என் மலர்
நீங்கள் தேடியது "ரோகித் சர்மா"
- இந்தியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 304 ரன்கள் குவிப்பு
- அதிரடியாக விளையாடிய ரோகித் 76 பந்துகளில் சதமடித்து அசத்தினார்.
இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில் இரு அணிகள் இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி கட்டாக்கில் நடைபெற்று வருகிறது.
இப்போட்டியில் ஜெய்ஸ்வாலுக்கு பதில் விராட் கோலியும் குல்தீப் யாதவுக்கு பதிலாக வருண் சக்கரவர்த்தி இடம் பெற்றனர்.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி 49.5 ஓவர்களில் 304 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக ஜோ ரூட் 69 ரன்களும் பெண் டக்கெட் 65 ரன்களும் அடித்தனர்.
இந்திய அணி தரப்பில் ஜடேஜா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். தனது அறிமுக போட்டியில் களமிறங்கிய வருண் சக்கரவர்த்தி 1 விக்கெட் வீழ்த்தினார்.
இதனையடுத்து 305 என்ற இலக்கை நோக்கி இந்திய அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ரோகித் மற்றும் கில் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தனர். நிதானமாக விளையாடிய கில் 60 ரங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க வீரரான ரோகித் அதிரடியாக விளையாடி 76 பந்துகளில் சதமடித்தார். 119 ரன்கள் எடுத்தநிலையில் ஆதில் ரஷீத் பந்துவீச்சில் ரோகித் அவுட்டானார்.
கோலி 5 ரன்னில் ஆட்டமிழக்க பொறுப்பாக விளையாடிய ஷ்ரேயாஸ் ஐயர் 44 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ரன் அவுட்டானார். அடுத்ததாக களமிறங்கிய கே.எல்.ராகுல் 10 ரன்களிலும் ஹர்திக் பாண்ட்யா 10 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
பின்னர் ஜோடி சேர்ந்த அக்சர் - ஜடேஜா ஜோடி இந்தியாவை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றது. இறுதியில் 44.3 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 308 ரன்கள் அடித்து அபார வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரை 2-0 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியது.
- அதிரடியாக விளையாடிய ரோகித் 76 பந்துகளில் சதமடித்து அசத்தினார்.
- 119 ரன்கள் எடுத்தநிலையில் ஆதில் ரஷீத் பந்துவீச்சில் ரோகித் அவுட்டானார்.
இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில் இரு அணிகள் இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி கட்டாக்கில் நடைபெற்று வருகிறது.
இப்போட்டியில் ஜெய்ஸ்வாலுக்கு பதில் விராட் கோலியும் குல்தீப் யாதவுக்கு பதிலாக வருண் சக்கரவர்த்தி இடம் பெற்றுள்ளனர்.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி 49.5 ஓவர்களில் 304 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக ஜோ ரூட் 69 ரன்களும் பெண் டக்கெட் 65 ரன்களும் அடித்தனர்.
இந்திய அணி தரப்பில் ஜடேஜா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். தனது அறிமுக போட்டியில் களமிறங்கிய வருண் சக்கரவர்த்தி 1 விக்கெட் வீழ்த்தினார்.
இதனையடுத்து 305 என்ற இலக்கை நோக்கி இந்திய அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய ரோகித் மற்றும் கில் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்தனர். நிதானமாக விளையாடிய கில் 60 ரங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க வீரரான ரோகித் அதிரடியாக விளையாடி 76 பந்துகளில் சதமடித்தார். 119 ரன்கள் எடுத்தநிலையில் ஆதில் ரஷீத் பந்துவீச்சில் ரோகித் அவுட்டானார்.
இப்போட்டியில் சதம் அடித்ததன் மூலம் சர்வதேச போட்டிகளில் அதிக சதம் விளாசிய இந்திய வீரர்களின் பட்டியலில் கேப்டன் ரோகித் 3வது இடம் பிடித்தார். சர்வதேச கிரிக்கெட்டில் 48 சதங்கள் அடித்துள்ள டிராவிட்டின் சாதனையை முறியடித்து 49 ஆவது சதத்தை ரோகித் இன்று பதிவு செய்தார்.
