என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கேஎல் ராகுல்"

    • பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணி வெற்றி பெற்றது.
    • அப்போட்டியில் கே.எல்.ராகுல், தனது பேட்டை தரையில் வட்டமிட்டு அடித்து ஆக்ரோஷமாக கொண்டாடினார்.

    டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் ஐபிஎல் தொடரின் 46-வது லீக் ஆட்டம் நடைபெற்றது. இதில் டெல்லி கேப்பிட்டல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின.

    இப்போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 162 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிங்கியபெங்களூரு அணி 18.3 ஓவரில் 165 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் பெங்களூரு அணி 7வது வெற்றியுடன் புள்ளிப்பட்டியலில் முதல் இடத்துக்கு முன்னேறியது.

    இதனையடுத்து "MY HOME GROUND"என பெங்களூரு மைதானத்தில் கே.எல்.ராகுல் செய்த சைகையை டெல்லி மைதானத்தில் ஜாலியாக ரீ-க்ரியேட் செய்து விராட் கோலி கிண்டலடித்தார்.

    முன்னதாக பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணி வெற்றி பெற்றது. அப்போட்டியில் 93 ரன்கள் குவித்து வெற்றிக்கு வித்திட்ட கே.எல்.ராகுல், தனது பேட்டை தரையில் வட்டமிட்டு அடித்து ஆக்ரோஷமாக கொண்டாடினார் என்பது குறிப்பிடத்தக்கது. 

    • லக்னோ அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா, கே.எல். ராகுலுக்கு கைக்கொடுத்து பேச முயன்றார்.
    • கோயங்காவிடம் பேச விரும்பாத ராகுல் அவருக்கு கைகொடுத்துவிட்டு அங்கிருந்து நகர்ந்து சென்றார்.

    ஐபிஎல் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் லக்னோ- டெல்லி அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் விளையாடிய லக்னோ அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுகளை இழந்து 159 ரன்கள் எடுத்தது.

    இதையடுத்து 160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணி 17.5 ஓவர் முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 161 ரன்கள் எடுத்தது. இதனால் டெல்லி அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் லக்னோ அணியை வீழ்த்தியது.

    இப்போட்டியில் சிறப்பாக விளையாடிய கே.எல். ராகுல் 42 பந்துகளில் 57 ரன்கள் அடித்து டெல்லி அணியின் வெற்றிக்கு வித்திட்டார்.

    போட்டி முடிந்த பிறகு லக்னோ அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா, கே.எல். ராகுலுக்கு கைக்கொடுத்து பேச முயன்றார். ஆனால் அவரிடம் பேச விரும்பாத ராகுல் உடனடியாக அவருக்கு கைகொடுத்துவிட்டு அங்கிருந்து நகர்ந்து சென்றார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

    கடந்தாண்டு லக்னோ அணியின் கேப்டனாக கே.எல். ராகுல் இருந்தார். அப்போது சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் லக்னோ அணி படுமோசமான தோல்வியை தழுவியது.

    இப்போட்டியின் முடிவுக்கு பின்னர் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா அணியின் கேப்டன் கேஎல் ராகுலிடம் மைதானத்தில் வைத்தே கடுமையாக பேசினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர்.

    இதனையடுத்து லக்னோ அணியில் இருந்து வெளியேறிய கே.எல். ராகுலை டெல்லி அணி ஏலத்தில் எடுத்தது. மைதானத்தில் வைத்தே தன்னை அவமானப்படுத்திய பழைய அணியின் உரிமையாளரிடம் பேச விரும்பாமல் தான் கே.எல். ராகுல் அவருக்கு உடனடியாக கைகொடுத்துவிட்டு அங்கிருந்து நகர்ந்து சென்றுள்ளார் என்று நெட்டிசன்கள் இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

    • அதிவேகமாக 200 சிக்சர்கள் அடித்த வீரர்களின் பட்டியலில் கேஎல் ராகுல் 3 ஆம் இடம் பிடித்துள்ளார்.
    • 129 இன்னிங்ஸ்களில் இந்த மைல்கல்லை கேஎல் ராகுல் எட்டினார்.

