என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Digvesh Singh Rathi"

    • திக்வேஷ் ரதி பந்தில் ராணா சிக்ஸ் விளாசினார்.
    • நோட்புக் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட ராணா, ரதியை வெறுப்பேற்றியதால் மோதல்.

    டெல்லி டி20 லீக்கின் எலிமினேட்டர் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் தெற்கு டெல்லி- மேற்கு டெல்லி அணிகள் மோதின. முதலில் விளையாடிய தெற்கு டெல்லி 201 ரன்கள் குவித்தது.

    பின்னர் 202 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் மேற்கு டெல்லி களம் இறங்கியது. மேற்கு டெல்லி கேப்டன் நிதிஷ் ராணா அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். நிதிஷ் ராணா பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது திக்வேஷ் ரதி பந்து வீச வந்தார். பந்து வீசும்போது பந்தை ரிலீஸ் செய்யவில்லை. மீண்டும் பந்து வீச வரும்போது, நிதிஷ் ராணா தயாராகவில்லை. அங்கேயே மோதல் தொற்றிக் கொண்டது.

    அதன்பின் வீசிய பந்தை ரிவர்ஸ் ஸ்வீப் மூலம் சிக்ஸ் விளாசினார். அத்துடன் திக்வேஷ் ரதி விக்கெட் வீழ்த்தினால் பயன்படுத்தும் Notebook கொண்டாட்டத்தை நிதிஷ் ராணா பேட்டில் கையெழுத்து போடுவது போன்று செய்து காண்பித்தார். இதனால் திக்வேஷ் ரதி, நிதிஷ் ராணாவை நோக்கி ஏதோ கூறினார்.

    இதனால் ராணா கோபம் அடைந்து திக்வேஷ் ரதி நோக்கி சென்றார். வாய் தகராறு கைகலப்பாக மாறும் நிலை ஏற்பட்டது. இதனால் பெண் நடுவர் குறுக்கே வந்து இருவரையும் பிரித்து விட்டார். சக வீரர்களும் மோதலை பிரித்து விட்டனர். இதனால் இருவரும் பிரிந்து சென்றனர்.

    மைதானத்தில் ஒழுங்கீனமாக நடந்து கொண்ட திக்வேஷ் ரதிக்கு 80 சதவீதம் அபராதமும், நிதிஷ் ராணாவுக்கு 50 சதவீதம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

    கிரிஷ் ஆட்டமிழக்கும்போது, அவரை ஆட்டமிழக்கச் செய்த பாரதி என்பவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போதும் பெரும் சலசலப்பு ஏற்பட்டது. பின்னர் நடவர் தலையீடு செய்து மோதலை முடிவுக்கு கொண்டு வந்தார்.

    • ஐபிஎல் 2025-ல் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்காக திக்வேஷ் ரதி அறிமுகமானார்.
    • நோட் புக் கொண்டாட்டத்தின் மூலம் பலமுறை அபராதம் வாங்கினார்.

    நடந்து முடிந்த ஐபிஎல் 2025-ல் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (LSG) அணிக்காக லெக் ஸ்பின்னர் திக்வேஷ் ரதி அறிமுகமானார். இவர் தனது சிறப்பான பந்து வீச்சின் மூலம் மிகவும் பிரபலமானவர். குறிப்பாக அவர் நோட் புக் கொண்டாட்டத்தின் மூலம் பலமுறை அபராதம் வாங்கினார்.

    இந்நிலையில் உள்ளூர் டி20 லீக்கில் ஒரு ஓவரில் 5 பந்தில் 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தி உள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

    முன்னதாக, சஹகல் கிரிக்கெட் கிளப் (SCC) முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர்களில் 263 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக சிவம் சவுத்ரி 42 பந்துகளில் 98 ரன்கள் எடுத்தார். இதில் 7 பவுண்டரிகள் மற்றும் 9 சிக்சர்கள் விளாசினார்.