சர்வதேச போட்டிகளில் அதிக சதம் விளாசிய இந்திய வீரர்கள்
1. சச்சின் - 100
2. விராட் கோலி - 81
3. ரோகித் - 49
4. டிராவிட் - 48
5. சேவாக் - 38
- இந்தியாவுக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து அணி 304 ரன்கள் குவிப்பு.
- அதிரடியாக விளையாடிய ரோகித் 76 பந்துகளில் சதமடித்து அசத்தினார்.
இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது. முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில் இரு அணிகள் இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி கட்டாக்கில் நடைபெற்று வருகிறது.
இப்போட்டியில் ஜெய்ஸ்வாலுக்கு பதில் விராட் கோலியும் குல்தீப் யாதவுக்கு பதிலாக வருண் சக்கரவர்த்தி இடம் பெற்றுள்ளனர்.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி 49.5 ஓவர்களில் 304 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக ஜோ ரூட் 69 ரன்களும் பெண் டக்கெட் 65 ரன்களும் அடித்தனர்.
இந்திய அணி தரப்பில் ஜடேஜா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். தனது அறிமுக போட்டியில் களமிறங்கிய வருண் சக்கரவர்த்தி 1 விக்கெட் வீழ்த்தினார்.
இதனையடுத்து 305 என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 220 ரன்கள் எடுத்து ஆடி வருகிறது.
அதிரடியாக விளையாடிய ரோகித் 76 பந்துகளில் சதமடித்து அசத்தினார். இப்போட்டியில் ரோகித் 7 சிக்ஸர்களை விளாசியுள்ளார். இதன்மூலம் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சிக்ஸர்கள் விளாசியவர்கள் பட்டியலில் கிறிஸ் கெயிலை பின்னுக்குத் தள்ளி, ரோகித் 2வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
301 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள கெயில் 331 சிக்ஸர்களை அடித்துள்ளார். 267 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ள ரோகித் இதுவரை 337* சிக்ஸர்களை விளாசியுள்ளார். இப்பட்டியலில் பாகிஸ்தான் வீரர் ஷாகித் அப்ரிடி 351 சிக்ஸர்களுடன் முதலிடத்தில் நீடிக்கிறார்.
- சாம்பியன்ஸ் டிராபி தொடரில் சுப்மன் கில் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
- ஹர்திக் பாண்ட்யாவை துணை கேப்டனாக நியமிக்க தலைமை பயிற்சியாளர் கம்பீர் விரும்பியதாக தகவல் வெளியாகியது.
மும்பை:
8 அணிகள் பங்கேற்கும் 9-வது ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் வருகிற 19-ந்தேதி முதல் மார்ச் 9-ந்தேதி வரை பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடக்கிறது. பாதுகாப்பு காரணங்களுக்காக இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்ல மறுத்ததால் இந்திய அணிக்குரிய ஆட்டங்கள் மட்டும் துபாய்க்கு மாற்றப்பட்டுள்ளது.
இந்த தொடருக்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. ரோகித் சர்மா தலைமையிலான அந்த அணியில் ஜஸ்பிரித் பும்ரா, ஷமி, விராட் கோலி, ஹர்திக் பாண்ட்யா உள்ளிட்ட முதன்மை வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள். மேலும் சுப்மன் கில் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதனால் ரோகித் சர்மாவுக்கு பின் இந்திய ஒருநாள் அணியின் கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்படுவார் என்று கூறப்பட்டது வந்தது. இருப்பினும் ஹர்திக் பாண்ட்யாவை துணை கேப்டனாக நியமிக்க தலைமை பயிற்சியாளர் கம்பீர் விரும்பியதாகவும், அதனை தேர்வுக்குழு தலைவர் அகர்கர் மற்றும் கேப்டன் ரோகித் சர்மா மறுத்ததாகவும் தகவல்கள் வெளியாகின.
