என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sanjiv Goenka"

    • ஐபிஎல் கேப்டனாக இருந்த நேரத்தில் உரிமையாளர் தரப்பிலிருந்து அதிகமான கேள்விகள் கேட்கப்பட்டன.
    • கிரிக்கெட் குறித்து எதுவுமே தெரியாதவர்களிடம் எதையும் விளக்க முடியாது

    நேர்காணல் ஒன்றில் ஐபிஎல் கேப்டன்சி குறித்து கேஎல் ராகுலிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், "10 மாதம் சர்வதேச கிரிக்கெட் விளையாடுவதில் ஏற்படும் களைப்பை விட 2 மாதம் ஐபிஎல் விளையாடுவதில் அதிகமாக சோர்வடைந்தேன்.

    ஐபிஎல் கேப்டனாக இருந்த நேரத்தில் உரிமையாளர் தரப்பிலிருந்து அளவுக்கும் அதிகமான கேள்விகள் கேட்கப்பட்டன. அணியில் ஏன் மாற்றம் செய்யப்பட்டது, அவரை ஏன் அணியில் எடுக்கவில்லை. எதிர் அணியினர் 3 ஸ்பின்னர்களுடன் ஆடுகிறார்களே நீங்கள் ஏன் ஆடவில்லை. எதிர் அணியால் மட்டும் எப்படி 200 அடிக்க முடிந்தது, உங்களால் ஏன் அடிக்க முடியவில்லை? ஒரே மைதானத்தில் எதிர் அணியின் ஸ்பின்னர்கள் எப்படி நன்றாக ஸ்விங் செய்கின்றனர், உங்களால் ஏன் முடியவில்லை.. இப்படி பல கேள்விகள் கேட்கப்பட்டன.

    இப்படியான கேள்விகளை எல்லாம் கேட்டுக்கொண்டே இருக்க முடியாது அல்லவா? இதற்கு பதில் அளிக்க தான் பயிற்சியாளர்கள் இருக்கிறார்கள். வீரர்கள் இதற்கு பதில் அளிக்க முடியாது. அணியில் அனைத்துமே சரியாக இருந்தாலும் உங்களால் வெற்றியை பெறமுடியாது, அதுதான் விளையாட்டின் தன்மை. என்ன செய்வது, கிரிக்கெட் குறித்து எதுவுமே தெரியாதவர்களிடம் எதையும் விளக்க முடியாது" என்று வேதனையுடன் தெரிவித்தார் .

    லக்னோ அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்காவை விமர்சித்து தான் கே.எல்.ராகுல் இவ்வாறு பேசியுள்ளதாக நெட்டிசன்கள் இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

    2024 ஆம் ஆண்டு லக்னோ அணியின் கேப்டனாக கே.எல். ராகுல் இருந்தார். அப்போது சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் லக்னோ அணி படுமோசமான தோல்வியை தழுவியது.

    இப்போட்டியின் முடிவுக்கு பின்னர் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா அணியின் கேப்டன் கேஎல் ராகுலிடம் மைதானத்தில் வைத்தே கடுமையாக பேசினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர்.

    இதனையடுத்து லக்னோ அணியில் இருந்து வெளியேறிய கே.எல். ராகுலை இந்தாண்டு டெல்லி அணி ஏலத்தில் எடுத்தது குறிப்பிடத்தக்கது. 

    • 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா விளையாடி வருகிறது.
    • பண்ட் 2 இன்னிங்ஸ்களிலும் சதம் அடித்து அசத்தினார்.

    இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.

    முதல் டெஸ்ட் போட்டி லீட்ஸில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியின் முதல் இன்னிங்சில் இந்தியா 471 ரன்களும், இங்கிலாந்து 465 ரன்களும் எடுத்தன.

    தொடர்ந்து 6 ரன்கள் முன்னிலை பெற்ற இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் 96 ஓவர் முடிவில் 364 ரன்கள் குவித்து ஆல் அவுட்டானது. அதிகபட்சமாக ரிஷப் பண்ட் (118) மற்றும் கேஎல் ராகுல் (137) இருவரும் சதமடித்து அசத்தினர். குறிப்பாக பண்ட் 2 இன்னிங்ஸ்களிலும் சதம் அடித்து அசத்தினார்.