    ஐபிஎல் தொடரின் 35ஆவது போட்டி அகமதாபாத்தில் நடைபெற்றது. இதில் குஜராத் டைட்டன்ஸ்- டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் களம் இறங்கிய டெல்லி கேப்பிட்டல்ஸ் 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 203 ரன்கள் குவித்தது. பின்னர் 204 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய குஜராத் டைட்டன்ஸ் அணி 19.2 ஓவரில் 204 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.

    இப்போட்டியில் 1 சிக்ஸ் அடித்ததன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் வேகமாக 200 சிக்சர்கள் அடித்த இந்திய வீரர் என்ற பெருமையை கேஎல் ராகுல் பெற்றார்.

    129 இன்னிங்ஸ்களில் இந்த மைல்கல்லை கேஎல் ராகுல் எட்டினார். மேலும், ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக 200 சிக்சர்கள் அடித்த வீரர்களின் பட்டியலில் கேஎல் ராகுல் 3 ஆம் இடம் பிடித்துள்ளார்.

    இப்பட்டியலில் கிறிஸ் கெயில் முதலிடத்தில் உள்ளார். அவர் வெறும் 69 இன்னிங்ஸ்களில் 200 சிக்சர்கள் அடித்துள்ளார். 97 இன்னிங்ஸ்களில் 200 சிக்சர்கள் அடித்த ஆண்ட்ரே ரஸல் 2 ஆம் இடத்தில உள்ளார்.

    • நான் செய்த Celebration எனக்கு மிகவும் பிடித்த படங்களுள் ஒன்றான காந்தாராவில் இடம் பெற்ற காட்சி.
    • இந்த மைதானம்தான் என் வீடு என்பதை மீண்டும் ஞாபகப்படுத்தவே அப்படி செய்தேன்.

    ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நேற்றிரவு நடந்த 24-வது லீக் ஆட்டத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் - டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற டெல்லி கேப்டன் அக்சர் படேல் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

    அதன்படி முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுக்கு 163 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து 164 ரன் இலக்கை நோக்கி ஆடிய டெல்லி அணி 17.5 ஓவர்களில் 4 விக்கெட்டுக்கு 169 ரன்கள் சேர்த்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அதிகபட்சமாக கே.எல். ராகுல் 93 ரன்கள் அடித்தார். அவரே ஆட்ட நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டார்.

    இந்த போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கே.எல். ராகுல் சிக்சர் அடித்து போட்டியை முடித்து வைத்தார். இந்த வெற்றியை கே.எல்.ராகுல், தனது பேட்டை தரையில் வட்டமிட்டு அடித்து ஆக்ரோஷமாக கொண்டாடினார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

    இந்நிலையில் ஆக்ரோஷமாக கொண்டாடியதற்காக காரணத்தை கேஎல் ராகுல் கூறியுள்ளார். அதில், சின்னசாமி மைதானம் மிகவும் ஸ்பெஷலான இடம். ஆர்சிபிக்கு எதிரான போட்டியில் வென்ற பின்பு நான் செய்த Celebration எனக்கு மிகவும் பிடித்த படங்களுள் ஒன்றான காந்தாராவில் இடம் பெற்ற காட்சி. இந்த மைதானம்தான் என் வீடு என்பதை மீண்டும் ஞாபகப்படுத்தவே அப்படி செய்தேன் என ராகுல் கூறினார்.

    • முதலில் ஆடிய ஆர்சிபி 20 ஓவரில் 163 ரன்கள் எடுத்தது.
    • தொடர்ந்து ஆடிய டெல்லி 169 ரன்கள் எடுத்து வென்றது.

    பெங்களூரு:

    ஐபிஎல் தொடரின் 24வது லீக் ஆட்டம் பெங்களூருவில் இன்று நடைபெற்றது. இதில் ஆர்சிபி, டெல்லி அணிகள் மோதின. டாஸ் வென்ற டெல்லி பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 163 ரன்கள் எடுத்தது. பில் சால்ட், டிம் டேவிட் தலா 37 ரன்கள் எடுத்தனர். ரஜத் படிதார் 25 ரன்னும், விராட் கோலி 22 ரன்னும் எடுத்தனர்.