இந்நிலையில் சாம்பியன் டிராபியை இந்தியா வெல்லவில்லை எனில் ரோகித் சர்மா ஒருநாள் போட்டிகளுக்கான கேப்டன் பதவியிலிருந்து நீக்கப்பட்டு ஹர்திக் பாண்ட்யா புதிய கேப்டனாக நியமிக்கப்படுவார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
- இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது.
- இந்த போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் 2 ரன்னில் ஆட்டமிழந்தார்.
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா கடந்த பல தொடர்களாகவே பேட்டிங்கில் மோசமான ஆட்டத்தை சந்தித்து வருகிறார். இது அனைவரது மத்தியிலும் விமர்சனத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஏற்கனவே நடைபெற்று முடிந்த பல்வேறு தொடர்களில் மோசமான செயல்பாட்டை வெளிப்படுத்தி வந்த ரோகித் இந்த இங்கிலாந்து தொடரிலாவது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
மோசமான ஆட்டத்தை தொடரும் பட்சத்திலும் சாம்பியன்ஸ் டிராபி தொடரை அவர் கைப்பற்றவில்லை என்றாலும் இந்திய அணியில் இருந்தும் நீக்கப்படவும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதலாவது போட்டியில் விளையாடிய இந்திய அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இருந்தாலும் இந்த போட்டியில் ரோகித் சர்மா 2 ரன்களில் ஆட்டமிழந்தது அனைவரது மத்தியிலும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்று முடிந்த டெஸ்ட் தொடரில் 91 ரன்கள் மட்டுமே அடித்த அவர் ஆஸ்திரேலிய தொடரின் போது ஒட்டுமொத்தமாகவே 31 ரன்கள் மட்டுமே அடித்து மோசமான பேட்டிங் பார்மை வெளிப்படுத்தி இருக்கிறார்.
கடைசியாக அவர் விளையாடிய பத்து இன்னிங்ஸ்களில் 0,8,18,1,3,6,10,3,9,2 என்று ஒருமுறை கூட 20 ரன்களை கூட தாண்டாமல் ஆட்டம் இழந்திருக்கிறார். இதன் காரணமாக எதிர்வரும் சாம்பியன்ஸ் டிராபி தொடரிலும் அவரது இந்த மோசமான பேட்டிங் பார்ம் தொடர்ந்தால் அவர் இந்திய அணியில் இருந்து அதிரடியாக நீக்கப்படும் அபாயமும் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
- இரு தொடர்களிலும் அவரது பேட்டிங் மிகவும் மோசமாக இருந்தது.
- இந்திய அணி ஜூன் மாதம் முதல் ஜூலை வரை இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து 5 டெஸ்டில் விளையாடுகிறது.
மும்பை:
இந்திய கிரிக்கெட்டின் 3 வடிவிலான போட்டிகளுக்கு (டெஸ்ட், ஒருநாள் போட்டி, 20 ஓவர்) ரோகித்சர்மா கேப்டனாக பணியாற்றினார்.
அமெரிக்கா, வெஸ்ட் இண்டீசில் கடந்த ஜூன் மாதம் நடந்த 20 ஓவர் உலக கோப்பையை வென்ற பிறகு ரோகித்சர்மா ஓய்வு பெற்றார். டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிக்கு அவர் கேப்டனாக நீடித்து வருகிறார். 20 ஓவர் அணிக்கு சூர்ய குமார் யாதவ் கேப்டனாக உள்ளார்.
ரோகித் சர்மா தலைமையில் இந்திய அணி சொந்த மண்ணில் நியூசிலாந்துக்கு எதிரான 3 டெஸ்டிலும் தோற்று ஒயிட்வாஷ் ஆனது. அதை தொடர்ந்து ஆஸ்திரேலிய பயணத்திலும் டெஸ்ட் தொடரை 1-3 என்ற கணக்கில் இழந்தது. இந்த இரு தொடர்களிலும் அவரது பேட்டிங் மிகவும் மோசமாக இருந்தது. இதனால் அவர் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி இருந்தார்.
