என் மலர்
நீங்கள் தேடியது "LSG"
- 29 பந்தில் அரைசதம் அடித்த ரிஷப் பண்ட், 54 பந்தில் 10 பவுண்டரி, 6 சிக்சருடன் சதம் விளாசினார்.
- மிட்செல் மார்ஷ் 37 பந்தில் 67 ரன்கள் விளாசினார்.
ஐபிஎல் 2025 சீசனின் கடைசி லீக் போட்டி லக்னோவில் நடைபெற்று வருகிறது. இதில் ஆர்சிபி- லக்னோ அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. டாஸ் வென்ற ஆர்சிபி அணி கேப்டன் ஜித்தேஷ் சர்மா பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி லக்னோ அணியின் மிட்செல் மார்ஷ், மேத்யூ பிரீட்ஸ்கே ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். பிரீட்ஸ்கே 12 பந்தில் 14 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
அடுத்து மிட்செல் மார்ஷ் உடன் ரிஷப் பண்ட் ஜோடி சேர்ந்தார். ரிஷப் பண்ட் தொடக்க முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். மிட்செல் மார்ஷ் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
லக்னோ அணி பவர்பிளேயில் 1 விக்கெட் இழப்பிற்கு 55 ரன்கள் எடுத்திருந்தது. 9.5 ஓவரில் 100 ரன்னைத் தொட்டது. ரிஷப் பண்ட் 29 பந்திலும், மிட்செல் மார்ஷ் 31 பந்திலும் அரைசதம் அடித்தனர். லக்னோ அணி 14.2 ஓவரில் 150 ரன்னைத் தொட்டது.
16ஆவது ஓவரை புவனேஷ்வர் குமார் வீசினார். இந்த ஓவரில் அடுத்தடுத்து இரண்டு சிக்ஸ் விளாசிய மிட்செல் மார்ஷ் 3ஆவது பந்தில் ஆட்டமிழந்தார். அவர் 37 பந்தில் 67 ரன்கள் விளாசினார். அவரது ஸ்கோரி 4 பவுண்டரி, 5 சிக்சர் அடங்கும். அப்போது லக்னோ 15.3 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 177 ரன்கள் குவித்திருந்தது.
3ஆவது விக்கெட்டுக்கு ரிஷப் பண்ட் உடன் நிக்கோலஸ் பூரன் ஜோடி சேர்ந்தார். 17ஆவது ஓவரை துஷாரா வீசினார். இந்த ஓவரில் லக்னோ 7 ரன்கள் அடித்தது. இதனால் 191 ரன்கள் எடுத்திருந்தது.
18ஆவது ஓவரை புவனேஷ்வர் குமார் வீசினார். இந்த ஓவரின் 5ஆவது பந்தை பவுண்டரிக்கு விரட்டி 54 பந்தில் சதம் விளாசினார் ரிஷப் பண்ட். இந்த தொடரில் தொடர்ந்து மோசமாக விளையாடி வந்த நிலையில் சதம் விளாசியுள்ளார். இந்த ஓவரில் லக்னோ அணிக்கு 10 ரன்கள் கிடைத்தது. அத்துடன் 201 ரன்கள் சேர்த்தது.
19ஆவது ஓவரை யாஷ் தயால் வீசினார். இந்த ஓவரில் 13 ரன்கள் அடித்தது லக்னோ. கடைசி ஓவரை ரொமாரியோ ஷெப்பர்டு வீசினார். இந்த ஓவரின் 5ஆவது பந்தில் நிக்கோலஸ் பூரன் 13 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். இந்த ஓவரில் 13 ரன்கள் கிடைக்க லக்னோ 227 ரன்கள் குவித்துள்ளது. ரிஷப் பண்ட் 61 பந்தில் 11 பவுண்டரி, 8 சிக்சருடன் 118 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
- ஆர்சிபி வெற்றி பெற்றால் குவாலிபையர் 1-க்கு முன்னேறும்.
- தோல்வியடைந்தால் எலிமினேட்டர் சுற்றில் மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்ளும்.