    இதனையடுத்து, 371 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடி வரும் இங்கிலாந்து 4 ஆம் நாள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 21 ரன்கள் எடுத்துள்ளது.

    இந்நிலையில், இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் சதம் விளாசிய ரிஷப் பண்ட், கே.எல் ராகுலுக்கு லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    2024 ஐபிஎல் சீசனில் லக்னோ அணியின் கேப்டனாக இருந்த கே.எல் ராகுலை மைதானத்தில் வைத்தே சஞ்சீவ் கோயங்கா திட்டியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து 2025 ஐபிஎல் தொடரில் லக்னோ அணியில் இருந்து கே.எல் ராகுல் விலகினார். ரிஷப் பண்ட் லக்னோ அணியின் கேப்டனாக பொறுப்பேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. 

    • லக்னோ அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா, கே.எல். ராகுலுக்கு கைக்கொடுத்து பேச முயன்றார்.
    • கோயங்காவிடம் பேச விரும்பாத ராகுல் அவருக்கு கைகொடுத்துவிட்டு அங்கிருந்து நகர்ந்து சென்றார்.

    ஐபிஎல் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் லக்னோ- டெல்லி அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் விளையாடிய லக்னோ அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுகளை இழந்து 159 ரன்கள் எடுத்தது.

    இதையடுத்து 160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணி 17.5 ஓவர் முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 161 ரன்கள் எடுத்தது. இதனால் டெல்லி அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் லக்னோ அணியை வீழ்த்தியது.

    இப்போட்டியில் சிறப்பாக விளையாடிய கே.எல். ராகுல் 42 பந்துகளில் 57 ரன்கள் அடித்து டெல்லி அணியின் வெற்றிக்கு வித்திட்டார்.

    போட்டி முடிந்த பிறகு லக்னோ அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா, கே.எல். ராகுலுக்கு கைக்கொடுத்து பேச முயன்றார். ஆனால் அவரிடம் பேச விரும்பாத ராகுல் உடனடியாக அவருக்கு கைகொடுத்துவிட்டு அங்கிருந்து நகர்ந்து சென்றார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

    கடந்தாண்டு லக்னோ அணியின் கேப்டனாக கே.எல். ராகுல் இருந்தார். அப்போது சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் லக்னோ அணி படுமோசமான தோல்வியை தழுவியது.

    இப்போட்டியின் முடிவுக்கு பின்னர் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா அணியின் கேப்டன் கேஎல் ராகுலிடம் மைதானத்தில் வைத்தே கடுமையாக பேசினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர்.

    இதனையடுத்து லக்னோ அணியில் இருந்து வெளியேறிய கே.எல். ராகுலை டெல்லி அணி ஏலத்தில் எடுத்தது. மைதானத்தில் வைத்தே தன்னை அவமானப்படுத்திய பழைய அணியின் உரிமையாளரிடம் பேச விரும்பாமல் தான் கே.எல். ராகுல் அவருக்கு உடனடியாக கைகொடுத்துவிட்டு அங்கிருந்து நகர்ந்து சென்றுள்ளார் என்று நெட்டிசன்கள் இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

    • மும்பைக்கு எதிரான இன்றைய போட்டியில் ரிஷப் பண்ட் 2 ரன்னில் ஆட்டமிழந்தார்.
    • இதற்கு முன் விளையாடிய மூன்று போட்டிகளில் ரிஷப் பண்ட் மொத்தமாக 17 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார்.

    2025 ஐபிஎல் தொடரில் இன்று லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற மும்பை பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் விளையாடிய லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் 203 ரன்கள் எடுத்தது. என்ன தான் லக்னோ அணி 200 ரன்களுக்கு மேல் குவித்தாலும் அந்த அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் 2 ரன்னில் ஆட்டமிழந்தார். இதனால் அவரது தடுமாற்றம் தொடர்கிறது. இதுவரை ஆடிய மூன்று போட்டிகளில் ரிஷப் பண்ட் மொத்தமாக 17 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார்.