தற்போது இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர் மற்றும் சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் ரோகித் சர்மா கேப்டனாக பணியாற்றுகிறார். சாம்பியன்ஸ் டிராபியோடு அவரது கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வருகிறது.
ரோகித் சர்மாவுக்கு பிறகு இந்திய டெஸ்ட் அணிக்கு வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவை கேப்டனாக்க இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ) திட்டமிட்டது. ரோகித் சர்மா ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்டில் ஆடாத போது அவர் கேப்டனாக பணியாற்றினார். இதனால் எதிர்காலத்தில் பும்ராவே கேப்டனாக நியமிக்கப்படுவார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.
இதற்கிடையே பி.சி.சி.ஐ.யின் முடிவில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. பும்ராவின் உடல் தகுதி குறித்து அடிக்கடி கேள்வி எழுகிறது. கேப்டன் பதவியில் அவரது பந்து வீச்சுத் திறன் பாதிக்கப்படலாம் என்று கருதுகிறது. இதனால் ரோகித் சர்மாவுக்கு பிறகு ரிஷப் பண்ட் அல்லது ஜெய்ஸ்வாலுக்கு டெஸ்ட் அணிக்கு கேப்டனாக நியமிக்க திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதே நேரத்தில் சுப்மன் கில்லும் இதற்கான போட்டியில் இருப்பதாக கூறப்படுகிறது.
இந்திய அணி ஜூன் மாதம் முதல் ஜூலை வரை இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் செய்து 5 டெஸ்டில் விளையாடுகிறது.
ஒருநாள் போட்டிக்கு சுப்மன் கில் துணை கேப்டனாக உள்ளார். இங்கிலாந்து தொடருக்கு அவருக்கு இந்த பொறுப்பு வழங்கப்பட்டு உள்ளது.
ரோகித் சர்மா ஓய்வு பெறும்போது சுப்மன் கில் ஒருநாள் போட்டிக்கு கேப்டனாகலாம் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது.
- இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரை 4-1 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியது.
- இந்தியா, இங்கிலாந்து இடையிலான 3 போட்டி கொண்ட ஒருநாள் தொடர் இன்று தொடங்குகிறது.
புதுடெல்லி:
இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரை 4-1 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றி அசத்தியது.
இதையடுத்து, இவ்விரு அணிகள் இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் இன்று தொடங்குகிறது. ஒருநாள் போட்டிகள் நாக்பூர், கட்டாக், அகமதாபாத்தில் நடைபெற உள்ளன.
ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் ரோகித் சர்மா, விராட் கோலி, ரிஷப் பண்ட், ஷ்ரேயாஸ் ஐயர் போன்ரோர் அணிக்கு திரும்பி உள்ளதால் இத்தொடரின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்நிலையில், இந்தத் தொடரில் ரோகித் சர்மா மேற்கொண்டு 134 ரன்கள் எடுத்தால் சச்சினின் மாபெரும் சாதனை ஒன்றினை முறியடிக்கும் வாய்ப்புக்காக காத்திருக்கிறார்.
இந்தத் தொடரில் ரோகித் சர்மா இன்னும் 134 ரன்கள் அடிக்கும் பட்சத்தில் சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் சச்சின் டெண்டுல்கரை விட விரைவாக 11,000 ரன்களை அடித்த வீரர் என்ற மாபெரும் சாதனையை நிகழ்த்துவார். சச்சின் டெண்டுல்கர் 276வது இன்னிங்சில் 11 ஆயிரம் ரன்களை கடந்திருந்தார்.
ரோகித் சர்மா தற்போது 257 இன்னிங்ஸ்கள் விளையாடி, 10,866 ரன்களை குவித்துள்ளார். இதனால் இங்கிலாந்துக்கு எதிரான 3 போட்டி கொண்ட ஒருநாள் தொடரில் அவர் 134 ரன்கள் அடிக்கும் பட்சத்தில் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடிப்பார்.
