என் மலர்
நீங்கள் தேடியது "LSG"
- ஐபிஎல் கேப்டனாக இருந்த நேரத்தில் உரிமையாளர் தரப்பிலிருந்து அதிகமான கேள்விகள் கேட்கப்பட்டன.
- கிரிக்கெட் குறித்து எதுவுமே தெரியாதவர்களிடம் எதையும் விளக்க முடியாது
நேர்காணல் ஒன்றில் ஐபிஎல் கேப்டன்சி குறித்து கேஎல் ராகுலிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், "10 மாதம் சர்வதேச கிரிக்கெட் விளையாடுவதில் ஏற்படும் களைப்பை விட 2 மாதம் ஐபிஎல் விளையாடுவதில் அதிகமாக சோர்வடைந்தேன்.
ஐபிஎல் கேப்டனாக இருந்த நேரத்தில் உரிமையாளர் தரப்பிலிருந்து அளவுக்கும் அதிகமான கேள்விகள் கேட்கப்பட்டன. அணியில் ஏன் மாற்றம் செய்யப்பட்டது, அவரை ஏன் அணியில் எடுக்கவில்லை. எதிர் அணியினர் 3 ஸ்பின்னர்களுடன் ஆடுகிறார்களே நீங்கள் ஏன் ஆடவில்லை. எதிர் அணியால் மட்டும் எப்படி 200 அடிக்க முடிந்தது, உங்களால் ஏன் அடிக்க முடியவில்லை? ஒரே மைதானத்தில் எதிர் அணியின் ஸ்பின்னர்கள் எப்படி நன்றாக ஸ்விங் செய்கின்றனர், உங்களால் ஏன் முடியவில்லை.. இப்படி பல கேள்விகள் கேட்கப்பட்டன.
இப்படியான கேள்விகளை எல்லாம் கேட்டுக்கொண்டே இருக்க முடியாது அல்லவா? இதற்கு பதில் அளிக்க தான் பயிற்சியாளர்கள் இருக்கிறார்கள். வீரர்கள் இதற்கு பதில் அளிக்க முடியாது. அணியில் அனைத்துமே சரியாக இருந்தாலும் உங்களால் வெற்றியை பெறமுடியாது, அதுதான் விளையாட்டின் தன்மை. என்ன செய்வது, கிரிக்கெட் குறித்து எதுவுமே தெரியாதவர்களிடம் எதையும் விளக்க முடியாது" என்று வேதனையுடன் தெரிவித்தார் .
லக்னோ அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்காவை விமர்சித்து தான் கே.எல்.ராகுல் இவ்வாறு பேசியுள்ளதாக நெட்டிசன்கள் இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர்.
2024 ஆம் ஆண்டு லக்னோ அணியின் கேப்டனாக கே.எல். ராகுல் இருந்தார். அப்போது சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் லக்னோ அணி படுமோசமான தோல்வியை தழுவியது.
இப்போட்டியின் முடிவுக்கு பின்னர் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா அணியின் கேப்டன் கேஎல் ராகுலிடம் மைதானத்தில் வைத்தே கடுமையாக பேசினார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர்.
இதனையடுத்து லக்னோ அணியில் இருந்து வெளியேறிய கே.எல். ராகுலை இந்தாண்டு டெல்லி அணி ஏலத்தில் எடுத்தது குறிப்பிடத்தக்கது.
- 2025 மெகா ஏலத்தில் 10 கோடி ரூபாய்க்கு முகமது ஷமியை ஏலம் எடுத்தது சன்ரைசர்ஸ் ஐதராபாத்.
- லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் இவரை வாங்க இரு அணிகளுக்கும் இடையில் வர்த்தகம் ஏற்பட்டுள்ளது.
ஐபிஎல் 2026 சீசனுக்கான மினி ஏலம் அடுத்த மாதம் 15-ந்தேதி நடக்கிறது. நாளைக்குள் 10 அணிகளும் எந்தெந்த வீரர்களைகள் தக்கவைத்துக் கொள்ளப்பட்டார்கள் மற்றும் வெளியேற்றப்பட்டார், வர்த்தகம் நடைபெற்றது என்ற தகவலை தெரிவிக்க வேண்டும்.