    இதனால் தொடர்ந்து சொதப்பி வரும் ரிஷப் பண்டுக்கு இந்த போட்டி முடிந்தபிறகும் அந்த அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா சில அறிவுரைகளை வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ஒவ்வொரு போட்டி முடிந்தவுடனும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா மைதானத்திலேயே பன்மொழிக் உடன் காரசாரமான விவாதத்தில் ஈடுபடுகிறார். மிகவும் கோபமாக பேசுகிறார். இதுபோன்ற காட்சிகள் சமூக வலைதளங்களில் புகைப்படங்களாகவும், வீடியோக்களாகவும் வெளியாகி வருகின்றன.

    இந்த சம்பவத்தை வைத்து ரிஷப் பண்டை ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர். இன்றைக்கு என்ன பன்ன காத்திருக்கானோ தெரியல என்ற வடிவேலு கமெடி டயலாக்கை வைத்தும் சிவாஜி படத்தில் ஆபீஸ் ரூமுக்கு வாங்க என்ற டயலாக்கை வைத்து பண்டை கலாய்த்து வருகின்றனர்.

    • பஞ்சாபுக்கு எதிரான போட்டியில் ரிஷப் பண்ட் 2 ரன்னில் ஆட்டம் இழந்து மிகுந்த ஏமாற்றத்தை அளித்தார்.
    • இதுவரை விளையாடிய 3 போட்டியிலும் சேர்த்து ரிஷப் பண்ட் 17 ரன்களே எடுத்து உள்ளார்.

    லக்னோ:

    ஐ.பி.எல். வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்டவர் என்ற சாதனையில் ரிஷப்பண்ட் உள்ளார். அவரை லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி ரூ.27 கோடிக்கு எடுத்தது. கடந்த காலங்களில் அவர் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்காக ஆடி இருந்தார்.

    ஆனால் ரிஷப்பண்டின் ஆட்டம் ஏமாற்றம் அளிக்கும் வகையில் உள்ளது. ரூ.27 கோடிக்கான மதிப்பில் அவர் இல்லை என்று தெரியவந்துள்ளது. இதுவரை விளையாடிய 3 போட்டியிலும் சேர்த்து அவர் 17 ரன்களே எடுத்து உள்ளார். சராசரி 5.66 ஆகும். ஒரே ஒரு பவுண்டரி மட்டுமே எடுத்துள்ளார்.

    டெல்லி அணிக்கு எதிராக ரன் எதுவும் எடுக்காமலும், ஐதராபாத்துக்கு எதிராக 15 ரன்னும் எடுத்து வெளியேறி இருந்தார். நேற்றைய பஞ்சாபுக்கு எதிரான போட்டியில் ரிஷப் பண்ட் 2 ரன்னில் ஆட்டம் இழந்து மிகுந்த ஏமாற்றத்தை அளித்தார்.

    தோல்விக்கு பிறகு லக்னோ அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா கேப்டன் ரிஷப்பண்டுடன் உரையாற்றுவது போன்ற புகைப்படம் வெளியாகி உள்ளது. தோல்வி தொடர்பாக அவர் ரிஷப்பண்டை கேள்வி கேட்பது போல் உள்ளது. மேலும் ரிஷப் பண்டை நோக்கி விரலை நீட்டியது கூட காணப்பட்டது.

    இது தொடர்பாக சமூக வலைதளத்தில் சஞ்சீவ் கோயங்கா விமர்சிக்கப்பட்டு உள்ளார். கடந்த ஐ.பி.எல். சீசனின் போது அவர் கேப்டனாக பணியாற்றிய கே.எல். ராகுல் மீதும் தோல்வி தொடர்பாக கடுமையான வாக்கு வாதத்தில் ஈடுபட்டார். இதனால் ராகுல் அந்த அணியில் இருந்து இந்த சீசனில் விடுவிக்கப்பட்டார். தற்போது அதே நிலைமை ரிஷப்பண்டுக்கு உருவாகிறது.

    • இன்றைய தோல்வி நிச்சயம் ஏமாற்றத்தை எனக்கு கொடுத்திருக்கிறது.
    • பந்து வீச்சு மற்றும் பேட்டிங் என இரண்டு பவர் பிளேவிலும் நாம் சிறப்பாக செயல்பட்டோம்.