இந்தப் பட்டியலில் இந்தியாவின் விராட் கோலி தனது 222-வது இன்னிங்சில் அந்த சாதனையை நிகழ்த்தி நம்பர் ஒன் இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- அதிரடியாக விளையாடும் ஸ்டைலுக்கு இந்திய அணியை ரோகித் எடுத்து வந்துள்ளார்.
- நாங்களும் அதே போல விளையாட விரும்புகிறோம்.
இங்கிலாந்து அணி ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாடுவதற்காக இந்தியா வந்துள்ளது. இதில் முதலில் நடந்த டி20 தொடரில் 4-1 என்ற கணக்கில் இந்தியா வெற்றி பெற்றது.
இதனையடுத்து இரு அணிகளுக்கும் இடையேயான ஒருநாள் தொடர் நாளை தொடங்க உள்ளது.
இந்நிலையில் ஒருநாள் கிரிக்கெட்டில் வெற்றி பெறுவதற்கு ரோகித் சர்மாவின் அதிரடியான அணுகுமுறை மிகவும் சரியானது என்றும் அந்த அணுகுமுறையை நாங்களும் பின்பற்றி இத்தொடரில் இந்தியாவை வீழ்த்துவோம் என்று இங்கிலாந்து கேப்டன் பட்லர் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
கடந்த உலகக் கோப்பையை திரும்பிப் பார்க்கும் போது கிரிக்கெட்டின் அதிரடியாக விளையாடிய 2 அணிகள் தான் இறுதிபோட்டியில் விளையாடின. டிராவிஸ் ஹெட் இறுதிபோட்டியில் பேட்டிங் செய்த விதத்தை நீங்கள் எடுத்துக் கொள்ளலாம். அதனாலேயே அவர்களுக்கு வெற்றியும் கிடைத்ததை உங்களால் பார்க்க முடிந்தது.
அதே போல இறுதிபோட்டியில் பேட்டிங் செய்ய வந்த ரோகித் சர்மா கேப்டனாக அதிரடியாக விளையாடி இந்திய அணியை வெற்றிக்கு தள்ளியதற்காக பாராட்டுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.
அதிரடியாக விளையாடும் ஸ்டைலுக்கு அவர் இந்திய அணியை எடுத்து வந்துள்ளார். எனவே நாங்களும் அதே போல விளையாட விரும்புகிறோம். அதற்கு எதிரணியை பேட்டிங்கில் அழுத்தத்தின் கீழ் தள்ளுவதற்கான வழியை நாங்கள் கண்டறிய வேண்டும். அதே போல விக்கெட்டுகள் எடுக்க வேண்டும்.
எதிரணி வீரர்கள் அதிக நேரம் பேட்டிங் செய்தால் அவர்கள் உங்களுக்கு வலியை ஏற்படுத்துவார்கள். எனவே நாங்கள் விக்கெட்டுகளை எடுப்பதற்கான வழியை கண்டறிய முயற்சிப்போம். இவை அனைத்தும் திட்டங்களை செயல்படுத்துவதைப் பற்றியதாகும். அதை செயல்படுத்தி நன்றாக விளையாடினால் நல்ல முடிவுகள் கிடைக்கும்.
என்று பட்லர் கூறினார்.
- டி20-யை விட இது வித்தியாசமான ஃபார்மட் என்பதை நான் புரிந்துக் கொள்கிறேன்.
- நாங்கள் சாம்பியன்ஸ் டிராபியை பற்றி சிந்திக்கவில்லை.
இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நாளை தொடங்க உள்ளது. அந்தத் தொடருக்காக அறிவிக்கப்பட்ட இந்திய அணியில் கடைசி நேரத்தில் தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடர்களில் அபாரமாக பந்து வீசி இந்தியாவின் வெற்றிக்கு பங்காற்றினார். அந்த தொடரில் 14 விக்கெட்டுகள் எடுத்த அவர் தொடர்நாயகன் விருது வென்று அசத்தினார்.