ஐபிஎல் 2025 சீசனின் கடைசி லீக் போட்டி லக்னோவில் நடக்கிறது. இதில் ஆர்சிபி- லக்னோ அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதில் வெற்றி பெற்றால் ஆர்சிபி குவாலிபையர்-1க்கு முன்னேறும். லக்னோ ஏற்கனவே பிளேஆஃப் வாய்ப்பை இழந்துள்ளது. இதில் வெற்றி பெற்றால் ஆறுதல் வெற்றியாக இருக்கும்.
இந்த போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டதில் ஆர்சிபி கேப்டன் ஜித்தேஷ் சர்மா டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.
லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி:-
ரிஷப் பண்ட், நிக்கோலஸ் பூரன், மிட்செல் மார்ஷ், பிரீட்ஸ்கே, ஆயுஷ் படோனி, அப்துல் சமாத், ஹிமாத் சிங், ஷபாஷ் அகமது, திக்வேஷ் ரதி, ஆவேஷ் கான், வில்லியம் ஓ'ரூர்கே.
ஆர்சிபி அணி:-
பில் சால்ட், விராட் கோலி, மயங்க் அகர்வால், லிவிங்ஸ்டன், ஜித்தேஷ் சர்மா, ரொமாரியோ ஷெப்பர்டு, குருணால் பாண்ட்யா, புவி, யாஷ் தயால், நுவான் துஷாரா.
- மிட்செல் மார்ஷ் 64 பந்தில் 117 ரன்கள் விளாசினார்.
- நிக்கோலஸ் பூரன் 27 பந்தில் 56 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
ஐபிஎல் தொடரின் 64ஆவது போட்டி குஜராத் அகமதாபாத்தில் நடைபெற்று வருகிறது. இதில் குஜராத் டைட்டன்ஸ்- லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் குஜராத் டைட்டன்ஸ் அணி கேப்டன் சுப்மன் கில் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் மார்கிராம், மிட்செல் மார்ஷ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.இருவரும் தொடக்கம் முதல் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதனால் லக்னோ பவர்பிளேயான முதல் 6 ஓவரில் விக்கெட் இழப்பின்று 53 ரன்கள் சேர்த்தது.
அணியின் ஸ்கோர் 9.5 ஓவரில் 91 ரன்னாக இருக்கும்போது மார்கிராம் ஆட்டமிழந்தார். அடுத்து மிட்செல் மார்ஷ் உடன் நிக்கோலஸ் பூரன் ஜோடி சேர்ந்தார். மிட்செல் மார்ஷ் 33 பந்தில் அரைசதம் அடித்தார். லக்னோ அணி 10.3 ஓவரில் 100 ரன்னைத் தொட்டது.
மிட்செல் மார்ஷ் உடன் பூரனும் சேர்ந்த அதிரடி ஆட்டத்தில் ஈடுபட்டார். இதனால் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி 14.2 ஓவரில் 150 ரன்னைத் தொட்டது. மிட்செல் மார்ஷ் சிறப்பாக விளையாடி 56 பந்தில் சதம் விளாசினார். மறுமுனையில் பூரன் 23 பந்தில் அரைசதம் விளாசினார்.
17.4 ஓவரில் லக்னோ 200 ரன்னைக் கடந்தது. 18ஆவது ஓவரில் லக்னோ 18 ரன்கள் அடித்தது. 19ஆவது ஓவரை ஆர்ஷத் கான் வீசினார். இந்த ஓவரின் 2ஆவது பந்தில் மார்ஷ் ஆட்டமிழந்தார். மார்ஷ் 64 பந்தில் 10 பவுண்டரி, 8 சிக்சருடன் 117 ரன்கள் விளாசினார்.
அடுத்து ரிஷப் பண்ட் களம் இறங்கினார். 19ஆவது ஓவரில் லக்னோ 9 ரன்கள் எடுத்தது. கடைசி ஓவரை ரபடா வீசினார். இந்த ஓவரில் 14 ரன்கள் அடிக்க லக்னோ 235 ரன்கள் குவித்துள்ளது. நிக்கோலஸ் பூரன் 27 பந்தில் 56 ரன்களுடனும், ரிஷப் பண்ட் 6 பந்தில் 16 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
- குஜராத் டைட்டன்ஸ் முதல் இடத்தில் நீடிக்க வெற்றி பெற முனைப்பு காட்டும்.
