி ஆர்தர் இந்த தோல்வி குறித்து விளக்கினார். அவர் கூறியதாவது:-
இந்தப் போட்டியை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) நடத்தியது போல இல்லை. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாடு வாரியம் (பி.சி.சி.ஐ.) நடத்தியது போல் இருந்தது. மைதானம் முழுவதும் இந்திய ரசிகர்கள் இருந்தனர். பாகிஸ்தானை ஊக்கப்படுத்தும் எந்த செயல்களும் களத்தில் நிகழ அனுமதிக்கப்படவில்லை.
இதுவும் ஒரு காரணம்தான். இதை நான் சாக்காக கூறப்போவது இல்லை என்று தெரிவித்து இருந்தார்.
மிக்கி ஆர்தரின் இந்த கருத்துக்கு பாகிஸ்தான் தரப்பில் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. முன்னாள் கேப்டனும், முன்னாள் வேகப்பந்து வீச்சாளருமான வாசிம் அக்ரம் அவரை கடுமையாக சாடியுள்ளார். இது தொடர்பாக வாசிம்அக்ரம் கூறியதாவது:-
இந்தியாவிடம் மோசமாக தோற்றதற்கு பழி போட்டு தப்பிக்க வேண்டாம் என்று மிக்கிஆர்தரை கேட்டுக் கொள்கிறேன். குல்தீப் யாதவுக்கு எதிராக உங்களிடம் என்ன திட்டம் இருந்தது? என்று எங்களிடம் சொல்லுங்கள். அதைத்தான் நாங்கள் கேட்க விரும்புகிறோம்.
இந்த தோல்வியில் இருந்து நீங்கள் தப்பித்துக் கொள்ள இப்படி பேசுகிறீர்களா? துரதிருஷ்டவசமாக உங்களால் இதில் இருந்து தப்பித்துக் கொள்ள முடியாது.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
- எந்த ஒரு சூழ்நிலையாக இருந்தாலும் எந்த ஒரு பந்துவீச்சாளராக இருந்தாலும் சரி அதிரடி ஆட்டத்தை அவர் வெளிப்படுத்துகிறார்.
- முதல் ஓவரிலிருந்தே அவர் அடித்து விளையாடுவது அணிக்கு பயனுள்ளதாக மாறுகிறது.
இந்தியாவில் நடைபெற்று வரும் 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது. இந்த தொடரில் நேற்றுடன் லீக் சுற்று ஆட்டங்கள் நிறைவு பெற்றன. லீக் சுற்று ஆட்டங்களின் முடிவில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகள் அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ளன. அரையிறுதி ஆட்டங்கள் நாளை மறுநாள் தொடங்குகிறது.
இந்நிலையில் ரோகித் சர்மாவின் இந்த ஆட்டத்தை பார்க்கும் போது பாகிஸ்தான் முன்னாள் வீரர் இன்சமாம் உல் ஹக்கை பார்த்த மாதிரி உள்ளதாக வாசிம் அக்ரம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-

உலக கிரிக்கெட்டில் ரோகித் சர்மாவைப் போல் யாரும் இல்லை என்று நினைக்கிறேன். நாம் கோலி, ஜோ ரூட், வில்லியம்சன் மற்றும் பாபர் அசாம் பற்றி பேசுகிறோம். ஆனால் இவர் வித்தியாசமானவர். அவர் பேட்டிங்கை மிகவும் எளிதாக்குகிறார்.
இன்சமாம் உல் ஹக் வேகப்பந்து வீச்சாளர்களை எதிர்கொள்ளும்போது கூடுதல் நேரம் இருக்கும். அதேபோன்று ரோகித் சர்மாவிற்கும் வேகப்பந்து வீச்சாளர்களை எதிர்த்து விளையாடும்போது கூடுதலான நேரம் கிடைக்கிறது. அவரது கை மற்றும் கண்களின் பார்வையும் வெகு சிறப்பாக இருப்பதால் அவரால் எளிதாக வேகப்பந்து வீச்சாளர்களை அடித்து விளையாட முடிகிறது. அவர் இப்படி ஆட்டத்தின் துவக்கத்திலேயே அதிரடியாக ரன்களை குவிப்பதால் பின்னால் வரும் வீரர்களுக்கும் ஆட்டம் சாதகமாக இருக்கிறது.