    ஐபிஎல் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் லக்னோ- டெல்லி அணிகள் மோதின. கடந்த வருடம் டெல்லி அணியில் இருந்த ரிஷப் பண்ட் மெகா ஏலத்தை தொடர்ந்து லக்னோ அணிக்கு மாறியிருக்கிறார். இந்த தருணத்தில் தான் நேற்று நடந்த முதல் லீக் போட்டியில் லக்னோ அணி 209 ரன்களை எடுத்தது. இதையடுத்து பந்துவீச்சிலும் விரைவாக ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தியும் டெல்லி அணியிடம் எதிர்பாராதவிதமாக தோல்வியை தழுவியது.

    இந்நிலையில் போட்டி முடிந்த பிறகு லக்னோ அணி உரிமையாளர் கோயங்கா டிரஸ்ஸிங் ரூமுக்கு சென்று வீரர்களுடன் உரையாடினார்.

    அப்போது அவர் கூறியதாவது:-

    இன்றைய தோல்வி நிச்சயம் ஏமாற்றத்தை எனக்கு கொடுத்திருக்கிறது. ஆனால் இன்றைய ஆட்டத்தில் நிறைய நல்ல விஷயங்களும் நடந்து இருக்கிறது. நான் அதை மட்டும் எடுத்துக் கொள்ள விரும்புகின்றேன். பந்து வீச்சு மற்றும் பேட்டிங் என இரண்டு பவர் பிளேவிலும் நாம் சிறப்பாக செயல்பட்டோம். ஆனால் இதுபோன்ற சம்பவங்கள் கிரிக்கெட்டில் நடக்கும். நாம் ஒரு இளம் அணி. எனவே நல்ல விஷயங்களை மட்டும் எடுத்துக் கொண்டு அடுத்த போட்டிக்கு நாம் தயாராகுவோம்.

    அந்த போட்டியில் நல்ல முடிவு கிடைக்கும் என எதிர்பார்ப்போம். ஆனால் இன்று ஏமாற்றமான முடிவு தான். எனினும் நல்ல போட்டியாக அமைந்தது.

    என்று கோயங்கா கூறினார்.

    • ஐ.பி.எல்.-ன் 18-வது சீசன் வருகிற 22-ம் தேதி தொடங்குகிறது.
    • ஐபிஎல் தொடரை முன்னிட்டு லக்னோ அணி உபி முதல் மந்திரியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

    லக்னோ:

    ஐ.பி.எல்.-ன் 18-வது சீசன் வருகிற 22-ம் தேதி தொடங்குகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, கொல்கத்தா நைட் ரைட்சர்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத், ராஜஸ்தான் ராயல்ஸ், பஞ்சாப் கிங்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ், குஜராத் டைட்டன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் ஆகிய 10 அணிகள் கலந்து கொள்கின்றன.

    கொல்கத்தாவில் நடைபெறும் முதல் லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி, பெங்களூரு ராயல் சேலஞ்சர்சை எதிர்கொள்கிறது.

    இந்த நிலையில், ஐபிஎல் தொடரை முன்னிட்டு லக்னோ அணி உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா, கேப்டன் ரிஷப் பண்ட் மற்றும் அணி வீரர்கள் உத்தரபிரதேச முதல் மந்திரி யோகி ஆதித்யநாத்தை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். 

    மேலும் லக்னோ அணி வீரர்கள் கையெழுத்திட்ட மினி பேட்டை யோகி ஆதித்யநாத்திற்கு பரிசாக லக்னோ அணி உரிமையாளரும் கேப்டன் ரிஷப் பண்டும் இணைந்து வழங்கினார். இது தொடர்பான புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. 

    • உரிமையாளர் தன்னுடைய அணியின் மீது மிகவும் ஆர்வமாக உள்ளார்.
    • சுற்றிலும் பல கேமராக்கள் உள்ளன.

    ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற 57-வது லீக் போட்டியில் லக்னோ - ஐதராபாத் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி 20 ஓவர் முடிவில் 165 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து களமிறங்கிய ஐதராபாத் அணியில் அபிஷேக் சர்மா 75* (28), டிராவிஸ் ஹெட் 89* (30) ரன்கள் அடித்து 9.4 ஓவரிலேயே எளிதாக வெற்றி பெற்றது.