அதன்வகையில் ஒரு அணியில் இருந்து மற்றொரு வீரர்கள் வர்த்தகம் ஆவது தொடர்பான செய்திகள் வெளியாகி வருகிறது.
அந்த வகையில் 2025 மெகா ஏலத்தில் 10 கோடி ரூபாய்க்கு முகமது ஷமியை ஏலம் எடுத்த சன்ரைசர்ஸ் ஐதராபாத், அவரை லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு வர்த்தகம் செய்கிறது.
இரு அணிகளும் இதை ஒப்புக்கொண்டுள்ளன. கடந்த சீசனில் 9 போட்டிகளில் விளையாடிய முகமது ஷமி 6 விக்கெட்டுகள் வீழ்த்தினார். சராசரி 56.16 ஆகும், எகானமி ரேட் 11.23 ஆகும்.
உடற்தகுதி விவகாரம் தொடர்பாக ஷமி இந்திய அணியில் இடம் பெற முடியாமல் இருக்கிறார். கடைசியாக மார்ச் மாதம் சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் விளையாடினார்.
- அணியை வலுப்படுத்தும் செயலில் மும்பை இந்தியன்ஸ் தீவிரம் காட்டியுள்ளது.
- தற்போது வீரர்கள் பரஸ்பர வர்த்தக பரிமாற்றம் தொடங்கியுள்ளது.
19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களின் ஏலத்தை அடுத்த மாதம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கு முன்னர் 10 அணிகளும் தாங்கள் தக்கவைக்கும் மற்றும் விடுவிக்கும் வீரர்களின் பட்டியலை வெளியிட வேண்டும். இதையொட்டி தற்போது வீரர்கள் பரஸ்பர வர்த்தக பரிமாற்றம் தொடங்கியுள்ளது.
கடந்த ஆண்டு இறுதிப்போட்டிக்கு செல்லும் வாய்ப்பை இழந்ததால் அணியை வலுப்படுத்தும் செயலில் மும்பை இந்தியன்ஸ் தீவிரம் காட்டியுள்ளது. இதன் ஒரு பகுதியாக மும்பை அணி நிர்வாகம் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஷர்துல் தாகூரை தங்கள் பக்கம் இழுக்க பேச்சுவாார்த்தை நடத்தி வருவதாக முன்னாள் சி.எஸ்.கே. வீரர் ரவிசந்திரன் அஸ்வின் நேற்று தெரிவித்தார். .
இந்நிலையில், லக்னோ வீரர் ஷர்துல் தாக்கூரை மும்பை இந்தியன்ஸ் அணி ரூ.2 கோடி கொடுத்து வாங்கியுள்ளது.
2026 ஐபிஎல் தொடருக்காக பலவித TRADE யூகங்கள் பரவிய நிலையில், முதல் வீரராக ஷர்துல் தாக்கூர் TRADE ஆகியுள்ளார்.
முன்னதாக, ஷர்துல் தாக்கூருக்கு பதிலாக அர்ஜுன் டெண்டுல்கரை லக்னோ அணிக்கு கொடுக்க மும்பை அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியானது. இதனையடுத்து ஷர்துல் தாகூருக்கு பதில் அர்ஜுன் டெண்டுல்கரா? என்று இந்த தகவலை நெட்டிசன்கள் இணையத்தில் கிண்டலடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- தற்போது வீரர்கள் பரஸ்பர வர்த்தக பரிமாற்றம் தொடங்கியுள்ளது.
- அணியை வலுப்படுத்தும் செயலில் மும்பை இந்தியன்ஸ் தீவிரம் காட்டியுள்ளது.
19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களின் ஏலத்தை அடுத்த மாதம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கு முன்னர் 10 அணிகளும் தாங்கள் தக்கவைக்கும் மற்றும் விடுவிக்கும் வீரர்களின் பட்டியலை வெளியிட வேண்டும். இதையொட்டி தற்போது வீரர்கள் பரஸ்பர வர்த்தக பரிமாற்றம் தொடங்கியுள்ளது.