இந்நிலையில் வருண் சக்கரவர்த்தி வித்தியாசமான திறமையைக் கொண்டுள்ளதாகவும் அதனாலேயே அவரை இங்கிலாந்து தொடரில் தேர்ந்தெடுத்துள்ளதாகவும் கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
வருண் சக்கரவர்த்தி ஏதோ ஒரு வித்தியாசமான விஷயத்தை அவருக்குள் கொண்டிருக்கிறார் என்பது தெளிவாகத் தெரிகிறது. எனவே நாங்கள் எங்களால் என்ன செய்ய முடியும் என்று பார்க்கிறோம். அதே சமயம் டி20-யை விட இது வித்தியாசமான ஃபார்மட் என்பதை நான் புரிந்துக் கொள்கிறேன்.
தற்போது நாங்கள் சாம்பியன்ஸ் டிராபியை பற்றி சிந்திக்கவில்லை. ஒருவேளை வருண் இங்கு நன்றாக விளையாடினால் பின்னர் நாங்கள் அதைப் பற்றி சிந்திக்க வேண்டும்.
என்று ரோகித் கூறினார்.
இதனால் இங்கிலாந்து தொடரில் வருண் சக்கரவர்த்தி ஒருநாள் கிரிக்கெட்டில் அறிமுகமாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- அடுத்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் 2027 உலகக் கோப்பைக்கான திட்டத்திற்கு பிசிசிஐ தயார் ஆகி வருகிறது.
- ரோகிர் சர்மா ஃபார்ம் கவலையளிக்கும் வகையில் இருப்பதால் 2027 வரை கேப்டனாக நீடிக்க சந்தேகம்.
இந்திய டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டனாக ரோகித் சர்மா இருந்து வருகிறார். 37 வயதாகும் ரோகித் சர்மா 67 டெஸ்ட் போட்டியில் 12 சதங்களுடன் 4,301 ரன்கள் அடித்துள்ளார். 265 ஒருநாள் போட்டிகளில் 31 சதங்களுடன் 10,866 ரன்கள் அடித்துள்ளார்.
விராட் கோலிக்குப் பிறகு டெஸ்ட், ஒருநாள், டி20 என மூன்று விடிவிலான கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருந்து வந்தார். கடந்த வருடம் நடைபெற்ற உலகக் கோப்பையை வென்ற கையுடன் டி20 அணியில் இருந்து ஓய்வு பெற்றார்.
இந்தியா கடைசியாக விளையாடிய இரண்டு டெஸ்ட் தொடர்களையும் (நியூசிலாந்து, ஆஸ்திரேலியா) இழந்து ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு முன்னேறும் வாயப்பை இழந்தது. இந்த இரண்டு டெஸ்ட் தொடரிலும் ரோகித் சர்மாவின் ஆட்டம் திருப்தியளிக்கும் வகையில் இல்லை. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரின் கடைசி டெஸ்டில் தானாகவே ஆடும் லெவனில் இருந்து விலகினார். ஃபார்ம் இன்றி தவித்து வருகிறார்.

வருகிற 19-ந்தேதி சாம்பியன்ஸ் டிராபி 50 ஓவர் கிரிக்கெட் தொடர் தொடங்குகிறது. இவரது தலைமையில் இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாடுகிறது.
அதன்பின் இந்தியா டெஸ்ட் உலக சாம்பியன்ஷிப் மற்றும் உலகக் கோப்பை (2027) ஆகியவற்றிற்கான அணியை தயார் செய்ய உள்ளது.
தற்போது ரோகித் சர்மாவின் ஃபார்ம் கவலை அளிக்கும் வகையில் உள்ளதால், ரோகித் சர்மா தலைமையில் இந்திய அணி இன்னும் இரண்டு வருடம் செல்ல பிசிசிஐ விரும்பவில்லை. இதனால் உங்களுடைய எதிர்காலம் குறித்து தெளிவான பார்வை என்ன? என்று பிசிசிஐ ரோகித் சர்மாவிடம் கேட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனால் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபிக்குப் பிறகு ரோகித் சர்மா தனது எதிர்காலம் குறித்து முக்கிய முடிவு எடுப்பார் எனத் தெரிகிறது.