    இதனை தொடர்ந்து விளையாடிய ஏபி ரைசிங் அணி 151 ரன்கள் மட்டுமே எடுத்து 112 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. குறிப்பாக 151 ரன்களுக்கு 5 விக்கெட்டை மட்டும் இழந்த அந்த அணி, 151 ரன்னிலே ஆல் அவுட்டும் ஆனது குறிப்பிடத்தக்கது.

    • திக்வேஷ் ரதிக்கு பலமுறை அபராதம் விதிக்கப்பட்டது.
    • இதன் காரணமாக இவர் ஒரு போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.

    லக்னோ:

    10 அணிகள் பங்கேற்றுள்ள 18-வது ஐ.பி.எல். தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. லீக் சுற்றுகள் ஆட்டங்கள் இன்றுடன் முடிவடைகிறது. நடப்பு ஐபிஎல் தொடரில் பல இளம் வீரர்கள் பேட்டிங், மற்றும் பந்து வீச்சு மூலம் மற்றும் ஆக்ரோஷமான கொண்டாட்டத்தின் மூலம் பிரபலமாகினர். அந்த வகையில் லக்னோ அணியில் இடம் பிடித்த சுழற்பந்து வீச்சாளர் திக்வேஷ் ரதி, நோட்புக் கொண்டாட்டத்தின் மூலம் பிரபலமானார்.

    தொடர்ந்து அந்த கொண்டாட்டத்தினால் பலமுறை அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. கடைசியாக ஐதராபாத்துக்கு எதிரான போட்டியில் அபிஷேக் சர்மா விக்கெட் எடுத்து அதே கொண்டாட்டத்தில் ஈடுபட்டார். மேலும் வாக்குவாதத்திலும் ஈடுபட்டார். பின்னர் நடுவர்கள் இருவரையும் சமாதானப்படுத்தினர்.

    இந்த சம்பவம் குறித்து திக்வேஷ் ரதிக்கு 2 தகுதி இழப்பு புள்ளிகள் ஐ.பி.எல். நிர்வாகம் வழங்கியது. இவர் ஏற்கனவே நடப்பு தொடரில் இரண்டு முறை விதிமுறைகளை மீறியதற்காக 3 தகுதி இழப்பு புள்ளிகள் பெற்றுள்ளார். இதனையும் சேர்த்து மொத்தம் 5 தகுதி இழப்பு புள்ளிகள் பெற்றுள்ளார்.

    இதன் காரணமாக இவர் ஒரு போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் குஜராத் டைட்டன்சுக்கு எதிரான அடுத்த போட்டியில் அவர் விளையாட முடியாமல் போனது.

    இந்நிலையில் திக்வேஷ் ரதியின் நோட்புக் கொண்டாட்டத்திற்கான காரணத்தை தெரிவித்துள்ளார். அதில், போட்டி நடக்கும் போதெல்லாம், நான் ஒரு நோட்டுப் புத்தகத்தை எடுத்துச் சென்று எல்லா பெயர்களையும் எழுதுவேன் என்று ரதி தெரிவித்தார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

    • அபிஷேக் அவுட் ஆனதை திக்வேஷ் தனது வழக்கமான பாணியில் (நோட்புக் செலிபிரேஷன்) கொண்டாடினார்.
    • அபிஷேக்கை நோக்கி கையசைத்தவாறு விக்கெட் எடுத்ததை திக்வேஷ் கொண்டாடினார்.

    நடப்பு ஐ.பி.எல். தொடரில் நேற்று நடந்த 61-வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - சன்ரைசர்ஸ் ஐதரபாத் அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 205 ரன்கள் குவித்தது. இதையடுத்து களமிறங்கிய ஐதரபாத் 18.2 ஓவரில் 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 206 ரன்கள் குவித்தது. இதன் மூலம் லக்னோவை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஐதராபாத் அபார வெற்றிபெற்றது.

    இந்த ஆட்டத்தில் ஐதராபாத் அணியின் தொடக்க வீரர் அபிஷேக் சர்மா அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 20 பந்துகளில் 59 ரன்கள் குவித்தார். அவர் 7.3 ஓவரில் திக்வேஷ் வீசிய பந்தில் கேட்ச் மூலம் அவுட் ஆனார்.