கடந்த ஆண்டு இறுதிப்போட்டிக்கு செல்லும் வாய்ப்பை இழந்ததால் அணியை வலுப்படுத்தும் செயலில் மும்பை இந்தியன்ஸ் தீவிரம் காட்டியுள்ளது. இதன் ஒரு பகுதியாக மும்பை அணி நிர்வாகம் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளரான ஷர்துல் தாகூரை தங்கள் பக்கம் இழுக்க பேச்சுவாார்த்தை நடத்தி வருவதாக முன்னாள் சி.எஸ்.கே. வீரர் ரவிசந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார்.
அவருக்கு பதிலாக தனக்கு அணியின் அர்ஜுன் டெண்டுல்கரை லக்னோ அணிக்கு கொடுக்க மும்பை அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஷர்துல் தாகூருக்கு பதில் அர்ஜுன் டெண்டுல்கரா? என்று இந்த தகவலை நெட்டிசன்கள் இணையத்தில் கிண்டலடித்து வருகின்றனர்.
- பரத் அருணின் தலைமையின் கீழ் கொல்கத்தா அணி 2022-ம் ஆண்டில் சாம்பியன் பட்டத்தையும் வென்றிருந்தது.
- இந்திய அணிக்கு பந்துவீச்சு பயிற்சியாளராகவும் இருந்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் மூன்று முறை சாம்பியனான கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியின் பந்து வீச்சு பயிற்சியாளராக இருந்தவர் பரத் அருண். அவர் 2022-ம் ஆண்டில் இருந்து கொல்கத்தா அணியின் பந்து வீச்சு பயிற்சியாளராக இருந்து வந்துள்ளார்.
பரத் அருணின் தலைமையின் கீழ், கொல்கத்தா அணி 2022-ம் ஆண்டில் சாம்பியன் பட்டத்தையும் வென்றிருந்தது. இவர் இந்திய அணிக்கு பந்துவீச்சு பயிற்சியாளராகவும் இருந்துள்ளார்.
இந்நிலையில் லக்னோ அணிக்கு 62 வயதான பரத் அருண், 2 ஆண்டுகள் பந்துவீச்சு பயிற்சியாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
கடந்த ஐபிஎல் தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய லக்னோ அணியில் பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் தொடர்ந்து செயல்படுவாரா? என்பது கேள்விக்குறியாகியுள்ளது. இதனால், பரத் அருண் தலைமைப் பயிற்சியாளராகவும் நியமிக்க வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
- 29 பந்தில் அரைசதம் அடித்த ரிஷப் பண்ட், 54 பந்தில் 10 பவுண்டரி, 6 சிக்சருடன் சதம் விளாசினார்.
- மிட்செல் மார்ஷ் 37 பந்தில் 67 ரன்கள் விளாசினார்.
ஐபிஎல் 2025 சீசனின் கடைசி லீக் போட்டி லக்னோவில் நடைபெற்று வருகிறது. இதில் ஆர்சிபி- லக்னோ அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. டாஸ் வென்ற ஆர்சிபி அணி கேப்டன் ஜித்தேஷ் சர்மா பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி லக்னோ அணியின் மிட்செல் மார்ஷ், மேத்யூ பிரீட்ஸ்கே ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். பிரீட்ஸ்கே 12 பந்தில் 14 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
அடுத்து மிட்செல் மார்ஷ் உடன் ரிஷப் பண்ட் ஜோடி சேர்ந்தார். ரிஷப் பண்ட் தொடக்க முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். மிட்செல் மார்ஷ் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
லக்னோ அணி பவர்பிளேயில் 1 விக்கெட் இழப்பிற்கு 55 ரன்கள் எடுத்திருந்தது. 9.5 ஓவரில் 100 ரன்னைத் தொட்டது. ரிஷப் பண்ட் 29 பந்திலும், மிட்செல் மார்ஷ் 31 பந்திலும் அரைசதம் அடித்தனர். லக்னோ அணி 14.2 ஓவரில் 150 ரன்னைத் தொட்டது.
16ஆவது ஓவரை புவனேஷ்வர் குமார் வீசினார். இந்த ஓவரில் அடுத்தடுத்து இரண்டு சிக்ஸ் விளாசிய மிட்செல் மார்ஷ் 3ஆவது பந்தில் ஆட்டமிழந்தார். அவர் 37 பந்தில் 67 ரன்கள் விளாசினார். அவரது ஸ்கோரி 4 பவுண்டரி, 5 சிக்சர் அடங்கும். அப்போது லக்னோ 15.3 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 177 ரன்கள் குவித்திருந்தது.