- லக்னோ அணி வெற்றி பெற்றால், அந்த அணிக்கு எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது.
ஐபிஎல் தொடரின் 64ஆவது போட்டி குஜராத் அகமதாபாத்தில் நடக்கிறது. இதில் குஜராத் டைட்டன்ஸ்- லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் குஜராத் டைட்டன்ஸ் அணி கேப்டன் சுப்மன் கில் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார்.
- லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் ஐதராபாத் அணி வெற்றி பெற்றது.
- ஹர்ஷல் படேல் 2381 பந்துகள் வீசி 150 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.
ஐபிஎல் தொடரின் 61ஆவது போட்டி நேற்று லக்னோவில் நடைபெற்றது. இதில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்- சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி கேப்டன் கம்மின்ஸ் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் களமிறங்கிய லக்னோ அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 205 ரன்கள் குவித்துள்ளது. அதிகபட்சமாக மார்ஷ் 65 ரன்களும் மார்க்ரம் 61 ரன்களும் அடித்தனர்.
இதனையடுத்து, 206 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஐதராபாத் அணி 18.2 ஓவர்கள் முடிவில் 206 ரன்கள் அடித்து வென்றி பெற்றது.
இப்போட்டியில் 1 விக்கெட் வீழ்த்தியதன் மூலம் ஐபிஎல் தொடரில் மிகக் குறைந்த பந்துகளில் 150 விக்கெட்டுகள் வீழ்த்திய பந்துவீச்சாளர் என்ற லசித் மலிங்காவின் சாதனையை ஐதராபாத் வீரர் ஹர்ஷல் படேல் முறியடித்தார்.
ஹர்ஷல் படேல் 2381 பந்துகள் வீசி 150 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். இவருக்கு அடுத்த இடத்தில் மலிங்கா (2,444 பந்துகள்), சாஹல் (2,543 பந்துகள்), ப்ராவோ (2,656 பந்துகள்), பும்ரா (2,832 பந்துகள்) ஆகியோர் உள்ளனர்.
- லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் ஐதராபாத் அணி வெற்றி பெற்றது.
- பிளே ஆப் சுற்று வாய்ப்பை இழந்து லக்னோ வெளியேறியது.
லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் 'பிளே ஆப்' சுற்று கனவை ஐதராபாத் வீரர் அபிஷேக் சர்மா தகர்த்துள்ளார். லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் அதிரடியாக விளையாடிய அபிஷேக் சர்மா 20 பந்தில் 59 ரன் (4 பவுண்டரி, 6 சிக்சர்) எடுத்து ஐதராபாத் அணியை வெற்றி பெற வைத்தார்.
நேற்றைய போட்டியில் லக்னோ நிர்ணயித்த 206 ரன்கள் என்ற இலக்கை ஐதராபாத் எளிதில் எடுத்தது. ஏற்கனவே வாய்ப்பை இழந்து வெளியேறிய ஐதராபாத் இந்த வெற்றி மூலம் லக்னோவையும் தன்னுடன் இழுத்து சென்றது.
அதிரடியாக விளையா டிய அபிஷேக் சர்மா விக்கெட்டை திக்வேஷ் ரதி கைப்பற்றினார். அப்போது அவர் தனது வழக்கமான 'நோட்புக்' கொண்டாட்டத்தில் ஈடுபட்டார். இதனால் அவரிடம் அபிஷேக் சர்மா வாக்குவாதத்தில் ஈடுபட் டார். இருவருக்கும் இடையேயான இந்த மோதலால் ஆடுகளத்தில் பரபரப்பு ஏற்பட்டது. நடுவர்கள் இருவரையும் சமாதானப்படுத்தினார்கள்.
நோட்புக் கொண்டாட்டத்தில் திக்வேஷ் ஈடுபடுவது இது முதல் முறையல்ல. ஏற்கனவே அவர் 2 முறை விதிகளை மீறியுள்ளார். இதற்காக அபராதம் விதிக்கப்பட்டு இருந்தது.