    அபிஷேக் அவுட் ஆனதை திக்வேஷ் தனது வழக்கமான பாணியில் (நோட்புக் செலிபிரேஷன்) கொண்டாடினார். அபிஷேக்கை நோக்கி கையசைத்தவாறு விக்கெட் எடுத்ததை திக்வேஷ் கொண்டாடினார். இதனால் ஆத்திரமடைந்த அபிஷேக் மைதானத்திலேயே திக்வேஷ் உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர் நடுவர்கள் மற்றும் வீரர்கள் இருவரையும் சமாதானம் செய்தனர்.

    பின்னர் இது குறித்து விசாரணை மேற்கொண்ட ஐ.பி.எல். நிர்வாகம் திக்வேஷ் ரதிக்கு 2 தகுதி இழப்பு புள்ளியும் போட்டி கட்டணத்தில் இருந்து 50 சதவீதம் அபராதமாகவும் விதித்தது. நடப்பு தொடரில் ஏற்கனவே 3 தகுதி இழப்பு புள்ளிகள் பெற்றிருந்த திக்வேஷ் ரதி இதனையும் சேர்த்து 5 தகுதி இழப்பு புள்ளிகள் பெற்றதால் ஒரு போட்டியில் விளையாட அவருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

    மறுபுறம் அபிஷேக் சர்மாவுக்கு ஒரு தகுதி இழப்பு புள்ளியும், போட்டி கட்டணத்தில் இருந்து 25 சதவீதம் அபராதமாகவும் விதித்து ஐ.பி.எல். நிர்வாகம் தண்டனை வழங்கியுள்ளது. 

    • லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் ஐதராபாத் அணி வெற்றி பெற்றது.
    • பிளே ஆப் சுற்று வாய்ப்பை இழந்து லக்னோ வெளியேறியது.

    லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் 'பிளே ஆப்' சுற்று கனவை ஐதராபாத் வீரர் அபிஷேக் சர்மா தகர்த்துள்ளார். லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் அதிரடியாக விளையாடிய அபிஷேக் சர்மா 20 பந்தில் 59 ரன் (4 பவுண்டரி, 6 சிக்சர்) எடுத்து ஐதராபாத் அணியை வெற்றி பெற வைத்தார்.

    நேற்றைய போட்டியில் லக்னோ நிர்ணயித்த 206 ரன்கள் என்ற இலக்கை ஐதராபாத் எளிதில் எடுத்தது. ஏற்கனவே வாய்ப்பை இழந்து வெளியேறிய ஐதராபாத் இந்த வெற்றி மூலம் லக்னோவையும் தன்னுடன் இழுத்து சென்றது.

    அதிரடியாக விளையா டிய அபிஷேக் சர்மா விக்கெட்டை திக்வேஷ் ரதி கைப்பற்றினார். அப்போது அவர் தனது வழக்கமான 'நோட்புக்' கொண்டாட்டத்தில் ஈடுபட்டார். இதனால் அவரிடம் அபிஷேக் சர்மா வாக்குவாதத்தில் ஈடுபட் டார். இருவருக்கும் இடையேயான இந்த மோதலால் ஆடுகளத்தில் பரபரப்பு ஏற்பட்டது. நடுவர்கள் இருவரையும் சமாதானப்படுத்தினார்கள்.

    நோட்புக் கொண்டாட்டத்தில் திக்வேஷ் ஈடுபடுவது இது முதல் முறையல்ல. ஏற்கனவே அவர் 2 முறை விதிகளை மீறியுள்ளார். இதற்காக அபராதம் விதிக்கப்பட்டு இருந்தது.

    மீண்டும் நோட்புக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டதற்காகவும், அபிஷேக் சர்மாவுடன் வாக்குவாதம் செய்ததற்காகவும் திக்வேஷ் ஒரு போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடை காரணமாக குஜராத்துக்கு எதிரான அடுத்த ஆட்டத்தில் அவர் விளையாட முடியாது. தடையோடு திக்வேசுக்கு போட்டி கட்டணத்தில் இருந்து 50 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டது.