3ஆவது விக்கெட்டுக்கு ரிஷப் பண்ட் உடன் நிக்கோலஸ் பூரன் ஜோடி சேர்ந்தார். 17ஆவது ஓவரை துஷாரா வீசினார். இந்த ஓவரில் லக்னோ 7 ரன்கள் அடித்தது. இதனால் 191 ரன்கள் எடுத்திருந்தது.
18ஆவது ஓவரை புவனேஷ்வர் குமார் வீசினார். இந்த ஓவரின் 5ஆவது பந்தை பவுண்டரிக்கு விரட்டி 54 பந்தில் சதம் விளாசினார் ரிஷப் பண்ட். இந்த தொடரில் தொடர்ந்து மோசமாக விளையாடி வந்த நிலையில் சதம் விளாசியுள்ளார். இந்த ஓவரில் லக்னோ அணிக்கு 10 ரன்கள் கிடைத்தது. அத்துடன் 201 ரன்கள் சேர்த்தது.
19ஆவது ஓவரை யாஷ் தயால் வீசினார். இந்த ஓவரில் 13 ரன்கள் அடித்தது லக்னோ. கடைசி ஓவரை ரொமாரியோ ஷெப்பர்டு வீசினார். இந்த ஓவரின் 5ஆவது பந்தில் நிக்கோலஸ் பூரன் 13 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். இந்த ஓவரில் 13 ரன்கள் கிடைக்க லக்னோ 227 ரன்கள் குவித்துள்ளது. ரிஷப் பண்ட் 61 பந்தில் 11 பவுண்டரி, 8 சிக்சருடன் 118 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
- ஆர்சிபி வெற்றி பெற்றால் குவாலிபையர் 1-க்கு முன்னேறும்.
- தோல்வியடைந்தால் எலிமினேட்டர் சுற்றில் மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்ளும்.
ஐபிஎல் 2025 சீசனின் கடைசி லீக் போட்டி லக்னோவில் நடக்கிறது. இதில் ஆர்சிபி- லக்னோ அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதில் வெற்றி பெற்றால் ஆர்சிபி குவாலிபையர்-1க்கு முன்னேறும். லக்னோ ஏற்கனவே பிளேஆஃப் வாய்ப்பை இழந்துள்ளது. இதில் வெற்றி பெற்றால் ஆறுதல் வெற்றியாக இருக்கும்.
இந்த போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டதில் ஆர்சிபி கேப்டன் ஜித்தேஷ் சர்மா டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.
லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி:-
ரிஷப் பண்ட், நிக்கோலஸ் பூரன், மிட்செல் மார்ஷ், பிரீட்ஸ்கே, ஆயுஷ் படோனி, அப்துல் சமாத், ஹிமாத் சிங், ஷபாஷ் அகமது, திக்வேஷ் ரதி, ஆவேஷ் கான், வில்லியம் ஓ'ரூர்கே.
ஆர்சிபி அணி:-
பில் சால்ட், விராட் கோலி, மயங்க் அகர்வால், லிவிங்ஸ்டன், ஜித்தேஷ் சர்மா, ரொமாரியோ ஷெப்பர்டு, குருணால் பாண்ட்யா, புவி, யாஷ் தயால், நுவான் துஷாரா.
- மிட்செல் மார்ஷ் 64 பந்தில் 117 ரன்கள் விளாசினார்.
- நிக்கோலஸ் பூரன் 27 பந்தில் 56 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
ஐபிஎல் தொடரின் 64ஆவது போட்டி குஜராத் அகமதாபாத்தில் நடைபெற்று வருகிறது. இதில் குஜராத் டைட்டன்ஸ்- லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் குஜராத் டைட்டன்ஸ் அணி கேப்டன் சுப்மன் கில் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் மார்கிராம், மிட்செல் மார்ஷ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.இருவரும் தொடக்கம் முதல் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதனால் லக்னோ பவர்பிளேயான முதல் 6 ஓவரில் விக்கெட் இழப்பின்று 53 ரன்கள் சேர்த்தது.