    டெல்லி அணி சார்பில் விப்ராஜ் நிகம், குல்தீப் யாதவ் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 164 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி அணி களமிறங்கியது. முன்னணி வீரர்கள் விரைவில் ஆட்டமிழந்தனர். 58 ரன்கள் எடுப்பதற்குள் 4 விக்கெட்டுகளை இழந்து திணறியது.

    அடுத்து இறங்கிய கே.எல்.ராகுல்- ஸ்டப்ஸ் ஜோடி பொறுப்புடன் ஆடியது. சிறப்பாக ஆடிய கே.எல்.ராகுல் அரை சதமடித்தார்.

    இறுதியில், டெல்லி கேப்பிட்டல்ஸ் 17.5 ஓவரில் 169 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. டெல்லி அணி பெறும் 4வது வெற்றி இதுவாகும். ஆர்.சி.பி. பெறும் 2வது தோல்வி இதுவாகும்.

    கே.எல்.ராகுல் 93 ரன்னும், ஸ்டப்ஸ் 38 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

    • விஜய் சங்கர் 54 பந்தில் 69 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
    • எம்.எஸ். தோனி 26 பந்தில் 30 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    ஐபிஎல் 2025 சீசனின் 17ஆவது போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடைபெற்றது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ்- டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி கேப்டன் அக்சர் படேல் பேட்டிங் தேர்வு செய்தார்.

    அதன்படி முதலில் களம் இறங்கிய டெல்லி கேப்பிட்டல்ஸ் 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 183 ரன்கள் குவித்தது. அந்த அணியின் தொடக்க வீரர் கே.எல். ராகுல் 51 பந்தில் 77 ரன்கள் விளாசினார். அபிஷேக் பொரேல் 33 ரன்களும், அக்சர் படேல் 21 ரன்களும், சமீர் ரிஸ்வி 20 ரன்களும், ஸ்டப்ஸ் ஆட்டமிழக்காமல் 24 ரன்களும் சேர்த்தனர்.

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சார்பில் கலீல் அகமது 4 ஓவரில் 25 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார். முகேஷ் சவுத்ரி 4 ஓவரில் 50 ரன்கள் வாரி வழங்கினார்.

    பின்னர் 184 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை சூப்பர் கிங்ஸ் களம் இறங்கியது. ரச்சின் ரவீந்திரா, கான்வே ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். 2-வது ஓவரின் 5ஆவது பந்தில் ரச்சின் ரவீந்திரா 3 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    அடுத்து வந்த ருதுராஜ் கெய்க்வாட்டை 5 ரன்னில் வெளியேற்றினார் மிட்செல் ஸ்டார்க். 20 ரன்னுக்குள் சிஎஸ்கே முக்கிய இரண்டு விக்கெட்டுகளை இழந்தது. பின்னர் அந்த சரிவில் இருந்து சிஎஸ்கே அணியால் மீள முடியவில்லை. கான்வே 14 ரன்கள் எடுத்த நிலையிலும், ஷிவம் துபே 18 ரன்களும் எடுத்த நிலையிலும் விப்ராஜ் நிகம் பந்தில் ஆட்டமிழந்தார்.

    ஒரு பக்கம் விஜய் சங்கர் களத்தில் நின்றுகொண்டிருந்தார். ஆனால் இவரால் அதிரடியாக ரன்கள் குவிக்க இயலவில்லை. 6ஆவது விக்கெட்டுக்கு விஜய் சங்கர் உடன் எம்.எஸ். டோனி ஜோடி சேர்ந்தார்.

    விஜய் சங்கர் 43 பந்தில் அரைசதம் அடித்தார். கடைசி 3 ஓவரில் சென்னை அணிக்கு 67 ரன்கள் தேவைப்பட்டது. முகேஷ் குமார் வீசினார். இந்த ஓவரில் தோனி ஒரு சிக்ஸ் பறக்க விட்டார். இதனால் சிஎஸ்கே அணிக்க 13 ரன்கள் கிடைத்தன.