    இதேபோல ஐதராபாத் வீரர் அபிஷேக் சர்மா மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. அவருக்கு ஒரு போட்டியில் இருந்து பெறும் கட்டணத்தில் இருந்து 25 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

    • லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் ஐதராபாத் அணி வெற்றி பெற்றது.
    • பிளே ஆப் சுற்று வாய்ப்பை இழந்து லக்னோ வெளியேறியது.

    ஐபிஎல் தொடரின் 61ஆவது போட்டி நேற்று லக்னோவில் நடைபெற்றது. இதில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ்- சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி கேப்டன் கம்மின்ஸ் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தார்.

    அதன்படி முதலில் களமிறங்கிய லக்னோ அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 205 ரன்கள் குவித்துள்ளது. அதிகபட்சமாக மார்ஷ் 65 ரன்களும் மார்க்ரம் 61 ரன்களும் அடித்தனர்.

    இதனையடுத்து, 206 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஐதராபாத் அணி 18.2 ஓவர்கள் முடிவில் 206 ரன்கள் அடித்து வென்றி பெற்றது.

    அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்த அபிஷேக் சர்மா ஆட்டநாயகன் விருதை வென்றார். குறிப்பாக ரவி பிஸ்னாய் வீசிய ஓவரில் தொடர்ச்சியாக 4 சிக்ஸர்களை அபிஷேக் சர்மா பறக்கவிட்டார்.

    இதனையடுத்து திக்வேஷ் ரதி ஓவரில் அவர் ஆட்டமிழந்தார். அப்போது திக்வேஷ் ரதி அவரை பார்த்து கோவமாக கையை வீசி பின்னர் தனது சிக்னேச்சர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டார். இதனால் கடுப்பான அபிஷேக் சர்மா களத்திலேயே அவரிடம் வாக்குவாதம் செய்தார். இதனால் ஆடுகளத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

    இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 

    • முதல் 2 போட்டிகளில் திக்வேஷ் ரதிக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
    • கிரிக்கெட் வாரியத்தை சீண்டும் வகையில் திக்வேஷ் ரதி 3-வது முறையாக சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

    கொல்கத்தா:

    லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் முன்னணி சுழற்பந்து வீரர் திக்வேஷ் ரதி. இவரது பந்து வீச்சு எதிர் அணி பேட்ஸ்மேன்களுக்கு கடும் சவாலாக இருக்கிறது.

    25 வயதான திக்வேஷ் ரதி இந்த ஐ.பி.எல்.லில் அறிமுகமாகி 5 ஆட்டத்தில் 7 விக்கெட் வீழ்த்தியுள்ளார். ரன்களை விட்டுக் கொடுக்காமல் மிகவும் நேர்த்தியாக வீசி வருகிறார்.

    அவர் விக்கெட்டுகளை கைப்பற்றும்போது வித்தியாசமான கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். பஞ்சாப் அணிக்கு எதிராக பிரியான்ஷ் ஆர்யாவை அவுட் செய்தபோது திக்வேஷ் ரதி அருகே வந்து கையில் நோட்புக்கில் கையெழுத்திடுவது போல் கொண்டாடினார். இதற்காக அவருக்கு போட்டி கட்டணத்தில் 25 சதவீத அபராதம் விதிக்கப்பட்டது.

    அதை தொடர்ந்து மும்பைக்கு எதிராகவும் இதே மாதிரியான நோட்புக் கொண்டாட்டத்துக்காக 50 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டது. இதனால் மொத்தமாக 2 தகுதி குறைப்பு புள்ளிகளை பெற்றார்.

    இந்த நிலையில் அபராதத்துக்கு அஞ்சாத திக்வேஷ் ரதி மீண்டும் சர்ச்சையான கொண்டாட்டத்தில் ஈடுபட்டார். நேற்றைய ஆட்டத்தில் அவர் கொல்கத்தா தொடக்க வீரர் நரைனை அவுட் செய்தார். அப்போது அவர் தனது வழக்கமான லெட்டர் பேட் கொண்டாட்டத்தை தற்போது திடலில் கொண்டாடினார். ஆடுகளத்தில் கையெழுத்திடுவது போல சைகை செய்தார்.