அணியின் ஸ்கோர் 9.5 ஓவரில் 91 ரன்னாக இருக்கும்போது மார்கிராம் ஆட்டமிழந்தார். அடுத்து மிட்செல் மார்ஷ் உடன் நிக்கோலஸ் பூரன் ஜோடி சேர்ந்தார். மிட்செல் மார்ஷ் 33 பந்தில் அரைசதம் அடித்தார். லக்னோ அணி 10.3 ஓவரில் 100 ரன்னைத் தொட்டது.
மிட்செல் மார்ஷ் உடன் பூரனும் சேர்ந்த அதிரடி ஆட்டத்தில் ஈடுபட்டார். இதனால் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி 14.2 ஓவரில் 150 ரன்னைத் தொட்டது. மிட்செல் மார்ஷ் சிறப்பாக விளையாடி 56 பந்தில் சதம் விளாசினார். மறுமுனையில் பூரன் 23 பந்தில் அரைசதம் விளாசினார்.
17.4 ஓவரில் லக்னோ 200 ரன்னைக் கடந்தது. 18ஆவது ஓவரில் லக்னோ 18 ரன்கள் அடித்தது. 19ஆவது ஓவரை ஆர்ஷத் கான் வீசினார். இந்த ஓவரின் 2ஆவது பந்தில் மார்ஷ் ஆட்டமிழந்தார். மார்ஷ் 64 பந்தில் 10 பவுண்டரி, 8 சிக்சருடன் 117 ரன்கள் விளாசினார்.
அடுத்து ரிஷப் பண்ட் களம் இறங்கினார். 19ஆவது ஓவரில் லக்னோ 9 ரன்கள் எடுத்தது. கடைசி ஓவரை ரபடா வீசினார். இந்த ஓவரில் 14 ரன்கள் அடிக்க லக்னோ 235 ரன்கள் குவித்துள்ளது. நிக்கோலஸ் பூரன் 27 பந்தில் 56 ரன்களுடனும், ரிஷப் பண்ட் 6 பந்தில் 16 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
- குஜராத் டைட்டன்ஸ் முதல் இடத்தில் நீடிக்க வெற்றி பெற முனைப்பு காட்டும்.
- லக்னோ அணி வெற்றி பெற்றால், அந்த அணிக்கு எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது.
ஐபிஎல் தொடரின் 64ஆவது போட்டி குஜராத் அகமதாபாத்தில் நடக்கிறது. இதில் குஜராத் டைட்டன்ஸ்- லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் குஜராத் டைட்டன்ஸ் அணி கேப்டன் சுப்மன் கில் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார்.
- லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் ஐதராபாத் அணி வெற்றி பெற்றது.
- ஹர்ஷல் படேல் 2381 பந்துகள் வீசி 150 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.
ஐபிஎல் தொடரின் 61ஆவது போட்டி நேற்று லக்னோவில் நடைபெற்றது. இதில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்- சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி கேப்டன் கம்மின்ஸ் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் களமிறங்கிய லக்னோ அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 205 ரன்கள் குவித்துள்ளது. அதிகபட்சமாக மார்ஷ் 65 ரன்களும் மார்க்ரம் 61 ரன்களும் அடித்தனர்.
இதனையடுத்து, 206 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஐதராபாத் அணி 18.2 ஓவர்கள் முடிவில் 206 ரன்கள் அடித்து வென்றி பெற்றது.
இப்போட்டியில் 1 விக்கெட் வீழ்த்தியதன் மூலம் ஐபிஎல் தொடரில் மிகக் குறைந்த பந்துகளில் 150 விக்கெட்டுகள் வீழ்த்திய பந்துவீச்சாளர் என்ற லசித் மலிங்காவின் சாதனையை ஐதராபாத் வீரர் ஹர்ஷல் படேல் முறியடித்தார்.
ஹர்ஷல் படேல் 2381 பந்துகள் வீசி 150 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். இவருக்கு அடுத்த இடத்தில் மலிங்கா (2,444 பந்துகள்), சாஹல் (2,543 பந்துகள்), ப்ராவோ (2,656 பந்துகள்), பும்ரா (2,832 பந்துகள்) ஆகியோர் உள்ளனர்.
- லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் ஐதராபாத் அணி வெற்றி பெற்றது.