இந்திய அணியின் நீண்ட கால திட்டம் என்பதால், ரோகித் சர்மாவை கேப்டனாக நீட்டிக்க பிசிசிஐ விரும்பாது. இதனால் கேப்டன் பதவியை வேண்டாம், ஒரு வீரரான விளையாடுகிறேன் எனக் கூறினால் தற்போதுள்ள ஃபார்மில் அதற்கு பிசிசிஐ சம்மதம் தெரிவிக்குமா? என்பது கேள்விக்குறிதான்.
இதனால் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்குப் பிறகு ரோகித் சர்மா தனது கிரிக்கெட் வாழ்க்கையின் எதிர்காலம் குறித்து முக்கிய முடிவு எடுப்பார் என தகவல் வெளியாகியுள்ளது.
அடுத்த கேப்டனுக்கான வரிசையில் பும்ரா முதலிடத்தில் உள்ளார். இவர் நீண்ட காலமாக தொடர்ந்து கேப்டனாக பணியாற்ற அவருடைய உடற்தகுதி ஒத்துழைக்குமா? என்ற கவலை உள்ளது.

இதனால் சுப்மன் கில்லை துணைக் கேப்டனாக்கி கேப்டன் பதவியை வழங்க பிசிசிஐ முயற்சி மேற்கொண்டு வருகிறது. ஆனால் நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் கில்லும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அதேவேளையில் ரிஷப் பண்ட்-ஐ கேப்டனாக நியமிக்கலாமா? என்றும் பிசிசிஐ யோசித்து வருகிறது. இதனால் ரோகித் சர்மாவுக்குப் பிறகு இந்த மூன்று பேருக்கும் கேப்டனாகவும் வாய்ப்புள்ளது.
அதேவேளையில் விராட் கோலி குறித்து பிசிசிஐ தற்போது வரை எந்தவிதமான முடிவுக்கும் வரவில்லை. இதனால் விராட் கோலி தற்போது தனது எதிர்கால கிரிக்கெட் குறித்து முடிவு எடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படவில்லை.
- ரிஷப் பண்டை, முட்டாள் என மூன்று முறை நேரலையில் கூறியது பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.
- விமர்சனம் வரம்பு மீறி செல்வதால் அது வீரர்களுக்கான நற்பெயரை கெடுக்கும் விதத்தில் இருந்தது.
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ரோகித் சர்மா முன்னாள் கேப்டன் கவாஸ்கர் மீது பிசிசிஐயிடம் புகார் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கவாஸ்கர். இவர் கிரிக்கெட்டின் வர்ணனையாளராகவும் செயல்பட்டு வருகிறார். அண்மை காலமாக கவாஸ்கர் விமர்சனம் செய்யும் போது கடும் கோபத்தை வெளிப்படுத்துகிறார். அண்மையில் நடைபெற்ற பார்டர் கவாஸ்கர் தொடரில் கூட கவாஸ்கர் ரிஷப் பண்டை, முட்டாள் என மூன்று முறை நேரலையில் கூறியது பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.
ஆனால் கவாஸ்கர் ஒரு கிரிக்கெட் ஜாம்பவான் என்பதால் அதை பெரிதாக யாரும் கண்டு கொள்ளவில்லை. ஆனால் விமர்சனம் வரம்பு மீறி செல்வதால் அது வீரர்களுக்கான நற்பெயரை கெடுக்கும் விதத்தில் இருந்தது.
மேலும் ரோகித் சர்மாவின் ஆட்டம் குறித்து தொடர்ந்து விமர்சனம் செய்து வந்தார். அதற்கும் மேலாக ரோகித்தை ஓய்வு பெறுமாறு கூறியிருந்தார்.