    கிரிக்கெட் வாரியத்தை சீண்டும் வகையில் திக்வேஷ் ரதி 3-வது முறையாக சர்ச்சையில் சிக்கியுள்ளார். இதனால் அவருக்கு ஒரு போட்டியில் விளையாட தடை விதிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • கடந்த 2 போட்டிகளில் விக்கெட் வீழ்த்திய போது 'notebook' கொண்டாட்டத்தில் திக்வேஷ் ஈடுபட்டார்.
    • கொண்டாடியதற்காக போட்டி கட்டணத்தில் இருந்து 25 மற்றும் 50 சதவீதம் அபராதம் பெற்றிருந்தார்.

    கொல்கத்தா:

    ஐ.பி.எல். தொடரில் இன்று நடைபெற்ற முதல் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின. பரபரப்பான இந்த போட்டியில் லக்னோ 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 238 ரன்கள் குவித்தது. இதனையடுத்து களமிறங்கிய கொல்கத்தா அணியால் 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 234 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது. இதனால் லக்னோ 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்த ஆட்டத்தில் லக்னோ சுழற்பந்து வீச்சாளரான திக்வேஷ் ரதி, சுனில் நரைனின் விக்கெட்டை கைப்பற்றினார். அதனை மைதான தரையில் எழுதி வித்தியாசமான முறையில் கொண்டாடினார்.

    கடந்த 2 போட்டிகளில் விக்கெட் வீழ்த்தியதை கையில் எழுதுவது போல் வித்தியாசமான முறையில் (நோட் புக் செலிபிரேஷன்) கொண்டாடியதற்காக போட்டி கட்டணத்தில் இருந்து 25 மற்றும் 50 சதவீதம் அபராதம் பெற்றிருந்தார். தற்போது 3-வது முறையாக தரையில் எழுதி கொண்டாடியுள்ளார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

    தனது கைகளில் எழுதியதால் தான அபராதம் விதிச்சாங்க தரையில் எழுதுறேன் என்ன பண்றாங்கனு பார்க்கலாம் என்பது போல இருந்துச்சு அவரது செயல் என ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.

    • ரிஷப் பண்ட் மற்றும் சுழற்பந்து வீச்சாளர் திக்வேஷ் சிங் ரதி ஆகியோருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
    • மெதுவாக பந்து வீசியதாக லக்னோ அணியின் கேப்டன் ரிஷப் பண்டுக்கு ரூ. 12 லட்சம் அபராதமாக விதிக்கப்பட்டது.

    ஐ.பி.எல். தொடரில் லக்னோவில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ 20 ஓவரில் 8 விக்கெட்டை இழந்து 203 ரன்கள் எடுத்தது. லக்னோ தரப்பில் அதிகபட்சமாக மிட்செல் மார்ஷ் 60 ரன் எடுத்தார்.

    தொடர்ந்து 204 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் புகுந்த மும்பை 20 ஓவரில் 5 விக்கெட்டை இழந்து 191 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 12 ரன் வித்தியாசத்தில் லக்னோ த்ரில் வெற்றி பெற்றது.

    லக்னோ அணி வெற்றி பெற்றிருந்தாலும் அந்த அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் மற்றும் சுழற்பந்து வீச்சாளர் திக்வேஷ் சிங் ரதி ஆகியோருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

    மெதுவாக பந்து வீசியதாக லக்னோ அணியின் கேப்டன் ரிஷப் பண்டுக்கு ரூ. 12 லட்சம் அபராதமாக விதிக்கப்பட்டது. விக்கெட் எடுத்துவிட்டு Notebook Celebration-க்காக திக்வேஷ் சிங் ரதிக்கு போட்டி கட்டணத்தில் இருந்து 50 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டது.

    இதற்குமுன் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் இதே விதமான Notebook Celebration-க்காக 25% அபராதம் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

    ×