- பிளே ஆப் சுற்று வாய்ப்பை இழந்து லக்னோ வெளியேறியது.
லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் 'பிளே ஆப்' சுற்று கனவை ஐதராபாத் வீரர் அபிஷேக் சர்மா தகர்த்துள்ளார். லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் அதிரடியாக விளையாடிய அபிஷேக் சர்மா 20 பந்தில் 59 ரன் (4 பவுண்டரி, 6 சிக்சர்) எடுத்து ஐதராபாத் அணியை வெற்றி பெற வைத்தார்.
நேற்றைய போட்டியில் லக்னோ நிர்ணயித்த 206 ரன்கள் என்ற இலக்கை ஐதராபாத் எளிதில் எடுத்தது. ஏற்கனவே வாய்ப்பை இழந்து வெளியேறிய ஐதராபாத் இந்த வெற்றி மூலம் லக்னோவையும் தன்னுடன் இழுத்து சென்றது.
அதிரடியாக விளையா டிய அபிஷேக் சர்மா விக்கெட்டை திக்வேஷ் ரதி கைப்பற்றினார். அப்போது அவர் தனது வழக்கமான 'நோட்புக்' கொண்டாட்டத்தில் ஈடுபட்டார். இதனால் அவரிடம் அபிஷேக் சர்மா வாக்குவாதத்தில் ஈடுபட் டார். இருவருக்கும் இடையேயான இந்த மோதலால் ஆடுகளத்தில் பரபரப்பு ஏற்பட்டது. நடுவர்கள் இருவரையும் சமாதானப்படுத்தினார்கள்.
நோட்புக் கொண்டாட்டத்தில் திக்வேஷ் ஈடுபடுவது இது முதல் முறையல்ல. ஏற்கனவே அவர் 2 முறை விதிகளை மீறியுள்ளார். இதற்காக அபராதம் விதிக்கப்பட்டு இருந்தது.
மீண்டும் நோட்புக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டதற்காகவும், அபிஷேக் சர்மாவுடன் வாக்குவாதம் செய்ததற்காகவும் திக்வேஷ் ஒரு போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடை காரணமாக குஜராத்துக்கு எதிரான அடுத்த ஆட்டத்தில் அவர் விளையாட முடியாது. தடையோடு திக்வேசுக்கு போட்டி கட்டணத்தில் இருந்து 50 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டது.
இதேபோல ஐதராபாத் வீரர் அபிஷேக் சர்மா மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. அவருக்கு ஒரு போட்டியில் இருந்து பெறும் கட்டணத்தில் இருந்து 25 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
- லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் ஐதராபாத் அணி வெற்றி பெற்றது.
- பிளே ஆப் சுற்று வாய்ப்பை இழந்து லக்னோ வெளியேறியது.
ஐபிஎல் தொடரின் 61ஆவது போட்டி நேற்று லக்னோவில் நடைபெற்றது. இதில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்- சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி கேப்டன் கம்மின்ஸ் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் களமிறங்கிய லக்னோ அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 205 ரன்கள் குவித்துள்ளது. அதிகபட்சமாக மார்ஷ் 65 ரன்களும் மார்க்ரம் 61 ரன்களும் அடித்தனர்.
இதனையடுத்து, 206 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஐதராபாத் அணி 18.2 ஓவர்கள் முடிவில் 206 ரன்கள் அடித்து வென்றி பெற்றது.
அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்த அபிஷேக் சர்மா ஆட்டநாயகன் விருதை வென்றார். குறிப்பாக ரவி பிஸ்னாய் வீசிய ஓவரில் தொடர்ச்சியாக 4 சிக்ஸர்களை அபிஷேக் சர்மா பறக்கவிட்டார்.
இதனையடுத்து திக்வேஷ் ரதி ஓவரில் அவர் ஆட்டமிழந்தார். அப்போது திக்வேஷ் ரதி அவரை பார்த்து கோவமாக கையை வீசி பின்னர் தனது சிக்னேச்சர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டார். இதனால் கடுப்பான அபிஷேக் சர்மா களத்திலேயே அவரிடம் வாக்குவாதம் செய்தார். இதனால் ஆடுகளத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.