    இதனால் கோபமடைந்த லக்னோ அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோனேகா போட்டியின் முடிவில் கேப்டன் கேஎல் ராகுலை திட்டினார். இது சமூக வலைதளங்களில் வைரலனாது. இதற்கு ரசிகர்கள் தங்களது கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். நீங்கள் 16 கோடி சம்பளத்தை கொடுக்கும் உரிமையாளராக இருந்தாலும் பொதுவெளியில் கேப்டனை இப்படி திட்டலாமா? என்று அவரை விமர்சித்து வருகின்றனர்.

    இந்நிலையில் சம்பளத்தை கொடுக்கும் உரிமையாளராக இருந்தாலும் பொதுவெளியில் கேப்டனை திட்டுவது சரியல்ல என்று முன்னாள் தென்னாப்பிரிக்கா ஜாம்பவான் கிரேம் ஸ்மித் விமர்சித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    உரிமையாளர் தன்னுடைய அணியின் மீது மிகவும் ஆர்வமாக உள்ளார். ஏனெனில் அவருடைய அணி முழுமையான தோல்வியை சந்தித்ததால் உணர்ச்சிகள் உருண்டோடின. இருப்பினும் இந்த உரையாடல்கள் மூடிய கதவுகளுக்கு பின்னால் நடந்திருக்க வேண்டும். சுற்றிலும் பல கேமராக்கள் உள்ளன.

    என்று கூறினார். 

    • கேஎல் ராகுல் நேற்றைய போட்டிக்கு பிறகு அணியினருடன் பயணிக்காமல், மும்பையில் உள்ள தனது வீட்டிற்கு சென்றுள்ளார்.
    • கடைசி 2 போட்டிகளில் அவர் அணியின் கேப்டன் பதவியிலிருந்து விலகி, பேட்டிங்கில் கவனம் செலுத்தவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    ஐபிஎல் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 இக்கெட்டுகளை இழந்து 165 ரன்களை மட்டுமே சேர்த்தது.

    இதனையடுத்து ஆடிய ஐதராபாத் அணியில் டிராவிஸ் ஹெட் மற்றும் அபிஷேக்க் சர்மா போட்டியின் முதல் ஓவரில் இருந்தே லக்னோ அணியின் பந்துவீச்சை நாளாபுறமும் சிதறடித்தனர். இதனால் சன்ரைசர்ஸ் அணி 9.4 ஓவர்களிலேயே இலக்கை எட்டி மிரட்டியது.

    இதன்மூலம் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்று புதிய வரலாறு படைத்துள்ளது.

    இப்போட்டியின் முடிவுக்கு பின்னர் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா அணியின் கேப்டன் கேஎல் ராகுலிடம் கடுமையாக பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதனால் கேஎல் ராகுலின் ரசிகர்கள் மட்டுமின்றி பல முன்னாள் வீரர்களும் சஞ்சீவ் கோயங்காவின் செயலுக்கு கண்டனங்களை தெரிவித்தனர்.

    இந்நிலையில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து கேஎல் ராகுல் விலகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நேற்றைய போட்டிக்கு பிறகு கேஎல் ராகுலை கேப்டன் பதவியிலிருந்து நீக்கவும், மேலும் அடுத்த ஐபிஎல் தொடருக்கான வீரர் ஏலத்திற்கு முன்னதாக அவரை லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியிலிருந்து விடுவிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் கேஎல் ராகுல் நேற்றைய போட்டிக்கு பிறகு அணியினருடன் பயணிக்காமல், மும்பையில் உள்ள தனது வீட்டிற்கு சென்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

    இருப்பினும் அவர் ஒருசில தினங்களில் மீண்டும் அணியில் இணையவுள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் கடைசி இரண்டு போட்டிகளில் அவர் அணியின் கேப்டன் பதவியிலிருந்து விலகி, பேட்டிங்கில் கவனம் செலுத்தவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒருவேளை கேஎல் ராகுல் கேப்டன் பதவியிலிருந்து விலகும் நிலையில் நிக்கோலஸ் பூரன் அணியை வழிநடத்துவார் என்பது குறிப்பிடத்தக்கது. 

    • ரோகித் சர்மா ஏலத்துக்கு வருவாரா? மாட்டாரா? என்று யாருக்கும் தெரியாது.
    • எல்லோருக்கும் ஒரு விருப்பமான பட்டியல் உள்ளது.

