search icon
என் மலர்tooltip icon

    விளையாட்டு

    பாகிஸ்தான் வருவதற்கு வெளிநாட்டு பயிற்சியாளர்கள் பயப்படுகிறார்கள்- வாசிம் அக்ரம்
    X

    பாகிஸ்தான் வருவதற்கு வெளிநாட்டு பயிற்சியாளர்கள் பயப்படுகிறார்கள்- வாசிம் அக்ரம்

    • கிரிக்கெட் வாரியம் மாறினால் ஒப்பந்தமும் முடிந்து விடும் என்று எல்லோரும் பயப்படுகிறார்கள்.
    • வெளிநாட்டு பயிற்சியாளர் கிடைக்கவில்லை என்றால் பாகிஸ்தான் பயிற்சியாளர் சேவையை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

    பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவராக நஜிம் சேத்தி பொறுப்பேற்ற பிறகு பல மாற்றங்கள் செய்யப்பட்டது. பல நிர்வாகிகள் நீக்கப்பட்டனர்.

    அப்ரிடி தலைமையில் புதிய தேர்வு குழு அமைக்கப்பட்டது.

    பாகிஸ்தான் அணியின் தலைமை பயிற்சியாளராக தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த மிக்கி ஆர்தரை நியமிக்க பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் விரும்பியது. ஆனால் அவர் பாகிஸ்தான் பயிற்சியாளராக இருக்க விரும்பவில்லை.

    நம்பகத் தன்மையற்ற சூழல் காரணமாக ஆர்தர் பாகிஸ்தான் செல்ல மறுக்கிறார். கடந்த கால சம்பவமும் ஒரு காரணமாகும்.

    வெளிநாட்டு பயற்சியாளர்கள் பாகிஸ்தான் வரமறுப்பது குறித்து பாகிஸ்தான் முன்னாள் கேப்டனும், முன்னாள் வேகப்பந்து வீரருமான வாசிம் அக்ரம் கூறியதாவது:-

    என்னை கேட்டால் வெளிநாட்டு பயிற்சியாளர்கள் வரமாட்டார்கள் என்று சொல்லி இருப்பேன். கிரிக்கெட் வாரியம் மாறினால் ஒப்பந்தமும் முடிந்து விடும் என்று எல்லோரும் பயப்படுகிறார்கள்.

    வெளிநாட்டு பயிற்சியாளர் கிடைக்கவில்லை என்றால் பாகிஸ்தான் பயிற்சியாளர் சேவையை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    Next Story
    ×