    கடைசி 2 ஓவரில் 54 ரன்கள் தேவைப்பட்டது. 19ஆவது ஓவரை ஸ்டார்க் வீசினார். இந்த ஓவரில் சென்னை அணியால் 13 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது.

    கடைசி ஓவரை முகேஷ் குமார் வீசினார். இந்த ஓவரில் விஜய் சங்கர் ஒரு சிக்ஸ் அடித்தார். தோனி ஒரு பவுண்டரி அடித்தார். இந்த ஓவரில் 15 ரன்கள் கிடைத்தது. இதனால் சிஎஸ்கே-வால் 20 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது. இதனால் டெல்லி 25 ரன்னில் வெற்றி பெற்றது. 

    விஜய் சங்கர் 54 பந்தில் 5 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 69 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். எம்.எஸ். தோனி 26 பந்தில் தலா ஒரு பவுண்டரி, சிக்சர் உடன் 30 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்கவில்லை

    • கே.எல். ராகுல் 77 ரன்கள் விளாசி ஆட்டமிழந்தார்.
    • கலீல் அகமது 2 விக்கெட் வீழ்த்தினார்.

    ஐபிஎல் தொடரின் 17ஆவது போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் சிஎஸ்கே- டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி கேப்டன் அக்சர் படேல் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தார்.

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை இன்று தோனி வழிநடத்துவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ருதுராஜ் கெய்க்வாட்தான் கேப்டனாக களம் இறங்கினார். டேவன் கான்வே களம் இறக்கப்பட்டுள்ளார்.

    டெல்லி அணியின் மெக்கர்க்- கேஎல் ராகுல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். முதல் ஓவரை கலீல் அகமது வீசினார். இந்த ஓவரின் 5ஆவது பந்தில் மெக்கர்க் அஸ்வினிடம் கேட்ச் கொடுத்து ஆட்மிழந்தார். இதனால் ரன் கணக்கை தொடங்காமல் டெல்லி விக்கெட்டை இழந்தது.

    2ஆவது விக்கெட்டுக்கு கேஎல் ராகுலுடன் அபிஷேக் பொரேல் ஜொடி சேர்ந்தார். இவர் தொடக்கம் முதல் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். முகேஷ் சவுத்ரி 2ஆவது ஓவரை வீசினார். இந்த ஓவரில் 4 பவுண்டரி, ஒரு சிக்சர் விளாசினார் பொரேல். இந்த ஓவில் டெல்லி 19 ரன்கள் குவித்தது. பவர்பிளேயான முதல் 6 ஓவரில் 1 விக்கெட்டை இழந்து 51 ரன்கள் விளாசியது டெல்லி கேப்பிட்டல்ஸ்.

    7ஆவது ஓவரை ஜடேஜா வீசினார். இந்த ஓவரின் 5ஆவது பந்தில் பொரேல் ஆட்டமிழந்தார். அவர் 20 பந்தில் 33 ரன்கள் சேர்த்தார். அடுத்து அக்சார் படேல் களம் இறங்கினார். இவர் இந்த ஓவரின் கடைசி பந்தை சிக்கருக்கு தூக்கினார்.

    முதல் 10 ஓவரில் டெல்லி கேப்பிட்டல்ஸ் 2 விக்கெட் இழப்பிற்கு 82 ரன்கள் குவித்தது. அப்போது கேஎல் ராகுல் 29 ரன்களுடனும், அக்சார் படேல் 20 ரன்களுடனும் சேர்த்திருந்தனர். 11ஆவது ஓவரை நூர் அகமது வீசினார். இந்த ஓவரின் 4ஆவது பந்தில் அக்சார் படேல் 21 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அப்போது டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் ஸ்கோர் 90 ரன்னாக இருந்தது.

    4ஆவது விக்கெட்டுக்கு கேஎல் ராகுல் உடன் சமீர் ரிஸ்வி ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடியும் விரைவாக ரன் குவிக்க முயற்சித்தது. 12ஆவது ஓவரில் டெல்லி அணிக்கு 11 ரன்கள் கிடைத்தன. 13ஆவது ஓவரில் 10 ரன்கள் கிடைத்தன.