    கொல்கத்தா:

    18-வது ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு நடைபெறுகிறது. இந்தப் போட்டிக்கான மெகா ஏலம் நடக்கிறது. டிசம்பர் மற்றும் பிப்ரவரி மாதங்களில் 2 கட்டங்காளக ஏலம் நடைபெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    ஒவ்வொரு அணியிலும் எத்தனை வீரர்களை தக்க வைத்துக் கொள்ள முடியும் என்பது பற்றி அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. 5 முதல் 6 வீரர்கள் வரை தக்க வைத்துக் கொள்ளலாம் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

    5 முறை ஐ.பி.எல். தொடரை வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி கடந்த முறை லீக் சுற்றோடு வெளியேறியது. இதற்கு கேப்டன் பதவிதான் காரணம் என்று கூறப்பட்டது. ரோகித்சர்மா கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டு ஹர்திக் பாண்ட்யாவுக்கு அந்த பதவி கொடுக்கப்பட்டது. இது போட்டியின் போது கடுமையாக எதிரொலித்தது.

    மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் தற்போது 20 ஓவர் உலக கோப்பையை வென்ற ரோகித்சர்மா, 20 ஓவர் அணி இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ், தற்போதைய கேப்டன் ஹர்திக் பாண்ட்யா மற்றும் வேகப் பந்து வீரர் ஜஸ்பிரித் பும்ரா ஆகிய 4 வீரர்களையும் தக்க வைத்துக் கொள்ளுமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த நிலையில் ரோகித் சர்மாவுக்காக ரூ.50 கோடியை கொடுக்க லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி தயாராக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அவருக்காக ரூ.50 கோடியை தனியாக ஒதுக்கி வைத்துள்ளதாக அந்த தகவல் தெரிவிக்கிறது. இது தொடர்பாக லக்னோ அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்காவிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

    ரோகித் சர்மா ஏலத்துக்கு வருவாரா? மாட்டாரா? என்று யாருக்கும் தெரியாது. அப்படி ஏலத்துக்கு வந்தால் ஒரு வீரருக்கு 50 சதவீத சம்பளத்தை பயன்படுத்த முடியுமா? மற்ற 22 வீரர்களை எப்படி தேர்வு செய்ய இயலும்.

    எல்லோருக்கும் ஒரு விருப்பமான பட்டியல் உள்ளது. சிறந்த வீரர் சிறந்த கேப்டன் இருக்க வேண்டும். ஒவ்வொரு உரிமையாளருக்கும் ஒரே ஆசை இருக்கும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    கடந்த சீசனில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதற்காக கேப்டன் கே.எல்.ராகுலை பொது வெளியில் சஞ்சீவ் கோயங்கா கண்டித்தார். அவர் வாக்குவாதம் செய்த வீடியோ வெளியாகி இருந்தது. இந்த சீசனில் லக்னோ அணிக்கு கே.எல். ராகுல் கேப்டனாக நீடிக்க மாட்டார். ஆனால் அவர் அணியில் தொடர்ந்து இருப்பார்.

    சமீபத்தில் லக்னோ அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்காவை கே.எல். ராகுல் சந்தித்து கேப்டன் பதவியில் நீடிக்க விருப்பம் இல்லை என்று தெரிவித்து இருந்தார்.

    • இது முழு குழுவையும் பாதித்தது என்று நினைக்கிறேன்.
    • பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேற எங்களுக்கு இன்னும் வாய்ப்பு இருந்தது.

    2024 ஐபிஎல் போட்டியில் ஐதராபாத் அணியுடன் 10 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்த பிறகு, எல்எஸ்ஜி உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா மைதானத்தில் கேஎல் ராகுலுடன் கடுமையாக நடந்து கொண்டார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    இந்நிலையில் பொதுமக்களின் பார்வையில் சிக்கிய அந்த பேச்சுவார்த்தை குறித்து கேஎல் ராகுல் இறுதியாக தனது மௌனத்தை கலைத்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    நாங்கள் ஐந்து ஆட்டங்களில் மூன்று அல்லது கடைசி நான்கு ஆட்டங்களில் இரண்டில் வெற்றி பெற வேண்டும் என்று நினைக்கிறேன். இது நடந்தபோது, எங்கள் அனைவருக்கும் இது ஒரு பெரிய அதிர்ச்சியாக இருந்தது