மீண்டும் நோட்புக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டதற்காகவும், அபிஷேக் சர்மாவுடன் வாக்குவாதம் செய்ததற்காகவும் திக்வேஷ் ஒரு போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடை காரணமாக குஜராத்துக்கு எதிரான அடுத்த ஆட்டத்தில் அவர் விளையாட முடியாது. தடையோடு திக்வேசுக்கு போட்டி கட்டணத்தில் இருந்து 50 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டது.
இதேபோல ஐதராபாத் வீரர் அபிஷேக் சர்மா மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. அவருக்கு ஒரு போட்டியில் இருந்து பெறும் கட்டணத்தில் இருந்து 25 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
- லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் ஐதராபாத் அணி வெற்றி பெற்றது.
- பிளே ஆப் சுற்று வாய்ப்பை இழந்து லக்னோ வெளியேறியது.
ஐபிஎல் தொடரின் 61ஆவது போட்டி நேற்று லக்னோவில் நடைபெற்றது. இதில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்- சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி கேப்டன் கம்மின்ஸ் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் களமிறங்கிய லக்னோ அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 205 ரன்கள் குவித்துள்ளது. அதிகபட்சமாக மார்ஷ் 65 ரன்களும் மார்க்ரம் 61 ரன்களும் அடித்தனர்.
இதனையடுத்து, 206 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஐதராபாத் அணி 18.2 ஓவர்கள் முடிவில் 206 ரன்கள் அடித்து வென்றி பெற்றது.
அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்த அபிஷேக் சர்மா ஆட்டநாயகன் விருதை வென்றார். குறிப்பாக ரவி பிஸ்னாய் வீசிய ஓவரில் தொடர்ச்சியாக 4 சிக்ஸர்களை அபிஷேக் சர்மா பறக்கவிட்டார்.
இதனையடுத்து திக்வேஷ் ரதி ஓவரில் அவர் ஆட்டமிழந்தார். அப்போது திக்வேஷ் ரதி அவரை பார்த்து கோவமாக கையை வீசி பின்னர் தனது சிக்னேச்சர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டார். இதனால் கடுப்பான அபிஷேக் சர்மா களத்திலேயே அவரிடம் வாக்குவாதம் செய்தார். இதனால் ஆடுகளத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
- லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் ஐதராபாத் அணி வெற்றி பெற்றது.
- பிளே ஆப் சுற்று வாய்ப்பை இழந்து லக்னோ வெளியேறியது.
ஐபிஎல் தொடரின் 61ஆவது போட்டி நேற்று லக்னோவில் நடைபெற்றது. இதில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்- சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி கேப்டன் கம்மின்ஸ் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் களமிறங்கிய லக்னோ அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 205 ரன்கள் குவித்துள்ளது. அதிகபட்சமாக மார்ஷ் 65 ரன்களும் மார்க்ரம் 61 ரன்களும் அடித்தனர்.
இதனையடுத்து, 206 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஐதராபாத் அணி 18.2 ஓவர்கள் முடிவில் 206 ரன்கள் அடித்து வென்றி பெற்றது. அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்த அபிஷேக் சர்மா ஆட்டநாயகன் விருதை வென்றார்.
இப்போட்டியில் தோல்வி முடிந்ததன் மூலம் பிளே ஆப் சுற்று வாய்ப்பபை இழந்து லக்னோ வெளியேறியது.
இதுவரை குஜராத் டைட்டன்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ், பஞ்சாப் கிங்ஸ் ஆகிய அணிகள் பிளேஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன. எஞ்சிய ஒரு இடத்துக்கு மும்பை, டெல்லி அணிகள் போட்டி போடுகின்றன.
- மிட்செல் மார்ஷ், மார்கிராம், பூரன் அரைசதம் விளாசினர்.
- ரிஷப் பண்ட் 7 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார்.
ஐபிஎல் தொடரின் 61ஆவது போட்டி லக்னோவில் நடைபெற்று வருகிறது. இதில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்- சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி கேப்டன் கம்மின்ஸ் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி லக்னோ அணியின் மிட்செல் மார்ஷ்- மார்கிராம் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். மார்கிராம் நிதானமாக விளையாடி மிட்செல் மார்ஷ் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் ஸ்கோர் ஜெட் வேகத்தில் உயர்ந்தது.