    14ஆவது ஓவரின் 2ஆவது பந்தில் ஒரு ரன் எடுத்து கே.எல். ராகுல் 33 பந்தில் 2 பவுண்டரி, 3 சிக்சருடன் அரைசதம் அடித்தார். இந்த ஓவரில் 8 ரன்கள் கிடைத்தன. 15ஆவது ஓவரை நூர் அகமது வீசினார். இந்த ஓவரில் ராகுல் இரண்டு பவுண்டரி அடிக்க, ரிஸ்வி ஒரு சிக்ஸ் அடித்தார். இதனால் டெல்லி அணிக்க 17 ரன்கள் கிடைத்தன.

    16ஆவது ஓவரை சவுத்ரி வீசினார். இந்த ஓவரில் டெல்லிக்கு 8 ரன்கள் கிடைத்தன. 17ஆவது ஓவரை கலீல் அகமது வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தில் ரிஸ்வி ஆட்டமிழந்தார். அவர் 15 பந்தில் 20 ரன்கள் சேர்த்தார். அப்போது டெல்லி 16.1 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 146 ரன்கள் சேர்த்திருந்தது. அடுத்து ஸ்டப்ஸ் களம் இறங்கினார். டெல்லி அணிக்கு இந்த ஓவரில் 9 ரன்கள் கிடைத்தன.

    18ஆவது ஓவரை பதிரனா வீசினார். இந்த ஓவரில் 6 ரன்கள் ம்டுமே விட்டுக்கொடுத்தார். 19ஆவது ஓவரை சவுத்ரி வீசினார். இந்த ஓவரின் முதல் பந்தை கேஎல் ராகுல் பவுண்டரிக்கு விரட்டினார். 3ஆவது பந்தில் கொடுத்த கேட்சை சவுத்ரி தவற விட்டார். 4ஆவது பந்தை ஸ்டப்ஸ் அபாரமாக சிக்சருக்கு தூக்கினார். அதோடு 5ஆவது பந்தை பவுண்டரிக்கு விரட்டினார். இந்த ஓவரில் டெல்லி அணிக்கு 15 ரன்கள் கிடைத்தன. அதோடு 19 ஓவரில் 176 ரன்கள் எடுத்திருந்தது.

    கடைசி ஓவரை பதிரனா வீசினார். இந்த ஓவரின் 2ஆவது பந்தில் ராகுல் ஆட்டமிழந்தார். அவர் 51 பந்தில் 6 பவுண்டரி, 3 சிக்சருடன் 77 ரன்கள் விளாசினார். அடுத்த பந்தில் அஷுடோஸ் சர்மா ரனஅவுட் ஆனார். இந்த ஓவரில் பதிரனா 7 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுக்க டெல்லி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்க 183 ரன்கள் குவித்துள்ளது. ஸ்டப்ஸ் 12 பந்தில் 24 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    சென்னை அணி சார்பில் கலீல் அகமது 2 விக்கெட்டும், ஜடேஜா, பதிரனா, நூர் அகமது ஆகியோர தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். 

    • கேஎல் ராகுல்- அதியா தம்பதிக்கு அண்மையில் பெண் குழந்தை பிறந்தது.
    • தற்போது டெல்லி அணியில் கே.எல். ராகுல் இணைந்துள்ளார்.

    ஐபிஎல் தொடரின் 18-வது சீசன் தொடங்கி நடைபெற்று வருகிறது. மார்ச் 24 அன்று நடைபெற்ற போட்டியில் லக்னோவை வீழ்த்தி டெல்லி அணி திரில் வெற்றி பெற்று அசத்தியது.

    அண்மையில் தான் கே.எல். ராகுல் - அதியா ஷெட்டி தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்தது. இதனால் தான் முதல் போட்டியில் டெல்லி அணியின் அணியின் நட்சத்திர வீரர் கே.எல். ராகுல் விளையாடவில்லை.