எந்த ஒரு சூழ்நிலையாக இருந்தாலும் எந்த ஒரு பந்துவீச்சாளராக இருந்தாலும் சரி அதிரடி ஆட்டத்தை அவர் வெளிப்படுத்துகிறார். முதல் ஓவரிலிருந்தே அவர் அடித்து விளையாடுவது அணிக்கு பயனுள்ளதாக மாறுகிறது. ரோகித் சர்மா போன்ற ஒரு பேட்ஸ்மேன் இருக்கும்போது எதிரணியில் இருக்கும் பவுலர்களுக்கு நிச்சயம் சிரமமாகத்தான் இருக்கும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
9 போட்டிகளில் விளையாடியுள்ள ரோகித் சர்மா 503 ரன்களை குவித்துள்ளார். ரோகித் சர்மா அதிரடியாக விளையாடுவதால் அணிக்கும் நல்ல ஸ்கோர் கிடைக்கிறது. இந்த உலகக்கோப்பை தொடரில் முதல் பவர்பிளே ஓவர்களில் மட்டும் 307 ரன்களை ரோகித் சர்மா அடித்து அசத்தியுள்ளார்.
- இங்கிலாந்திற்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியின் 2-வது இன்னிங்சில் 236 பந்துகளை மட்டுமே சந்தித்த ஜெய்ஸ்வால் 214 ரன்களை குவித்திருந்தார்.
- உலக அளவில் ஒரே இன்னிங்சில் அதிக சிக்சர்களை விளாசிய வீரர் என்ற பாகிஸ்தான் முன்னாள் வீரர் வாசிம் அக்ரமின் சாதனையை ஜெய்ஸ்வால் சமன் செய்துள்ளார்.
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான 3-வது டெஸ்டின் இரண்டாவது இன்னிங்சில் யஷஸ்வி ஜெய்ஸ்வால் இரட்டை சதம் அடித்தார். டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து அவர் அடித்த இரண்டாவது இரட்டை சதம் இதுவாகும். விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற முநதைய டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில் ஜெய்ஸ்வால் 209 ரன்கள் எடுத்திருந்தார்.
யஷஸ்வி ஜெய்ஸ்வால், டெஸ்ட் போட்டியில் 12 ஜூலை 2023 அன்று அறிமுகமானார்.டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமாகி அதிவேகமாக மூன்று சதங்கள் அடித்தவர்களின் பட்டியலில் முன்னாள் இந்திய தொடக்க ஆட்டக்காரர்களான வீரேந்திர சேவாக் மற்றும் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் சாதனையை அவர் சமன் செய்துள்ளார்.
இங்கிலாந்திற்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியின் 2-வது இன்னிங்சில் 236 பந்துகளை மட்டுமே சந்தித்த ஜெய்ஸ்வால் 214 ரன்களை குவித்திருந்தார். இதில் 12 சிக்ஸர்களும் அடங்கும். இதன் மூலம் டெஸ்டில் ஒரே இன்னிங்சில் அதிக சிக்சர்களை விளாசிய இந்தியர் என்ற பெருமைக்கு அவர் சொந்தக்காரரானார்.
அதேநேரத்தில், உலக அளவில் ஒரே இன்னிங்சில் அதிக சிக்சர்களை விளாசிய வீரர் என்ற பாகிஸ்தான் முன்னாள் வீரர் வாசிம் அக்ரமின் சாதனையை ஜெய்ஸ்வால் சமன் செய்துள்ளார். 1996-ம் ஆண்டு ஜிம்பாப்வேக்கு எதிரான டெஸ்டில் வாசிம் அக்ரம் இந்த சாதனையை படைத்திருந்தார்.
இந்த தொடரில் இதுவரை இந்திய அணி 48 சிக்சர்களை விளாசியுள்ளது. இதன் மூலம் ஒரே டெஸ்ட் தொடரில் அதிக சிக்ஸர்கள் அடித்த தனது முந்தைய சாதனை எண்ணிக்கையை இந்திய அணி தாண்டியுள்ளது. ஒரே போட்டியில் அதிக சிக்ஸர்களை இந்தியா விளாசிய போட்டியாகவும் ராஜ்கோட் டெஸ்ட் மாறியுள்ளது. இந்த டெஸ்டில் இந்திய அணி 28 சிக்சர்களை விளாசியுள்ளது.






