என் மலர்
நீங்கள் தேடியது "ICC World Cup 2027"
- இந்திய அணியின் பயிற்சியாளர் கவுதம் கம்பீர், தலைமைத் தேர்வாளர் அஜித் அகர்கர் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.
- இக்கூட்டத்திற்கு பிறகு ரோகித் சர்மாவும், விராட் கோலியும், ஒருநாள் போட்டிகளில் விளையாடுவார்களா? இல்லையா? என்பது தெரியவரும்.
இந்திய அணியின் மூத்த வீரர்களான ரோகித் சர்மாவும், விராட் கோலியும், ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடி வருகிறார்கள். இதனிடையே, 2027-ல் நடைபெறும் ஐ.சி.சி. ஒருநாள் உலக கோப்பையில் இருவரும் விளையாடுவார்களா என்பது கேள்விக்குள்ளாகி உள்ளது.
இதனிடையே, 2027-ல் நடைபெறும் ஐ.சி.சி. ஒருநாள் உலக கோப்பையில் விராட் கோலியும், ரோகித் சர்மாவும் விளையாட வாய்ப்பு உள்ளதாக இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் மார்னே மோர்கல் கூறியிருந்தார்.
இந்த நிலையில், தென்னாப்பிரிக்கா தொடருக்குப் பிறகு ஒருநாள் போட்டிகளில் பங்கேற்பது தொடர்பாக விராட் கோலி, ரோகித் சர்மாவுடன் ஆலோசிக்க பி.சி.சி.ஐ. முடிவு செய்துள்ளது.
அகமதாபாத்தில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில், பி.சி.சி.ஐ அதிகாரிகள், இந்திய அணியின் பயிற்சியாளர் கவுதம் கம்பீர், தலைமைத் தேர்வாளர் அஜித் அகர்கர் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.
இக்கூட்டத்திற்கு பிறகு ரோகித் சர்மாவும், விராட் கோலியும், ஒருநாள் போட்டிகளில் விளையாடுவார்களா? இல்லையா? என்பது தெரியவரும்.
- ரோகித், விராட் கோலி டெஸ்ட், டி20-யில் ஓய்வு பெற்று விட்டனர்.
- ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 3 போட்டிக்கொண்ட ஒருநாள் தொடரில் ரோகித், விராட் கோலி தேர்வு பெற்றுள்ளனர்.
புதுடெல்லி:
இந்திய கிரிக்கெட் அணியின் சீனியர் வீரர்கள் ரோகித் சர்மா, விராட் கோலி. இருவரும் 20 ஓவர் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஏற்கனவே ஓய்வு பெற்றுவிட்டனர். ஒருநாள் ஆட்டத்தில் மட்டுமே விளையாட உள்ளனர்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக வருகிற 19- ந் தேதி தொடங்கும் 3 போட்டிக்கொண்ட ஒரு நாள் தொடரில் ரோகித் சர்மாவும், விராட் கோலியியும் தேர்வு பெற்றுள்ளனர். நீண்ட இடைவெளிக்குப் பிறகு இருவரும் சர்வதேச போட்டியில் ஆட இருக்கிறார்கள்.
இந்த தொடரோடு இருவரது கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வருவதாக தகவல் வெளியானது. 2027 உலககோப்பை (ஒருநாள் போட்டி) அணியில் அவர்கள் இடம் பெறுவதை தேர்வு குழு விரும்பவில்லை. இதன் காரணமாகவே ரோகித் சர்மாவின் கேப்டன் பதவி பறிக்கப்பட்டு டெஸ்ட் கேப்டன் சுப்மன் கில்லிடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்த நிலையில் ரோகித், கோலி ஆகியோர் உலக கோப்பையில் விளையாட வேண்டும் என்பதை இலக்காக கொண்டு இருந்ததால் உள்ளூர் போட்டியான விஜய் ஹசாரே டிராபியில் ஆட வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் ( பி.சி.சி.ஐ.) புதிய திட்டத்தை தெரிவித்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஆஸ்திரேலிய தொடருக்கு பிறகு இந்திய அணி தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்துடன் தலா 3 போட்டி கொண்ட ஒருநாள் தொடரில் விளையாட இருக்கிறது.
இந்த தொடர்களுக்கு இடையே விஜய் ஹசாரே டிராபி நடைபெறுகிறது. பி.சி.சி.ஐ ஒப்பந்தத்தில் இடம்பெற்ற வீரர்கள் உள்ளூர் போட்டிகளில் விளையாட வேண்டும் என்பதை அணித் தேர்வுக் குழுத் தலைவர் அகர்கரும் வலியுறுத்தி இருந்தார்.
தென்ஆப்பிரிக்ககாவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டி டிசம்பர் 6- ந் தேதி விசாகப்பட்டினத்தில் நடக்கிறது. நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி ஜனவரி 11 - ந் தேதி வதோதராவில் நடைபெறுகிறது. இதற்கு இடையே 5 வாரங்கள் உள்ளன.
விஜய் ஹசாரே டிராபி டிசம்பர் 24 -ந் தேதி தொடங்குகிறது. அடுத்த ஆண்டு ஜனவரி 8-ந் தேதி வரை இடைவெளியில் 6 சுற்றுப் போட்டிகள் நடைபெறுகிறது.
நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணியில் தேர்வு செய்யப்பட ரோகித் சர்மா குறைந்தது 3 சுற்று போட்டிகளிலாவது விளையாட வேண்டும். விராட் கோலிக்கும் இது பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரோகித் சர்மா, விராட் கோலி விஜய் ஹசாரே டிராபியில் ஆடி 2027 உலக கோப்பையில் விளையாட இலக்கை நோக்கி செல்வார்களா? என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.
- முதலில் விளையாடிய கனடா அணி 184 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
- இதனையடுத்து விளையாடிய ஸ்காட்லாந்து அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
2027-ம் ஆண்டிற்கான ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான தகுதி சுற்று போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
அந்த வகையில் இரண்டாவது தகுதி சுற்று போட்டிகளில் ஸ்காட்லாந்து மற்றும் கனடா அணிகள் மோதின. இந்த போட்டியில் தான் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இதுவரை நடைபெறாத ஒரு அரிய சம்பவம் நிகழ்ந்துள்ளது. அதுமட்டும் இன்றி இத்தனை ஆண்டுகால கிரிக்கெட் வரலாற்றில் முதல் முறையாக நடைபெற்ற இந்த நிகழ்வு குறித்த தகவல்கள் அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்க்கும் வகையில் மாறியுள்ளன.
அந்த வகையில் கனடா மற்றும் ஸ்காட்லாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் விளையாடிய கனடா அணி 184 ரன்கள் எடுத்தது. அதனை தொடர்ந்து விளையாடிய ஸ்காட்லாந்து அணி 41.5 ஓவரில் 185 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
முன்னதாக கனடா அணி முதலில் பேட்டிங் செய்கையில் அந்த அணியின் தொடக்க வீரர்கள் இருவரும் முதல் இரண்டு பந்துகளில் அடுத்தடுத்து ஆட்டம் இழந்து வெளியேறியுள்ளனர்.
இந்த போட்டியின் முதல் பந்தில் கனடா அணியை சேர்ந்த தொடக்க வீரர் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அதன்பிறகு இரண்டாவது பந்தின் போது எதிர்புறம் இருந்த புதிய பேட்ஸ்மேன் அடித்த பந்து பவுலரின் கையில் பட்டு ஸ்டம்பில் பட்டதால் ரன் அவுட் மூலம் 2-வது தொடவக்க வீரரும் ஆட்டமிழந்து வெளியேறினார்.
இப்படி சர்வதேச ஒருநாள் போட்டியின் முதல் இரண்டு பந்துகளில் இரண்டு தொடக்க வீரர்களும் தொடர்ந்து ஆட்டமிழப்பது இதுவே முதல் முறை. இப்படி ஒரு அரிதான மோசமான சாதனையை ஸ்காட்லாந்து அணிக்கு எதிராக கனடா அணி பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
- 14-வது உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை தென்ஆப்பிரிக்கா, ஜிம்பாப்வே, நமிபியா ஆகிய நாடுகள் இணைந்து நடத்துகின்றன.
- பெரும்பாலான ஆட்டங்கள் தென்ஆப்பிரிக்காவில் நடைபெற உள்ள நிலையில் அங்கு போட்டிக்கான இடங்களை தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் தேர்வு செய்துள்ளது.
ஜோகன்னஸ்பர்க்:
14 அணிகள் பங்கேற்கும் 14-வது உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை (50 ஓவர்) 2027-ம் ஆண்டில் ஆப்பிரிக்க நாடுகளான தென்ஆப்பிரிக்கா, ஜிம்பாப்வே, நமிபியா ஆகிய நாடுகள் இணைந்து நடத்துகின்றன. பெரும்பாலான ஆட்டங்கள் தென்ஆப்பிரிக்காவில் நடைபெற உள்ள நிலையில் அங்கு போட்டிக்கான இடங்களை தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியம் தேர்வு செய்துள்ளது.
இதன்படி ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள வான்டரர்ஸ், பிரிட்டோரியா செஞ்சூரியன் பார்க், டர்பனில் உள்ள கிங்ஸ்ஸ்மீட், கெபஹாவின் செயின்ட் ஜார்ஜ்ஸ் பார்க், பார்லில் உள்ள போலன்ட் பார்க், கேப்டவுனின் நியூலாண்ட்ஸ், புளோம்பாண்டீன், ஈஸ்ட் லண்டனில் உள்ள பப்பலோ பார்க் ஆகிய 8 மைதானங்களில் உலகக் கோப்பை போட்டி நடைபெற உள்ளது.
விமான நிலையம் மற்றும் வீரர்கள் மற்றும் ரசிகர்கள் தங்குவதற்கு அதிகமான ஓட்டல் அறை தேவை உள்ளிட்ட வசதி வாய்ப்புகளை பரிசீலித்து அதற்கு ஏற்ப போட்டிக்குரிய இடங்கள் தேர்வு செய்யப்பட்டதாக தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரிய தலைமை செயல் அதிகாரி பெலெட்சி மோசிகி தெரிவித்தார்.