    இந்நிலையில், தற்போது டெல்லி அணியில் கே.எல். ராகுல் இணைந்துள்ளார். இந்நிலையில், டெல்லி கேபிடல்ஸ் அணியின் ஆலோசகர் கெவின் பீட்டர்சனின் பேட்டிங் ஸ்டைலை கே.எல்.ராகுல் ரீக்ரியேட் செய்த விடியோவை அந்த அணி வெளியிட்டுள்ளது. இந்த வீடியோவில் கெவின் பீட்டர்சன் போலவே கே.எல்.ராகுல் மிமிக்ரி செய்துள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

    • 2022-ம் ஆண்டு கேப்டனாக பொறுப்பேற்ற கேஎல் ராகுல் தொடக்க ஆட்டத்தில் டக் அவுட் ஆகியுள்ளார்.
    • லக்னோ அணியில் கேப்டனாக களமிறங்கிய 3 பேரும் தொடக்க ஆட்டத்தில் டக் அவுட் ஆகியுள்ளனர்.

    ஐபிஎல் தொடரின் 18-வது சீசன் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. 14 சீசன்களாக 8 அணிகள் மட்டுமே விளையாடி வந்த நிலையில் 15-வது சீசனில் இருந்து கூடுதலாக லக்னோ மற்றும் குஜராத் ஆகிய இரண்டு அணிகள் சேர்க்கப்பட்டது.

    2022-ம் ஆண்டில் குஜராத் அணி ஹர்திக் பாண்ட்யா தலைமையில் கோப்பையை வென்றது. லக்னோ அணி 3-ம் இடம் பிடித்து அசத்தியது. 2023-ம் ஆண்டு குஜராத் 2-வது இடத்தையும் லக்னோ அதே 3-ம் இடத்தையும் பிடித்தது. கடந்த ஆண்டு லக்னோ 7-வது இடத்தை பிடித்தது. ஆனாலும் கடந்த 3 ஆண்டுகளில் அதிக வெற்றி பெற்ற டாப் 5 அணிகளில் லக்னோ அணி 4-வது இடத்தில் உள்ளது.

    2022ல் அறிமுகமான லக்னோ, தொடர்ந்து இரண்டு சீசன்களில் (2022, 2023) பிளேஆப் சுற்றுக்கு முன்னேறியது. 2024-ல் சற்று பின்தங்கினாலும், 44 போட்டிகளில் 24 வெற்றிகளுடன் 55.81% வெற்றி சதவீதத்தைப் பெற்றுள்ளது.

    இந்நிலையில் லக்னோ அணியின் கேப்டன்களாக களமிறங்கிய அனைவரும் தொடக்க ஆட்டத்தில் டக் அவுட் ஆகியுள்ளனர். அதன்படி 2022-ம் ஆண்டு கேப்டனாக பொறுப்பேற்ற கேஎல் ராகுல் தொடக்க ஆட்டத்தில் டக் அவுட் ஆகியுள்ளார்.

    அதேபோல் 2023-ம் ஆண்டு மற்றொரு கேப்டனான குர்ணால் பாண்ட்யாவும் தொடக்க ஆட்டத்தில் டக் அவுட் ஆனார். அந்த வகையில் இந்த சீசனில் கேப்டனாக களமிறங்கிய ரிஷப் பண்ட் டக் அவுட் ஆகியுள்ளார்.

    இதன் மூலம் லக்னோ அணியில் கேப்டனாக களமிறங்கிய 3 பேரும் தொடக்க ஆட்டத்தில் டக் அவுட் ஆகியுள்ளனர். இது புதுவிதமான சாதனையாக உள்ளது.

    • கேஎல் ராகுல்- அதியா தம்பதிக்கு நேற்று பெண் குழந்தை பிறந்தது.
    • இந்த தம்பதிக்கு டெல்லி அணி வீரர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி பேட்ஸ்மேன் கே.எல். ராகுல். இவர் 2023 ஜனவரி 23 அன்று நடிகை அதியா ஷெட்டியை (நடிகர் சுனில் ஷெட்டியின் மகள்) திருமணம் செய்து கொண்டார்.