    விளையாட்டிற்குப் பிறகு மைதானத்தில் என்ன நடந்தாலும் அது ஒரு பகுதியாக இருப்பதற்கான மிகச் சிறந்த விஷயமாகவோ அல்லது கிரிக்கெட் மைதானத்தில் எவரும் பார்க்க விரும்பும் விஷயமாகவோ இல்லை. இது முழு குழுவையும் பாதித்தது என்று நினைக்கிறேன். பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேற எங்களுக்கு இன்னும் வாய்ப்பு இருந்தது.

    நாங்கள் ஒரு குழுவாக அரட்டை அடித்து, மீண்டும் ஒருங்கிணைக்க முயற்சித்தோம் எல்லாவற்றையும் ஒதுக்கி வைத்துவிட்டு, எங்களின் சிறந்த கால்களை முன்னோக்கி வைக்க முயற்சித்தோம். நாங்கள் எங்களால் முடிந்தவரை முயற்சித்தோம், ஆனால் துரதிர்ஷ்டவசமாக, எங்களின் சிறந்தவை எப்போதும் போதுமானதாக இல்லை. நாங்கள் எதிர்பார்த்தது போல் எங்களால் பிளேஆஃப்களுக்குச் செல்லவோ அல்லது சீசனை வெல்லவோ முடியவில்லை என்பது வருத்தமாக இருந்தது.

    • சஞ்சீவ் கோயங்கா கேஎல் ராகுலிடம் கடுமையாக பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
    • கே.எல்.ராகுலுக்கு தகுதியான மரியாதையை கொடுப்போம் என்று டெல்லி உரிமையாளர் தெரிவித்தார்.

    2024 ஐபிஎல் போட்டியில் ஐதராபாத் அணியுடன் 10 விக்கெட் வித்தியாசத்தில் லக்னோ அணி தோல்வியடைந்தது.

    இப்போட்டியின் முடிவுக்கு பின்னர் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா அணியின் கேப்டன் கேஎல் ராகுலிடம் கடுமையாக பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதனால் கேஎல் ராகுலின் ரசிகர்கள் மட்டுமின்றி பல முன்னாள் வீரர்களும் சஞ்சீவ் கோயங்காவின் செயலுக்கு கண்டனங்களை தெரிவித்தனர்.

    இதனையடுத்து வரும் ஐபிஎல் தொடரில் லக்னோ அணி கே.எல். ராகுலை தக்க வைக்கவில்லை. இந்நிலையில் நடந்து முடிந்த ஐபிஎல் மெகா ஏலத்தில் கே.எல்.ராகுலை 14 கோடிக்கு டெல்லி அணி வாங்கியது.

    இதனையடுத்து கே.எல்.ராகுல் குறித்து பேசிய டெல்லி அணி உரிமையாளர் பார்த் ஜிண்டால், "கே.எல். ராகுல் ஒரு தரமான வீரர் என்று நான் நம்புகிறேன். அவரை குறிப்பிட்ட தொகைக்கு (ரூ.14 கோடி) ஏலத்தில் எடுத்தது மற்ற வீரர்களை ஏலத்தில் எடுக்க எங்களுக்கு உதவியது. கே.எல். ராகுலை எனக்கு நீண்ட காலமாக தனிப்பட்ட முறையில் தெரியும். அவர் எனக்கு நல்ல நண்பர்.

    அவர் அன்புடனும் மரியாதையுடனும் வளர்ந்துள்ளார். அவருக்குத் தகுதியான அன்பையும் மரியாதையையும் நான் கொடுக்கப் போகிறேன். அவர் டெல்லி அணிக்கு ஐபிஎல் கோப்பையை வென்று தருவார் என்று நான் நம்புகிறேன்" என்று தெரிவித்தார்.

    லக்னோ அணி உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா கே.எல். ராகுலிடம் கடுமையாக நடந்து கொண்டதை விமர்சிக்கும் தொனியில் டெல்லி அணி உரிமையாளர் பார்த் ஜிண்டால் பேசியுள்ளது ரசிகர்களை கவர்ந்துள்ளது.

    ×