பவர்பிளேயான முதல் 6 ஓவரில் லக்னோ விக்கெட் இழப்பின்றி 69 ரன்கள் குவித்தது. மிட்செல் மார்ஷ் 28 பந்தில் அரைசதம் அடித்தார். லக்னோ அணி 9 ஓவரில் 100 ரன்னைத் தொட்டது. அணியின் ஸ்கோர் 115 ரன்னாக இருக்கும்போது மிட்செல் மார்ஷ் 39 பந்தில் 65 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ரிஷப் பண்ட் 6 பந்தில் 7 ரன்கள் எடுத்து வெளியேறினார்.
3ஆவது விக்கெட்டுக்கு மார்கிராம் உடன் நிக்கோலஸ் பூரன் ஜோடி சேர்ந்தார். மார்கிராம் 28 பந்தில் அரைசதம் அடித்தார். லக்னோ 15.1 ஓவரில் 150 ரன்னைக் கடந்தது. மார்கிராம் 38 பந்தில் 61 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அப்போது லக்னோ 15.4 ஓவரில் 159 ரன்கள் எடுத்திருந்தது.
4ஆவது விக்கெட்டுக்கு நிக்கோலஸ் பூரன் உடன் படோனி ஜோடி சேர்ந்தார். 17 ஓவர் முடிவில் லக்னோ 168 ரன்கள் எடுத்திருந்தது.
18ஆவது ஓவரை இசான் மலிங்கா வீசினார். இந்த ஓவரில் 2 ரன்கள் மட்டுமு விட்டுக்கொடுத்து 1 விக்கெட் வீழ்த்தினார். இதனால் லக்னோ 18 ஓவர் முடிவில் 170 ரன்கள் எடுத்திருந்தது.
19ஆவது ஓவரை ஹர்ஷல் பட்டேல் வீசினார். இந்த ஓவரில் லக்னோவிற்கு 15 ரன்கள் கிடைத்தது. இதனால் 19 ஓவரில் 185 ரன்கள் சேர்த்திருந்தது.
கடைசி ஓவரை நிதிஷ் ரெட்டி வீசினார். பூரன் 26 பந்தில் 45 ரன்கள் எடுத்து ரன்அவுட் ஆனார். இந்த ஓவரில் 20 ரன்கள் அடிக்க லக்னோ 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 205 ரன்கள் குவித்துள்ளது.
- சன்ரைசர்ஸ் ஐதராபாத்து அணிக்கு இந்த போட்டியின் வெற்றி தோல்வி எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது.
- லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் தோல்வியடைந்தால் பிளேஆஃப் சுற்று வாய்ப்பை இழக்கும்.
ஐபிஎல் தொடரின் 61ஆவது போட்டி லக்னோவில் நடக்கிறது. இதில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்- சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி கேப்டன் கம்மின்ஸ் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார்.
சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி ஏற்கனவே பிளேஆஃப் சுற்று வாய்ப்பை இழந்து விட்டது. லக்னோ இந்த போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே பிளேஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை பிரகாசப்படுத்திக் கொள்ள முடியும். தோல்வியடைந்தால் பிளேஆஃப் சுற்று வாய்ப்பை இழக்கும்.
டெல்லி கேப்பிட்டல்ஸ், ஆர்சிபி, பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பிளேஆஃப் சுற்று வாய்ப்பை உறுதி செய்துள்ளன.
லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்:-
மார்கிராம், மிட்செல் மார்ஷ், பூரன், ரிஷப் பண்ட், ஆயுஷ் படோனி, அப்துல் சமாத், ஆகாஷ் தீப், ரவி பிஷ்னோய், திக்வேஷ் ரதி, ஆவேஷ் கான், வில் ஓ'ரூர்கி.
சன்ரைசர்ஸ் ஐதராபாத்:-
இஷான் கிஷன், அபிஷேக் சர்மா, நிதிஷ் ரெட்டி, கிளாசன், அனிகெட் வர்மா, கமிந்து மெண்டிஸ், கம்மின்ஸ், ஹர்ஷல் பட்டேல், ஹர்ஷ் துபே, ஜீசன் அன்சாரி, எசான் மலிங்கா.