இந்த நிலையில் அந்தத் தொடரின் போது கிரிக்கெட் வர்ணனையாளராக இருந்த கவாஸ்கர் தொடர்ந்து இந்திய அணி மீதும் தன் மீதும் முறையற்ற விமர்சனத்தை வைத்ததாகவும் இது எங்களுடைய மனதை பாதிக்க வைத்திருக்கிறது என்றும் கேப்டன் ரோகித் சர்மா பிசிசிஐ நிர்வாகிகளிடம் புகார் கடிதம் ஒன்றை அளித்திருப்பதாக பி.சி.சி.ஐ. வட்டார தகவல் தெரிவிக்கின்றது. இதனால் கவாஸ்கரை பிசிசிஐ நிர்வாகிகள் கண்டிக்கும் வேண்டும் என்றும் அவர் வற்புறுத்தி இருப்பதாக தெரிகிறது.
எனினும் ரோகித் சர்மா இந்த புகாரை அவரே முன்வந்து அளிக்க வாய்ப்பு இல்லை என்றும் பயிற்சியாளராக இருந்த கம்பீர்தான் இதனை தூண்டி விட்டிருக்கலாம் என்றும் ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
கவாஸ்கர் எல்லை மீறி வீரர்களை விமர்சனம் செய்தது மட்டுமல்லாமல் பயிற்சியாளரையும் அவர்களிடம் இருக்கும் குழுவையும் சேர்த்து கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தி விமர்சனம் செய்து கேலி செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- ஒருநாள் கிரிக்கெட்டில் விளையாடாத ஜெய்ஸ்வாலை நீங்கள் சாம்பியன்ஸ் டிராபியில் எடுத்துள்ளீர்கள்.
- அவரை தேர்வு செய்ததற்காக தேர்வாளர்களுக்கு குறிப்பாக ரோகித் சர்மாவுக்கு தலை வணங்குகிறேன்.
ஐசிசி 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. ரோகித் சர்மா தலைமையிலான அந்த அணியில் விராட் கோலி, ஹர்திக் பாண்டியா, காயத்திலிருந்து குணமடைந்து வந்த சமி உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள். அதேபோல அர்ஷ்தீப் சிங், ஜெய்ஸ்வால் போன்ற இளம் வீரர்களும் இந்திய அணிக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள்.
இந்நிலையில் ஒருநாள் கிரிக்கெட்டில் இன்னும் அறிமுகமாகி விளையாடாத போதிலும் ஜெய்ஸ்வாலை நம்பி நேரடியாக சாம்பியன்ஸ் டிராபியில் தேர்ந்தெடுத்த ரோகித் சர்மாவுக்கு தலை வணங்குவதாக சுரேஷ் ரெய்னா பாராட்டியுள்ளார்.
இது பற்றி அவர் கூறியதாவது:-
அந்தப் பையன் ரன்களுக்காக பசியுடன் இருக்கிறார் என்று நினைக்கிறேன். அவருடைய கதையை பார்க்கும் போதெல்லாம் அவர் இந்த லெவலுக்கு ஆர்வத்துடன் வந்துள்ளார் என்பது நமக்கு தெரிகிறது.
அவரை தேர்வு செய்ததற்காக தேர்வாளர்களுக்கு குறிப்பாக ரோகித் சர்மாவுக்கு தலை வணங்குகிறேன். ஒருநாள் கிரிக்கெட்டில் விளையாடாத அந்த பையனை நீங்கள் சாம்பியன்ஸ் டிராபியில் எடுத்துள்ளீர்கள். அவர் நிறைய கடின உழைப்பை அர்ப்பணிப்புடன் செய்துள்ளார் என்பது உங்களுக்குத் தெரியும். அவருடைய கண்களில் வித்தியாசமான அணுகுமுறை தெரிகிறது.
இது தான் இந்திய கிரிக்கெட்டின் அழகாகும். நீங்கள் கடினமாக உழைத்து நாட்டுக்காக விளையாடும் ஆர்வம் உங்களுக்கு இருந்தால் ஏதேனும் ஒரு பவர் உங்களை நாட்டுக்காக விளையாடச் சொல்லும். அதைத் தான் ஜெய்ஸ்வால் விஷயத்தில் ரோகித் செய்துள்ளார்.
என்று சுரேஷ் ரெய்னா கூறினார்.