என் மலர்tooltip icon

    ஐ.பி.எல்.(IPL)

    இவன் இன்னும் திருந்தல மாமா.. மீண்டும் அதே கொண்டாட்டத்தில் ஈடுபட்ட திக்வேஷ் ரதி
    X

    இவன் இன்னும் திருந்தல மாமா.. மீண்டும் அதே கொண்டாட்டத்தில் ஈடுபட்ட திக்வேஷ் ரதி

    • கடந்த 2 போட்டிகளில் விக்கெட் வீழ்த்திய போது 'notebook' கொண்டாட்டத்தில் திக்வேஷ் ஈடுபட்டார்.
    • கொண்டாடியதற்காக போட்டி கட்டணத்தில் இருந்து 25 மற்றும் 50 சதவீதம் அபராதம் பெற்றிருந்தார்.

    கொல்கத்தா:

    ஐ.பி.எல். தொடரில் இன்று நடைபெற்ற முதல் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின. பரபரப்பான இந்த போட்டியில் லக்னோ 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 238 ரன்கள் குவித்தது. இதனையடுத்து களமிறங்கிய கொல்கத்தா அணியால் 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 234 ரன்கள் மட்டுமே அடிக்க முடிந்தது. இதனால் லக்னோ 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்த ஆட்டத்தில் லக்னோ சுழற்பந்து வீச்சாளரான திக்வேஷ் ரதி, சுனில் நரைனின் விக்கெட்டை கைப்பற்றினார். அதனை மைதான தரையில் எழுதி வித்தியாசமான முறையில் கொண்டாடினார்.

    கடந்த 2 போட்டிகளில் விக்கெட் வீழ்த்தியதை கையில் எழுதுவது போல் வித்தியாசமான முறையில் (நோட் புக் செலிபிரேஷன்) கொண்டாடியதற்காக போட்டி கட்டணத்தில் இருந்து 25 மற்றும் 50 சதவீதம் அபராதம் பெற்றிருந்தார். தற்போது 3-வது முறையாக தரையில் எழுதி கொண்டாடியுள்ளார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

    தனது கைகளில் எழுதியதால் தான அபராதம் விதிச்சாங்க தரையில் எழுதுறேன் என்ன பண்றாங்கனு பார்க்கலாம் என்பது போல இருந்துச்சு அவரது செயல் என ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.

    Next Story
    ×