என் மலர்
நீங்கள் தேடியது "ஐசிசி உலக கோப்பை"
- இந்திய அணியின் பயிற்சியாளர் கவுதம் கம்பீர், தலைமைத் தேர்வாளர் அஜித் அகர்கர் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.
- இக்கூட்டத்திற்கு பிறகு ரோகித் சர்மாவும், விராட் கோலியும், ஒருநாள் போட்டிகளில் விளையாடுவார்களா? இல்லையா? என்பது தெரியவரும்.
இந்திய அணியின் மூத்த வீரர்களான ரோகித் சர்மாவும், விராட் கோலியும், ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடி வருகிறார்கள். இதனிடையே, 2027-ல் நடைபெறும் ஐ.சி.சி. ஒருநாள் உலக கோப்பையில் இருவரும் விளையாடுவார்களா என்பது கேள்விக்குள்ளாகி உள்ளது.
இதனிடையே, 2027-ல் நடைபெறும் ஐ.சி.சி. ஒருநாள் உலக கோப்பையில் விராட் கோலியும், ரோகித் சர்மாவும் விளையாட வாய்ப்பு உள்ளதாக இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் மார்னே மோர்கல் கூறியிருந்தார்.
இந்த நிலையில், தென்னாப்பிரிக்கா தொடருக்குப் பிறகு ஒருநாள் போட்டிகளில் பங்கேற்பது தொடர்பாக விராட் கோலி, ரோகித் சர்மாவுடன் ஆலோசிக்க பி.சி.சி.ஐ. முடிவு செய்துள்ளது.
அகமதாபாத்தில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில், பி.சி.சி.ஐ அதிகாரிகள், இந்திய அணியின் பயிற்சியாளர் கவுதம் கம்பீர், தலைமைத் தேர்வாளர் அஜித் அகர்கர் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.
இக்கூட்டத்திற்கு பிறகு ரோகித் சர்மாவும், விராட் கோலியும், ஒருநாள் போட்டிகளில் விளையாடுவார்களா? இல்லையா? என்பது தெரியவரும்.
- இந்திய அணியை வழிநடத்துவதில் கேப்டன் ரோகித் சர்மா உற்சாகமாக உள்ளார்.
- இந்தியாவின் வரலாற்று வெற்றியை பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா நினைவு கூர்ந்துள்ளார்.
இந்தியாவில் வரும் அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் ஆடவருக்கான 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெறுகிறது. இப்போட்டிக்கான லோகோவை ஐசிசி இன்று வெளியிட்டுள்ளது.
2011ம் ஆண்டு இதே நாளில் டோனி தலைமையிலான இந்திய அணி உலக கோப்பையை வென்றது. உலகக் கோபபையை 12 ஆண்டு ஆனதை கொண்டாடும் வகையில் ஐசிசி இன்று லோகோவை வெளியிட்டிருக்கிறது.
லோகோ வெளியிடப்பட்டுள்ள நிலையில், 2023 உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணியை வழிநடத்துவதில் கேப்டன் ரோகித் சர்மா உற்சாகமாக உள்ளார். கிரிக்கெட்டில் தொடர்புடைய அனைவருக்கும் இந்த உலக கோப்பை சிறப்பு வாய்ந்த போட்டி என கூறிய ரோகித், கோப்பையை வெல்வதற்கு அடுத்த சில மாதங்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட உள்ளதாக கூறினார்.
2011-ல் கோப்பை வென்ற இந்தியாவின் வரலாற்று வெற்றியை பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா நினைவு கூர்ந்துள்ளார். அத்துடன், 2023ல் நடக்கும் உலக கோப்பை தொடரை நடத்துவதை பிசிசிஐ ஆவலுடன் எதிர்நோக்கியிருப்பதாகவும் தெரிவித்தார்.
- 115 பந்தில் 95 ரன்கள் எடுத்து ஆட்ட நாயகன் விருது
- விராட் கோலி 116 பந்தில் 85 ரன்கள் சேர்த்தார்
இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான போட்டி நேற்று சென்னையில் நடைபெற்றது. இதில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
கே.எல். ராகுல் 97 ரன்கள் அடித்து சதம் அடிக்க முடியாமல் போனது. அவர் 91 ரன்கள் இருக்கும்போது, இந்தியாவின் வெற்றிக்கு 5 ரன்கள் தேவைப்பட்டது. அவர் சதம் அடிக்க 9 ரன்கள் தேவைப்பட்டது.
41-வது ஓவரை கம்மின்ஸ் வீசினார். இந்த ஓவரில் முதலில் ஒரு பவுண்டரி அடிக்க வேண்டும். ஸ்கோர் சமன் ஆகிவிடும். அதன்பின் சிக்ஸ் அடித்து அணியை வெற்றி பெற வைக்க வேண்டும். அதோடு சதத்தை பூர்த்தி செய்ய வேண்டும் என கே.எல். ராகுல் நினைத்தார்.
ஆனால், 2-வது பந்தை ஆஃப் சைடு தூக்கி அடித்தார். பந்து பவுண்டரிக்கு போகும் என நினைத்தார். ஆனால், லைனை தாண்டி சிக்ஸ் சென்று விட்டது. இந்தியா 201 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. கே.எல். ராகுல் 97 ரன்கள் எடுத்தார்.
சிக்ஸ் சென்றதும், அடடே... சிக்ஸ் போய்விட்டதே... என கவலையில் அப்படியே உட்கார்ந்தார். அதன்பின் ஹர்திக் பாண்ட்யா உடன் வெற்றியை பகிர்ந்து கொண்டார்.
இந்தியா 2 ரன்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட்டை இழந்த நிலையில், கே.எல். ராகுல்- விராட் கோலி ஜோடி அபாரமான விளையாடியது குறிப்பிடத்தக்கது.