    இந்த தம்பதிக்கு நேற்று (மார்ச் 24, 2025) பெண் குழந்தை பிறந்துள்ளது. இதனை அதியா ஷெட்டி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதனையடுத்து கே.எல். ராகுல் - அதியா ஷெட்டி தம்பதிக்கு திரைபிரபலங்கள் மற்றும் கிரிக்கெட் வீரர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    அந்த வகையில் டெல்லி அணியில் இடம் பெற்றிருந்த கேஎல் ராகுலுக்கு டெல்லி வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் என அனைவரும் இணைந்து அவருக்கு வாழ்த்து தெரிவித்து வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    2013-ல் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (RCB) அணியுடன் தொடங்கிய கேஎல் ராகுலின் ஐபிஎல் பயணம், பல அணிகளுக்காக (சன்ரைசர்ஸ் ஐதராபாத், பஞ்சாப் கிங்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்) விளையாடியுள்ளார். நடப்பு ஆண்டில் டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்காக (ரூ. 14 கோடி) விளையாட உள்ளார். 

    • கே.எல். ராகுல் - அதியா ஷெட்டி ஜோடிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.
    • அதியா ஷெட்டி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி பேட்ஸ்மேன் கே.எல். ராகுல். இவர் விக்கெட் கீப்பராகவும் செயல்படக் கூடியவர். நடந்து முடிந்த சாம்பியன்ஸ் டிராபியில் விக்கெட் கீப்பர் பணியுடன், பேட்டிங்கில் பினிஷர் ரோலை சிறப்பாக செய்து முடித்தார்.

    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரையிறுதியில், நியூசிலாந்துக்கு எதிராக இறுதிப் போட்டியில் ஆட்டமிழக்காமல் அணியை வெற்றி நோக்கி அழைத்துச் சென்றார்.

    தற்போது கே.எல். ராகுல் - அதியா ஷெட்டி ஜோடிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இதனை அதியா ஷெட்டி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

    இதனையடுத்து கே.எல். ராகுல் - அதியா ஷெட்டி தம்பதிக்கு திரைபிரபலங்கள் மற்றும் கிரிக்கெட் வீரர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    குழந்தை பிறந்துள்ளதால் ஐபிஎல் தொடக்க போட்டிகளில் கே.எல். ராகுல் பங்கேற்கமாட்டார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

    • கேஎல் ராகுல் தொடக்க வீரரில் இருந்து 7-வது வரிசை வரை களமிறங்கிய உள்ளார்.
    • மனைவிக்கு குழந்தை பிறக்கவுள்ளதால், தொடக்கத்தில் சில போட்டிகளை ராகுல் தவறவிடுகிறார்.

    ஐபிஎல் தொடரின் 18-வது சீசன் வருகிற 22-ந் தேதி தொடங்குகிறது. இந்த தொடருக்காக 10 அணிகளும் தீவிரமாக பயிற்சி செய்து வருகின்றனர். இந்த தொடரின் தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா- பெங்களூரு அணிகள் மோதவுள்ளது.

    இந்நிலையில் டெல்லி அணியின் கேப்டனாக கேஎல் ராகுல் நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அந்த பதவியை அவர் நிராகரித்தார். மேலும் ஒரு வீரராக அணிக்கு பங்காற்ற விரும்புவதாகவும் தெரிவித்தார். அவரது மனைவிக்கு குழந்தை பிறக்கவுள்ளதால், தொடக்க போட்டிகளை தவறவிடுகிறார். இதனையடுத்து அக்ஷர் படேல் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.

    இந்த நிலையில் கேல் ராகுல் பேட்டிங்கில் தொடக்க வீரராக களமிறங்காமல் நடுவரிசையில் களமிறங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அந்த அணியில் இடம் பெற்றிருந்த இங்கிலாந்து வீரர் ஹாரி ப்ரூக்-க்கு 2 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளதால் நடுவரிசையை சமாளிக்க கேஎல் ராகுல் அந்த வரிசையில் களமிறங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    கேஎல் ராகுல் தொடக்க வீரரில் இருந்து 7-வது வரிசை வரை இந்திய அணிக்காக களமிறங்கி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×