- மயங்க் யாதவுக்கு பதிலாக நியூசிலாந்தின் ரூர்கி லக்னோ அணியில் இடம் பெற்றுள்ளார்.
- புதிய அட்டவணைப்படி இறுதிப்போட்டி மே 25-க்கு பதிலாக ஜூன் 3-ம் தேதி நடைபெறுகிறது.
புதுடெல்லி:
இந்தியா, பாகிஸ்தான் போர் பதற்றத்தால் பாதியில் நிறுத்தப்பட்ட 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி நாளை மறுதினம் மீண்டும் தொடங்குகிறது.
மாற்றப்பட்ட புதிய அட்டவணைப்படி இறுதிப்போட்டி மே 25-க்கு பதிலாக ஜூன் 3-ம் தேதி நடைபெறுகிறது.
இதற்கிடையே, இந்த மாத இறுதியில் இருந்து மற்ற சர்வதேச கிரிக்கெட் தொடர்கள் தொடங்குகின்றன. தேசிய அணிக்கு முக்கியம் கொடுக்க வேண்டியுள்ளதால் பெரும்பாலான வெளிநாட்டு வீரர்கள் ஐ.பி.எல். தொடரில் முழுமையாக பங்கேற்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் மயங்க் யாதவ் காயம் காரணமாக நடப்பு ஐ.பி.எல். தொடரில் இருந்து விலகி உள்ளார்.
அவருக்கு பதிலாக நியூசிலாந்து பந்துவீச்சாளர் வில் ரூர்கி லக்னோ அணியில் இடம் பெற்றுள்ளார்.
ஐ.பி.எல். தொடரில் இன்னும் 13 லீக் ஆட்டம் உள்பட 17 ஆட்டங்கள் எஞ்சியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
- லக்னோ அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா, கே.எல். ராகுலுக்கு கைக்கொடுத்து பேச முயன்றார்.
- கோயங்காவிடம் பேச விரும்பாத ராகுல் அவருக்கு கைகொடுத்துவிட்டு அங்கிருந்து நகர்ந்து சென்றார்.
ஐபிஎல் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் லக்னோ- டெல்லி அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் விளையாடிய லக்னோ அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுகளை இழந்து 159 ரன்கள் எடுத்தது.
இதையடுத்து 160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணி 17.5 ஓவர் முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 161 ரன்கள் எடுத்தது. இதனால் டெல்லி அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் லக்னோ அணியை வீழ்த்தியது.
இப்போட்டியில் சிறப்பாக விளையாடிய கே.எல். ராகுல் 42 பந்துகளில் 57 ரன்கள் அடித்து டெல்லி அணியின் வெற்றிக்கு வித்திட்டார்.
போட்டி முடிந்த பிறகு லக்னோ அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா, கே.எல். ராகுலுக்கு கைக்கொடுத்து பேச முயன்றார். ஆனால் அவரிடம் பேச விரும்பாத ராகுல் உடனடியாக அவருக்கு கைகொடுத்துவிட்டு அங்கிருந்து நகர்ந்து சென்றார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
கடந்தாண்டு லக்னோ அணியின் கேப்டனாக கே.எல். ராகுல் இருந்தார். அப்போது சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் லக்னோ அணி படுமோசமான தோல்வியை தழுவியது.
இப்போட்டியின் முடிவுக்கு பின்னர் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா அணியின் கேப்டன் கேஎல் ராகுலிடம் மைதானத்தில் வைத்தே கடுமையாக பேசினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர்.
இதனையடுத்து லக்னோ அணியில் இருந்து வெளியேறிய கே.எல். ராகுலை டெல்லி அணி ஏலத்தில் எடுத்தது. மைதானத்தில் வைத்தே தன்னை அவமானப்படுத்திய பழைய அணியின் உரிமையாளரிடம் பேச விரும்பாமல் தான் கே.எல். ராகுல் அவருக்கு உடனடியாக கைகொடுத்துவிட்டு அங்கிருந்து நகர்ந்து சென்றுள்ளார் என்று நெட்டிசன்கள் இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர்.